சென்னை புறநகர் பகுதிகளில் நடந்த தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
மார்ச் 10, 03:45 AM
செங்கல்பட்டு,
சென்னையை ஒட்டியுள்ள தாழம்பூர், தையூர், புதுப்பாக்கம், இள்ளலூர், திருப்போரூர், ஆலத்தூர், பையனூர் உள்ளிட்ட 10–க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாய கிணறுகளில் இருந்து தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தண்ணீர் எடுத்துவருகின்றனர். அந்த தண்ணீரை பழைய மாமல்லபுரம் சாலை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வியாபார நிறுவனங்களுக்கு வினியோகம் செய்து வருகின்றனர்.
குறைந்த விலைக்கு எடுத்து அதிக விலைக்கு விற்பதாகவும், அனுமதியின்றி தண்ணீர் எடுப்பதாகவும் வருவாய்த்துறைக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. ஜெயசீலன் தலைமையில் திருப்போரூர் தாசில்தார் ரவிக்குமார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கண்காணித்து சில நாட்களுக்கு முன்பு 5–க்கும் மேற்பட்ட லாரிகளை கைப்பற்றினர்.பேச்சுவார்த்தை
அந்த லாரிகளை விடுவிக்கக்கோரி தென்சென்னை தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கடந்த 5–ந் தேதி வருவாய்த்துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் எந்த முடிவும் ஏற்படாததால் 6–ந் தேதி முதல் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. ஜெயசீலன், திருப்போரூர் தாசில்தார் ரவிக்குமார் மற்றும் அதிகாரிகள் தண்ணீர் லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கைப்பற்றப்பட்ட லாரிகளை விடுவிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் விவசாய நிலத்தில் தண்ணீர் எடுக்க அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.வேலை நிறுத்தம் வாபஸ்
இதை ஏற்று லாரிகள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று காலை முதல் தண்ணீர் லாரிகள் ஓட தொடங்கின. இதனால் புறநகர் பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
மார்ச் 10, 03:45 AM
செங்கல்பட்டு,
சென்னையை ஒட்டியுள்ள தாழம்பூர், தையூர், புதுப்பாக்கம், இள்ளலூர், திருப்போரூர், ஆலத்தூர், பையனூர் உள்ளிட்ட 10–க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாய கிணறுகளில் இருந்து தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தண்ணீர் எடுத்துவருகின்றனர். அந்த தண்ணீரை பழைய மாமல்லபுரம் சாலை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வியாபார நிறுவனங்களுக்கு வினியோகம் செய்து வருகின்றனர்.
குறைந்த விலைக்கு எடுத்து அதிக விலைக்கு விற்பதாகவும், அனுமதியின்றி தண்ணீர் எடுப்பதாகவும் வருவாய்த்துறைக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. ஜெயசீலன் தலைமையில் திருப்போரூர் தாசில்தார் ரவிக்குமார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கண்காணித்து சில நாட்களுக்கு முன்பு 5–க்கும் மேற்பட்ட லாரிகளை கைப்பற்றினர்.பேச்சுவார்த்தை
அந்த லாரிகளை விடுவிக்கக்கோரி தென்சென்னை தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கடந்த 5–ந் தேதி வருவாய்த்துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் எந்த முடிவும் ஏற்படாததால் 6–ந் தேதி முதல் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. ஜெயசீலன், திருப்போரூர் தாசில்தார் ரவிக்குமார் மற்றும் அதிகாரிகள் தண்ணீர் லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கைப்பற்றப்பட்ட லாரிகளை விடுவிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் விவசாய நிலத்தில் தண்ணீர் எடுக்க அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.வேலை நிறுத்தம் வாபஸ்
இதை ஏற்று லாரிகள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று காலை முதல் தண்ணீர் லாரிகள் ஓட தொடங்கின. இதனால் புறநகர் பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.




இப்போது அதிகாரிகள் விசாரணை வட்டத்தில், ஜெயலலிதாவின் சிகிச்சையில் உடனிருந்த ஒன்பது மருத்துவ உதவியாளர்களும் உள்ளனர். மேலும், டாக்டர் பாலாஜியும் விசாரிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. மத்திய அரசு முறையாக விசாரணைக்கு உத்தரவிட்டதும் முதலில் விசாரிக்கப்படும் நபர், சசிகலாவின் உறவினர் டாக்டர் சிவக்குமார்தான் என்கிறார்கள். அப்போலோவில் பணியாற்றும் சில நபர்களைவைத்து அங்கிருந்து ஆவணங்கள் மற்றும் கேமரா புட்டேஜ்களையும் கைப்பற்றியுள்ளனர்..