Friday, March 10, 2017

Panneerselvam rents house near Poes Garden

Move follows vacation notice from Public Works Dept.

Former Chief Minister O. Panneerselvam, who has been staying at the government-provided quarters ‘Thenpennai’ on Greenways Road here, has taken a house on rent in Alwarpet in Chennai.
The house, with a spacious garden area around it, is located on the First Street of Venus Colony in Alwarpet. It is only a few minutes away from the Poes Garden residence of former Chief Minister Jayalalithaa.
The first house on the First Street of Venus Colony, when one turns left from Sriman Srinivasan Road, is getting ready for Mr. Panneerselvam and his family to move in. Though a pooja was performed on Thursday morning in the new house, the shifting isn’t complete yet, say AIADMK (OPS) sources.
Soon after Mr. Panneerselvam rebelled against AIADMK leader V.K. Sasikala (since jailed) , ‘Thenpennai’, allotted to him when he was Finance Minister, has been abuzz with activity. However, the State Public Works Department has asked him to vacate as he is no longer a Minister.

வசூல் வேட்டையா... வங்கி விதிமுறையா? கொதித்த வங்கி ஊழியர்கள்!




பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் பணநீக்க நடவடிக்கைக்குப் பிறகு பல்வேறு மாற்றங்களை பொதுத்துறை வங்கிகளும், தனியார் வங்கிகளும் போட்டிபோட்டுக்கொண்டு அறிவித்து வருகின்றன. ஏற்கெனவே பணநீக்க நடவடிக்கையால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், தற்போது தனியார் வங்கிகளில் 4 முறைக்கு மேல் பணப்பரிவர்த்தனை செய்தால்... சேவை வரியாகக் குறைந்தபட்சமாக 150 ரூபாய் பணம் வசூலிப்போம் என்று அறிவித்து, அதற்கான நடவடிக்கையிலும் இறங்கிவிட்டன வங்கிகள். அதில், முதல்கட்டமாகச் சில தனியார் வங்கிகள் இந்த வசூல் வேட்டையில் இறங்கியுள்ளன. இதுகுறித்து இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவு பொதுச்செயலாளர் சி.பி.கிருஷ்ணாவிடம் பேசியபோது, அவர் சொன்ன தகவல்கள் நம்மை அதிர வைத்தன.

கொள்ளைக்கான தொடக்கம்!

''சில தனியார் வங்கிகள் வசூல் வேட்டையில் இறங்கிய நிலையில்... தற்போது பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியும் வசூல் களத்தில் இறங்கியிருப்பது மிகுந்த கவலைக்குரியது. அந்த வங்கி, மூன்று முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் குறைந்தபட்சமாக 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற விதிமுறையைக் கொண்டுவந்துள்ளது. அது மட்டுமின்றிப் பெரு நகரங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்சம் 5,000 ரூபாயும், நகர்ப்புறங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் 3,000 ரூபாயும், சிறுநகரங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் 2,000 ரூபாயும், கிராமப்புறங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் 1,000 ரூபாயும் குறைந்தபட்ச தொகையாக வங்கிக்கணக்கில் இருப்பு வைத்திருக்க வேண்டும் என்ற அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

எவ்வளவு தொகை குறைவாக உள்ளதோ, அந்தத் தொகைக்கு ஏற்ப அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. பெரு நகரங்களில் 5000 ரூபாய் கணக்கு வைக்க வேண்டிய இடத்தில் 2500 ரூபாய் கணக்கு வைத்திருந்தால் (50 சதவீதம் குறைவாக உள்ளதால்) அவர்களுக்கு 50 ரூபாய் வசூலித்து விடுவோம் என்று கூறியுள்ளது. இதைவிடச் சாமான்யர்களை வறுமையில் தள்ளும் நடவடிக்கை வேறு எதுவும் இல்லை.

ஏ.டி.எம்-களில் வசூல் வேட்டை!

இந்தப் பிரச்னையால் வங்கிக் கணக்கே வேண்டாம் என்று ஒருவேளை, வெளியேற நினைத்தால்கூட... அதிலிருந்து வெளியேற முடியாத அளவுக்குக் கெடுபிடிகளையும் கொண்டு வந்துள்ளார்கள். வங்கிக் கணக்கு தொடங்கி 6 மாத காலத்துக்குக் கணக்கை முடக்கிவிட்டு வெளியேற விரும்பினால், 500 ரூபாய் அபராதமும், வங்கிக் கணக்கு தொடங்கி ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டால் 1,000 ரூபாயும் வசூலிப்போம் என்று தெரிவித்துள்ளனர். வசூல் வேட்டை நடத்துவதற்கு புதுப்புது வழிகளைக் கண்டறிந்து அதற்கேற்ற அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள். அதில், மற்றொரு நடவடிக்கையாக ஏ.டி.எம்-களில் நான்காவது முறையாகப் பணம் எடுத்தால் 20 ரூபாய் பிடிக்கப்படும். மேலும், வெறும் பிடித்தம் தொகையோடு நிற்காமல்... சேவை வரியையும் இதில் திணித்துள்ளார்கள்.

தூய்மை இந்தியா திட்டத்துடன் வேறுசில திட்டங்களையும் இணைத்து 15 சதவிகித சேவைவரியும் இதில் கொண்டுவந்துள்ளார்கள். மேலும், பணம் அனுப்பும் இயந்திரத்தை ஒருமுறை பயன்படுத்தினாலும் தொகைக்கு ஏற்ப வசூலிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர். இப்படி வசூலிக்கும் பணம் மத்திய அரசுக்கு போய்ச் சேருவதாக சொல்கிறார்கள். உண்மையில், அரசின் கஜானாவில்தான் இந்தப் பணம் போய்ச் சேருகிறதா என்பது அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.இந்த நடவடிக்கைக்குப் பின்னால் மிகப்பெரிய அரசியல் உள்ளது என்று கருதுகிறோம்.எனவே, 'இந்த விதிமுறைகளை வங்கிகள் திரும்பப் பெறாவிட்டால்... வங்கி ஊழியர்கள் சங்கம் நாடு தழுவிய அளவில் மிகப் பெரிய போராட்டத்தை நடத்தும். என்று எச்சரிக்கிறோம். மேலும், இதனால் சாமான்யர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கையாக அனுப்பவும் திட்டமிட்டுள்ளோம்'' என்றார்

ஒருவேளை சோற்றையும் பறிக்கிறதா?

இதுகுறித்து ஆய்வு மாணவியான சுசிந்திரா, ''தினசரி, கூலிகள் 500 மற்றும்1,000 ரூபாயை மட்டும் வங்கிக் கணக்கில் வைத்துக்கொண்டு பிழைப்பை ஒட்டுகிறார்கள். கணக்கில் இருக்கும் அந்தத் தொகையையும் அவர்கள் பிடித்துக்கொண்டால், இரண்டுவேளை சாப்பிடும் ஏழைகளுக்கு ஒருவேளை சாப்பாடுகூடக் கிடைக்காத நிலை ஏற்படும். அதற்கான நடவடிக்கையில்தான் தற்போது வங்கிகள் இறங்கியுள்ளன. சேமித்த பணத்துக்கு வரிகட்டாத எத்தனையோ தொழிலதிபர்கள் நாட்டில் உலவிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களிடம் போய் வசூலிக்க திராணியில்லையா அல்லது பயமா? வட இந்தியர்கள் தமிழகத்தில் வந்து கூலி வேலை செய்து 100, 500 ரூபாய் என்று சேமித்து... பிறகு, அதை எடுத்துச் செலவு செய்கிறார்கள். அப்படி அவர்கள் சேர்த்துவைத்திருக்கும் அந்தப் பணத்தையும் எடுக்கத் திட்டமிட்டுள்ள அரசின் செயல்களில் இதைவிட மோசமான செயல் வேறெதுவும் இருக்க முடியாது'' என்றார், வேதனையுடன்.

விஜய் மல்லையா போன்றவர்கள் வங்கிகளில் கடனை வாங்கிவிட்டு நாடுநாடாகச் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்... அவர்களை விட்டுவிட்டு ரத்தத்தை வியர்வையாகச் சிந்தும் ஏழை மக்களின் ஒருவேளை சோற்றில், கைவைத்துவிட்டதே வங்கியின் விதிமுறை!


- கே.புவனேஸ்வரி

ஆர்.கே நகரில் இதுவரை வென்றவர்கள்!



சென்னை ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. வாகவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா, இறந்து விட்டதால், ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது. 2017, ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதி 1977–ல் உருவானது. 1977- 2011 வரை ஆர்.கே. நகர் தொகுதியில் 9 தேர்தல்கள் நடந்துள்ளன. இதில், அ.தி.மு.க 5 முறையும் தி.மு.க மற்றும் காங்கிரஸ் தலா இரண்டுமுறையும் வென்றுள்ளன. ஆர்.கே.நகர் இப்போது சந்திக்கவுள்ளது 10-வது சட்டமன்றத் தேர்தல் ஆகும்

1977 - நடிகர் ஐசரி வேலன் (அ.தி.மு.க.), 1980 - வி.ராஜசேகரன், (இ.காங்கிரஸ்) , 1984 - வேணுகோபால் (காங்கிரஸ்),1989 - எஸ்.பி.சற்குணம் (தி.மு.க.) ,1991 - மதுசூதனன் (அ.தி.மு.க.), 1996 - எஸ்.பி.சற்குணம் (தி.மு.க.) ,2001 - சேகர்பாபு (அ.தி.மு.க.), 2006 - சேகர்பாபு (அ.தி.மு.க.) , 2011 - வெற்றிவேல் (அ.தி.மு.க.) 2016 - ஜெயலலிதா (அ.தி.மு.க.) ஆகியோரை எம்.எல்.ஏ.க்களாக பார்த்துள்ளது இந்தத் தொகுதி.

2011- ம் ஆண்டில் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ.வாக இருந்த வெற்றிவேல், முதல்வரான ஜெயலலிதா இடைத்தேர்தலில் போட்டியிட வழிவிட்டு தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ததால் 40 ஆண்டு காலத்தில் முதல் இடைத் தேர்தலை சந்தித்த இந்தத் தொகுதி இப்போது இரண்டாவது இடைத் தேர்தலை சந்திக்கவுள்ளது .

ஆர்.கே.நகர் தொகுதியும், 3,500 டன் குப்பையும்! #RKnagarBielection


முதல்வர் தொகுதி என்று கடந்த காலங்களில் பெருமையுடன் பேசப்பட்டாலும், ஆர்.கே.நகர் போல பிரச்னைகளையே போர்வையாக்கிக் கொண்ட ஒரு தொகுதியை பார்ப்பது அரிதுதான் என்கின்றனர் தொகுதி மக்கள்.பெரும்பான்மை சமூகமாக வன்னியர்கள் அடுத்து ஆதி ஆந்திரர் மக்கள் தொகுதியில் உள்ளனர். மூன்றாவதாக , தலித், நாடார், இஸ்லாமிய இன மக்கள் சமமாக உள்ளனர். மீனவர், செட்டியார்உள்ளிட்ட சமூக மக்கள் இதையடுத்த பெரிய சமூகத்தினர். தொகுதி சீரமைப்பின் காரணமாக மீனவர்கள் நிறைந்த ராயபுரம் தொகுதியின் இரண்டு வார்டுகள் ஆர்.கே.நகரில் இணைந்து விட்டதால் தற்போது ஆர்.கே.நகரில் வன்னியர்- மீனவர் சம வாக்கு வங்கியுடன் காணப்படுகின்றனர். அதேபோல் தமிழகத்தின் பெரிய மீன்பிடித் துறைமுகமான காசிமேடு மீன்பிடித் துறைமுகம், ராயபுரம் தொகுதியில் இருந்து ஆர்.கே.நகர் தொகுதிக்கு வந்து விட்டது. மக்கள் வசிப்பிட (ரெசிடென்டல் ஏரியா) பகுதியான ஆர்.கே.நகரில் ஐ.ஓ.சி, பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் என ஏராளமான மத்திய அரசு நிறுவனங்கள் இருப்பதால் ஆயில், புகை சார்ந்த சுவாசிப்பு வாழ்க்கையையே மக்கள் வாழ்கின்றனர்.

தொகுதியில் எண்பது சதவீத மக்கள், அன்றாடக் கூலிகள்தான். பீடி நூல் சுற்றுவது, இடியாப்ப வியாபாரம்தான் முக்கிய குடிசைத்தொழில். நான்கு பக்கமும் சூழ்ந்துள்ள பாதுகாப்பற்ற ரயில் இருப்புப்பாதை, கூவமே மூக்கைப் பிடித்துக் கொள்ளும் அளவுக்கு கூவம் மீது மூடிக் கொண்டிருக்கும் கழிவுகள், ஈக்களுடன் போட்டியிடும் கொசுக்கள் தொகுதியின் சொத்து எனலாம்.தினமும் 3 ஆயிரத்து 500 டன் குப்பைகளைக் கொட்டும் குப்பைக் கிடங்கு இதே தொகுதியில்தான் வருகிறது.எல்லா காலத்திலும் தண்ணீர் பஞ்சமும், மின்வெட்டும் தொகுதியில் தாராளமாக இருக்கும். ஒரேயொரு ஆறுதலான விஷயம் என்னவென்றால், தொகுதியில் கடந்த சில ஆண்டுகளாக க்ரைம்-ரேட் குறைவு என்பது மட்டும்தான்.

- ந.பா.சேதுராமன்

மும்முனைப்போட்டியில் ஆர்.கே.நகர் தொகுதி! - களநிலவரம் இதுதான்!



2016- ஏப்ரல் 29-ம் தேதி நிலவரப்படி ஆர்.கே.நகரில் உள்ள வாக்காளர்கள் விவரம்: ஆர்.கே.நகரில் தற்போது 1 லட்சத்து 25 ஆயிரத்து 881 ஆண்கள், 1 லட்சத்து 29 ஆயிரத்து 229 பெண்கள், திருநங்கைகள் 88 பேர் என மொத்தம் 2 லட்சத்து 55 ஆயிரத்து 198 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் : 1,24,505, பெண்: 1,29,889, மூன்றாம் பாலினத்தவர் : 103, மொத்த வாக்காளர்கள் : 2,54,497

தி.மு.க. வேட்பாளரான சிம்லா முத்துச்சோழன், 2016-ல் இங்கு நடைபெற்ற பொதுத்தேர்தலில் 57,673 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். முதல்வர் வேட்பாளரான ஜெயலலிதா அப்போது, 97,218, வாக்குகள் பெற்று (39,537 வாக்கு வித்தியாசம்) வெற்றி பெற்றிருந்தார்.

அதே ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் (2015) 1 லட்சத்து 60 ஆயிரத்து 432 வாக்குகளை ஜெயலலிதா பெற்றிருந்தார். அப்போது, சி.பி.ஐ. வேட்பாளர் மகேந்திரன் 9,710 வாக்குகள் மட்டுமே பெற்றார். ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்ட அத்தனை வேட்பாளர்களும் தொகுதியில் டெபாசிட் தொகையை இழந்தனர்.

முதல்வராக ஜெயலலிதா இருந்த போது இடைத்தேர்தலை எதிர்கொண்டு பெற்றது 1,60,432 வாக்குகள், அதுவே பொதுத்தேர்தலை ஜெயலலிதா சந்தித்த போது, 97,218, என்று வாக்குகள் சுருங்கியது. ம.ந.கூட்டணியின் பொதுவேட்பாளர் டாக்டர் வசந்திதேவி 4,195 வாக்குகள் பெற்றிருந்தார். ஆர்.கே.நகர் மக்களோ, "சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரண்டு அணியும் அ.தி.மு.க. பெயரையும், இரட்டை இலையையும் முன்னிறுத்திதான் இங்கு பிரசாரம் செய்யும்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவும், இங்கு போட்டியிடுவதாக அறிவித்துள்ளதால் அ.தி.மு.க.வுக்குள் மும்முனைப் போட்டி உருவாகியுள்ளது. கடைசி நேரத்தில் இரட்டை இலை சின்னம், கொடிகளை எந்தத் தரப்பினர் பயன்படுத்தலாம் என்ற பிரச்னையும் அடுத்தகட்டமாக விஸ்வரூபமெடுக்கும். அது தி.மு.க. கூட்டணிக்கே சாதகமாக அமையும்" என்கிறார்கள் தொகுதி மக்கள்.

அமெரிக்காவில் இந்தியர்கள் மீது தாக்குதல்: மோடி மெளனம் காப்பது ஏன்?

By DIN  |   Published on : 10th March 2017 01:45 AM  | 
question
பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வின் முதல் நாளான வியாழக்கிழமை, மக்களவையில் பேசும் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.
அமெரிக்காவில் இந்தியர்கள் மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டு வரும் நிலையில், பிரதமர் மோடி மெளனம் காப்பது ஏன்? என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆவது அமர்வு வியாழக்கிழமை தொடங்கியது. மக்களவை, அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் தலைமையில் கூடியதும், அமெரிக்காவில் இந்தியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், அதற்கு சுமித்ரா மகாஜன் மறுப்பு தெரிவித்ததால், உடனடிக் கேள்வி நேரத்தின்போது, இந்த விவகாரம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:
அமெரிக்காவில் கடந்த சில வாரங்களில் 2 இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இனவெறியோடு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் மிகவும் கவலையளிக்கிறது. ஆனால், இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்காமலும், இந்த விவகாரம் குறித்து அமெரிக்காவிடம் முறையிடாமலும் பிரதமர் மோடி மெளனம் காத்து வருகிறார்.
ஒவ்வொரு விஷயத்துக்கும் சுட்டுரைப் பக்கத்தில் கருத்து தெரிவிக்கும் அவர், இந்த விவகாரத்தில் ஆழ்ந்த மெளனமாக இருப்பது ஏன்? என்று மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பினார்.
இதேபோல், திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் செளகதா ராய் பேசுகையில், ""அமெரிக்காவில் வாழும் இந்தியர்களைப் பாதுகாப்பதில் இந்திய அரசுக்கு அக்கறையில்லை எனத் தெரிகிறது; பேச்சாற்றல் மிக்க பிரதமர், இந்த விஷயத்தில் அமைதியாக இருப்பது வழக்கத்துக்கு மாறாக உள்ளது'' என்றார்.
மேலும், அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதில் இருந்துதான், இந்தியர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன என்று மல்லிகார்ஜூன கார்கேவும், செளகதா ராயும் குற்றம் சாட்டினர்.
பிஜு ஜனதா தள உறுப்பினர் பார்த்ருதாரி மாதவ் கூறுகையில், ""அமெரிக்காவில் உள்ள பாதுகாப்பற்ற இடங்கள் குறித்து அந்நாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு அறிவுரைக் குறிப்புகளை மத்திய அரசு வெளியிட வேண்டும்'' என்றார்.
இதேபோல் மேலும் சில உறுப்பினர்கள், இந்தியர் மீதான இனவெறி தாக்குதலுக்கு கவலை தெரிவித்தனர்.
அடுத்த வாரத்தில் அறிக்கை-ராஜ்நாத் சிங்: அப்போது, ""இந்த விவகாரத்தை மத்திய அரசு தீவிரமாகக் கவனித்து வருகிறது'' என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிலளித்தார். அவர் மேலும் கூறியதாவது:
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த விவகாரம் குறித்து விரிவான அறிக்கையை மத்திய அரசு அடுத்த வாரம் தாக்கல் செய்யும் என்றார் ராஜ்நாத் சிங்.

இருளின் பிடியில் அம்பத்தூர் பேருந்து நிலையம்

By DIN  |   Published on : 07th March 2017 04:02 AM

ambatur
இருண்டு கிடக்கும் அம்பத்தூர் பேருந்து நிலையம்.

அம்பத்தூர் பேருந்து நிலையத்தில் மின் விளக்குகள் எரியாததால் தினமும் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. இதனால் பேருந்து நிலையத்துக்கு வருவோர் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.
சென்னை புறநகரில் மிகப்பெரிய பேருந்து நிலையம் அம்பத்தூர் பேருந்து நிலையம். ’வானமே கூரையாய்' என்ற தலைப்பில் இப்பேருந்து நிலையம் குறித்து தினமணியில் புகைப்படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. அப்போது சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த வேதாசலம் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சிமென்ட் ஓடு போட்ட பேருந்து நிலையத்தை உருவாக்கினார்.
அதேசமயம் பேருந்து நிலையத்துக்கான மின் இணைப்பைப் பெறாமல், அருகிலுள்ள அம்மா உணவகத்திலிருந்து மின் இணைப்பு எடுத்து, பேருந்து நிலையத்துக்கு மின் விநியோகம் செய்யப்பட்டது.
இதனால் அம்மா உணவகத்தின் நிதிச் சுமை அதிகரித்ததாகத் தெரிகிறது. மேலும், மாநகரப் பேருந்து நிலையத்துக்கு தனியாக மின்இணைப்பை பெற்றுக் கொள்ளுமாறும், தங்களது மின் இணைப்பை துண்டித்துக் கொள்வதாகவும் அம்மா உணவக நிர்வாகம் கூறியது. ஆனால் மாநகரப் பேருந்து நிர்வாகம் இதற்கு செவி சாய்க்கவில்லை. இதையடுத்து கடந்த வாரம் அம்பத்தூர் பேருந்து நிலையத்துக்குச் செல்லும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் அம்பத்தூர் பேருந்து நிலையம் இருளில் மூழ்கியது. ஆனால் பேருந்து நிலைய நிர்வாகம் இந்த விஷயத்தில் அலட்சியமாக உள்ளதாகவே தெரிகிறது.
இதன் காரணமாக இரவு ஏழு மணிக்குமேல் பெண்கள் பேருந்து நிலையத்துக்குள் செல்லவே அச்சம் கொள்கின்றனர்.
மாநகரப் பேருந்து நிர்வாகம் உடனடியாக பேருந்து நிலையத்துக்கு மின் இணைப்பைப் பெற்று ஒளிமயமாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள...

DINAMANI வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்! வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்...