Tuesday, March 14, 2017

அடக்கத்துடன் மன்னிப்பு கேட்பதே நல்லது - நீதிபதி கர்ணனுக்கு ராம் ஜெத்மலானி கடிதம்

எம்.சண்முகம்


மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருப்பவர் சி.எஸ்.கர்ணன்; தமிழகத்தைச் சேர்ந்தவர். நீதிபதிகள் மீது இவர் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்காக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்தது. தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமை யிலான 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து நீதிபதி கர்ணனை நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது. குறிப்பிட்ட தேதியில் அவர் ஆஜராகாததால், அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஆனால், நீதிபதி கர்ணன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட 7 நீதிபதிகள் மற்றும் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி மீது வழக்குப் பதிவு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி சிபிஐ-க்கு உத்தரவிட்டுள்ளார். அவரது நடவடிக்கை நீதித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மாநிலங்களவை எம்பி-யும், நாட்டின் மூத்த சட்ட நிபுணர்களில் ஒருவருமான ராம் ஜெத்மலானி (93) கர்ணனுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் கூறியிருப்ப தாவது:
நான் உங்களைச் சந்தித்ததும் இல்லை. உங்களைப் பற்றி கேள்விப்பட்டது கூட இல்லை. ஆனால், தற்போது உங்கள் செயல் களால் நீங்கள் இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாட்டிலும் பிரப லம் அடைந்துள்ளீர்கள். நீங்கள் நிதானத்தை இழந்து விட்டீர்கள் என்றே கருதுகிறேன். இதைச் சொல்வதற்காக வருந்துகிறேன். அதுவே இப்பிரச்சினையில் இருந்து நீங்கள் தப்பிக்க உதவும் என்று கருதுகிறேன். உங்கள் முயற்சியில்நீங்கள் வெற்றி பெறப் போவதில்லை.

மூத்த வழக்கறிஞர் என்ற முறையிலும், கடவுளின் விமான நிலையத்தில் புறப்பட காத்திருப்ப வன் என்ற முறையிலும் நான் உங்களுக்கு சொல்லும் அறிவுரை என்னவென்றால், நீங்கள் இதுவரை சொன்ன வார்த்தைகள் அனைத்தை யும் வாபஸ் பெற்றுவிட்டு, இதுவரை செய்த செயல்களுக்கு அடக்கத்துடன் மன்னிப்பு கேட்பதே நல்லது. உங்களுடைய செயல் களின் பாதிப்பை நீங்கள் உணராவிட்டால், என்னைச் சந்தியுங்கள். உங்களுக்கு நான் அதை உணர்த்துகிறேன். ஊழல் நிறைந்த இந்த நாட்டில், நீதித்துறை தான் ஒரு பாதுகாவலன். அதை அழிக்கவோ, பலவீனமடையவோ செய்யாதீர்கள்.

மூத்த வழக்கறிஞர் என்ற முறையில் நான் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக பல நேரங்களில் உழைத்துள்ளேன். பிற்படுத்தப்பட்ட மக்கள் மீது அக்கறையும் பரிவும் கொண்டுள்ளேன்.
ஆனால், நீங்கள் அவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளீர்கள். பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காகவும், நாட்டுக்காகவும் அதிகம் உழைத்த ஒரு மூத்த குடிமகனின் அர்த்தமுள்ள அறிவுரையை தயவுசெய்து கேளுங்கள்.

இவ்வாறு ராம் ஜெத்மலானி அக்கடிதத்தில் கூறியுள்ளார்.

முத்துக்கிருஷ்ணன் மன அழுத்தத்தில் இருந்தார்' : டெல்லி காவல்துறை விளக்கம்

தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் முத்துக்கிருஷ்ணனின் சடலம், டெல்லி ஜே.என்.யூ. பல்கலைக்கழக விடுதி வளாகத்தில் இருந்து நேற்று மீட்கப்பட்டது. அவர், தற்கொலைசெய்துகொண்டதாகக் கூறப்படும் நிலையில், அவரது மரணம் தொடர்பாக பல்வேறு மர்மங்கள் எழுந்து வருகின்றன என்று முத்துக்கிருஷ்ணனின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.



இந்நிலையில், இதுகுறித்து டெல்லி காவல்துறைத் துணை ஆணையர் ஈஷ்வர் சிங் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 'முத்துக்கிருஷ்ணன் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். அவரது செல்போன் அழைப்புகள் ஆய்வுசெய்யப்பட்டுவருகின்றன. அவர் தூக்கில் தொங்கியதை மணிப்பூர் மாணவர்தான் முதலில் பார்த்துள்ளார். அவர் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் தெரியவில்லை. அவரது அறையில் தற்கொலைக்கான கடிதம் எதுவும் இல்லை.

அவர், மாணவர் அமைப்பில் தீவிரமாகச் செயல்படவில்லை. அவரது நண்பர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. மேலும், அவரது பெற்றோரிடம் இனிதான் விசாரணை நடத்த வேண்டும்' என்றார்.

ஜே.என்.யூ மாணவர் முத்துக்கிருஷ்ணன் கொலையா?



ரோகித் வெமூலா, செந்தில்குமார் வரிசையில் ஜே.என்.யூ மாணவர் முத்துக்கிருஷ்ணன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பல்கலைக்கழகம் சார்பாக அவருக்குக் கொடுக்கப்பட்ட மறைமுக நெருக்கடியே முத்துக்கிருஷ்ணன் மரணத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று பல்கலைக்கழக மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டுகின்றனர்.

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை ஆய்வியல் மாணவர் முத்துக்கிருஷ்ணன். இவர், சேலத்தைச் சேர்ந்த ஜீவானந்தம் -அலமேலு தம்பதியினரின் மகன். தலித் சமூகத்தில் இருந்து வந்தவரான இவர், பொருளாதார நெருக்கடி இருந்தபோதும் படிப்பைப் பாதியில் நிறுத்தாமல் தொடர்ந்து போராடி படித்துவந்துள்ளார்.இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பை சேலம் கல்லூரியிலும், தொடர்ந்து ஆய்வியல் கல்வியை ஐதராபாத் பல்கலையில் சேர்ந்து படித்துள்ளார்.சில காலம் அங்கு படித்தவர் பின்னர் ஜே என் யூ வில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பது அவருடைய கனவாக இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழத்தில் ஆய்வியல் படிப்பில் சேருவதற்கு நுழைவுத்தேர்வை எழுதியவர் அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.

தீவிர போராளி அவர்!

பின்னர், பல்கலைக்கழகத்தில் தன்னுடைய ஆய்வைத் தொடர்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் பல்கலைக்கழக வளாகத்துக்கு வெளியே முத்துக்கிருஷ்ணனின் நண்பர்கள் தங்கியிருந்த அறையில் 13.3.2017 அன்று அவர் தூக்கில் தொங்கியவாறு கிடந்துள்ளார். அவருடைய இந்த மர்ம மரணம் தொடர்பாக ஜே.என்.யூ தமிழ்த்துறை முது முனைவர் பட்டய ஆய்வாளர் மாணவர் ஞானமணியிடம் பேசியபோது, ''இது, மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. அவர், கோழையான மாணவர் இல்லை. நல்ல படிப்பாளி. அவருடைய மரணத்துக்கான முழுமையான காரணம் இன்னும் சரியாகத் தெரியவில்லை. கடந்த இரண்டு நாட்களாக சோர்வாக இருந்துள்ளார். அதனைத் தொடர்ந்து 13-ம் தேதி தமிழ் மாணவர்களை சந்தித்துப் பேசியுள்ளார். பின்னர் கேம்பஸை விட்டு வெளியே வந்தவர் அவருடைய நண்பர்கள் அறைக்குள் சென்றுள்ளார். அங்கு சென்ற அவர், நெடுநேரம் ஆகியும் வெளியே வரவில்லை என்பதால் கதவை உடைத்துப் பார்த்துள்ளனர். அப்போது தூக்கில் தொங்கியவாறு கிடந்துள்ளார்.



கொலையாக இருக்கலாம்!

தம்பி தற்கொலை செய்துகொண்டிருக்க வாய்ப்பில்லை.அது தொடர்பான புகைப்படம் ஒன்று கிடைத்துள்ளது. அதில், அவனுடைய கால்கள் தரையில் பதிந்துள்ளன. தூக்கில் தொங்கும்போது தரையில் கால்கள் விழுந்தால் அவரால் எழுந்து நிற்க முடியும். அதனால் இது கொலையாக இருக்கும் என்று சந்தேகிக்கிறோம். மேலும், அவர் தற்கொலை செய்திருந்தாலும் அதற்கான காரணங்கள் இதுவாகத்தான் இருக்கும் என்று எண்ணுகிறோம். ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது ரோகித் வெமூலாவின் நெருங்கிய நண்பராக இருந்தவர் முத்துக்கிருஷ்ணன். இவர், ரோகித் வெமூலா உயிரிழந்தபோது அவருடைய மரணத்துக்கு நீதி கேட்டு தீவிர போராட்டக் களத்தில் குதித்தவர்.மாணவர்களுக்கு ஒரு பிரச்னை என்றால் முதல் ஆளாக நிற்கக் கூடியவர். இந்தநிலையில் இந்த ஜே.என்.யூ-வுக்கு வந்தவர், இங்குள்ள பாபா ஷாகிப் அம்பேத்கர் அமைப்பிலும் தன்னை இணைத்துக்கொண்டு சாதிக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்தார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பல்கலைக்கழகத்தில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இஸ்லாமிய மாணவர் நஜித் என்பவர் காணாமல் போனபோது, அவரை மீட்கக்கோரி நடந்த போராட்டத்திலும் பங்கேற்றார்.மாணவர்களுக்கு எதிராக என்ன நடந்தாலும் அதில் பங்கேற்று தனது எதிர்ப்பைத் தெரிவிக்கக்கூடியவர்.அந்த வகையில் அவரை ஒடுக்குவதற்கு வேறு சில மாணவ அமைப்புகளும் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகமும் மறைமுக நெருக்கடி கொடுத்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.

பல்கலையின் விதிமுறைதான் கொலை செய்ததா?

அதேபோன்று கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு புதிய விதிமுறையைப் பல்கலைக்கழகம் கொண்டு வந்துள்ளது.அதில், பிராஜெக்ட்டுக்கு (project) தனி மதிப்பெண்ணும்,வைவாவுக்குத் தனி மதிப்பெண்ணும் என்று இருந்த முறையை மாற்றியது.அதில் பிராஜெக்ட், வைவா இரண்டையும் இணைத்து...வைவாவை மட்டும் வைத்து மதிப்பெண் வழங்குவதற்கு பல்கலைக்கழக ஆய்வுக்குழு (university research council) முடிவு செய்துள்ளது. எதற்காக இந்த முறையைக் கொண்டு வந்தார்கள் என்றால், போராட்டத்தில் இறங்கும் மாணவர்களை ஒடுக்குவதற்காகக் கொண்டு வந்துள்ளதாக சொல்கின்றனர்.எவ்வளவு சிறப்பாகப் படித்தாலும் பேராசிரியர் நினைத்தால் அந்த மாணவனைத் தோல்வியடையச் செய்ய முடியும் என்பதாலேயே இந்த முறையைக் கொண்டு வந்துள்ளதாகக் கூறுகிறார்கள்.அது மட்டுமன்றி பல்கலைக்கழக மானியக் குழு அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.அதில் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் எனத் தனித்தனியாக ஒரு குறிப்பிட்ட அளவிலான மாணவர்களை மட்டுமே (guide ) ஆய்வு மாணவர்களாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது. அப்படிப் பார்த்தால் புதிதாக மாணவர்களை எடுக்க இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும். இது மாணவர்களுக்கு மிகுந்த பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் இந்த முறையைக் கைவிடக்கோரி ஜே.என்.யூ-வில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.இதில் கலந்துகொண்டார் முத்துக்கிருஷ்ணன்.இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களில் 45 பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.அதன் காரணமாக அவர் மறைமுகமாக மிரட்டப்பட்டிருக்கலாம்.அல்லது அவரை அவமானப்படுத்தியிருக்கலாம்.அதன் காரணமாக இந்த முடிவை எடுத்திருப்பாரா என்று சந்தேகிக்கிறோம்.எய்மஸ் மருத்துவமனையில் ஆனதைப்போன்று கொண்டுவந்து போட்டுவிட்டுப் போய்விட்டார்கள். தம்பியின் போராட்டக் குரல் ஒடுங்கி உயிரற்ற சடலமாகப் பார்க்க வேதனையாக இருக்கிறது'' என்றார் கண்ணீருடன்.

என் மகன் கோழை அல்ல!

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முத்துக்கிருஷ்ணனின் தந்தை ஜீவானந்தம், ''தற்கொலை செய்துகொள்கிற அளவுக்கு என் மகன் கோழை அல்ல... ஆரம்பகாலத்தில் இருந்தே, அவன் மாணவர்கள் போராட்டத்தில் பங்கெடுத்தவன். இதுபோன்ற முடிவை ஒருபோதும் எடுத்திருக்க மாட்டான்'' என்றார், துக்கம் தாங்காமல்.

மாணவனின் மர்ம மரணம் குறித்து தொடர்ந்து தகவல் கொடுத்துவந்த சமூக ஆர்வலர் எவிடன்ஸ் கதிரிடம் பேசினோம். ''தலித் சமூகத்திலிருந்து வந்த மாணவர் என்பதால், அவர்மீது சாதியரீதியிலான தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். ரஜினி நடித்த 'கபாலி' படத்தில் வரும் வசனங்களைத் தொடர்ந்து பேசி வந்துள்ளார்.அப்படிப் பார்க்கும்போது தலித் என்ற சாதிய தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கலாம். மேலும், சடலமாக முத்துக்கிருஷ்ணன் கிடந்தபோது... அங்குவந்த போலீஸார், உடலைப் பார்த்துவிட்டு... 'இது தற்கொலை' என்று அழுத்தமாகக் கூறியுள்ளனர். தற்கொலை என்று சொல்ல அவர்கள் என்ன மருத்துவர்களா? அப்படியே இருந்தாலும்கூட பிரேதப் பரிசோதனை முடிவுக்குப் பிறகே மரணம் எந்த முறையில் நிகழ்ந்துள்ளது என்று சொல்ல முடியும்.மேலும் மாணவர் இறந்த விவரத்தைப் பதிவாளருக்குத் தெரிவித்தும், அவர் அந்த இடத்துக்குச் செல்லவில்லை. மாணவரின் இறப்புச் செய்தியைப் பெற்றோருக்கு அங்கிருந்த மாணவர்கள் தெரிவித்துள்ளனர். பல்கலைக்கழகம் சார்பில் யாரும் இதுவரை எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் செல்லவில்லை. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது முத்துக்கிருஷ்ணன் மரணத்தில் சந்தேகம் உள்ளது.அவருடைய மரணத்துக்கு நீதி கிடைக்கும்வரை போராடுவோம்'' என்றார்.


-கே.புவனேஸ்வரி
Chaos over test sends capitation fees soaring

TIMES NEWS NETWORK


The chaos and confusion surrounding NEET that has forced many students to consider engineering as a safer career option is fuelling the rise of capitation fees in top engineering colleges. At the same time, there has been a surge in the applications for the engineering entrance exams in deemed universities.

A TOI inquiry with some top engineering institutions in the Kongu region found that an average rise of 20% is expected in the capitation fees for management quota seats. The rise could, however, be restricted to most sought-after engineering courses like mechanical engineering, electronics and communication engineering, computer science engineering, electrical and electronics engineering and information technology .

“A couple of students who happen to be children of our family friends enquired about a management seat in our college. I was surprised they were willing to go to the extent of securing a management quota seat as they were unsure about their ability to perform well in NEET,“ said a representative of the management of a top engineering college in Coimbatore. “The inquiries from students, especially those who have the ability to score well in boards too, revolve around booking a seat in their course of choice,“ the management representative said.

In another private engineering college, the admission department has hinted at 20%-25% increase in capitation fee this year. “We have not told the exact rate, but have given hints about the price being higher this year. Seats in mechanical engineering could go up to `30lakh,“ said a source in the college.

Applications at private deemed universities seem to be increasing. A VIT University , Vellore, spokesperson said, “Last year we had 2.12 lakh candidates apply for the entrance and this year we have crossed the mark. We expect around 2.5lakh students to appear for the exam.“ At SRM University , admission director T V Gopal said, “We have received 1.2 lakh applications so far. There will be an impact of NEET on engineering admissions in deemed universities.“
ON THE HORNS OF A DILEMMA -
 Wary of NEET, TN med aspirants may pick engg, add to scramble


While Centre-State Tussle Continues, TN Yet To Train Its Govt School Students On The Entrance

It is a common phenomenon every year to see a significant number of applicants absenting themselves during the first session of the Anna University coordinated engineering counselling. The absentees would have se cured a seat in MBBS. But this year, in all probability, you may spot these possible absentees sitting through the merit admission process for engineering.

The status quo on the national eligibility-cumentrance test (NEET) has left a lot of MBBS aspirants in a fix. While those sincerely aiming for a seat in medicine will want to give their best in the entrance test, those wary about it are likely to make up their minds to take engineering. And if this happens, the competition among the top 10,000 engineering aspirants is expected to stiffen this admission season.

There are nearly 2 lakh engineering seats avail able but what matters to all the aspirants is to manage a seat in the top 25 colleges under Anna University .“A student choosing biology as hisher fourth major in Class XII always has the option of joining engineering, agriculture or pharmaceutics. About 20% of these students aim to pursue medicine, the rest are always in oscillation,“ said the principal of a private matriculation school in Coimbatore.

For Tamil Nadu's state board students (medical aspirants), the effort is double that of a CBSE student.
“The students have to perform well in the Class XII board exams to get a seat in engineering or agricul ture, which is a backup in most cases. And then they prepare for NEET which most cases. And then they prepare for NEET which is a bit strenuous as the exam is based on the CBSE syllabus,“ said the principal. “At our school, the students who were in two minds till the half yearly exams have almost decided that they will take up engineering,“ said the principal.

The impact of this confusion will be severe on rural students in government schools, said a government school teacher.
While 85% of the MBBS seats in TN government medical colleges will be reserved for domiciliary quota, it is the apprehension over the ability to clear the exam that is bothering medical aspirants. “There has not been enough time and resources for state students to prepare for NEET, especially those in rural areas. Facilities in terms of material and manpower to train the students for the state boards are ample,“ said the teacher. “So, a student would logically prefer to focus on Class XII board exams rather than take the risk of clearing NEET,“ she added.

Educational consultants predict that there could be about 1,000 more students participating in the engineering admission. “They will be among the top performers and will thus make the competition for top colleges tougher,“ said education consultant Moorthy Selvakumaran. “We give a lot of counselling to such students who are in two minds. Sessions are held with their parents too. These students play spoilsport,“ said Selvakumaran.
வங்கிக்கு ரூ.114 கோடி இழப்பு; நிர்வாகிகளுக்கு ஜாமின் மறுப்பு

சென்னை: வங்கிக்கு, 114 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், கைதான தனியார் நிறுவன நிர்வாகிகளுக்கு, ஜாமின் வழங்க, சென்னை சி.பி.ஐ., நீதிமன்றம் மறுத்து விட்டது.

சென்னையில், 'ஷைலாக்' என்ற பெயரில் நிறுவனம் இயங்கி வருகிறது. பல மாநிலங்களில், 504 மொபைல் போன் கோபுரங்கள் அமைப்பதற்காக, ஆந்திர வங்கி கிளையில், கோடிக்கணக்கில் கடன் பெற்றது. ஆனால், 391 கோபுரங்கள் மட்டுமே அமைத்தது.

அதன்மூலம் வங்கிக்கு, 114 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக, நிறுவனத்தின் இயக்குனர்கள் மீது, சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்தது. ராமானுஜம் சேஷரத்னம், சுதர்சன் வெங்கட்ராமன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இருவரும் ஜாமின் கேட்டு, சென்னை, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதி வெங்கடசாமி பிறப்பித்த உத்தரவு:ஏற்கனவே, பல வங்கிகளில், 740 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக, இவர்கள் மீது வழக்குகள் உள்ளன. அமெரிக்க குடியுரிமை பெற்ற இவர்களுக்கு, ஜாமின் வழங்கினால், அமெரிக்காவுக்கு தப்பி செல்லக் கூடும். எனவே, இவர்களுக்கு ஜாமின் வழங்க இயலாது.

திருநெல்வேலி மாவட்டத்தில், நகை கடன் திருப்பி செலுத்தப்பட்டும், நகையை வங்கி அதிகாரிகள் திருப்பி தராததால், விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு சலுகையும், ஏழைகளுக்கு நெருக்கடியையும், வங்கிகள் அளிக்கின்றன.இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.
பெண் வி.ஏ.ஓ.,விற்கு எதிரான வாரன்ட்டை ரத்து செய்ய முடியாது : உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: திருநெல்வேலி நீதிமன்றம் பிறப்பித்த வாரன்ட்டை ரத்து செய்யக்கோரி, பெண் வி.ஏ.ஓ., தாக்கல் செய்த மனுவை, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

திருநெல்வேலி அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண் வி.ஏ.ஓ.,வும், ஒரு ஆண் வி.ஏ.ஓ.,வும் நெருங்கி பழகினர். திருமணம் செய்வதாகக்கூறி ஆண் வி.ஏ.ஓ., ஏமாற்றியதாக, அம்பாசமுத்திரம் மகளிர் போலீசில் பெண் வி.ஏ.ஓ.,புகார் செய்தார். திருநெல்வேலி மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது. பெண் வி.ஏ.ஓ.,ஆஜராகுமாறு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. அவர் ஆஜராகாததால் கீழமை நீதிமன்றம் வாரன்ட் பிறப்பித்தது. அந்நீதிமன்ற நீதிபதி,' நீதிமன்ற விசாரணைக்கு ஒத்துழைக்க பெண் வி.ஏ.ஓ.,விற்கு அறிவுறுத்த வேண்டும். தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும்,' திருநெல்வேலி கலெக்டருக்கு அறிக்கை அனுப்பினார்.பெண் வி.ஏ.ஓ.,'எனக்கு எதிராக பாரபட்சமாக கீழமை நீதிமன்றம் வாரன்ட் பிறப்பித்துள்ளது. 

சம்பந்தப்பட்ட தேதியில் எனக்கு உடல்நலம் சரியில்லாததால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவித்தேன். மகளிர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும். வேறு நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணையை மாற்ற உத்தரவிட வேண்டும்,' என உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். 

நீதிபதி பி.என்.பிரகாஷ் விசாரித்தார்.ஆண் வி.ஏ.ஓ., தரப்பு வழக்கறிஞர்,“ மனுதாரர் அவரது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி, கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். விவாகரத்து பெறவில்லை. வேண்டுமென்றே கீழமை நீதிமன்றத்தில் மனுதாரர் ஆஜராகவில்லை,” என்றார்.நீதிபதி உத்தரவுமனுதாரர் ஒரு குழந்தை இல்லை. அவருக்கு 39 வயதாகிறது. பொறுப்புமிக்க வி.ஏ.ஓ., பணியில் உள்ளார். நீதிமன்றத்தில் ஆஜராகாதபட்சத்தில், அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம் தகவல் தெரிவிப்பது வழக்கம். அவ்வாறு மனுதாரர் தகவல் தெரிவிக்கவில்லை. 

இவ்வழக்கில் மனுதாரருக்கு வாரன்ட் பிறப்பிக்கப்பட்ட அதே நாளில், 4 சாட்சிகளுக்கு கீழமை நீதிமன்ற நீதிபதி வாரன்ட் பிறப்பித்துள்ளார். மனுதாரருக்கு எதிராக கீழமை நீதிமன்ற நீதிபதி, பாரபட்சமாக செயல்படுவதாக கூறுவதை ஏற்க முடியாது. மருத்துவமனையிலிருந்து திரும்பியதாக கூறப்படும் தேதியில், வாரன்ட்டை திரும்பப் பெறுமாறு மனுதாரர் கோரவில்லை.குற்றவாளிகளுக்கு எதிராக பிறப்பிக்கப்படும் கைது வாரன்ட் திரும்பப் பெறப்படுகிறது. போலீசார் வாரன்ட்டை நிறைவேற்ற சென்றபோது, மனுதாரர் வீட்டின் கதவை பூட்டிவிட்டு, மறைந்து கொண்டுள்ளார். இதனால் வேறு வழியின்றி, கலெக்டருக்கு நீதிபதி கடிதம் எழுதியுள்ளார். நீதிபதியின் நடவடிக்கையில் தவறு காண முடியாது. 

பெண்களுக்கு எதிரான குற்றங்களை விரைந்து முடிக்க, கீழமை நீதிமன்றங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.சாட்சிகள் சம்மன் பெற்றபின் நீதிமன்றத்தில் ஆஜராகாவிடில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். மனுதாரருக்கு கீழமை நீதிமன்ற நீதிபதி எச்சரிக்கை செய்துள்ளார். அவர், கலெக்டருக்கு கடிதம் அனுப்பியதில் தவறு காண முடியாது. மனுதாரர் 2 வாரங்களில் கீழமை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். மனுவை தள்ளுபடி செய்கிறேன்

என்றார்.

NEWS TODAY 21.12.2025