Tuesday, March 14, 2017

Doctors stage protest seeking release of their professor from UP jail

By Express News Service  |   Published: 14th March 2017 02:50 AM  |  
Last Updated: 14th March 2017 02:50 AM 

Doctors and students of MMC stage protest demanding the release of their senior professor from a Lucknow prison | d sampathkumar
CHENNAI: Seeking the intervention of the State to secure the release of a government doctor who has been lodged in a Lucknow prison following a complaint by a moneylender, over 100 doctors from various departments of the Rajiv Gandhi Government General Hospital staged a protest on Monday.
After the doctors pursuing post-graduation struck work, many scheduled elective surgeries were suspended, and the administration had to deploy assistant professors and paramedical staff to deal with the shortage of hands during the day.
Dr M Sudheer, a senior professor with the orthopaedics department of Madras Medical College (MMC), was arrested from the hospital and lodged in a jail in Lucknow, following a money dispute with Kamaraj, a local lender. The doctor had borrowed `20 lakh for his children’s education expenses and for building his home in 2011.
When the two had a dispute over repayment, a complaint was filed in the Teynampet police station and a petition is pending before a court in Chennai. In the meanwhile, the moneylender reportedly approached a gang in Uttar Pradesh, which filed a police complaint in Lucknow stating that the doctor had obtained `1 crore promising permission for a new medical college.
As the matter created flutter, the police here arrested Kamaraj under various sections of the IPC and Tamil Nadu Prohibition of Charging Exorbitant Interest Act 2003, on Thursday.  
Dr R Sathish, a PG student from the orthopaedics department, said the students have made a call to other medical colleges to join them through students representatives.
“Scheduled elective surgeries were carried on as planned. We are making alternative arrangements for Tuesday’s procedures. Non clinical staff and assistant professors’ help has been sought to make sure emergency services are not affected,” Dr K Narayanasamy, dean (in-charge), MMC, told Express. The college administration has taken all steps to secure the release of the doctor, the dean said.

Prison personnel seize Rs 14,000 from movie producer Madhan


By Express News Service  |   Published: 14th March 2017 02:24 AM  | 
 Last Updated: 14th March 2017 02:47 AM|  

CHENNAI: Raising questions about monitoring the high-profile accused, personnel at Puzhal Central Prison seized `14,000 from S Madhan, the controversial movie producer and college seat broker, who has been in custody since May.
The money was found on him when he returned from a court hearing on Thursday.
Madhan was arrested after over 130 complaints were filed against him by parents of MBBS aspirants to obtain a seat at SRM medical college. The court proceedings are ongoing, where he was taken on Thursday.
According to senior prison officials, an inmate cannot carry cash in hand as per prison rules.
Instead, it would go directly to the account of the inmate that is automatically opened as and when a new person is brought in.

நகைக்கடனுக்கு ரூ.20,000 மட்டுமே ரொக்கமாக வழங்க வேண்டும்: ரிசர்வ் வங்கி உத்தரவு

தங்க நகைக் கடனுக்கு அதிகபட்சம் ரூ.20,000 மட்டுமே ரொக்கமாக வழங்க வேண்டும் என்றும், அதற்கு மேலான தொகை காசோலையாக வழங்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக ரிசர்வ் வங்கி இந்த உத்தரவை வெளியிட்டுள்ளது.

முன்னதாக இந்த வரம்பு ஒரு லட்ச ரூபாயாக இருந்தது. தற்போது 20,000 ரூபாயாக ரிசர்வ் வங்கி குறைத்திருக்கிறது.

முத்தூட் பின்கார்ப் நிறுவனத்தின் இயக்குநர் ஜார்ஜ் முத்தூட் கூறும்போது ரிசர்வ் வங்கியின் இந்த உத்தரவு எங்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. சராசரியாக நாங்கள் வழங்கும் கடன் அளவு 35,000 முதல் 40,000 ரூபாய். இதனால் சிறு கடன் வாங்குபவர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படும் என்றார்.

இதனால் தங்க நகைக்கடன் பிரிவில் செயல்பட்டு வரும் வங்கி அல்லாத நிதி நிறுவன பங்குகள் வெள்ளிக்கிழமை கடுமையாக சரிந்தன. இதனால் இந்த பங்குகளில் எச்சரிக்கையாக இருக்குமாறு பங்குச்சந்தை வல்லுநர்கள் தெரிவித்தனர்.

குறள் இனிது: விதிமுறை.. மனநிலை.. நடைமுறை..!


சோம.வீரப்பன்


சமீபத்திய செய்தி தெரியுமா? பாரத ஸ்டேட் வங்கியில் சென்னை, பெங்களூரு போன்ற 6 பெருநகரங்களில் சேமிப்புக் கணக்கிற்கான குறைந்தபட்ச இருப்புத் தொகை வரும் ஏப்ரல்1-ம் தேதி முதல் ரூ.5,000 ஆக உயர்த்தப்படுகிறதாம்!

இதுவரை காசோலை வசதி பெறாத வாடிக்கை யாளர்களுக்கு ரூ.500 ஆக இருந்த இத்தொகை தற்பொழுது 10 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது! நகரங்களில் உள்ள கணக்குகளுக்கு இத் தொகையை ரூ.3,000 என்றும், சிறு நகரங்களுக்கு ரூ.2,000 எனவும், கிராமங்களுக்கு ரூ.1,000 எனவும் நிர்ணயம் செய்துள்ளார்கள்!

ஏப்ரல் 1 முதல் இவ்வங்கியுடன் இணையும் ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத் போன்ற 5 துணை வங்கிகளுக்கும் இது பொருந்தும்! அவர்கள் சொல்லும்படி மாதத்திற்கான சராசரித் தொகை வங்கியில் இல்லையென்றால் போச்சு அண்ணே! ரூ.100 வரை அபராதம் போட்டுத் தாளித்து விடுவார்கள்! அதாவது ஒரு வருடத்தில் உங்கள் கணக்கிலிருந்து அபராதமாக ரூ.1,200 வரை எடுத்துக் கொண்டு விடுவார்கள் போல் தெரிகிறது!
அதற்கு ‘சேவை’ வரி வேறு உண்டாம்! இதென்னங்க கபளீகரம்? வங்கிகளின் பெரிய அண்ணன் யார்? ஸ்டேட் வங்கி தானே? அண்ணன் எவ்வழி நாங்களும் அவ்வழி என இனி மற்ற வங்கிகளும் இதையே பின்பற்ற ஆரம்பித்து விடுவார்கள்! ஐயா, உங்கள் மனதின் எண்ண ஓட்டம் எனக்குப் புரிகிறது. ‘இது என்ன அநியாயம்? நாங்க தானா மாட்டினோம்? விஜய் மல்லைய்யா போன்றவர்கள் ஏமாற்றிச் செய்த நட்டத்தை எல்லாம் சரிக்கட்ட எங்கள் தலையில் மிளகாய் அரைக்கப் பார்க்கின்றார்களா?'என்று கோபம் வருகிறதா?

இதற்குச் சொல்லப்படும் காரணங்கள் தெரிந்தவை தானே?

ஒவ்வொரு கணக்கையும் பராமரிப்பதற்கு நிறையச் செலவாகும், கணினிகளில் மூலதனம், அவற்றின் தேய்மானம், பணியாளர்களின் சம்பளம், கிளையின் வாடகை போன்ற செலவுகள் என கணக்குப் போட்டுச் சொல்வார்கள். இது தர்க்க ரீதியாகவும், கணக்காளர்களின் ஆய்வுப் படியும் சரியாக இருக்கலாம். ஆனால் இன்றுள்ள சூழ்நிலையில் மக்கள் இதை ஏற்றுக் கொள்வார்களா?

தற்பொழுது வங்கிகளைக் குறித்த மக்களின் பார்வை என்ன? வாராக் கடன்களின் சுழலில் தத்தளித்துக் கொண்டு மீள முடியாமல் தவிக்கின்றன என்பது தானே? இருக்காதா பின்னே? ஜூன் 2016 நிலவரப்படி பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளின் வாராக்கடன் ரூ.6 லட்சம் கோடியாம்! இதில் ஸ்டேட் வங்கியின் பங்கு மட்டும் ரூ.93,000 கோடி!

`என்னம்மா, இப்படிச் செய்யலாமா, அபராதத்தைக் குறைங்களேன்னு' கேட்டால் ஜன்தன் கணக்குகளால் ஆகும் செலவைச் சரிக்கட்டுகிறோம் என்கிறார் அருந்ததி பட்டாச்சார்யா! எந்த ஒரு விஷயத்தையும் அணுகும் பொழுது நியாய அநியாயங்களுடன் அப்பொழுது உள்ள சூழ்நிலையையும் மக்கள் மனநிலையையும் பார்த்துச் செய்ய வேண்டுமில்லையா? ஒரு செயலைச் செய்யும் முறையை நூலறிவால் அறிந்த போதிலும், அதனை உலகத்தின் இயல்புக்குப் பொருந்தும்படியே செய்ய வேண்டும் என்கிறார் வள்ளுவர்!

செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்
(குறள்: 637)

- somaiah.veerappan@gmail.com

அஞ்சலகத்திலிருந்து வங்கிக்கு சேமிப்பு கணக்கை மாற்றுவது எப்படி?

கே. குருமூர்த்தி

பெரும்பாலும் அஞ்சலக சேமிப்பு கணக்குத் திட்டங்கள் கவரக்கூடியதாக இருந்தாலும் ஆன்லைன் மூலமாக முதலீடு மற்றும் பணப்பரிமாற்றம் செய்வதற்கு வசதிகள் இல்லாததால் சேமிப்புத் திட்டங்களை தொடங்குவது சிரமமாக இருந்து வருகிறது. ஆனால் சில திட்டங்களை அஞ்சலகத்திலிருந்து வங்கிகளுக்கு மாற்றிக் கொள்ள முடியும். சுகன்யா சம்ருதி திட்டம் (எஸ்எஸ்ஏ) அல்லது பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎப்) திட்டம் போன்றவற்றை அஞ்சலகத்தி லிருந்து வங்கிகளுக்கு மாற்றிக் கொள்ளமுடியும்.

ஏறக்குறைய அனைத்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஐசிஐசிஐ, ஆக்ஸிஸ், ஹெச்டிஎப்சி உள்ளிட்ட தனியார் வங்கிகள் சுகன்யா சம்ருதி சேமிப்புத் திட்டத்தை வழங்குகின்றன. அதேபோல் பெரும் பாலான பொதுத்துறை வங்கிகளும் மற்றும் தனியார் வங்கிகளும் பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎப்) திட்டத்தை வழங்குகின்றன.

மாற்றக்கூடிய வழிமுறைகள்

அஞ்சலகத்தில் நீங்கள் வைத்துள்ள அதே எஸ்எஸ்ஏ மற்றும் பிபிஎப் கணக்கை வங்கிகளுக்கு மாற்றிக் கொள்ள முடியும். இரண்டு திட்டங்களையும் அஞ்சலகத்திலிருந்து வங்கிகளுக்கு மாற்றிக் கொள்ள உங்கள் கைப்பட ஒரு கடிதத்தை நீங்கள் கணக்கு வைத்துள்ள அஞ்சலகத்தில் கொடுக்க வேண்டும். அந்தக் கடிதத்தில் எந்த வங்கிக்கு சேமிப்பு கணக்கை மாற்றப்போகிறீர்கள் என்பது பற்றியும் வங்கி கணக்கு பற்றிய விவரங்களையும் கடிதத்தில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
பொது வருங்கால வைப்பு சேமிப்பு கணக்கை மட்டும் மாற்றுவதற்கு எஸ்பி-10 (பி) என்ற படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். மேலும் எஸ்எஸ்ஏ மற்றும் பிபிஎப் சேமிப்பு கணக்குக்குரிய சேமிப்பு புத்தகத்தை அஞ்சலகத்திடம் ஒப்படைத்துவிட வேண்டும். ஒப்படைப்பதற்கு முன் உங்கள் சேமிப்பு கணக்கு புத்தகத்தை ஜெராக்ஸ் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இதையெல்லாம் முடித்த பின்னர் உங்கள் கணக்கை மாற்றுவதற்குரிய வேலைகளை அஞ்சலகத்தில் தொடங்கு வார்கள். பின்பு உங்கள் சேமிப்பு கணக்குக்குரிய ஆவணங்களை வங்கிகளுக்கு அனுப்பி வைத்து விடுவார்கள். இந்த ஆவணங்கள் வங்கிகளுக்கு சென்றதுமே வங்கியில் புதிய சேமிப்பு கணக்கை தொடங்குவதற்குரிய வழிமுறைகளை தொடங்க வேண்டும். வங்கியில் முதலில் சேமிப்பு கணக்கு தொடங்குவதற்குரிய படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

இந்த படிவத்துடன் முகவரி சான்றிதழ், அடையாளச் சான்றிதழ், புகைப்படங்கள் ஆகியவற்றை அளிக்க வேண்டும். சுகன்யா சம்ருதி திட்டத்திற்கு உங்கள் குழந்தையினுடைய பிறப்பு சான்றிதழை கட்டாயமாக அளிக்க வேண்டும். இதையெல்லாம் அளித்து விட்டால் புதிய கணக்கை உடனடி யாக தொடங்கிவிட முடியும். வங்கியிட மிருந்து புதிய சேமிப்பு கணக்கு புத்த கத்தையும் பெற்றுக் கொள்ள முடியும்.

ஏன் மாற்ற வேண்டும்?

எஸ்எஸ்ஏ அல்லது பிபிஎப் சேமிப்பு கணக்குகளை அஞ்சலகத்திலிருந்து வங்கிகளுக்கு மாற்றிக் கொண்டால் எளிதாக ஆன்லைன் மூலமாக பணப் பரிமாற்றம் செய்து கொள்ளமுடியும்.மேலும் அஞ்சலகத்தில் ஒவ்வொரு முறை செல்லும் போதும் உங்கள் சேமிப்பு கணக்கு புத்தகத்தை எடுத்துச் சென்று புதுப்பித்துவர வேண்டும். வங்கிகளுக்கு மாற்றிக் கொண்டால் இந்த சிரமம் ஏற்படாது.

ஆன்லைன் மூலமாக உடனடியாக செலுத்தி விட முடியும். உங்களது வரைவோலையை அஞ்சலகத்தில் அளித்தால் அது செயல்முறையாகி உங்கள் கணக்கில் பணம் சேருவதற்கு நேரம் ஆகும். வங்கிகளில் இதுபோன்ற நடைமுறை சிக்கல்களைத் தவிர்க்க முடியும். வங்கிகளில் ஆன்லைன் மூலமாகவே மாதாந்திர அறிக்கைகளை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள முடியும்.

எஸ்எஸ்ஏ சேமிப்பு கணக்கையோ அல்லது பிபிஎப் கணக்கையோ அஞ்சலகத்திலிருந்து வங்கிகளுக்கு மாற்றிக் கொள்வதற்கு உங்களுக்கு ஏற்கெனவே வங்கி கணக்கு இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரே வங்கி கிளையில் அனைத்து சேமிப்பு கணக்குகள் இருக்கும்பட்சத்தில் பணத்தை பரிமாற்றம் செய்து கொள்வது எளிதாக இருக்கும்.

இந்த சேமிப்பு கணக்குகளை அஞ்சலகத்திலிருந்து வங்கிகளுக்கு மாற்றிக் கொள்வதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்பது அஞ்சலகத்தில் எவ்வளவு காலத்தில் நடைமுறைகளை முடிக்கிறார்கள் என்பதை பொறுத்தது. நீங்கள் இரண்டு, மூன்று முறை அஞ்சலத்துக்கு சென்று வர வேண்டி இருக்கும். அதேபோல் வங்கிக்கும் சில முறை சென்று வர வேண்டியிருக்கும். வங்கி கணக்கு தொடங்கிய பின் நீங்கள் ஆன்லைன் மூலமாகவே அனைத்தையும் மேற்கொள்ள முடியும்.

கே. குருமூர்த்தி 
gurumurthy.k@thehindu.co.in

மின் கணக்கீட்டில் முறைகேடு செய்யும் ஊழியர்கள் மீது நடவடிக்கை: தமிழ்நாடு மின்வாரியம் எச்சரிக்கை


மின் பயன்பாட்டை சரியாக கணக்கிடாமல் முறைகேட்டில் ஈடுபடும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்வாரியம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சாரம் 100 யூனிட் வரை இலவசமாகவும், 500 யூனிட் கள் மானிய விலையிலும் வழங்கப் படுகிறது. இதற்காக மின்வாரியத் துக்கு ஏற்படும் இழப்பை தமிழக அரசு வழங்குகிறது. தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ள தால் மின்சாரப் பயன்பாடு அதிகரித் துள்ளது. இதனால் மின்கட்டணம் அதிகரித்து, அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கும்.
இந்நிலையில், வீடு வீடாகச் சென்று மின் பயன்பாட்டை கணக் கீடு செய்யும் ஊழியர்கள் சிலர் முறையாக கணக்கிடாமல், முறை கேட்டில் ஈடுபடுவதாக புகார்கள் வந்துள்ளன. அதாவது, வீடுகளில் 500 யூனிட்டுக்கு மேல் மின்நுகர்வு இருந்தால் இரு மடங்கு கட்ட நேரிடும். இதனால், அவர்களுக்கு சாதகமாக செயல்படும் மின்ஊழியர் கள், 500 யூனிட்டைவிட குறைத்து கணக்கீடு செய்கின்றனர். பரவ லாக இதுபோன்ற முறைகேடுகள் நடப்பதால், மின்வாரியத்துக்கு அதிக அளவில் இழப்பீடு ஏற்படுகிறது.

இதை தடுக்கும் வகையில், மின்பயன்பாட்டை முறையாக கணக்கீடு செய்யுமாறு ஊழியர்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதில் முறைகேட்டில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் கூறினர்.
சமத்துவம் மறுக்கப்படும்போது அனைத்தும் மறுக்கப்படுகிறது' ஜேஎன்யு.,வில் பயின்ற தமிழக் மாணவர் முத்துக்கிருஷ்ணன் கடைசியாக தனது முகநூலில் பதிவு செய்த நிலைத்தகவல் இதுதான்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நவீன வரலாறு பாடப்பிரிவில் ஆராய்ச்சி மேற்கொண்டிருந்த மாணவர் முத்துக்கிருஷ்ணன், திங்கள்கிழமை மாலை அவரது நண்பரின் வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார். தற்கொலை குறிப்பு ஏதும் கிடைக்கவில்லை என போலீஸ் தரப்பில் கூறப்பட்டாலும் கடைசியாக மார்ச் 10-ம் தேதியன்று முத்துக்கிருஷ்ணன் அவரது முகநூல் பக்கத்தில் பதிவு செய்தி  ருந்த நிலைத்தகவல் அவர் மன உளைச்சலில் இருந்ததை உறுதி செய்வது போல் இருக்கிறது.

அவரது முகநூல் பதிவு:

"எம்.ஃபில்., பி.எச்.டி., மாணவர் சேர்க்கையில் சமத்துவம் பேணப்படவில்லை. ஆராய்ச்சி மாணவர்களுக்காக நடத்தப்படும் வாய்மொழித் தேர்விலும் சமத்துவம் இல்லை. அங்கே நடைபெறுவதெல்லாம் சமத்துவம் மறுக்கப்படுவது மட்டுமே. பேராசிரியர் சுகதேவ் தோரத் பரிந்துரைகள் இங்கு சிறிதும் பின்பற்றப்படுவதில்லை. மாணவர்கள் போராட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. சமூகத்தின் விளிம்புநிலையில் இருந்து வருபவர்களுக்கு கல்வி மறுக்கப்படுகிறது. சமத்துவம் மறுக்கப்படும்போது அனைத்துமே மறுக்கப்படுகிறது" இவ்வாறு கடந்த 10-ம் தேதியன்று அவர் தனது முகநூலில் பதிவிட்டிருக்கிறார்.

NEWS TODAY 21.12.2025