Friday, March 17, 2017

14 கோடி ரூபாய் இழப்பீடு கேட்கும் நீதிபதி கர்ணன்!


14 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு, கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன், உச்சநீதிமன்ற அரசியல் சாசனக் குழுவுக்குக் கடிதம் எழுதியுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக நீதிபதி கர்ணனை நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இரண்டு முறை கர்ணன் நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் கர்ணன், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி உள்ளிட்ட 7 பேர் மற்றும் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்கி ஆகியோர்மீது வழக்கு பதிவுசெய்து, சி.பி.ஐ அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். இந்நிலையில், 'பொதுமக்கள் முன்னிலையில் உச்சநீதிமன்றம் தன்னை அவமானப்படுத்திவிட்டது. ஆகவே, இழப்பீடாக 14 கோடி ரூபாய் வழங்க வேண்டும்' என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசனக் குழுவுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

சசிகலாவை வாழ்த்துவதா?- அவையில் திமுக கடும் எதிர்ப்பு

சட்டப்பேரவையில், பட்ஜெட் உரையின்போது அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை வாழ்த்திப் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கோஷங்கள் எழுப்பினர். இதனால், அவையில் சிறிது நேரம் அமளி நீடித்தது.

2017 - 2108 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டப்பேரவை இன்று (வியாழக்கிழமை) கூடியது. நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது, அமைச்சர் டி.ஜெயக்குமார் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை வாழ்த்திப் பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவையில் திமுகவினர் கோஷமிட்டனர். கூச்சல் அதிகமாகவே குறுக்கிட்ட அவைத்தலைவர் ப.தனபால், எதிர்க்ட்சி உறுப்பினர்கள் அமைதிகாக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால் திமுகவினர் தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். கூச்சலுக்கு மத்தியிலும் அமைச்சர் டி.ஜெயக்குமார் பட்ஜெட் உரையை வாசித்துக்கொண்டிருந்தார். தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பவே, அவர் உரையை சிறிது நேரம் நிறுத்தினார்.

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தனது கருத்தை தெரிவிக்க சபாநாயகர் அனுமதி வழங்கினார். அப்போது ஸ்டாலின், "சிறையில் இருப்பவரை அவையில் வாழ்த்திப் பேசுவதை ஏற்க முடியாது. சசிகலா பெயரை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.
அதற்கு அவை முன்னவர் செங்கோட்டையன் பதிலளித்தபோது, "கட்சியின் பொதுச்செயலாளர் பெயரை குறிப்பிடுவது மரபுதான்" என்றார்.

இதை திமுக ஏற்காததால் சபையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் பட்ஜெட் உரையை அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்தார்.

786’ என்ற எண்களில் முடியும் நூறு ரூபாய் நோட்டு ரூ.50 ஆயிரத்துக்கு விற்பனை: ‘இபே’ நிறுவனத்தால் பரபரப்பு

ஆர்.சிவா

786’ என்ற எண்களில் முடியும் நூறு ரூபாய் நோட்டை ‘இபே’ நிறுவனம் மூலம் ரூ.50 ஆயிரத்துக்கு விற்பனை செய்ய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தயாரிப்புப் பொருட்களை ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்யலாம். விற்பனை செய்யப்பட்ட தொகைக் கான கமிஷனை மட்டும் ஆன் லைன் வர்த்தக நிறுவனம் எடுத்துக் கொண்டு, மீதித் தொகையை பொருளை விற்றவரிடம் கொடுத்து விடும்.
அமேசான், பிளிப்கார்ட் போன்ற பல நிறுவனங்கள் இப்படியே செயல்படுகின்றன. இதேபோல ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்யும் ‘இபே’ நிறுவனம் மூலம் அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்யும் வகையில் ஒரு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்கள் புனித எண்ணாக கருதும் ‘786’ என்ற எண்ணுடன் முடியும் நூறு ரூபாய் நோட்டை விற்பனை செய்வதாக ‘இபே’ நிறுவனம் மூலம் சிலர் அறிவித்துள்ளனர். இந்த நூறு ரூபாய் நோட்டின் விலை ரூ.50 ஆயிரம். தபால் செலவுக்கு கூடுதலாக ரூ.90. மொத்தம் 50 ஆயிரத்து 90 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த தொகையை செலுத்துபவர்களுக்கு இரு நாட்களில் அவர்களின் முகவரிக்கு ‘786’ என்று முடியும் நூறு ரூபாய் நோட்டு தபாலில் அனுப்பி வைக்கப்படும் என்று ‘இபே’ நிறுவன இணைய பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல 50 ரூபாய் நோட்டை ரூ.254-க்கும், 20 ரூபாய் நோட்டை ரூ.294-க்கும், 10 ரூபாய் நோட்டை ரூ.244-க்கும், 5 ரூபாய் நோட்டை ரூ.549-க்கும் விற்பனை செய்ய அதே நிறுவன பக்கத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பொது மக்களின் கடவுள் நம்பிக்கையை பயன்படுத்தி, அநியாய விற்பனையை வெளிப் படையாக செய்பவர்களுக்கும், ‘இபே’ நிறுவனத்துக்கும் பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பாளர் முகமது மைதீன் கூறும்போது, “786 என்பது ‘இறைவனின் திருப்பெயரால் தொடங்குகிறேன்’ என்ற வார்த்தை களின் எண்களுக்கான சுருக்கமா கும். இந்த எண்ணுக்கும் இஸ்லாம் மார்க்கத்துக்கும் தொடர்பு இல்லை. இதை பொதுமக்கள் தவறாக பயன்படுத்த தொடங்கி விட்டனர். பொதுமக்களின் மூட நம்பிக்கையை பயன்படுத்தி, அதை பணமாக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது” என்றார்.

இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் தடா ரஹீம் கூறும்போது, “786 என்பது வெறும் எண் மட்டும்தான். இது புனித எண் என்பது தவறானது. இதை வைத்து மக்களிடம் பணம் பறிக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது” என்றார்.

மொழி கடந்த ரசனை 25: இந்தியில் ஒரு ‘எலந்தப் பயம்’

எஸ்.எஸ். வாசன்

காலத்தால் அலையாத கருத்து மிக்க பாடல்களை எழுதியவர் கண்ணதாசன். ஆனால் இது அவர் எழுதிய பாடல்தானா எனப் பலரைக் கேட்கவைத்த பாடல் ‘எலந்தப் பயம், எலந்தப் பயம்’. எல். ஆர் ஈஸ்வரி தன் வசீகர குரலில் பாடியிருப்பார். பணமா பாசமா என்ற படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கியக் காரணமாக அமைந்த அந்தப் பாடலில் அடித்தட்டு மக்களின் மொழியும் உணர்வும் ஊற்றாகப் பொங்கி வழியும். படித்தவர்கள் மட்டுமின்றிப் பாமரர்களும் ரசிக்கும் விதம் திரைப் பாடல்களை எழுதும் திறன் பெற்றவர்களே சிறந்த திரை இசைக் கவிஞர்கள் என்பதை இந்தப் பாடல் மூலம் எடுத்துக் காட்டிய கண்ணதாசனுக்கு இணையானவர் ராஜா மெஹதி அலி கான்.


உருது மொழி கலந்த, ஆழமான பொருள் மிக்க மிகச் சிறந்த இந்திப் பாடல்களை எழுதியுள்ள மெஹதி அலி கான், ‘மேரா சாயா’ படத்திற்காக எழுதிய, ‘ஜும்கா கிரா ரே, ரே பரேலி கா பாஜார் மே’ என்று தொடங்கும் பாடல், பல விதங்களில் நம் இலந்த பழம் பாட்டுக்கு நிகரானது. இந்த இந்திப் பாட்டு உத்தர பிரதேசப் பேச்சு வழக்கில் அமைந்த ஒன்று. கிளர்ச்சி தரும் உச்ச ஸ்தாயில் அனாசயமாகப் பாடக்கூடிய எல்.ஆர்.ஈஸ்வரியின் எதிரொலி எனச் சொல்லத்தக்க வகையில் ஆஷா போன்ஸ்லே பாடிய பாடல் இது. ஜிப்ஸி உடையில் எழிலாகத் தோன்றும் சாதனா இளமைத் துள்ளலுடன் ஆடுவது இப்பாடலின் கூடுதல் சிறப்பு.

‘மேரேசாயா’ படம் வெளிவந்து 50 வருடங்களுக்குப் பிறகும் அதே ரசனையை இந்தப் பாடல் நமக்கு அளிக்கிறது. ‘யாஸ்மின்’ படத்தில் வைஜெந்திமாலா பாடி நடித்த ஆடல் காட்சி மட்டுமே சாதனா ஆடிய ஒயில் நடனத்திற்கு இணையாகக் கூறப்படுகிறது. அந்தக் காலச் சூழலின்படி, ஊர்ப் பெரியவர் தலைமையில் கிராம மக்கள் கூடி நிற்கும் திறந்த வெளியில் நடன மங்கை ஆடிப்பாடி மகிழ்விக்கும் இப்பாடலின் இடையிடையே ‘ஃபிர் கியா ஹுவா?’ (அப்புறம் என்ன ஆயிற்று?) என்ற வரிகள் இப்பாடலின் சிறப்பு. சாதனா கூறும் நிகழ்வுகளின் தொடர்ச்சியாகப் பின்னணி
இசை வாத்தியக்காரர்களும் இறுதியில் ஊர் பெரிசும் கேட்கும்படி அமைந்த இப்பாடலின் பொருள்:

ஜிமிக்கி விழுந்துவிட்டது, ஜிமிக்கி விழுந்துவிட்டது
ரே பரேலி கடைத்தெருவில் ஜிமிக்கி விழுந்துவிட்டது
ஐய்யோ ஐய்யோ ஜிமிக்கி விழுந்துவிட்டதய்யா
காதலன் வந்தான் கண்ணடித்துச் சிரித்தான் களவு போனது வீடு
‘காதில் ஜிமிக்கி போட்டு விடுகிறேன் வாடி அன்பே’ என்றான்
‘வேண்டாம் வேண்டாம் வம்பு பண்ணாதே’ எனச் சிணுங்கினேன்
அவனிடமிருந்து விடுவித்துக்கொள்ள முயன்ற எனது
இடுப்பை விடவில்லை அந்த எமகாதகன்
‘அப்புறம் என்ன ஆயிற்று’ (ஒரு குரல்)
அப்புறமா, அப்புறம், ஜிமிக்கி விழுந்துவிட்டது
எங்களுடைய இருவரின் தள்ளு முள்ளில்.
பின்னர் ஒரு சமயம்
வீட்டின் மாடியில் நின்றுகொண்டிருந்தேன் நான்
வீட்டு எதிர்த் தெருவில் நின்றான் அவன்
‘கீழே வா அன்பே, உடனே கீழே’ எனச் சிரித்தான்
முடியாது என்றால், ‘மோதிரம் வீசிக் காட்டு உன் சம்மதம்’ என்றான்
அடைந்த வெட்கத்தில் அது கேட்டு நனைந்துவிட்டேன் நான்
‘அப்புறம் என்ன ஆயிற்று’ (கூட்டத்திலிருந்து ஒருவர்)
அப்புறமா, அய்யா அப்புறம்
ஜிமிக்கி விழுந்துவிட்டது எங்கள் இருவரின் காதலின் சக்தியில்
(மற்றொரு தருணம்)
சோலையில் நான் சோர்ந்து இருக்கும்பொழுது
சேலைத் தலைப்பைச் சேர்த்து இழுத்துச் சொன்னான்
‘அடியே அன்பே என்னை ஆட்கொண்டுவிட்டாய் நீ’
விழிகளைத் தாழ்த்தி வெட்கத்தில் சிரித்தேன் மெல்ல
காதலன் சீண்டியபொழுது கரங்கள் இணைந்தன
‘அப்புறம் என்ன ஆயிற்று’ (கோரஸாகப் பலர்)
அப்புறமா அப்புறம் ஜிமிக்கி விழுந்துவிட்டது
இதற்கு அப்புறம் என்னத்தைச் சொல்ல
ஜிமிக்கி விழுந்துவிட்டது, ஜிமிக்கி விழுந்துவிட்டது
ரே பரேலி கடைத்தெருவில் ஜிமிக்கி விழுந்துவிட்டது

மிகவும் வித்தியாசமான கிராமிய இசைப் பின்னணியில் அமைந்த இந்தப் பாடலின் வரிகள் அப்போது வட இந்தியாவில் பேச்சு வழக்கில் இருந்த சாமனிய மக்களின் பேச்சு வழக்கில் இருந்த உருது, இந்தி, பெர்சிய மைதிலீ மொழிச் சொற்களை பயன்படுத்தி எதுகை மோனை குறையாமல் எழுதப்பட்டுள்ளது.

‘ஜிமிக்கி விழுந்துவிட்டது’ என்ற சொற்றொடர் அதன் சரியான அர்த்தத்தையும் தாண்டிய காதல் சேட்டையின் ஒரு குறியீடாக இப்பாடலுக்குப் பின்னர் உருவகம் கொண்டது. அதே போன்று ‘ரே பரேலி’ (பின்னர் இந்திரா காந்தியின் தொகுதியாக விளங்கிய) என்ற உத்தரப்பிரதேசத்தின் வர்த்தக நகரம் பல திரைப் பாடல்களில் இடம் பெறும் இடமாக மாறியது.

ஜெ. நினைவிடத்தில் பட்ஜெட்டை வைத்த விவகாரம்: அமைச்சர் ஜெயக்குமார் மீது நடவடிக்கை - ஸ்டாலின் உள்ளிட்டோர் வலியுறுத்தல்

2017-18-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்தார். முன்னதாக பட்ஜெட் அடங்கிய சூட்கேசை ஜெயலலிதா நினைவிடத்தில் வைத்து வணங்கினார் | படம்: எஸ்.ஆர்.ரகுநாதன்

தமிழக சட்டப்பேரவையில் பட் ஜெட்டை நிதியமைச்சர் ஜெயக் குமார் நேற்று தாக்கல் செய்தார். முன்னதாக பட்ஜெட் ஆவணம் வைக்கப்பட்ட பெட்டியை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் வைத்து வணங் கினார்.

இதற்கு பல்வேறு அரசியல் கட் சித் தலைவர்களும் வழக்கறிஞர் களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டா லின்:

ஜெயலலிதா சமாதியில் வைத்து அதன்பின் சட்டப்பேரவை யில் பட்ஜெட்டை நிதியமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்துள் ளார். தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யும் நடைமுறையில் அழிக்க முடியாத கரும்புள்ளியை அமைச் சர் ஏற்படுத்திவிட்டார். அவருக்கு என் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
பேரவை என்பது சட்டப்பேரவை தான். சமாதிகளை பேரவையாக கருத முடியாது. சட்டப்பேரவை விதிகள், அரசியல் சட்ட அங்கீ காரம் பெற்றவை. பேரவை விதி களையும், அரசியல் சட்டத்தையும் ஜெயக்குமார் மீறியுள்ளார். பேரவை யில் தாக்கல் செய்யப்படும் வரை, பட்ஜெட் பற்றிய ரகசியம் காக்கப் பட வேண்டும் என்பது மரபு. அந்த மரபுகளை மீறி, பட்ஜெட்டை சமாதி வரை எடுத்துச் சென்ற ஜெயக்குமார் மீது தமிழக ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஓ.பன்னீர்செல்வம் அணி எம்எல்ஏ எஸ்.செம்மலை:

நிதிநிலை அறிக்கை என்பது ரகசியம் காக்கப் பட வேண்டிய ஒன்று. அது முதன் முதலில் சட்டப்பேரவையில்தான் வைக்க வேண்டும். பொது இடத் தில் வைக்கக்கூடாது. தமிழக சட்டப் பேரவை வரலாற்றில் இதுபோன்ற நடைமுறை இருந்ததில்லை. முன் னாள் முதல்வர் எம்ஜிஆர் மறைந்த பின், ஜெயலலிதா ஆட்சியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் உள் ளிட்ட நிதியமைச்சர்கள், எம்ஜிஆர் நினைவிடத்தில் பட்ஜெட்டை வைத்து வணங்கிய முன்மாதிரி இல்லை. தற்போது புதிய நடைமுறையை உருவாக்கிய காரணமும் தெரியவில்லை. ஒரு வேளை குற்ற உணர்வின் காரண மாக பாவமன்னிப்பு தேடி ஜெய லலிதா சமாதியில் வைத்து வணங்கி விட்டு வந்திருக்கலாம். இதுபோன்ற நடவடிக்கை சட்டப்பேரவை விதி களுக்கு உட்பட்டதா என்பதற்கு சட்டப் பேரவைத் தலைவரும், செயலாளரும்தான் பதில் சொல்ல வேண்டும்.

சமூக நீதிக்கான வழக்கறிஞர் பேரவை தலைவர் கே.பாலு:

பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முன்பு வெளியில் வந்தால், அதை வைத்து ஆட்சியையே கலைத்துவிட முடியும். ஜெயலலிதாவின் படம், பெயரை அரசின் நலத்திட்டங்களில் பயன்படுத்தக் கூடாது என வழக்கு தொடர்ந்துள்ளோம். இந்நிலையில், பட்ஜெட் பெட்டியில் ஜெயலலிதா படத்தை போட்டு, அவர் சமாதியில் வைத்து அவரின் திட்டங்கள் தொடரும் என நிதியமைச்சர் அறி வித்துள்ளார். இதன்மூலம், சட்டப் பேரவையின் மாண்பு கிழிக்கப்பட் டுள்ளது. தமிழகத்தில் ஒரு மோச மான அரசியல் முன்னுதாரணத்தை நிதியமைச்சர் ஜெயக்குமார் ஏற்படுத்தி விட்டார்.

உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன்:

பட்ஜெட்டை ஜெயலலிதாவின் சமாதியில் வைத்து எடுத்து வந்ததன் மூலம் இந்த அரசையே நிதியமைச்சர் அவமானப்படுத்தி விட்டார். இது சட்டரீதியாக தவறு இல்லை என்றாலும், தார்மீக ரீதியில் குற்றம். ஒரு கட்சியின் கொள்கை முடிவு ஊழலாக இருக்க முடியாது. சட்டப் பேரவைக்குள் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் பேரவைத் தலைவரின் தன்னிச்சையான அதிகாரத்துக்குட் பட்டது. ஆனால், நிதிநிலை அறிக் கையை சமாதியில் வைத்து எடுத் துச் சென்றதன் மூலம் இதை எதிர்த்து வழக்கு தொடர்வதற்கான முகாந்திரம் உள்ளது. ஒட்டுமொத்த மக்கள் பிரதிநிதிகளின் அதிகாரக் குவியல் மையம்தான் சட்டப் பேரவை. அதை அவமானப்படுத் தும் வகையில் சமாதியில் வைத்து நிதிநிலை அறிக்கையை எடுத்துச் சென்ற நிதியமைச்சர் மீது ஏன் தார்மீக அடிப்படையில் வழக்குத் தொடரக்கூடாது?
இவ்வாறு அவர்கள் கூறி யுள்ளனர்.

எய்ம்ஸ் செவிலியர்கள் 2000 பேர் ஒரே நாளில் விடுப்பு: அவசர சிகிச்சை பிரிவு முடங்கியது; நோயாளிகள் அவதி

பிந்து சாஜன் பேரப்பதன்

நாட்டின் மிகப்பெரிய மருத்துவ நிறுவனமான டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் செவிலியர்கள் 2000 பேர் இன்று ஒரே நாளில் விடுப்பு எடுத்தனர்.

7-வது ஊதியக் குழு பரிந்துரை பாரபட்சமாக இருப்பதாகக் கூறி தங்களுக்கு சம்பள உயர்வு வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அவசர சிகிச்சைப் பிரிவு சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெறும் விடுப்புப் போராட்டம் குறித்து எந்த முன்னறிவிப்பும் இல்லாததால் சிகிச்சைக்காக நாடு முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த புறநோயாளிகளும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

"ஏற்கெனவே மருத்துவமனையின் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு முடிந்த அளவு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் பணிகளில் சுணக்கம் இருக்கிறது" என மருத்துவமனை நிர்வாக தரப்பு தெரிவித்துள்ளது.

இந்தப் போராட்டம் தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனையின் செவிலியர் கூட்டமைப்பின் தலைவர் ஹரிஷ் குமார் காஜ்லா கூறும்போது, "எங்கள் கோரிக்கைகள் ஒன்றும் புதிதானவை அல்ல. எங்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கக்கோரி பலமுறை மருத்துவமனை நிர்வாகத்திடம் வலியுறுத்திவிட்டோம். அதன்மீது நடவடிக்கை எடுப்பதாக ஒவ்வொருமுறையும் வாக்குறுதி அளிக்கிறார்களே தவிர செயல்பாடு எதுவும் இல்லை. இன்றைய விடுப்புப் போராட்டத்துக்கு எய்ம்ஸ் நிர்வாகம்தான் காரணம். இன்னமும், எங்கள் கோரிக்கைக்கு நிர்வாகம் செவி சாய்க்காவிட்டால் மார்ச் 27-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம்" என்றார்.

அவர் மேலும் கூறும்போது, "7-வது ஊதியக் குழு பரிந்துரைகளில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் சீர் செய்யப்பட வேண்டும். செவிலியர்களுக்கான அடிப்படை ஊதியம் ரூ.4,600-ல் இருந்து ரூ.5,400-ஆக உயர்த்தப்பட வேண்டும். அதேபோல், செவிலியர்களுக்கான படிக்காசு ரூ.7,800-ஆக உயர்த்தப்பட வேண்டும். இரவு நேரம் பணி புரிவதற்காக மற்ற அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படுவதுபோல் எங்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும்" இவையே எங்கள் முக்கிய கோரிக்கைகள் என்றார்.

விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர் ஒருவர் கூறும்போது, "மருத்துவர்களைப் போல் நாங்களும் (நோய்த் தொற்று ஏற்படும்) ஆபத்தான சூழலில் தொடர்ச்சியாக பலமணி நேரம் வேலை பார்க்கிறோம். ஆனால், எங்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படுவதில்லை. இரண்டாம் நிலையில்தான் நாங்கள் நிறுத்தப்படுகிறோம். இது எங்களுக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது" என்றார்.
UGC Notification on Admission to M.Phil and Ph.D Courses 

BUSINESS STANDARD
Delhi 
The University Grants Commission (UGC) has intimated that no protest petition has been received by it from Student Union of any university. However, it has intimated that there was a report of agitation of the students of Jawaharlal Nehru University, Delhi on certain provisions of the UGC (Minimum Standards and Procedure for the award of M.Phil / Ph.D. Degree) Regulation, 2016. 

As per the UGC Act, 1956, the UGC is responsible for promotion and co-ordination of University education, determination and maintenance of standards of teaching, examination and research in Universities. In order to maintain the quality of Research and to avoid sub-standard research degrees, UGC (Minimum Standards and Procedure for the award of M.Phil/Ph.D Degree) Regulations, 2016 have been notified. The UGC (Minimum Standards and Procedure for the award of M.Phil/Ph.D Degree) Regulations, 2016, inter-alia, lays down detailed eligibility criteria for admission into M.Phil/Ph.D programme, duration of such programme, procedure of admission, allocation of research supervisor, course work requirement, setting up of Research Advisory Committee etc. to provide a facilitative environment for carrying out quality academic research in Higher Education. These Regulations are mandatory in nature and are applicable to all Universities. 

This information was given by the Minister of State (HRD), Dr. Mahendra Nath Pandey today in a written reply to a Rajya Sabha question. 

(This story has not been edited by Business Standard staff and is auto-generated from a syndicated feed.)

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...