Monday, March 20, 2017

RGUHS sets the ball rolling for shifting campus to Ramanagaram


Bengaluru, March 20, 2017, DHNS

The shifting of the campus of the Rajiv Gandhi University of Health Science from Benglauru to Ramanagaram began on Sunday.

At a function in Ramanagaram organised to mark the beginning of the shifting process, Energy Minister D K Shivakumar, who is also the Ramanagaram district incharge minister, said the university would come up at Archakarahalli on 216 acres of land. 

“There are legal issues regarding 78 acres of land and construction will not be taken up there till the legal hurdles are cleared. The government will construct the campus and health city on the remaining 148 acres,” he said. 

Rs 800 crore deposits
“Some people are misleading the public by claiming that the RGUHS lacks funds. The varsity has deposits of Rs 800 crore and tax will have to be paid for the deposit if the funds are not utilised. Moreover, Rs 580 crore will be spent for the construction of the campus,” he said. 

Medical Education Minister Dr Sharan Prakash Patil said the government would release Rs 100 crore every year for the running of the university.

வெற்றி முகம்: முயற்சிகள் தோற்பதில்லை - நேற்று அரசு பள்ளி ஆசிரியர்; இன்று மாவட்ட கல்வி அதிகாரி

ஜெ.கு.லிஸ்பன் குமார்

அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றிபெற்று நேரடியாக மாவட்டக் கல்வி அதிகாரி பணிக்குத் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார். அவர் ஒரு விவசாயி மகன் என்பது குறிப்பிடத்தக்கது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஆர்.அறிவழகன்தான் இந்தச் சாதனைக்குச் சொந்தக்காரர்.

சொந்த ஊர் பெண்ணாடம் அருகேயுள்ள பெ.பொன்னேரி என்னும் குக்கிராமம். தந்தை ரெகுபதி, விவசாயி. தாயார் மணிமேகலை, இல்லத்தரசி. அரசு உயர் அதிகாரியாக வர வேண்டும் என்பது அறிவழகனின் லட்சியம். ஆனால் நீண்ட போராட்டத்துக்குப் பின்னரே அவரது லட்சியம் நிறைவேறியுள்ளது. அரசு பள்ளியில் இடைநிலை ஆசிரியர் பணி, அதன்பிறகு பட்டதாரி ஆசிரியராகப் பதவி உயர்வு, தற்போது நேரடியாக மாவட்டக் கல்வி அதிகாரி பணிக்குத் தேர்வு என அவரது அடுத்தடுத்த வெற்றிகளின் பின்னே பல்வேறு போராட்டங்களும், தோல்விகளும் மறைந்து கிடக்கின்றன.

தொடர்ந்து படிப்பேன்!

கிராமத்து விவசாயின் மகனான அறிழவகன் பிளஸ் 2 முடித்த பின்பு இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்தார். அடுத்து, சென்னை பல்கலைக்கழகத்தில் அஞ்சல்வழியில் பி.ஏ. வரலாறு முடித்தார். அப்போது அவருக்குச் சட்டம் படிக்கும் ஆர்வம் உண்டாகவே அரசு சட்டக் கல்லூரியில் பி.எல். படித்தார். 2-ம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும்போது 1995-ல் ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வில் தேர்ச்சி பெற்றார். அவருக்கு அரசு பள்ளியில் இடைநிலை ஆசிரியர் பணி கிடைக்கிறது.
அந்தப் பணியில் இருந்துகொண்டே சென்னை பல்கலைக்கழகத்தில் அஞ்சல்வழியில் எம்.ஏ. வரலாறும், அதைத் தொடர்ந்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.எட். படிப்பையும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் அஞ்சல்வழியில் எம்.ஃபில். ஒன்றன்பின் ஒன்றாக முடித்தார்.

ஆசிரியர் பணியில் இருந்த அவருக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆக வேண்டும் என்ற ஆசை 2001-ல் ஏற்பட்டது. சென்னையில் உள்ள தமிழக அரசு சிவில் சர்வீசஸ் தேர்வு பயிற்சி மையத்தில் சேர்ந்தார். தொடர்ந்து முயற்சிசெய்தும் வெற்றி கிடைக்கவில்லை. துணை ஆட்சியர் ஆகும் நோக்கில் 2008-ல் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வுக்குத் தயாரானார். இதற்கிடையே, அந்த ஆண்டு அவருக்குப் பட்டதாரி ஆசிரியராக (வரலாறு) பதவி உயர்வு கிடைத்தது.

படித்தது ஒருபோதும் வீண்போகாது!

அரசு உயர் அதிகாரியாக வரவேண்டும் என்ற ஆசை நிறைவேறவில்லையே என்று கவலை ஒருபுறம் இருந்தாலும், இன்னொரு புறம் கையில் உள்ள ஆசிரியர் பணியைத் திறம்படச் செய்ய வேண்டும் என்று கருதி அதன்படி பணியைத் தொடர்ந்தார். இந்த நிலையில்,2014-ல் 11 மாவட்டக் கல்வி அதிகாரிகளை நேரடியாகத் தேர்வுசெய்ய டி.என்.பி.எஸ்.சி. ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
600 மதிப்பெண்களுக்குக் கூடுதலாகப் பொது அறிவு பாடங்கள் சேர்க்கப்பட்டுப் புதிய மாற்றங்களோடு தேர்வு நடத்தப்பட்டது. ஏற்கெனவே ஐ.ஏ.எஸ். தேர்வுக்கும், குரூப்-1 தேர்வுக்கும் தன்னை முழுவதுமாகத் தயார்படுத்தியிருந்ததால், புதிய முறை டி.இ.ஓ. தேர்வைத் தன்னம்பிக்கையோடு எதிர்கொண்டார். முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத் தேர்வு என அத்தனை தேர்வுகளிலும் வெற்றி. டி.இ.ஓ. தேர்வு முடிவு அண்மையில் வெளியிடப்பட்டது. பணிக்குத் தேர்வுசெய்யப்பட்ட ஒன்பது பேரில் அறிவழகனும் ஒருவர். மெரிட் பட்டியலில் அவருக்கு 3-வது இடம் கிடைத்துள்ளது.

பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வரும் அவர், மாவட்டக் கல்வி அதிகாரியாகப் பயிற்சி பெறும் நாளை ஆவலோடு எதிர்நோக்கிக் காத்திருக்கிறார். தனது தேர்வு தயாரிப்பு அனுபவங்கள் குறித்து அறிவழகன், “எனது வெற்றிக்குப் பெரிதும் கைகொடுத்தது யூ.பி.எஸ்.சி. தேர்வு, டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வெழுதிய அனுபவம்தான். புதிய டி.இ.ஓ. தேர்வில் புதிதாக 2 பொது அறிவுதாள்கள் சேர்க்கப்பட்டது எனக்குப் பெரிதும் உதவிகரமாக இருந்தது. நீண்ட காலமாக ஐ.ஏ.எஸ். தேர்வுக்கும், குரூப்-1 தேர்வுக்கும் படித்து வந்ததால் அந்த அனுபவம் டி.இ.ஓ. தேர்வில் பொது அறிவுதாளில் நல்ல மதிப்பெண் எடுக்க உதவியது. படித்தது ஒருபோதும் வீண்போகாது என்று சொல்வார்கள். அதுபோல எனது பழைய உழைப்பு டி.இ.ஓ. தேர்வுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
டி.இ.ஓ. புதிய தேர்வுமுறையில் பொது அறிவு தாள்கள் சேர்த்திருப்பது வரவேற்கத்தக்கது. காரணம் பொது அறிவு தாளில் அனைத்துப் பாடங்களும் இடம்பெறுவதால் மாவட்டக் கல்வி அதிகாரியாகத் தேர்வுசெய்யப்படுபவர்கள் சிறப்பாகப் பணியாற்ற முடியும்” என்றார்.

அன்பான ஆலோசனை

டி.இ.ஓ. தேர்வில் வெற்றிபெற விரும்புவோர் தங்கள் பாடத்துடன் பொது அறிவு பாடத்துக்கு அதிகக் கவனம் செலுத்த வேண்டும். தேர்வுக்கான அறிவிப்பு வந்த பிறகு படிப்பது என்பது மிகவும் கஷ்டம், எனவே, தேர்வுக்கான அறிவிப்பு வரும்வரை காத்திருக்காமல் இப்போதிருந்தே தொடர்ந்து படிக்க வேண்டும். அப்போதுதான் இத்தேர்வில் வெற்றிபெற முடியும். டி.இ.ஓ. தேர்வெழுத விரும்பும் இளைஞர்களுக்கு என்னுடைய அன்பான அட்வைஸ் இதுதான்.

தரைவழி தொலைபேசி சேவையில் பிஎஸ்என்எல் அளவில்லா அழைப்பு வசதி அறிமுகம்


பிஎஸ்என்எல் தரைவழி தொலைபேசி சேவையில் அளவில்லா அழைப்பு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிஎஸ்என்எல் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பயன்பாட்டில் உள்ள லேண்ட்லைன் வாடிக்கையாளர்களுக்காக ’பிரண்ட்ஸ் அண்ட் பேமிலி’ என்ற புதிய திட்டம் மார்ச் 14-ம் தேதி தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் இணைவோர் குறிப்பிட்ட கட்டணங்கள் செலுத்தி தங்களுடைய தரைவழி தொலைபேசி எண்ணுடன் 1 முதல் 3 தரைவழி தொலைபேசி அல்லது கைபேசி எண்களை இணைத்து அளவில்லா அழைப்பு வசதியை பெற முடியும். இதற்கு ஒரு எண்ணுக்கு ரூ.21, 2 எண்களுக்கு ரூ.39, 3 எண்களுக்கு ரூ.49 என மாதந்தோறும் கட்டணம் செலுத்த வேண்டும்.

ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயங்கும்

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையங்கள் இன்று (மார்ச் 19), மார்ச் 26 ஆகிய 2 ஞாயிற்றுக்கிழமைகளில் சாதாரண வேலை நாட்களை போல் இயங்கும். அப்போது, வழக்கம்போல் தரைவழி தொலைபேசி, அகண்ட அலைக்கற்றை சேவை உள்ளிட்ட கட்டணங்களை செலுத்தலாம். சிம்கார்டு விற்பனையும் நடைபெறும்.

பிஎஸ்என்எல் இணைப்புகளிலிருந்து விலகியவர்கள் மீண்டும் இணைப்பு பெற விரும்பினால், அவர்களுக்கு மறுஇணைப்பு கட்டணம் மற்றும் நிறுவல் கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்படும். புதிய பிரீபெய்டு சிம் கார்டுகள் இலவசமாக வழங்கப்படும். இந்த சிறப்பு சலுகைகள் ஜூன் 14-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.

ஜிஎஸ்எம் பிரீபெய்டு வாடிக்கை யாளர்கள் ரூ.139 ரீசார்ஜ் செய்து பிஎஸ்என்எல் இருந்து பிஎஸ்என்எல்-க்கு இந்தியா முழுவதுக்கும் அளவில்லா அழைப்புகள் மற்றும் 500 எம்.பி டேட்டா வசதி பெறலாம். அதேபோல், ரூ.339 ரீசார்ஜ் செய்து அனைத்து எண்களுக்கும் இந்தியா முழுவதுக்கும் அளவில்லா அழைப்பு மற்றும் இன்டர்நெட் டேட்டா பெறலாம். இந்த 2 திட்டங்களும் 28 நாட்கள் செல்லத்தக்கதாக இருக்கும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளது.
கோடை தொடங்குவதற்கு முன்பே தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 41.8 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது.

கோடை தொடங்குவதற்கு முன்பே வெப்பம் அதிகரிப்பு: கரூர் பரமத்தியில் 41 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவு

ச.கார்த்திகேயன்

கோப்பு படம்

இந்த ஆண்டு கோடையில் இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் என்று அண்மையில் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. தமிழகத்தில் அதிகபட்சமாக இயல்பைவிட 1 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து வெப்பம் அதிகரித்தால் என்ன செய்ய வேண்டும், என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பது குறித்து தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் மூலம் பொதுமக்களுக்கு அறிவுரைகளை வழங்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தவாறு, நேற்று கரூர் பரமத்தியில் 41.8 டிகிரி செல்சியஸ் (107 டிகிரி ஃபாரன்ஹீட்) வெப்பநிலை பதிவாகியுள்ளது. கோடை தொடங்குவதற்கு முன்பே இவ்வளவு வெப்பம் பதிவாகியிருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறும்போது, “நேற்று மாலை 5.30 மணி நிலவரப்படி கரூர் பரமத்தியில் 41.8 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. மேலும் வேலூர், சேலம், திருச்சியில் 38 டிகிரி செல்சியஸும், பாளையங்கோட்டை, மதுரை, தருமபுரியில் 37 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் குறைந்தபட்ச சராசரி வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாக உயர்ந்துள்ளது. இதனால் இரவில் புழுக்கம் அதிகரிக்கும்” என்றார்.

இது தொடர்பாக சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறும்போது, “கடந்த 2005-ல் தமிழகத்தில் நல்ல மழை கிடைத்தது. சென்னையில் வெள்ளமும் ஏற்பட்டது. அடுத்து வந்த 2006, 2007 ஆகிய ஆண்டுகளில் தமிழகத்தில் வெப்பம் அதிகமாக இருந்தது. அதேபோன்று 2015-ல் அளவுக்கதிகமாக மழை பெய்த நிலையில், அடுத்த இரு ஆண்டுகளுக்கு அதிக வெப்பம் இருக்கத்தான் செய்யும்” என்றார்.

பிரம்மச்சாரி முதல்வர்கள்

பிடிஐ

உத்தரப் பிரதேசத்தின் புதிய முதல்வர் யோசி ஆதித்யநாத்

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பிரம்மச்சாரி முதல்வர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

திரிவேந்திர சிங் ராவத் (உத்தராகண்ட்), எம்.எல்.கட்டார் (ஹரியாணா), சர்பானந்த சோனோவால் (அசாம்), நவீன் பட்நாயக் (ஒடிசா), மம்தா பானர்ஜி (மே.வங்கம்) ஆகிய முதல்வர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாகவே வாழ்ந்து வருகின்றனர். அவர்களது வரிசையில் புதுமுகமாக உத்தரபிரதேசத்தின் புதிய முதல்வரான யோகி ஆதித்யநாத் இணைந்துள்ளார். மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் இறுதி வரை திருமணம் செய்து கொள்ளவில்லை.

உ.பி.யின் முன்னாள் முதல்வரான மாயாவதியும் திருமணமாகாதவர் தான். இவர்களை தவிர காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பாஜக மூத்த தலைவர் உமா பாரதி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோரும் திருமணமாகாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இளையராஜா பாடல்கள் போக மீதமுள்ள பாடல்களை வைத்து நிகழ்ச்சியைத் தொடர்வோம்: எஸ்.பி.சரண்

ஸ்கிரீனன்
எஸ்.பி.சரண் | கோப்பு படம்

இளையராஜா பாடல்கள் போக மீதமுள்ள பாடல்களை வைத்து நிகழ்ச்சியைத் தொடர்வோம் என எஸ்.பி.சரண் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இருவரும் இணைந்து தமிழ் திரையுலகுக்கு பல்வேறு வரவேற்பைப் பெற்ற பாடல்களைக் கொடுத்த கூட்டணியாகும். தற்போது இக்கூட்டணி பிரிந்துள்ளது உறுதியாகியுள்ளது.

சமீபத்தில் எஸ்.பி.பி திரையுலகுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆனதையொட்டி, பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். அமெரிக்காவில் நடைபெற்ற சுற்றுப்பயணத்தை முடித்துள்ளார்கள்.

இச்சுற்றுப்பயணம் குறித்து பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பாடகி சித்ரா உள்ளிட்டோருக்கு இளையராஜா தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் முறையான அனுமதியின்றி தன்னுடைய பாடல்களை எப்படி பாடலாம் என்று கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது.
இந்த நோட்டீஸ் குறித்து எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி. சரண் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், "எங்களுக்கு நோட்டீஸ் வந்துள்ளதைத் தொடர்ந்து, அதற்கு தகுந்தாற் போன்று நடவடிக்கை எடுத்து வருகிறோம். எஸ்.பி.பி 50 ஆண்டை நோக்கி 6 நாடுகளில் இந்நிகழ்ச்சி நடத்தியுள்ளோம். 7வது நாடாக அமெரிக்காவில் நடத்தியுள்ளோம்.
சான் பிரான்ஸிகோவில் நிகழ்ச்சி நடத்துவதற்கு முன்பு, இசைஞானி இளையராஜா அவர்களின் வக்கீல்கள் மூலமாக எங்களுக்கு நோட்டீஸ் வந்தது. அதில் இந்நிகழ்ச்சி நடந்தால் பெனால்டி வேண்டும் என்ற தகவல் கிடைத்தது. அதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியுள்ளோம். தொழில்ரீதியாக இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளார்கள். இந்த நோட்டீஸ் சம்பந்தமாக நான் எதுவும் கருத்து கூற முடியாது.

எஸ்.பி.பி அவர்கள் 50 ஆண்டை கடந்தும் இந்த துறையில் இருப்பதால் தான் இந்நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இளையராஜா சாருக்கு முதல் பாடல் பாடும் முன்பே, அவர் பாடிக் கொண்டு தான் இருக்கிறார். இளையராஜா சார் மட்டுமன்றி பல இசையமைப்பாளர்களுக்கு பாடியுள்ளார்.

1000 படங்களுக்கு இசையமைத்துள்ளார் இளையராஜா சார். அதில் சுமார் 2000 பாடல்களை எஸ்.பி.பி பாடியிருப்பார் என வைத்துக் கொள்ளலாம். அந்த 2000 பாடல்கள் போக 38000க்கும் அதிகமான பாடல்களை எஸ்.பி.பி பாடியுள்ளார். அந்த பாடல்களை வைத்துக் கொண்டு ஒட்டுமொத்த உலகத்திலும் என்னால் இசை நிகழ்ச்சிகள் நடத்த முடியும்.
சட்ட ரீதியாக எந்த ஒரு நடவடிக்கைக்கும் எங்களுக்கு விருப்பமில்லை. நட்பு ரீதியில் அப்பாவும் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என சொல்லியுள்ளார். அதற்காக தான் நாங்களும் அமைதியாக உள்ளோம்.

நாங்கள் யாருமே இளையராஜா சார் தரப்பில் யாரையும் தொடர்பு கொண்டு பேசவில்லை. வக்கீல் நோட்டீஸ் வந்துள்ளதால் நாங்களும் வக்கீல் மூலமாகவே பேசவுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

வோடபோன்- ஐடியா மொபைல் நிறுவனங்கள் ஒன்றிணைந்தன

இங்கிலாந்தைச் சேர்ந்த வோடபோன் நிறுவனமும் ஆதித்யா பிர்லா குழுமத்தின் ஐடியா செல் நிறுவனமும் இணைந்து செயல்பட உள்ளதாக, இன்று (திங்கட்கிழமை) அறிவித்துள்ளன.
இணைப்புக்குப் பிறகான புதிய நிறுவனத்தின் 45.1% பங்குகள் வோடஃபோன் வசம் இருக்கும். ஏற்கெனவே 4.9% பங்குகளை, வோடபோன் நிறுவனம் ரூ.38.74 பில்லியன் தொகைக்குத் தங்களுக்கு விற்றுவிட்டதாக ஐடியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐடியா நிறுவனத்துக்கு, புதிய நிறுவனத்தின் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.

குமாரமங்கலம் பிர்லா, புதிய நிறுவனத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். வோடபோன், ஐடியா இரண்டு நிறுவனங்களின் பங்குகளும் குறிப்பிட்ட காலத்துக்கு சம அளவிலேயே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைப்பு அறிவிப்பு வெளியானதற்குப் பிறகு ஐடியா நிறுவனத்தின் பங்குகள் 14.25% அதிகரித்துள்ளன.

இந்த ஆண்டு ஜனவரி இறுதியில் வோடபோன் - ஐடியா இணைப்புக்கான பேச்சுவார்த்தை துவங்கியது.

இணைப்புக்குப் பிறகான புதிய நிறுவனத்தின் பங்கு தொலைதொடர்பு நிறுவனங்களைப் பொருத்தவரை 43% ஆக இருக்கும். இதன்மூலம் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக இருந்த ஏர்டெல் நிறுவனம் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

NEWS TODAY 23.12.2025