Wednesday, March 22, 2017

தலையங்கம்
கலப்படம் செய்தால் ஆயுள் தண்டனை
DAILY THANTHI

பழைய காலங்களில் திரைப்படங்கள் பொதுவாக யதார்த்த உண்மைகளை வெளிப்படுத்தும் வகையிலேயே அமைந்திருந்தன. பாடல்கள் என்றாலும் சரி, திரைக்கதை, வசனம் என்றாலும் சரி, சமூகத்தில் நிலவும் அவலநிலையை எடுத்துக்காட்டும் விதமாக இருந்தது.

மார்ச் 22, 03:00 AM

பழைய காலங்களில் திரைப்படங்கள் பொதுவாக யதார்த்த உண்மைகளை வெளிப்படுத்தும் வகையிலேயே அமைந்திருந்தன. பாடல்கள் என்றாலும் சரி, திரைக்கதை, வசனம் என்றாலும் சரி, சமூகத்தில் நிலவும் அவலநிலையை எடுத்துக்காட்டும் விதமாக இருந்தது. அந்தவகையில், தி.மு.க. தலைவர் கருணாநிதி திரைக்கதை, வசனம் எழுதி 1953–ம் ஆண்டில் வெளிவந்த ‘திரும்பிப்பார்’ என்ற படத்தில், ‘‘கலப்படம்... கலப்படம்... எங்கும், எதிலும் கலப்படம்... ஆழாக்கு பாலினிலே அரைப்படி தண்ணீர் கலப்படம், அரிசியிலே மூட்டைக்கு அரைமூட்டை கல் கலப்படம், அருமையான நெய்யினிலே சரிபாதி டால்டா கலப்படம், காபி கொட்டையில் புளியங்கொட்டை முழுக்க முழுக்க கலப்படம்...’’ என்றொரு பாடல்வரும். அந்தபாடலிலுள்ள வரிகள் ஒவ்வொன்றும் 64 ஆண்டுகள் கழித்தும், இன்னும் நாட்டில் வி‌ஷக்கிருமியாக பரவிவருவது வேதனையளிக்கிறது. இப்போதெல்லாம் புதிது, புதிதாக எத்தனையோ நோய்கள் வருகின்றன. இதற்கெல்லாம் டாக்டர்களிடம் சென்றால், நீங்கள் சாப்பிட்ட உணவில் கலப்படம், குடித்த குளிர்பானத்தில் கலப்படம், அதுதான் இவ்வளவு உடல்நலக்கோளாறுகளையும் ஏற்படுத்துகிறது என்று பலநேரங்களில் சொல்கிறார்கள். சரி உணவில்தான் கலப்படம், குளிர்பானத்தில்தான் கலப்படம், இதை குணமாக்க மருந்துகள் வாங்கி சாப்பிடுவோம் என்றால், மருந்திலும் கலப்படம். கலப்படக் குற்றங்கள் செய்ததற்காக பல மருந்துகள் தடைச்செய்யப்பட்டுள்ளன. கலப்படம் செய்வது உயிர்க்கொல்லி குற்றமாகும்.

1976–ம் ஆண்டு நெருக்கடிநிலை பிரகடனத்தின்போது, கலப்பட குற்றங்களைத்தடுக்க கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு, அதற்குப்பிறகு அங்கொன்றும், இங்குகொன்றுமாக கண்டுபிடிக்கிறார்கள். ஆனால், இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு–272–ல் உணவு மற்றும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள உணவு மற்றும் குளிர்பானத்தில் கலப்படம் இருந்தால் அது குற்றமாக கருதப்பட்டு, நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இவ்வளவு பெரிய குற்றத்திற்கான தண்டனையைப் பார்த்தால், 6 மாதம்வரை ஜெயில் தண்டனை அல்லது ரூ.1,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கலாம் என்று இருக்கிறது. இதேபோல, பிரிவு 273–ல் இந்த கலப்படப்பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கும், 6 மாதம் ஜெயில் தண்டனை அல்லது ரூ.1,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கலாம் என்றுதான் இருக்கிறது. இதே அபராதம்தான் மருந்தில் கலப்படம் செய்பவர்களுக்கும், கலப்பட மருந்தை விற்பவர்களுக்கும் விதிக்கப்பட இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 274, 275 வகைசெய்கிறது. குற்றங்களின் தன்மையைப் பார்த்தால், இந்த தண்டனை போதாது, கலப்படம்செய்து கொள்ளை லாபம் அடிப்பவர்கள், அடுத்தவர்களின் உடல்நிலை பாதிக்குமே என்று கொஞ்சம்கூட கவலைப்படவில்லை. அவர்களுக்கு இந்த அபராதம் நிச்சயமாக போதாது. நாம் கலப்படம் செய்வோம், கண்டுபிடித்தால் ரூ.1,000 அபராதம் என்றவகையில் எளிதாக தப்பித்துக்கொள்ளலாம் என்ற உணர்வே கலப்படம் செய்யத்தூண்டுகிறது என்றொரு குறைபாடு பொதுமக்களிடையே வெகு நாட்களாக இருந்தது. உணவு கலப்படச்சட்டம் என்பது மத்திய, மாநில அரசுகள் இரண்டும் கையாளக்கூடிய பொதுப்பட்டியலை கருத்தில் கொண்டு, உத்தரபிரதேசம், மேற்குவங்காளம், ஒடிசா மாநிலங்களில் இந்திய தண்டனைச்சட்டத்தை திருத்தி கடுமையான தண்டனை விதிக்க வகைசெய்துள்ளது.

உச்சநீதிமன்றம் இந்த கலப்பட விவகாரத்தை இந்திய சட்ட ஆணையத்துக்கு அனுப்பி ஒரு நல்ல சட்டம் உருவாக்க பரிந்துரை செய்தது. இதையொட்டி, இந்திய சட்ட ஆணையம் இந்த கலப்பட சட்டத்தை ஆழமாக விவாதித்தது. மத்திய அரசாங்கத்தின் சட்டசெயலாளரும் இந்தக்கூட்டத்தில் கலந்துகொண்டு மத்திய அரசாங்கத்தின் கருத்துகளை தெரிவித்தார். இப்போது, இந்த குற்றங்களுக்கு 6 மாதம்வரை ஜெயில் தண்டனை அல்லது ரூ.1,000 அபராதம் என்பதை மாற்றி, ஆயுள் தண்டனை மற்றும் லட்சக்கணக்கான ரூபாய் அபராதம் என்றவகையில் திருத்தலாம் என்று பரிந்துரை செய்துள்ளது. இதுதொடர்பாக புதிதாக ஒரு சட்டத்திருத்தம் கொண்டுவரும் முன்பு, அரசு இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள், வியாபாரிகள், பொதுமக்களின் பிரதிநிதிகள் உள்பட அனைவருடனும் கலந்துபேசி, கலப்படம் இல்லாத புதிய சமுதாயத்தை படைப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும்.
ஜெயலலிதா விடுவிப்பு என்பது செல்லாது ரூ.100 கோடி அபராதம் வசூலிக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு மனு


சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடி அபராதத்தை வசூலிக்க வேண்டும். மரணம் அடைந்ததால் அவரை விடுவித்தது செல்லாது என்று சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

மார்ச் 22, 05:45 AM

புதுடெல்லி,

மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் வருமானத்துக்கு மீறி சுமார் ரூ.66 கோடி சொத்து குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

தனிக்கோர்ட்டு தண்டனை

இது தொடர்பான வழக்கை பெங்களூரு தனிக்கோர்ட்டு நீதிபதி மைக்கேல் டி குன்ஹா விசாரித்தார்.

முடிவில், குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் குற்றவாளிகள் என கண்டு, ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். அபராதத்தை செலுத்த தவறினால், மேலும் ஓராண்டு சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

ஐகோர்ட்டு விடுதலை

தனிக்கோர்ட்டு 2014-ம் ஆண்டு, செப்டம்பர் 27-ந் தேதி வழங்கிய இந்த தீர்ப்பை எதிர்த்து, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர்.

இந்த அப்பீல் வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி, தனிக்கோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்து, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்து 2015-ம் ஆண்டு, மே மாதம் 11-ந்தேதி தீர்ப்பு அளித்தார்.

கர்நாடக அரசு அப்பீல்

ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு சார்பிலும், தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் தனித்தனியாக அப்பீல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த அப்பீல் வழக்கை நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் விசாரித்து, இறுதி வாதங்கள் முடிந்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 7-ந் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள் தங்களது தீர்ப்பை கடந்த பிப்ரவரி மாதம் 14-ந் தேதி வழங்கினர்.

இந்த தீர்ப்பில், ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டதால் அவர் மீதான அப்பீல் வழக்கு அற்றுப்போகிறது (இல்லாமல் போகிறது) என கூறிய நீதிபதிகள் மற்ற 3 பேர் மீது தனிக்கோர்ட்டு விதித்த தண்டனையை உறுதி செய்தனர்.
இந்த 3 பேரும், வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயலலிதாவுடன் சேர்ந்து கூட்டு சதியில் ஈடுபட்டது தெரியவந்து இருப்பதாக கூறிய நீதிபதிகள், 3 பேரும் பெங்களூரு தனிக்கோர்ட்டில் உடனடியாக சரண் அடையவேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இதையடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் சரண் அடைந்து, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மறு ஆய்வு மனு

இப்போது இந்த தீர்ப்பில் மாற்றம் செய்யக்கோரி கர்நாடக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. வக்கீல் ஜோசப் அரிஸ்டாட்டில் தாக்கல் செய்த மறுஆய்வு மனுவில் கூறி இருப்பதாவது:-
ஜெயலலிதாவுக்கு எதிரான ஊழல் வழக்கில், சுப்ரீம் கோர்ட்டு 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந்தேதி வழங்கிய தீர்ப்பில், அவரது மரணத்தை அடுத்து அவர் மீதான அப்பீல் வழக்கு அற்றுப்போகிறது என கூறப்பட்டுள்ளது. இது தவறானது. எனவே மறு ஆய்வு செய்யப்பட வேண்டும்.

கேள்விக்கே இடம் இல்லை

ஒரு வழக்கில் வாதங்கள் முடிந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ஒருவர் இறந்து விட்டால், அப்பீல் வழக்கு அற்றுப்போகும் என்ற கேள்விக்கே இடம் இல்லை. அதைத் தொடர்ந்து வழங்கப்படுகிற தீர்ப்பு, இறந்த நபர் உயிரோடு இருந்திருந்தால் எப்படி வழங்கப்பட்டிருக்குமோ அதே வலிமையுடன் அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

இப்படி அப்பீல் அற்றுப்போவதற்கு அரசியல் சாசனத்தில் எந்த சட்டப்பிரிவும் வகை செய்யவில்லை. அதேபோன்று சுப்ரீம் கோர்ட்டின் 2013-ம் ஆண்டு விதிகளும் கூறவில்லை.

அபராதம் ரூ.100 கோடி

மற்றொரு வகையில் பார்த்தால், சுப்ரீம் கோர்ட்டு விதிகள் 2013, சிவில் அப்பீல் வழக்குகளிலும் சரி, தேர்தல் வழக்குகளிலும் சரி, விசாரணை முடிந்தபிறகு சம்மந்தப்பட்ட நபர் இறந்து விட்டால், வழக்கு அற்றுப்போகும் என்ற நிலை வராது என கூறுகிறது.

இந்த வழக்கை பொறுத்தமட்டில், (தண்டிக்கப்பட்ட நபர் இறந்து விட்டதால்) சிறைத்தண்டனை பலனற்றது. இருந்தபோதிலும், தனிக்கோர்ட்டு அளித்த தீர்ப்பின்படி ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடி அபராதம் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டிருக்க வேண்டும். அந்த அபராதத்தை அவரது சொத்துகள் மூலம் வசூலித்திருக்க வேண்டும்.

சரியானது அல்ல

இந்த வழக்கில் ஜெயலலிதா சிறைத்தண்டனை அனுபவிக்கும் நிலை இல்லை. ஆனால் அபராதம் செலுத்த வேண்டும் என்பது சட்டப்படி நிலைத்து நிற்கத்தக்கது. அதை அவர் சொத்துகள் மூலம் வசூலிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக வருமானத்துக்கு மீறி சொத்து குவித்த வழக்குகளில் இது தேவைப்படுகிறது.

இந்த வழக்கில், அப்பீல் அற்றுப்போகிறது என்பது சரியானது அல்ல.

பரிசீலனைக்கு உரியது

எனவே இறந்துபோன நபருக்கு சிறைத்தண்டனை வழங்குவது பலனற்றது என்றபோதிலும், அபராதம் விதிக்கப்படுவதும், சட்டவிரோதமாக சேர்த்த சொத்தை பறிமுதல் செய்யலாமா என்பதுவும் பரிசீலனைக்கு உரியது.
இந்த நிலையில், பிப்ரவரி 14-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை மாற்றி அமைக்க வேண்டும். ஜெயலலிதாவுக்கு எதிராக தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tuesday, March 21, 2017

MK University campus to become Wi-Fi-enabled


The sprawling 400-plus acre campus of Madurai Kamaraj University will completely be made Wi-Fi enabled with Rs. 2.98 crore funding through the Rashtriya Uchchatar Shiksha Abhiyan (RUSA) of Ministry of Human Resource Development.
The project will be part of a slew of initiatives to be undertaken by the university with around Rs. 10 crore funding sanctioned so far for Madurai Kamaraj University under the RUSA scheme, started in 2013 with a key objective of infrastructural improvement in higher education institutions.
G. Arumugam, Registrar (in-charge), said that necessary approvals had been obtained and the orders related to commencing the work would be issued soon.
K. Ravichandran, Special Officer, said that MKU would likely be the first State university in Tamil Nadu to enable Wi-Fi connectivity throughout its campus.
“The work, expected to be over in six months, will be executed in a phased manner,” he said.
Other key projects include library automation at a cost of Rs. 60 lakh, upgrading computers to high-end hardware (Rs. 1.46 Crore), a 400-metre athletic track (Rs. 31 lakh), rainwater harvesting facilities in all buildings (Rs. 95 lakh) and modernisation of hostel kitchens (Rs. 74.9 lakh).
Mr. Arumugam said that a fitness centre would also be constructed at a cost of Rs. 1.15 crore with funds received from University Grants Commission.
AI may offer free Wi-Fi on flights

New Delhi:


You might be able to send emails as you fly within the country by July . Air India is planning to have WiFi on board its Airbus A-320 planes that are the mainstay of its domestic operations.Once this happens, other Indian airlines may follow suit.

“We are working on having Wi-Fi on our planes. We have issued expression of interest and will take the air craft manufacturer's nod to install Wi-Fi equipment. Though giving an exact date is difficult, we are aiming to start this by June or July,“ AI chief Ashwani Lohani said.

AI did not specify how much data and what speed it is looking at. Since the connection is likely to be free, it may start with a basic pack for free and later move on to paid data packs.

The free basic pack will allow receiving and sending mails and checking What sApp. Depending on passenger feedback, AI may go in for bigger paid data packs.

Leading international airlines that offer on board Wi-Fi have been following this model.For instance, a big Gulf carrier with massive presence in India offers 10MB of free data which is enough to search, send emails and update Facebook. Beyond this, flyers can pay for additional data to stay connected throughout the flight. Global carriers offer price plans that are ei ther volume-based or time-based. Vol ume-based price plans are usually only valid on the flight sector they're purchased on. A mega southeast Asian carrier, for instance, offers time-based unlimited data pack with 24hour validity for `1,175 to `1,400, depending on the service provider. Data is clearly emerging as a big source of ancillary revenue for airlines.

At present, no Indian airline offers on board Internet and AI may be the first to do so. A Jet Airways official said, “Enabling complete WiFiinternet connectivity on board is the next obvious milestone, pending in-principle approvals from the government of India.“ Other schedule airlines did not comment on this issue, while most of them are examining the option of rolling out Wi-Fi.

Foreign airlines which have internet on board are allowed to keep it on in Indian airspace only if they have a local server. If they do not have a local server, they have to keep their internet-on-board switched off for the time their plane is in Indian airspace. For instance, Singapore Airlines has Wi-Fi on its Boeing 777s and the Airbus A-380s. While the airline's B-777 has Internet in Indian airspace also, the same has to be switched off in its A-380s for this reason. Indian regulations stipulate all satellite operators establish a communication satellite gateway in India.

“Once in-flight entertainment was considered a luxury on international flights and now it is absolutely mandatory . Similarly, internet-inair is going to be a necessity in coming times.Airlines opting for this now will get first-mover advantage in terms of being chosen by passengers for this reason,“ said a senior Indian commander who has been operating international flights for 25 years.



VODOFONE AND IDEA MERGER


தபால் சேமிப்பு கணக்கு துவக்குவோர் அதிகரிப்பு

கோவை: வங்கிகள் சேவை கட்டணங்களை, வரும் ஏப்., முதல், உயர்த்தியுள்ள நிலையில், தபால் அலுவலகங்களில் சேமிப்பு கணக்கு துவங்குவோரின் எண்ணிக்கை, அதிகரித்து வருகிறது.தனியார் மற்றும் தேசிய வங்கிகள், சேமிப்பு கணக்கின் குறைந்தபட்ச இருப்புத் தொகையை, உயர்த்தி உள்ளன. மேலும், பண பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்படுகின்றன என்ற அச்சம் மக்களுக்கு எழுந்துள்ளது. மேலும், பல்வேறு சேவைகளுக்கான நிபந்தனை கட்டணங்களையும் அறிவித்துள்ளது. 

இதனால், பலரின் கவனம், தபால் துறை பக்கம் திரும்பியுள்ளது.குறைந்தபட்சம், 50 ரூபாய் செலுத்தி கணக்கு துவங்கினாலே, ஏ.டி.எம்., கார்டு, எஸ்.எம்.எஸ்., வசதி, மற்றும் அனைத்து வங்கி, ஏ.டி.எம்.,களிலும் வரைமுறையில்லா இலவச பணபரிவர்த்தனை, கூடுதல் வட்டி உட்பட பல வசதிகளால், தபால் துறையில் சேமிப்பு கணக்கு துவங்க, பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

வங்கி ஊழியர்கள் பலரும், இதில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
பாஸ்போர்ட் பெறுவது எளிது! ஓரிரு மாதங்களில், தபால் நிலையங்களிலே, பாஸ்போர்ட் மையங்கள் துவங்கப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க, தபால் துறையின், 'பாஸ்புக்' ஆதாரமே போதுமானது என்பதால், கல்லுாரி மாணவர்களும், தபால் சேமிப்பு கணக்கு துவங்க முனைப்பு காட்டி வருகின்றனர்.

கோவை கோட்ட தபால் முதுநிலைக் கண்காணிப்பாளர் சித்ராதேவி கூறியதாவது: மக்களிடையே, தபால்துறை குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. கோவை மண்டலத்தில், 2016ம் ஆண்டு, 800 கணக்குகள் புதிதாக துவங்கப்பட்ட நிலையில், தற்போது, இரு மாதங்களில் மட்டும், 60 ஆயிரத்தை எட்டியுள்ளது. இதன் மூலம், மேற்கு மண்டல அளவில், கடந்த, டிச.,ல், 11வது இடத்தில் இருந்த கோவை தபால் கோட்டம், தற்போது, இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
என்னை கடிச்ச நாய்களை பிடிங்க! : போலீசில் இப்படியும் ஒரு புகார்

திருப்பூர்: 'என்னை கடித்த நாய்களை உடனடியாக பிடிக்க வேண்டும்' எனக் கூறி, திருப்பூரில் ஒருவர், போலீசில் புகார் கொடுக்க சென்றதால், போலீசாருக்கு, ஆத்திரத்தோடு, சிரிப்பும் வந்தது.திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷன், நேற்று காலை, வழக்கம் போல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. 

அப்போது, ராமகிருஷ்ணன், 40, என்பவர் தள்ளாடியபடி வந்து, வரவேற்பாளரிடம் ஒரு புகாரை சொன்னார்.'ஊத்துக்குளி ரோட்டில் நடந்து சென்ற போது, என்னை, மூன்று நாய்கள் கடித்து விட்டன; அதை உடனடியாக பிடிக்க வேண்டும்' என்பது தான், அந்த புகார். பணியில் மூழ்கியிருந்த போலீசார், ஒவ்வொருவரின் முகத்தை பார்க்க, ஆத்திரம் கொப்பளித்தாலும், மறு பக்கம் சிரிப்பையும் அடக்க முடியவில்லை.

 இதை கண்டுகொள்ளாத ராமகிருஷ்ணன், நாய்களின் பெயர் ஜூலி, செம்பட்டை, கருப்பன் என கூறியதால், 'ஆரம்பமே இப்படி இருக்கே...' என, போலீசார் நொந்து கொண்டு, 'ஏம்பா... இது, போலீஸ் ஸ்டேஷன்... முதல்ல மருத்துவமனைக்கு போய் ஊசியை போட்டு கொள்' என, அறிவுறுத்தினர். ஆனால், போலீசாரின் பேச்சை காதில் வாங்காத அவர், 'எங்க ஏரியாவுல நிறைய நாய்கள் சுத்தி சுத்தி வருது. எங்க ஏரியாகாரங்க தான், இங்க போய் புகார் கொடுக்க சொன்னாங்க' என, திரும்பத் திரும்ப பேசியபடி, அடம் பிடித்தார். ஒரு வழியாக, அந்த நபருக்கு புரிய வைத்து, அனுப்புவதற்குள், போலீசார் படாதபாடு பட்டனர்.

NEWS TODAY 23.12.2025