Monday, March 27, 2017

Common form for PG medical intake

Ahmedabad
TIMES NEWS NETWORK


To Cost Rs 2k, It Will Be Valid For Both Management Quota And General Seats

The centralized postgraduate (PG) medical admission form will cost Rs 2,000 and will be uniform for all category seats from this year, said officials of the committee headed by Commissioner of Health, Gujarat.

The decision to introduce a common form was taken after common counselling for candidates was announ ced. It needs mention that admissions to the 1,687 postgraduate medical seats in the state will be centralized and based on the marks scored by candidates in the National Eligibility-cum-Entrance Test for Postgraduates-2017.

According to the health commissioner J P Gupta, students will be required to fill only one form of Rs 2,000.This form will be valid for 75% general seats and also for 25% management quota seats. Admissions to the general quota seats will be conducted by the admission committee headed by the health commissioner. Students will not be required to fill separate forms for management quota. Officials said that earlier students had to go to various colleges to fill up separate forms for management quota for which they were required to pay a form fee of Rs 8,000 to Rs 15,000.

Under the new rules, common counselling for PG courses has been made mandatory. The Postgraduate Medical Education (Amendment) Regulation-2016 says that admissions to all postgraduate courses in all medical institutes will be conducted through common counselling. Sources said that, until now, deemed universities, private colleges and even universities had been conducting their own admissions for PG medical courses.

New regulators for homeopathy, ayurveda soon

New Delhi:


After suggesting scrapping of Medical Council of India, the regulator for modern medicine, and replacing it with National Medical Commission, the government is planning to revamp the regulators for Indian systems of medicine and homeopathy to ensure better quality of doctors.

After much brainstorming, a high-level panel headed by Niti Aayog vice-chairman Arvind Panagariya has finalised two draft bills which propose to replace the two regulators governing education in Indian systems of medicine (including Ayurveda) and homoeopathy and other reform measures such as national entrance and exit tests to ensure quality of doctors and expand the reach of these streams.

The draft legislations suggested replacing the Central Council of Indian Medicine (CCIM) and the Central Council of Homoeopathy (CCH), statutory bodies under the health ministry , with the National Commission for Indian Systems of Medicine (NCISM) and the National Commission for Homeopathy (NCH). The panel also recommen ded that “for profit“ entities -or companies -be allowed to set up colleges to meet the need for more AYUSH providers in healthcare.

Worried that a fee cap might be a deterrent for entry of private players in a sector where capacity expansion can brook no delay , the panel was against giving regulators the power of fee regulation as it said a merit-based admission system with reservation for deprived sections would address concerns about high cost of medical education for meritorious but poor and disadvantaged students.

“Number of colleges for Indian systems of medicine and Homeopathy has increased phenomenally to 404.The existing regulators failed to check mushrooming of substandard institutions causing erosion in quality of education,“ said an official.

The plan is to bring in competent and qualified persons based on merit to regulate AYUSH medical education in the NCISM and the NCH.The panel was against elected regulators and felt they should be selected by an independent and transparent selection process by a broad-based search committee.

உங்கள் வாட்ஸ்அப் நேரத்தை அதிகம் எடுப்பது அலுவலகமா... நண்பர்களா... உறவுகளா? 

#VikatanSurvey


காலையில் தினமும் கண்விழித்தால் கைதொழும் தேவதை... மொபைல்தான். அந்த மொபைலிலும் அதிகம் பார்க்கப்படுவது வாட்ஸ்அப் தான். சிங்கிள் டிக் டபுள் டிக் ஆகும் நேரம்தான் உலகின் நெடிய காத்திருப்பு என்கிறார்கள் கவிஞர்கள். அது ப்ளூ டிக் ஆவதுதான் ஸ்பெஷல் மொமெண்ட் என்கிறார்கள் லவ்வர் பாய்ஸ். “வாஸப் மச்சான்” என்ற காலம் போய், வாட்ஸ் அப்பே நமக்கொரு மச்சான் ஆக மாறிவிட்டது. இந்த வாட்ஸ் அப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? எப்படி, எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறீர்கள்? இதனால் நல்லது நிறைய நடக்கிறதா இல்லை கெட்டதா? யோசிச்சு பதில் சொல்லுங்க. இந்த பதில்கள் உங்களுக்கே நீங்கள் சொல்லிக்கொள்வது தான்...

இல்லத்தரசிகளின் உழைப்புக்கும் மதிப்புண்டு! உணரலாம் வாருங்கள்..






இந்தியாவில் வீட்டிற்கு வெளியே வேலைக்கு சென்று பணம் சம்பாதிக்காமல் வீட்டில் இருக்கும் திருமணமான பெண்ணை , "House Wife" (வீட்டு மனைவி) என அழைக்கின்றார்கள். பெண்ணின் உழைப்பு மதிக்கப்பிழக்க இதுவும் ஒரு காரணம். 

திருமணமாகி கணவன் வீட்டில் இருக்கும் வெளியே வேலைக்கு செல்லாத ஒரு பெண்ணிடம் (திருமணமாகாத‌ பெற்றோர் வீட்டில் இருக்கும் பெண்ணிடமும்) நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என யாராவது கேட்டால், அவர்களில் பெரும்பான்மையானோர் நான் வீட்ல சும்மா தாங்க இருக்கேன் என சொல்வார்கள் . உண்மையாகவே அவர்கள் வீட்டில் எந்த ஒரு வேலையும் செய்யாமல் சும்மா இருக்கின்றார்களா என வினவினால், வீட்டில் அவர்கள் தான் சமையல், துணிகளை துவைப்பது, வீட்டை தூய்மைப்படுத்துவது , குழந்தை வளர்ப்பு, வீட்டில் குழந்தைகளுக்கு கல்வியளிப்பது, பல வீடுகளில் கணவன் கொடுக்கும் சம்பள பணத்திற்குள் எல்லா செலவுகளையும் செய்து பொருளாதாரத்தை நிர்வகிப்பது என எல்லா வேலைகளையும் செய்கின்றனர்.






இப்படிக் காலை எழுந்தது முதல் இரவு உறங்கச் செல்லும் வரை ஓய்வின்றி உழைக்கும் அவர்கள் ஏன் தங்களை எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருக்கின்றேன் என சொல்கின்றனர் என யோசித்தால், அவர்களின் இந்த உழைப்புக்கு சம்பளம் (பணம்) வழங்கப்படுவதில்லை. சம்பளம் கொடுக்கப்படாத‌ வேலையை செய்வதால் அவர்கள் தாங்கள் சும்மா இருப்பதாக சொல்கின்றனர்.

பெண்கள் வீட்டில் செய்யும் இந்த வேலைகள் எல்லாம் சம்பளம் கிடைக்காத வேலைகளா எனக்கேட்டால் இல்லை. இந்த வேலைகளை எல்லாம் வேறொரு வீட்டிலோ, நிறுவனத்திலோ செய்தால் சம்பளம் கிடைக்கக்கூடிய வேலைகளாகும். இங்கே தான் இந்திய ஆண்கள் எல்லோரும் முதலாளிகளாக மாறுகின்றோம். வீட்டில் பெண்களிடம் இவ்வளவு வேலைகளையும் வாங்கிவிட்டு அதற்கு சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றுவதுடன் மட்டும் நிற்காமல், அவர்கள் சும்மா இருப்பதாகத் திரும்ப, திரும்பப் பொய்யை சொல்கின்றோம். இப்படியாக மீண்டும் , மீண்டும் சொல்லப்படும் ஒரு பொய்யானது பெண்கள் மனதில் உண்மையாக ஆழப்பதிந்து அவர்களும் அதையே சொல்கின்றனர்.

நடிகை ஜோதிகா நடித்த "36 வயதினிலே" திரைப்படத்தில் வெளிநாடு செல்லும் கணவன், வளர்ந்த பெண் பிள்ளையைத் தன்னுடன் அழைத்து செல்வான். தன்னையும் அழைத்து செல்லுங்கள் என மனைவி ஜோதிகா கேட்கும் பொழுது உனக்கு அங்கு வேலை கிடைக்காமல் எப்படி அழைத்து செல்வது என கேட்டு அவரின் வாயடைத்து விட்டு வெளிநாடு சென்று விடுவான். பின்னர் அதே கணவன் இங்கு உணவு சரியில்லை, வீட்டு வேலைக்கு யாரையாவது அழைக்கலாம் என்றால் அதிக சம்பளம் கேட்கின்றார்கள், அதனால் நீ என்னுடன் வெளிநாடு வந்து தங்கி விடுகின்றாயா என கேட்பான். அவனுக்கு அங்கே தேவை மனைவி அல்ல, சம்பளம் வாங்காத ஒரு வேலைக்காரி மட்டுமே. இதை ஜோதிகா மறுக்கும் பொழுது தன் பிள்ளையை விட்டு பேசச் சொல்லி ஒர் உளவியல் தாக்குதல் தொடுப்பான்.

இந்தப் படத்தில் கணவன் கதாபாத்திரம் செய்யும் இந்த செயலைத் தான் பெரும்பான்மையான இந்திய ஆண்களாகிய நாம் ஆண்டாண்டு காலமாக செய்து வருகின்றோம். நம‌க்கு பொருளாதார சிரமங்கள் ஏற்படும் பொழுது கட்டிய மனைவியையே சுமையாக கருதி அவரை அவமானப்படுத்துகின்றோம். பின்னர் அவரால் நம‌க்கு நலன் உண்டாகின்றது எனில் நாம் முன்னர் செய்த தவறுக்கு மன்னிப்பு கூடக்கேட்காமல் எந்த வித கூச்சமுமின்றி "நீ தான் எல்லாம்" என நாகூசாமல் பொய் சொல்கின்றோம். ஒரு தவறை திரும்ப, திரும்ப செய்வதால் அது நம்முடைய‌ பழக்க வழக்கமாக மாறிவிடுகிறது. அதனால் அந்த தவறுகள் நம்முள் எந்த குற்றவுணர்ச்சியையும் ஏற்படுத்துவதில்லை.


அந்தப் படத்தில் வரும் பிள்ளையைப் போலத்தான் இன்று பெரும்பான்மையான பிள்ளைகள்(ஆண்/பெண் குழந்தைகள்) இங்கே வளர்க்கப்படுகின்றனர். அவர்களுக்குத் தங்கள் அன்னையின் உழைப்பு புரிவதில்லை, அதற்கு காரணமும் பணம் தான். அப்பா பணம் சம்பாதிக்கின்றார், அவரே நாம் கேட்கும் பொருட்களை வாங்கித் தருவார் என எண்ணுகின்றனர். பணம் தான் எல்லாம் என வாழும் இன்றைய சமூகத்தில் வளரும் குழந்தைகள் அவர்கள்.

என் மூன்று வயது மகள் இன்பா "டோரா புஜ்ஜி" கார்ட்டூன் பார்த்துவிட்டு தனக்கு உதவி செய்யும் நபர்களுக்கு நன்றி சொல்லத் தொடங்கினார். அந்த நன்றி எப்பொழுதும் அப்பாவான எனக்கு மட்டுமே கிடைக்கின்றது. என் மகளைப் பொருத்தவரை நான் தான் அவர் கேட்கும் பொருட்களை எல்லாம் வாங்கித் தருகின்றேன். அவரது அம்மாவிற்கு நன்றி கூறி நான் பார்த்ததில்லை. மூன்று வயது குழந்தை அம்மா பணம் சம்பாதிப்பதில்லை, அதனால் அவர் நமக்கு செய்யும் வேலைகளுக்கு நன்றி சொல்லத் தேவையில்லை என யோசிக்கின்றது.

இதை நான் கவனிக்கத் தொடங்கிய‌திலிருந்து அவரிடம் நான் அவரது அம்மா செய்யும் பணிகளைத் திரும்ப, திரும்பச் சொல்லி அதை நாம் மதிக்க வேண்டும் எனப் பேசி வருகின்றேன். குழந்தைகளை வளர்க்கும் நாம் அனைவரும் இதை புரிந்து கொண்டு நம் குழந்தைகளிடம் இன்றிலிருந்தே இதைப் போல பேசத் தொடங்க வேண்டும். அதுமட்டுமின்றி நம் மனைவியரிடம் பணத்தைக் கொடுத்துக் குழந்தைகளுக்குத் தேவையானவற்றை வாங்கித் தரச்சொல்ல வேண்டும். அது மட்டுமின்றிப் பணத்தை வைத்து ஒருவர் செய்யும் வேலையை மதிப்பிடக்கூடாது எனவும் சொல்லி நம் குழந்தைகளை நாம் வளர்க்க வேண்டும். இல்லையென்றால் 36 வயதினிலே திரைப்படத்தில் முதல் பாதியில் தன் அம்மா செய்யும் வேலைகளைப் புறக்கணித்து அவரை அவமானப்படுத்தும் பிள்ளையாகத் தான் நம் பிள்ளைகள் வளரும். நிற்க‌

அப்படியானால் வீட்டில் பெண்கள் செய்யும் இந்த வேலைகளுக்கெல்லாம் ஆண்கள் எல்லோரும் சம்பளம் கொடுக்கவேண்டும் என சொல்கின்றீர்களா என்ற கேள்வி இயல்பாகவே எல்லோருக்கும் எழும். வாழ்வதற்கே இன்று நமக்கு கிடைக்கும் சம்பளம் கட்டுபடியாகாத சூழலில் நம்மால் அவர்களுக்கு சம்பளம் கொடுக்கமுடியாது என்பது தான் யதார்த்தம், அதே நேரத்தில் அவர்கள் கூலிக்கு மாரடிக்கவில்லை, நம்முடன் ஏற்பட்டுள்ள திருமண‌ உறவிற்காக அவர்கள் இந்த வேலைகளை எல்லாம் செய்கின்றார்கள். அவர்கள் வீட்டில் சும்மா இருக்கின்றார்கள் என நாம் சொல்லும் பொய்யை முதலில் நிறுத்துவோம்.
அலுவலகத்தில் இரவு , பகலாக உழைக்கும் எனது உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை என பொருமும் ஆண்களாகிய நாம் வீட்டில் அதைப் போலவே உழைக்கும் நம் வீட்டு பெண்களின் உழைப்பை முதலில் மதிக்கக் கற்றுகொள்ளவேண்டும். நமக்கு என்றாவது உணவு வேண்டாம் என்றால் அதை முதலில் வீட்டில் சொல்வோம். ஏனெனில் அவர்கள் நமக்காக சமைத்து குப்பையில் கொட்டுவது உணவை மட்டுமல்ல, அவர்களது உழைப்பையும் தான்.

அலுவலகத்தில் சம்பளம் வாங்கும் வேலைக்காரனாகவும், வீட்டில் முதலாளியாகவும் நடந்து கொள்ளும் நமது பழக்கத்தை மாற்றுவோம். வீட்டில் நாம் சக பயணியே அன்றி முதலாளிகள் அல்ல, அவர்களும் நம் வேலைக்காரர்கள் அல்ல‌. அவர்களுக்கு தேவையான உடை போன்ற அத்தியாவசிய செலவுகளுக்கும், அவரது குடும்பத்தினருக்கு தேவையான சின்ன சின்னச் செலவுகளையும் செய்வதற்கும் நமது சம்பளத்தில் ஒரு பகுதியை அவர்களுக்கு கொடுக்க வேண்டும். இது அவர்கள் பணம் என்பதையும் நாம் உணர வேண்டும். இதுமட்டும் போதுமா என்றால், போதாது.

நாம்(ஆண்) மட்டும் வெளியே வேலைக்கு செல்லும் குடும்பங்களில் வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு திரும்பும் போது பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் மூழ்கித் திளைக்காமல் மனைவியின் வேலையைப் பகிர்ந்து கொள்வோம். ஏனென்றால் ஆண்களாகிய நமக்கு விடுமுறை தினமாக ஞாயிற்றுக் கிழமையாவது உள்ளது, அவர்களுக்கு அந்த நாள் கூட விடுமுறை (ஓய்வு) கிடையாது. ஆண்/பெண் இருவருமே வெளியே வேலைக்கு செல்லும் குடும்பங்களில் கண்டிப்பாக எல்லா வேலைகளையும் இருவரும் ப‌கிர்ந்து கொள்ள வேண்டும்.
எனக்குப் பெண்கள் செய்யும் வேலை எதுவும் செய்யத் தெரியாதே என சாக்கு போக்கு சொல்ல வேண்டாம். ஏனென்றால் வீட்டில் பெண்கள் செய்யும் இந்த வேலைகளை எல்லாம் (வீட்டிற்கு) வெளியே சம்பளத்திற்காக செய்வது பெரும்பான்மையாக ஆண்களாகிய நாமே. அவர்களை வீட்டு மனைவி (House Wife) என அழைக்கும் நமது கயமையை நிறுத்திவிட்டு, வீட்டை உருவாக்குபவர்கள், நிர்வகிப்பவர்கள் ("Home Maker") என அழைக்கத் தொடங்குவோம். இங்கு நடைபெறுவது பெயர் மாற்றம் மட்டுமல்ல ஆண்களாகிய நமது மனமாற்றமும் தான். நம்முடன் வாழும் சக மனிதர்களாகிய பெண்களை, அவர்களது உழைப்பை மதிப்போம் , அவர்கள் மீது உண்மையான அன்பைப் பொழிவோம்.

அன்னை, மனைவி, அக்கா, தோழி என என்னுடன் பயணிக்கும் எல்லா பெண்களுக்கும், உலகில் உழைக்கும் பெண்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்".


-நற்றமிழன்.ப

கருவூலம்: கடலூர் மாவட்டம்!

Published on : 14th March 2017 03:43 PM  
KOLLIDAM

கடலூர் மாவட்டம் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒன்று. இதனை கிழக்கே வங்காள விரிகுடாவும், பிற பகுதிகளில் விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களும் சூழ்ந்து உள்ளது. இந்த மாவட்டம் 3678 ச.கி.மீ. பரப்பளவும், 57.5 கி.மீ நீளமுள்ள கடற்கரையும் கொண்டது.
முன்பு தமிழ் நாட்டில் எட்டு மாவட்டங்களே இருந்த காலத்தில் இப்பகுதி தென்னாற்காடு மாவட்டமாக இருந்தது. 1993இல் விழுப்புரம் மாவட்டம் பிரிக்கப்பட்டபின் "தென்னாற்காடு வள்ளலார் மாவட்டம்' ஆகியது. பின்னர் கடலூர் மாவட்டம் என்று அழைக்கப்பட்டு வருகிறது.
இம்மாவட்டம் நிர்வாக வசதிக்காக கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், விருத்தாசலம், வேப்பூர், திட்டக்குடி, புவனகிரி என ஒன்பது வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் எல்லைக்குள் 9 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. கடலூர் நகராட்சியே இம்மாவட்டத்தின் தலைநகரமும், பெரிய நகரமுமாகும்.

வரலாற்று தகவல்கள்!
சரித்திரக் குறிப்புகளின்படி சங்க காலத்திற்குப் பின் பல்லவர்களும், சோழர்களும், முகலாயர்களும், மற்றும் பல அரச பரம்பரையினரும் இப்பிரதேசத்தை ஆட்சி செய்துள்ளனர்.

சோழ மன்னர் முதலாம் பராந்தகச் சோழன் (907-935) "வீர நாராயண சதுர்வேதி மங்கலம்' என்ற பெயரில் ஒரு ஊரினை உருவாக்கினார். (வீர நாராயணன் என்பது அவரது சிறப்புப் பெயர்) அதுவே இன்று காட்டு மன்னார்கோயில் என்று அழைக்கப்படுகிறது.

இந்த ஊருக்கு அருகிலேயே அவருடைய மகன் ராஜாதித்திய சோழனால் விவசாயிகளின் நலன் கருதி, "வீர நாராயணன் ஏரி' என்ற பெரிய ஏரி ஒன்று வெட்டப்பட்டது! அந்த ஏரிதான் இன்று "வீராணம் ஏரி' என்று அழைக்கப்படுகிறது.
1600ஆம் ஆண்டுக்குப் பின் ஐரோப்பாக் கண்டத்தின் டென்மார்க், நெதர்லாந்து, போர்ச்சுகல், பிரான்ஸ், மற்றும் பிரிட்டன் நாடுகளைச் சேர்ந்தவர்கள் இப்பகுதிக்கு வணிகம் செய்வதற்காக வந்துள்ளனர். இதில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் பாண்டிச்சேரி பகுதியிலும், பிரிட்டிஷார் கடலூர் பகுதியிலும் வணிகம் செய்வதாகக் கூறிக்கொண்டு தங்கள் குடியிருப்புப் பகுதிகளை அமைத்து ஆதிக்கம் செலுத்தினர். ஆதிக்க ஆசையில் இப்பகுதி பலமுறை போர்க்களமானது.

பிரிட்டிஷாரின் ஆட்சி காலத்தில் கடலூர், சிறிது காலம் தலைமை அதிகார மையமாகவும், முக்கியமான துறைமுக நகரமாகவும் இருந்தது. அவர்கள் காலத்திலிருந்தே இப்பகுதி கடலூர் என்று அழைக்கப்படுகிறது.

ஆனால் முற்காலத்தில் பெண்ணையாறு, கெடிலம், பரவனாறு என மூன்று ஆறுகள் கடலில் கலக்கும் இடம் என்பதால் "கூடலூர்' என்று அழைக்கப்பட்டது! வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த கூடலூர் 1780இல் மைசூர் மன்னர் ஹைதர் அலியின் கட்டுப்பாட்டில் "இஸ்லாமாபாத்' என்ற பெயரில் இருந்தது. 1782இல் அவரது மறைவுக்குப் பிறகு 1783இல் "கடலூர் போர்' மூலம் ஆங்கிலேயர் கைப்பற்றி பெரிய துறைமுகமாக மாற்றினர். தங்கள் நாட்டுடன் வணிகத் தொடர்புக்கு இந்தத் துறைமுகத்தையே அதிகம் பயன்படுத்தினர். இங்கிருந்து கப்பல்கள் மூலம் பெருமளவில் பொருட்கள் அனுப்பப்பட்டது!

குறிப்பாக அவர்கள் தொடங்கிய சர்க்கரை ஆலையின் (E.T.D.PARRY LTD 1782) சரக்குகளும் பரங்கிப்பேட்டை இரும்பு உருக்கு ஆலையில் தயாரிக்கப்பட்ட இரும்புத் தளவாடங்களும் இங்கிருந்தே இங்கிலாந்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இயற்கைத் துறைமுக நகரமான கடலூரின் அன்றைய பெருமையை வெளிப்படுத்தும் அடையாளங்கள் இன்றும் இங்குள்ளன. ஐரோப்பியக் கட்டிடக் கலையில் அமைந்த சில கட்டிடங்களும் ஆங்கிலேயர்கள் பெயர்கள் கொண்ட சில தெருக்களும் இந்நகரின் வரலாற்று முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றன.

இம்மாவட்டத்தின் ஆட்சியாளராக "ராபர்ட் கிளைவ்' இருந்தபோது "கார்டன் ஹவுஸ்' என்ற கட்டிடத்தில் தங்கியிருந்தார். இக்கட்டிடத்தின் கூரை, செங்கல் மற்றும் சுண்ணாம்புக் கலவை கொண்டு கட்டப்பட்டுள்ளது.

கடலூரிலிருந்து 35கி.மீ. தூரத்தில் கடற்கரையில் அமைந்துள்ள பரங்கிப்பேட்டை முன்பு "போர்டோ நோவோ' என்று அழைக்கப்பட்டது! இங்கு போர்ச்சுகீசியர், டச்சுக்காரர்கள், பிரிட்டிஷார் என அடுத்தடுத்து ஆதிக்கம் செலுத்தினர். மேலும் இங்குதான் மைசூர் மஹாராஜாவிற்கும் பிரிட்டிஷாருக்கும் இடையே போர் நடந்தது.

நீர்வளம்!
நதிகள் கடலில் சங்கமிக்கும் கழிமுகப் பகுதியான இம்மாவட்டத்தினை தென்பெண்ணையாறு, கெடிலம், வெள்ளாறு, மணிமுத்தாறு, கொள்ளிடம் ஆகிய நதிகள் கடந்து செல்கின்றன.

தென்பெண்ணையாறு
பெங்களூரிலிருந்து 60கி.மீ. தூரத்தில் உள்ள நந்திமலையில் தோன்றி, கர்நாடகம், தமிழ்நாடு மாநிலங்கள் வழியாக 391கி.மீ தூரம் ஓடி, கடலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

கெடிலம் ஆறு
விழுப்புரம் மாவட்டத்தில் தோன்றி கடலூரில் வங்காளவிரிகுடாவில் கலக்கிறது. இச்சிறு நதியைப் பற்றி தேவாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளாறு
சேலம் மாவட்டம் சேர்வராயன் மலையில் தோன்றி 193கி.மீ தூரம் பயணித்து பரங்கிப்பேட்டையில் கடலில் கலக்கிறது. இந்நதியில் முக்கிய துணையாறான மணிமுக்தா நதி இம்மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே வெள்ளாற்றுடன் இணைகிறது.

இந்நதிக்கரையில் உள்ள புவனகிரிதான் மகான் ஸ்ரீராகவேந்திரர் பிறந்த ஊராகும்! இங்கு அவருக்கு ஒரு ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.

கொள்ளிடம்
காவிரி ஆறு திருச்சி அருகே முக்கொம்பில் இரண்டாகப் பிரிகிறது. இங்குதான் மேலணை உள்ளது. இதில் வடகிளையே "கொள்ளிடம் ஆறு' எனப்படுகிறது. 150கி.மீ. தூரம் ஓடி பரங்கிப்பேட்டைக்குத் தெற்கே 5கி.மீ. தொலைவில் கடலில் கலக்கிறது. இந்நதி கடலூர் மற்றும் நாகப்பட்டினம் இடையேயான எல்லையில் பாய்கிறது.
மேலும் இங்கு வீராணம் ஏரி, வெலிங்டன் ஏரி, பெருமாள் ஏரி என மூன்று பெரிய ஏரிகளும் உள்ளன.

விவசாயம்
நெல், கரும்பு, சோளம், ராகி, வரகு, கம்பு, சிறுபயறு, உளுத்தம்பருப்பு, உள்ளிட்ட பல உணவுப்பொருட்கள் இங்கு விளைகிறது.
இம்மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி, பலாப்பழத்திற்கும், முந்திரிக்கும் புகழ் பெற்றது. இங்கிருந்து பல நாடுகளுக்கும் இவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இங்குள்ள பாலூரில் காய்கறி ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இது 1905இல் அன்றைய மதராஸ் மாகாணத்தின் 2ஆவது "விவசாய ஆராய்ச்சி நிலையமாக' தொடங்கப்பட்டது.

தொழில்வளம்
இங்கு நெய்வேலி அனல்மின் நிலையம், பழுப்பு நிலக்கரிச் சுரங்கம், சர்க்கரை ஆலைகள், மீன் பதப்படுத்துதல், மீன் எண்ணை உற்பத்தி, சிப்காட் தொழிற்பேட்டையின் தொழிலகங்கள் என பல தொழிற்சாலைகள் உள்ளன.
(தொடரும்)

தொகுப்பு : கே. பார்வதி , திருநெல்வேலி டவுன்



மே 14 முதல் சிங்கப்பூர், மலேசியாவுக்கு சுற்றுலா

By பெங்களூரு,  |   Published on : 23rd March 2017 09:22 AM  | 
இந்திய ரயில்வே உணவுப் பரிமாறல் மற்றும் சுற்றுலாக் கழகம் சார்பில் மே 14-ஆம் தேதி முதல் சிங்கப்பூர், மலேசியாவுக்கு கோடை சுற்றுலாப் பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசின் இந்திய ரயில்வே உணவுப் பரிமாறல் மற்றும் சுற்றுலாக் கழகம்(ஐஆர்சிடிசி) வெளிட்ட செய்திக் குறிப்பு:
ரயில்சார் சுற்றுலாப் பயணங்களை தொழில் முறையில் பிரபலப்படுத்த திட்டமிட்டு, அதன் சேவைகளை மேம்படுத்த இந்திய ரயில்வே உணவுப் பரிமாறல் மற்றும் சுற்றுலாக் கழகம் தொடர்ந்து முற்பட்டு வருகிறது.
இதற்காக பாரத தரிசனம் சுற்றுலா, ரயில் சுற்றுலா, கல்வி சுற்றுலா, நகர சுற்றுலா, கார் வாடகை போன்ற சேவைகளை வழங்கி வருகிறோம். ரயில் சுற்றுலா மட்டுமல்லாது, விமான சுற்றுலாப் பயணத்திற்கும் ஏற்பாடு செய்திருக்கிறோம்.
இந்தத் திட்டத்தின்கீழ் சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கு 7 பகல்கள், 6 இரவுகள் கொண்ட சுற்றுலாப் பயணத்திற்கு திட்டமிட்டுள்ளது. மே 14 முதல் தொடங்கும் இந்த சுற்றுலாப் பயணித்தில் 25 பயணிகளுக்கு மட்டுமே வாய்ப்புள்ளது.
இருவழி விமானப் பயணம், மலேசியாவில் 2 இரவுகள், சிங்கப்பூரில் 3 இரவுகள் தங்கும் விடுதி, இந்திய உணவு, பேருந்துபயணம், சுற்றுலாத்தல நுழைவுக்கட்டணம், விசா கட்டணம், ஆங்கிலம் பேசும் சுற்றுலா வழிகாட்டி, பயணக்காப்பீடு ஆகியவற்றுக்கு ஒரு பயணிக்கு ரூ.78,250 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இதுதவிர சிம்லா-மணலி-சண்டிகர் நகரங்களுக்கு 7 பகல்கள், 6 இரவுகளுக்கு சுற்றுலாப்பயணம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான சிறப்பு சுற்றுலா ரயில், மே 9-ஆம் தேதி பெங்களூருவில் இருந்து புறப்படுகிறது. இருவழி விமானப்பயணம், தங்கும் விடுதி, காலைசிற்றுண்டி, இரவு உணவு, பேருந்துபயணம், பயணக்காப்பீடு ஆகியவற்றுக்கு ஒரு பயணிக்கு ரூ.27,350 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு பெங்களூரு-080-2296001314, மைசூரு-0821-2426001, 09731641611, 09741421486 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். www.irctctourism.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிர வைக்கும் செய்தி: ரூ. 246 கோடியை வங்கியில் செலுத்திய தொழிலதிபர்; ஏன்? எப்போது?



By DIN  |   Published on : 27th March 2017 10:46 AM  |
rupees

திருச்செங்கோடு: உயர் பண மதிப்பு நீக்க காலத்தில் திருச்செங்கோட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ரூ. 246 கோடி அளவுக்கு பழைய 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தியது தெரியவந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே கிராமப்புறத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளையில் அவர் ரூ.246 கோடி அளவுக்கு தனது வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார். இதற்கான சான்றிதழை அவர் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சமர்பித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தல்படி 45 சதவீதம் வரி செலுத்தியுள்ளார் எனவும் கூறப்படுகிறது.
பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு, தன்னிடம் இருந்த பணத்தை மறைக்கவே அவர் முயன்றுள்ளார். அவர் தனது வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி வந்ததை நாங்கள் மறைமுகமாக கண்காணித்து வந்தோம். பிறகு, 45% வரி செலுத்திட அவர் ஒப்புக் கொண்டார் என்று வருமான வரித்துறை மூத்த அதிகாரி செய்தி ஊடகத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், இது ஒரு சம்பவம் அல்ல, இதுபோல ஏராளமானோர் தங்களது கருப்புப் பணத்தை வரிப் பிடித்தத்தோடு வங்கியில் செலுத்த ஒப்புக் கொண்டனர் என்றும் அவர் கூறினார்.
 
இந்தத் தகவல் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் ஊடகங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதே சமயம் வங்கியில் ரூ. 246 கோடி பணத்தை செலுத்தியது யார்? என்பது குறித்து திருச்செங்கோடு மக்கள் மத்தியில் சல சலப்பும் ஏற்பட்டுள்ளது.

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...