Thursday, March 30, 2017

மாதச் சம்பளம் பெறும் தனி நபர்கள் ஆண்டுதோறும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதை உறுதி செய்யவேண்டும் என்று வருமான வரி இலாகா வற்புறுத்தி வருகிறது. 
 
புதுடெல்லி,
மாதச் சம்பளம் பெறும் தனி நபர்கள் ஆண்டுதோறும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதை உறுதி செய்யவேண்டும் என்று வருமான வரி இலாகா வற்புறுத்தி வருகிறது. இந்த நிலையில் 2017–18–ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது தொடர்பான படிவம் எளிமை படுத்தப்பட்டு இருக்கிறது.

இதுபற்றி வருமான வரி இலாகா அதிகாரி ஒருவர் கூறியதாவது:–
மாதச் சம்பளம் மற்றும் வட்டி வருவாய் ஈட்டும் தனி நபர்கள் எளிய முறையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் விதமாக 2017–18 மதிப்பீட்டு ஆண்டுக்கான விண்ணப்ப படிவத்தில் பல்வேறு பத்திகள் குறைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் வருமான வரி கழிவுகள் பற்றிய சில பத்திகளும் அடங்கும். (வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான ஐ.டி.ஆர்–1/சகாஜ் படிவத்தில் மொத்தம் 18 பத்திகள் உள்ளன)

இதனால் இந்த படிவங்களை நிரப்புவது எளிதாக இருக்கும். புதிய படிவம் வருகிற 1–ந்தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இதையடுத்து, ஏப்ரல் மாதமே வருமான வரி கணக்கை மதிப்பிட்டு தாக்கல் செய்யலாம். கடைசி நாள் ஜூலை 31–ந்தேதி ஆகும். இணையதளம் வழியாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது வருகிற 1–ந்தேதியே தொடங்கிவிடும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

உலக இட்லி தினத்தை முன்னிட்டு 2,500 ரக இட்லி கண்காட்சி

உலக இட்லி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழ் மையம் இணைந்து 2,500 ரக இட்லி கண்காட்சியை சென்னை பிராட்வே, ராஜா அண்ணாமலை மன்றத்தில் நேற்று நடத்தினர். 
 உலக இட்லி தினத்தை முன்னிட்டு 2,500 ரக இட்லி கண்காட்சி
சென்னை,

கண்காட்சியில் எம்.ஜி.ஆர்., சிவாஜி, மனோரமா, அன்னை தெரசா, அப்துல்கலாம், சார்லி சாப்ளின், அம்பேத்கர், நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ், தாமஸ் ஆல்வா எடிசன் ஆகியோரின் உருவத்திலான இட்லிகளும், அதுமட்டுமல்லாமல் மல்லிப்பூ, இளநீர், பாதாம், பிசா, புதினா, ராகி, பீட்ரூட், சாக்லேட் என மொத்தம் 2,500 இட்லி ரகங்கள் இதில் இடம்பெற்று இருந்தன. மேலும், நடைபெற உள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை எடுத்துக்கூறும் விதமாக வாக்குப்பதிவு எந்திரம் போன்ற இட்லியையும் உருவாக்கி இருந்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்க மாநில பொதுச்செயலாளர் மு.இனியவன் நிருபர்களிடம் கூறும்போது, ‘உலக இட்லி தினத்தை முன்னிட்டு உன்னத உணவான இட்லியை பல்வேறு சுவை மற்றும் வடிவங்களில் செய்துகொடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சியை ஒவ்வொரு வருடமும் செய்து வருகிறோம். இந்த நிகழ்ச்சி தொடர்பாக 2 மாதம் முன்பு திட்டமிட்டு 2 நாட்களில் 22 பேர் உழைப்புடன் இதை செய்தோம்’ என்றார்.
தலையங்கம்

நன்னெறி பாடமாக திருக்குறள்


இப்போதெல்லாம் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் பள்ளிக்கூட மாணவர்கள் பற்றி வரும் செய்திகளெல்லாம் பெரும் வேதனையளிக்கிறது.

மார்ச் 30, 02:00 AM

இப்போதெல்லாம் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் பள்ளிக்கூட மாணவர்கள் பற்றி வரும் செய்திகளெல்லாம் பெரும் வேதனையளிக்கிறது. பேனா எடுக்கவேண்டிய வயதில், கத்தியை எடுத்துக் கொண்டு பள்ளிக்கூடங்களிலேயே பல கத்திக்குத்து சம்பவங்கள் நடக்கின்றன. பல பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் குடிப்பழக்கத்துக்கு ஆட்பட்டுள்ள துயரமான நிகழ்வுகள் நடக்கின்றன. படிக்கும் வயதிலேயே பல மாணவிகள் பாலியல் உணர்ச்சிகளுக்கு ஆட்படுவதும், காதல் என்ற வலையில் விழுந்து ஓடிப்போவதும், படிக்கும் காலத்திலேயே கர்ப்பம் அடைவதுமான பல வருத்தத்துக்குரிய செய்திகள் வருகின்றன. இதுமட்டுமல்லாமல், நற்குணங்கள் மலரவேண்டிய இந்த ‘டீன்ஏஜ் பருவம்’ என்று கூறப்படும் பதின் பருவத்தில் துர்க்குணங்கள் என்ற முட்புதர்கள் வளர்ந்து அவர்களின் எதிர்கால வாழ்க்கையை குத்தி குதறிவிடுகின்றன. மேலும், வாழ்க்கையில் ஒரு சிறிய சறுக்கல்களைக்கூட, ஒரு சிறிய தோல்வியைக்கூட சந்திப்பதற்கு துணிவில்லாமல் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களும் நடக்கின்றன.

இதற்கெல்லாம் காரணம், அந்தக்காலத்தில் பள்ளிக்கூடங்களில் நீதிபோதனை பாடங்கள் இருந்தன. இப்போது பள்ளிக்கூடங்களில் நீதிபோதனை இல்லை. பாடம், பாடம், படிப்பு, படிப்பு என்று வேறு எதற்கும் இடம்கொடுக்காமல், பள்ளிக்கூடநேரங்களில் படிப்பு ஒன்றுதான் முக்கியம் என்றவகையில் கல்வி கற்பிக்கப்படுகின்றன. இந்தநிலையில், மதுரை ஐகோர்ட்டு கிளையில் எஸ்.ராஜரத்தினம் என்பவர் திருக்குறளில் உள்ள 1,330 குறள்களையும் 6–ம் வகுப்பு முதல் 12–ம் வகுப்புவரை பாடத்திட்டத்தில் கொண்டுவரவேண்டும் என்று வழக்கை தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், கல்வியின் முதன்மை குறிக்கோளே நன்னெறி கருத்துகளின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் சமூகம் என்பதால், திருக்குறளில் இடம்பெற்றிருக்கும் அறத்துப்பால், பொருட்பால் இரண்டையும் பாடத்திட்டத்தில் சேர்த்திட தமிழக அரசுக்கு ஆணையிட்டார். ‘மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்பிக்க அவர்கள் வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவற்றையும் பின்பற்றிட திருக்குறளில் எல்லா நீதிபோதனைகளும் உள்ளன’ என்று நீதிபதி வலியுறுத்தினார். ஒழுக்கமுள்ள, நேர்மையுள்ள, அறிவாற்றல் உள்ள எதிர்காலத்தை ஒளிர வைக்கும் மாணவர் சமுதாயத்தை உருவாக்கவேண்டும் என்றவகையில் நீதிபதி ஆர்.மகாதேவனின் இந்த தீர்ப்பை தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது மிகவும் வரவேற்புக்குரியதாகும்.

உலக இலக்கியச்செழுமைக்கு தமிழ்மொழியில் மிகச்சிறந்த கொடையாக கருதப்படுவதும், நன்னெறி கருத்துகளுடன் வாழ்வியல் நெறிகளை இணைத்து செதுக்கப்பட்ட அறிவுக்கருவூலம் திருக்குறளில் உள்ள அறத்துப்பால் மற்றும் பொருட்பாலில் உள்ள 105 அதிகாரங்களையும் வகுப்பு வாரியாக 15 அதிகாரங்கள் என்றவகையில், 6–ம் வகுப்பு முதல் 12–ம் வகுப்புவரை வரும் கல்வியாண்டில் பயிற்றுவிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரு அதிகாரத்தில் 10 குறட்பாக்கள் இருக்கின்றன. ஆக, ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர்கள் 150 குறட்பாக்களை கற்றுக்கொள்வார்கள். 12–ம் வகுப்பு படித்து முடிக்கும்போது 1,050 குறட்பாக்களை அறிந்து, புரிந்து, தெரிந்து மாணவ சமுதாயம் வெளியே வரும். இதுமட்டுமல்லாமல், திருக்குறளில் இடம்பெற்றிருக்கும் நன்னெறி கருத்துகளின் அடிப்படையில் நீதிக்கதைகள், இசைப்பாடல்கள், சித்திரக் கதைகள், அசைவூட்டப்பட்ட படங்கள் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்களை சென்றடையும் விதமான இணையவழி என திருக்குறளை அவ்வப்போது நவீனமுறையில் உருவாக்கி உடனுக்குடன் பதிப்பித்து வெளியிட மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்துக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திருக்குறள் எந்த மதத்துக்கும், எந்த இனத்துக்கும் மட்டும் சொந்தமில்லை, எல்லோருக்குமான பொதுமறை என்றவகையில் சிந்தைக்கு இனிய, செவிக்கு இனிய திருக்குறளை கற்றுக்கொடுக்கும் பணிக்கு முன்னுரிமை கொடுத்து, இதிலுள்ள அறவழிகளை மாணவர்களின் உள்ளத்தில் பதியவைத்து, அதன்படி நடக்கவைக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்குத்தான் இருக்கிறது.
































































தமிழகத்தில் 2 கோடிக்கும் அதிகமான ரே‌ஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் போலி அட்டைகளும் இடம்பெற்றுள்ளன. 
 


சென்னை,

எலெக்ட்ரானிக் பதிவுகளின் அடிப்படையில் ஸ்மார்ட் ரே‌ஷன் அட்டைகளை வழங்கினால் போலி அட்டைகள் தானாக ஒழிந்துவிடும் என்று கணக்கிட்டு, ஸ்மார்ட் ரே‌ஷன் அட்டை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. அதன் பின்னர் ரே‌ஷன் அட்டைகளை ஆதார் தகவலுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரே‌ஷன் அட்டைகளுக்கான ஆதார் பதிவு தகவல்களும் பெறப்பட்டுவிட்டன.

99 சதவீதம் பதிவு தமிழகம் முழுவதும் இதுவரை 99 சதவீத ஆதார் தகவல்கள் பெறப்பட்டு ரே‌ஷன் அட்டையுடன் இணைக்கப்பட்டுவிட்டன. ஒரு சதவீதம் மட்டுமே அதாவது தமிழகமெங்கும் சுமார் 2 லட்சம் பேர் மட்டுமே ஆதார் தகவல்களை இணைக்கவில்லை.

குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள், அவர்களின் ஆதார் எண்கள் மற்றும் செல்போன் எண் போன்ற தகவல்கள், அந்தந்த ரே‌ஷன் கடைகளில் கடந்த 6 மாதங்களாக இணைக்கப்பட்டு வந்தன. ரே‌ஷன் அட்டைதாரரின் புகைப்படங்களை ஸ்மார்ட் அட்டையுடன் இணைக்க அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டது. இதில் சற்று காலதாமதம் ஆகிவிட்டது.
இந்த நிலையில், ஏப்ரல் 1–ந் தேதியன்று ஸ்மார்ட் ரே‌ஷன் அட்டைகள் வழங்கும் பணியை தமிழக அரசு தொடங்குகிறது. திருவள்ளூர் மாவட்டம், கொரட்டூரில் காலை 11 மணிக்கு முதல்–அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இந்தத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

அட்டை எப்படி இருக்கும்? பச்சை வண்ணத்தில் உள்ள அந்த அட்டை ஏ.டி.எம். அட்டைபோல் காணப்படும். முதல் பக்கத்தில் தமிழக அரசின் முத்திரை, அட்டை வழங்கும் துறையின் பெயர் ஆகியவை இடம் பெற்றிருக்கும்.
மேலும் குடும்பத் தலைவரின் புகைப்படம், பெயர், பிறந்த தேதி, முகவரி, அட்டைக்கான எண் ஆகியவை இடம்பெற்றிருக்கும். அட்டையின் பின்பகுதியில், அந்தக் குடும்பத்தில் உள்ளவர்களின் ஆதார் எண், ‘கியூ ஆர் கோர்டு’ ஆகியவை இடம் பெற்றிருக்கும்.

அச்சுப் பணி தொடர்கிறது இதுகுறித்து உணவுப் பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:–
ரே‌ஷன் பொருட்களைப் பெறுவதில் ஒருவர் கூட விடுபட்டுவிடக்கூடாது என்ற முனைப்பில் அரசு செயல்பட்டு வருகிறது. ஸ்மார்ட் ரே‌ஷன் அட்டைகளை தொடர்ந்து அச்சிட்டு வருகிறோம்.

எஸ்.எம்.எஸ். வரும் அச்சிட அச்சிட அவற்றை தொடர்ந்து வழங்குவோம். வாடிக்கையாளர் ஒருவரின் ஸ்மார்ட் ரே‌ஷன் அட்டை அச்சிடப்பட்டு, அது அவரது ரே‌ஷன் கடைக்கு வந்துவிட்டால், அதுபற்றிய தகவலும், அதை அவர் வந்து பெற்றுக்கொள்ளலாம் என்ற தகவலும், ரே‌ஷன் அட்டையுடன் ஏற்கனவே பதிவு செய்திருந்த செல்போனுக்கு தமிழ் மொழியில் எஸ்.எம்.எஸ். ஆக வரும்.

இந்த எஸ்.எம்.எஸ். வந்த பிறகு ரே‌ஷன் கடைக்குச்சென்று புதிய அட்டையை பெற்றுக்கொள்ளலாம். எனவே, யாரும் முன்கூட்டியே ரே‌ஷன் கடைகளுக்குச் சென்று அவசரப்படத் தேவையில்லை.

சரிபாருங்கள் ஒவ்வொருவரும் தங்கள் செல்போன் எண் அந்தந்த ரே‌ஷன் கடையில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்துக்கொள்வது மிகமிக அவசியம். செல்போன் நம்பரை நீங்கள் கொடுத்தும் அது பதிவு செய்யப்படவில்லை என்றால், ஸ்மார்ட் அட்டை வாங்குவதில் சுணக்கம் ஏற்படும்.
ஆனாலும் செல்போன் நம்பரை பதிவு செய்ய வேறு வழிகள் உள்ளன. 1967 அல்லது 18004255901 என்ற இலவச நம்பர்களை தொடர்பு கொண்டு அந்த சேவையைப் பெறலாம். இ–சேவை மையங்களிலும் இதற்கான உதவியை நாடலாம்.

செல்போன் நம்பரை பதிவு செய்தபிறகு வாங்கிய பொருட்கள் தொடர்பாக இதுவரை எஸ்.எம்.எஸ். எதுவும் அந்த நம்பருக்கு வரவில்லை என்றால், அந்த நம்பர் பதிவாகவில்லை என்று அர்த்தம். எனவே இதை உடனே சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

சென்னையில் இல்லை முதல் அட்டையை இலவசமாக வழங்குகிறோம். பின்னர் அந்த அட்டையில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமென்றாலும், இணையதளம் வழியாக சுயமாக செய்துகொள்ளலாம். இ–சேவை மையம் மூலமாகவும் மாற்றிக் கொள்ளலாம்.

ஆனால் தகவல்களை மாற்றிய பிறகு புதிய ஸ்மார்ட் அட்டையை அச்சிட்டு வழங்குவதற்கு கட்டணம் நிர்ணயிக்கப்படும். சென்னையில் தற்போது தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலாகி இருப்பதால், தேர்தல் நடவடிக்கைகள் முடியும்வரை ஸ்மார்ட் அட்டைகள் வழங்க இயலாது.

தொலைந்துவிட்டால்... ரே‌ஷன் அட்டையுடன் ஆதார் நம்பரை இதுவரை இணைக்காமல் இருப்பவர்கள் சற்று துரிதமாக செயல்படவேண்டும். ஜூன் மாதத்துக்குள் ஆதார் எண்கள் இணைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

ஸ்மார்ட் அட்டையை யாரும் தொலைத்துவிட்டாலும் கவலைப்பட வேண்டாம். அட்டை எண், ஆதார் எண், ரே‌ஷன் அட்டையில் பதிவு செய்த செல்போன் எண் ஆகியவற்றை வைத்து புதிய அட்டையை பெற்றுக்கொள்ளலாம். ரே‌ஷன் பொருட்கள் வாங்காவிட்டால் அட்டை ரத்தாகிவிடும் என்ற பயமும் இனி அவசியம் இல்லை. ஸ்மார்ட் ரே‌ஷன் அட்டையை ரத்து செய்ய முடியாது.  இவ்வாறு அவர் கூறினார்.

Wednesday, March 29, 2017

 Sub-registrar arrested in fake documents case

 He aided a man to appropriate property

The . Tirupattur police on Tuesday arrested a sub-registrar in a 2015 fake documents case.
According to Tirupattur Town police, Pachaiammal, a resident of Krishnagiri Main Road, Tirupattur, approached the Madras High Court, after her son, Murali, appropriated his ailing father’s property through fake documents.

His father Rajikannu was comatose, when Murali transferred two saw mills worth Rs. 10 crore to himself by affixing his father’s thumb impression on the documents.
He took the help of Karunakaran, then sub-registrar of Tirupattur, and three others, for this purpose, police said.

Went on medical leave
Following a court directive, police arrested Murali and two others.
The sub-registrar, who was transferred to Kallakurichi, eluded the police net by going on medical leave. He was nabbed him on Tuesday.
 Cases filed against MCI notifications withdrawn

The Madras High Court Bench here on Tuesday permitted the chairman of an educational trust to withdraw two writ petitions filed by it challenging the notifications issued by Medical Council of India (MCI) on March 10 for conducting a common State-wide counselling on the basis of merit list of National Eligibility-cum-Entrance Test (NEET) for “all admissions” to undergraduate as well as postgraduate medical courses in “all medical educational institutions.”

Justice V. Parthiban granted the permission with liberty to the chairman of Padanilam Welfare Trust based in Kanniyakumari district, to move the Supreme Court.

Earlier, it was brought to the notice of the judge that the apex court was already seized of a similar case filed by Christian Medical College Ludhiana Society which had highlighted lack of clarity over the right of minority educational institutions to admit students after the introduction of National Eligibility-cum-Entrance Test (NEET).

Doctors from Tamil Nadu felicitated for distinguished service in specialised fields

Three doctors from the State have been awarded the prestigious Dr. B.C. Roy National Award and two others, the Hari Om Ashram Alembic Research Award.

At a ceremony at Rashtrapati Bhavan on Tuesday, President Pranab Mukherjee distributed the awards, given in various categories and for various years, to the doctors.

Vice-Chancellor of The Tamil Nadu Dr. MGR Medical Univeristy S. Geethalakshmi was given the award in recognition of her outstanding services in the field of socio-medical relief for 2016.
C. Palanivelu, chairman of Coimbatore-based GEM Hospital received the award in the eminent medical person category for 2015. This is the second time Dr. Palanivelu has got the award — he got it the first time in 2006 in the speciality development category.

Anand K. Khakhar, programme director, Centre for Liver Diseases and Transplantation at Apollo Hospitals, Chennai received the award for the recognition of best talents in encouraging the development of specialities in different branches in medicine category, also for 2015.
S. Rajasekaran, chairman, department of orthopaedics, Ganga Hospital, Coimbatore was given the Hari Om Ashram Alembic Research Award for 2008, and P. Sundaresan, senior scientist and head of the Genetics department at the Aravind Medical Research Foundation, Madurai, received the same award for 2010.

Dr. B.C. Roy Award is given in each of the following categories: Statesmanship of the Highest Order in India, Medical man-cum-Statesman, Eminent Medical Person, Eminent person in Philosophy, Eminent person in Science and Eminent person in Arts.

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...