Sunday, April 2, 2017

ஊழியர்களுக்கு புதிய 'அலவன்ஸ்'  கிடைப்பதில்... தாமதம்? இன்னும் தீரவில்லை 7வது சம்பள கமிஷன் குளறுபடி

புதுடில்லி, மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைக்கு ஏற்ப, 'அலவன்ஸ்' எனப்படும், 'படி'களை மாற்றி அமைப்பதில், இன்னமும் குழப்பம் நீடிக்கிறது. இதனால், ஏப்., 1 முதல், புதிய விகித அடிப்படையில், 'படி' வழங்குவதில் சிக்கல் நீடிக்கிறது.




மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியங்கள், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருத்தி அமைக்கப் படுகின்றன; ஊதியக் குழு பரிந்துரையின் அடிப் படையில், சம்பள விகிதம் மாற்றி அமைக்கப் படுகிறது.

அதன்படி, ஏழாவது ஊதியக் குழு அளித்த பரிந் துரைகளை, மத்திய அரசு, 2016ல் அமல்படுத்தி யது. இதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு, 23.5 சதவீதமும், ஓய்வூதியதாரர்களுக்கு, 24 சதவீதமும் ஊதிய உயர்வும் அளிக்கப்பட்டது. இந்நிலையில், ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி, சம்பளத்துடன் கூடிய படியும், உயர்த்தப்பட வேண்டும். இது தொடர்பாக, மத்திய நிதித் துறை செயலர் தலைமையில்,

2016 ஜூலையில் கமிட்டி அமைக்கப்பட்டது. பல மாதங்களாக ஆய்வு செய்து வரும் இக் கமிட்டி, தன் பரிந்துரைகளை சமர்ப்பிக்க, கால தாமததித்து வருகிறது.

மத்திய அரசு ஊழியர் களுக்கு இதுவரை, 196 வித மான படிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றில், பலவற்றை ரத்து செய்யும்படி, ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைத்தது. அது போலவே, வீட்டு வாடகை படியை முடிவு செய்வதிலும் சிக்கல் நீடிக் கிறது. இக்கமிட்டி, நீண்ட ஆலோசனை நடத்திய பின்னும் முடிவு எட்டப்படவில்லை. சில தினங் களுக்கு முன், டில்லியில் கூடிய இக்கமிட்டி கூட்டத் தில், சில படிகளை ரத்து செய்வது தொடர்பாக, மத்திய அரசின், 14 துறைகளிடம் ஆலோசனை கேட்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதற்கு மேலும் தாமதமாக கூடும். எனவே, முன்ன தாக திட்டமிட்டபடி, புதிய நிதியாண்டின் துவக்க மான, ஏப்., 1ல் இருந்து, மாற்றியமைக்கப் பட்ட, படிகளை அமல்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள் ளது.எனினும், பணிகளை முடித்து, பார்லி., கூட்டத் தொடர் முடிந்த பின், ஏப்., இறுதி யில், மத்திய அரசு, படி விபரங்களை அறிவிக்கலாம் என, தெரிகிறது. அதே சமயம், படிகளை, முன்தேதியிட்டு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

வீட்டு வாடகை 'படியில்' மாற்றம்?

'மெட்ரோ' நகரங்களில், அடிப்படை சம்பளத் தில், 30 சதவீதம் வாடகை படியாக வழங்கப்படுகிறது. இதை, 24 சதவீதமாக குறைக்க வேண்டும் என,ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைத்து   இருந்தது. இதற்கு, மத்திய அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரு கின்றனர் . எனவே, தற்போது உள்ளபடி,30 சதவீத வீட்டு வாடகை படியே, தொடர்ந்து வழங்க கமிட்டி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

53 படிகள் நீக்கம்

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணி புரியும் ஊழியர்களுக்கு, தற்போது, 196 வித மான, 'படிகள்' வழங்கப்படுகின்றன. இவற்றில், சமையல், கண்காணிப்பு, முடிவெட்டுதல், சோப், சீருடை, துவைத்தல், ஷூ, சுருக் கெழுத்து என, பலவித படிகள் வழங்குவதில் நடைமுறை சிக்கல் உள்ளது. எனவே, இவற் றில் சில நீக்கப்படுகின்றன. மேலும், சில வற்றை ஒன்றிணைத்து ஒரே படியாக வழங்க வும், கமிட்டி பரிந்துரைத்துள்ளது. அதன்படி, தற்போதுள்ள, 196 படிகளில், 53 படிகள் ரத்து செய்யப்படுகின்றன. மேலும், 36 படிகள் மற்றவற்றுடன் இணைக்கப்படுகின்றன.
 எஸ்.பி.ஐ.,யுடன் இணைந்த 6 வங்கிகள்

புதுடில்லி:பாரதிய மகளிர் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் பிகானீர், ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத் உள்பட 6 வங்கிகளும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) வங்கியுடன் சனிக்கிழமை(நேற்று) முறைப்படி இணைந்தன. இதன்மூலம், உலகிலேயே சொத்துகள் அடிப்படையில் முதல் 50 இடத்தில் உள்ள வங்கிகளில் எஸ்பிஐயும் இடம்பெற்றுள்ளது.

ஸடேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத், ஸ்டேட் பேங்க் ஆஃப் பிகானீர் அன்ட் ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் பாட்டியாலா, ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர் ஆகிய 5 வங்கிகளின் ஊழியர்களும் எஸ்பிஐயுடன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். எனினும், முடிவில் எஸ்பிஐயுடன் பெண்களுக்காக தொடங்கப்பட்ட பாரதிய மகளிர் வங்கி உள்பட 6 எஸ்பிஐ சார்பு வங்கிகளும் எஸ்பிஐ வங்கியுடன் இணைந்தன.

24 ஆயிரம் கிளகைள்

இந்த வங்கிகளின் இணைப்பு மூலம் எஸ்பிஐயின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 37 கோடியாக அதிகரித்துள்ளது. அதேபோல், எஸ்பிஐ வங்கிக் கிளைகள் 24ஆயிரமாகவும், ஏடிஎம்களின் எண்ணிக்கை 59ஆயிரமாகவும் உயர்ந்தது.
 
பிரதமர் அலுவலக உத்தரவின்பேரில் நாடு முழுவதும் அமலாக்க துறை அதிரடி சோதனை நடத்தியது. சென்னையில் 13 இடங்களில் இந்த சோதனை நடந்தது. 
 
புதுடெல்லி, 

 நாடு முழுவதும் ஷெல் கம்பெனிகள் என்று அழைக்கப்படுகிற 1,155 போலி நிறுவனங்கள் கடந்த 3 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை பெயரளவில் மட்டுமே இயங்குகின்றன. குறிப்பாக எந்த தொழிலிலும் அல்லது வர்த்தகத்திலும் ஈடுபடாமல், சட்ட விரோத பண பரிமாற்றம் ஒன்றையே நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகின்றன.

இவற்றின்மூலம் 22 ஆயிரம் பேர் பலன் பெற்று வருவதாக தெரிய வந்துள்ளது. இந்த ஷெல் கம்பெனிகள் ரூ.13 ஆயிரத்து 300 கோடி அளவுக்கு சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

பிரதமர் அலுவலகம் அதிரடி

கடந்த நவம்பர் 8–ந் தேதி ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவித்து, பிரதமர் நரேந்திர மோடி எடுத்த பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் இந்த ஷெல் கம்பெனிகள் மூலம் 550 பேர் ரூ.3,900 கோடி அளவுக்கு கருப்பு பணத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

இப்படி சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருகிற ஷெல் கம்பெனிகளில் சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு அமலாக்கப்பிரிவு இயக்குனரகத்துக்கு பிரதமர் அலுவலகம் அதிரடியாக உத்தரவிட்டது.

100 இடங்கள்

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் உள்ள 16 மாநிலங்களில் குறைந்தது 100 இடங்களில் அமலாக்கப்பிரிவு இயக்குனரகத்தின் குழுக்கள் அதிரடி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டன.

பி.எம்.எல்.ஏ. என்னும் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டம் மற்றும் பெமா என்னும் அன்னிய செலாவணி பராமரிப்பு சட்டத்தின்கீழ் நடத்தப்பட்ட இந்த சோதனைகள், சென்னை, கொல்கத்தா, டெல்லி, ஆமதாபாத், சண்டிகார், பாட்னா, பெங்களூரு, ராஞ்சி உள்ளிட்ட பல இடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.சென்னையை பொறுத்தமட்டில், 8 ஷெல் கம்பெனிகளுடன் தொடர்புடைய 13 இடங்களில் இந்த சோதனை நடவடிக்கையை அமலாக்கப்பிரிவு இயக்குனரக குழுக்கள் நடத்தி உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசியல் பிரபலங்கள்

சோதனை நடத்தப்பட்ட இடங்களில், சட்டவிரோத பண பரிமாற்ற தடை வழக்கில் சிக்கி, சிறையில் அடைக்கப்பட்டுள்ள மராட்டிய மாநில முன்னாள் துணை முதல்–மந்திரியும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சகன் புஜ்பால், ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, உத்தரபிரதேச மாநிலத்தில் மாயாவதியின் தம்பி ஆனந்தகுமார் உள்ளிட்டோருடன் தொடர்புடைய நிறுவனங்களும் அடங்கும் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.

மும்பையில் 20 போலி இயக்குனர்களுடன் 700 போலி நிறுவனங்களை ஒருவர் நடத்தி வந்து இப்போது சிக்கியுள்ளார். இவர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சகன் புஜ்பாலுக்குரிய ரூ.46.7 கோடி சட்டவிரோத பணத்தை, சட்டபூர்வ பணமாக மாற்றித்தந்துள்ளார் என சொல்லப்படுகிறது.

நேற்று நடத்தப்பட்ட சோதனைகளின்போது முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கையில் யாரும் கைது செய்யப்படாத போதும், சந்தேகத்துக்கு உரிய நபர்களிடம் அமலாக்கப்பிரிவு இயக்குனரக குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றன.

Saturday, April 1, 2017

பஸ்கள், ரேஷன் கடைகளில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கக் கூடாது: தமிழக அரசு உத்தரவு

நெல்லை- புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என பல்வேறு தரப்பினரும் வாங்க மறுத்து வருகின்றனர். 10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என ரிசர்வ் வங்கி பல முறை அறிவித்தும் இந்த குழப்பம் தீர்ந்தபாடில்லை. இந்நிலையில் தமிழக உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர், போக்குவரத்து துறை ஆணையர், மின் வாரிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆகியோருக்கு தமிழக நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சண்முகம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: 10 ரூபாய் நாணயங்களை பொதுமக்கள் புழங்கும் அனைத்து அரசு தொடர்பான அலுவல்களுக்கும் பெற்றுக் கொள்ளுமாறு ரிசர்வ் வங்கியின் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான மண்டல இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார்.

எனவே பொதுமக்கள் அதிகம் பயன்பாட்டில் உள்ள அரசுத் துறைகள், அதாவது அரசு பஸ்களில் டிக்கெட் கட்டணம், மின் கட்டணங்கள் வசூல், ரேஷன் கடைகள் ஆகியவற்றில் பொதுமக்கள் தரும் 10 ரூபாய் நாணயங்களை பெற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு 10 ரூபாய் நாணயங்களை பெற்றுக் கொள்வதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் உள்ள அச்சம் நீங்குவதுடன், அது தொடர்பான வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவு அனைத்து அரசு போக்குவரத்து கழகங்களுக்கும், உணவு வழங்கல் துறை மற்றும் மின் வாரிய அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.




Dailyhunt

ரிலாக்ஸ், தமிழகத்துக்கு இந்த வருசம் கடும் கோடை இல்லை!




காலை 7 மணிக்கே அனலடிக்கத் தொடங்கி விட்ட நம்ம ஊர் வெயில் பற்றிச் சொல்ல நம்மிடம் நிறையப் புகார்கள் இருக்கலாம். ஆனால் நிஜத்தில் இந்தக் கோடையில் வெயில் அப்படி ஒன்றும் வெளுத்து வாங்கவில்லை என்கிறது தமிழ்நாட்டு வானிலை அறிக்கை. இந்தியாவின் வடக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் இருக்கும் மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாடு இப்போதைக்கு மிக நல்ல வானிலையைத் தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறதாம். பிற மாநிலங்களில் 43 டிகிரி செல்சியஸில் வெயில் உச்சந்தலையை உருக வைத்துக் கொண்டிருக்க தமிழ்நாட்டில் விரும்பத்தக்க வானிலையே நிலவுவதாக வானிலை அறிக்கைகள் கூறுகின்றன.

வீட்டில் AC , மருத்துவமனைகளில் AC, அலுவலகம் சென்றால் அங்கும் AC, ஸ்டோர்களுக்குச் சென்றால் அங்கும் AC என்று குளுமையான வசதிகளுக்குப் பழக்கப் பட்டுப் போன மக்கள் இந்த வெயிலுக்கே இப்படி புலம்பிக் கொண்டிருக்கிறோம்.
ஆனால், இப்போது வரையிலும் சென்னையின் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை இன்னும் தாண்டவில்லையாம். ஏன் தெரியுமா? கிழக்கிலிருந்து வீசும் காற்றிலிருக்கும் ஈரப்பதமும், தமிழகத்தைச் சூழ்ந்த கருமேகங்களில் பொதிந்துள்ள ஈரப்பதமும் சேர்ந்து தான் தமிழகத்தை கடுமையான வெப்ப அலைகளிலிருந்து இதுவரை காப்பாற்றிக் கொண்டிருக்கிறதாம்.

கிழக்கிலிருந்து வீசும் குளிர்காற்றின் ஈரப்பதம் மற்றும் மேகப்பொதிகள் இரண்டும் தான் இதுவரையில் தமிழகம் மற்று இந்தியாவின் தென்பகுதி மாநிலங்கள் சிலவற்றை கடுமையான வெப்ப அலைகளின் தாக்கத்திலிருந்து தடுத்து காத்து வருவதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின், காலநிலை ஆய்வு ஆராய்ச்சிப் பிரிவின் தலைமை அதிகாரி டி எஸ் பாய் தெரிவித்துள்ளார்.
சொல்லப்போனால் தமிழ்நாட்டில் இது வரை வானிலை ஆய்வு மையங்களில் பதிவான அதிக பட்ச வெப்ப நிலையே சுமார் 40 டிகிரி செல்சியஸ் தான். பதிவான இடம் கரூர். கரூரை அடுத்து அதிக வெப்பநிலை நிலவக் கூடிய இடமாகப் பதிவானது சென்னை. வியாழன் அன்று நுங்கம்பாக்கத்திலிருக்கும் வானிலை ஆராய்ச்சி மையத்தில் பதிவான அதிக பட்ச வெப்பநிலை 33.7 டிகிரி செல்சியஸ்.
இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தால் ஒப்பு நோக்கப்படும் இன்சாட்- 3டி செயற்கைக்கோள்கள் எடுத்தனுப்பும் OLR (அவுட்கோயிங் லாங் வேவ்) புகைப்படங்களின் அடிப்படையில் கணித்தால் தற்போது, இந்தியாவின் வடக்கு மற்றும் மத்திய மாநிலங்களில் கடும் அனல் அலை பரவக் காரணம் அங்கு நிலவும் வலுவான அதிகபட்ச காற்றழுத்த தாழ்வு நிலையே ஆகும். இந்த உயர் காற்றழுத்த தாழ்வு நிலை தென்னிந்தியாவை குறிப்பாக தமிழகத்தை இந்த முறை புறக்கணித்து விட்டதால் மட்டுமே இப்போது வரை தமிழகத்தில் இனிமையான வானிலையே இப்போது வரை நிலவி வருவதாக வானிலை ஆய்வு மைய அறிக்கைகள் கூறுகின்றன.

இதைக் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் என்றழைக்கப் படும் பிரதீப் ஜான் என்ன சொல்கிறார் என்று பார்த்தால், உயர் வளிமண்டல அழுத்தத்தில் உருவாகும் இத்தகைய கடுமையான வெப்ப அலைகள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்தை கடக்கும் போது அங்கே வளிமண்டல மேற்பரப்பில் இருக்கும் காற்றானது, தரையை நோக்கி இழுக்கப்படுகிறது. இதனால் ஏற்படும் காற்றழுத்த தாழ்வு நிலையால் வெப்ப நிலை அதிகரிக்கிறது என்கிறார்.

மேற்குறிப்பிட்ட அதே காற்றழுத்த தாழ்வுநிலையால் தான் குறிப்பிட்ட இடங்களில் மேகங்கள் நகரமுடியாமல் ஒரே இடத்தில் பூமியின் மேற்புறத்தைச் சுற்றி ஒரு உரை போல தேங்குவதால், சூரிய ஒளி உட்புக முடியாமல், உள்ளிருக்கும் காற்றும் வெளியேற வகையின்றி இந்திய வானிலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டு அது வெப்பமாக உணரப் படுகிறது. அதைத் தான் வானிலை ஆய்வாளர்கள் வெப்ப அலைகள் என்கிறார்கள்.

புயல் எச்சரிக்கை மையத் தலைவரான எஸ். பாலசந்திரன் பேசுகையில், இது போன்ற வெப்ப அலைகள் உருவாக காரணம் ஒன்று மட்டுமே இருப்பதாகக் கருத முடியாது. இது போன்ற பல்வேறு காரணங்கள் இணைந்து தான் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி, வெப்பநிலை, கூடுதல், குறைதல், மழை, புயல் போன்றவை நிகழ்கின்றன என்கிறார்.

மேலும் அவர்; 'காற்றின் திசை, தெளிவான வானம், ஈரப்பதம், புவியியல் இயக்கவியல் இவை ஒவ்வொன்றுமே காலநிலையைத் தீர்மாணிப்பதில் தத்தமது பங்கை செவ்வனே ஆற்றி வருகின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஏப்ரல், மே மாதங்களில் மட்டுமே வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டும். மற்றபடி இங்கு எப்போதும் சமரசமான வானிலையே நிலவும். கடந்த காலங்களில் வெப்ப அலைகளின் தாக்கம் தமிழகத்தில் அதிகம் இருந்திருக்கலாம், ஆனால் இந்த ஆண்டில் இது வரை அப்படி எந்த அறிகுறியும் தெரியவில்லை. மே முதல் வாரம் வரை வானிலை இதே விதத்தில் தான் நீடிக்கும்' என்றார்.


Article Concept Courtsy: New indian express.
Dailyhunt
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டிய 7 முக்கிய விஷயங்கள்




புது தில்லி: ஏடிஎம்-மில் பணம் எடுப்பதற்கான புதிய கட்டணம், குறைந்த பண இருப்பு இல்லாவிட்டால் அபராதம் என எஸ்பிஐ வங்கி கொண்டு வந்துள்ள மிக முக்கிய கட்டுப்பாடுகள் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன.

நீங்கள் எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருப்பவராக இருந்தால், நிச்சயம் இந்த தகவல்களை அறிந்திருக்க வேண்டும்.

குறைந்த பண இருப்பு
பெரு நகரங்களில் இருக்கும் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் குறைந்தது 5 ஆயிரம் ரூபாயை இருப்பாக வைத்திருக்க வேண்டும். ஊரக, பாதி ஊரக மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் முறையே ரூ.3,000, ரூ.2,000 மற்றும் ரூ.1,000 என இருப்பு வைக்க வேண்டியது அவசியம்.

குறைந்த பண இருப்பு இல்லாவிட்டால்?
எஸ்பிஐயின் மாற்றப்பட்ட கட்டணங்களின் அடிப்படையில், மாதாந்திர வங்கி இருப்பு சராசரித் தொகை குறைந்த இருப்புத் தொகையை விட குறைந்தால், ரூ.100 அபராதமும், சேவைக் கட்டணமும் விதிக்கப்படும்.

மாநகரங்களில் உள்ள எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் ரூ.5000க்குக் கீழே இருப்பு வைத்தால் ரூ.100ம், 5 ஆயிரத்தில் பாதித் தொகை மட்டுமே இருந்தால் ரூ.50ம் சேவைக் கட்டணமும் விதிக்கப்படும்.

நகர, சிறு நகர, கிராமபுறப் பகுதிகளுக்கு ரூ.20 முதல் 50 வரை அபராதமும் சேவைக் கட்டணமும் விதிக்கப்படும். இது குறித்து வாடிக்கையாளர்களுக்கு வங்கியில் இருந்து தகவல் அனுப்பப்படும்.

டெபாசிட் செய்யவும் கட்டுப்பாடு
சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் மாதத்துக்கு அதிகபட்சமாக 3 முறை மட்டுமே கட்டணமின்றி பணத்தை டெபாசிட் செய்யலாம். அதற்கு மேல் செய்யும் ஒவ்வொரு டெபாசிட்டுக்கும் ரூ.50 கட்டணமும் சேவைக் கட்டணமும் விதிக்கப்படும்.

ஏடிஎம்மில் பணம் எடுக்க
எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் மாதத்துக்கு 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஒவ்வொரு முறையும் ரூ.10ம், பிற வங்கி ஏடிஎம்களில் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.20ம் கட்டணமாக வசூலிக்கப்படும்.

அதே போல, வங்கிக் கணக்கில் ரூ.25 ஆயிரத்துக்கு மேல் இருப்பு இருந்தால், அவர்கள் எஸ்பிஐயில் எத்தனை முறை பணம் எடுத்தாலும் கட்டணம் வசூலிக்காது. அதே போல, வங்கிக் கணக்கில் ரூ.1 லட்சத்துக்கு மேல் இருப்பு வைத்தால், பிற வங்கி ஏடிஎம்களில் எத்தனை முறை பணம் எடுத்தாலும் கட்டணம் பிடிக்கப்பட மாட்டாது என்று அறிவித்துள்ளது.

எஸ்எம்எஸ் சேவைக் கட்டணம்
எஸ்பிஐ வங்கி, வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் எஸ்எம்எஸ்-களுக்கு காலாண்டுக்கு ஒரு முறை ரூ.15ஐ கட்டணமாக பிடித்தம் செய்கிறது.

எஸ்பிஐயுடன் இணையும் 5 வங்கிகள்
இந்த கட்டணங்கள், எஸ்பிஐ வங்கி மற்றும், அதனுடன் இணையும் ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர், திருவாங்கூர், ஹைதராபாத், ஜெய்ப்பூர், பட்டியாலா ஆகிய 5 வங்கி வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும்.
Dailyhunt

'சாதனை திருநங்கை'... இந்தியாவின் முதல் எஸ்ஐ பிரித்திகா யாஷினி




இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்திலும் போலீஸ் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதும், அதன் மூலம் பலர் உயர் அதிகாரிகளாக பதவி உயர்வு பெறுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் முதன்முறையாக திருநங்கை ஒருவர், எஸ்ஐயாக பொறுப்பேற்கிறார். அதிலும், தமிழகத்தில் தர்மபுரி மாவட்டத்தில் பணியாற்ற இருக்கிறார்.

தமிழக காவல்துறைக்கான உயர் பயிற்சியகத்தில் ஆண்கள், பெண்கள் மற்றும் ஒரு பிரித்திகா யாஷினி என்ற திருநங்கை உள்பட 1,031 பேர் எஸ்ஐ பதவிக்கான பயிற்சியில் தேர்வு செய்யப்பட்டனர்.

ஒரு ஆண்டு நடைபெற்ற பயிற்சி நேற்று நிறைவுபெற்றது. இதையொட்டி, சிலம்பாட்டம், கராத்தே, நெருப்பு விளையாட்டு உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
அதில், எஸ்ஐயாக தேர்வு செய்யப்பட்டவர்கள், சாகசங்களை செய்து, அசத்தினர்.

இதில், இந்தியாவிலேயே முதல் எஸ்ஐயாக செய்யப்பட்ட திருநங்கை பிரித்திகா யாஷினிக்கு, பயிற்சி அளித்த உயர் அதிகாரிகள் உள்பட சக பயிற்சியாளர்களும் முழு ஒத்துழைப்பு அளித்தனர். போராடி பெற்ற பதவியை அவர் முழுமையான மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.

தர்மபுரி எஸ்பி அலுவலகத்தில் இன்று, பிரித்திகா யாஷினிக்கு பணி ஆணை வழங்கப்படுகிறது. அதையொட்டி அவர், அதே மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் பணியாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Dailyhunt

NEWS TODAY 14.02.2026