Tuesday, April 4, 2017

சொல்லத் தோணுது 44 - கொண்டாட்டம் யாருக்கு?

தங்கர் பச்சான்

Published: July 26, 2015 09:36 IST
இன்னும் மூன்று வாரங்களில் நாம் விடுதலை பெற்றதற்கான 68-ம் ஆண்டு கொண்டாட்டத்தைக் கொண்டாடி மகிழப் போகிறோம். நாம் எல்லோருமே இந்நாட்டு மன்னர்கள்தான். ஆனால், 56 சதவீத மன்னர்களுக்கு (மக்களுக்கு) சொந்த வீடுகூட இல்லை. குருவிகளுக்காவது தங்கிக்கொள்ள கூடுகள் இருக்கின்றன. மனித இனம் காட்டுமிராண்டிகளாக இருந்து, மனிதர் களாகப் பரிணமித்து ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆன பின்னும்கூட இன்னும் வீடுகள் இல்லாமல் வீதிகளிலும், மரத் தடிகளிலும் வாழ்வதைப் பற்றி இங்கே யாருக்கும் கவலையில்லை. இந்நிலை யில் ‘இந்தியா ஏழைநாடு’ என சொல் லிக் கொள்ளவும் மறுக்கிறது. அத்துடன் வெட்கமே இல்லாமல் பணக்கார நாடு களில் ஒன்றாகக் காட்டிக் கொள்ளவும், வல்லரசு நாடாகத் தன்னை பறைசாற்றிக் கொள்ளவும் படாதபாடுபடுகிறது.

இப்போதே இந்தக் குடிமகன்களின் நிலை இதுவென்றால், எதிர்காலத்தில் பிறக்கப் போகும் தலைமுறை எப்படி வாழப் போகிறதோ?

ஒருபக்கம், நாள் முழுக்க உழைத்து நமக்கெல்லாம் உணவளித்து, சுகமாக வாழ்வதற்கு வீடுகளை கட்டிக் கொடுத்து, விரைந்து செல்ல சாலைகளை அமைத் துக் கொடுத்துவிட்டு வீதியோரம் படுத்துக் கொள்ளும் மக்களும்; உழைத்த பணத்தில் பாதி பணத்தை வீட்டு வாடகைக்குக் கொடுத்துவிட்டு, வாழ்க்கைத் தேவைகளை சுருக்கிக் கொண்டு தினம்தினம் வாழ்க்கையோடு போராடிக் கொண்டிருக்கும் மக்களும் மிகுதியாக இருக்கும் நாடு இது.
மற்றொரு பக்கம், ஆட்களே இல்லாத ஆண்டுக்கொரு முறையோ, இரண்டு முறையோ சில நாட்கள் மட்டும் தங்கும் பல ஆயிரம் சதுர அடிகளைக் கொண்ட அரண்மனை வீடுகள்; இரண்டுபேர் மட்டுமே வாழ்வதற்கு பலமாடி வீடுகள்; ஆட்களே இல்லாமல் அடைத்து மூடி வைத்திருக்கும் வீடுகளும் இருக்கின்றன.

ஒரு குடும்பத்துக்கு ஒரு வீடு இல்லாத நிலையில், ஒரே குடும்பத்துக்கு 10 வீடுகள் இங்கே வைத்துக்கொள்ளலாம். பணம் இருந்தால் எந்த வீட்டையும், எத்தனை வீட்டையும் வாங்கி பூட்டி வைத்துக்கொள்ளலாம்.

ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ் நாளில் ஒரு சொந்தவீடு என்பதுதான் பெருங்கனவு. சிலருக்கு மட்டுமே பலப் போராட்டங்களுக்கு இடையில் அது நிறைவேறிவிடுகிறது. ஆனால், அதற்காக அவர்கள் கொடுக்கிற விலையும், நிம்மதி இழப்பும் வாழ் நாள் முழுக்க அவர்களைத் துரத்திக் கொண்டே இருக்கின்றன. வாழ் நாளின் இறுதிவரை வாடகை வீட்டி லேயே வாழ்பவர்களின் நிலை எல்லா வற்றையும்விடக் கொடியது. பல லட்சங்கள் செலவழித்து இடம் வாங்கி, அதேபோல் இன்னும் பல லட்சங்கள் செலவழித்து வீட்டை உருவாக்கி, அந்த வீட்டை சில ஆயிரத்துக்கு வாடகைக்குத் தருபவர்களின் நிலை இன்னும் மோசம். சொந்த வீட்டுக்கு ஆசைப்பட்டு கடன்பட்டு ஒவ்வொரு நாளும் உறக்கத்தை இழந்தவர்களும் கணக்கிலடங்காதவர்கள்.

வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் நம்மவர்கள் இரவும் பகலும் அரும்பாடுபட்டு உழைத்து, உறவுகளைப் பிரிந்து சேமித்தப் பணத்தில் மற்றவர் களுக்குத் தெரிய வேண்டும் என்பதற் காகவே கொண்டுவந்த பணத்தையெல் லாம் செலவழித்து, மாடி வீட்டைக் கட்டிக் கொண்டேயிருக்கிறார்கள்.

எழுத்துப் பணிக்காக அண்மையில் இரண்டு வாரங்கள் கொடைக்கானல் சென்று தங்கினேன். அமைதியான இடம் தேடி அலைந்தபோது எல்லா திசைகளிலும், எல்லா மலைகளிலும் திரும்பிய பக்கமெல்லாம் வீடுகள். நகரமே பரவாயில்லை என்றிருந்தது. புதுமையாக இருக்க வேண்டும் என்பதற் காக பாறைகளை உடைத்து அதில் வீட்டை உருவாக்கியிருக்கிறார்கள். தமிழர்களின் தொழில்நுட்ப அறிவை அங்கேதான் பார்க்க முடிகிறது. எப்படிப்பட்ட மலைக்கும் சாலை கள் அமைத்து கார்களை வீட் டுக்கு முன் நிறுத்தும் வசதியை உருவாக்கிவிடுகிறார்கள்.
ஆயிரக்கணக்கான வீடுகள் மலை களின் சரிவில் தொங்கிக் கொண்டி ருக்கின்றன. எங்கு திரும்பினாலும் வீடு கட்டும் பணிகளும், சாலை அமைக் கும் பணிகளும் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. இவற்றை அமைப்பதற்கான ஒவ்வொரு மூலப் பொருளும், கட்டுமான பொருட் களும் கீழேயிருந்துதான் கொடைக் கானலுக்குக் கொண்டு வர வேண்டும். இதற்காக நூற்றுக்கணக்கான லாரிகள் இயங்கிக்கொண்டே இருக்கின்றன.

நாள்தோறும் வேளாண்மை செய்து கொண்டிருக்கும் நிலங்கள் பத்திரப் பதிவு செய்யப்பட்டு வீட்டுமனை களாக வேறொரு கைக்கு மாறிக் கொண்டே இருக்கின்றன. சிறுசிறு துண்டு நிலங்களை அதிக விலைக்குக் கொடுத்துவிட்டு அம்மண்ணின் மைந் தர்கள் ஆளுக்கொரு கார் வாங்கி ஊர்ச் சுற்றிவிட்டு ஆறே மாதத்தில் அனைத்தையையும் இழந்து, மதுக்கடை வாசலில் மதியிழந்து கிடக்கிறார்கள்.

தன்னைப் பண வசதி படைத்தவன் எனக் காட்டிக்கொள்வதற்காகவும், பேரப் பிள்ளைகள் மலைக் குளிர்ப் பிரதேசங்களில் தங்களுக்கு ஒரு வீடு இல்லையா என கேட்டுவிடக் கூடாது என்பதற்காகவும் மட்டுமே ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற இடங்களில் இப்படிப்பட்ட வீடுகள் கட்டப்படுகின்றன. நூற்றுக்குத் தொண் ணூத்தைந்து வீடுகளில் ஒரே ஒரு வீட்டில் கூட உரிமையாளர் தங்குவது இல்லை. ஆண்டுக்கு இரண்டு முறை ஒரு வார காலம் வந்து குடும்பத்துடன் தங்கினாலே பெரிய காரியம். மற்ற நாட்களில் ஆண்டு முழுக்க வீடுகள் பூட்டியே கிடக்கின்றன.

இங்கே அரசியல் தொடர்புடைய, அதிகாரங்களில் இருக்கக்கூடிய, பிற துறைகளில் அங்கம் வகிக்கக்கூடிய அனைத்துப் பணக்காரர்கள் மற்றும் பெரும் வணிகர்கள் என அனைவருக் குமே அங்கே இடமும், வீடும் உண்டு.

நம் நாட்டின் பெருங்கொடைகளாக இருக்கிற இவைபோன்ற மலைப் பிரதேசங்களின் இயற்கை வளங்களும், இயற்கை அமைப்பும் விதி மீறப் பட்டு ஒவ்வொரு மணி நேரமும் அழிந்துகொண்டே இருக்கிறது. மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் வருமானம் வருகிறது என்பதற்காக இப்படிப்பட்ட இடங்கள் வணிகமயமாக்கப்பட்டு, சிதைக்கப்பட்டு, இயற்கைக்கு மாறாக அழிந்துகொண்டே இருக்கின்றன. கொடைக்கானலில் இருந்து 6 கி.மீ. தள்ளி யிருந்த சிற்றூரில்தான் நான் தங்கியிருந் தேன். ஆழ்துளை கிணறுகளை அமைக் கக்கூடாது என விதியிருந்தும் கிராம நிர்வாக அதிகாரிகளின் துணையுடன் நகர வளர்ச்சித் துறையின் ஒப்புதலுடன் நாள்தோறும் மலைகள் குடையப்பட்டு, ஆண்டுக்கு ஒருமுறை வந்து தங்கப் போகும் செல்வந்தர்களுக்காக ஆழ் துளை கிணறு உருவாகிக்கொண்டே இருக்கிறது.

இயற்கையின் அழுகை யாருக்குமே தெரியவில்லை. யார் யாரெல்லாம் சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் மேசையைத் தட்டித் தட்டி சட்டத்தை உருவாக்கினார்களோ… அவர்களா லேயே, அவர்களின் துணையுடனேயே கண்முன் இயற்கை அழிக்கப்படுகிறது. இன்னும் சில ஆண்டுகளிலேயே கோயம் புத்தூர் போலவே ஊட்டியும், திண்டுக்கல் போலவே கொடைக்கானலும், சேலம் போலவே ஏற்காடும் மாறிவிடும். காலம் முழுக்க உழைப்பவனுக்கு இங்கே வீடும் இல்லை; உழைத்து வாழ நிலமும் இல்லை. ஆனால், பணத்தை என்ன செய்வதென்று தெரியாதவர்களுக்கு கணக்கில்லாத வீடுகளும்; உல்லாசத் துக்காகப் பொழுதைக் கழிப்பவர் களுக்கு நூற்றுக்கணக்கில் ஏக்கர் தோட் டங்களும் உள்ள நாடுதான் நம் நாடு.

‘ஒருவர் பெயரில் ஒரு வீடுதான், அதற்குமேல் இருந்தால் அது அரசுக்கு சொந்தம்’ எனும் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்து அனைவருக்கும் வீடு கிடைக்க வழிவகை செய்யும் அன்றைக்குத்தான் இது சுதந்திர இந்தியா. அப்போதுதான் வீடு இல்லாத இம்மக்களுக்கும் சுதந்திரக் கொண்டாட்டம். அதுவரை, எம்மக்களுக்கு ‘ஆகஸ்ட் 15’ ஒரு விடுமுறை நாள்தான்!

- சொல்லத் தோணுது...

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: thankartamil@gmail.com

வாடிக்கையாளர்களுக்கு அடுத்த அதிர்ச்சியை அளிக்கப்போகும் எஸ்பிஐ!
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு, வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச வைப்புத்தொகை வைத்திருக்க வேண்டுமென்ற புதிய விதி, ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. தற்போது, எஸ்பிஐ துணை வங்கிகளுக்கு இந்த விதி, ஏப்ரல் 24-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என எஸ்பிஐ அறிவித்துள்ளது.




எஸ்பிஐ வங்கியுடன் இணைப்பதற்கான செயல்முறைகளில் ஐந்து துணை வங்கிகள் உள்ளன. எஸ்பிஐ என்னும் பாரத ஸ்டேட் வங்கியுடன் ஸ்டேட் பேங்க் ஆப் பிகானிர் அண்டு ஜெய்ப்பூர், ஸ்டேட் பேங்க் ஆப் ஹைதராபாத், ஸ்டேட் பேங்க் ஆப் மைசூரு, ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா, ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் ஆகிய ஐந்து துணை வங்கிகள் இணைந்து செயல்படத் துவங்க உள்ளன.

இந்தத் துணை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ விதிக்கும் மினிமம் பேலன்ஸ் தொகை வைப்பு, தவறும் பட்சத்தில் விதிக்கப்படும் அபராதத்தொகை எனப் புதிய விதிகள் அனைத்தும் ஏப்ரல் 24-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என எஸ்பிஐ அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின் படி, எஸ்பிஐ மற்றும் அதன் துணை வங்கிகளின் வாடிக்கையாளர்கள், மெட்ரோ பகுதியில் 5000 ரூபாய், புறநகர்ப் பகுதிகளில் 3000 ரூபாய், நகர்ப்புறங்களில் 2000 ரூபாய், கிராமப் பகுதிகளில் 1000 ரூபாய் என, குறைந்த வைப்புத் தொகை வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஸ்போர்ட் சிறப்பு மேளா முன்பதிவு இன்று தொடக்கம்!

சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம், ஏப்ரல் 8-ம் தேதி சிறப்பு பாஸ்போர்ட் மேளாவை நடத்துகிறது. இதற்கான முன்பதிவு, 4-ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது.
 சென்னை சாலிகிராமம், தாம்பரம் மற்றும் அமைந்தகரை (நெல்சன் மாணிக்கம் சாலை) ஆகிய இடங்களில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையம்,  ஏப்ரல் 8-ம் தேதி சனிக்கிழமை அன்று இயங்கும். பொதுமக்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரங்களில் விண்ணப்பங்கள் வழக்கம் போல பெற்றுக்கொள்ளப்படும். இந்த பாஸ்போர்ட் மேளாவில் பங்கேற்க, விண்ணப்பதாரர்கள் அனைவரும், பாஸ்போர்ட் அலுவலகத்தின் அதிகாரபூர்வ இணையதளமான www.passportindia.gov.in மூலம் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பப் பதிவு எண்ணை (ஏ.ஆர்.என்.) பெற்றுக்கொண்டு, ஆன்லைனிலேயே விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி, சந்திப்பு முன்பதிவு நேரத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

விண்ணப்பதாரர்கள், தங்களது சந்திப்பு முன்பதிவு விவரம்கொண்ட ஏ.ஆர்.என் பதிவு எண் தாளை, அச்சிட்டு எடுத்து வரவேண்டும். தேவையான அனைத்து ஆவணங்களையும் அசலுடன், சுய சான்றளிக்கப்பட்ட ஒரு நகலுடன் கொண்டு வரவேண்டும். புதிய பாஸ்போர்ட் மற்றும் பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படும். தத்கல்  என்ற உடனடி பாஸ்போர்ட் விண்ணப்பங்கள், காவல்துறை தடையின்மை சான்றிதழ் (பி.சி.சி.) விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது. 'சுமார் 2,500 விண்ணப்பதாரர்கள் இந்த சிறப்பு மேளாவின்மூலம் பலன் அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது' என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதலில் அமெரிக்கா... இப்போது சிங்கப்பூர் - கலக்கத்தில் இந்திய ஐ.டி. ஊழியர்கள்!

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதுமே, மற்ற நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்குப் பணிபுரிய செல்லும் ஐ.டி.ஊழியர்களுக்கு ஹெச்1-பி விசா கட்டுப்பாடுமூலம் சிக்கலை உருவாக்கினார். இதனால், இந்திய ஐ.டி. நிறுவன ஊழியர்கள் நிறையப் பேர் சிக்கலைச் சந்தித்தனர். ஏராளமான இந்தியர்கள் வேலை இழக்கும் நிலை.

அதேபோல சிங்கப்பூரும் புதிய சிக்கலை உருவாக்கிவருகிறது. இந்தியாவில் இருந்து பயிற்சிக்காக சிங்கப்பூருக்குச் செல்லும் இந்திய ஐ.டி.ஊழியர்களுக்கு, விசா வழங்க மறுத்துவருகிறது. மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசிய கூட்டமைப்பான நாஸ்காம் மற்றும் சில தொழில் நிறுவனங்கள், சிங்கப்பூரில் பயிற்சி அளிப்பதற்காகத் தேர்வுசெய்து வைத்திருந்த ஊழியர்களுக்கு விசா வழங்க, சிங்கப்பூர் அரசாங்கம் மறுத்துவிட்டது.

மேலும், சிங்கப்பூரில் இருக்கும் எச்.சி.எல்., டி.சி.எஸ். இன்ஃபோசிஸ், விப்ரோ, காக்னிஸன்ட், எல் அண்ட் டி இன்ஃபோடெக் போன்ற இந்திய ஐ.டி. நிறுவனங்களுக்கு, 'எங்கள் நாட்டின் திறமையான ஊழியர்களை உங்கள் அலுவலகங்களில் பயன்படுத்திக்கொள்ளுங்கள்' என்றும் அறிக்கை அனுப்பி இருக்கிறது.

இதன்மூலம், இந்தியாவின் திறமையான ஊழியர்கள் தங்கள் நாட்டுக்குள் வருவதை மறைமுகமாகத் தடுக்க ஆரம்பித்துள்ளது சிங்கப்பூர்.

4ஜி வேகத்தில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடம்!

By DIN  |   Published on : 04th April 2017 12:33 AM
jio
4ஜி தொழில்நுட்பத்தில் தரவுகளை அதிவேகத்தில் பதிவிறக்கம் செய்வதில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடத்தைப் பிடித்துள்ளதாக தொலைத் தொடர்பு ஒழுங்காற்று ஆணையமான 'டிராய்' தெரிவித்துள்ளது.
செல்லிடப்பேசிக்கான அகண்ட அலைவரிசை வேகம் குறித்த பிப்ரவரி மாதத்துக்கான புள்ளிவிவரங்களை திங்கள்கிழமை வெளியிட்ட டிராய் அதில் தெரிவித்துள்ளதாவது:

சென்ற பிப்ரவரியில் ரிலையன்ஸ் ஜியோவின் 4ஜி பதிவிறக்க வேகம் 16.48எம்பிபிஎஸ் (மெகாபிட்ஸ் பெர் செகண்ட்)-ஆக இருந்தது. ஜனவரி மாத வேகமான 17.42எம்பிபிஎஸ் வேகத்துடன் ஒப்பிடுகையில் இது குறைவானதாகும். இருப்பினும், அந்த மாதத்தில் அதுவே மிகவும் வேகமான இணைய சேவையாகும்.

இந்த வேகத்தைக் கொண்டு ஒரு திரைப்படத்தை 5 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
ஜியோவின் 4ஜி வேகம் அதன் போட்டி நிறுவனங்களான ஐடியா செல்லுலார் (8.33எம்பிபிஎஸ்), மற்றும் ஏர்டெல் (7.66எம்பிபிஎஸ்) நிறுவனங்களைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாகும்.

மேலும், ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது அந்த இரண்டு நிறுவனங்களின் 4ஜி வேகம் பிப்ரவரியில் குறைந்து போயுள்ளது.
இவை தவிர, வோடஃபோன் நிறுவனத்தின் 4ஜி வேகம் 6.13 எம்பிபிஎஸ்-லிருந்து 5.66எம்பிபிஎஸ்-ஆகவும், பி.எஸ்.என்.எல். வேகம் 2.89 எம்பிபிஎஸ்-லிருந்து 2.01எம்பிபிஎஸ்-ஆகவும் சரிந்துள்ளது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், டாடா டொகோமோ மற்றும் ஏர்செல் ஆகியவற்றின் 4ஜி வேகம் பிப்ரவரியில் முறையே 2.67எம்பிபிஎஸ், 2.52எம்பிபிஎஸ் மற்றும் 2.01எம்பிபிஎஸ்-ஆக இருந்தது என்று அந்த புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோவுக்கு போட்டியாக பிஎஸ்என்எல் அறிவித்துள்ள அதிரடி சலுகைகள் என்ன..?

Published on : 03rd April 2017 03:36 PM  |
bsnl
அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் '249 ரூபாய்க்கு அன்லிமிடெட் பிராட்பேண்ட் ' திட்டத்தை இந்தியா முழுவதும் அறிமுகம் செய்துள்ளது. இதன்படி தினசரி 10 ஜிபி டேட்டா மற்றும் அளவில்லா இலவச அழைப்புகள் உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கும்.
இலவச டேட்டா, வாய்ஸ் கால்ஸ் என அதிரடி என்ட்ரி கொடுத்தது ரிலையன்ஸ் ஜியோ. இதன் வருகைக்குப் பிறகு மற்ற நிறுவனங்களும், அதிரடி ஆஃபர்களை வழங்கி வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகின்றனர்.
கடந்த செப்டம்பர் மாதம் இலவச டேட்டா, இலவச வாய்ஸ்கால்களை அளிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது ரிலையன்ஸ் ஜியோ. டிசம்பர் மாதத்துடன் முடிவடைய வேண்டிய இந்தத் திட்டம் கூடுதலாக மேலும் 3 மாதங்களுக்கு அதாவது, மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது.
இதையடுத்து இலவச சலுகைகள் முடிந்த பிறகு, ரூ.99 செலுத்தி ஜியோ ப்ரைம் திட்டத்தில் உறுப்பினராகி, அதன் சலுகைகளை பெற்றுக் கொள்ளலாம் என்று ஜியோ ஏற்கெனவே கூறியிருந்தது. அதன்படி ஜியோ இலவச சேவைகள் நேற்றுடன் அவகாசம் முடிவதாக இருந்தது.
இந்நிலையில், வாடிக்கையாளர்களின் நலனுக்காக வருகின்ற 15-ஆம் தேதி வரை ஜியோ ப்ரைம் உறுப்பினர் ஆகலாம் என்றும் ரூ.99 (ப்ரைம் உறுப்பினர்) மற்றும் ரூ.303 செலுத்தினால் (ஏப்.15) அடுத்த 3 மாதங்களுக்கு அளவற்ற இணைய தள வசதி, அழைப்புகளைப் பயன்படுத்தலாம் என்று ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதையடுத்து அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிரடியான சலுகைகள் வெளியிட்டுள்ளது. மாதத்திற்கு '249 ரூபாய்க்கு அன்லிமிடெட் பிராட்பேண்ட் ' திட்டத்தை இந்தியா முழுவதும் அறிமுகம் செய்துள்ளது. இதன்படி தினசரி 10 ஜிபி டேட்டா மற்றும் அளவில்லா இலவச அழைப்புகள் உள்ளிட்ட சலுகைகளைப் பெறலாம். அதுமட்டுமின்றி  தினசரி 10 ஜிபி டேட்டா 2 எம்பிபிஎஸ் வேகத்தில் உங்களுக்கு கிடைக்கும்.  இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை நீங்கள் எந்த நெட்வார்க்கிற்கு எவ்வளவு நேரம் பேசினாலும் இலவசம் தான். மேலும் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் இலவச அழைப்புகளை மேற்கொள்ளலாம்.


249 ரூபாய் பிராட்பேண்ட் திட்டத்தை  தேர்ந்தெடுத்தால்  ஒரு மாதத்திற்கு 300 ஜிபி டேட்டா என்ற அதிரடி அறிவிப்பை பிஎஸ்என்எல் வெளியிட்டுள்ளது.  இதற்கு புதிய பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் இணைப்பு வாங்கவேண்டும்.
இது தொடர்பான  முழுமையான தகவல்களை பெற 1800 345 1500. என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம். வயர்லைன் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பிஎஸ்என்எல் இந்த அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது.

அதிக பயன்பாடு ஆபத்து

By லோ. வேல்முருகன்  |   Published on : 04th April 2017 01:29 AM  | 

சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தங்களை காத்துக் கொள்ள மனிதர்கள் பல வழிமுறைகளை கையாளுவர். ஒரு சிலர் வெயில் காலம் தொடங்கியவுடனே மொட்டை மாடியில் மாலை வேளைகளில் இரண்டு மூன்று முறை தண்ணீர் தெளித்து பின்னர் படுத்து உறங்குவார்கள்.

ஒரு சிலர் வீட்டில் அனைத்து ஜன்னல்களையும் திறந்து விட்டு தூங்குவார்கள். சிலரோ இளநீர் உள்ளிட்டவைகளை அருந்தி தங்களது உடல் சூட்டை தணித்துக் கொள்வர். இதுபோன்று இயற்கை வழிமுறைகளைப் பின்பற்றி கோடை வெப்பத்தை சமாளித்தால், அதில் எந்த தவறும் இல்லை. நமது உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

ஆனால் இன்றைய நவீன உலகில் வீடுகள், அலுவலகங்கள், வங்கிகள், துணிக் கடைகள், உணவகங்கள், ஷாப்பிங் மால்கள், மருத்துவமனைகள் என எல்லா இடங்களிலும் குளிரூட்டிகளின் (ஏர் கண்டிஷனர்) பயன்பாடு அதிகரித்து வருகிறது.

அமெரிக்க பொறியாளர் வில்லிஸ் ஹேவிலேண்டு என்பவரால் 1902 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட குளிரூட்டியானது முதலில் ஜன்னல்களில் மாட்டி பயன்படுத்தும் வகையில் (விண்டோ ஏசி) இருந்தது.
இதையடுத்து 1950-களில் அமெரிக்கா போன்ற நாடுகளில் இதன் விற்பனை குடியிருப்பு வட்டாரங்களிலும் விரிவுபடுத்தப்பட்டது. பின்னர் நவீனமாக பல வடிவங்களில் வடிவமைக்கப்பட்டு சுவர்களை அலங்கரிக்கத் தொடங்கியது. ஸ்பிலிட் ஏசி, சென்ட்ரலைஸ்டு ஏசி, வாகனங்களில் பயன்படுத்தும் ஏசி என பல வகையாக குளிரூட்டிகள் தற்போது உள்ளன.

தொடக்கத்தில் கணினி போன்ற இயந்திரங்கள் அதிக சூடாவதை குறைப்பதற்காக குளிரூட்டி கல்லூரிகள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் பயன்படுத்த தொடங்கினர். பின்னர் அதுவே அனைத்து இடங்களையும் வியாபிக்கத் தொடங்கிவிட்டது.

கணினி போன்ற கருவிகளில் பயன்படுத்தப்படும் 'சிப்பு'கள் மிகவும் நுண்ணியவை. அவை அதிகமாக சூடேறினால் பழுதாகும் வாய்ப்பு அதிகம். இதன் காரணமாகத்தான் கணினிகள் குளிரூட்டப்பட்ட அறைகளில் வைத்து பயன்படுத்தப்பட்டன. நாளடைவில் அலுவலகங்களில் குளிரூட்டிகள் பயன்படுத்தத் தொடங்கினர்.

அலுவலகங்களில் குளிரூட்டிகள் பயன்படுத்தும்போது ஊழியர்கள் புத்துணர்வுடன் பணிபுரியும் சூழல் உண்டானது. பணிகள் தொய்வின்றி நடக்கவும், ஊழியர்கள் வசதியாக பணிபுரியவும் முடிகிறது என்பதால் அலுவலகங்களில் குளிரூட்டிகளைப் பயன்படுத்தத் தொடங்கினர்.
ஆனால் இன்று பெரும்பாலான மனிதர்கள் இயற்கை காற்றை சுவாசிக்காமல், குளிரூட்டப்பட்ட அறைகளுக்குள்ளேயே முடங்கி இருக்கிறார்கள். அதுவும் கோடை காலங்களில் குளிரூட்டிகளை அதிகமாகவே பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

இவ்வாறு அதிகரித்து வரும் குளிரூட்டிகளின் பயன்பாட்டால் மனிதர்களின் உடல் நலம் கெடுவதோடு மட்டுமல்லாமல், புவி வெப்பமயமாதலும் அதிகரித்து வருகிறது.

மின்விசிறிகளில் இருந்து வெளிவரும் காற்றானது அறையின் வெப்பநிலையை பொருத்தே இருக்கும். ஆனால் குளிரூட்டிகள் அவ்வாறு இல்லாமல் நமக்கு குளிர்ந்த காற்றை கொடுத்து அறையின் வெப்ப
நிலையை குறைக்கிறது. இதனால் நமக்கு பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன.

குளிரூட்டப்பட்ட அறையில் நீண்ட நேரம் இருப்பவர்களுக்கு உடல் நலக்குறைவு, சோர்வு, உலர்ந்த சருமம், சுவாசப் பிரச்னைகள், தலைவலி, குறைந்த ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் ஏற்படும்.
மேலும் ஒவ்வொரு கோடை காலத்திலும் வெப்பத்தின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் சுமார் 400 பேர் வரை உயிரிழப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு சிலர் கார்களில் ஏசியை போட்டு தூங்குவதை பழக்கமாகக் கொண்டுள்ளனர். அலுவலகம், ஷாப்பிங் போன்ற இடங்களுக்குச் செல்பவர்கள் வாகன நிறுத்தத்தில் கார்களை நிறுத்தி விட்டு, தூங்கும் தங்கள் குழந்தைகளை குளிரூட்டிகளை அணைக்காமல் காரிலேயே விட்டுச் செல்வர்.
அவ்வாறு விட்டுச் செல்லும் போது விஷவாயு தாக்கி குழந்தைகள் பாதிக்கப்படும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இதனால் நிபுணர்கள் கார்களில் குளிரூட்டிகளை போட்டுக் கொண்டு தூங்குவதை தவிர்க்க வேண்டும் எனக் கூறுகின்றனர்.

இயற்கையாக கிடைக்கும் காற்றுதான் மனிதர்களுக்கு ஆரோக்கியத்தை தரும். செயற்கையாக உண்டாக்கப்படும் காற்று ஆபத்தை தரும்.
குளிரூட்டப்பட்ட அறைகளில் சிறிது நேரம் இருந்தால் அதனால் எந்த தீங்கும் ஏற்படாது. முறையாக பராமரிக்கப்படாத குளிரூட்டிகளால் ஒவ்வாமை, ஆஸ்துமா, கண், மூக்கு, தொண்டைகளில் எரிச்சல் ஆகியவை ஏற்படலாம்.
எனவே குளிரூட்டிகளில் பயன்படுத்தப்படும் காற்று வடிகட்டிகளை (ஏர் பில்டர்) முறையான கால இடைவெளியில் சுத்தப்படுத்திட வேண்டும். குளிரூட்டிகள் பொருத்தப்பட்டிருக்கும் அறையின் ஜன்னல் கதவுகளை அவ்வப்போது திறந்து வைக்க வேண்டும்.

அவ்வாறு செய்வதன் மூலம் வெளிப்புறக் காற்று அறை முழுவதும் பரவி அறையில் காற்று மாசு குறையும்.

மேலும், பத்தாண்டுகளுக்கு ஒரு முறை உங்கள் பழைய குளிரூட்டியை மாற்றிவிட்டு புதிய குளிரூட்டியைப் பொருத்த வேண்டும்.
வெளியில் நிலவும் வெப்பநிலையை விட ஐந்து டிகிரி வித்தியாசம் இருக்கும் வகையில் குளிரூட்டிகளை பயன்படுத்த வேண்டுமென நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதுபோன்ற வழிமுறைகளை குளிரூட்டிகள் பயன்படுத்துபவர்கள் கடைபிடித்து நோய் தாக்கத்திலிருந்து தங்களை காத்துக்கொள்ளலாம்.

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...