Friday, April 7, 2017

HC: PG admission at Saveetha as per norms
Chennai:


TIMES NEWS NETWORK

Admission of 36 postgraduate medical students by Saveetha Medical University at Tandalam here was in accordance with norms, the Madras high court ruled on Friday .

But the court said the admissions would be subject to the result of a pending case.It gave the students liberty to apply for state counseling and directed the government to permit them to apply till April 11.

A division bench of Justice S Nagamuthu and Justice Anita Sumanth, noting the court was prima facie convinced that the admis sions were in accordance with the norms of National Board of Examinations and via NEET and the students' marks, said: “The admission of 36 students in the university will be subject to the result of the writ petition.“

The university admitted 36 students on February 23, as per norms issued by National Board of Examinations (NEET-PG 2017) after NBE results were declared in January 2017.

But MCI issued a notification on surrender of 50% of seats to the government and notified it on March 11.

The bench asked MCI why the regulation was belatedly notified.

QUOTE





 மாத தவணையில் வீட்டுமனைக்கு பணம் கட்டியோர்... பரிதவிப்பு!  ரியல் எஸ்டேட் முதலைகளிடம் சிக்கிய அப்பாவிகள்

விளைநிலங்களை வீட்டு மனைகளாக பதிவு செய்வதற்கு விதிக்கப்பட்ட நீதிமன்ற தடை உத்தரவால், சொந்த வீடு ஆசையில், மாத தவணையில், பல ஆயிரம் ரூபாய் கட்டிய, நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் கூலி தொழிலாளர்கள், மனையும் கிடைக்காமல், கட்டிய பணமும் கிடைக்காமல் ஏமாந்து நிற்கின்றனர்.சென்னை மாநகர பகுதியின் தற்போதைய மக்கள்தொகை, 75 லட்சம் பேர். இதில், 60 சதவீதம் பேர், பல்வேறு மாவட்டங்களில் இருந்து, பிழைப்புக்காக சென்னை வந்தவர்கள். அதிலும், தி.நகர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம் போன்ற வணிக பகுதிகளில், கடைகளில் விற்பனையாளராகவும், பிளாட்பாரங்களில் கடை வைத்தும், தினக்கூலி வேலை செய்து பிழைப்போர், 30 சதவீதம் பேர்.இவர்களது, அன்றாட வருமானம், அதிகபட்சம், 500 ரூபாய். ஆனால், சென்னையில் குடும்பத்துடன் வசிக்க, குறைந்தபட்சம், 6,000 ரூபாய் வாடகை தர வேண்டும். அரசு, 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கினாலும், வீட்டு உரிமையாளர்கள், அதற்கும், யூனிட் ஒன்றுக்கு, ஏழு ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றனர்

.பத்திரப்பதிவுவாடகைக்கும், மின் கட்டணத்திற்கும் பெரும் தொகையை செலவழித்துவிட்டு நிற்கும் இந்த அப்பாவி தினக்கூலி பணியாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர், சொந்த வீடு வாங்கும் ஆசையில், குருவி போல சேமித்து வைத்த பணத்தை, மாத தவணையாக கட்டி, சென்னைக்கு வெளியே செங்கல்பட்டு, மதுராந்தகம் பகுதியில், 600 - 1200 சதுரடி வரை வீட்டுமனை வாங்க ஆர்வம் காட்டினர்.அவர்களை குறி வைத்து, ரியல் எஸ்டேட் கும்பல், செங்கல்பட்டு, வாலாஜாபாத் போன்ற, சென்னையில் இருந்து, 60 கி.மீ., துாரத்தில் உள்ள பகுதிகளின் உட்புறங்களில், அடிமாட்டு விலைக்கு வாங்கிய நிலங்களை, பிளாட் போட்டு காண்பித்து, மாத தவணையை வசூலிக்க ஆரம்பித்தன.ஒரு மனைக்கு, 2,000 - 5000 ரூபாய் மாத தவணை வசூலிக்கப்பட்டது. மொத்தம், 20 முதல், 30 மாதம் வரை, இந்த மாத தவணையை செலுத்த வேண்டும். 'சிறுசிறுக பணம் கட்டினாலும், வீட்டு மனை சொந்தமாகிவிடும்' என்ற நினைப்பில், நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள், இந்த மாத தவணை வீட்டு மனை திட்டத்தில் பணம் கட்டிஉள்ளனர்

.இதுபோன்ற மாத தவணை திட்டத்தில் போடப்பட்ட பிளாட்டுக்கள் எல்லாமே, விளைநிலங்களாகவும், நஞ்சை நிலங்களாகவும் உள்ளவை தான். மாத தவணை முழுமையாக செலுத்திய பின்னரே, இந்த மனைகள் பத்திரப்பதிவு செய்து தரப்படும் என்பது, ரியல் எஸ்டேட் அதிபர்கள் வகுத்த வழிமுறை.

நீதிமன்ற உத்தரவுஆனால், வீட்டு மனையின் மதிப்பிற்கு, பாதி தொகையை, அப்பாவிகள் செலுத்திவிட்ட நிலையில், விளைநிலங்களை வீட்டு மனைகளாக பத்திரப்பதிவு செய்யக் கூடாது என, உயர் நீதிமன்றம் தடை உத்தரவு விதித்தது. இதனால் மாத தவணை கட்டுவதை, அப்பாவிகள் நிறுத்திவிட்டனர்.தாங்கள் கட்டிய பணத்தை திருப்பி தர, ரியல் எஸ்டேட் புரமோட்டர்களிடம் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், 'நீதிமன்ற தடை நீங்கியதும், மீதி பணத்தை கொடுத்து வீட்டு மனையை பத்திரப்பதிவு செய்து கொள்ள வேண்டும்; கட்டிய பணத்தை திருப்பி தர மாட்டோம்' என, புரமோட்டர்கள் கூறி வருகின்றனர்.ஏமாற்றம்இந்நிலையில், சமீபத்தில், ஏற்கனவே பதிவு செய்த மனைகளை, மறுபதிவு செய்யலாம் என்றும், முதல் பத்திரப்பதிவு மட்டும் செய்யக்கூடாது என்றும் நீதிமன்றம், மறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 இந்த உத்தரவு, அங்கீகாரமில்லாத மனைகளை வாங்கி, மறு விற்பனை செய்ய முடியாமல் தவித்தோர் வயிற்றில் பால் வார்த்தது போல இருந்தாலும், மாத தவணையில், வீட்டு மனை பெற, பணம் கட்டியோருக்கு ஏமாற்றமாகவே அமைந்துள்ளது.விளை நிலங்களை, வீட்டு மனைகளாக வாங்க வேண்டும் என்பது, கூலி தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் விருப்பம் இல்லை. கஷ்டப்பட்டு சம்பாதித்து கட்டிய பணம், திரும்ப கிடைத்தால் கூட போதும் என்ற நிலையே உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, யாரிடம் முறையிடுவது என தெரியாமல், அவர்கள் பரிதவித்து வருகின்றனர்.

- நமது நிருபர் -
 மனச்சோர்வு எனும் 'மாயக் கறுப்பாடு' : பொறுத்திரு மகிழ்ந்திருவென்றிடு! - இன்று உலக மனச்சோர்வு தினம்

மதுரை: உயிர்த்திருக்கும் நொடிவரை வாழ்க்கை ஒரு போராட்டக்களம் தான். மலர்ப்பாதையில் நடந்து செல்பவனுக்கு ரசிப்பதைதவிர வேறு என்ன வேலை. முட்பாதையை சுத்தம் செய்து தன்னை பயணிக்கச் செய்பவனுக்கே அனுபவம்ஆற்றலையும், அறிவையும் கொடுக்கும். தன்னை அறிவதே அறிவினம். தன்னை வெல்வதே மதியினம்.நெல்லின் பத்துமாத பொறுமை சோறாகிறது. மனிதனின் பத்துநொடி பொறுமை பேராகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் இந்தாண்டு நோய்க்கான தலைப்பு மனச்சோர்வு தினம்… சோர்வை விரட்டி மனதை சுகப்படுத்தும் வழிகளைச் சொல்கின்றனர், மனநல நிபுணர்கள்.

சோகங்கள் பொதுவானதுதான் : மனநல நிபுணர் கவிதாபென், மதுரை: சோகம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. ஒருநாள், இரண்டு நாளில் சரியாகிவிடும். சிலருக்கு 24 மணி நேரமும்
சிரிக்க, ரசிக்க முடியாமல், துாங்க முடியாமல் மனம் தவிப்பது போல தோன்றும். அதிகாலையில் எழுந்து உட்கார்ந்து கொள்வர். சாதாரண வேலை கூட சோர்வைத்தரும். தொட்டதற்கெல்லாம் அழுகை வரும். மனதில் பத்து கிலோ எடை வைத்தது போல பாரமாக இருக்கும். இவையெல்லாம் ஒன்றிரண்டு நாட்களில் ஆரம்பித்து, படிப்படியாக அதிலிருந்து வெளியேறி விடுவோம். இரண்டு வாரம் கடந்தும் வெளிவர முடியாவிட்டால் கட்டாயம் மருத்துவ கவுன்சிலிங் தேவை. மகப்பேறுக்கு பின்சிலருக்கு மனச்சோர்வு வந்து தன்னாலே சரியாகிவிடும். தைராய்டு ைஹப்போ தைராய்டிசம் இருந்தாலும் மனச்சோர்வு வரலாம். அதற்கு மருந்து அவசியம். மனச்சோர்வு அதிகமானால் 'சைக்கோசிஸ்' எனப்படும் நிலைக்கு சென்றுவிடுவர். தன்னாலே முணுமுணுத்துக் கொண்டே, மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டு, தன்னை கவனிக்காமல் கவிழ்ந்து உட்கார்ந்திருப்பர். படுக்கையை விட்டு எழுவதற்கு கூட தெம்பிருக்காது. அவர்களால் அந்த வேலையை செய்ய முடியவில்லை என்பதை உணர்ந்து, மருத்துவத்தின் மூலம் சரிப்படுத்த வேண்டும். ஐம்பது வயதுக்கு மேல் பெண்களுக்கு பிடிப்பில்லாத நிலை ஏற்படும். குழந்தைகள் திருமணம், படிப்பு என்ற நிலையில் வீட்டிலிருந்து வெளியேறிவிட அரவணைக்க ஆளில்லாத தனிமையும் மனச்சோர்வை ஏற்படுத்தும்.

'மூடு அவுட்' மாற்றுவது எப்படி : 'மூடு அவுட்' என்று அடிக்கடி சொல்லக் கேட்டிருப்போம். தினமும் அரைமணி நேரம் வாக்கிங், ஜாகிங், ஸ்கிப்பிங் செய்யலாம். பிடித்தமான டான்ஸ் ஆடலாம். எதுவும் தெரியாவிட்டால், வீட்டுப் படிக்கட்டுகளில் அடிக்கடி ஏறியிறங்கலாம். இதன்மூலம் உடலில் 'செரட்டோனின்' எனப்படும் 'நியூரோ டிரான்ஸ்மீட்டர்' சுரந்து மனச்சோர்வுக்கு மருந்தாகி விடும்.

சந்தோஷமான ஈடுபாடு : எதெல்லாம் மனதுக்கு சந்தோஷம் தருகிறதோ அதைச் செய்யலாம். ஒரு சிலருக்கு செடிகள் வளர்ப்பில் ஈடுபாடு இருக்கலாம். ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்படலாம். இசையை ரசிக்கலாம். வளர்ப்புப் பிராணிகளிடம் ஆர்வம்காட்டலாம்.தொடர்புக்கு
rmjarunkumar@gmail.com
மதுரை அரசு மருத்துவமனை
மனநலத்துறை தலைவர்

டி. குமணன் : ஏமாற்றம் வந்தால் சிறிதுநேரத்திற்கு 'மூடு' மாறும், இயற்கையாகவே அது
சரியாகிவிடும். எந்த காரணமும் இல்லாமல் யாரையும் இந்நோய் பாதிக்கலாம். மூளையின்
வித்தியாசமான செயல்பாடுகள் இயற்கை, செயற்கை மாற்றங்கள் மூலம் உருவாகலாம். மரபணு காரணமாகவும் இருக்கலாம். தேவையற்ற மருந்துகளை மருத்துவர்கள் அனுமதியின்றி சாப்பிட்டால் கூட மனச்சோர்வு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.

காது கொடுத்து கேளுங்கள் : தற்கொலை செய்யப்போவதாக சொன்னால் காது கொடுத்து கேளுங்கள். வாழ்ந்து என்ன பிரயோஜனம் என ஒருவர் பேச ஆரம்பித்தாலே உடனடியாக கவனிக்க வேண்டும். இந்த சூழ்நிலையில் அவர்கள் எடுக்கும் அனைத்து முடிவுகளும் தவறானதாக இருக்கும். இந்த எண்ணம் வந்துவிட்டால் நண்பர்களை, சொந்தங்களை, பெற்றோர்களை பார்த்துவிட்டு வருவர். சொத்துக்களை செட்டில் செய்வர். தனியாக இருக்கும் ஐந்து நிமிடங்களில் தான் தற்கொலை நிகழ்கிறது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நல்ல வேலை பார்த்தால் ராஜினாமா செய்வர். அவர்களின் முடிவெடுக்கும் திறனை கட்டுப்படுத்தி மருத்துவரிடம் அழைத்துச் சென்றால் எளிதாக குணப்படுத்தலாம். சாதாரண மருந்துகளின் மூலம் இரண்டாவது வாரத்திலேயே குணப்படுத்தி விடலாம். அதிகபட்சமாக 6 முதல் 9 மாதங்கள்வரை மருந்துகளை எடுத்தால் போதும்.

ஓடி ஓடி உழைக்கணுமா : நோயை வராமல் தடுக்க முடியாது. மனச்சோர்வு உருவாகும் சூழ்நிலைகளைத் தவிர்க்கலாம். பசியின்மை, துாக்கமின்மை இரண்டும் நாமாக உருவாக்குவது தான். உதாரணத்திற்கு ஓய்வின்றி அதிகமாக உழைப்பது, எல்லா வேலைகளையும் தானே செய்வது,
ஒரே நேரத்தில் அதிகவேலைகளை செய்வது, துாக்கத்தை அடிக்கடி தவிர்ப்பது, ரிஸ்க் எடுப்பது... இவற்றையெல்லாம்நாம் தவிர்த்து விடலாம். உடலுக்கு தேவையான துாக்கத்தை உருவாக்க வேண்டும். வேலை பார்க்கும் இடங்களில் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடாமல், நட்பு பாராட்டினால் மனச்சோர்வு வராது. மனச்சோர்வுக்கு ஆல்கஹால் தீர்வாகாது.
ஆண்கள் வேலையில்லாதநிலை, பணி ஓய்வு நிலையில் தனிமையும், விரக்தியும் ஏற்படும். ரிடையர்மென்ட்டுக்கு பின் தங்களை ஏதாவது ஒரு வேலையில் ஈடுபாட்டுடன் வைத்துக் கொள்ள வேண்டும்.

தொடர்புக்கு
kums2sarad@gmail.com
சொத்து குவிப்பு வழக்கில் 'மாஜி' எம்.எல்.ஏ.,வுக்கு சிறை
vertisement

பதிவு செய்த நாள்

06 ஏப்
2017
23:04
திருச்சி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், முன்னாள், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரின்ஸ் தங்கவேலுக்கு, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், இரண்டாண்டு சிறை தண்டனை விதித்தது. தமிழகத்தில், 1991 - 96 வரையிலான, அ.தி.மு.க., ஆட்சியில், முசிறி தொகுதி, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் பிரின்ஸ் தங்கவேல், 53. இவர், பதவி காலத்தில், 20.80 லட்சம் ரூபாய் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, 1997ல் திருச்சி ஊழல் தடுப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதன் விசாரணை, திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில், 44 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்; 88 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

ஆவணங்கள் மற்றும் சாட்சிகள் அடிப்படையில் நேற்று, ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதி சாந்தி தீர்ப்பளித்தார். இதில், முன்னாள், எம்.எல்.ஏ., பிரின்ஸ் தங்கவேலுக்கு, இரண்டு ஆண்டு சிறை தண்டனையும், 3,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. தண்டனை, மூன்று ஆண்டுக்கு குறைவு என்பதால், தண்டனை பெற்றவர் மேல்முறையீடு செய்ய வசதியாக, ஒரு மாதத்துக்கு தீர்ப்பை நீதிமன்றம் ஒத்தி வைத்தது. இதையடுத்து, பிரின்ஸ் தங்கவேல் விடுவிக்கப்பட்டார். இவர், அ.தி.மு.க.,வின், ஓ.பி.எஸ்., அணியில் உள்ளார்.
ரயில்வே ஸ்டேஷன் ஜப்தி : கரூரில் சலசலப்பு




கரூர்: கரூர் - சேலம் அகல ரயில் பாதை பணி, 1999ல் துவங்கப்பட்டது. கரூர் அருகில் உள்ள ஆத்துார், காதப்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, 325 பேரின் நிலம், ரயில் பாதைக்காக ஆர்ஜிதம் செய்யப்பட்டது. இவர்கள், அரசு வழங்கிய இழப்பீடு குறைவாக உள்ளதாக கூறி, கரூர் சார்பு நீதிமன்றத்தில், 2002ல், வழக்கு தொடர்ந்தனர். விசாரித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க, 2012ல், உத்தரவிட்டது. நிலம் அளித்த, 325 பேரில், 310 பேருக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது.

ஆனால்,   ௫ கோடி ரூபாய் இழப்பீடு கிடைக்காத, ஆறுபேர் மேல்முறையீடு செய்தனர். இழப்பீடு வழங்காததால், கரூர் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள, கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை, ஜப்தி செய்ய, கரூர் சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.இதன்படி, நேற்று பகல், 11:30 மணிக்கு நீதிமன்ற அமீனாக்கள் மற்றும் பாதிக்கப்பட்டோர், கரூர் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய வந்தனர். ரயில் நிலைய மேலாளர் சுரேந்தர்பாபு, உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.'வரும், 27ம் தேதிக்குள் இழப்பீடு தொகை செலுத்த, நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது' என்ற தகவல், அமீனாக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதன்பின், அவர்கள் திரும்பி சென்றனர்.
'நீட்' தேர்வு கட்டாயமானதால், தமிழகத்தில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள், மீண்டும், பிளஸ் ௧ பாடங்களை படித்து, பயிற்சியை துவக்கி உள்ளனர்.

அகில இந்திய அளவில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, 'நீட்' என்ற, தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வில், தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாகும். தமிழகத்தில், ௨௦௧௬ல், தனியார் மருத்துவ கல்லுாரிகளில் சேர மட்டும், இந்தத் தேர்வு கட்டாயமாக இருந்தது. இந்த ஆண்டு, அனைத்து கல்லுாரிகளுக்கும் கட்டாயமாகி உள்ளது.'நீட்' தேர்வுக்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, நேற்று முடிந்தது.தமிழக மாணவர்களுக்கு, இந்தத் தேர்வில் விலக்கு கேட்டு, சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. அதற்கு, மத்திய அரசு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால், தமிழக அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளை நம்பாமல், மாணவர்கள், 'நீட்' தேர்வுக்கு தயாராகின்றனர்.

பெரும்பாலான தனியார் பள்ளிகள், நேரடியாக பயிற்சி மையங்களை அணுகி, 'நீட்' தேர்வுக்கு, சிறப்பு பயிற்சி அளித்து வருகின்றன. சிறப்பு ஏற்பாடு செய்யாத பள்ளிகளின் மாணவர்கள், தனியார் பயிற்சி மையங்களில், தாங்களே நேரடியாக சேர்ந்து, பயிற்சி பெறுகின்றனர். 'நீட்' தேர்வில், பிளஸ் 1 பாடங்களில் இருந்து, 50 சதவீத கேள்விகள் இடம்பெறும் என்பதால், அந்த பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது. அதிக மதிப்பெண்ணை குறிக்கோளாக கொண்டு, பாடம் நடத்தும் பள்ளிகள், 10ம் வகுப்புக்கு பின், இரண்டு ஆண்டுகளும், பிளஸ் 2 பாடங்களையே நடத்தி வருகின்றன. இந்த பள்ளிகளில், பாடங்களை வரிக்கு வரி மனப்பாடம் செய்த மாணவர்கள், 'நீட்' தேர்வில் ஜொலிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே, தமிழகத்தில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அதற்கு முந்தைய, பிளஸ் ௧ பாடத்தை, தற்போது படிக்க துவங்கி உள்ளனர்.இது, தமிழக கல்வித்துறையின் செயல்பாடுகளும், திட்டமிடலும், பள்ளிகளை நடத்தும் விதமும், எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை காட்டுவதாக, கல்வியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

NEWS TODAY 14.02.2026