Saturday, April 8, 2017

 நீட்' தேர்வுக்கு பயிற்சி பெறுவது எங்கே? : அரசு பள்ளி மாணவர்கள் தவிப்பு

'நீட்' தேர்வுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், எங்கே பயிற்சி பெறுவது என தெரியாமல், அரசு பள்ளி மாணவர்கள் தவித்து வருகின்றனர்.

வரும் கல்வி ஆண்டில், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேர, தேசிய அளவிலான, 'நீட்' தேர்வில், தேர்ச்சி பெறுவது கட்டாயம். இந்த தேர்வு, அனைத்து மாநிலங்களிலும், மே, 7ல் நடக்கிறது. இதற்கு, விண்ணப்பிப்பதற்கான அவகாசம், நேற்று முன்தினம் முடிந்தது. இந்நிலையில், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், பல்வேறு தனியார் மையங்களில், 'நீட்' தேர்வுக்கான பயிற்சியை துவக்கி உள்ளனர். ஒரு மாத பயிற்சிக்கு, 20 ஆயிரம் முதல், 35 ஆயிரம் ரூபாய் வரை, கட்டணம் வசூலிக்கப் படுகிறது.
தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் படிக்கும், நகர, கிராமப்புற மாணவர்கள் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுமா என, தவித்து வருகின்றனர்.

இது குறித்து பெற்றோர் கூறியதாவது: 'நீட்' தேர்வு தமிழகத்துக்கு வராது என, ஆளும் கட்சி அமைச்சர்கள் கூறி வந்தனர். ஆனால், இதுவரை அதற்கான சட்ட அனுமதியை பெறவில்லை. அதை நம்பி, 'நீட்' தேர்வுக்கு பயிற்சி எடுக்கவில்லை. எனவே, அரசு பள்ளி மாணவர்கள் அதிக சிக்கலுக்கு ஆளாகியுள்ளனர். பள்ளிக்கல்வித் துறையோ, 'நீட்' தேர்வுக்கு பொறுப்பான சுகாதாரத் துறையோ, அரசு பள்ளி மாணவர்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்கவில்லை. 'நீட்' தேர்வுக்கு தயாராக, தமிழக அரசு பயிற்சி தராததால், ஏழை மாணவர்களின், டாக்டராகும் கனவு நிறைவேறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

'நீட்' விண்ணப்பத்தில் பிழையா? : ஏப்., 12 முதல் திருத்தலாம் - 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்தோர், சுய விபரங்களை, ஏப்., 12 முதல் திருத்தம் செய்ய வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு, இந்த ஆண்டு முதல், தேசிய அளவிலான, 'நீட்' தேர்வு கட்டாயமாகி உள்ளது. இதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, ஏப்., 5ல் முடிந்தது. இந்நிலையில், விண்ணப்பித்தோரின் சுய விபரங்கள் மற்றும் கூடுதலாக சேர்க்க வேண்டிய விபரங்களை சரி செய்ய, சி.பி.எஸ்.இ., அவகாசம் வழங்க முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு, ஏப்., 12ல் வெளியாகும் என, அதிகாரிகள் கூறினர்.

- நமது நிருபர் -

Friday, April 7, 2017

 Over 20 engineering colleges apply for closure

 State government yet to give its nod, will process applications only after institutions follow norms regarding transfer of students

With the number of seats in undergraduate engineering degree courses far exceeding the demand in the State, managements of the self-financing colleges are increasingly finding it financially unviable to run the institutions.

According to sources in the All India Council for Technical Education (AICTE), the promoters of at least 22 private engineering colleges have sought permission to close down their institutions. The State Government is yet to give its nod considering the fact that the closure would affect students of these colleges.

AICTE officials said that private colleges across the country have been applying for closure over the past two years.

“Incidentally, in the academic year 2016-17, as many as 22 engineering colleges and one architectural college in Tamil Nadu did not have a single enrollment,” a Higher Education Department official told The Hindu .

AICTE officials did not reveal if any of these institutions figured in the list of colleges that have applied for closure.

Authorities at Anna University however said only three institutions had applied for closure. “Of these, we permitted one college to close down as it has already transferred its students to other institutions,” an official said.

Many engineering colleges are also up for sale. A search on Google throws up links where colleges have been put up for sale with a price tag varying between Rs. 25 crore and Rs. 300 crore. Some of these institutions are located off Chennai, Madurai, Coimbatore and Tiruchi.
Advertisers whom this correspondent contacted refused to reveal the colleges names.
“We will ensure that the rights of the institution or Trust (that administers the college) are transferred without disturbing its functioning,” an advertiser said.
Owners look elsewhere

Some of the consultants/brokers this reporter spoke to candidly admitted that the owners/trustees wanted to diversify into other businesses or expand their existing ones.

According to data accessed from the Directorate of Technical Education, last year, only 52% of B.E./B. Tech seats were filled in self-financing engineering colleges. Even government, aided and Anna University’s constituent colleges managed to fill only around 82% seats.
“Only 1,34,994 candidates applied for admission through single-window counselling for the 2,77,061 seats in 2016-17,” an official said.

According to a conservative estimate by engineering educators, only the top 200 colleges managed to fill all their seats in various departments.
According to one educator, in 55 colleges, less than 100 students were admitted in the last two years.
Officials said it was not easy to shut down a college. At best, the State government and the AICTE would only allow partial closure or accept the college’s decision to not admit students in the future.

“This was done to enable students currently enrolled in the institution to complete their coursework,” an official said.

If a college management decides to declare inability to pay salaries to its staff, then it must apply for a no-objection certificate to Anna University, the affiliating body.
The onus is on the colleges to transfer the students to other institutions. Only when the university is satisfied that the college has followed the norms will the request for closure be processed.
×
College girl beaten to death by parents
Ballari:
TNN 
 


In a love story which ended in tragedy, a 19-year-old girl of Hampasagara village was allegedly killed by her parents on March 24. Reshma Bhanu's family objected to her relationship with K Nagaraj whom she met at a summer camp last year at Nandi PU College.
  On March 24, Nagaraj went to her house but her family assaulted him. Reshma'sangry parents thrashed him using iron rods and wooden sticks. He was severely njured and Reshma rushed to protect him. Reshma was brutally beaten up too and died on the spot. Her shocked parents tried to cover up the crime.


HC: PG admission at Saveetha as per norms
Chennai:


TIMES NEWS NETWORK

Admission of 36 postgraduate medical students by Saveetha Medical University at Tandalam here was in accordance with norms, the Madras high court ruled on Friday .

But the court said the admissions would be subject to the result of a pending case.It gave the students liberty to apply for state counseling and directed the government to permit them to apply till April 11.

A division bench of Justice S Nagamuthu and Justice Anita Sumanth, noting the court was prima facie convinced that the admis sions were in accordance with the norms of National Board of Examinations and via NEET and the students' marks, said: “The admission of 36 students in the university will be subject to the result of the writ petition.“

The university admitted 36 students on February 23, as per norms issued by National Board of Examinations (NEET-PG 2017) after NBE results were declared in January 2017.

But MCI issued a notification on surrender of 50% of seats to the government and notified it on March 11.

The bench asked MCI why the regulation was belatedly notified.

QUOTE





 மாத தவணையில் வீட்டுமனைக்கு பணம் கட்டியோர்... பரிதவிப்பு!  ரியல் எஸ்டேட் முதலைகளிடம் சிக்கிய அப்பாவிகள்

விளைநிலங்களை வீட்டு மனைகளாக பதிவு செய்வதற்கு விதிக்கப்பட்ட நீதிமன்ற தடை உத்தரவால், சொந்த வீடு ஆசையில், மாத தவணையில், பல ஆயிரம் ரூபாய் கட்டிய, நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் கூலி தொழிலாளர்கள், மனையும் கிடைக்காமல், கட்டிய பணமும் கிடைக்காமல் ஏமாந்து நிற்கின்றனர்.சென்னை மாநகர பகுதியின் தற்போதைய மக்கள்தொகை, 75 லட்சம் பேர். இதில், 60 சதவீதம் பேர், பல்வேறு மாவட்டங்களில் இருந்து, பிழைப்புக்காக சென்னை வந்தவர்கள். அதிலும், தி.நகர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம் போன்ற வணிக பகுதிகளில், கடைகளில் விற்பனையாளராகவும், பிளாட்பாரங்களில் கடை வைத்தும், தினக்கூலி வேலை செய்து பிழைப்போர், 30 சதவீதம் பேர்.இவர்களது, அன்றாட வருமானம், அதிகபட்சம், 500 ரூபாய். ஆனால், சென்னையில் குடும்பத்துடன் வசிக்க, குறைந்தபட்சம், 6,000 ரூபாய் வாடகை தர வேண்டும். அரசு, 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கினாலும், வீட்டு உரிமையாளர்கள், அதற்கும், யூனிட் ஒன்றுக்கு, ஏழு ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றனர்

.பத்திரப்பதிவுவாடகைக்கும், மின் கட்டணத்திற்கும் பெரும் தொகையை செலவழித்துவிட்டு நிற்கும் இந்த அப்பாவி தினக்கூலி பணியாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர், சொந்த வீடு வாங்கும் ஆசையில், குருவி போல சேமித்து வைத்த பணத்தை, மாத தவணையாக கட்டி, சென்னைக்கு வெளியே செங்கல்பட்டு, மதுராந்தகம் பகுதியில், 600 - 1200 சதுரடி வரை வீட்டுமனை வாங்க ஆர்வம் காட்டினர்.அவர்களை குறி வைத்து, ரியல் எஸ்டேட் கும்பல், செங்கல்பட்டு, வாலாஜாபாத் போன்ற, சென்னையில் இருந்து, 60 கி.மீ., துாரத்தில் உள்ள பகுதிகளின் உட்புறங்களில், அடிமாட்டு விலைக்கு வாங்கிய நிலங்களை, பிளாட் போட்டு காண்பித்து, மாத தவணையை வசூலிக்க ஆரம்பித்தன.ஒரு மனைக்கு, 2,000 - 5000 ரூபாய் மாத தவணை வசூலிக்கப்பட்டது. மொத்தம், 20 முதல், 30 மாதம் வரை, இந்த மாத தவணையை செலுத்த வேண்டும். 'சிறுசிறுக பணம் கட்டினாலும், வீட்டு மனை சொந்தமாகிவிடும்' என்ற நினைப்பில், நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள், இந்த மாத தவணை வீட்டு மனை திட்டத்தில் பணம் கட்டிஉள்ளனர்

.இதுபோன்ற மாத தவணை திட்டத்தில் போடப்பட்ட பிளாட்டுக்கள் எல்லாமே, விளைநிலங்களாகவும், நஞ்சை நிலங்களாகவும் உள்ளவை தான். மாத தவணை முழுமையாக செலுத்திய பின்னரே, இந்த மனைகள் பத்திரப்பதிவு செய்து தரப்படும் என்பது, ரியல் எஸ்டேட் அதிபர்கள் வகுத்த வழிமுறை.

நீதிமன்ற உத்தரவுஆனால், வீட்டு மனையின் மதிப்பிற்கு, பாதி தொகையை, அப்பாவிகள் செலுத்திவிட்ட நிலையில், விளைநிலங்களை வீட்டு மனைகளாக பத்திரப்பதிவு செய்யக் கூடாது என, உயர் நீதிமன்றம் தடை உத்தரவு விதித்தது. இதனால் மாத தவணை கட்டுவதை, அப்பாவிகள் நிறுத்திவிட்டனர்.தாங்கள் கட்டிய பணத்தை திருப்பி தர, ரியல் எஸ்டேட் புரமோட்டர்களிடம் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், 'நீதிமன்ற தடை நீங்கியதும், மீதி பணத்தை கொடுத்து வீட்டு மனையை பத்திரப்பதிவு செய்து கொள்ள வேண்டும்; கட்டிய பணத்தை திருப்பி தர மாட்டோம்' என, புரமோட்டர்கள் கூறி வருகின்றனர்.ஏமாற்றம்இந்நிலையில், சமீபத்தில், ஏற்கனவே பதிவு செய்த மனைகளை, மறுபதிவு செய்யலாம் என்றும், முதல் பத்திரப்பதிவு மட்டும் செய்யக்கூடாது என்றும் நீதிமன்றம், மறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 இந்த உத்தரவு, அங்கீகாரமில்லாத மனைகளை வாங்கி, மறு விற்பனை செய்ய முடியாமல் தவித்தோர் வயிற்றில் பால் வார்த்தது போல இருந்தாலும், மாத தவணையில், வீட்டு மனை பெற, பணம் கட்டியோருக்கு ஏமாற்றமாகவே அமைந்துள்ளது.விளை நிலங்களை, வீட்டு மனைகளாக வாங்க வேண்டும் என்பது, கூலி தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் விருப்பம் இல்லை. கஷ்டப்பட்டு சம்பாதித்து கட்டிய பணம், திரும்ப கிடைத்தால் கூட போதும் என்ற நிலையே உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, யாரிடம் முறையிடுவது என தெரியாமல், அவர்கள் பரிதவித்து வருகின்றனர்.

- நமது நிருபர் -
 மனச்சோர்வு எனும் 'மாயக் கறுப்பாடு' : பொறுத்திரு மகிழ்ந்திருவென்றிடு! - இன்று உலக மனச்சோர்வு தினம்

மதுரை: உயிர்த்திருக்கும் நொடிவரை வாழ்க்கை ஒரு போராட்டக்களம் தான். மலர்ப்பாதையில் நடந்து செல்பவனுக்கு ரசிப்பதைதவிர வேறு என்ன வேலை. முட்பாதையை சுத்தம் செய்து தன்னை பயணிக்கச் செய்பவனுக்கே அனுபவம்ஆற்றலையும், அறிவையும் கொடுக்கும். தன்னை அறிவதே அறிவினம். தன்னை வெல்வதே மதியினம்.நெல்லின் பத்துமாத பொறுமை சோறாகிறது. மனிதனின் பத்துநொடி பொறுமை பேராகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் இந்தாண்டு நோய்க்கான தலைப்பு மனச்சோர்வு தினம்… சோர்வை விரட்டி மனதை சுகப்படுத்தும் வழிகளைச் சொல்கின்றனர், மனநல நிபுணர்கள்.

சோகங்கள் பொதுவானதுதான் : மனநல நிபுணர் கவிதாபென், மதுரை: சோகம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. ஒருநாள், இரண்டு நாளில் சரியாகிவிடும். சிலருக்கு 24 மணி நேரமும்
சிரிக்க, ரசிக்க முடியாமல், துாங்க முடியாமல் மனம் தவிப்பது போல தோன்றும். அதிகாலையில் எழுந்து உட்கார்ந்து கொள்வர். சாதாரண வேலை கூட சோர்வைத்தரும். தொட்டதற்கெல்லாம் அழுகை வரும். மனதில் பத்து கிலோ எடை வைத்தது போல பாரமாக இருக்கும். இவையெல்லாம் ஒன்றிரண்டு நாட்களில் ஆரம்பித்து, படிப்படியாக அதிலிருந்து வெளியேறி விடுவோம். இரண்டு வாரம் கடந்தும் வெளிவர முடியாவிட்டால் கட்டாயம் மருத்துவ கவுன்சிலிங் தேவை. மகப்பேறுக்கு பின்சிலருக்கு மனச்சோர்வு வந்து தன்னாலே சரியாகிவிடும். தைராய்டு ைஹப்போ தைராய்டிசம் இருந்தாலும் மனச்சோர்வு வரலாம். அதற்கு மருந்து அவசியம். மனச்சோர்வு அதிகமானால் 'சைக்கோசிஸ்' எனப்படும் நிலைக்கு சென்றுவிடுவர். தன்னாலே முணுமுணுத்துக் கொண்டே, மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டு, தன்னை கவனிக்காமல் கவிழ்ந்து உட்கார்ந்திருப்பர். படுக்கையை விட்டு எழுவதற்கு கூட தெம்பிருக்காது. அவர்களால் அந்த வேலையை செய்ய முடியவில்லை என்பதை உணர்ந்து, மருத்துவத்தின் மூலம் சரிப்படுத்த வேண்டும். ஐம்பது வயதுக்கு மேல் பெண்களுக்கு பிடிப்பில்லாத நிலை ஏற்படும். குழந்தைகள் திருமணம், படிப்பு என்ற நிலையில் வீட்டிலிருந்து வெளியேறிவிட அரவணைக்க ஆளில்லாத தனிமையும் மனச்சோர்வை ஏற்படுத்தும்.

'மூடு அவுட்' மாற்றுவது எப்படி : 'மூடு அவுட்' என்று அடிக்கடி சொல்லக் கேட்டிருப்போம். தினமும் அரைமணி நேரம் வாக்கிங், ஜாகிங், ஸ்கிப்பிங் செய்யலாம். பிடித்தமான டான்ஸ் ஆடலாம். எதுவும் தெரியாவிட்டால், வீட்டுப் படிக்கட்டுகளில் அடிக்கடி ஏறியிறங்கலாம். இதன்மூலம் உடலில் 'செரட்டோனின்' எனப்படும் 'நியூரோ டிரான்ஸ்மீட்டர்' சுரந்து மனச்சோர்வுக்கு மருந்தாகி விடும்.

சந்தோஷமான ஈடுபாடு : எதெல்லாம் மனதுக்கு சந்தோஷம் தருகிறதோ அதைச் செய்யலாம். ஒரு சிலருக்கு செடிகள் வளர்ப்பில் ஈடுபாடு இருக்கலாம். ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்படலாம். இசையை ரசிக்கலாம். வளர்ப்புப் பிராணிகளிடம் ஆர்வம்காட்டலாம்.தொடர்புக்கு
rmjarunkumar@gmail.com
மதுரை அரசு மருத்துவமனை
மனநலத்துறை தலைவர்

டி. குமணன் : ஏமாற்றம் வந்தால் சிறிதுநேரத்திற்கு 'மூடு' மாறும், இயற்கையாகவே அது
சரியாகிவிடும். எந்த காரணமும் இல்லாமல் யாரையும் இந்நோய் பாதிக்கலாம். மூளையின்
வித்தியாசமான செயல்பாடுகள் இயற்கை, செயற்கை மாற்றங்கள் மூலம் உருவாகலாம். மரபணு காரணமாகவும் இருக்கலாம். தேவையற்ற மருந்துகளை மருத்துவர்கள் அனுமதியின்றி சாப்பிட்டால் கூட மனச்சோர்வு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.

காது கொடுத்து கேளுங்கள் : தற்கொலை செய்யப்போவதாக சொன்னால் காது கொடுத்து கேளுங்கள். வாழ்ந்து என்ன பிரயோஜனம் என ஒருவர் பேச ஆரம்பித்தாலே உடனடியாக கவனிக்க வேண்டும். இந்த சூழ்நிலையில் அவர்கள் எடுக்கும் அனைத்து முடிவுகளும் தவறானதாக இருக்கும். இந்த எண்ணம் வந்துவிட்டால் நண்பர்களை, சொந்தங்களை, பெற்றோர்களை பார்த்துவிட்டு வருவர். சொத்துக்களை செட்டில் செய்வர். தனியாக இருக்கும் ஐந்து நிமிடங்களில் தான் தற்கொலை நிகழ்கிறது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நல்ல வேலை பார்த்தால் ராஜினாமா செய்வர். அவர்களின் முடிவெடுக்கும் திறனை கட்டுப்படுத்தி மருத்துவரிடம் அழைத்துச் சென்றால் எளிதாக குணப்படுத்தலாம். சாதாரண மருந்துகளின் மூலம் இரண்டாவது வாரத்திலேயே குணப்படுத்தி விடலாம். அதிகபட்சமாக 6 முதல் 9 மாதங்கள்வரை மருந்துகளை எடுத்தால் போதும்.

ஓடி ஓடி உழைக்கணுமா : நோயை வராமல் தடுக்க முடியாது. மனச்சோர்வு உருவாகும் சூழ்நிலைகளைத் தவிர்க்கலாம். பசியின்மை, துாக்கமின்மை இரண்டும் நாமாக உருவாக்குவது தான். உதாரணத்திற்கு ஓய்வின்றி அதிகமாக உழைப்பது, எல்லா வேலைகளையும் தானே செய்வது,
ஒரே நேரத்தில் அதிகவேலைகளை செய்வது, துாக்கத்தை அடிக்கடி தவிர்ப்பது, ரிஸ்க் எடுப்பது... இவற்றையெல்லாம்நாம் தவிர்த்து விடலாம். உடலுக்கு தேவையான துாக்கத்தை உருவாக்க வேண்டும். வேலை பார்க்கும் இடங்களில் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடாமல், நட்பு பாராட்டினால் மனச்சோர்வு வராது. மனச்சோர்வுக்கு ஆல்கஹால் தீர்வாகாது.
ஆண்கள் வேலையில்லாதநிலை, பணி ஓய்வு நிலையில் தனிமையும், விரக்தியும் ஏற்படும். ரிடையர்மென்ட்டுக்கு பின் தங்களை ஏதாவது ஒரு வேலையில் ஈடுபாட்டுடன் வைத்துக் கொள்ள வேண்டும்.

தொடர்புக்கு
kums2sarad@gmail.com

ரகசியம் காப்போம்!

ரகசியம் காப்போம்! ரகசியங்களை பொது வெளியில் அல்லது மறைமுகமாக பிறருடன் பகிர்ந்து கொள்வது புதிதல்ல, புதிரல்ல. தினமணி செய்திச் சேவை Updated on: ...