Saturday, April 8, 2017


 பாதி 'டேங்க்' பெட்ரோல் போதும் : எண்ணெய் நிறுவனங்கள் பிரசாரம்

இரு சக்கர வாகனங்களில், தீ விபத்து ஏற்படுவதை தவிர்க்க, எண்ணெய் நிறுவனங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. கார், மோட்டார் பைக் உள்ளிட்ட வாகனங்களில் தீ விபத்து ஏற்படுவது, சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் டேங்க் வெடித்து, விபத்தும், அதனால் உயிரிழப்பும் நேரிடுகிறது.இந்தியன் ஆயில் நிறுவனத்தினர், பெட்ரோல் பங்க்குகளில், விழிப்புணர்வு நோட்டீஸ் ஒட்டி வைத்துள்ளனர். அதில், 'வானிலையில் நிலவும், அதிக வெப்பத்தால், வாகனங்களில் பெட்ரோல் டேங்க் வெடிக்கக் கூடிய அபாயம் உள்ளது. பெட்ரோல் டேங்குகளை முழுவதுமாக நிரப்பும் போது, அதனுள், காற்று சுழற்சிக்கு இடமில்லாமல், பெட்ரோல் சூடாகி வெடிக்கும் அபாயம் ஏற்படுகிறது. எனவே, பெட்ரோல் டேங்கில் பாதியளவு, பெட்ரோல் நிரப்பினால் போதும்' என, கூறப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -

 குற்ற வழக்கில் பெயர் சேர்ப்பு - மாற்றத்துடன் பாஸ்போர்ட் வழங்கலாமா : உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: பாஸ்போர்ட்டில் சில மாற்றம் செய்து வழங்குவது தொடர்பான வழக்கில், 'குற்றவழக்கு (எப்.ஐ.ஆர்.,) பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதற்காக மட்டும், குற்றவியல் நடவடிக்கை நிலுவையில் உள்ளது எனக்கூற முடியாது. மனுவை பாஸ்போர்ட் அதிகாரி சட்டத்திற்குட்பட்டு பரிசீலித்து, தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

துாத்துக்குடி அப்துல் ரசீக் தாக்கல் செய்த மனு: எனக்கு 2012 ல் பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. பஹ்ரைனில் வேலை செய்தேன். பின் திருமணம் நடந்தது. நான் திருமணம் ஆனவர் என்ற தகுதி நிலையை பாஸ்போர்ட்டில் பதிவு செய்து வழங்கக்கோரி, மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரியிடம் விண்ணப்பித்தேன். குடும்ப வன்முறைச் சட்டத்தில் மனைவி புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மண்டல பாஸ்போர்ட் அதிகாரி,'உங்கள் மீது குற்ற வழக்கு நிலுவையில் உள்ளதா?,' என விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பினார். இல்லை என பதில் அளித்தேன். எனது மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அப்துல் ரசீக் மனு செய்திருந்தார்.

நீதிபதி வி.பார்த்திபன் உத்தரவு: குற்றவழக்கு (எப்.ஐ.ஆர்.,) பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதற்காக மட்டும், அவர் மீது குற்றவியல் நடவடிக்கை நிலுவையில் உள்ளது எனக்கூற முடியாது. போலீசாரின் விசாரணை முடிந்து, கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த பின், வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாதவரை, குற்றவியல் வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பதாக கருத முடியாது என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. அது மனுதாரர் விவகாரத்தில் பொருந்தும்.சட்டத்திற்குட்பட்டு, தகுதி அடிப்படையில் மனுவை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றார்.
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த வருமானவரி சோதனை நிறைவு

சென்னை: அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் 22 மணி நேரமாக நடந்த வருமானவரி சோதனை நிறைவு பெற்றது. அரசியல் உள்நோக்கம் காரணமாகவே வருமானவரி சோதனை நடைபெற்றது என சோதனைக்கு பின் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சோதனை நிறைவு:

அமைச்சர் விஜயபாஸ்கரின், சென்னை, கிரீன்வேஸ் சாலை இல்லம் உட்பட, அவரது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில், வருமான வரித்துறை அதிகாரிகள், நேற்று(ஏப்.,7) காலை, 6:00 மணியளவில், அதிரடி சோதனையை துவக்கினர். இந்நிலையில் நேற்று காலை துவங்கி 22 மணி நேரமாக நடைபெற்ற சோதனை, இன்று(ஏப்.,8) அதிகாலை 4 மணி அளவில் நிறைவு பெற்றது.


அமைச்சர் பேட்டி:

சோதனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்ததாவது: எனது வீடு மற்றும் எனது சகோதரர் வீட்டில் நடந்த சோதனையில் எதுவும் சிக்கவில்லை. எனது சொந்த ஊர் ளற்றும் அலுவலகத்தில் நடந்த சோதனையிலும் எதுவும் சிக்கவில்லை. என் வீட்டிலும், சரத்குமார் வீட்டிலும் நடந்த வருமானவரி சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டது. வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு நான் முழு ஒத்துழைப்பு அளித்தேன். ஆர்.கே.நகர் தேர்தலை நிறுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு நடந்தே சோதனை இது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 வெளியே வேலை செய்ய திகார் கைதிகளுக்கு வாய்ப்பு
 
புதுடில்லி: திகார் சிறையில் உள்ள கைதிகள் முதல் முறையாக, வளாகத்திற்கு வெளியில் வேலைக்கு செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளனர். கொலை மற்றும் இதர குற்ற சம்பவங்களில் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகள், டில்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், சிறை வளாகத்தில் இருந்து வெளியில் சென்று டில்லியில் எங்கு வேண்டுமானாலும் வேலைக்கு செல்ல அனுமதி உண்டு. காலை, 8:00 முதல் இரவு, 8:00 மணி வரை, இவர்கள் வேலை செய்யவும் அனுமதிக்கப்படுவர். ஆனால், இதற்கு சில தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அதன்படி, தங்களுடைய தண்டனை காலத்தில், சிறை எண், 2ல், 12 ஆண்டுகள் இருக்க வேண்டும்.

அவர்களின் நன்னடத்தையை பொறுத்து, பாதி திறந்தவெளி சிறைக்கு மாற்றப்படுவர்.
இவர்களில் சிறந்த கைதிகளை தேர்ந்தெடுத்து, சிறை வளாகத்திற்கு வெளியில் வேலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவர். தற்போது, பாதி திறந்தவெளி சிறையில், 78 கைதிகள் உள்ளனர். அவர்களில், சிறை வளாகத்திற்கு வெளியில் சென்று வேலை செய்வதற்காக, ஆறு பேரை திகார் சிறை கமிட்டி தேர்ந்தெடுத்துள்ளது. இவர்கள், வெளியில் சென்று வேலை தேட வேண்டியதில்லை; அவர்களுக்கு சிறை நிர்வாகமே வேலை வாய்ப்பை பெற்றுத் தரும்.
 நீட்' தேர்வுக்கு பயிற்சி பெறுவது எங்கே? : அரசு பள்ளி மாணவர்கள் தவிப்பு

'நீட்' தேர்வுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், எங்கே பயிற்சி பெறுவது என தெரியாமல், அரசு பள்ளி மாணவர்கள் தவித்து வருகின்றனர்.

வரும் கல்வி ஆண்டில், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேர, தேசிய அளவிலான, 'நீட்' தேர்வில், தேர்ச்சி பெறுவது கட்டாயம். இந்த தேர்வு, அனைத்து மாநிலங்களிலும், மே, 7ல் நடக்கிறது. இதற்கு, விண்ணப்பிப்பதற்கான அவகாசம், நேற்று முன்தினம் முடிந்தது. இந்நிலையில், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், பல்வேறு தனியார் மையங்களில், 'நீட்' தேர்வுக்கான பயிற்சியை துவக்கி உள்ளனர். ஒரு மாத பயிற்சிக்கு, 20 ஆயிரம் முதல், 35 ஆயிரம் ரூபாய் வரை, கட்டணம் வசூலிக்கப் படுகிறது.
தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் படிக்கும், நகர, கிராமப்புற மாணவர்கள் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுமா என, தவித்து வருகின்றனர்.

இது குறித்து பெற்றோர் கூறியதாவது: 'நீட்' தேர்வு தமிழகத்துக்கு வராது என, ஆளும் கட்சி அமைச்சர்கள் கூறி வந்தனர். ஆனால், இதுவரை அதற்கான சட்ட அனுமதியை பெறவில்லை. அதை நம்பி, 'நீட்' தேர்வுக்கு பயிற்சி எடுக்கவில்லை. எனவே, அரசு பள்ளி மாணவர்கள் அதிக சிக்கலுக்கு ஆளாகியுள்ளனர். பள்ளிக்கல்வித் துறையோ, 'நீட்' தேர்வுக்கு பொறுப்பான சுகாதாரத் துறையோ, அரசு பள்ளி மாணவர்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்கவில்லை. 'நீட்' தேர்வுக்கு தயாராக, தமிழக அரசு பயிற்சி தராததால், ஏழை மாணவர்களின், டாக்டராகும் கனவு நிறைவேறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

'நீட்' விண்ணப்பத்தில் பிழையா? : ஏப்., 12 முதல் திருத்தலாம் - 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்தோர், சுய விபரங்களை, ஏப்., 12 முதல் திருத்தம் செய்ய வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு, இந்த ஆண்டு முதல், தேசிய அளவிலான, 'நீட்' தேர்வு கட்டாயமாகி உள்ளது. இதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, ஏப்., 5ல் முடிந்தது. இந்நிலையில், விண்ணப்பித்தோரின் சுய விபரங்கள் மற்றும் கூடுதலாக சேர்க்க வேண்டிய விபரங்களை சரி செய்ய, சி.பி.எஸ்.இ., அவகாசம் வழங்க முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு, ஏப்., 12ல் வெளியாகும் என, அதிகாரிகள் கூறினர்.

- நமது நிருபர் -

Friday, April 7, 2017

 Over 20 engineering colleges apply for closure

 State government yet to give its nod, will process applications only after institutions follow norms regarding transfer of students

With the number of seats in undergraduate engineering degree courses far exceeding the demand in the State, managements of the self-financing colleges are increasingly finding it financially unviable to run the institutions.

According to sources in the All India Council for Technical Education (AICTE), the promoters of at least 22 private engineering colleges have sought permission to close down their institutions. The State Government is yet to give its nod considering the fact that the closure would affect students of these colleges.

AICTE officials said that private colleges across the country have been applying for closure over the past two years.

“Incidentally, in the academic year 2016-17, as many as 22 engineering colleges and one architectural college in Tamil Nadu did not have a single enrollment,” a Higher Education Department official told The Hindu .

AICTE officials did not reveal if any of these institutions figured in the list of colleges that have applied for closure.

Authorities at Anna University however said only three institutions had applied for closure. “Of these, we permitted one college to close down as it has already transferred its students to other institutions,” an official said.

Many engineering colleges are also up for sale. A search on Google throws up links where colleges have been put up for sale with a price tag varying between Rs. 25 crore and Rs. 300 crore. Some of these institutions are located off Chennai, Madurai, Coimbatore and Tiruchi.
Advertisers whom this correspondent contacted refused to reveal the colleges names.
“We will ensure that the rights of the institution or Trust (that administers the college) are transferred without disturbing its functioning,” an advertiser said.
Owners look elsewhere

Some of the consultants/brokers this reporter spoke to candidly admitted that the owners/trustees wanted to diversify into other businesses or expand their existing ones.

According to data accessed from the Directorate of Technical Education, last year, only 52% of B.E./B. Tech seats were filled in self-financing engineering colleges. Even government, aided and Anna University’s constituent colleges managed to fill only around 82% seats.
“Only 1,34,994 candidates applied for admission through single-window counselling for the 2,77,061 seats in 2016-17,” an official said.

According to a conservative estimate by engineering educators, only the top 200 colleges managed to fill all their seats in various departments.
According to one educator, in 55 colleges, less than 100 students were admitted in the last two years.
Officials said it was not easy to shut down a college. At best, the State government and the AICTE would only allow partial closure or accept the college’s decision to not admit students in the future.

“This was done to enable students currently enrolled in the institution to complete their coursework,” an official said.

If a college management decides to declare inability to pay salaries to its staff, then it must apply for a no-objection certificate to Anna University, the affiliating body.
The onus is on the colleges to transfer the students to other institutions. Only when the university is satisfied that the college has followed the norms will the request for closure be processed.
×
College girl beaten to death by parents
Ballari:
TNN 
 


In a love story which ended in tragedy, a 19-year-old girl of Hampasagara village was allegedly killed by her parents on March 24. Reshma Bhanu's family objected to her relationship with K Nagaraj whom she met at a summer camp last year at Nandi PU College.
  On March 24, Nagaraj went to her house but her family assaulted him. Reshma'sangry parents thrashed him using iron rods and wooden sticks. He was severely njured and Reshma rushed to protect him. Reshma was brutally beaten up too and died on the spot. Her shocked parents tried to cover up the crime.



NEWS TODAY 14.02.2026