Saturday, April 8, 2017

Tamil Nadu health fraternity rattled over corruption charges

DECCAN CHRONICLE. | ANNA SAKHI JOHN
Chennai: The state health fraternity woke up to a shock after I-T sleuths raided the top brass of the state health department starting from health minister Dr C. Vijayabaskar and vice chancellor of the Dr MGR University Dr S. Geethalakshmi. The incident sent shocking waves among the medicos and medical administrators associated with the minister and the vice chancellor.

The raids and the deployment of the paramilitary force were the talk of the day and had a ripple effect in all government hospitals and state-run medical colleges coming under the ambit of MGR University. The raids also brought mixed response among the medical fraternity.

Stating that the raids have come at a wrong time, Dr Ravindranath of the Doctors' Association for Social Equality (DASE) said, "The state government is now fighting against the Central Government on issues relating to the National Eligibility cum Entrance Test (Neet) and other similar issues. The Central Government is indirectly threatening higher officials of the state Health Department. The raids are therefore one coated with political intentions."

"It is humiliating as the health minister is a doctor and it will affect the morale of doctors. Also, the vice chancellor's post is very significant and such raids can bring disrepute to the university," said a doctor seeking anonymity.

"There can be various reasons for raids particularly when there is bypoll followed by the demise of the chief minister. Though corrupt practices are not uncommon, there hasn't been a spurt for which the raids were suddenly conducted. Rumours of corrupt practices on part of the vice chancellor have been there. However, until something is proved from the raids, we should give them a clean chit," the doctor added. Dr Geethalakshmi could not be reached when Deccan Chronicle tried to contact her.

Driver throws out documents

Kumar, a driver of Vijayabhaskar, tried to escape from the residence of the minister with a bunch of documents.

By the time I-T sleuths managed to overpower him near the compound wall, Kumar had thrown the documents out and somebody standing outside had collected them and escaped from the scene. Kumar later lodged a complaint with the police saying that he was assaulted by I-T sleuths.

ஆதார் உடன் பான் இணைக்க வேண்டும் தவறினால் ரூ.10,000 அபராதம்

By DIN  |   Published on : 07th April 2017 09:43 PM  |
Aadhar
ஆதார் எண்ணுடன் வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை ("பான்') ஜூலை 1ஆம் தேதி முதல் இணைக்க வேண்டும்.
இல்லையெனில், ஒவ்வொரு முறை பணப்பரிமாற்றத்தின் போதும் ரூ.10,000 அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்று வரி தொடர்பான நிபுணர் சுரேஷ் தெரிவித்தார்.
எனவே, ஆதார் எண்ணுடன் நிரந்தர கணக்கு எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும். இது தொடர்பாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த இணைப்பு 2017-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. ஆதாருடன் நிரந்தர கணக்கு எண்ணை இணைக்கவில்லை எனில், ஒவ்வொரு பணப் பரிமாற்றத்தின்போது, நிரந்தர கணக்கு எண் இல்லை என்று பதிவாகும். நிரந்தர கணக்கு எண் இல்லாதவர்கள் அதற்கு விண்ணப்பிக்கும்போது, ஆதார் எண்ணை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.
இதுதவிர, ரூ.2 லட்சத்துக்கு மேல் பணபரிமாற்றம் செய்வது இணையம் மூலமாகவும், கணக்கு மூலமாகவும் செலுத்தலாம். இல்லைஎனில், 100 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்றார்.

சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் கடும் சரிவு: சிக்கனமாகப் பயன்படுத்த குடிநீர் வாரியம் வேண்டுகோள்


By DIN  |   Published on : 08th April 2017 04:53 AM  |  
சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் 0.70 மீட்டர் முதல் 2.88 மீட்டர் வரை வெகுவாகச் சரிந்துள்ளது. இதனால் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த குடிநீர் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்தி: சென்னைக் குடிநீர் வாரியம், சென்னை நகரின் நிலத்தடி நீர் மட்டத்தையும், அதன் உப்புத் தன்மையையும் மாதந்தோறும் சென்னையின் பரப்பளவான 426 சதுர கிலோ மீட்டரில், 145 கண்காணிப்புக் கிணறுகள் மூலம் ஆய்வு செய்து வருகிறது.
சென்னை மாநகரில் மணல் சார்ந்த பகுதி, களிமண் சார்ந்த பகுதி மற்றும் பாறை சார்ந்த பகுதி என உள்ள மூன்று விதமான மண் பகுதிகளிலும் நிலத்தடி நீர் அளவு உயர்வு மற்றும் நீர் ஊடுருவும் தன்மை வேறுபடும்.
சென்னை நகரில் மார்ச் 2016 மற்றும் மார்ச் 2017 மாதங்களில் உள்ள நீர்மட்ட அளவுகளின் ஒப்பீடு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மேற்கூறிய மார்ச் 2016 மற்றும் மார்ச் 2017 மாதங்களில் உள்ள நீரின் அளவுகளை ஒப்பிடுகையில், சென்னை மாநகரிலுள்ள 15 பகுதிகளில் நிலத்தடி நீர்மட்ட அளவு 0.70 மீ. (சோழிங்கநல்லூர்) முதல் 2.88 மீ. (திரு.வி.க. நகர்) வரை குறைந்துள்ளது. குறைந்த மழைப்பொழிவின் காரணமாக சென்னை குடிநீர் வாரியம் சென்னை மாநகர பொதுமக்களிடம் கீழ்க்கண்ட முறையில் நீரினை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்துகிறது. குடிநீர் வாரியத்தால் சுத்திகரித்து வழங்கப்படும் நீரை குடிப்பதற்கு மற்றும் சமைப்பதற்கும் மட்டுமே பயன்படுத்தவும்.
இதர தேவைகளுக்கு நிலத்தடி நீரைப் பயன்படுத்தவும். குழாய் அமைப்பில் ஏற்படும் நீர்க் கசிவை உடனடியாகச் சரி செய்ய வேண்டும். பயன்பாட்டில் இல்லாதபோது குழாயை மூடிவைக்க வேண்டும்.
சமையலறை மற்றும் குளியலறையிலிருந்து வெளியேறும் நீரை தோட்டம், செடிகளுக்கு பாய்ச்சிப் பயன்படுத்தலாம்.

தையல் வாழ்க பல்லாண்டு!

By ஜெ. ஹாஜாகனி  |   Published on : 08th April 2017 01:19 AM
Hajakani
ஒரு சிறிய செய்தியாக அது வெளிவந்திருந்தாலும், அச்செய்தியளித்த அதிர்ச்சியும், கவலையும், தேசத்தின் மனசாட்சியை உலுக்குவதாக இருக்கிறது.
கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் கொரட்டகெரேவைச் சேர்ந்த ராதாமணி என்ற 25 வயது பெண்ணின் சாவுதான் நமது அறங்கள் மற்றும் அதைக் காப்பதற்கான சட்டங்கள் ஆகியவற்றின் பரிதாப நிலையைப் படம் பிடித்துக் காட்டியுள்ளது.
மூன்று பெண் குழந்தைகளுக்குத் தாயான ராதாமணியின் கணவர் புகைப்படங்களை மாட்டுவதற்குச் சட்டம் அடித்துத் தரும் சாதாரணத் தொழிலாளி. ஆண் குழந்தை ஒன்று வேண்டும் என்ற நிர்ப்பந்த ஆவலில் அந்தப் பெண் கருவுறுவதும், பிறகு வயிற்றில் வளர்வது பெண் சிசு என்று சட்ட விரோதமாக அறிந்து கொண்டு அதைக் கலைப்பதுமாக, 12 முறை இப்பெண்ணுக்குக் கருக்கலைப்பு நடந்துள்ளது.
அதற்குப் பின்னர் மீண்டும் கருவுற்ற ராதாமணிக்கு அதுவும் பெண் சிசுவாகவே அமைந்திட கருக்கலைப்பு செய்திருக்கிறார். அப்போது தொடர்ச்சியான கருக்கலைப்பால் உடல் நலிந்திருந்த அப்பெண் உயிரிழந்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவையிலும் இந்தச் சம்பவம் எதிரொலித்துள்ளது.
ஆண் குழந்தைகள் மீது அதீத ஆவலும், பெண் குழந்தைகள் குறித்து பெரும் பீதியும், சமூகத்தில் சீமைக் கருவேல மரங்களைப்போல் நிலைகொண்டு, பெண்களின் வாழ்வை சீரழிப்பதற்கு, ஆணிவேரான காரணமாய் அமைந்திருப்பது எதுவென்று ஆராய வேண்டிய கட்டாயம் இப்போது ஏற்பட்டுள்ளது.
பெண் சிசுக் கொலை என்பது நம் மண்ணில் மட்டுமல்ல, உலகின் பல பாகங்களிலும், தொன்று தொட்டு நிலவி வந்திருப்பதை வரலாற்றுத் தொலைநோக்கி வழியே காண முடிகிறது. 14 நூற்றாண்டுகளுக்கு முன் அரேபிய நாட்டில் பெண் சிசுக்களை உயிரோடு புதைக்கும் கொடுமையை உற்சவம் போல் கொண்டாடி உவகை அடைந்தனர்.
பெண் குழந்தைகளைப் பெறுவதை சாபக் கேடாகவும், அதைப் புதைப்பதைப் பெருமிதமாகவும் அன்றைய அரபு நாட்டின் மரபு கருதியது.
நபிகள் நாயகம் சளைக்காமல் ஆற்றிய சத்தியப் பரப்புரையும், பெண்மையின் கண்ணியம் பேணக் கொண்டு வந்த கடுமையான சட்டங்களும், இந்த மூர்க்கத் தனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தன. எவர் இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்று, சிறப்பாக வளர்க்கிறாரோ, அவரும், நானும், சுவனத்தில் இவ்வாறு இணைந்திருப்போம் என்று ஆட்காட்டி விரலையும் நடுவிரலையும் சேர்த்துக் காட்டினார்கள்.
திருமணத்தின்போது மணப்பெண்ணுக்கு மணமகன் அவள் விரும்பும் மணக்கொடையைத் தர வேண்டும் என்ற சட்டத்தால், இன்றும் அரபு நாடுகளில் மணமாகாத ஆண்களுக்குத் திருமணக் கடன் வழங்கப்படுகிறது. பெண் குழந்தை பிறந்த வீடுகளில் மகிழ்ச்சியின் வெளிப்பாடாக குலவை சத்தம் கேட்கிறது.
வரலாற்றை நினைவூட்டுவதற்காக இன்றைய மக்காவில் பெண் குழந்தைகள் 14 நூற்றாண்டுகளுக்கு முன் உயிரோடு புதைக்கப்பட்ட இடத்தை மட்டும் பாதுகாத்து வைத்துள்ளார்கள்.
'மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்' என்ற முழக்கத்திற்கு, பெண்மையை இழிவு செய்யும் வழக்கமே காரணமாக அமைந்தது.
சிசுக் கொலை, பால்யத் திருமணம், சதி என்னும் உடன்கட்டை ஏறுதல், விதவைக் கொடுமை, வரதட்சணைக் கொடுமை, வன்பகடி (ஈவ்டீசிங்), பாலியல் கொடுமை எனப் பெண்ணினத்தைக் குறி வைத்து ஏராளமானக் கொடுமைகளும் அவற்றைத் தடுப்பதற்கு இயற்றப்பட்ட ஏகப்பட்ட சட்டங்களும் நம்நாட்டில் நடைமுறையில் இருந்தபோதிலும், மகளிரின் கண்ணியமான வாழ்வுக்காக எங்கெங்கும், என்றென்றும் ஏதோ ஒரு போராட்டம் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.
ஒரு பெண் நம் மண்ணில், பிறக்கும் முன் கருக்கொலையையும், பிறந்த பின் சிசுக்கொலையையும் பிரியமான வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டால் ஆணவக் கொலையையும் கடந்தே இங்கு உயிர் தரிக்க முடிகிறது என்பது கசப்பான உண்மை.
கருப் பருவம், சிசுப் பருவம், இளமைப் பருவம் என்ற இனிய பருவங்களை மரணத்தின் நிழலில் மங்கையர் கழிப்பது எவ்வளவு துயரமானது. எத்தனை வெட்கப்படத்தக்கது?
ஆணும், பெண்ணும் வாழ்வின் சரிபாதியாவர். சரிபாதியான இருவரிடையே சமநீதி இருக்க வேண்டும். கருக்கொலைகள் அதிகரித்து, பெண்சிசுக்களின் பிறப்பு வெகுவாகத் தடுக்கப்பட்டு வந்தால், அதன் விளைவு என்னாகும் என்று எண்ணிப் பார்க்க வேண்டும். சமூகத்தில் நிம்மதி மறைந்து போகும். வன்மங்கள் அதீதமாய் வளரும்.
1994-ஆம் ஆண்டு கருவிலிருக்கும் சிசுவின் பாலினத்தை அறிவிக்கத் தடை விதித்துச் சட்டம் இயற்றப்பட்டது (Pre conception and pre-natal Dignostic Techniques Act (Prohibition sex selection Act). இச்சட்டப்படி கருவிலிருக்கும் குழந்தையின் பாலினத்தை கூறுவது குற்றம். ஆனால் 'ஸ்கேன் சென்டர்கள்' கூறாமல் இருக்கிறார்களா? கூறாமல் இருந்திருந்தால் கர்நாடக மாநிலத்தில் அந்தப் பெண் எப்படி 12 முறை கருக்கலைப்பு செய்திருப்பார்?
பாலினத்தை சூசகமாகச் சொல்லும் முறை ஒன்று உள்ளது என்று ஓர் அதிர்ச்சி செய்தியைப் பகிர்ந்து கொண்டார் பிரபல குழந்தை நல மருத்துவர் ஒருவர். ஸ்கேன் ரிப்போர்ட்டை, குறிப்பிட்ட ஒரு கிழமையில் வந்து பெற்றுக் கொள்ளுங்கள் என்றால், பெண் சிசு; வேறு ஒரு கிழமையில் என்றால் ஆண். இப்படி ஒவ்வொரு மையமும் ஒரு வகையான சங்கேத மொழியைப் பின்பற்றுகிறதாம். எவ்வளவு வேதனைக் குரியது.
இந்தியாவில் ஆண் சிசுவுடன் ஒப்பிடுகையில் பெண் சிசுக்களின் இறப்பு விகிதம் 75% அதிகம் என்கிறது ஒரு புள்ளிவிவரம்.
100 ஆண் குழந்தைகளுக்கு 105 பெண் குழந்தைகள் என்ற உலக சராசரி, இந்தியாவில் மட்டும் 100 ஆண் குழந்தைகளுக்கு 90-க்கும் குறைவான பெண் குழந்தைகள் என்ற வகையில் உள்ளது.
ஒவ்வொரு நாளும் இந்தியாவில் 2,000 பெண் சிசுக்கள் கருக்கொலை செய்யப்படுவதாக ஐ.நா.வின் அறிக்கை அபாயத்தை அறிவிக்கிறது.
சட்டத்துக்குப் புறம்பான வழியில் பாலினத்தை அறிந்து, மருத்துவ அறங்களுக்கு புறம்பான வழியில் பெண் கருவை அழிப்பது அடித்தட்டு மக்களிடம் அதிகமாக உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. இதில் கர்ப்பிணிகள் கொடூரமாக உயிரிழக்கும் கொடுமையும் தொடர்கிறது.
அதையும் மீறி பிறக்கும் பெண் குழந்தைகளைக் கொல்வதற்கு கள்ளிப் பால் போன்ற எத்தனையோ கொலைவழிகள். இதில் வேடிக்கை என்னவெனில் பெண்ணின் பெருமை பேசும் இலக்கியங்கள் தமிழில்தான் ஏராளமாக உள்ளன.
'கருத்தம்மா' என்ற திரைப்படம் பெண்சிசுக் கொலைக்கெதிராக எடுக்கப்பட்டு, தேசிய விருதும் பெற்றது.
அண்மையில், பெண் குழந்தைகளுக்குப் பெருமை சேர்க்கும் 'டங்கல் யுத்தம்' என்ற இந்திப் படம் நமது நாடாளுமன்றத்திலேயே திரையிடப்பட்டது.
பெண் குழந்தைகளை வளர்ப்பதற்கு ஆகும் செலவுகள்.
சமூகம் சுமத்திய சடங்குகள்.
ஆண் மகன் கடைசி காலத்தில் காப்பாற்றுவான், பெண் வேறு வீட்டிற்குப் போகக் கூடியவள் என்ற கருத்தியல்.
வம்ச விருத்திக்கு ஆண் மகனே அடையாளம் என்ற நம்பிக்கை.
இறுதிச்சடங்கை ஆண் மகனே நிறைவேற்ற முடியும் என்ற நிலை.
இவையாவற்றையும் தாண்டி, திருமணத்திற்கு முன்பும், திருமணத்திற்குப் பின்னரும் தொடரும் வரதட்சணைக் கொடுமைகள்.
இவையெல்லாம் பெண் குழந்தைகளுக்கு எதிரான உளவியலை சமூகத்தில் ஆழமாகக் கட்டமைத்துள்ளன.
அதனால்தான் நவீன காலத்திலும் இந்த நாசகரப் படுகொலைகள் தொடர்கின்றன.
பெண்ணுரிமை காக்கும் ஏராளமான சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும், அவை யாவும் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை.
தாய்மொழி, தாய்நாடு என்று தகைமையுறச் சொல்கிறோம். நதிகளுக்கெல்லாம் பெண் பெயரே சூட்டியுள்ளோம். ஆனால் பெண்களுக்கெதிரான கொடுமைகளையும் தொடருவோம் என்பது பேரிழுக்கு அல்லவா?
1962-ஆம் ஆண்டில் வெளிவந்த 'ராணி சம்யுக்தா' என்கிற திரைப்படத்தில் ஒரு பாடல்.
'சித்திரத்தில் பெண்ணெழுதி
சீர்படுத்தும் மாநிலமே,
ஜீவனுள்ள பெண்ணினத்தை
வாழவிட மாட்டாயா?'
ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு தொடுக்கப்பட்ட வாழவிட மாட்டாயா? என்ற கேள்வி இன்றும் தொடர்வது வேதனைக்கும், வெட்கத்திற்கும் உரியது.
மகளிரைக் கண்ணியமாகக் கொண்டாடும், மன எழுச்சியை சமூகத்தில் விதைப்போம். பெண்ணில்லையேல் மண்ணில்லை.

பெற்றோரைப் பேணல்!

By ஆசிரியர்  |   Published on : 07th April 2017 01:23 AM  |   
பெற்றோர், முதியோர் நலன் பேணுவது என்பது இந்தியப் பண்பாட்டுக் கூறுகளில் முக்கியமானது. நமது புராண, இதிகாசங்கள் மட்டுமல்ல, இந்திய இலக்கியங்கள் அனைத்துமே, பெற்றோருக்கு மரியாதை செய்வதை இறைவனுக்குச் செய்யும் மரியாதையைவிட மேலானதாகவும், முக்கியமானதாகவும் வலியுறுத்துகின்றன.
கடந்த 30 ஆண்டுகளாக, அதிலும் குறிப்பாக, இந்தியாவின் பொருளாதாரக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டு உலகமயச் சூழலை ஏற்றுக்கொண்ட பிறகு, பெற்றோரைப் பேணல் என்கிற பண்பு அதிவிரைவாகக் குறைந்து வருகிறது. அதிகரித்து வரும் முதியோர் இல்லங்களும், வயோதிகத்தைத் தனியாகக் கழிக்கும் பெற்றோரின் நிலையும் மிகுந்த வருத்தம் அளிப்பதாக உள்ளன.
இத்தகைய போக்குக்கு பெற்றோர் மீது பிள்ளைகள் கொண்ட பாசம் குறைந்துவிட்டது என்றோ, மேலை நாடுகளைப்போல வயதுக்கு வந்துவிட்டால் உறவை அறுத்துக் கொள்ளும் போக்கு அதிகரித்துவிட்டது என்றோ அர்த்தமில்லை. படித்துப் பட்டம் பெற்று, வேலை தேடி வெளியூர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் செல்லும் பிள்ளைகள், அங்கேயே திருமணம் செய்துகொண்டு தங்கி விடுவதும் ஒரு காரணம். அவர்களில் பலர் பெற்றோருக்குப் பணம் அனுப்பி அவர்களைப் பாதுகாக்கத் தவறுவதும் இல்லை.
அதே நேரத்தில், மிகுந்த சிரமத்துக்கிடையில் தங்களது குழந்தைகளைக் கஷ்டப்பட்டுப் படிக்க வைத்து வாழ்க்கையில் முன்னேறச் செய்துவிட்டு வயோதிகத்தில் வாழ்வாதாரம் இல்லாமல் தவிக்கும் பெற்றோரின் எண்ணிக்கையும் கணிசமாகவே இருக்கிறது. தனது மனைவியும், குழந்தைகளும் மட்டுமே தனது குடும்பம் என்றும், பெற்றோரைப் பேணல் தனது கடமையல்ல என்றும் நினைக்கும் பலரும் இருக்கவே செய்கிறார்கள்.
60 வயதைக் கடந்த முதியோர் அதிகமாக வாழும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தை வகிக்கிறது. இவர்களில் 5 விழுக்காட்டினர் தனியாக வாழ்கிறார்கள். மனைவி அல்லது கணவருடன் வாழும் 60 வயதைக் கடந்தவர்கள் 9.3 விழுக்காட்டினர். குழந்தைகளின் பராமரிப்பில் வாழும் பெற்றோர்கள் 35.6 விழுக்காட்டினர்.
இந்தியாவில் ஆறில் ஒரு முதியவர் போதிய சத்தான உணவு பெறுவதில்லை; மூன்றில் ஒருவருக்குப் போதிய மருத்துவ கவனிப்பு கிடைப்பதில்லை; இரண்டில் ஒருவருக்குக் குடும்பத்தில் போதிய கவனிப்போ, மரியாதையோ தரப்படுவதில்லை. இதுதான் இன்று நகர்ப்புற இந்தியாவில் வாழும் முதியோர்களின் நிலைமை.
முந்தைய மன்மோகன் சிங் அரசு, 'பெற்றோர் - முதியோர் நலச் சட்டம் 2007' என்று ஒரு சட்டத்தை இயற்றி முதியோர் தன்மானத்துடனும் நிம்மதியாகவும் தங்களது வயோதிகத்தைக் கழிக்க சட்டப் பாதுகாப்பு வழங்க முற்பட்டது. அந்தச் சட்டப்படி, முதியோரையும் பெற்றோரையும் பேணுவது பிள்ளைகளுக்கும் உறவினர்களுக்கும் கடமையாக்கப்பட்டது.
இப்போது, பெற்றோர் - முதியோர் நலச் சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டுவர இருக்கிறது நரேந்திர மோடி அரசு. இப்போது, பெற்றோரின் நலம் பேணுவதற்காக பிள்ளைகள் அவர்களுக்கு அளிக்கும் தொகையாக ஆணையம் அதிகபட்சமாக ரூ.10,000 தான் உத்தரவிட முடியும். முதியோர் அமைப்புகளும், தன்னார்வ நிறுவனங்களும், அதிகரித்துவிட்ட மருத்துவச் செலவுகள், அன்றாடச் செலவுகள் காரணமாக இந்தத் தொகை அதிகரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. அவற்றின் கோரிக்கையை ஏற்று மத்திய சமூகநல அமைச்சகம் சில புதிய திருத்தங்களை மேற்கொள்ள இருக்கிறது.
சமூகநலத் துறைச் செயலாளரின் தலைமையில், முதியோர் அமைப்புகள், மத்திய - மாநில அரசுகளின் பிரதிநிதிகள், தேசிய சட்ட ஆணைய உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்ட கூட்டம் ஒன்று தில்லியில் கூட்டப்பட்டது. அதில், வசதியுள்ள பிள்ளைகள், அதிகபட்சம் ரூ.10,000 தந்தால் போதும் என்பதுடன், அவர்களைக் கஷ்டப்பட்டுப் படிக்க வைத்த பெற்றோரை சரியாகப் பராமரிக்காமல் இருப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. பிள்ளைகளின் வருமானத்தின் அடிப்படையில்தான் பெற்றோருக்கு அவர்கள் வழங்கும் பேணுகைத் தொகை ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும், அதற்கு வரம்பு விதிக்கப்படக்கூடாது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
அதேபோல, முதியோர் இல்லங்களையும் முதியோருக்கு அவர்கள் வீட்டிற்கே வந்து தனிப்பேணுகை செய்யும் நிறுவனங்களையும் நெறிப்படுத்தவும், தரவரிசைப்படுத்தவும் முடிவெடுக்கப் பட்டிருக்கிறது. பரவலாகவே, தனியாக வாழும் முதியோர் பலர் தாக்கப்படுவதும், பணத்துக்காகக் கொலை செய்யப்படுவதும் அதிகரித்து வருவதால், முதியோர் இல்லங்களில் வாழாமல் தனித்து வாழும் முதியோர் குறித்தும் பெற்றோர் - முதியோர் நலச் சட்டத்தில் சில பாதுகாப்பு அம்சங்கள் இணைக்கப்பட வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
பெற்றோர் பராமரிப்பு தொடர்பாக உச்சநீதிமன்றம் கடந்த அக்டோபர் மாதம் அளித்த தீர்ப்பு உண்மையிலேயே பாராட்டுக்குரியது. தனிக்குடித்தனம் வர மறுத்தால் தற்கொலை செய்து கொள்வேன் என்று அச்சுறுத்திய மனைவியை விவாகரத்துக் கோரிய வழக்கில், பெற்றோருடன் வாழ வேண்டும், அவர்களை முதுமையில் பாதுகாக்க வேண்டும் என்று ஒரு மகன் விரும்பினால் அதில் தவறு காண முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. இதற்கு மகளிர் அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றன.
அது ஒருபுறம் இருந்தாலும், அரசும், நீதித்துறையும் முதியோர் குறித்தும், வயதான பெற்றோர் குறித்தும் கவலைப்படத் தொடங்கி இருப்பது ஆறுதல் அளிக்கிறது. முதியோர் தன்மானத்துடன் வாழவும், அவர்களை முறையாகப் பேணவும் வழிகோலாமல் இருந்தால் அது நமது பண்பாட்டுக்கே இழுக்கு!


HC rejects MBBS graduate's plea to appear for PGM-CET

MUSTAFA PLUMBER | Tue, 4 Apr 2017-07:35am , DNA

It is not in dispute that the petitioner was admitted in the MBBS course in 2009. The criteria of eligibility to appear for the postgraduate PGM course will only apply: Dr Shubhra Srivastava

The Bombay High Court has rejected a petition filed by a MBBS graduate from Mumbai seeking directions to relax the mandatory condition of serving a year in rural areas before taking up post graduate courses or paying bond penalty.

A division bench of Justice Shantanu Kemkar and Justice BP Colabawala, while turning down the plea filed by Dr Shubhra Srivastava, said, "It is not in dispute that the petitioner was admitted in the MBBS course in 2009. The criteria of eligibility to appear for the postgraduate PGM course will only apply."

Dr Srivastava claimed that since she had got admission in the MBBS course in 2009, and the eligibility criteria of a year's mandatory rural service was notified only in 2011, she should be allowed to appear for the postgraduate CET exams.

However, the court after going through the criteria and the fact that the petitioner had appeared for the entrance exams twice in 2015 and 2016, and failed both times, said "We are of the view that the petitioner was fully aware while appearing for the PGM entrance examination of the year 2015 and again in 2016, she cannot be allowed to turn around and challenge the eligibility criteria. If she wants to make an attempt for the third time for the same examination, she cannot be allowed to contend that the eligibility criteria is unreasonable."

The petitioner then pleaded the court to allow her to complete the post graduate course, following which she would serve in a rural area. To this, the bench said, "In the absence of any clause permitting to complete the post graduation first, and then to serve the rural area," the plea is rejected.TOP

MCI debars three colleges for fake patients  

By Rashmi Belur  |  Express News Service  |   Published: 08th April 2017 01:48 AM  |  

BENGALURU: When a Medical Council of India (MCI) team inspected some medical colleges in Karnataka, they found some had adopted brazen methods to fill up patients: people who underwent open surgeries but showed no visible incision marks, patients admitted for more than a month for ailments that were non-existent, children brought from an orphanage and admitted in the paediatrics ward. 
These irregularities have forced the MCI to disaffiliate three private medical colleges: Sridevi Medical College, Tumakuru; Akash Institute of Medical Sciences, Devanahalli; and Sambram Medical College, Kolar. Three more colleges, including two government colleges, have also been denied renewal of affiliation based on infrastructure and other deficiencies. 
These are Chamrajnagar Institute of Medical Sciences and Karwar Institute of Medical Sciences and the private Al Ameen College of Vijayapura.

In its report, the committee said during their inspections last year they encountered “healthy persons” posing as patients in wards. 

“Many patients who were not genuine and did not require admission were admitted in wards of General Medicine, General Surgery, TB & Chest, Skin & VD and Orthopaedics. In General Medicine ward, a patient named Satish (Reg # 51007) was admitted on February 24, 2016 without diagnosis and was undergoing treatment till March 11, 2016. He looked healthy.”
In another college, the report said, “All 17 patients admitted in paediatrics ward were from an orphanage with very minor complaints which did not merit admission.” It said that on day of inspection there were no surgeries listed. Several entries were made in operation theatre (OT) register for thyroid and appendicitis surgeries, but no patients could be traced, the report added. 

“In post-operative ward there were five patients, of whom two were examined. They were reported to have right heel abscess drainage and total abdominal hysterectomy but no incision mark was observed... Data in OT registers were manipulated.” Another college did not even have a labour room.
Based on the report, the executive committee, which met in January decided not to recommend renewal of affiliation of these colleges for the next two years and the information was uploaded on MCI website. 

ரகசியம் காப்போம்!

ரகசியம் காப்போம்! ரகசியங்களை பொது வெளியில் அல்லது மறைமுகமாக பிறருடன் பகிர்ந்து கொள்வது புதிதல்ல, புதிரல்ல. தினமணி செய்திச் சேவை Updated on: ...