Monday, April 10, 2017

தமிழகத்தில் 8 இடங்களில் வெயில் சதம்

By DIN  |   Published on : 10th April 2017 04:40 AM 

தமிழகத்தில் 8 இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது. கரூர் பரமத்தியில் அதிகபட்சமாக 106 டிகிரி பதிவானது.
தமிழகத்தில் கோடை தொடங்கி நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கோடைக்காலம் தொடங்கியது முதல் கரூர் பரமத்தியில் வெப்பத்தின் அளவு தொடர்ந்து அதிகரித்துக் காணப்படுகிறது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது: தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகரித்து வருகிறது. வரும் நாட்களில் தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், வட தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும் என்றனர்.

8 இடங்களில் சதம்: ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி, தமிழகத்தில் 8 இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது.

வெயில் நிலவரம் (ஃபாரன்ஹீட்டில்)
கரூர் பரமத்தி 106
வேலூர், சேலம், தருமபுரி 103
திருச்சி, மதுரை,
பாளையங்கோட்டை 103
கோவை 101
சென்னை 98.

உயர் நீதிமன்றம் விடுவித்த குற்றவாளி சரணடைய உச்ச நீதிமன்றம் உத்தரவு

By DIN  |   Published on : 10th April 2017 12:40 AM  |
sc
கொலை வழக்கு ஒன்றில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் நேர்ந்த பிழை காரணமாக, விடுவிக்கப்பட்ட குற்றவாளியை உடனடியாகச் சரணடையுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தில்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முன்னாள் மாணவரான ஜிதேந்தர், கடந்த 1999-ஆம் ஆண்டு மார்ச் மாதம், வடக்கு தில்லியில் திருமண நிகழ்ச்சியொன்றில் புகுந்து சத்யவதி கல்லூரியின் அப்போதைய மாணவர் சங்கத் தலைவர் அனில் பதானாவை சுட்டுக் கொன்றார்.

கொலை வழக்கு ஒன்றில் ஜிதேந்தருக்கு எதிராக அனில் பதானா வாக்குமூலம் அளிக்க இருந்ததால், அவரை ஜிதேந்தர் கொலை செய்ததாகக் கூறப்பட்டது.
இந்தச் சம்பவத்துக்கு மறுநாள், அனில் பதானா கொலை செய்யப்பட்டது குறித்து காவல் துறைக்குத் தகவல் கொடுத்தவரின் தந்தையை, அவரது வீட்டுக்குச் சென்று ஜிதேந்தர் சுட்டுக் கொன்றார்.

இந்தக் கொலை வழக்குகளை விசாரித்த விசாரணை நீதிமன்றம், ஒரு வழக்கில் ஜிதேந்தருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மற்றொரு வழக்கில், எஞ்சிய காலத்தை அவர் சிறையில் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் ஜிதேந்தர் மேல்முறையீடு செய்திருந்தார். அவரது மனுவை விசாரித்த தில்லி உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் அவருக்கு அதிகப்படியான தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறி, அவரை உடனடியாக விடுவிக்குமாறு கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பரில் உத்தரவிட்டது. அதையடுத்து அவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

அதைத் தொடர்ந்து, எழுத்துப் பிழை காரணமாக தவறான உத்தரவைப் பிறப்பித்துவிட்டதாகக் கூறிய தில்லி உயர் நீதிமன்றம், அவரை உடனடியாகக் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தில்லி காவல் துறைக்கு கடந்த பிப்ரவரியில் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், அதற்குள் ஜிதேந்தர் தலைமறைவாகி விட்டார்.
இருப்பினும், ஜிதேந்தர் தனது வழக்குரைஞர் மூலமாக, கைதாவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அவரது மனுவை நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்க மறுத்ததுடன், அவரை உடனடியாகச் சரணடையுமாறு உத்தரவிட்டுள்ளது.
செல்போன் பேச்சு காட்டிக் கொடுத்ததா? ரெய்டுக்குப் பின் அமைச்சர்கள் பதற்றம்

பதிவு செய்த நாள் 10 ஏப்  2017 03:29



 தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும், அவர் தொடர்புடைய இடங்களிலும் வருமான வரித் துறையினர் தொடர்ச்சியாக ரெய்டு நடத்தியதன் பின்னணியில், டெலிபோன் பேச்சுக்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக கிளம்பிய தகவலை அடுத்து, தமிழக அமைச்சர்கள் பலரும், தற்போது, செல்போன் பேச்சுக்களை குறைத்து வருவதாகக் கூறப்படுகிறது.

சென்னை, ஆர்.கே.நகர் தேர்தலுக்கான செலவு விவரப் பட்டியல்கள், அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்திய போது கிடைத்தது. அதையடுத்து, ஆர்.கே.நகரில் தேர்தலை நிறுத்துவது குறித்து, தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.இந்நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் ஒவ்வொன்றாக, தற்போது வெளியாகி வருகிறது. இதனால், அடுத்து என்னவிதமான ஆவணம் வெளியாகுமோ என்ற பதற்றத்தில் அ.தி.மு.க.,வினர் ஆழ்ந்துள்ளனர்.

இப்படி விஜயபாஸ்கரை குறிவைத்து, வருமான வரித் துறையினர் நடத்திய சோதனைக்கு பின்னணியில், அவரது செல்போன் பேச்சுக்கள் இருப்பதாக, வருமான வரித் துறை வட்டாரங்களில் இருந்து தகவல் பரவி இருக்கிறது.

அதனால், பதற்றம் அடைந்திருக்கும் தமிழக அமைச்சர்கள் பலரும் செல்போன் பேச்சை திடீர் என்று குறைத்து விட்டதாகக் கூறப்படுகிறது. எந்த விவரமாக இருந்தாலும், நேரில் வருமாறு பலரையும் அழைக்கின்றனர்.

செல்போன் பேச்சு விவரங்களை மத்திய உளவுத்துறையினர் டேப் செய்து, அதன் அடிப்படையிலேயே வருமான வரித்துறை மூலம் ரெய்டு நடப்பதாக, அமைச்சர்கள் பலரும் அச்சத்தில் உள்ளனர்.

ஜெ., கைரேகை பெற டாக்டருக்கு ரூ.5 லட்சம்?





தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு, 2016 நவம்பரில், தேர்தல் நடந்தது. அப்போது, அ.தி.மு.க., பொதுச்செயலரான ஜெயலலிதா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு, சின்னம் ஒதுக்கக் கோரும் ஆவணத்தில், ஜெ.,


கையெழுத்துக்கு பதிலாக, அவரது கைரேகை வைக்கப்பட்டது. சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை டாக்டர் பாலாஜி முன்னிலையில், கைரேகை பெறப்பட்டதாக, அ.தி.மு.க., விளக்கம் அளித்திருந் தது.

இந்நிலையில், அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில், வருமான வரிதுறையினர் நடத்திய சோதனையில்,

பல ஆவணங்கள் சிக்கின. அதில், ஜெ., கைரேகை வைத்தார்.என்பதை உறுதி செய்த,



டாக்டர் பாலாஜிக்கு, ஐந்து லட்சம் ரூபாய் வழங்கியதற்கான, ஆவணமும் சிக்கியதாக பரவிய தகவல், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரியாணி, வஞ்சிரம் வறுவலுடன்  தினகரன் மெகா விருந்து 

:


ஆர்.கே.நகரில், வாக்காளர்களை கவரும் வகையில், தினகரன் தரப்பினர், மட்டன் பிரியாணி, வஞ்சிரம் மீன் வறுவலுடன், மெகா விருந்து வைத்துள்ளனர். பிரசாரம் இன்று நிறைவு பெறுவதால் கவனிப்பு அதிகரித்து உள்ளது.




சென்னை, ஆர்.கே.நகரில், வரும், 12ல் இடைத்தேர்தல் நடக்கிறது. இதில், தி.மு.க., வேட்பாளர் மருதுகணேஷ்; அ.தி.மு.க., சசிகலா அணியில் தினகரன்; அ.தி.மு.க., பன்னீர்செல்வம் அணியில் மதுசூதனன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, தினகரன் தரப்பு, வாக்காளர்களுக்கு, பணம், பரிசுகள் உள்ளிட்டவற்றை வாரி இறைக்கிறது.

மேலும், வாக்காளர்களுக்கு, மட்டன் பிரியாணி, வஞ்சிரம் மீன் வறுவலுடன் விருந்து வைத்தும்   வருகின்றனர். நேற்று, செரியன் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் விருந்து நடந்தது. விருந்தின் முடிவில், பண பட்டுவாடாவும் நடந்து உள்ளது. அதேபோல, இன்றும் பல இடங்களில் விருந்து நடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

பண மழை :

ஆர்.கே.நகரில், இன்று மாலை, 5:00 மணியுடன், பிரசாரம் நிறைவு பெறுகிறது. இதனால், அரசியல் கட்சிகள், நேற்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டன. தினகரன் அணி சார்பில், ஓட்டுக்கு தலா, 4,000 ரூபாய்; தி.மு.க., சார்பில், 2,000 ரூபாய் ஏற்கனவே வழங்கப்பட்டு உள்ளது. இருப்பினும், தலைவர்கள் பிரசாரத்துக்கு வரும் போது, ஆரத்தி எடுக்க, 300 ரூபாய்; பூக்களை துாவ, 500 ரூபாய் வழங்குவது தொடர்கிறது.

அதிகாரிகள் அலட்சியம் :

தேர்தல் விதிமுறைகளின்படி, வேட்பாளர்கள், போஸ்டர் ஒட்டக்கூடாது; சுவர் விளம்பரம் செய்யக்கூடாது. ஆனால், ஆர்.கே.நகரில், சில கட்சிகள் ஓட்டு கேட்டு, போஸ்டர்கள் ஒட்டியுள்ளன. பல இடங்களில், அலங்கார வளைவு அமைக்கப் பட்டு உள்ளது. பண பட்டுவாடா, தடபுடல் விருந்து உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்காமல், தேர்தல் பார்வையாளர்கள் அலட்சியமாக உள்ளனர்.


தொகுதிக்குள் நுழையும் வாகனங்களையும், பெயருக்கு தான் சோதனை செய்கின்றனர்.

மாணவர்களுக்கு பயிற்சி :

இதற்கிடையில், சென்னை மாவட்ட துணை தேர்தல் அலுவலர் கந்தசாமி கூறியதாவது: ஆர்.கே.நகரில், அனைத்து ஓட்டுச்சாவடி களி லும், 'வெப்' கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. அதன் மூலம்,ஓட்டுப்பதிவு, இணையதளங் களில் நேரடியாக ஒளிபரப்பப்படும். ஓட்டுச் சாவடிக்கு வெளியே, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. அவற்றை இயக்க, கல்லுாரி மாணவர்கள், 306 பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -
3 ஆண்டு சாதனைகளை சொல்லுங்க!
அமைச்சர்களுக்கு மோடி உத்தரவு

புதுடில்லி: மத்தியில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு பதவியேற்று, மூன்று ஆண்டுகள் நிறைவடைய உள்ளதையொட்டி, அனைத்து அமைச்சர்களையும், தங்கள் துறை களில் நிகழ்த்தப்பட்ட, ஐந்து முக்கிய சாதனை களை பட்டியலிட்டு சமர்ப்பிக்கும்படி,
பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டு உள்ளார்.




கடந்த, 2014ல், நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அமோக வெற்றி பெற்றது; அந்த ஆண்டில், மே, 26ல், நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி
அமைந்தது.

மோடி தலைமையிலான ஆட்சி, அடுத்த மாதம், மூன்றாண்டுகளை நிறைவு செய்ய உள்ளது.

இதையொட்டி, அனைத்து அமைச்சர்களும்,தங்கள் துறைகளில் நிகழ்த்தப்பட்ட ஐந்து முக்கிய சாதனை களை பட்டியலிட்டு, அறிக்கை சமர்ப்பிக்கும்படி, பிரதமர் மோடி உத்தரவிட்டுள் ளார். இந்த சாதனை கள் தொகுக்கப்பட்டு, மூன்றாண்டு நிறைவு விழாவின் போது, புத்தகமாக வெளியிடப்பட உள்ளது.

பிரதமர் மோடி, ஐந்து முக்கிய அம்சங்கள் குறித்து, சாதனைப் பட்டியல் தயாரிக்கும்படி, அமைச்சர் களுக்கு உத்தரவிட்டுள்ளார். அவை வருமாறு:

* மக்களுக்கு பயன் விளைவித்த, அனைவராலும் பாராட்டப்பட்ட ஐந்து முக்கிய அம்சங்கள்

* ஒவ்வொரு அமைச்சரவையின் முக்கியத்துவம் வாய்ந்த சாதனைகள் பற்றிய குறியீடுகள்

* ஆட்சி அமைத்த,2014ல் இருந்த நிலவரம், தற்போது வரை, நிறைவேற்றப்பட்ட முக்கிய திட்டங்கள்

* செயல்பாடு, கொள்கை, திட்டம் போன்றவற்றில், செயல்படுத்தப்பட்ட மூன்று முக்கிய சீர்திருத்தங்கள்

* முக்கியமான இரண்டு சாதனைகள் பற்றிய குறிப்புகள் இந்த ஐந்து அம்சங்கள் குறித்த குறிப்புகளை பட்டியலிட்டு, அனுப்பும்படி மோடி உத்தரவிட்டுள்ளார்.
'நீட்' பாடத்திட்டம் தெரியாமல் திணறல்
மவுனம் கலைக்குமா கல்வித்துறை!

மாநில பாடத்திட்ட புத்தகங்களை மட்டும் நம்பி, 'நீட்' தேர்வுக்கு தயாராகும், தமிழ்வழி அரசுப் பள்ளி மாணவர்கள், தேர்ச்சி அடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, கல்வியாளர்கள் வருத்தம் தெரிவித்தனர்.




'நீட்' எனும், மருத்துவ படிப்பு களுக்கான தேசிய நுழைவுத் தேர்வு, சென்னை, கோவை, திருச்சி, மதுரை உட்பட, ஏழு மாவட்டங்களில், மே 7ல் நடக்கிறது. இதில் பங்கேற்க, 11.35 லட்சத்துக் கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். இத்தேர்வு நடப்பாண்டில், ஆங்கிலம்,

இந்தி தவிர, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட, எட்டு மாநில மொழிகளில் எழுதலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

என்.சி.இ.ஆர்.டி., என்ற தேசிய கல்வியியல் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பாடத்திட்ட அடிப்படையில், நீட் தேர்வில், வினாக்கள் இடம் பெறும். இப்புத்தகங்கள், ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டுமே கிடைக்கின்றன. இணையதளத்திலும், இப்புத்தகங்களின் மொழி பெயர்ப்பு பிரதி கிடைக்கவில்லை. இதனால், தமிழ் வழியில் படிக்கும் அரசு பள்ளி மாணவர்கள், பெரிதும் சிரமப்படுகின்றனர்.

தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்சங்க மாநில தலைவர் சாமி சத்தியமூர்த்தி கூறியதாவது: தமிழகத்தில், மேல்நிலை வகுப்புகளுக்கு, 15 ஆண்டுகளுக்கும் முன், பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டது.

2005ல், சில முக்கிய பகுதிகள் சேர்க்கப்பட்டு, கடின பகுதிகள் எடுக்கப்பட்டு, திருத்தங்கள்    மேற்கொள்ளப்பட்டன. என்.சி.இ.ஆர்.டி., பாடத்திட்டத்துடன், மாநில பாடத்திட்டத்தை ஒப்பிட்டால், 60 சதவீத அளவுக்கு மட்டுமே, இணையாக இருக்கும்.

எனவே, பள்ளி கல்வித் துறை சார்பில், நீட் தேர்வுக்கு, பிரத்யேக சிறப்பு கையேடு, இணையதளத்தில் வெளியிட்டால், தமிழ் வழி மாணவர்கள் பலனடைவர். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

ரகசியம் காப்போம்!

ரகசியம் காப்போம்! ரகசியங்களை பொது வெளியில் அல்லது மறைமுகமாக பிறருடன் பகிர்ந்து கொள்வது புதிதல்ல, புதிரல்ல. தினமணி செய்திச் சேவை Updated on: ...