Tuesday, April 11, 2017

Cash for vote: I-T may summon 6 more TN ministers & one MP 
 
Chennai


Income Tax sleuths are likely to summon six ministers and an MP , whose names figure on the documents seized from Tamil Nadu health minister C Vijayabaskar's residence on Friday as recipients of`90 crore for bribing voters in the rescinded RK Nagar byelection.
“The entire `90 crore, as per the records seized by us, was routed through six state ministers and a Rajya Sabha MP to the people down below in their party (AIADMK (Amma) fac tion) to distribute among the RK Nagar voters. We may have to summon all of them for questioning to probe the money trail,“ said a senior I-T official.

Meanwhile, on Monday , Vijayabaskar, actor Sarathku mar and former AIADMK MP C Rajendran appeared before income tax officials, responding to the summons served on them by the I-T investigation wing. Though summons was served on MGR Medical University vice-chancellor C S Geethalakshmi also, she did not appear before the officials.

In a related development, I-T officials raided Akash Lodge in Flower Bazaar on Monday evening to quiz a few relatives of Vijayabaskar who were staying there. “All the three persons were questioned separately . Vijayabaskar and Rajendran were let off after five hours. Sarathkumar was grilled for almost eight hours. They were asked to explain about the source of money and the contents of the documents seized during the I-T raids. Geethalakshmi will be served another summons to appear before us,“ said the official.

The health minister reached the I-T office around 11:00 am on Monday and left around 3:50 pm. “I cooperated with the I-T officials. I have not been told to appear before them again,“ said Vijayabaskar to media personnel outside the I-T office.

But I-T officials said the minister did not give convincing replies to many queries. “We will be calling him again after a few days as he did not come to the office with any preparation,“ said another official.

“We confronted him with all the documents we seized from his Chennai house, MLA hostel, a hotel in Egmore, his house in Pudukottai district and other premises,“ the official said. Vijayabaskar was also questioned about his proximity and business association with sand mining baron Sekhar Reddy . The minister, as per I-T officials, was a silent partner in Reddy's firm SRS Mines.

Sarathkumar was questioned about the transactions that allegedly happened during the dinner meeting with T T V Dhinakaran and Vijayabaskar in the city on Thursday . “The actor was not able to answer most of the questions and that is why it took more time. We will be asking him to appear once again in the other few days,“ said the official.
For tax relief, you need proof of rent paid to kin
Mumbai 
 


Recently , the Mumbai income tax appellate tribunal denied a claim on house rent allowance by a taxpayer.She had paid rent in cash to her mother, but was unable to substantiate it. On the other hand, the Ahmedabad ITAT allowed the HRA exemption claimed by a taxpayer who had paid rent to his spouse.
 
Given that the avenues av ailable to save tax are limited for the salaried class, some employees try and take the `fullest' advantage of the income tax exemption available for HRA by paying rent to a family member with whom they are residing. It is another matter if the rent is actually paid to the relative, or if the rent receipts are genuine.
Where do these seemingly contrary ITAT decisions leave the taxpayer? The bottom line is it isn't illegal to pay rent to a close relative, but it carries a risk of a deeper probe by the I-T officials and if genuineness cannot be proved, the claim would be denied, with attendant consequences. Under section 10 (13A) of the I-T Act, a salaried taxpayer can claim exemption on HRA for an accommodation occupied by him, if the property is not owned by him and he has actually incurred rent expenditure on it.

Amarpal S Chadha, partner, people advisory services at EY-India, says: “Payment of rent to a parent or spouse will not impact the eligibility to claim HRA exemption as long as the above mentioned conditions are met and the transaction is genuine.“ “The transaction should not be a mechanism to avoid tax,“ he stresses. So decisions by the Mumbai and Ahmedabad ITATs -one accepting the tax exemption claim on payment of rent to a relative and the other denying it -may seem contrary , but the orders were based on specific facts in each case.
Rent paid to spouse, HRA claim allowed: In 2013, the Ahmedabad ITAT bench in Bajrang Prasad Ramdharani's case, allowed an HRA exemption claim by the taxpayer, even though rent was paid by him to his spouse. He was living with his wife but paid her rent via bank transfers. The ITAT held that the taxpayer had fulfilled the twin requirement of occupying a house not owned by him and payment of rent.

Rent paid to mother, HRA claim disallowed: But more recently, the Mumbai bench disallowed the HRA claim by Meena Vaswani who had contended that she lived with her aging mother to take care of her and paid rent to her mother in cash.While rent receipts were obtained by her, as the transaction was with her mother, she had not entered into any formal contract. Vaswani was not able to produce proof of cash withdrawals from her bank to substantiate the rental payments.Moreover, the authorities were able to prove that she was not residing with her mother, but in another apartment nearby with her husband and daughter. The ITAT agreed with I-T authorities that the transaction was a sham to obtain a tax benefit.



தலையங்கம்
உத்தரபிரதேசம் வழிகாட்டுகிறது
த்தரபிரதேச மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் பா.ஜ.க. ஆட்சி அமைத்தது. இதுவரையில், சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாமல் 5 முறை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் யோகி ஆதித்யநாத் முதல்–மந்திரியானது யாரும் எதிர்பாராததாகும். முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் கூறியபடி, விவசாயிகளின் கடன் ரத்துசெய்வது தொடர்பான முடிவை அறிவித்தார். 86 லட்சம் சிறு, குறு விவசாயிகளுக்கு ஆளுக்கு ரூ.1 லட்சம் வரையுள்ள கடன்களை ரத்துசெய்கிறோம் என்று அறிவித்தார். இதனால் அரசாங்கத்துக்கு ரூ.36 ஆயிரம் கோடி செலவாகும் என்றும் அறிவித்தார்.

ராமநவமியையொட்டி 9 முடிவுகளை அறிவிக்கிறேன் என்றுகூறி, மேலும் சில அறிவிப்புகளையும் வெளியிட்டார். அடுத்து அவரது பார்வை கல்வி வளர்ச்சி பக்கம் சென்றது. அனைத்து அரசு பள்ளிக்கூட மாணவர்களுக்கும், தனியார் பள்ளிக்கூட மாணவர்கள் அணியும் உடைகளைப்போல 2 செட் சீருடை வழங்கப்படும். அவர்களுக்கு காலணிகள், புத்தகங்கள், புத்தகப்பைகள் வழங்கப்படும். அனைத்து அரசு பள்ளிக்கூடங்களிலும், நர்சரி வகுப்புகளிலிருந்து ஆங்கிலம் கற்றுக்கொடுக்கப்படும். இதுபோல, 3–வது வகுப்பிலிருந்து சமஸ்கிருதமும், 10–வது வகுப்பிலிருந்து மாணவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் ஒரு வெளிநாட்டு மொழியும் கற்றுக் கொடுக்கப்படும். இதுமட்டுமல்லாமல், அனைத்து வகுப்புகளிலும் மத்திய கல்வி திட்டத்தின்கீழ் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் என்று அழைக்கப்படும் என்.சி.இ.ஆர்.டி. வெளியிடும் பாடப்புத்தகங்களின் அடிப்படையிலேயே கல்வித்திட்டமும் வகுக்கப்பட்டு, மாணவர்களுக்கு புத்தகங்களும் வழங்கப்படும் என்று அறிவித்தார். ஆக, கல்வி வளர்ச்சிக்கு யோகி ஆதித்யநாத் கொடுக்கும் முக்கியத்துவம் எல்லோரையும் அவரை பாராட்ட வைக்கிறது. இதே நடவடிக்கைகளை தமிழ்நாட்டிலும் கல்வித்துறை மேற்கொள்ளவேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பமாக இருக்கிறது.

2007–ம் ஆண்டு பேராசிரியர் அனந்தகிருஷ்ணன் தலைமையிலான குழு அளித்த அறிக்கையின்படி, நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஆனால், அப்போது அவர் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாடத்திட்டத்தை மாற்றவேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தார். அந்த பரிந்துரை இன்னும் அரசால் அமல்படுத்தப்படாமல் இருக்கிறது. தற்போது மருத்துவக்கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை ‘நீட்’ நுழைவுத்தேர்வு மூலம்தான் நடக்கும் என்று உறுதியாக அறிவிக்கப்பட்டுவிட்டது. தமிழக அரசு இந்த ஆண்டு மட்டும் ‘நீட்’ தேர்வு வேண்டாம் என்று எவ்வளவோ முயற்சிசெய்தும், இன்னும் உறுதியான பதில் மத்திய அரசாங்கத்திடமிருந்து கிடைக்கவில்லை. ஒருவேளை மத்திய அரசாங்கம் உறுதியான பதிலை கொடுத்தாலும், உச்சநீதிமன்றம் அதை நிச்சயமாக அனுமதிக்காது என்பதுதான் நிதர்சனமான உண்மை. தமிழ்நாட்டில் இந்த ஆண்டு முதல் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையிலும், அடுத்த ஆண்டு முதல் என்ஜினீயரிங் படிப்பு மாணவர் சேர்க்கையிலும் கண்டிப்பாக ‘நீட்’ நுழைவுத்தேர்வு எழுதித்தான் ஆகவேண்டும். ‘நீட்’ நுழைவுத்தேர்வு கேள்விகள் அகில இந்திய அடிப்படையில் சி.பி.எஸ்.இ. கல்வித்திட்டத்தின் 11–வது மற்றும் 12–வது வகுப்பு பாடத்திட்டங்களில் உள்ள கேள்விகளைக் கொண்டு கேட்கப்படுகிறது. 
 
எனவே, உடனடியாக இந்த ஆண்டு 11–வது வகுப்பிலும், அடுத்த ஆண்டு 12–வது வகுப்பிலும் மத்திய கல்வித்திட்டத்துக்கு இணையான கல்வித்தரம் கொண்ட பாடத்திட்டங்களின் அடிப்படையிலான புத்தகங்கள் வழங்கப்படவேண்டும். தமிழ்நாட்டில் இந்த ஆண்டுக்கான 11–வது வகுப்பு பாடப்புத்தகங்களை விரைவில் அச்சடிக்கும் பணிகள் தொடங்கப்பட இருக்கிறது. பழைய பாடத்திட்டத்தை அடிப்படையாக வைத்து புத்தகங்களை மாணவர்களுக்கு வினியோகிக்காமல், ‘நீட்’ தேர்வை எதிர்கொள்ளும் வகையில் உயர்தர கல்வித்திட்டத்தை கொண்ட பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்படவேண்டும். கல்வித்துறையில் உத்தரபிரதேசம் எழுச்சியைக் காண முயற்சிகளை தொடங்கிவிட்டதுபோல, தமிழ்நாட்டிலும் கல்வித் துறையில் ஒரு மறுமலர்ச்சி காண உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.



Monday, April 10, 2017

தட்டம்மை - ரூபெல்லா தடுப்பூசி ஆபத்தானதா?

By ஜெனிஃப்ரீடா  |   Published on : 10th April 2017 02:07 AM
injection
தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி ஆபத்தானதா அல்லது பாதுகாப்பானதா என்பது குறித்து பல்வேறு வாத- பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசித் திட்டம் பிப்ரவரி 6 முதல் மார்ச் 15-ஆம் தேதி வரை நடைபெற்றது. 6 வயது குழந்தைகள் முதல் 15 வயதுவரையுள்ள சிறுவர்களுக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டது. இந்தியாவில் இந்தத் தடுப்பூசி போடுவதற்கு முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 5 மாநிலங்களில் தமிழகமும் ஒன்று.

தட்டம்மை ரூபெல்லா: மணல்வாரி அம்மை, தட்டம்மை, சின்னம்மை ஆகிய நோய்கள் வைரஸால் பரவுகின்றன. இந்த நோய் தாக்கும்போது உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தி குறையும். இதன் காரணமாக சுவாசப் பிரச்னை, மூளையில் பாதிப்பு, காதில் சீழ்வடிதல் போன்ற நிரந்த பாதிப்புகள் ஏற்படும். இதன் காரணமாக குழந்தைப் பருவத்திலேயே நோய் எதிர்ப்புச் சக்தி குறைவதால் பல நோய்கள் எளிதில் தாக்கும்.

ரூபெல்லா என்பதும் வைரஸ் பாதிப்பால் ஏற்படக்கூடிய நோய்தான். ஆனால் இந்த நோய் தாக்கியவர்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் என்ற சாதாரண அறிகுறியோடு போய்விடும். ஆனால், இந்த நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் கருத்தரிக்கும்போது, கருவில் உள்ள குழந்தைகளுக்கு இருதயம், கல்லீரல் பாதிக்கப்படும். சிறிய தலையுடன் குழந்தை பிறக்கும் அபாயம் உள்ளது.

இந்தியாவில் 2015-ஆம் ஆண்டு புள்ளிவிவரத்தின்படி, ஆண்டுக்கு 70 ஆயிரம் குழந்தைகள் தட்டம்மை நோயால் உயிரிழக்கின்றனர். உலக நாடுகளில் உயிரிழப்புகளில் 50 சதவீதம் இந்தியாவில் உள்ளது. இந்தியாவில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை விட இது அதிகமாகும். தடுப்பூசிகளால் தடுக்கப்படக் கூடிய உயிரிழப்புகளில் தட்டம்மை முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தடுப்பூசி அரசியல்: தட்டம்மை ரூபெல்லா உள்பட அனைத்து தடுப்பூசிகளுமே வியாபார நோக்கத்துடன் அரசால் அறிமுகப்படுத்தப்படுகின்றன. தடுப்பூசி மருந்துகளை ஒப்பந்தத்தின் அடிப்படையில், வாங்குவதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகின்றன. மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கும், தொழிலதிபர்களுக்கும், அரசியல்வாதிகள் மட்டுமே இதனால் பயன்பெறுகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக தேசிய சுகாதாரத் திட்டத்தின் குழந்தைகள் நல ஆலோசகரும் பிரபல குழந்தைகள் நல நிபுணருமான குமுதா கூறியது: தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசியின் விலை ரூ.150 ஆகும். குறைந்த விலையில்தான் இந்தத் தடுப்பூசி அளிக்கப்படுகிறது. அதனை வியாபார நோக்கம் என்று கூற முடியாது.

மேலும் தனியார் மருத்துவமனைகளில் சுமார் 15 ஆண்டுகளாக இந்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. குறைந்த விலை என்றாலும், அதைக் கூட வாங்க முடியாதவர்கள் இருக்கிறார்கள் என்பதால், அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக குழந்தை நல நிபுணர்கள் போராடியதன் விளைவாகவே, இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சின்னம்மை நோயானது எந்த வயதினரையும் தாக்கலாம். சின்னம்மை நோய்க்கும் தடுப்பூசி உள்ளது. ஆனால் அதன் விலை ஆயிரம் ரூபாயாகும். அதனால்தான், அதிக விலையுள்ள இந்தத் தடுப்பூசியை அரசிடம் அளிக்கும் பரிந்துரையில் முன்னிலைப்படுத்தவில்லை என்றார்.

ஆட்டிஸம் பாதிப்பு: தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் குழந்தைகளுக்கு ஆட்டிஸம் நோய் பாதிப்பு ஏற்படுகிறது என்ற தகவலும் சமூக வலைதளங்களிலும், இணையத்திலும் பரவிக்கிடக்கிறது.

இதுகுறித்த வரலாற்றைப் பார்க்கும்போது, 1998-இல் ஓர் ஆராய்ச்சியாளர் 12 ஆட்டிஸம் பாதித்த குழந்தைகளை வைத்து ஆய்வு செய்து, தட்டம்மை ரூபெல்லா நோய்க்கும், ஆட்டிஸம் பாதிப்புக்கும் தொடர்பு உள்ளது என்று ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளார். ஆனால் ஆட்டிஸம் என்பது கருவில் இருந்தே குழந்தைக்கு ஏற்படும் பாதிப்பு. பிறந்த குழந்தைக்கு போடப்படும் தடுப்பூசியால் எப்படி ஆட்டிஸம் பாதிப்பு ஏற்படும் என்று பல நிபுணர்கள் கருத்துத் தெரிவித்தனர். மேலும் 20 பெரிய நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளில் இந்தக் கருத்து முற்றிலும் தவறானது என்று நிரூபிக்கப்பட்டது. எனவே, தடுப்பூசிக்கும் ஆட்டிஸம் நோய்க்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

1.70 கோடி குழந்தைகளுக்கு தட்டம்மை ரூபெல்லா

தமிழகத்தில் 1.70 கோடி குழந்தைகளுக்கு தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி கூறியது:
தமிழகத்தில் 1.76 கோடி குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 1.70 கோடி குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
குறைவாகத் தடுப்பூசி போடப்பட்ட கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, ராமநாதபுரம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. சுகாதார மையங்கள், கிராமப்புற செவிலியர்கள் வாரத்துக்கு ஒருமுறை வழங்கும் தடுப்பூசிகளோடு, விடுபட்ட குழந்தைகளுக்கு தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசியும் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி முகாம்கள் நிறைவடைந்தாலும், ஏதாவது ஒரு கிராமமோ, பள்ளியோ, அடுக்குமாடிக் குடியிருப்போ முழுவதுமாக விடுபட்டிருந்தால், அதனைக் கண்டறிந்து தடுப்பூசி அளித்து வருகிறோம்.

ஏன் கட்டாயம்?

ஒரு காலத்தில் இந்தியாவை அச்சுறுத்திய போலியோ, பெரியம்மை உள்ளிட்ட நோய்களை முழுவதுமாக ஒழித்ததற்கு காரணம் தடுப்பூசிகள்தான். போலியோ நோய்க்கு 40 ஆண்டுகளாக தடுப்பு மருந்து அளித்தும் அதனை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை. ஆனால் அரசு தடுப்பு மருந்து திட்டமாக அறிவித்து, ஆண்டுதோறும் தொடர்ந்து தடுப்பு மருந்தை வழங்கியதன் விளைவே போலியோ முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது.

ஏற்கெனவே 123 நாடுகளில் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தியா 124-ஆவது நாடு அவ்வளவுதான்!

தமிழகத்தில் 8 இடங்களில் வெயில் சதம்

By DIN  |   Published on : 10th April 2017 04:40 AM 

தமிழகத்தில் 8 இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது. கரூர் பரமத்தியில் அதிகபட்சமாக 106 டிகிரி பதிவானது.
தமிழகத்தில் கோடை தொடங்கி நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கோடைக்காலம் தொடங்கியது முதல் கரூர் பரமத்தியில் வெப்பத்தின் அளவு தொடர்ந்து அதிகரித்துக் காணப்படுகிறது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது: தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகரித்து வருகிறது. வரும் நாட்களில் தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், வட தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும் என்றனர்.

8 இடங்களில் சதம்: ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி, தமிழகத்தில் 8 இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது.

வெயில் நிலவரம் (ஃபாரன்ஹீட்டில்)
கரூர் பரமத்தி 106
வேலூர், சேலம், தருமபுரி 103
திருச்சி, மதுரை,
பாளையங்கோட்டை 103
கோவை 101
சென்னை 98.

உயர் நீதிமன்றம் விடுவித்த குற்றவாளி சரணடைய உச்ச நீதிமன்றம் உத்தரவு

By DIN  |   Published on : 10th April 2017 12:40 AM  |
sc
கொலை வழக்கு ஒன்றில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் நேர்ந்த பிழை காரணமாக, விடுவிக்கப்பட்ட குற்றவாளியை உடனடியாகச் சரணடையுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தில்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முன்னாள் மாணவரான ஜிதேந்தர், கடந்த 1999-ஆம் ஆண்டு மார்ச் மாதம், வடக்கு தில்லியில் திருமண நிகழ்ச்சியொன்றில் புகுந்து சத்யவதி கல்லூரியின் அப்போதைய மாணவர் சங்கத் தலைவர் அனில் பதானாவை சுட்டுக் கொன்றார்.

கொலை வழக்கு ஒன்றில் ஜிதேந்தருக்கு எதிராக அனில் பதானா வாக்குமூலம் அளிக்க இருந்ததால், அவரை ஜிதேந்தர் கொலை செய்ததாகக் கூறப்பட்டது.
இந்தச் சம்பவத்துக்கு மறுநாள், அனில் பதானா கொலை செய்யப்பட்டது குறித்து காவல் துறைக்குத் தகவல் கொடுத்தவரின் தந்தையை, அவரது வீட்டுக்குச் சென்று ஜிதேந்தர் சுட்டுக் கொன்றார்.

இந்தக் கொலை வழக்குகளை விசாரித்த விசாரணை நீதிமன்றம், ஒரு வழக்கில் ஜிதேந்தருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மற்றொரு வழக்கில், எஞ்சிய காலத்தை அவர் சிறையில் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் ஜிதேந்தர் மேல்முறையீடு செய்திருந்தார். அவரது மனுவை விசாரித்த தில்லி உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் அவருக்கு அதிகப்படியான தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறி, அவரை உடனடியாக விடுவிக்குமாறு கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பரில் உத்தரவிட்டது. அதையடுத்து அவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

அதைத் தொடர்ந்து, எழுத்துப் பிழை காரணமாக தவறான உத்தரவைப் பிறப்பித்துவிட்டதாகக் கூறிய தில்லி உயர் நீதிமன்றம், அவரை உடனடியாகக் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தில்லி காவல் துறைக்கு கடந்த பிப்ரவரியில் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், அதற்குள் ஜிதேந்தர் தலைமறைவாகி விட்டார்.
இருப்பினும், ஜிதேந்தர் தனது வழக்குரைஞர் மூலமாக, கைதாவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அவரது மனுவை நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்க மறுத்ததுடன், அவரை உடனடியாகச் சரணடையுமாறு உத்தரவிட்டுள்ளது.
செல்போன் பேச்சு காட்டிக் கொடுத்ததா? ரெய்டுக்குப் பின் அமைச்சர்கள் பதற்றம்

பதிவு செய்த நாள் 10 ஏப்  2017 03:29



 தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும், அவர் தொடர்புடைய இடங்களிலும் வருமான வரித் துறையினர் தொடர்ச்சியாக ரெய்டு நடத்தியதன் பின்னணியில், டெலிபோன் பேச்சுக்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக கிளம்பிய தகவலை அடுத்து, தமிழக அமைச்சர்கள் பலரும், தற்போது, செல்போன் பேச்சுக்களை குறைத்து வருவதாகக் கூறப்படுகிறது.

சென்னை, ஆர்.கே.நகர் தேர்தலுக்கான செலவு விவரப் பட்டியல்கள், அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்திய போது கிடைத்தது. அதையடுத்து, ஆர்.கே.நகரில் தேர்தலை நிறுத்துவது குறித்து, தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.இந்நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் ஒவ்வொன்றாக, தற்போது வெளியாகி வருகிறது. இதனால், அடுத்து என்னவிதமான ஆவணம் வெளியாகுமோ என்ற பதற்றத்தில் அ.தி.மு.க.,வினர் ஆழ்ந்துள்ளனர்.

இப்படி விஜயபாஸ்கரை குறிவைத்து, வருமான வரித் துறையினர் நடத்திய சோதனைக்கு பின்னணியில், அவரது செல்போன் பேச்சுக்கள் இருப்பதாக, வருமான வரித் துறை வட்டாரங்களில் இருந்து தகவல் பரவி இருக்கிறது.

அதனால், பதற்றம் அடைந்திருக்கும் தமிழக அமைச்சர்கள் பலரும் செல்போன் பேச்சை திடீர் என்று குறைத்து விட்டதாகக் கூறப்படுகிறது. எந்த விவரமாக இருந்தாலும், நேரில் வருமாறு பலரையும் அழைக்கின்றனர்.

செல்போன் பேச்சு விவரங்களை மத்திய உளவுத்துறையினர் டேப் செய்து, அதன் அடிப்படையிலேயே வருமான வரித்துறை மூலம் ரெய்டு நடப்பதாக, அமைச்சர்கள் பலரும் அச்சத்தில் உள்ளனர்.

NEWS TODAY 14.02.2026