Thursday, April 13, 2017


அரசு விழாவில் பங்கேற்க விஜயபாஸ்கருக்கு தடை
பதவியை பறிக்கவும் பழனிசாமி ஆலோசனை


அமைச்சர் பதவியில் இருந்து, விஜயபாஸ்கரை நீக்க, முதல்வர் ஆலோசித்து வருகிறார். சென்னையில், நேற்று நடந்த, அரசு மருத்துவமனை கட்டடங்கள் திறப்பு விழாவில், அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பதிலாக, அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார்.



அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், ஆர்.கே. நகர் தொகுதி வாக்காளர்களுக்கு, 89 கோடி ரூபாய் வழங்கப்பட்டதற்கான ஆவணங் கள் சிக்கின.அந்த பணத்தை, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மூலம் வழங்கியதும், ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்த,  அமைச்சர் விஜய பாஸ்கர் பதவி விலக வேண்டும் என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. ஆனால், விஜய பாஸ்கர் அமைச்சர் பதவி யில் இருந்து விலகவில்லை.ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுவதை தவிர்க்க, அவரை அமைச்சர் பதவி யில்இருந்து நீக்க, முதல்வர் பழனிசாமி முடிவு செய்தார்; அதை தினகரன் ஏற்றுக் கொள்ளவில்லை.

இதனால், அமைச்சரவையில் இருந்து, விஜயபாஸ்கரை நீக்குவதில் சிக்கல் நீடிக்கிறது. இச்சூழ்நிலையில், நேற்று சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில், 12 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள, உள்ளிருப்பு பயிற்சி மருத்துவர்கள் விடுதி, பார்வையாளர்கள் இரவு காப்பகம், தேர்வுக் கூடம், விரிவுரையாளர்கள் அறை உள்ளிட்ட, ஏழு கட்டடங்கள் திறப்பு விழா நடந்தது.

இதில், சுகாதாரத் துறை அமைச்சர் என்றமுறையில் விஜயபாஸ்கர் பங்கேற்க வேண்டும்; ஆனால், அவருக்கு முதல்வர் பழனிசாமி தடை போட்டு விட்டார். அதனால், அவர் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக, நிதி அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்று, கட்டடங்களை திறந்து வைத்தார். பகல், 12:00 மணிக்கு மேல், தலைமை செயலகத்தில், முதல்வர் தலைமையில், மூத்த அமைச்சர்கள்

ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில், அமைச்சர் விஜயபாஸ்கரும் கலந்து கொண் டார்.கூட்டத்தில், வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை குறித்தும், விஜயபாஸ்கர் பதவி விலகல் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அவர் பதவி விலக வேண்டும் என, முதல்வர், மூத்த அமைச்சர்கள், கட்சியினர் நிர்ப்பந்தம் செய்வதால், விரைவில் அவர் பதவி விலகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

- நமது நிருபர் -
இதே நாளில் அன்று

பதிவு செய்த நாள் 12 ஏப்   2017 21:42




1930 ஏப்ரல் 13

சிறந்த தமிழ் அறிஞரும், சிந்தனையாளரும், பாடலாசிரியருமான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே, செங்கப்படுத்தான்காடு எனும் கிராமத்தில், அருணாச்சலனார் - - விசாலாட்சி தம்பதிக்கு மகனாக, 1930 ஏப்., 13ல் பிறந்தார்.பள்ளிப் படிப்பை முடித்த இவர், திராவிட இயக்கத்திலும், கம்யூனிச கொள்கையிலும் ஈடுபாடு கொண்டிருந்தார்.பாட்டாளி மக்களின் ஆசை, ஆவேசங்களை பிரதிபலிக்கும் வகையில் பாடல்கள் எழுதினார். அவர் இயற்றிய பல பாடல்கள், 'ஜனசக்தி' பத்திரிகையில் வெளியானது. 1955 ல், படித்த பெண் என்ற திரைப்படம் மூலம், பாடலாசிரியராக அறிமுகம் ஆனார். சினிமாவில் நடிக்க ஆசைப்பட்ட இவர், புகழ் பெற்ற கவிஞரானார். இவர், எம்.ஜி.ஆர்., உள்ளிட்ட பிரபல நடிகர்களுக்கு, கருத்துள்ள பல்வேறு தமிழ் பாடல்களை இயற்றியுள்ளார். 1959 அக்., 8 ல், தன் சிறு வயதில் காலமானார். அவர் பிறந்த தினம், இன்று.

எம்.பி.பி.எஸ்., சேர பிளஸ் 2 மதிப்பெண் தேவையா? : 'நீட்' தேர்வால் மாணவர்கள் குழப்பம்

'நீட்' தேர்வால், மருத்துவப் படிப்புகளுக்கு, பிளஸ் 2 மதிப்பெண் கணக்கிடப்படுமா என்ற குழப்பத்திற்கு, சுகாதாரத் துறை விளக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

நாடு முழுவதும், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்பு களில் சேர, தேசிய அளவிலான, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேர்விலிருந்து விலக்கு கேட்டு, தமிழக சட்டசபை யில் மசோதா நிறைவேற்றப் பட்டது. அதற்கு, ஜனாதிபதியின் ஒப்புதல் இன்னும் கிடைக்க வில்லை. 'நீட்' தேர்வுக்கு இன்னும், 25 நாட்களே உள்ளன. இந்நிலையில், மருத்துவ கவுன்சிலிங்கில், 'நீட்' தேர்வு மதிப்பெண்படி, மாணவர்கள் சேர்க்கப்படுவரா; பிளஸ் 2 மதிப்பெண்ணும் கணக்கிடப்படுமா என, பெற்றோர் குழப்பத்தில் உள்ளனர்.மாநிலங்களே முடிவு செய்யலாம்

இது குறித்து, கல்வியாளர்கள் கூறியதாவது: 'நீட்' நுழைவுத் தேர்வு என்பது, தகுதியை முடிவு செய்யும் தேர்வாகவே கருதப்படுகிறது. அதில் தேர்ச்சி பெற்றால் போதும். கடந்த ஆண்டில், 'நீட்' தேர்வில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் பெற்றிருந்தால் போதும் என, தனியார் கல்லுாரிகளில், மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இந்த ஆண்டு, மருத்துவ முதுநிலை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. 'நீட்' தேர்வில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணுக்கு மேல், எவ்வளவு மதிப்பெண் பெற வேண்டும் என்பதை, அந்தந்த மாநிலங்களே முடிவு செய்யலாம் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

குறைந்தபட்ச மதிப்பெண் : தமிழகத்தில், 'நீட்' தேர்வில், குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் பெற்றவர்கள், முதுநிலை படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என, சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இது போன்று, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கும், 'நீட்' தேர்வின் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் பெற்றவர்கள் தகுதி பெறலாம். அவர்களில், பிளஸ் 2வில் யார் அதிக மதிப்பெண் பெற்றிருக்கின்றனரோ, அவர்களுக்கு தரவரிசையில் முன்னுரிமை கொடுத்து, 'அட்மிஷன்' நடத்த வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். இதற்கிடையில், 'நீட்' தேர்வு மற்றும் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான அட்மிஷன் குறித்த வழிமுறைகளை, தமிழக சுகாதாரத் துறை விளக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

Wednesday, April 12, 2017

MGR’s ‘Adimaippenn’ gets digital revival

Two brothers have taken up the task of digitally reviving the soundtrack of the classic hit

To mark MGR’s centenary year, his film Adimaippenn (1969) is all set for a release following a digital revival. All the six songs in the film, composed by KV Mahadevan, were chartbusters, and are popular even today.

SP Balasubrahmanyam made his singing debut in this film with ‘Thaai Illamal Naan Illai’. Music composer duo Prasad and Ganesh (who are brothers) ensured none lost its evergreen appeal.

 “It was in an era where two-track compositions were in vogue, but nothing came in our way of remastering it in 120 tracks in the latest 5.1 format. The challenge was in retaining the essence of the solo numbers, which were in the fixed tempo. The pick of the album is definitely SPB’s ‘Aayiram Nilave Vaa’. Thuruvan and Ramalingam had played the tabla for the original. Now, we have Ganapathy rendering it,” Prasad says.

“Sai Nagaraj, an ardent MGR fan, has procured the remake rights. He has watched Adimaippenn almost 150 times and remembers every frame of the movie. His only request was for the reworked sound to retain the essence of the original — rich with bongos, drums and violin.”
Apart from S Janaki, P Suseela and TM Soundararajan crooning other songs, KV Mahadevan even managed to get Jayalalithaa to sing ‘Amma Endral Anbu’.



With over 600 devotional albums to its credit, the duo has three films — Silukuvar Patti, Kaiyile Kasu Irundha and Kapathunga Naliya Cinemavai — lined up for release.

தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக

By ஷக்தி  |   Published on : 12th April 2017 01:16 PM  | 

bairvaa_vijay

சன் டிவிக்கும் பிறந்த தினம்
தமிழ் புத்தாண்டு தினத்தில் தான் சன் தொலைக்காட்சிக்கும் பிறந்த நாள் என்பதால் அன்றைய தினம் பல சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. முக்கியமாக கடந்த 24 ஆண்டுகள் வெளிவந்த சூப்பர் ஹிட் சீரியல்களில் பணிபுரிந்தவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி, 2017-ம் ஆண்டு பொங்கல் அன்று வெளிவந்த திரைப்படம் ‘பைரவா’ என்று பல ஹைலைட்டுகளை உள்ளடக்கியுள்ளது. பரதன் இயக்கத்தில், விஜய், கீர்த்தி சுரேஷ், டேனியல் பாலாஜி நடித்துள்ள இத்திரைபப்டம் சன் டிவியில் மாலை ஆறு மணிக்கு ஒளிபரப்பாகிறது.

விஜய் டிவியில் என்ன புதுசு?



ஏப்ரல் 17, 2015-ல் வெளியான இயக்குநர் மணிரத்னத்தின் சூப்பர் ஹிட் படம் ஓகே கண்மணி விஜய் டிவியில் காலை பதினொரு மணிக்கு ஒளிப்பரப்பாகும். ஏ.ஆர்.ரஹ்மானின் துள்ளல் இசையில், பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவில் துல்கர் சல்மான், நித்யா மேனன் நடிப்பில் உருவான இத்திரைப்படத்தை ஏற்கனவே பார்த்திருந்தாலும் மறுமுறை பார்க்கலாம்.



அதனைத் தொடர்ந்து எம்.எஸ்.தோனி : தி அண்டோல்ட் ஸ்டோரி ஒளிபரப்பாகிறது. இது கிரிக்கெட் வீரர் தோனியில் வாழ்க்கையை ஒட்டி இந்தியில் எடுக்கப்பட்ட திரைப்படம். தமிழ் டப்பிங்கிலும் சூப்பர் ஹிட்டானது. இரவு எட்டு மணிக்கு விஜய் டிவியில் இந்தப் படத்தைக் காணலாம்.

ஜெயா தொலைக்காட்சியில் காஷ்மோரா



காலை 11 மணிக்கு ஜெயா தொலைக்காட்சியில் கோகுல் இயக்கத்தில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா நடித்துள்ள ‘காஷ்மோரா’ திரைப்படம் ஒளிபரப்பாகிறது. ரசிகர்கள் கொண்டாடிய வித்தியாசமான படம் இது.

ஜீ தமிழில் என்ன தமிழ்ப் படம்?



மாலை நான்கு மணிக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பாகிறது பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அருந்ததி நாயர் நடித்துள்ள‘சைத்தான் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது.



மாலை ஆறு மணிக்கு இயக்குநர் முருகதாஸின் ‘கத்தி’ ஒளிபரப்பாகிறது. விஜய், சமந்தா, சதீஷ் நடித்துள்ள இப்படத்தில் அனிருத்தின் இசை அசத்தல். விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் ரசிக்கும் படம் இது.

ஒவ்வொரு சானலிலும் அட்டகாசமான படங்கள். எதைப் பார்ப்பது எதை விடுவது என்று ரசிகர்கள் திண்டாட வேண்டாம். திரையில் பார்க்கத் தவறிய படங்களை சின்னத் திரையில் கண்டு ரசியுங்கள். திரைப்படங்களில் மட்டும் மூழ்கிவிடாமல் அக்கம் பக்கத்தில் உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களுடனும் கைகுலுக்க, மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள நேரம் ஒதுக்குங்கள். அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

எனக்கு ஒரு போன் செய்திருக்கலாமே? இளையராஜா மீது எஸ்பிபி ஆதங்கம்!

By எழில்  |   Published on : 12th April 2017 04:50 PM  |
spb_duel
Ads by Kiosked
 காப்புரிமை விவகாரம் தொடர்பாக என்னிடம் தனிப்பட்ட முறையில் தகவல் சொல்லியிருக்கலாம். அதற்குப் பதிலாக இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது மனத்தைக் காயப்படுத்தியது என்று பாடகர் எஸ்பிபி பேட்டியளித்துள்ளார்.

திரையிசைப் பயணத்தில் 50 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளதையொட்டி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உலகம் முழுவதும் பயணித்து இசைக் கச்சேரிகளை நடத்தி வருகிறார். கச்சேரியின் ஒரு பகுதியாக அமெரிக்காவில் அவரது இசைக் குழு பயணித்து வருகிறது. இந்த நிலையில் இளையராஜாவின் சார்பில் அவரது வழக்கறிஞர் எஸ்பிபிக்கும், பாடகர் சரண், பாடகி சித்ரா, உலகளவில் கச்சேரியை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நோட்டீஸ் ஒன்றை அனுப்பினார். அந்த நோட்டீஸில் இளையராஜா கம்போஸ் செய்த பாடல்களை அவரின் அனுமதி இல்லாமல் மேடையில் பாடவோ, இசைக்கச்சேரி நடத்தவோ கூடாது. அதையும் மீறிச் செய்தால் காப்புரிமை சட்டத்திற்கு எதிராகிவிடும். எனவே மிகப்பெரிய அபராதத் தொகையை சட்டப்படி தரவேண்டியிருக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் பிரச்னையை ஃபேஸ்புக்கில் தெரிவித்த எஸ்பிபி இவ்வாறு கூறினார்: இதுதான் சட்டம் என்றால் எற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். மேடைகளில் இனி பாட மாட்டோம்: இந்தச் சூழ்நிலையில் நானும், எங்கள் அணியினரும், இன்றிலிருந்து இளையராஜாவின் பாடல்களை மேடையில் பாட மாட்டோம். ஆனாலும் இந்தக் கச்சேரி நடக்கவேண்டும். கடவுளின் ஆசீர்வாதத்தில் இளையராஜா தவிர, பல இசையமைப்பாளர்களின் இசையில் நான் பாடல்கள் பாடியிருக்கிறேன். அந்தப் பாடல்களை இனிவரும் கச்சேரிகளில் பாடுவேன். என்றார். இதையொட்டி சமூகவலைத்தளத்தில் மிகப்பெரிய சர்ச்சை எழுந்துள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு எஸ்பிபி அளித்த பேட்டியில் கூறியதாவது:

1979 முதல் அமெரிக்காவில் இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறேன். இந்தமுறை என் நிகழ்ச்சிகளில் ராஜா பாடல்களைப் பாடாமல் இருந்தது மனத்தைப் பாதித்தது. ஆனால் இசை நிகழ்ச்சிகளைப் பாதிக்கவில்லை.

இந்த விவகாரம் குறித்து பேஸ்புக்கில், இதுபோல நடந்துள்ளது. அவர் பாடலைப் பாடமுடியாமல் போகலாம் என்றுதான் அறிக்கை வெளியிட்டேன். கடவுள் புண்ணியத்தில் மற்ற இசையமைப்பாளர்களுக்கும் நிறைய பாடல்கள் பாடியுள்ளேன். ஆனால் இந்த நிகழ்ச்சிகளில் ராஜாவின் பாடல்களைப் பாடமுடியாதது மனத்துக்குக் கஷ்டமாக உள்ளது.

வருங்காலத்தில் ராஜா பாடல்களைப் பாடுவேனா என்பதைக் காலம்தான் பதில் சொல்லவேண்டும். ராஜாவுக்கும் எனக்கும் எவ்வித அபிப்ராய வேறுபாடுகள் கிடையாது. நாங்கள் இப்போதும் நண்பர்கள்தான். காலம் சொன்னபடி எதுவும் நடக்கட்டும். எதையும் நான் தலைவணங்கி ஏற்றுக்கொள்வேன். எந்தப் பாடலையும் என் சொந்தம் என நினைக்கமாட்டேன். ஒவ்வொரு பாடலுக்கும் பல சொந்தக்காரர்கள் இருக்கிறார்கள்.

காப்புரிமைச் சட்டத்தைப் புரிந்துகொள்வது கஷ்டமாக உள்ளது. ராஜா பாடல்களைப் பாட அனுமதி வாங்கவேண்டும் என்பது எனக்கு நிச்சயம் தெரியாது. அப்படி முன்பே தெரிந்திருந்தால் நான் அவருக்குப் போன் செய்து உன் பாடல்களைப் பாடலாமா என்று கேட்டிருப்பேன். இப்படிக் கேட்க நான் தயங்கியிருக்கமாட்டேன்.

இந்தமுறை ஆகஸ்ட் முதல் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். எல்லா இடங்களிலும் ராஜா பாடல்களைப் பாடியே வந்தோம். ஆனால் அமெரிக்க நிகழ்ச்சிகளுக்குத் திடீரென ஏன் இவ்வாறு நடந்தது எனத் தெரியவில்லை. இதுகுறித்து ராஜாவிடம் ஒருமுறை தொலைப்பேசியில் பேசியிருக்கலாமே என்று கேட்கிறார்கள். எனக்கும் சுய மரியாதை, தன்மானம் உள்ளது இல்லையா?

மயிலையே கயிலை’ என்கிறார்கள்... மயிலாப்பூருக்கு ஏன் அந்தப் பெயர்?

எஸ்.கதிரேசன்



‘சென்னை நகரின் இதயம்' என்று சொன்னால், மயிலாப்பூரைத்தான் சொல்லவேண்டும். மயிலாப்பூருக்குத்தான் எத்தனை பெருமை?! 'மயிலையே கயிலை' என்கிறார்கள்... மயிலாப்பூருக்கு ஏன் அந்தப் பெயர்?

வரலாற்று ரீதியாக மயிலாப்பூர் பல ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது. 'கயிலையே மயிலை; மயிலையே கயிலை' என்று சொல்லும்படி மயிலாப்பூரைச் சுற்றிலும் ஏழு சிவாலயங்கள் அமைந்திருக்கின்றன. மேலும் மயிலையின் காவல் தெய்வமாக கோலவிழி அம்மனும், முண்டகக்கண்ணி அம்மனும் அருள்பாலிக்கின்றனர். திருவள்ளுவர் பிறந்ததும்கூட மயிலாப்பூரில்தான் என்று சொல்லப்படுகிறது. இப்படி பல மகத்துவங்கள் நிறைந்த மயிலாப்பூருக்கு அந்தப் பெயர் வந்த கதையும், அதன் பின்னணியில் இருக்கும், தொண்டர்களின் பெருமையை உணர்த்துவதான சம்பவமும் பற்றி தெரிந்துகொள்ளலாமே...



'திருத்தொண்டர்களின் பெருமை, இறைவனை விடவும் பெரிது' என்று அந்தச் சிவப் பரம்பொருளுக்கே அன்னை உணர்த்திய அற்புதம் நிகழ்ந்த திருத்தலம் மயிலாப்பூர்.

கயிலையில் ஒருநாள் சிவபெருமான், அன்னை உமையவளுக்கு வேதப் பொருளை விளக்கிக்கொண்டிருந்தார். அந்தவேளையில் அழகான மயில் ஒன்று, அன்னையின் எதிரில் வந்து தோகை விரித்து ஆடியது. அதன் ஆட்டம், ஜகன்மாதாவின் சிந்தையைச் சிதறச் செய்தது. மயூரத்தின் ஆட்டத்தில் லயித்துப்போனாள்.



சிவபிரான் சினம் கொண்டார். ‘‘தேவி, நான் வேதப்பொருள் பற்றி கூறுகையில் நீ மயிலின் ஆட்டத்தை ரசிக்கிறாயே’’ என்று கேட்கிறார். அதற்கு இறைவி, ‘‘மயில், நம் குழந்தை முருகனின் வாகனம் அல்லவா? முருகனுக்குத் தொண்டு செய்கிறது அல்லவா? அதைப் பார்த்ததுமே எனக்கு முருகனின் நினைவு வந்துவிட்டது. அதனால்தான் நான் மயிலைப் பார்த்துக் கொண்டிருந்தேன்’ என்று கூறினாள்.
‘அப்படியானால் என்னை விடவும் அந்த மயில் உனக்கு உயர்வாகத் தெரிகிறதா?’ என்று ஈசன் கேட்டார்.



‘சுவாமி! தொண்டர்கள்தான் பெரியவர்கள் என்பது சத்தியம் அல்லவா? அப்படி முருகனுக்கு தொண்டு செய்யும் மயிலும் பெரிதுதானே’ இது இறைவியின் கேள்வி.

‘அதை உன்னால் நிரூபிக்க முடியுமா?’

‘முடியும்!’

‘எப்போது?’

‘இதோ, இப்போதே’

உடனே அன்னை உமையவள், எந்த மயிலின் காரணமாக இந்த விவாதம் தொடங்கியதோ அந்த மயிலின் வடிவம் கொண்டு, நாம் தரிசித்துக் கொண்டிருக்கும் மயிலாப்பூர் தலத்தை அடைகிறாள்.

தேவி மயிலாக உலவிக் கொண்டிருக்கும் அந்த மயிலாப்பூரிலேயே இறைவியின் பிரிவைத் தாங்கமாட்டாமல், ஈசனும் அங்கிருந்த புன்னைமரத்தின் அடியில் லிங்க வடிவில் எழுந்தருளுகிறார்.

அவருக்கு பூஜை செய்து நைவேத்தியம் செய்ய அங்கு யாரும் இல்லையே! தொண்டர்கள் இல்லாமல் ஈசன் தவித்திருப்பது கண்டு மயில் உருவம் கொண்டிருந்த அன்னை, அருகில் இருந்த பொய்கையில் நீராடி, தன் அலகினால் மலர்களையும் கனிகளையும் எடுத்து வந்து சிவலிங்கதுக்கு அர்ப்பணிக்கிறாள். அன்னையின் தொண்டில் மகிழ்ந்த சிவபெருமான் அன்னைக்குத் தரிசனம் தந்தார். அன்னை சுய உருவம் ஏற்றாள்.



‘தேவி! தொண்டர்களின் பெருமையை உலகத்தவர் உணர்ந்திடவே நாம் இந்த நாடகத்தை நடத்தினோம். உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்’ என்றார். கருணையே வடிவானவள் அல்லவா இறைவி!

‘ஐயனே! தொண்டர்தம் பெருமையை உலகறியச் செய்ய தாங்கள் எழுந்தருளிய இத்தலத்திலேயே தங்கள் சாந்நித்யம் நிலைத்திருக்க வேண்டும்.’ என வேண்டினாள். அப்படியே வரம் தந்த சிவபெருமான், ‘தேவி! நீயும் இங்கே வேண்டுவோர்க்கு வேண்டுவன எல்லாம் தரும் கற்பகமாக நிலைத்திருப்பாயாக’’ என அருளினார். இப்படி அம்மையும் அப்பனுமாய் இன்றைக்கும் மயிலையில் எழுந்தருளி, மனமுருக வேண்டுவோர்க்கு வேண்டியதெல்லாம் அருள்புரிந்த வண்ணம் இருக்கின்றனர்.



மயிலையின் தல வரலாறே தொண்டர்தம் பெருமையை உலகத்தவர்க்கு உணர்த்தியதன் காரணமாகத்தான், மயிலையில் அறுபத்துமூவர் விழா தனிச்சிறப்பு பெறுகிறது. மயிலாக அன்னை இறைவனை வணங்கி அருள் பெற்றதால்தான் மயிலாப்பூர் என பெயர் பெற்றது.

818 Medical Colleges in India, Maximum in UP, Maharashtra, Tamil Nadu: Health Ministry tells Parliament Written By : Divyani PaulPublished On 15 Feb 2026 11:00 AM  |  Updated On 15 Feb 2026 11:00 AM New Delhi: The Union Ministry of Health and Family Welfare has informed the Lok Sabha that India currently has a total of 818 medical colleges, including AIIMS and Institutes of National Importance (INIS) across India. The details were shared in response to an Unstarred Question on February 6, 2026. Replying to queries raised by Shri Jagannath Sarkar regarding districts without government medical colleges and plans for prioritising high-population districts, Minister of State for Health and Family Welfare Shri Prataprao Jadhav said that the National Medical Commission (NMC) has reported a total of 818 medical colleges nationwide. Also Read: 18 AIIMS Functional, 4 Under Construction: Health Minister tells Parliament As per the list shared in this regard, Uttar Pradesh has the highest number of medical colleges at 88 (51 government and 37 private), followed by Maharashtra with 85 (43 government and 42 private), and Tamil Nadu with 78 colleges (38 government, 40 private). Karnataka has 72 (24 government and 48 private), Telangana has 66 (37 government, 29 private), and Rajasthan has 49 (34 government, 15 private). However, several smaller States and UTs, such as Andaman & Nicobar Islands, Arunachal Pradesh, Chandigarh, Goa, Mizoram, Nagaland and Sikkim have only one medical college each.

818 Medical Colleges in India, Maximum in UP, Maharashtra, Tamil Nadu: Health Ministry tells Parliament Written By : Divyani PaulPublished O...