Saturday, April 29, 2017

UGC orders audit of 10 central universities

Each committee will audit two universities and submit a report in a month.

The UGC has ordered an audit of 10 central universities at the behest of the HRD Ministry to probe complaints of financial, administrative and academic irregularities.
The higher education regulator set up five committees on April 25 to conduct an “academic, research, financial and infrastructure audit” of Aligarh Muslim University (AMU), Pondicherry University, Allahabad University, Hemwati Nandan Bahuguna Garhwal University in Uttarakhand, Central University of Jharkhand, Central University of Rajasthan, Central University of Jammu, Mahatma Gandhi Antarrashtriya Hindi Vishwavidyalaya in Wardha, University of Tripura and Hari Singh Gour University in MP.
Each committee will audit two universities and submit a report in a month.
AMU and the Pondicherry University will be inspected by a panel with IIT Madras professor Shripad Karmalkar, Maharshi Dayanand Saraswati University VC Kailash Sodani, Guwahati University professor Mazhar Asif and professor Sankarshan Basu of IIM Bangalore as members.
Indian Council of Philosophical Research chairman S R Bhatt, Delhi University professor Muneesh Kumar, management expert Rakesh Mohan Joshi, professor Ganesh Kumar N of IIM Indore and retired bureaucrat Vijay Kumar Gupta have been asked to audit the central universities of Jharkhand and Rajasthan.
Audit reports of Allahabad University and Hemwati Nandan Bahuguna Garhwal University will be submitted by a panel
comprising Gautam Desiraju of IISc Bangalore, DU professor Prakash Singh, JNU professor Amita Singh and professor G. Sabarinathan of IIM Bangalore, among others.
The Central University of Jammu, Mahatma Gandhi Antarrashtriya Hindi Vishwavidyalaya, the University of Tripura and Hari Singh Gour University will be inspected similarly by two panels.

NEET: Medical entrance server was hacked, two held, say cops

Raids are also being held in Delhi, Bengaluru, Bihar and other cities to nab the rest of the accused, which include some doctors, police said.

Written by Mahender Singh Manral | New Delhi | Published:April 29, 2017 4:44 am

With the arrest of two people, Delhi Police have cracked a case wherein computer servers were allegedly hacked during the National Eligibility and Entrance Test (NEET), held to admit students into postgraduate medical courses in December, 2016. Raids are also being held in Delhi, Bengaluru, Bihar and other cities to nab the rest of the accused, which include some doctors, police said. Police said the arrested persons have been identified as Abhishek Singh, a native of Varanasi, and Atul Vats, a native of Patna.

“Police received information on January 20 that some people cracked the online medical entrance examination, held between December 5 and December 13, after hacking the servers. With the help of technical surveillance, police identified the accused and teams were formed to unearth the conspiracy,” police sources said, adding that a case has been registered following a complaint by Inspector Ashish Kumar, who was the leading the investigation team before Inspector Lokendra Chauhan took over.

The two arrests were made on April 10 and the men were taken into police custody for 10 days. Explaining the modus operandi of the gang, police said they charged a huge amount of money from aspirants after assuring them of good ranks in the NEET postgraduate examination.

“The accused zeroed in on aspirants and struck a deal with them after taking a hefty amount. Vats met a person looking after the software used for the examination and roped him in. Singh, meanwhile, asked some doctors for help. The doctors would sit in a hotel in Dwarka and take the exam from there,” a senior officer said.

“On the day of the examination, the candidate at the examination centre would be able to send the questions to the doctors as the servers were compromised. The paper was solved by experts sitting in a hotel in Dwarka, who would send the answers back to them,” an officer said.

“Since the exam was computer-based, an agency from the US providing Educational Testing Services is being roped in to unearth the larger conspiracy,” the officer said

NO ONE CAN COMPEL A WOMAN TO LOVE SAYS SUPREME COURT


காஷ்மீர் இளைஞர்கள் கல் எறிவதை முதலில் நிறுத்தணும்: சுப்ரீம் கோர்ட்

பதிவு செய்த நாள் 29 ஏப்
2017
05:22



புதுடில்லி: 'ஜம்மு - காஷ்மீரில், பாதுகாப்பு படையினர் மீது, கற்களை வீசி தாக்குதல் நடத்தும் மாணவர்கள், வன்முறையை கைவிட வேண்டும்; கல்லுாரிகளுக்கு திரும்ப வேண்டும். அப்போது மட்டுமே அமைதி திரும்பும்' என, சுப்ரீம் கோர்ட் நேற்று அறிவுரை கூறியுள்ளது.

வழக்கு:

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், பாதுகாப்பு படையினருக்கு எதிராக, பிரிவினைவாத அமைப்புகள் போராட்டங்களை துாண்டி வருகின்றன. பல்வேறு இடங்களில், வீரர்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், 'அங்கு, பாதுகாப்பு படையினர், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும். வீரர்கள், பெல்லட் குண்டுகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்' என வலியுறுத்தி, ஜம்மு - காஷ்மீர் மாநில வழக்கறிஞர்கள் சங்கத்தினர், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

ஒத்துழைப்பு:

இந்த வழக்கு நேற்று, தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது: ஜம்மு - காஷ்மீரில் அமைதி திரும்ப, அரசு மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்துவதை, மாணவர்கள் முதலில் நிறுத்த வேண்டும்.வன்முறையை கைவிட்டு, கல்வி நிறுவனங்களுக்கு திரும்ப வேண்டும். அரசு பேச்சு நடத்துவதற்கு ஏற்ற சூழல் உருவாக வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

அரசியல் கட்சிகளுடன் பேச்சு :

ஜம்மு - காஷ்மீர் விவகாரம் தொடர்பான வழக்கு, நேற்று, சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி ஆஜரானார்.அப்போது அவர், கூறியதாவது:ஜம்மு - காஷ்மீரில் நிலவும் பிரச்னைக்கு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் பேச்சு நடத்த, மத்திய அரசு தயாராக உள்ளது. அதேசமயம், பிரிவினைவாத அமைப்புகளுடன் அரசு பேச்சு நடத்த முடியாது. சட்டத்திற்கு புறம்பாக செயல்படுபவர்களுடன் பேசுவதற்கு வாய்ப்பில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

பெண்கள் படை :

ஜம்மு - காஷ்மீரில், பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசி பெண்கள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அவர்களை கட்டுப்படுத்த, பெண்கள் மட்டுமே உள்ள, துணை ராணுவ படை பிரிவை, அங்கு அனுப்ப, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. உள்துறை அமைச்சக அதிகாரிகளின் ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

வினோத் கன்னா இறுதிச்சடங்குக்கு வராத இளம் நடிகர்கள் மீது ரிஷி கபூர் சாடல்!

By எழில்  |   Published on : 28th April 2017 04:32 PM
rishi1

பிரபல ஹிந்தி நடிகரும், மக்களவை உறுப்பினருமான வினோத் கன்னா (70) உடல்நலக் குறைவு காரணமாக மும்பையில் வியாழக்கிழமை காலமானார். திரைத் துறையில் மட்டுமன்றி பொது வாழ்க்கையிலும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திக் காட்டிய வினோத் கன்னாவின் மறைவு, அவரது ரசிகர்களையும், தொகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரைத் துறையினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

வயோதிகம் மற்றும் நீர்ச்சத்து குறைவு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவனையொன்றில் கடந்த மார்ச் 31-ஆம் தேதி வினோத் கன்னா அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அதற்கான சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், வியாழக்கிழமை காலை வினோத் கன்னாவின் உயிர் பிரிந்தது. மறைந்த வினோத் கன்னாவுக்கு கவிதா கன்னா என்ற மனைவியும், நான்கு குழந்தைகளும் உள்ளனர்.

நேற்று மாலை வினோத் கன்னாவுக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. அதில் அமிதாப் பச்சன், ரிஷி கபூர் உள்ளிட்ட மூத்த நடிர்கள் கலந்துகொண்டார்கள்.

இதுகுறித்து ரிஷி கபூர் ட்விட்டரில் கூறியதாவது:
அவமானகரமானது. இந்தத் தலைமுறையின் எந்தவொரு நடிகரும் வினோத் கன்னாவின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளவில்லை. இத்தனைக்கும் அவர்களுடன் அவர் பணிபுரிந்துள்ளார். மரியாதை செலுத்த இந்தத் தலைமுறை நடிகர்கள் கற்றுக்கொள்ளவேண்டும். நான் இறந்தபிறகும் இதுபோன்ற சூழலுக்குப் பழகவேண்டும். இன்றைய நட்சத்திரங்கள் மீது கோபமாக உள்ளேன் என்று கூறியுள்ளார்.

பா.ஜ.க. காட்டில் மழை!

By ஆசிரியர்  |   Published on : 28th April 2017 05:43 AM  |  

தில்லியில் மாநகராட்சிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. பெரும் வெற்றியை அடைந்திருப்பதும், ஆம் ஆத்மி கட்சி தோல்வியைத் தழுவியிருப்பதும், காங்கிரஸ் ஏறத்தாழ நிராகரிக்கப்பட்டிருப்பதும் எதிர்பாராததாகவோ, வியப்பளிப்பதாகவோ இல்லை. பா.ஜ.க.வின் வெற்றிக்கு நரேந்திர மோடியின் செல்வாக்கு காரணமாக இருந்திருக்கிறது என்பதும், ஆம் ஆத்மி கட்சியின் பின்னடைவுக்கு அந்தக் கட்சியின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டனர் என்பதும் தெளிவு.

கடந்த பத்தாண்டுகளாக பா.ஜ.க. ஆட்சியில், தில்லியின் மாநகராட்சிகள் செயல்பட்ட விதம் போற்றுதலுக்கு உரியதாக இல்லை. பா.ஜ.க. தலைமையிலான மூன்று மாநகராட்சிகளும் தில்லியை, குப்பைகளின் தலைநகரமாகவும், சாக்கடைத் தண்ணீரின் தலைநகரமாகவும், காற்று மாசின் தலைநகரமாகவும், டெங்கு உள்ளிட்ட நோய்த் தொற்றுகளின் தலைநகரமாகவும் மாற்றியதுதான் சாதனை என்று கூறவேண்டும். அப்படி இருந்தும்கூட, மூன்றாவது முறையாக தில்லிவாழ் மக்கள் பா.ஜ.க.வுக்கே வாக்களித்திருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம், பா.ஜ.க.வின் மீதான நம்பிக்கையால் அல்ல; ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸும் பா.ஜ.க. அளவுக்குக்கூட செயல்படாது என்கிற அவநம்பிக்கையில்தான்!
சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் உத்தரப் பிரதேசத்திலும், உத்தரகண்டிலும் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, தில்லி மாநகராட்சித் தேர்தல்களிலும் பா.ஜ.க. வெற்றி பெற்றிருப்பது எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு நிலைபெற்றிருக்கிறது என்பதைக் காட்டுகிறது. இதுவரை இந்தியாவில் நடந்த எந்தவொரு மாநகராட்சித் தேர்தலிலும் இந்த அளவுக்குப் பிரதமரின் பெயரையும், சாதனைகளையும் முன்வைத்துப் பிரசாரம் நடந்ததாக சரித்திரமே இல்லை. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் மாநகராட்சி நிர்வாகம் சிறப்பாக செயல்படும் என்று வாக்காளர்கள் நம்பும் அளவுக்கு மோடி அலை வீசுகிறது என்பதுதான் உண்மை.

பிரதமரின் செல்வாக்கை பயன்படுத்தியதால் மட்டுமே பா.ஜ.க. மூன்று மாநகராட்சிகளையும் கைப்பற்றி விட்டது என்று சொன்னால் அது முழுமையான உண்மையாக இருக்காது. முந்தைய மாநகராட்சி உறுப்பினர்களில் பெரும்பாலானோரை மாற்றியது மட்டுமல்லாமல், ஒவ்வொரு பகுதியிலும் அதிகம் வசிக்கும் பிரிவினரையும் கணக்கில் எடுத்துக் கொண்டு திட்டமிட்டு வேட்பாளர்களை நிறுத்தியதும் வெற்றிக்கு முக்கியமான காரணம். பா.ஜ.க. தனது வாக்குகளைத் தக்க வைத்துக் கொண்டிருப்பதும், காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியில் ஊடுருவி இருப்பதும், மூன்று மாநகராட்சிகளையும் கைப்பற்றி வெற்றிவாகை சூட முடிந்ததற்கு இன்னொரு காரணம்.

ஆம் ஆத்மி கட்சியின் செல்வாக்குச் சரிவுதான் தில்லியில் மூன்று மாநகராட்சிகளையும் பா.ஜ.க.வால் கைப்பற்ற முடிந்ததற்கு முக்கியமான காரணம். மின்சார மானியம், தண்ணீர் கட்டணத்திற்கான மானியம் ஆகிய இரண்டு தேர்தல் வாக்குறுதிகளைத் தவிர, ஏனைய வாக்குறுதி எதையும் ஆம் ஆத்மி கட்சி நிறைவேற்றவில்லை. எதற்கெடுத்தாலும் மத்திய அரசிடம் மோதல் போக்கைக் கடைப்பிடித்ததும், தில்லியின் எல்லா பிரச்னைகளுக்கும் துணைநிலை ஆளுநரையே காரணம் காட்டித் தப்பித்ததும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலிடமும், ஆம் ஆத்மி கட்சியின் மீதும் மக்களுக்கு வெறுப்பை அதிகரித்ததே தவிர அனுதாபத்தை ஏற்படுத்தவில்லை.
2015 தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 70 இடங்களில் 67 இடங்களை வென்று சரித்திரம் படைத்த ஆம் ஆத்மி கட்சி, இரண்டே ஆண்டுகளில் இந்த அளவுக்கு செல்வாக்குச் சரிவை எதிர்கொண்டதற்கு, அந்தக் கட்சித் தலைமையின் அளவுக்கு மீறிய எதிர்பார்ப்பும் பேராசையும்தான் காரணம். தில்லியில் பெற்ற செல்வாக்கைத் தொடர்ந்து, தேசிய அளவில் மக்களவைத் தேர்தலில் நிற்க முற்பட்டதும், பிரதமர் நரேந்திர மோடிக்கு மாற்று என்று தன்னைக் காட்டிக் கொள்ளும் விதத்தில் வாராணசியில் அவரை எதிர்த்துப் போட்டியிட்டதும், சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் பஞ்சாபிலும், கோவாவிலும் போட்டியிட முற்பட்டதும் தில்லியின் மீதான கவனத்திலிருந்து முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை திசைதிருப்பிவிட்டன.

2014 மக்களவைத் தேர்தலில் 65.07% வாக்குகளும், 2015 தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 67.08% வாக்குகளும் பதிவாகின என்றால், இப்போது நடைபெற்ற தில்லியின் மூன்று மாநகராட்சிகளுக்கான தேர்தலில் வாக்களிக்க முற்பட்டவர்கள் வெறும் 54% பேர் மட்டுமே. 13% வாக்காளர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. இந்த 13% வாக்காளர்களும் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஆம் ஆத்மி கட்சியை வெற்றி பெறச் செய்தார்கள். பா.ஜ.க.வுக்கும் காங்கிரஸுக்கும் மாற்று வேண்டும் என்று அன்று விரும்பியவர்கள்.

தில்லி மாநகராட்சித் தேர்தல் முடிவுகளால் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பது காங்கிரஸ்தான். காங்கிரஸ் மேலிடத்தின் மீதான அதிருப்தியில், தேர்தலுக்கு முன்னால் சில தலைவர்கள் கட்சியிலிருந்தே விலகிவிட்டனர். மூன்று முறை முதல்வராக இருந்த, மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருக்கும் ஷீலா தீட்சித்தைப் பிரசாரத்துக்கே அழைக்கவில்லை. தேர்தலை எதிர்கொள்ளும் திறமைகூட இல்லாத நிலைமைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டு விட்டது தான் மிகப்பெரிய சோகம்.

தில்லி மாநகராட்சித் தேர்தல் முடிவுகள் ஆம் ஆத்மி கட்சிக்கு மக்கள் அளித்திருக்கும் எச்சரிக்கை மணி. அக்கட்சி, அடுத்த மூன்று ஆண்டுகளில் இழந்த செல்வாக்கைப் பெறப்போகிறதா, இல்லை, சரித்திரத்தில் ஒரு சுருதிபேதமாக மறையப்போகிறதா?

NEWS TODAY 31.01.2026