Tuesday, May 2, 2017

100 எம்பிபிஎஸ் வேகத்தில் ஜியோ பைபர் : அடுத்த இலவச யுத்தம் தயார்.!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ இன்டஸ்ட்ரீஸ் 4 ஜி தொலைத் தொடர்பு சேவைகள் அதிகாரப்பூர்வமாக இயங்குவதோடு பல சலுகைகளை தற்ப்போது அளித்துள்ளது. மேலும் இந்தியாவில் பைபர் (எப்டிடிஇ) என்ற அகல அலைவரிசை சேவைகளை அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் இன்டர்நெட் வேகம் அதிகமாக வாய்ப்புகள் உள்ளது.

தற்போது வரும் ஜியோ பைபர் 4 ஜி தொலைத் தொடர்பு சேவைகளில் பல்வேறு மாற்றங்கள் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பைபர் முன்னோட்டம்: இந்த ஜியோ பைபர்(எப்டிடிஇ) முன்னோட்டம் வரவிருக்கும் வரவிருக்கும் வாரங்களில் அறிமுகப்படுத்தப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் 4ஜி தொலைத் தொடர்பு சேவைகளில் பல்வேறு முன்னேற்றங்களைப் பெற்று வருகிறது ஜியோ நிறுவனம்

பிராட்பேண்ட்: பைபர் பிராட்பேண்ட் 1ஜிபி பிஎஸ் வரை வழங்கப்படும் மேலும் 100 எம்பிபிஎஸ் வரை வேகத்தை வழங்கும் தன்மை கொண்டவையாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. ஜியோ பைபர் பிராட்பேண்ட் மும்பையில் தொடங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதன் பின் புனேவில் தொடங்க திட்டமிட்டுள்ளது ஜியோ நிறுவனம்.

வலைதளம்: தற்போது ஜியோ பைபர் அதிகாரப்பூர்வ வலைத்தளம் இன்னும் உருவாக்கப்படவில்லை கூடிய விரைவில் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோ 4ஜி சேவையை பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் கொண்டு உருவாக்கப் படுகின்றன.

இணையப் பயனர்கள்: இந்தியாவில் தற்போது அதிக எண்ணிக்கையில் இணையப் பயனர்கள் உள்ளன. பெரும்பான்மையானவர்கள் 2 ஜி, 3 ஜி, மற்றும் 4ஜி போன்ற வயர்லெஸ் இணைப்புகளைபப் பயன்படுத்துகின்றனர். மேலும் கம்பி இணைப்புகளில் எசிடி மற்றும் ஐஎஸ்பி-களின் வருகையின் காரணமாக சற்று முன்னேற்றம் தெரிந்துள்ளது.

ஜியோ பைபர் தாக்கம்: ஏர்டெல் சமீபத்தில் வி-பைபர் அறிமுகத்தை அறிவித்தது, இதனால் மிகப் பெரிய அளவிற்க்கு மாற்றம் ஏற்ப்பட்டது. மேலும் இதன் வேகம் 100 எம்பிபிஎஸ் அளவிற்க்கு முதலிடத்தில் உள்ளது. மேலும் தற்போது வரும் ஜியோ பைபர் மிகப் பெரியஅளிவற்க்கு வேகம் மற்றும் தொழில்நுட்பங்களை கொண்டு ஏர்டெல்க்கு போட்டியாக வரவுள்ளது.
 Tirupati darshan ticket now at head post office

Residents of Salem planning for a pilgrimage to Tirupati can now book special darshan tickets through the Head Post Office here.

A press release from the Senior Superintendent of Post Offices, Salem East Division, said that the Department of Posts had launched this facility from April 26 and one can obtain Rs. 300 ticket for darshan at 10 a.m., 11 a.m., 12 noon and 1 p.m. The release said that the entry ticket permits registration for six persons and one of the members of the group can obtain the ticket from the post office. He has to upload the pictures of other group members and should bring the Aadhaar card of all the six members for registration.


Registration can be done prior to 56 days. For details contact, 0427-2261180.

வடபழனியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

By DIN  |   Published on : 02nd May 2017 04:34 AM  |  

சென்னை வடபழனியில் புதன்கிழமை முதல் போக்குவரத்தில் (மே 3) தாற்காலிகமாக மாற்றம் செய்யப்படவுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி: கோயம்பேட்டிலிருந்து அசோக்பில்லரை நோக்கிச் செல்லும் அரசுப் பேருந்துகள் அனைத்தும் 100 அடி சாலையில் உள்ள வடபழனி மேம்பாலத்தின் மேலே சென்று தெற்கு சிவன் கோயில் அருகில் காவல் ஆய்வாளர் குடியிருப்பு முன் நின்று செல்லும்.
அசோக்பில்லர் மார்க்கம் செல்லும் பயணிகள் காவல் ஆய்வாளர் குடியிருப்பு முன் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய பேருந்து நிறுத்தத்தைப் பயன்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறது. அசோக்பில்லரில் இருந்து வரும் அரசுப் பேருந்துகள் அனைத்தும் தெற்கு சிவன் கோயில் தெரு முன் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி விட்டு வடபழனி மேம்பாலத்தின் மேலே சென்று கோயம்பேடு சென்றடையும்.

கோயம்பேடு பேருந்து நிலையம் வழியாகச் செல்லும் பயணிகள் தெற்கு சிவன் கோயில் தெரு முன் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்தப் போக்குவரத்து மாற்றம் புதன்கிழமை (மே.3) முதல் தாற்காலிகமாக அமலுக்கு வருகிறது.

ஐ.டி. துறைக்கு காத்திருக்கும் ஆபத்து?

By -எஸ்.சந்திரசேகர்  |   Published on : 01st May 2017 02:50 PM  |   

ஏற்கெனவே உலகளாவிய பொருளாதார சிக்கலால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சி மந்தமடைந்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அதிரடிகள், ஆஸ்திரேலியாவின் முட்டுக்கட்டைகள், சிங்கப்பூர், நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் அறிவிக்கப்பட்டுள்ள விசா கட்டுப்பாடுகள் என இந்திய ஐ.டி. நிறுவனங்களுக்கு அடிமேல் அடி விழுந்து வருகிறது.

அமெரிக்காவின் முன்னணி ஆலோசனை நிறுவனமான மெக்கென்ஸி இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை குறித்து ஆய்வு நடத்தியது. அதில், அடுத்த 3-4 ஆண்டுகளில் சுமார் 50 சதவீத ஊழியர்கள் குறைக்கப்படலாம் எனத் தெரிவித்துள்ளது.

இந்தத் துறையில் தானியங்கி மென்பொருள்களின் செயல்பாட்டால் 30% வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. நடுத்தர திறன் வேலைவாய்ப்புகள் 8% வரையும், உயர் திறன் வேலைவாய்ப்புகள் 56% வரையும் பாதிக்கப்படலாம் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்தியாவின் பிபிஓ துறையும் சரிவை சந்திக்கும் என கூறுகிறது ஆய்வு. அடுத்த 5 ஆண்டுகளில் இத்துறையில் சுமார் 3.7 லட்சம் வேலைவாய்ப்பு இழப்பு ஏற்படும். தானியங்கி செயல்பாடுகளை பயன்படுத்துவதால், இந்தியாவில் 69 சதவீதமும், சீனாவில் 77 சதவீதமும் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படலாம் என உலக வங்கியும் அதன் பங்குக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் ஐ.டி. துறையில் முதலிடத்திலுள்ள டிசிஎஸ்ஸூக்கு அடுத்து அதிகம் பேர் பணியாற்றுவது, காக்னிசென்ட் நிறுவனத்தில். அமெரிக்க நிறுவனமாக இருந்தாலும் இதன் 75% ஊழியர்கள் இந்தியாவில்தான் உள்ளனர். சுமார் 2.6 லட்சம் ஊழியர்களைக் கொண்டுள்ள இந்த நிறுவனம் 5% ஊழியர்களை வெளியேற்றப் போவதாக வெளிப்படையாகவே அறிவித்துள்ளது.

தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ பணிநீக்கத்தைத் தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக ஊழியர்களின் செயல்திறன் அடிப்படையில் சோதனை நடத்தி 600 பேரை உடனடியாக நிறுவனத்தைவிட்டு வெளியேற்றியுள்ளது. நடப்பு நிதியாண்டில் ஊழியர்களின் பணிநீக்கம் 2000 வரை உயரும் என்றும், வர்த்தக நிலை சீராகும் வரை இந்தப் பணிநீக்கம் தொடரும் எனவும் விப்ரோ அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இன்போசிஸ் நிறுவனத்தில் பணிநீக்கம் மட்டுமின்றி புதிய பணியாளர்கள் தேர்வும் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் இன்போசிஸ் சுமார் 17,857 புதிய ஊழியர்களை பணி நியமனம் செய்தது. ஆனால், 2016-17 நிதியாண்டில் 6,320 ஊழியர்களை மட்டுமே சேர்த்துள்ளது. இது கிட்டத்தட்ட 60% குறைவு.
இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பிரவீண் ராவ் ஒரு பேட்டியில் கூறும்போது, நிறுவனத்தில், "15-20 ஆண்டு அனுபவம் பெற்ற ஊழியர்கள் நிறுவனத்தின் சொத்து என்பதற்குப் பதிலாக சுமையாக மாறுகின்றனர்; அதிக அனுபவம் பெற்ற ஊழியர்கள் புதிய தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டு நிறுவனத்துக்குப் பயன்பட வேண்டும்' எனக் கூறி சீனியர் ஊழியர்கள் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளார்.
அடுத்து வரும் காலம் தகவல் தொழில்நுட்பத் துறையினருக்கு வசந்த காலமாக இருப்பது சந்தேகமே.

மூன்று நாள்களில் ரூ. 500 கோடி வசூலை அள்ளியது பாகுபலி 2

By DIN  |   Published on : 01st May 2017 03:28 PM  |
baahubali_2_90xxcc

ஒரு இந்தியப் படம் முதல் மூன்று நாள்களில் ரூ. 500 கோடி வசூல் அடைவது சாத்தியமா?

கனவில் கூட நினைக்கமுடியாத இந்த வசூலை அடைந்து மிகப்பெரிய சாதனை செய்துள்ளது பாகுபலி 2.

முதல் நாளன்று தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் என நான்கு மொழிகளிலும் சேர்த்து ரூ. 121 கோடி அள்ளியது. ஹிந்தியில் ரூ. 41 கோடியும் இதர மொழிகளில் ரூ. 80 கோடியும் கிடைத்தது. அதன்பிறகு நாளுக்கு நாள் அதன் வசூல் அதிகமாகிக்கொண்டே வருகிறது.

ஹிந்தி பாகுபலி 2 இந்தியாவில் முதல் மூன்று நாள் வசூலாக ரூ. 128 கோடியைப் பெற்றுள்ளது. வெள்ளியன்று ரூ. 41 கோடி, சனி ரூ. 40.5, ஞாயிறு ரூ. 46.5 கோடி. இது ஒரு சாதனை வசூல். சுல்தான், டங்கல் படங்களை விடவும் டப்பிங் படமான பாகுபலி 2 அதிக வசூல் அள்ளியிருப்பது பாலிவுட்டை அசரவைத்துள்ளது. ஹிந்திக்கு என எந்தவொரு பாலிவுட் நடிகர்களையும் படத்தில் நுழைக்காமல் தென்னிந்திய நடிகர்களைக் கொண்டு எடுக்கப்பட்ட பாகுபலி 2, முதல் மூன்று நாள் வசூலில் இதர ஹிந்திப் படங்களின் வசூலை மிஞ்சியிருப்பது மகத்தான சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
தற்போது முதல் மூன்று நாள்களில் இந்தியா முழுக்க ரூ. 385 கோடி வசூலாகியுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளன. இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவில் இதன் சாதனைப் பயணம் தொடர்கிறது.

வட அமெரிக்காவில் முதல் மூன்று நாள்களில் மட்டும் ரூ. 65 கோடி வசூல் கிடைத்துள்ளது. அமெரிக்காவில், கடந்த வார இறுதியில் அதிக வசூல் பெற்ற படங்களில் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது பாகுபலி 2. இதனால் ஹாலிவுட்டின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஒரு இந்தியப் படத்தால் டாப் 10-ல் இடம் பிடிக்கமுடியும் என்று நிரூபித்துள்ளது. வெளிநாடுகளில் முதல் மூன்று நாள்களில் ஒட்டுமொத்தமாக ரூ. 120 கோடி கிடைத்துள்ளது.  

இதையடுத்து உலகம் முழுக்க முதல் மூன்று நாள்களில் ரூ. 500 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்று இதுவரையிலான அத்தனை சாதனைகளையும் உடைத்துள்ளது பாகுபலி 2. இதற்கு முன்பு வேறு எந்த இந்தியப் படமும் வசூலில் இத்தகைய சாதனைகளைப் படைத்ததில்லை. ஒரே மொழியில் என இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம் என நான்கு மொழிகளிலும் வசூலில் சாதனை படைப்பதால் ஒட்டுமொத்தமாக இத்தகைய வலுவான வசூலைப் பெறமுடிகிறது.

இன்று விடுமுறை தினம். கோடை விடுமுறை காலம் வேறு. எனவே இந்தப் படத்தின் வசூலும் சாதனை முறியடிப்புகளும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கல்வி சிறந்த தமிழ்நாடு!!

By ஆசிரியர்  |   Published on : 01st May 2017 02:26 AM  | 

கல்வித் துறையில் தமிழகத்துக்கு சிறப்பான இடமிருந்த காலம் ஒன்று இருந்தது. அந்தத் தலையாய இடம், இப்போது டஜன் கணக்கில் பல்கலைக்கழகங்கள் வந்துவிட்ட நிலையில் மேலும் உயர்ந்திருக்க வேண்டும். ஆனால், சென்னைப் பல்கலைக்கழகம் மட்டுமல்ல, தமிழகத்திலுள்ள எந்தவொரு பல்கலைக்கழகமும் சர்வதேச அளவில் கல்வியின் தரத்துக்காக உயர்த்திப் பிடிக்கப்படுகிறதா என்றால் இல்லை. சில தனியார் தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களால் தமிழகத்தில் மானம் காப்பாற்றப்பட்டு வருகிறது என்பதுதான் உண்மை நிலை.

பள்ளிக் கல்வியின் தரமே கேள்விக்குறியாக இருக்கிறது. தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வில் நமது மாணவர்களால் போட்டியிட முடியாது என்று கூறி விலக்குக் கேட்கும் நிலையில்தான் நாம் இருக்கிறோமே தவிர, ஏனைய மாநிலங்களின் கல்வித் தரத்தைவிடத் தமிழகத்தின் கல்வித் தரம் உயர்ந்தது என்று நெஞ்சை நிமிர்த்தி நம்மால் சொல்லிக் கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் உயர்கல்வியில் நாம் சர்வதேச அளவில் போட்டி போட முடியாமல் இருப்பதில் வியப்பொன்றும் இல்லை.

தமிழகத்தின் முக்கியமான மூன்று பல்கலைக்கழகங்கள் சென்னை, மதுரை காமராசர், அண்ணா பல்கலைக்கழகங்கள். இதில் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் கடந்த 2015 ஏப்ரல் 8-ஆம் தேதி முதல் துணைவேந்தர் இல்லாமல் இயங்குகிறது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்த இரா. தாண்டவன் கடந்த 2016 ஜனவரி 17-ஆம் தேதி ஓய்வு பெற்றார். இன்று வரை, அடுத்த துணைவேந்தர் நியமிக்கப்படாமல் பல்கலைக்கழக நிர்வாகம் இயங்கி வருகிறது.

அண்ணா பல்கலைக்கழகம் இந்தியாவின் மிகவும் முக்கியமான தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களில் ஒன்று. சுமார் 426 சுயநிதித் தனியார் பொறியியல் கல்லூரிகளும், ஆறு அரசுப் பொறியியல் கல்லூரிகளும், மூன்று அரசு உதவி பெறும் தனியார் பொறியியல் கல்லூரிகளும் இந்தப் பல்கலைக்கழத்தின்கீழ் இயங்குகின்றன. அப்படிப்பட்ட முக்கியமான பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த எம். ராஜாராமின் பதவிக் காலம் கடந்த 2016 மே 26-ஆம் தேதி முடிவடைந்தது. அங்கு இன்னும் அடுத்த துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கல்யாணி மதிவாணனின் பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்பே அடுத்த துணைவேந்தரைப் பரிந்துரைக்க தேடல் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதேபோல, சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கான தகுதியாளர்களைப் பட்டியலிட துணைவேந்தரின் பதவிக் காலம் முடிவடைவதற்குப் பத்து நாள்களுக்கு முன்பே தேடல் குழு அமைக்கப்பட்டு விட்டது. ஆனால், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தர் ராஜாராமின் பதவிக் காலம் முடிந்து ஆறு மாதத்திற்குப் பிறகுதான் தேடல் குழுவே அமைக்கப்பட்டது என்றால் எந்த அளவுக்கு இங்கு கல்வி முக்கியத்துவம் பெறுகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

நியாயமாக ஆட்சியாளர்களுக்கும் துணைவேந்தர் நியமனங்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இருக்கக் கூடாது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலக் குறைவுதான் துணைவேந்தர் நியமனங்கள் தாமதிக்கப்பட்டதற்குக் காரணம் என்று கூறப்படுமானால், நமது நிர்வாக துறையில் ஏதோ கோளாறு இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். 2015 ஏப்ரல் மாதத்திலும், 2016 ஜனவரி மாதத்திலும், 2016 மே மாதத்திலும் மதுரை, சென்னை, அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர்களின் பதவிக் காலம் முடிவடைந்தபோது, ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. நமது நிர்வாக இயந்திரத்தின் மெத்தனத்திற்கு முதல்வரின் உடல்நலக் குறைவு காரணமாக்கப்படுவதை ஏற்க முடியாது.

துணைவேந்தர் இல்லாத நிலையில், உயர்கல்வித் துறைச் செயலரின் தலைமையிலான குழுவால் பல்கலைக்கழகங்கள் நிர்வகிக்கப்படுகின்றன. இந்த அதிகாரிகளால் எப்படி பல்கலைக்கழத்தின் அன்றாடப் பிரச்னைகளை எதிர்கொள்ள முடியும்? துணைவேந்தர் இல்லாததால் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா சென்ற ஆண்டு நடைபெறவில்லை. இதுவரை இல்லாத அளவுக்கு தற்போது சென்னைப் பல்கலைக்கழகம் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது.

பல்கலைக்கழகங்களில் ஆய்வுகள், புதிய பாடத்திட்டங்களைப் புகுத்துதல் போன்ற எல்லா செயல்பாட்டிற்கும் துணைவேந்தரின் பங்களிப்பு அவசியம். துணைவேந்தர் இல்லாததால் தமிழகத்தின் முக்கியமான மூன்று பல்கலைக்கழகங்கள் முடங்கிக் கிடக்கின்றன. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் இல்லாததோடு பதிவாளரும்கூட இல்லாத நிலைமை. தமிழகத்திலுள்ள13 பல்கலைக்கழகங்களில் 9 பல்கலைக்கழகங்களுக்கு முழுநேர பதிவாளர் நியமிக்கப்படவில்லை; எட்டு பல்கலைக்கழகங்களில் தேர்வு கட்டுப்பாட்டாளர் பதவி நிரப்பப்படவில்லை.

இத்தனை பிரச்னைக்கும் காரணம் தமிழக அரசு மட்டும்தானா என்றால் இல்லை. தேடல் குழுக்களின் பரிந்துரைகள் ஆளுநர் மாளிகையில் தேங்கிக் கிடக்கின்றன. பத்து நாட்களுக்கு முன்னால் முக்கியத்துவம் இல்லாத தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத் துணைவேந்தரை நியமித்திருக்கிறார் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ். அந்த முக்கியத்துவம் சென்னை, மதுரை காமராஜர், அண்ணா பல்கலைக்கழகங்களுக்கு தரப்படாததன் காரணத்தை அவர்தான் விளக்க வேண்டும்.

பல்கலைக்கழகங்களுக்கெல்லாம் வேந்தராக இருப்பவர் மாநில ஆளுநர். தமிழகத்துக்கு முழுநேர ஆளுநரே நியமிக்கப்படாமல் இருக்கும்போது பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தர் நியமிக்கப்படாமல் இருப்பதில் வியப்பென்ன இருக்கிறது?

வனமில்லையேல் மழையில்லை

By எஸ். பாண்டி  |   Published on : 01st May 2017 02:29 AM  |   

தேனி மாவட்டத்தில் வெள்ளிமலைப் பகுதியில் உற்பத்தியாகும் மூல வைகையாறு தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட மக்களின் நீர்த் தேவையை பல ஆயிரம் ஆண்டுகளாக தீர்த்து வந்தது.
ஆங்கிலேயர்கள் வருகைக்குப் பின் சாகுபடி முறையில் மாற்றம் செய்ததால், நீர்த்தேவை அதிகரித்தது. பருவமழையும் மாறி, மாறி பெய்ததால் சீரான அளவில் நீர்வரத்தும் இல்லை.

இதனால் அதிக அளவு நீர்வரத்து இருக்கும் காலங்களில் அதனை தேக்கி வைத்து வறட்சி காலங்களில் பயன்படுத்துவதற்காக ஆண்டிபட்டி அருகே வைகை அணை கட்டப்பட்டது.

கட்டப்பட்டதில் இருந்து இதுவரை 28 முறை இந்த அணை, தன் முழு கொள்ளளவை எட்டிப் பிடித்துள்ளது. இதில், 1,38,102.45 மில்லியன் கன அடி தண்ணீர் வீணாக வெளியேறி கடலில் கலந்துள்ளது என்பது வேதனையான விஷயம்.

ஆனால் இந்த நீரை கண்மாய் மற்றும் குட்டைகளில் தேக்கி வைக்க முடியாமல் போனதற்கு காரணம், அவற்றை முறையாகத் தூர்வாராமல் விட்டதுதான்.

மேலும் வைகை அணை கட்டப்பட்டு 50 ஆண்டுகளைக் கடந்து விட்ட நிலையில், தற்போது அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் 20 அடிக்கு மேல் சேறும், சகதியுமாக கிடக்கிறது. இந்த சேறு, சகதியை அகற்ற இதுவரை ஆண்ட எந்த அரசும் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை.
வைகை அணையின் முக்கிய நீராதாரமாக விளங்குவது வருசநாடு அருகே உள்ள மூல வைகையாகும். இங்குள்ள அடர்ந்த வனப்பகுதி சூற்றுச்சூழல் பூங்கா போன்றது. இங்கு யானை முதல் பல்வேறு வகையான விலங்கினங்கள் உள்ளன.

அதோடு அரியவகை மரங்களும் சிங்கவால் குரங்கு, இருவாட்சிப் பறவை, சாம்பல் நிற அணில் போன்ற அரியவகை பறவை,விலங்கினங்களும் உள்ளன. இங்கு உள்ள வெள்ளிமலைப் பகுதியில் மழை தரும் மரங்களான சோலா, ஆல், அரசு போன்ற மரங்களை வெட்டி சாய்த்து விட்டு, வெப்பக் காற்றை வெளியிடும் இலவம் மற்றும் முந்திரி மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு விளைநிலங்களாக மாற்றப்பட்டுள்ளன. இதனால் விலங்குகள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை இல்லாததால் கேரள வனப்பகுதிக்கு விலங்குகள் இடம் பெயர்ந்து செல்கின்றன. இதனால் பருவநிலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டு, மழை பொய்த்து வருகிறது.

பல ஆண்டுகளுக்கு முன் மூல வைகையாற்றில் எப்போதும் நீர்வரத்து இருக்கும். ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக நீரின்றி இந்த ஆறு வறண்டு காணப்படுகிறது. மரங்களை வளருங்கள் என்று கூறுவோர், வெள்ளிமலைப்பகுதியில் மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மாறாக வனங்களை அழிப்பவர்களுக்கு ஆதரவாக அரசியல்வாதிகள் பலர் போராடினர். அவர்கள் அன்று போராடியதன் விளைவுதான் இன்று வைகை அணையில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி.

எனவே உடனடியாக வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான வெள்ளிமலை, அரசரடி, வருசநாடு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை போர்க்கால அடிப்படையில் நாம் அகற்றியாக வேண்டும்.

மழையை வரவழைக்கும் மரங்களான சோலா, ஆல், அரசு போன்ற மரக்கன்றுகளை வனப்பகுதியில் நடவு செய்ய வேண்டும். நீர்வரத்துகளில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மரக்கன்றுகளை நடுவதால் மழை பொழிவது நிச்சயம் என்று இயற்கை ஆர்வலர்கள் உறுதி கூறுகிறார்கள்.
அண்மையில் வைகை நதியில் தெர்மகோல் மிதக்க விடப்பட்ட திட்டம் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது. எந்த அரசியல்வாதியும் தண்ணீர் பற்றாக்குறையை பற்றி கவலைப்படாத நேரத்தில் அதைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓர் அமைச்சர் நினைத்தது நல்ல விஷயம் தான்.

ஆனால் தண்ணீரை மூட வேண்டிய அவசியம் இல்லை. மாறாக மழையை பெறுவது தான் நமது முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் என நீரியல் நிபுணர்ககள் தெரிவித்துள்ளனர்.

மேலும், வீட்டுக்கழிவுகள், மண் கழிவுகள் மற்றும் இறந்த உயிரினங்களின் உடல்கள் தண்ணீரில் அடித்து வரப்பட்டு வைகை அணையை வந்தடையும் போது, அவற்றை மீன்கள், நண்டுகள், நீர்க்காக்கைகள், கூழைக்கிடா போன்ற உயிரினங்கள் உட்கொண்டு வந்ததால் நீர் சுத்தமாக்கப்பட்டது.
அவ்வாறு இருக்கும் போது தெர்மகோலை அணை தண்ணீரில் மிதக்க விட்டால் அதில் எந்த உயிரினங்களும் வாழ முடியாது. அணை நீரில் உள்ள அனைத்து உயிரினமும் அழிந்து விடும்.

இதனால் தண்ணீர் மாசடைந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். எனவே அறிவுபூர்வமாக சிந்தித்து வெள்ளிமலைப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை தரும் மரங்களை நடவு செய்ய வேண்டும்.
அத்துடன் வைகை அணையை தூர்வாருவதுடன் ஐந்து மாவட்டங்களில் உள்ள கண்மாய், நீராதாரங்களையும் தூர்வாரி மேம்படுத்த வேண்டும்.
இவை நடைபெற்றாலே பருவமழை தவறாமல் பெய்து, ஆண்டு முழுவதும் ஐந்து மாவட்டங்களுக்கும் வறட்சி இல்லாமல் போகும்.

எனவே குளுகுளு அறையில் அமர்ந்து யோசிக்காமல், களத்தில் இறங்கி நடை
முறைக்கு ஏற்றதை செயல்படுத்தி வறட்சியை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

NEWS TODAY 31.01.2026