Wednesday, May 3, 2017

பத்து ரூபாய் நாணயமா? விரட்டியடிக்கும் வங்கி.

34 லட்சத்துடன் தவிக்கும் பால் நிறுவனம்


ten rupees coin
 
34 லட்ச ரூபாய் மதிப்புள்ள பத்து ரூபாய் நாணயங்களை வாங்க ஆக்ஸிஸ் வங்கி மறுப்பதாக, விஜய் பால் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் சோமசுந்தரம் குற்றம்சாட்டியுள்ளார்.

திருச்சி மாவட்டம், துறையூரில் விஜய் பால் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் சோமசுந்தரம், நிதி பொது மேலாளர் பன்னீர்செல்வன் ஆகியோர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்புக்குப் பிறகு, பால் உற்பத்தியாளர்களிடம் 34 லட்ச ரூபாய் மதிப்புள்ள நாணயங்களை பெற்றுக்கொண்டோம்.

இந்த நாணயங்களை மாற்றுவதற்காக திருச்சி மண்ணச்சநல்லூர் ஆக்ஸிஸ் வங்கிக்குச் சென்றோம். அப்போது, நாணயங்களை வைக்க வங்கியில் இடமில்லை எனத் திருப்பி அனுப்பிவிட்டனர். ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை எனப் பலரிடம் முறையிட்டோம். அப்படியிருந்தும் நாணயங்களை வாங்க மறுக்கின்றனர். இதனால், விவசாயிகளும் நாங்களும் பாதிக்கப்படுகிறோம்' எனக் குற்றம்சாட்டினர்.

'ஜெயலலிதா செய்தது தப்புதான்'' - நறநறக்கும் நாஞ்சில் சம்பத்

த.கதிரவன்

ஆதரவு என்றாலும் எதிர்ப்பு என்றாலும், நாஞ்சில் சம்பத்தின் வார்த்தைகளில் காரம் அதிகம் இருக்கும். பல்வேறு அணிகளாகப் பிரிந்து நிற்கும் அ.தி.மு.க-வின் இன்றைய சூழல் மற்றும் அரசியல் நிலவரங்கள் குறித்த நமது கேள்விகளுக்கு நாஞ்சில் சம்பத் பொறுமையாக அளித்த பதில்கள் இங்கே...



''ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி அணிகள் இணைப்பை ஆதரிக்கிறீர்களா?''

''ஆதரவு தெரிவிக்க வேண்டிய தேவையும் இல்லை. இணையவேண்டிய அவசியமும் இல்லை.''

''அணிகளை இணைக்கும் முயற்சியில் இரு தரப்பினரும் மும்முரமாக இருக்கிறார்களே...?''

''நீங்கள் சொல்வதுபோல் இரு அணிகளும் பேச்சுவார்த்தையில் மும்முரமாக ஈடுபட்டு வெற்றி பெற்றால் மகிழ்ச்சிதான்!''

''அணிகள் இணையவேண்டிய அவசியமில்லை என்று கூறிவிட்டு, 'இணைந்தால் மகிழ்ச்சிதான்' என்று சொல்வதை எப்படி எடுத்துக்கொள்வது?''

''இப்போதும் சொல்கிறேன்... இணைய வேண்டிய தேவையோ, அவசியமோ கிடையாது. ஒரு கட்சியை காட்டிக்கொடுத்து, தென்திசை குமரி முதல் திருத்தணி மலையின் எல்லைவரையில் இருக்கிற தொண்டர்களுக்கு மன உளைச்சலைத் தந்த ஒரு பச்சைத் துரோகியை ஏன் தோளிலே தூக்கிவைத்துக் கொஞ்ச வேண்டும் என்றுதான் நான் கேட்கிறேன்... அதற்கு என்ன அவசியம் வந்தது?''

''சசிகலா - டி.டி.வி தினகரன் இருவரும் அ.தி.மு.க-வில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்ற ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கையை எடப்பாடி பழனிசாமியும் ஏற்றுக்கொள்கிறார். இந்த சூழலிலும், நீங்கள் எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கிறீர்களா?''

''டி.டி.வி தினகரன் தமிழக அரசியலில் பெருந்தன்மையின் அடையாளம். 'நான் விலகியிருப்பதன் மூலம் கட்சிக்கும் ஆட்சிக்கும் பாதுகாப்பு என்றால், நான் விலகிக் கொள்கிறேன்' என்று அவர் சொன்னார். ஆனால், அதற்கும் இதற்கும் நீங்கள் முடிச்சுப் போடக்கூடாது.''

''டி.டி.வி தினகரன் விலகியிருப்பது பெருந்தன்மையின் அடையாளம் என்கிறீர்கள். ஆனால், எழுத்துபூர்வமாக எழுதிக்கொடுத்து விலகாமல், அ.தி.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பில் இன்னமும் தொடர்கிறாரே....?''

''எழுத்துபூர்வமாக கொடுக்கவேண்டிய தேவை இல்லை. அப்படி எழுத்துபூர்வமாக எழுதிக் கேட்பதற்கு இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? 'நிபந்தனை இல்லாமல் பேச்சுவார்த்தை' என்று சொல்லிவிட்டு, அடுத்த நிமிடமே நிறம் மாறுகிற இந்தப் பச்சோந்தியிடத்தில் ஏன் பேசவேண்டும்?''

''டி.டி.வி தினகரனும் கைதாகி சிறைவாசத்தில் இருக்கும் இந்த இக்கட்டான சூழ்நிலையில், அ.தி.மு.க-வை வழிநடத்திச் செல்லும் தலைவர் என்று யார் இருக்கிறார்கள்?''

''டி.டி.வி தினகரன் மட்டும்தான் இருக்கிறார். இந்தக் கைது என்ன நிரந்தரமா? அவர் என்ன வெளியே வரவே முடியாதா? வழக்குகளும் வாய்ப்பூட்டுச் சட்டங்களும் ஒன்றும் நிரந்தரமானது அல்ல. அடக்குமுறைகளையும் ஆபத்துகளையும் அறைகூவல்களையும் தாண்டித்தான் ஒரு தலைவன் உருவாக முடியும். அப்படி காலத்தின் கருவறையில் இருந்து டி.டி.வி தினகரன் என்ற தலைவன் உருவாகி வருகிறான். இதுதான் வரலாற்றுக் கட்டாயம்; வரலாற்றுத் தேவை. எனவே அவர்தான் அ.தி.மு.க-வை வழி நடத்துவார்.... அவர்தான் வழிநடத்த வேண்டும்.''

''அப்படியென்றால், 'டி.டி.வி தினகரன் கட்சியை விட்டு ஒதுங்கிவிட்டதாகக் கூறியது கபடநாடகம்' என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியது உண்மைதானே...?''

''அவர் போடுவதுதான் கபட நாடகம். 13, 14-ம் தேதி எம்.ஜி.ஆருக்கு நூற்றாண்டு விழா என்று சொல்லி பேச்சு வார்த்தைக்கு ஏன் வரவேண்டும்? எதற்கு இந்த நாடகம்?''

''ஆரம்பத்தில் இருந்தே, 'சசிகலாவும் தினகரனும் கட்சியை விட்டு விலக வேண்டும்' என்பதுதானே ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் நிபந்தனையாக இருக்கிறது?''

''அதைச் சொல்ல இவர் யார்? இவர்தான் இந்தக் கட்சியை உருவாக்கியவரா? கட்சிக்கு வெற்றியை உருவாக்கித் தந்ததாக அவருக்கு ஏதாவது பங்கு இருக்கிறதா? இந்தக் கட்சிக்காக சிறை சென்றவரா? சித்திரவதை அனுபவித்தவரா? காலில் விழுந்து காரியம் சாதிப்பவருக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து கேட்கிறீர்கள்...''



''உங்கள் கூற்றுப்படி எந்தத் தகுதியும் இல்லாத ஓ.பன்னீர்செல்வத்தைத்தான், இரண்டு முறை தமிழக முதல்வராக அடையாளப்படுத்தினாரா ஜெயலலிதா?''

''ஜெயலலிதாவால் ஒன்றும் அடையாளம் காட்டப்படவில்லை. ஜெயலலிதா எல்லோரையும்தான் அடையாளம் காட்டுவார்.''

''ஓ.பன்னீர்செல்வத்தை இருமுறை முதல்வராகத் தேர்ந்தெடுத்த ஜெயலலிதாவின் தேர்வே தவறானது என்கிறீர்களா?''

''ஆமாம்... தப்புதான்.
'நன்றாற்றல் உள்ளும் தவறுண்டு அவரவர்
பண்பறிந்து ஆற்றாக் கடை' என்ற குறளைப் போல...
ஒரு தகுதியற்றவரை, ஒரு பச்சைத் துரோகியை, கட்சியைக் காட்டிக் கொடுக்கிறவரை ஜெயலலிதா கட்சியில் வைத்திருந்ததே தப்புதான்!''

''2001-ல் முதல்வராக்கிய அதே பச்சைத் துரோகியைத்தான் 2014-லும் முதல்வராக்கினார் ஜெயலலிதா. என்று சொல்கிறீர்களா?''

''தெரியாது சார்... தெரியாது. துரோகிகள் தெரியாது. மனிதர்களைப் போல் ஒரு கயவர். அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது. துரோகிகளை அடையாளம் காணமுடியாது.''

''தினகரனை எதிர்ப்பதாலேயே ஓ.பன்னீர்செல்வம் பச்சைத் துரோகி என்று கண்டுபிடித்துவிட்டீர்களா?''

''அவரை அரசியலில் அறிமுகம் செய்து ஜெயலலிதாவுக்கு அடையாளம் காட்டி ஆளாக்கியவர் டி.டி.வி தினகரன்தான். எனவே, ஜெயலலிதாவுக்கு அவர் விசுவாசமாக இருக்கிறாரோ இல்லையோ... டி.டி.வி தினகரனுக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் காலமெல்லாம் விசுவாசமாக இருக்கவேண்டிய கடமை ஓ.பன்னீர்செல்வத்துக்கு உண்டு. அந்த நன்றி மறந்து இன்று அவர் நாடகம் போடுகிறார். அவ்வளவுதான்...!''

''தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்னைகளில் கவனம் செலுத்தாமல், பிரிந்து சென்ற அணியினரை இப்படித் திட்டித் தீர்ப்பதிலேயே கவனம் செலுத்திவருவது, எந்த வகையான அரசியல்?''

''இது ஒரு பிரச்னையே கிடையாது... தமிழகம் முழுக்க 35 இடங்களில், மே தின விழா பொதுக்கூட்டங்கள் நடந்திருக்கின்றன. மந்திரி சபைக் கூட்டம் நடந்திருக்கிறது. ஆக கட்சியும் ஆட்சியும் நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. இந்தப் பச்சைத் துரோகிக்கு நேரம் ஒதுக்காமல், இருக்கிற வேலையைப் பார்த்துக்கொண்டு போவதுதான் நல்லது.''

''நீட் தேர்விலிருந்து விலக்கு வாங்கமுடியவில்லை, விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வில்லை... இதை எப்படி சிறந்த ஆட்சி என்று சொல்வது?''

''நீட் தேர்வுக்கு விலக்கு எல்லாம் நீங்கள் மோடியிடம்தான் கேட்கவேண்டும். குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று தரவேண்டிய கடமை மத்திய அரசுக்குத்தான் இருக்கிறது. ஆனால், மத்திய அரசு பாராமுகமாகவே நடந்துகொள்கிறது.''

''ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது ஜல்லிக்கட்டு விவகாரத்தில் எடுத்த விடா முயற்சியை இப்போதைய முதல்வர் எடுக்கவில்லை... மத்திய அரசுக்கு போதிய அழுத்தம் தரவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?''

''எடப்பாடி பழனிசாமியும் மத்திய அரசுக்கு இதுகுறித்து கடிதம் எழுதிவிட்டார்... நேரிலும் போய் பார்த்துப் பேசிவிட்டார். ஆனால், மோடி தலைமையிலான இந்த மத்திய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதையும் தமிழக அரசுக்கு செய்யாது. உங்களுக்குத் தெரியாதா?''

''தமிழக நலன்களுக்காக மத்திய அரசிடம் போராடும் வலிமையோ அல்லது இணக்கத்துடன் நடந்துகொள்ளும் சாதுர்யமோ இப்போதைய முதல்வருக்கு இல்லையா?''

''இணக்கமாக இருக்கவேண்டும் என்றுதான் நாங்களும் விரும்புகிறோம்... எதிர்பார்க்கிறோம். ஆனாலும் அப்படி இணக்கமாக இருப்பதற்கான எந்த அறிகுறியும் என்னுடைய கண்களுக்குத் தெரியவில்லை.''



''ஜல்லிக்கட்டுக்காக அவசரச் சட்டம் கொண்டுவரச் செய்த ஓ.பன்னீர்செல்வத்தின் சாதனை அவருக்கான நிர்வாகத் திறனைக் காட்டுகிறதுதானே...?''

''ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில், காவல்துறையின் அடக்குமுறையை ஏவிவிட்டு, தமிழக அரசுக்கு அவப்பெயரை வாங்கித் தந்தவர் ஓ.பன்னீர்செல்வம். அவசரச் சட்டம் என்ன ஓ.பன்னீர்செல்வமா கொண்டுவந்தார்?''

''அவருடைய முயற்சியின் பலனாகத்தானே கொண்டுவரப்பட்டது...?''

''எல்லோரும்தான் முயற்சித்தோம்.... சசிகலா வழிகாட்டுதலால்தான் ஜல்லிக்கட்டு விஷயத்தில் அவ்வளவு பெரிய வெற்றியைப் பெறமுடிந்தது.''

''டெல்லியில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு, 'விவசாயிகள் வறட்சியால் தற்கொலை செய்யவில்லை' என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சொல்லியிருப்பது துரோகம் இல்லையா?''

''140 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படியொரு வரலாறு காணாத வறட்சி இன்றைக்கு தமிழகத்தில் வந்திருக்கிறது. மாநில அரசாங்கம் தனது அதிகாரத்துக்கு உட்பட்டு, தன்னுடைய நிதி நிலைமைக்கு ஏற்ப விவசாயிகளுக்கு எவ்வளவு உதவியாக இருக்கமுடியுமோ... அந்தளவுக்கு இருந்து வந்திருக்கிறோம். மாநில உரிமைகள் எதனையும் நாங்கள் காவு கொடுக்கவில்லை. விவசாயிகளின் மீது கரிசனத்தோடுதான் தமிழக அரசு இருக்கிறது. நாங்கள் கேட்டுள்ள வறட்சி நிதியை மத்திய அரசு தந்தாலே, அழிவின் விளிம்பில் இருந்து விவசாயிகளைக் காப்பாற்ற ஏதுவாக இருக்கமுடியும்.

விவசாயப் பிரதிநிதிகள், அய்யாக்கண்ணுவின் தலைமையில் டெல்லியில் நடத்தியப் போராட்டத்தை மதித்து அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்தாலே விவசாயிகள் மகிழ்ச்சியடைவார்கள்.''

'' 'விவசாயிகள் வறட்சியால் தற்கொலை செய்யவில்லை' என்று தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருப்பது விவசாயிகளுக்கு செய்த துரோகமா... இல்லையா?''

''அதுகுறித்து அபிடவிட் தாக்கல் செய்தவர்களைத்தான் நீங்கள் கேட்க வேண்டும்.'

மருத்துவ மேற்படிப்பில் இடஒதுக்கீடு வழக்கு: முரண்பட்ட கருத்தால் 3-வது நீதிபதி விசாரிக்கப் பரிந்துரை 

பால சரவணக் குமார்



மருத்துவ பட்ட மேற்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு ரத்துக்கு எதிரான வழக்கில், நீதிபதிகள் இருவரின் முரண்பட்ட கருத்தால், மூன்றாவது நீதிபதி விசாரிக்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக நீதிபதி புஷ்பா சத்ய நாராயணா, ''மருத்துவ பட்ட மேற்படிப்பில் 50% இடஒதுக்கீடு செல்லாது. இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின்படியே தமிழக அரசு நடக்க வேண்டும். இதில் தமிழக அரசின் விளக்கக் குறிப்பேடு பொருந்தாது'' என்று தீர்ப்பளித்திருந்தார்.

இந்த தீர்ப்புக்கான மேல்முறையீடு வழக்கு இன்று(புதன்கிழமை) நீதிபதிகள் கே.கே.சசிதரன் மற்றும் எஸ்.எம்.சுப்பிரமணியம் தலைமையில் விசாரணைக்கு வந்தது. இதில் இருவரும் மாறுபட்ட கருத்துகளை முன்மொழிந்தனர்.

நீதிபதிகளின் முரண்பட்ட கருத்து

குறிப்பாக நீதிபதி சசிதரன் மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டுக்கு விதிக்கப்பட்ட தடை செல்லாது என்று தீர்ப்பளித்தார். நீதிபதி சுப்பிரமணியம் ''இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின்படியே இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும். பல ஆண்டுகள் நடைமுறையில் இருப்பதாலேயே அதைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை'' என்று கூறினார்.

நீதிபதிகளின் முரண்பட்ட கருத்தால், இவ்வழக்கை மூன்றாவது நீதிபதி அமர்வு விசாரிக்கும். அந்த நீதிபதியை தலைமை நீதிபதி பரிந்துரைப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகளே 'நீட்' தேர்வை எதிர்க்கிறார்கள்: அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர்



அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன்.
மாணவர்கள் யாரும் 'நீட்' தேர்வை எதிர்க்கவில்லை. அரசியல்வாதிகளே எதிர்க்கிறார்கள் என்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அனந்தகிருஷ்ணன் கூறியதாவது:

''மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு 'நீட்' கண்டிப்பாக வேண்டும். நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறுவது தவறு. அவர்கள் பெரியளவில் பாதிக்கப்பட மாட்டார்கள்.

சிபிஎஸ்சி பாடத் திட்டத்தின் வழியாகத்தான் 'நீட்' தேர்வுகளின் கேள்விகள் இருக்கும். மாநிலப் பாடத்திட்டங்கள் பயன்படாது என்னும் கருத்துகளிலும் உண்மையில்லை.

இரண்டு பாடதிட்டத்துக்கும் பெரிய அளவு வேறுபாடில்லை. நம்முடைய கற்பித்தல் முறையில்தான் குறைபாடே தவிர, பாடத் திட்டத்தில் இல்லை.

'நீட்' தேர்வை நாடு முழுக்க அமல்படுத்துவதன் மூலம் மருத்துவ படிப்புக்கு அளிக்கப்படும் நன்கொடை பெருமளவு குறையும். இதனாலேயே நிறையப் பேர் எதிர்க்கின்றனர்.

குறிப்பாக மாணவர்களோ, கல்வியாளர்களோ 'நீட்' தேர்வை எதிர்க்கவில்லை. அரசியல்வாதிகளே எதிர்க்கிறார்கள்''.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பொது இடத்தில் செல்போன் பயன்படுத்தும் பெண்களுக்கு ரூ.21 ஆயிரம் அபராதம்: உத்தரப் பிரதேச கிராம பஞ்சாயத்து உத்தரவு

 
 
உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பொது இடங்களில் பெண்கள் செல்போன் பயன்படுத்தினால் ரூ.21 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஜலாவுன் மாவட்டத்துக்குட்பட்ட மடோரா கிராமத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கிராம பஞ்சாயத்து கூட்டத்தில், வீட்டுக்கு வெளியே அதாவது பொது இடங்களில் பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது. இதை மீறுவோருக்கு ரூ.21 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடத்தல் போன்ற குற்றச் செயல்களை தடுப்பதற்காகவே இந்த அபராதம் விதிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் பெண்கள் ஜீன்ஸ் அணிய தடை விதிப்பது உட்பட பல்வேறு நவீன பழக்க வழக்கங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த அபராதம் விதிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

RTI activists flag violation as university in Chennai seeks proof of address

By Venkatesan Parthasarathy  |  Express News Service  |   Published: 01st May 2017 03:19 AM  |  
Last Updated: 01st May 2017 03:19 AM  |   

CHENNAI: In what is termed by activists as an ‘illegal requirement’, a city-based RTI petitioner who sought information from the Tamil Nadu Veterinary and Animal Sciences University (Tanuvas) has been told to furnish proof of address.
On March 23, A Narayanan, Director of NGO CHANGEindia, filed an RTI plea with Tanuvas. In his individual capacity, Narayanan had sought information about the faculty recruitment procedures of the university. A month later, he received a letter.
“I request you to send a copy of proof of address such as Aadhaar card, voter ID, as per the RTI Act for further action,” the university’s Public Information Officer (PIO) had written. But, a simple reading of the RTI Act, 2005, is enough to dispute the request. Chapter 2 of the Act says “the applicant shall not be required to give any other personal details except those that may be necessary for contacting him.”
“There is no need for the PIO to seek proof of address. Instead, he must supply the information sought within the statutory 30-day window,” Narayanan said.
Nikhil Dey, one of the torchbearers of the RTI movement, told Express that it was a delay tactic. “This is an attempt to circumvent and deny information,” he said while citing the Punjab and Haryana HC’s order in 2012, which termed the action of asking applicants to submit identity/address proof as ‘ultra vires’.
Significantly, a Calcutta High Court Bench in 2013 had observed that it would suffice if the RTI applicant provided just his postbox number.
“Only if the authority finds any difficulty with post box no, they may insist upon personal details,” the bench said. Even officials from the State Information Commission said address proof was not required. “The applicant may file a complaint or appeal to the first appellant authority. If he is still not satisfied, he may approach the commission,” an official said.

Girl and boy asked to leave Chennai college for 'talking' to each other

By Ashmita Gupta  |  Express News Service  |   Published: 03rd May 2017 03:32 AM  |  
Last Updated: 03rd May 2017 03:32 AM  |   
Image for representational purpose only.
CHENNAI: A few months ago, a girl and boy studying in a private engineering college in the city were issued transfer certificates and forced to leave the college. Their crime was talking to one another. Even the slightest restrictions imposed on students in institutes like the IIT become news headlines and are widely debated. But away from the spotlight, many private engineering colleges in and around Chennai have imposed archaic restrictions that make it a crime to even talk to a classmate of the opposite gender.
“Their parents were humiliated by the principal. He asked the parents if they are sending their children to colleges to romance,” says a friend of the unfortunate students. The duo was subsequently prevented from appearing for semester exams and eventually forced to shift to another college.
This was an extreme case since the college management found out that the boy and girl were in a relationship. Other crimes as per the rules of some colleges include even inadvertently helping a student from the opposite gender like sharing a water bottle or returning a pen or pencil.
“My friend’s water bottle fell down during class hours and a girl picked up and returned it to him. Soon enough, a staff member asked her not to stare at boys,” states S Ashokan*, a student of the same college. A few colleges have ‘floor supervisors’ whose task is to monitor students and single out those who break the rule. Not just in the campus, such staff are also assigned to college buses to inform the respective departmental heads if boys and girls are found talking to each other.
“If we pass a pen to a boy, then it is a crime. Once a boy asked for water and my friend passed the bottle. The supervisors asked why she is talking to him and whether he is her brother or some relation,” says K Aarthi*, a student at another college.
Unsurprisingly, Girls seem to have more restrictions than the boys. Some rules say that the dupatta must always be pinned. Forget jeans, even churidar leggings are a strict no-no. “If they feel we haven’t dressed as per their expectations, we are sent to the hostel or home,” adds Aarthi. Another common move is removing mirrors from the toilets so that girls don’t apply even basic makeup.
Some colleges have even stopped conducting cultural festivals as they found the students interact with opposite genders during such festival. “We only have a sports day. Even that is celebrated on two different days — one for boys and another for girls. Neither sex is allowed to be present for the opposing gender’s meet,” laments K Parthiban,* a student of another reputed college in the city.
In another well-known college, there are three separate sections in each department. One for boys, another for girls and a third for toppers with over 8.5 CGPA (cumulative grade point average). “They assume toppers are only concerned about studies and hence don’t talk to the opposite gender,” says T Sethuraman*,  a student at the college.
A few week ago, this college witnessed a protest and one of the issues raised by students was the rule barring them from interacting. “We’ve all studied in coeducational schools and, hence, wanted this rule to be abolished. We wrote a letter to the principal. But they ultimately decided to continue with the same,” adds Sethuraman.

NEWS TODAY 04.06.2026