Sunday, July 2, 2017

வரத்து குறைவால் சின்ன வெங்காயம் விலை உயர்வு: ஆக.15 வரை நீடிக்கும் என தகவல்

By DIN | Published on : 02nd July 2017 12:23 AM |

வரத்து குறைந்ததால் சின்ன வெங்காயம் விலை கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆகஸ்ட் 15 வரை இந்த நிலை நீடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

விருதுநகர் மாவட்டம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் தற்போது சின்ன வெங்காய வரத்து குறைந்துள்ளது. தமிழகத்தில் சத்தியமங்கலம், பொள்ளாச்சி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கேரளா மற்றும் ஆந்திர பகுதிகளில் ஆண்டு தோறும் அதிகளவு சின்ன வெங்காயம் பயிரிடப்படும். கடந்தாண்டு மழை பொய்த்ததால், இப்பகுதியில் வெங்காய விவசாயம் பாதி அளவிற்கு குறைந்து விட்டது. மேலும், கோடை காலத்தில் அதிகளவு வெப்பம் காரணமாக எதிர்பார்த்த அளவு மகசூல் கிடைக்க வில்லை. இதனால், 100 மூட்டைகள் வர வேண்டிய இடத்தில் 50 மூட்டைகள் மட்டுமே வருகின்றன. இதன் காரணமாக சின்ன வெங்காயம் கிலோ ரூ. 120 வரை விற்பனை செய்யப்படுறது.

அதே சமயம் பல்லாரி வரத்து அதிகரித்துள்ளது. அது கிலோ ரூ. 20-க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் மட்டுமல்லாது, ஓட்டல் நடத்துபவர்களும் அதை வாங்கி பயன்படுத்த தொடங்கி விட்டனர். மேலும், சின்ன வெங்காயம் விலை உயர்வு ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை குறைவதற்கான வாய்ப்பில்லை என விருதுநகர் மொத்த வெங்காய வியாபாரிகள் தெரிவித்தனர்.
காலவரையற்ற வேலை நிறுத்தம் அரசு ஊழியர் சங்கம் எச்சரிக்கை

பதிவு செய்த நாள்01ஜூலை
2017
18:46

சென்னை, 'ஜூலை மாதத்திற்குள், ஊதிய மாற்றம் வராத நிலையில், பேச்சின் போது ஒப்புக்கொண்டபடி, 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்காவிட்டால், காலவரையற்ற வேலை நிறுத்தம் உறுதி' என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சங்க பொதுச் செயலர் அன்பரசு விடுத்துள்ள அறிக்கை:அரசு ஊழியர்களின், ஊதிய மாற்றத்திற்காக அமைக்கப்பட்ட, அலுவலர் குழுவின் பதவிக்காலத்தை, மூன்று மாதங்களுக்கு நீட்டித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசுக்கு இணையான, அனைத்து படிகளையும் வழங்க வேண்டும். தமிழக அரசு ஊழியர்களுக்கான ஊதிய மாற்றத்தை, உடனே அமல்படுத்த வேண்டும்.
ஊதிய மாற்றம் ஏற்படும் வரை, தற்போது வாங்கும் ஊதியத்தில், 20 சதவீதத்தை, இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏப்., 25 முதல், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தோம்.

போராட்டம் துவங்கிய இரண்டாம் நாள், அமைச்சர்கள் சங்க நிர்வாகிகளை அழைத்து பேசினர். அப்போது, ஜூலைக்குள், ஊதிய மாற்றம் செய்யப்பட்டு விடும் என, உறுதி அளித்தனர்.
ஜூன், 30க்குள்,அலுவலர் குழு பரிந்துரைகளை அளிக்காவிட்டால், 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்குவது குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்தனர்.

அதை ஏற்று, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், வேலை நிறுத்தப் போராட்டத்தை, தற்காலிக மாக நிறுத்தி வைத்தது. ஆனால், ஜூன், 30க்குள், அலுவலர் குழு, பரிந்துரை களை வழங்கவில்லை. எனவே, அரசு ஊழியர்களுக்கு, இடைக்கால நிவாரணமாக, 20 சதவீத ஊதியத்தை, ஜூலை, 17க்குள் வழங்க வேண்டும்.

இல்லையெனில்,தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட, வேலை நிறுத்தப் போராட்டத்தை, தமிழகம் முழுவதும் தொடர வேண்டிஇருக்கும்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.




Advertisement
17 ல் ஓட்டு போட வருவாரா கருணாநிதி?

பதிவு செய்த நாள்01ஜூலை
2017
18:38



ஜனாதிபதி தேர்தலில் ஓட்டளிக்க, முன்னாள் முதல்வர் கருணாநிதி வருவாரா என்ற எதிர்பார்ப்பு, அனைத்து தரப்பினரிடமும் ஏற்பட்டுள்ளது.தி.மு.க., தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி, உடல் நலக்குறைவு காரணமாக, வீட்டிலேயே உள்ளார். கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்கி உள்ளார். அவரை சந்திக்க, வெளிநபர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அவரது உடல் நிலையில், முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக, குடும்பத்தினர் கூறி வருகின்றனர்.இந்நிலையில், வரும், 17ம் தேதி, ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஓட்டு அளிக்க, அவர் தலைமைச் செயலகம் வருவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அப்படியே அவர் வந்தாலும், ஜனாதிபதி தேர்தல் விதிமுறை யின் படி, அவருடன் உள்ளே யாரும் செல்ல முடியாது.உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி தான், அவருக்கு ஓட்டளிக்க உதவ முடியும். எனவே, அவர் ஓட்டளிக்க வருவது சிரமம் என்றே கூறப்படுகிறது. தற்போது, சென்னை,
ஆர்.கே.நகர் தொகுதி காலியாக உள்ளது.எனவே, ஜனாதிபதி தேர்தலில், 233 எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டளிக்க முடியும். கருணாநிதி வராவிட்டால், 232 பேர் மட்டுமே ஓட்டளிக்க வாய்ப்புண்டு.
- நமது நிருபர் -
சிவப்பு நிறமாக மாறிய சோறு அரிசியில் கலப்படமா
பதிவு செய்த நாள்01ஜூலை
2017
22:44




தேனி, தேனி அருகேசங்ககோணாம்பட்டியில், சமைத்து வைக்கப்பட்டிருந்த சோறு சிவப்பு நிறமாக
மாறியது. இதுகுறித்து அரிசிக் கடையில் அலுவலர்கள் ஆய்வு நடத்தினர்.சங்ககோணாம்பட்டியை சேர்ந்த விவசாயி நீலகண்டன். இவரது குடும்பத்தினருக்கு சில நாட்களாக வயிற்றுக் கோளாறு ஏற்பட்டுள்ளது; அதற்கான காரணம் தெரியவில்லை.நேற்று முன்தினம்,மீதமான சோற்றில் தண்ணீர் ஊற்றி வைத்தனர். நேற்று காலையில் பார்த்த போது சோறு சிவப்பு நிறத்தில் மாறி இருந்தது. இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சுகுணாவிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அலுவலர்கள் மோகன்தாஸ், சுரேஷ் கண்ணன் ஆகியோர் ஆய்வு செய்து, சிவப்பு நிறத்தில் இருந்த சோறு,அரிசியை பரிசோதனைக்காக எடுத்து சென்றனர்.தேனியில் அரிசி
வாங்கப்பட்ட கடையில் அலுவலர்கள் சோதனை செய்தனர். குறிப்பிட்ட ரகத்தை சேர்ந்த 56 அரிசி மூடைகள் பறிமுதல்செய்யப்பட்டன.உணவு பாதுகாப்புஅலுவலர் சுகுணாகூறுகையில், ''அரிசியில் ரசாயனம் கலந்திருந்தால் மட்டுமே சிவப்பு நிறம்ஏற்படும்.பரிசோதனைக்காக மாதிரி சேகரித்துள்ளோம். சோதனைக்குப் பிறகே
நிறத்திற்கான காரணம் தெரியும்,'' என்றார்.
ஆம்னி பேருந்து சர்வீஸ் திடீர் நிறுத்தம் நடுரோட்டில் பயணியர் தவிப்பு
பதிவு செய்த நாள்01ஜூலை
2017
19:53

சென்னை கோயம்பேட்டில் இருந்து, துாத்துக்குடி செல்ல வேண்டிய ஆம்னி பேருந்தின் சேவை, எந்த அறிவிப்பு மின்றி நிறுத்தப்பட்டதால், நள்ளிரவில் குழந்தைகளுடன் பயணியர் தவித்தனர்.

சென்னையில் இருந்து துாத்துக்குடிக்கு, ஜூன் 24ம் தேதி, 'ரெட் பஸ்' மூலம், 'ரம்யா டிராவல்ஸ்' பேருந்தில், பல பயணியர் முன்பதிவு செய்தனர். ஒரு டிக்கெட், 1,650 ரூபாய். 

நள்ளிரவு

இரவு, 10:25 மணிக்கு, கோயம்பேட்டில் இருந்து புறப்பட வேண்டிய பேருந்து, ஒரு மணிநேரம் தாமதமாக புறப்படும் என, டிராவல்ஸ் நிறுவனம் சார்பில், மொபைல்போன் மூலம் பயணியருக்கு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, 15க்கும் மேற்பட்ட பயணியர், தங்கள் குழந்தை மற்றும் பெட்டிகளுடன், நள்ளிரவு, 11:00 மணி முதல் காத்திருந்தனர்; ஆனால் பேருந்து வரவில்லை.

டிராவல்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்டால், அழைப்பை ஏற்கவில்லை. இதனால், பயணியர் செய்வதறியாது, நள்ளிரவு, 2:30 மணி வரை பேருந்துக்காக காத்திருந்து, நொந்து போய் திரும்பிச் சென்றனர்.

பாதிக்கப்பட்ட பயணியர் தரப்பில் கூறியதாவது:எந்தவொரு தகவலும் இல்லாமல், பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், நள்ளிரவு, 2:30 மணி வரை, கோயம்பேட்டில், குழந்தைகளுடன் தவித்தோம். பணிக்கான நேர்முகத்தேர்விற்கு
செல்ல இருந்த சிலரும்பாதிக்கப்பட்டனர்.

பதில் இல்லை

மறுநாள், ரம்யா டிராவல்சை தொடர்பு கொண்டு கேட்ட போது, 'தவறு நடந்துவிட்டது; உங்கள் பணத்துடன் நஷ்டஈடு வழங்குவோம். சில நாட்கள், பொறுத்துக் கொள்ளுங்கள்' எனக் கூறினர்.
ஆனால், இதுவரை பணம் வழங்கவில்லை. அவர்களை, மொபைல்போனில் தொடர்பு கொண்டால் பதிலளிப்பதில்லை.
எங்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல், தவிப்பு, பணி பாதிப்பு ஆகியவற்றை முன்வைத்து, உரிய டிராவல்ஸ் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறோம்.
 
இதுபோன்ற டுபாக்கூர் டிராவல்ஸ்களை, 'ரெட் பஸ்' நிறுவனத்தினர் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டாம் என்பதே, எங்களின் கோரிக்கை. எங்கள் பாதிப்பிற்கு, 'ரெட் பஸ்' நிறுவனமும் உரிய பதில் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- நமது நிருபர் -

சொற்ப பயணியருடன் இயங்கும் அரசு பஸ்கள்
பதிவு செய்த நாள்01ஜூலை
2017
22:36

சென்னை, கோயம்பேட்டில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் பஸ்கள், பெரும்பாலும் பயணியர் இல்லாமலேயே செல்கின்றன.
விழுப்புரம், சேலம் கோட்டங்களுக்கு சொந்தமான பஸ்கள், சென்னை, கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் இருந்து, 20 நிமிடங்களுக்கு ஒரு பஸ் இயக்கப்படுகிறது.
வெள்ளி, சனி, ஞாயிறு தவிர மற்ற நாட்களில், மூன்று அல்லது நான்கு பயணியர் தான், ஒவ்வொரு பஸ்சிலும் ஏறுகின்றனர்.
இது குறித்து, நடத்துனர்கள் கூறியதாவது:
சென்னையில் இருந்து வெளியூர் செல்வோரின் எண்ணிக்கை, வார இறுதி நாட்களில் தான் அதிகமாக உள்ளது. மற்ற நாட்களில், சொற்ப அளவிலேயே உள்ளது.
முன்பு, அரை மணி நேரத்துக்கு ஒரு பஸ், கோயம்பேட்டில் இருந்து வெளியூர் புறப்படும். தற்போது, 10 முதல், 20 நிமிடங்களில் அடுத்தடுத்து பஸ்சை இயக்குமாறு, அதிகாரிகள் உத்தரவிடுகின்றனர். அதனால், சொற்ப பயணியரே ஏறுகின்றனர்.
இதனால், போக்குவரத்து கழகத்திற்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. ஆனால், வசூல் ஆகாததற்கு, ஓட்டுனர், நடத்துனர்களே காரணம் என்பது போல, புகார் கூறி, 'மெமோ' கொடுக்கின்றனர்.
வார நாட்களில், பகலில் பஸ்களின் எண்ணிக்கையை குறைத்து, இரவில் அதிகப்படுத்தினால், வசூலை ஓரளவு பெருக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

வீட்டு சிலிண்டர் விலை உயர்ந்தது

பதிவு செய்த நாள்01ஜூலை
2017
20:20

சென்னையில், சமையல்காஸ் சிலிண்டர் விலை, 14.50 ரூபாய் உயர்ந்து உள்ளது.இந்தியன் ஆயில், பாரத், இந்துஸ்தான் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு, 14.20 கிலோ; ஓட்டல் உள்ளிட்ட வணிக பயன்பாடுகளுக்கு, 19 கிலோ எடை உடைய,
சமையல் 'காஸ்' சிலிண்டர்களை சப்ளை செய்கின்றன.சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப, மாதந்தோறும், சிலிண்டர் விலை மாற்றப்படுகிறது.
அதன்படி, சென்னையில் ஜூனில், 559.50 ரூபாய்க்கு விற்பனையான வீட்டு சிலிண்டர் விலை, தற்போது, 14.50 ரூபாய் உயர்ந்து, 574 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதேசமயம், வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை, 71.50 ரூபாய் குறைந்து, 1,103 ரூபாயாக சரிவடைந்து உள்ளது.
இதுகுறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வீட்டு சிலிண்டருக்கு, கலால் வரி மற்றும் மதிப்பு கூட்டு வரி கிடையாது; வணிக சிலிண்டருக்கு கலால் வரி, 8 சதவீதம்; மதிப்பு கூட்டு வரி, 14 சதவீதம் என மொத்தம், 22.5 சதவீதம் வரி இருந்தது.
ஜி.எஸ்.டி., என்ற சரக்கு மற்றும் சேவை வரியில் வீட்டு சிலிண்டருக்கு, 5 சதவீதம்; வணிக பயன்பாட்டு சிலிண்டருக்கு, 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. அந்த வரி விதிப்பு முறை, இன்று முதல் அமலுக்கு வந்ததால், வீட்டு சிலிண்டர் விலை உயர்ந்தது; வணிக சிலிண்டர் விலை குறைந்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

NEWS TODAY 14.06.2026