Sunday, July 2, 2017

தளம் புதிது: பி.டி.எஃப். கருவிகளை அளிக்கும் இணையதளம்

சைபர் சிம்மன்

பி.டி.எஃப். கோப்பு வடிவத்தை நீங்கள் பலவிதங்களில் எதிர்கொள்ளலாம். இணையத்தில் உலாவும்போது, பல தகவல்கள் பி.டி.எஃப். கோப்பு வடிவில் இருப்பதைப் பார்க்கலாம். பணி நிமித்தமாக நீங்களேகூட, பி.டி.எஃப். கோப்புகளை உருவாக்கும் பழக்கம் கொண்டிருக்கலாம். பி.டி.எஃப். கோப்பு பயன்பாடு தொடர்பான உங்களுக்குத் தேவைப்படக்கூடிய பலவிதமான இணையக் கருவிகளை ஒரே இடத்தில் வழங்குகிறது கிளவர்பி.டி.எஃப். இணையயதளம்.
பி.டி.எஃப். கோப்பை உருவாக்குவது எளிதானது. அதற்குரிய மென்பொருள் இருந்தால் போதும். ஆனால், பல நேரம் பி.டி.எஃப். கோப்பை வேறு வடிவங்களுக்கு மாற்றும் தேவை ஏற்படலாம். உதாரணத்துக்கு பி.டி.எஃப். கோப்பைச் சாதாரண வேர்டு கோப்பாக மாற்ற வேண்டியிருக்கலாம். இத்தகைய மாற்றங்களைச் செய்வதற்கான கருவிகள் அனைத்தும் இந்தத் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒரு ஐகான் இருக்கிறது. அதில் கிளிக் செய்தால் விரும்பிய கோப்பு வடிவத்துக்கு மாற்றிக்கொள்ளலாம்.

இதேபோலப் பிற கோப்பு வடிவங்களிருந்தும் பி.டி.எஃப். கோப்பாக மாற்றிக்கொள்ளலாம். இதற்கான கருவிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. பவர் பாயிண்ட் அல்லது உருவப்படத்தைப் பி.டி.எஃப். கோப்பாக மாற்றிக்கொள்ளலாம்.

இவற்றைத்தவிர, பி.டி.எஃப். கோப்புகளை இணைப்பது, பி.டி.எஃப். கோப்புகளைப் பிரிப்பது, சுருக்குவது போன்ற தேவைகளுக்கான இணையக் கருவிகளும் இடம்பெற்றுள்ளன. இப்படி பி.டி.எஃப். தொடர்பான 19 வகையான பயன்பாட்டுக்கான இணையக் கருவிகளை இந்தத் தளத்தில் பெறலாம்.
இணைய முகவரி: https://www.cleverpdf.com/

ஜிஎஸ்டி அமலால் விலை குறையும் பொருட்கள் என்னென்ன?- முழு பட்டியல்

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் பல்வேறு பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 1,211 பொருட்களுக்கு வரி விகிதத்தை ஜிஎஸ்டி கவுன்சில் இறுதி செய்துள்ளது. பெரும்பான்மையான பொருட்களுக்கு 18 சதவீத வரி விகிதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டியால் விலை குறையும் பொருட்கள்
உணவுப் பொருட்கள்
பால்பவுடர்
தயிர்
மோர்
பிராண்ட் அல்லாத இயற்கை தேன்
பாலாடைக் கட்டி
நறுமணப் பொருட்கள்
தேயிலை
கோதுமை
அரிசி
கடலை எண்ணெய்
சூரிய காந்தி எண்ணெய்
பாமாயில்
தேங்காய் எண்ணெய்
கடுகு எண்ணெய்
சர்க்கரை
வெல்லம்
பாஸ்தா
மாக்ரோனி
நூடுல்ஸ்
பழங்கள் மற்றும் காய்கறிகள்
ஊறுகாய்
ஜாம்
சாஸ் வகைகள்
இனிப்பு வகைகள்
இன்ஸ்டண்ட் உணவு மிக்ஸ்
ஐஸ்
மினரல் வாட்டர்
முந்திரி
பிஸ்கட்
பேக்கிங் பவுடர்
தினசரி பயன்படும் பொருட்கள்
குளியல் சோப்
தலைக்கு தடவக்கூடிய எண்ணெய்
சோப்புத் தூள்
சோப்
டிஸ்யூ பேப்பர்ஸ்
நாப்கின்ஸ்
மெழுகுவர்த்திகள்
மண்ணெண்ணெய்
எல்பிஜி டொமஸ்டிக்
தீப்பெட்டிகள்
ஸ்பூன்கள் மற்றும் போர்க்
அகர்பத்திகள்
பற்பசை மற்றும் பற்பொடி
எல்பிஜி ஸ்டவ்
ஸ்டேஷனரி பொருட்கள்
நோட்டு புத்தகம்
பேனா
அனைத்து வகையான பேப்பர்
கிராப் பேப்பர்
பள்ளி புத்தகப்பை
படம், ஓவியம், வண்ணம் தீட்டும் புத்தகங்கள்
கார்பன் பேப்பர்
பிரிண்டர்ஸ்
மருந்துகள்
இன்சுலின்
எக்ஸ்ரே பிலிம்
மருத்துவப் பரிசோதனை பொருட்கள்
கண்ணாடிகள்
சர்க்கரை மற்றும் புற்றுநோய்க்கான மருந்துகள்
ஆடை சம்பந்தப்பட்ட பொருட்கள்
பட்டு
கம்பளி பொருள்
காதி துணிகள்
ரூ.500க்கும் கீழ் உள்ள காலணிகள்
ரூ.1,000 வரை உள்ள ஆடைகள்
மற்றவை
15 ஹெச்பிக்கும் குறைவான திறன் உள்ள டீசல் இன்ஜின்
டிராக்டர்
எடை மெஷின்கள்
எலெக்ட்ரிக் டிரான்பார்மர்ஸ்
வைண்டிங் வொயர்ஸ்
ஹெல்மட்
பட்டாசுகள்
இரு சக்கர வாகனங்கள்
சொகுசு கார்கள்
ஸ்கூட்டர்ஸ்
எகானாமி பிரிவு விமான டிக்கெட்டுகள்
ரூ.7,500 க்கும் குறைவான அறை வாடகை கொண்ட ஹோட்டல்கள்
சிமெண்ட்
செங்கற்கள்
விலை உயரும் பொருட்கள்
பன்னீர்
காபி
மசாலா பவுடர்
நெய்
சுவிங்-கம்
ஐஸ் கிரீம்
சாக்லேட்
தங்கம்
7500 ரூபாய்க்கு மேல் இருக்கும் ஓட்டல் அறை
ஐந்து நட்சத்திர ஓட்டல்
100 ரூபாய்க்கு மேல் இருக்கும் டிக்கெட் கட்டணம்
ஐபிஎல் போட்டிகள்
1000 ரூபாய்க்கு மேல் இருக்கும் ஆடைகள்
ஷாம்பு
வாசனை திரவியம்
முதல் வகுப்பு மற்றும் ஏசி வகுப்பு டிக்கெட்கள்
ஏசி
குளிர்சாதன பெட்டி
வாஷிங் மெஷின்
தொலைக்காட்சி பெட்டி
கொரியர் சேவைகள்
மொபைல் கட்டணங்கள்
வங்கி சேவைகள்
பிராட்பேண்ட்
கிரெடிட் கார்டு கட்டணம்
350 சிசிக்கும் மேலான இரு சக்கர வாகனம்
சிறிய மற்றும் நடுத்தர கார்
எஸ்யூவி
மீன் வலை
ஸ்மார்ட்போன்
லேப்டாப்
டெஸ்க்டாப்
உடற்பயிற்சி சாதனங்கள்
காற்றடைக்கப்பட்ட பானங்கள்
சிகரெட்
புகையிலை
மதுபானம்
சொகுசு பொருட்கள்
பான் கார்டு – ஆதார் இணைப்பு புதிய படிவம் வெளியிட்டது வரித்துறை!!!

பான் என்னும் நிரந்தர கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு, புதிய, ஒரு பக்க படிவத்தை வருமான வரித் துறை வெளியிட்டுள்ளது.

மக்கள் பீதி
‘ஜூலை 1க்குள், நிரந்தர கணக்கு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்காதோரின் பான் கார்டுகள் முடக்கப்படும்’ என, சமூக வலைதளங்களிலும், சில இணையதளங்களிலும் தகவல் வெளியானதையடுத்து, பொதுமக்கள் பீதியடைந்தனர்.அவர்களின் பீதியை போக்கும் வகையில், ‘ஆதார் எண் இணைக்காதவர்களின் பான் எண் முடக்கப்படாது என்றும், தொடர்ந்து இணைக்கலாம்’ என, வருமான வரித்துறை அறிவித்தது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட முறையில் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க முடியாதவர்கள், நேரடியாக இணைப்புக்கு விண்ணப்பிக்கும் வகையில், ஒரு பக்க படிவத்தை வருமான வரித் துறை நேற்று வெளியிட்டது.

இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:ஏற்கனவே அறிவிக்கப்பட்ட முறையில், பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க முடியாதவர்கள் மற்றும் இணையதளவசதி இல்லாதவர்களுக்காக, புதிய, ஒரு பக்க படிவம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படிவத்தில் கேட்கப்பட்ட விபரங்களை நிரப்பி, அத்துடன், ‘என்னிடம் ஒரு பான் எண் மட்டும் உள்ளது.

அதனுடன் மட்டுமே என்னுடைய ஆதார் எண்ணை இணைக்கிறேன்’ என்ற உறுதிமொழியையும் சமர்ப்பிக்க வேண்டும்.2.62 கோடி பேர்நாடு முழுவதும், 115 கோடி பேருக்கு ஆதார் எண்ணும், தனி நபர், நிறுவனம் உள்ளிட்ட, 25 கோடி பேருக்கு, பான் எண்ணும் வழங்கப்பட்டுள்ளது; இதுவரை 2.62 கோடி பேர், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Posted by kalviseithi.net A

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு: அகில இந்திய ஒதுக்கீடு கலந்தாய்வுக்கு இணையதளத்தில் பதிவு செய்யலாம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கான கலந்தாய்வுக்கு இணையதளத்தில் நாளை முதல் பதிவு செய்யலாம்.நாடு முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக்கல்லூரிகளில் இருந்து 15 சதவீதம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன.
தமிழகத்தில் மட்டும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி உட்பட 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 456 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் சிதம்பரம் ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி, சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் இருந்து 30 பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீடுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கான கலந்தாய்வு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET - நீட்) தகுதிப்பெற்றவர்களைக் கொண்டு இந்த இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது. இதற்கான பதிவுwww.mcc.nic.inஎன்ற இணையதளத்தில் வரும் 3-ம் தேதி (நாளை) தொடங்குகிறது.

சேர்க்கைக்கு பின் சில நாட்களில் வெளியேறிய மாணவியின் கல்வி கட்டணத்தை திருப்பி அளிக்க வேண்டும்: தனியார் கல்லூரிக்கு நீதிமன்றம் உத்தரவு.

கல்லூரியில் சேர்ந்து சில நாட்களில் வெளியேறிய மாணவியின் கல்விக் கட்டணத்தை வட்டியுடன் திருப்பி அளிக்க வேண்டும் என தனியார் பொறியியல் கல்லூரிக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான பொறியியல் கல்லூரிகளில் ஒவ் வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை தொடங்கும்போதே அந்த கல்வியாண்டுக்கான முழு கட்டணத்தையும் வசூலித்து விடு கின்றனர். இந்நிலையில், மாண வர்கள் வேறு படிப்புக்கு விண்ணப் பித்து அந்த படிப்புக்கு இடம் கிடைத்துவிட்டால், ஏற்கெனவே கட்டணம் செலுத்திய கல்லூரியில் இருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அந்தச் சூழலில், மாணவர்கள் வெளியேறினால், அவர்கள் செலுத்திய கட்டணத்தை பல கல்லூரிகள் திருப்பி அளிக்க மறுப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.இந்நிலையில், திருச்சியைச் சேர்ந்த தமிழ்நாடு நுகர்வோர்பாது காப்பு கவுன்சில் மற்றும் காஞ்சி புரத்தை அடுத்த வெம்பாக்கத்தைச் சேர்ந்த எம்.என்.ராமன் ஆகியோர் செங்கல்பட்டு நுகர்வோர் குறை தீர்மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:இரண்டாவது மனுதாரரான நான், எனது மகளை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் கடந்த 2011 ஜூலை 22-ம் தேதி ரூ.67,000 செலுத்தி பொறியியல் படிப்பில் சேர்த்தேன். வகுப்புகள் தொடங்கிய 6 நாட்களில், எனது மகளுக்கு தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. அதன்பிறகு, எனது மகள் பொறியியல் கல்லூரிக்கு செல்லவில்லை.எனவே, ஓராண்டு கல்வி கட்ட ணமாக செலுத்திய தொகையை திருப்பி அளிக்கும்படி கல்லூரிக்கு கடிதம் அனுப்பினேன். அதற்கு எந்த விதமான விளக்கத்தையும் அளிக் காத கல்லூரி நிர்வாகத்தினர், எனக்கு ரூ.22,000-த்துக்கான காசோலையை மட்டும் அனுப்பி வைத்தனர்.

எனவே, மீதமுள்ள தொகையை திருப்பி அளிக்கவும், மன உளைச் சலுக்கு இழப்பீடாக ரூ.5 ஆயிரம் வழங்கவும் கல்லூரி நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தனர்.இந்த மனுவை விசாரித்த செங் கல்பட்டு நுகர்வோர் குறைதீர்மன்ற தலைவர் கே.சிவானந்தஜோதி, உறுப்பினர்கள் கே.பிரமீளா, டி.பாபு வரதராஜன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:தேசிய நுகர்வோர் ஆணையம் கடந்த 2009-ம் ஆண்டு ஒரு வழக் கில் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘மாணவர்கள் கல்வி நிறுவனங் களில் பயிலாத காலத்துக்கான கட்டணத்தை திருப்பி அளிக்க வேண்டும்’ என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளி யிட்ட பொது அறிவிப்பை சுட்டிக்காட்டியுள்ளது.யுஜிசி-யின் அந்த அறிவிப்பில், “மாணவர்களின் சேர்க்கையில் காத் திருப்போர் பட்டியலை கல்வி நிறு வனங்கள் வைத்திருக்க வேண்டும்.

வகுப்புகள் தொடங்குவதற்கு முன் மாணவர்கள் வெளியேறினால் காத்திருப்போர் பட்டியலில் உள்ள மாணவரை சேர்க்க வேண்டும். வெளியேறும் மாணவரிடம் இருந்து பெறப்பட்ட கட்டணத்தில் சேர்க்கை நடைமுறை கட்டணமாக அதிக பட்சம் ரூ.1,000 வரை பிடித்தம் செய்துகொண்டு மீதித் தொகை திருப்பி அளிக்க வேண்டும்.வகுப்புகள் தொடங்கிய பிறகு ஒரு மாணவர் வெளியேறினால், காலியாக உள்ள அந்த இடத் துக்கு வேறொரு மாணவர் சேர்க்கப் படும்போது, கல்லூரியில் பயின்ற நாட்களுக்கான பிடித்தம் போக மீதி கல்வி கட்டண தொகையை வெளியேறும் மாணவருக்கு திருப்பி அளிக்க வேண்டும்’’ என தெரி விக்கப்பட் டுள்ளது.

இரண்டாவது மனுதாரரின் மகள் 6 நாட்கள் மட்டுமே கல்லூரியில் பயின்றுள்ளார். எனவே, மனுதாரர் கோரிய மீதித் தொகையை 6 சதவீத வட்டியுடன் திருப்பி அளிக்க வேண்டும். மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.5,000, வழக்கு செல வாக ரூ.5,000-த்தையும் கல்லூரி நிர்வாகம் அளிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பட்டப்பகலில் பெண்ணிடம் நகை பறிப்பு

By DIN  |   Published on : 02nd July 2017 05:36 AM  
சென்னை ஜெ.ஜெ.நகரில் பட்டப்பகலில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் நகை பறித்துச் சென்றனர்.
சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் சுமித்ரா ( 39). இவர் செல்லிடப்பேசி கடை வைத்துள்ளார். இவரது மகள் ஜெ.ஜெ.நகர் கிழக்குப் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் சுமித்ரா, தனது மகளை பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 இளைஞர்கள், அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த ஜெ.ஜெ.நகர் போலீஸார், சம்பவம் நடந்த சாலையில் உள்ள ஒரு கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையர்கள் நகையை பறித்த காட்சிகள் தெளிவாக பதிவாகி இருந்தன. இதை வைத்து போலீஸார் கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.
ஏர் இந்தியாவுக்கு டாட்டா!

By ஆசிரியர் | Published on : 30th June 2017 03:31 AM


ஏர் இந்தியாவை தனியார்மயமாக்குவது என்கிற முடிவு குறித்த தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.\

1991-இல் உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் தொடர்ச்சியாக அதுவரை பொதுத்துறைகள் மட்டுமே செயல்பட்டுவந்தது போய் அதனுடன் போட்டிபோட தனியார் துறைக்கும் அனுமதி வழங்கப்பட்டது. தனியார் துறையின் செயல்திறமையுடன் போட்டிபோடும்போது அரசின் பொதுத்துறை மேம்பாடு அடையும் என்று கூறப்பட்டது. ஆனால் அரசுத்துறைகள் தனியார் துறையின் தீமைகளை எல்லாம் கிரகித்துக்கொண்டன என்பதும், தனியார் துறை அரசுத்துறைக்கு நியாயமாக கிடைத்திருக்க வேண்டிய வருவாயை எல்லாம் விழுங்கி லாபம் சம்பாதித்தது என்பதும்தான் நிதர்சன உண்மை. இதற்கு இந்திய விமானத் துறை ஓர் எடுத்துக்காட்டு.

1950-இல் நீதிபதி ஜி.எஸ். ராஜத்யக்ஷா தலைமையில் விமானப் போக்குவரத்து விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் 372 பக்க அறிக்கையில் 'விமானப்போக்குவரத்து என்பது மிக அதிகமான தொழில்நுட்பத்துடன் கூடிய தனித்தன்மையுடைய துறை. அரசுத்துறையின் மெத்தனமான செயல்பாடும் அதிக அளவிலான கட்டுப்பாட்டுடன் கூடிய நிர்வாக முறைகளும் அந்தத் துறைக்கு ஒத்துவராது' என்று தெளிவாகவே தெரிவித்திருந்தது.
நீதிபதி ராஜத்யக்ஷா அறிக்கையைப் புறக்கணித்து, அரசியல் அழுத்தத்தின் காரணமாக விமானப் போக்குவரத்துச் சட்டம் 1953 நிறைவேற்றப்பட்டது. அதன் மூலம் டாடா ஏர்லைன்ஸ், அரசும் டாடா நிறுவனமும் இணைந்து நடத்திய ஏர் இந்தியா இன்டர்நேஷனல், ஏர் சர்வீஸஸ் ஆப்இந்தியா, ஏர்வேஸ் இந்தியா, பாரத் ஏர்வேஸ், டெக்கான் ஏர்வேஸ், ஹிமாலயன் ஏவியேஷன், இந்தியன் நேஷனல் ஏர்வேஸ், கலிங்கா ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு உள்நாட்டு சேவைக்கு இந்தியன் ஏர்லைன்ஸும் பன்னாட்டு சேவைக்கு ஏர் இந்தியாவும் அரசுத் துறை விமானப்போக்குவரத்து நிறுவனங்களாக ஏற்படுத்தப்பட்டன.
போட்டியில்லாத அரசுத் துறை நிறுவனமாக இருந்தது வரை ஏர் இந்தியா லாபகரமாகவும் இந்தியன் ஏர்லைன்ஸ் மிகப்பெரிய இழப்பில்லாத நிலையிலும் தொடர்ந்து வந்தது. 1994-இல் அன்றைய நரசிம்ம ராவ் அரசு விமானப் போக்குவரத்துச் சட்டத்தில் மாற்றங்கள் செய்து தனியார் துறைக்கும் அனுமதி அளித்தது. அப்படி அனுமதியளித்தபோதே வெளிநாட்டு விமானப்போக்குவரத்து நிறுவனங்களுக்கும் விமானப்போக்குவரத்தில் அந்நிய முதலீட்டுக்கும் அனுமதியளித்திருக்க வேண்டும். அப்படி அளிக்காமல்போனதால் அந்தத் துறையைத் திறமையாக நிர்வகிக்கும் சிறப்பறிவுத் திறன் (எக்ஸ்பர்டஸ்) கிடைக்கவில்லை என்பதுடன் போதிய முதலீடும் வராமல் போனது. அப்போதிருந்து ஏர் இந்தியா நிறுவனத்தின் அதிவேக வீழ்ச்சி தொடங்கியது.

நரசிம்ம ராவ் அரசு விமான போக்குவரத்தில் தனியார்துறையை அனுமதித்த ஒரு சில ஆண்டுகளிலேயே ஏர் இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்களை தனியார்மயப்படுத்தியிருந்தால் பல்லாயிரம் கோடி ரூபாய் மக்களின் வரிப்பணம் வீணாகியிருக்காது. 2007-08 நிதியாண்டிலிருந்து தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் ஏர் இந்தியா நிறுவனம் இழப்பில்தான் இயங்கிவருகிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ஏர் இந்தியா நிறுவனத்தின் நிகர இழப்பு ரூ.6,879 கோடி, ரூ.5,879 கோடி, ரூ.3,836 கோடி.

இந்த இழப்பால் பாதிக்கப்படுவது 31 அரசு வங்கிகளின் பங்குதாரர்களும் வைப்புநிதியில் பணம் போட்டு இருப்பவர்களும்தான். இதுபோதாது என்று 2012-இல், பேரிழப்பை சந்தித்துக் கொண்டிருக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் அடுத்த 9 ஆண்டுகள் அந்த நிறுவனத்துக்கு ரூ.30,730 கோடி நிதியுதவி அளிப்பது என்று மத்திய அரசு முடிவு செய்தது. இதுவரை ரூ.25,000 கோடி ரூபாய் மத்திய அரசு நமது வரிப்பணத்திலிருந்து ஏர் இந்தியா நிறுவனத்திற்கு வாரிவழங்கியிருப்பதுதான் மிச்சம். நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. 31 நிதி நிறுவனங்களுக்கு ஏர் இந்தியா தர வேண்டிய நிலுவையிலுள்ள தொகை ரூ.46,570 கோடி.

இந்திய விமானப் போக்குவரத்தில் தனியுரிமை பெற்றிருந்த ஏர் இந்தியா நிறுவனத்தின் இன்றைய பங்கு வெறும் 14 விழுக்காடு மட்டுமே. தனியார் நிறுவனங்கள் 86 விழுக்காடு விமானப் போக்குவரத்து சேவையை ஈடுகட்டுகின்றன. இந்த நிலையில் 14 விழுக்காடு சேவையை மட்டுமே பூர்த்தி செய்யும் ஏர் இந்தியா நிறுவனத்தை மக்களின் வரிப்பணத்தில் ஈடுகட்டிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை நாம் எப்போதோ உணர்ந்திருக்க வேண்டும்.

சக்கரம் மீண்டும் சுழன்று இப்போது ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை வாங்கிக்கொள்ள சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து டாடா நிறுவனம் முன்வந்திருப்பதாக தெரிகிறது. டாடா நிறுவனத்தால் தொடங்கப்பட்ட ஏர் இந்தியா மீண்டும் டாடா நிறுவனத்திற்கே செல்வதும் அதன் மூலம் இந்திய மக்களின் வரிப்பணம் இனியும் வீணாக்கப்படாமல் தடுக்கப்படுவதும் வரவேற்புக்குரியது.
இந்த ஒப்பந்தம் மாருதி சுசுகி பாணியிலான வெளிப்படைத்தன்மையுள்ள, படிப்படியான தனியார்மயமாக இருத்தல் அவசியம். இன்றைய நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் சொத்து மதிப்பு என்ன, அதனுடைய வணிகத் தர மதிப்பு, ஊழியர்களின் நிலை உள்ளிட்டவை வெளிப்படைத்தன்மையுடன் மக்கள் மன்றத்திற்குத் தெரியப்படுத்த வேண்டும். டாடா நிறுவனத்துடன் மட்டுமே பேசி ஒப்பந்தம் செய்யாமல், சர்வதேச அளவில் ஒப்பந்தப் புள்ளி கோரினாலும் தவறில்லை.

NEWS TODAY 14.06.2026