Wednesday, July 5, 2017

வெளிநாட்டவர், என்ஆர்ஐகளுக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு காலம் 360 நாட்களாக நீட்டிப்பு


2017-07-04@ 00:51:57


புதுடெல்லி: ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது: வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு வசதிகளை மேம்படுத்தவும், வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்யவும் தற்போது 120 நாட்களாக இருந்த முன்பதிவு காலம் தற்போது 360 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஏறக்குறைய ஓராண்டு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யலாம். வெளிநாட்டவர்கள் ராஜ்தானி, சதாப்தி, கதிமான், தேஜாஸ் ரயில்களில் ஏசி முதல் வகுப்பு, ஏசி 2ம் வகுப்பு மற்றும் எக்ஸிகியூடிவ் வகுப்பு பெட்டிகளில் மட்டும் முன்பதிவு செய்யலாம். சாதாரண வகுப்பு மற்றும் மூன்றடுக்கு ஏசி வகுப்புகளில் இவர்கள் முன்பதிவு செய்ய அனுமதி கிடைாது.

இதுபோல் கடைசி நேரத்தில் டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு உறுதி செய்யப்பட்ட டிக்கெட் கிடைக்க சுவிதா ரயில்கள் இயக்கப்படுகின்றன. எனவே, இதிலும் இவர்கள் முன்பதிவு செய்ய முடியாது. வெளிநாட்டவரும், வெளிநாடு வாழ் இந்தியர்களும் பல மாதங்கள் முன்பே தங்கள் விடுமுறை பயணம் அல்லது சுற்றுலாவுக்கு திட்டமிடுகிறார்கள். இதை கருத்தில் கொண்டே முன்பதிவு கால அவகாசம் இவர்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. டிராவல் ஏஜென்ட்கள் துணையின்றி ஆன்லைனில் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு உதவியுடன் இவர்களே டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ஐஆர்சிடிசி இணையதளத்தில் விசா, பாஸ்போர்ட், சர்வதேச மொபைல் எண் ஆகிய விவரங்களையும் முன்பதிவின்போது இவர்கள் பதிவு செய்ய வேண்டும். இந்த டிக்கெட்களுக்கு சேவை கட்டணமாக தலா ரூ.200 வசூலி–்க்கப்படும். ரத்து செய்ய ரூ.50 கழித்தது போக எஞ்சிய தொகைக்கு ஏற்கெனவே உள்ள ரத்து விதிகள் கடைப்பிடிக்கப்படும். மேலும் இந்த பயணிகளுக்காக மொபைல் ஆப்சை ரயில்வே வெளியிட உள்ளது. இதில் டிக்கெட் முன்பதிவு மட்டுமின்றி, தங்கும் அறை, டாக்சி, போர்ட்டர், உணவு ஆர்டர் போன்றவற்றையும் மேற்கொள்ளலாம் என்றார்.

ரயில் பயணத்தில் பாடாய்படுத்தும் தடக், தடக் சத்தத்துக்கு விரைவில் ‘குட்பை’

2017-07-04@ 21:07:42
 

வேலூர்: இந்தியாவில் ரயில் சேவை தொடங்கி 160 ஆண்டுகளுக்கு மேலாகிறது. ரயில் சேவை முதன் முதலாக மும்பை-தானே இடையே 1853ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி தொடங்கப்பட்டது. இந்தியா முழுவதும் சுமார் 63 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. தினமும் 14 ஆயிரத்திற்கும் அதிகமான ரயில்கள் இயக்கப்படுகிறது. வருங்காலங்களில் இந்தியாவில் புல்லட் ரயில்களும், அதிவேக ரயில்களும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த ரயில்களை தற்போதுள்ள தண்டவாளங்களை கொண்டு இயக்க முடியாது. தற்போதுள்ள ஒவ்வொரு தண்டவாளத்தின் நீளம் 13 மீட்டர் கொண்டது. காரணம் ஒரு ரயில் பெட்டியின் நீளம் 13 மீட்டர். எனவே தண்டவாளங்களும் 13 மீட்டருக்கு ஒரு துண்டு என பொருத்தப்பட்டது. இதனால் ரயில்கள் தண்டவாளங்களில் செல்லும்போது ‘தடக், தடக்’ என்ற சத்தம் வரும். இனி இந்த சத்தத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தண்டவாளங்கள் அனைத்தும் கோரக்பூரில் உள்ள செய்ல் கம்பெனி மூலம் தயாரிக்கப்படுகிறது. அங்கு 26 அடி நீளம் கொண்ட தண்டவாளமாக உருவாக்கப்படுகிறது. இனி வரும் காலங்களில் தண்டவாளங்கள் 26 அடி நீளம் கொண்டதாகவே ெபாருத்தப்படும். அதனால் ரயில்கள் தண்டவாளத்தில் செல்லும்போது தடக், தடக் சத்தம் அதிகம் வராது. இந்த பணிகள் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட உள்ளது. தெற்கு ரயில்வே பிரிவிலும் விரைவில் பணிகள் தொடங்க உள்ளதாகவும் ரயில்வே பொறியியல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம் பயணிகள் இரைச்சலை அனுபவிக்காமல் பயணிக்கலாம்.
'நீட்' தேர்வுக்கு எதிரான மனு 'டிஸ்மிஸ்' : தமிழக உள் ஒதுக்கீடுக்கும் சிக்கல்

பதிவு செய்த நாள் 04 ஜூலை
2017
23:02

சென்னை: தமிழகத்தில், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு விலக்கு கோரிய மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற மருத்துவப் படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கு, 'நீட்' தேர்வு கட்டாயம் என, உச்ச நீதிமன்றமும், மத்திய அரசும் உத்தரவிட்டு உள்ளன.

தமிழகத்தில், 'நீட்' தேர்விலிருந்து விலக்கு கேட்டு, தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் கிடைக்கவில்லை. அதனால், இந்த ஆண்டு, 'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில், தமிழக கல்லுாரிகளில் மாணவர்கள் சேர்க்கப்படுவர் என, தமிழக சுகாதாரத் துறை அறிவித்தது.

இந்நிலையில், 'நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு கடினமாக இருந்ததால், இந்த ஆண்டு மட்டும், நீட் தேர்வு மதிப்பெண்ணின்படி, மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த, தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும்' என, ஒரு மாணவரின் தந்தை, முருகவேல் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

'விசாரணைக்கு தகுதி யற்ற வழக்கு' என, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, நேற்று தள்ளுபடி செய்தது.

இதனிடையே, மருத்துவ சேர்க்கையில் தமிழக பாடத்திட்ட மாணவர்களுக்கு, ௮௫ சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்யக் கோரி, சி.பி.எஸ்.இ.,யில் படித்த மாணவர்கள் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதற்கு, வரும், ௭க்குள் பதிலளிக்க, தமிழக அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்புமாறு, உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
ரூ.570 கோடி யாருக்கு சொந்தம்:
ஐகோர்ட்டில் சி.பி.ஐ., அறிக்கை


சென்னை: மூன்று கன்டெய்னர் லாரிகளில் பிடிபட்ட, 570 கோடி ரூபாய் குறித்த, சி.பி.ஐ., யின் விசாரணை அறிக்கை, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

சீலிட்ட உறையில், அறிக்கை தாக்கல் செய்யப் பட்டதால், அதன் விபரங்கள் தெரியவில்லை. தமிழக சட்டசபை தேர்தலின் போது, திருப்பூர் மாவட்டத்தில், மூன்று கன்டெய்னர் லாரி களை, தேர்தல் அதிகாரிகள் பிடித்தனர். அதில், 570 கோடி ரூபாய் இருப்பது தெரிய வந்தது. கோவையில் இருந்து, ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக்கு, பணத்தை கொண்டு செல்வதாக தெரிவிக் கப்பட்டது.

மனுதாக்கல்:

வாகனங்களின்ஆவணங்கள்,

அதில் வந்தவர்கள் அளித்த தகவல்கள், முன்னுக்கு பின் முரணாக இருந்ததால், இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி யது.கன்டெய்னர் லாரிகளில் பணம் பிடிபட்ட விவகாரம் குறித்து, சி.பி.ஐ., விசாரணை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., - எம்.பி., யான, டி.கே.எஸ்.இளங்கோவன் மனு தாக்கல் செய்தார்.

மனுவை, நீதிபதி ஆர்.சுப்பையா விசாரித்தார். 'ஆரம்பகட்ட விசாரணையை, சி.பி.ஐ., நடத்த வேண்டும்; விசாரணையில் முகாந்திரம் இருந்தால், வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண் டும்' என, நீதிபதி உத்தரவிட்டார்

.உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சி.பி.ஐ., விசாரணை நடத்தியது. சீலிட்ட உறையில், சி.பி.ஐ.,யின் அறிக்கை, உயர் நீதிமன்ற பதிவுத்



துறையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

3 மாதம்:

இது குறித்து, சி.பி.ஐ., தரப்பில் கேட்ட போது, 'மூன்று மாதங்களுக்கு முன், உயர் நீதிமன்ற பதிவுத்துறையில் அறிக்கை தாக்கல் செய்யப் பட்டு விட்டது; சீலிடப்பட்ட உறையில், இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது' என, தெரிவிக்கப்பட்டது.
செல்லாத நோட்டு 'டிபாசிட்' செய்ய மீண்டும் வாய்ப்பு அளிக்க உத்தரவு

பதிவு செய்த நாள் 04 ஜூலை
2017
22:19

புதுடில்லி: செல்லாததாக அறிவிக்கப்பட்ட, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை, தவிர்க்க முடியாத காரணத்தால், வங்கிகளில், 'டிபாசிட்' செய்யத் தவறியவர்களுக்காக, மீண்டும் ஒரு வாய்ப்பு அளிப்பதற்கான திட்டத்தை பரிசீலித்து சமர்ப்பிக்க, மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கிக்கு, சுப்ரீம் கோர்ட், நேற்று, இரண்டு வார அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளது.

கறுப்புப் பணத்தையும், கள்ள ரூபாய் நோட்டுகளையும் ஒழிக்கும் நோக்கில், கடந்தாண்டு, நவ., 8ல், மத்திய அரசு, செல்லாத ரூபாய் நோட்டு திட்டத்தை அறிவித்தது. அதன்படி, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டு, புதிய, 500 - 2,000 ரூபாய் நோட்டு கள் வெளியிடப்பட்டன.செல்லாத நோட்டுகளை வங்கிகளில் சமர்ப்பித்து, புதிய நோட்டுகளை பெற்றுக் கொள்ள, அவகாசம் அளிக்கப்பட்டது.இந்நிலையில், மிகவும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில், செல்லாத நோட்டு களை, வங்கிகளில் டிபாசிட் செய்ய முடியாத பலர், தங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கேஹர், நீதிபதி சந்திரசூட் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில், சொலிசிட்டார் ஜெனரல், ரஞ்சித் குமார் ஆஜரானார்.விசாரணையின் போது, 'எவ்வித தவறும் இல்லாமல், பணத்தை இழக்கக் கூடிய சந்தர்ப்பம் சிலருக்கு ஏற்படலாம். இதுபோன்ற நபர்கள், தங்களிடம் உள்ள செல்லாத நோட்டுகளை, டிபாசிட் செய்வதற்கு தடை விதித்ததற்கான காரணத்தை அறிய விரும்புகிறோம். 'அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிப்பதற்கான திட்டத்தை, இரு வாரத்தில், மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் அளிக்க வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
1,224 டாக்டர்கள், 1,010 நர்ஸ்கள் நியமனம் : அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு

பதிவு செய்த நாள் 04 ஜூலை
2017
23:28

சென்னை: ''தமிழகத்தில், 1,224 டாக்டர்கள், 1,010 செவிலியர்கள் உட்பட, 4,717 மருத்துவ பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவர்,'' என, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சட்டசபையில், நேற்று சுகாதாரத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து, அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்ட அறிவிப்புகள்:

தமிழக மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலமாக, 1,224 டாக்டர்கள், 600 சிறப்பு உதவி டாக்டர்கள், 1,010 செவிலியர்கள், சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவத் துறைகளில், 137 உதவி மருத்துவ அலுவலர்கள்.

மேலும், 33௩ மருந்தாளுனர்கள், 1,234 ஆய்வக உதவியாளர்கள், ௧௭௯ இதய வரைபட டெக்னிசியன்கள், இயன்முறை சிகிச்சையாளர், நுண்கதிர் வீச்சாளர் மற்றும் விழி ஒளி பரிசோதகர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில், 26 கோடி ரூபாயில், 'டிஜிட்டல்' நுாலகம் அமைக்கப்படும். காசநோய் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள், 141.14 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும். மேலும், '108' ஆம்புலன்ஸ் திட்டத்திற்கு, ஐந்து கோடி ரூபாயில், 50 வாகனங்கள் வாங்கப்படும்.
அனைத்து, மாவட்டங்களிலும், 5.12 கோடி ரூபாயில், நவீன கண் பரிசோதனை மையம் ஏற்படுத்தப்படும். பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை அலுவலகத்தில், மருத்துவத் துறையில் முதன்முறையாக, 24 மணி நேர பேரிடர் மேலாண்மை மையம், 2.1 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

வேலுார், திருப்பூர், தேனி, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய, ஐந்து மாவட்டங்களில், மனநல சிறப்புப் பிரிவுகள், 3.34 கோடி ரூபாயில் அமைக்கப்படும்.இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.

சிகலா, சிறை,தண்டனை,ரத்தாக,வாய்ப்பில்லை
 DINAMALAR

அ.தி.மு.க., பொதுச் செயலராக இருந்த, முன்னாள் முதல்வர், ஜெயலலிதாவின் தோழி சசிகலா தாக்கல் செய்துள்ள சீராய்வு மனு, உச்ச நீதிமன்றத்தில், நாளை விசாரணைக்கு வருகிறது. இந்த மனு தள்ளுபடியாகும் என்பதால், அவரது சிறைத் தண்டனை ரத்தாக வாய்ப்பில்லை.



அவர் நான்காண்டு, 'உள்ளே' இருப்பது உறுதி யாகும் என,சட்ட நிபுணர்கள் கருத்து தெரி வித்து உள்ளனர். அவர் வெளியே வந்தால், கட்சிக்கும், ஆட்சிக்கும் சிக்கல் ஏற்படும் என்ப தால், அ.தி.மு.க.,வினரும் பீதியுடன், தீர்ப்பை எதிர்பார்த்தபடி உள்ளனர்.

சொத்து குவிப்பு வழக்கில்,ஜெ., சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை, கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. அதை எதிர்த்து, கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

சிறையில் அடைப்பு:

மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள், பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த சிறை தண்ட னையை உறுதி செய்து, பிப்., 14ல் உத்தர விட்ட னர். ஜெ., மறைந்து விட்டதால், அவருக்கு எதிரான அப்பீல் வழக்கு கைவிடப்பட்டது.சிறைத் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூன்று பேரும், பெங்களூரு, பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.கர்நாடக அரசுசார்பில், ஜெ.,க்கு விதிக்கப்பட்ட அபராதத்தை, அவரது சொத்து களை விற்று வசூலிக்க வேண்டும் என, தாக்கல் செய்யப் பட்ட மனுவை, நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில்,சிறைத்தண்டனையை எதிர்த்து, சசிகலா சார்பில், சீராய்வு மனு, உச்சநீதிமன்றத் தில் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், 'ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், எங்களை தண்டிப்பதற்கு, நாங்கள் ஒன்றும் அரசு ஊழியர் அல்ல. அந்த சட்டமானது, அரசு ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும்; எங்க ளுக்கு பொருந்தாது. 'எனவே, இந்த வழக்கில், எங்களுக்கு விதிக்கப் பட்டுள்ள,

நான்கு ஆண்டுகள் சிறை தண்ட னையை ரத்து செய்து, எங்களை விடுவிக்க வேண்டும்' என, குறிப்பிடப்பட்டு உள்ளது. இம்மனு மீதான விசாரணை, நாளை நடக்கிறது. இந்த மனு விசாரணைக்கு ஏற்கப்படுமா, நிராகரிக்கப் படுமா; விசாரணைக்கு ஏற்றுக் கொண்டாலும்,

சசிகலாவிடுவிக்கப்படுவாரா என, கேள்விகள் எழுந்துள்ளன.

எதிர்பார்ப்பு:

'மனு நிராகரிக்கப்படவே வாய்ப்பு .அதிகம். விசாரணைக்கு ஏற்றுக் கொண்டாலும், இறுதி யில் தள்ளுபடி செய்யப்படவே வாய்ப்பு அதிகம்' என, சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். இந்த தீர்ப்பை, அ.தி.மு.க., வினர் பீதியுடன் எதிர்பார்த்தபடி உள்ளனர்.

ஏனெனில், சசிகலாவால் முதல்வராக்கப்பட்ட பழனிசாமி, அவரை சந்திக்கச் செல்லவில்லை. அவரால், அ.தி.மு.க., துணை பொதுச் செயல ராக நியமிக்கப்பட்ட, தினகரன் ஒதுக்கிவைக்கப் பட்டு உள்ளார்.இந்த சூழலில், சசிகலா வந் தால், மீண்டும் கட்சிக்குள் குழப்பமும், ஆட்சிக்கு சிக்கலும் ஏற்படும். அவரது சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டால், முதல்வர் பழனிசாமி அணியினர், துணிந்து தனித்து செயல்படத் துவங்குவர்.

எனவே, நாளைய தீர்ப்பை, அவர்கள் ஆவ லோடு எதிர்பார்க்கின்றனர். அவர் விடுதலை யானால், கட்சியும், ஆட்சியும், தங்கள் கட்டுப் பாட்டிற்குள் மீண்டும் வரும் என்ற நம்பிக்கை யில், அவரது விடுதலையை, சசிகலா குடும்பத் தினரும், அவரது ஆதரவு, எம்.எல்.ஏ.,க்களும் எதிர்பார்க்கின்றனர்.சீராய்வு மனு தீர்ப்பை, பன்னீர் அணியினரும் ஆவலோடு எதிர்பார்த்து உள்ளனர்.

- நமது நிருபர் -

NEWS TODAY 19.08.2026