Thursday, July 6, 2017

அரசு ஊழியர்களின் வங்கிப் பரிவர்த்தனைகள் மீது தீவிர கண்காணிப்பு: மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் நடவடிக்கை

By DIN  |   Published on : 06th July 2017 12:52 AM  

அரசு ஊழியர்களின் சந்தேகப்படும்படியான வங்கிப் பரிவர்த்தனைகள் மீது மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் தனது கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தில்லியில் மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஆணையர் டி.எம். பாசின், பிடிஐ செய்தியாளருக்கு புதன்கிழமை அளித்த பேட்டி வருமாறு:
மத்திய நிதியமைச்சர் தலைமையின்கீழ் செயல்படும் பொருளாதார புலனாய்வு கவுன்சிலிடம் நேரிடையாக புகார் தெரிவிக்கும் அமைப்பாக நிதிப் புலனாய்வு அமைப்பு உள்ளது. இந்த அமைப்பானது, கருப்புப் பணம், குற்றச் செயல் மூலம் ஈட்டப்பட்ட பணம் என்று சந்தேகப்படும் நிதிப் பரிவர்த்தனைகள் குறித்த தகவலை சேகரித்தல், ஆராய்தல் போன்ற பணிகளைச் செய்து வருகிறது.

அப்போது, அரசு ஊழியர்கள் தொடர்புடைய சந்தேகப்படும்படியான வங்கிப் பரிவர்த்தனைகள் இருக்கும்பட்சத்தில், அதுகுறித்த அறிக்கைகளை (எஸ்டிஆர்) மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்துக்கு நிதி புலனாய்வு அமைப்பு அனுப்பி வைக்கும்.

அதாவது, சந்தேகப்படும்படி ரூ.10 லட்சம் அல்லது அதற்கு அதிக மதிப்புடைய தொகைகள் அரசு ஊழியர்களால் பரிவர்த்தனைகள் செய்யப்படும்போது, அதுதொடர்பான அறிக்கைகளை அனுப்பி வைக்கும்.

இதுபோல், அமலாக்கத் துறை, சிபிஐ, ரிசர்வ் வங்கி, செபி அமைப்பு, தேசிய புலனாய்வு அமைப்பு, மத்திய பொருளாதார புலனாய்வு அமைப்பு போன்ற அமைப்புகளுக்கும், மாநில தலைமைச் செயலர்களுக்கும் நிதி புலனாய்வு அமைப்பு எஸ்டிஆர் அறிக்கைகளை அனுப்பும். உச்ச நீதிமன்றத்தால் கருப்புப் பண விவகாரம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவும், நிதி புலனாய்வு அமைப்பிடம் இருந்து சந்தேகப்படும்படியான வங்கிப் பரிவர்த்தனை குறித்த விவரத்தை கேட்டுப் பெறும்.

ஊழல் செயல்களில் அரசு ஊழியர்களுக்கும், தனியாருக்கும் இடையே ஒத்துழைப்பு இருக்கிதா? என்பதை தெரிந்து கொள்வதற்கு, இந்த அறிக்கைகளை ஆய்வு செய்வது மிகவும் உதவிகரமாக இருக்கும். இதனால், அரசுத் துறைகளில் ஊழல்களை தடுக்க முடியும்.

இதுபோல், மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்துக்கு அரசு ஊழியர்களின் சந்தேகப்படும்படியான வங்கி பரிவர்த்தனைகள் குறித்து முக்கிய தகவல்களை நிதி புலனாய்வு அமைப்பு அனுப்பி வைத்துள்ளது. அதன்மீது தேவைப்படும் நடவடிக்கைகளை மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் எடுக்கும் என்று பாசின் கூறினார்.

தொப்பை ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு இல்லை

By DIN  |   Published on : 06th July 2017 05:02 AM  | 
POLICE1

தொப்பை வயிறுடன் இருக்கும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கக் கூடாது என்று அளிக்கப்பட்ட பரிந்துரையின் மீது மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.

ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கும் விவகாரத்தில் தற்போது எந்த விதிகளும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. ஐபிஎஸ் அதிகாரியாக நியமிக்கப்படும் ஒருவர், குறிப்பிட்ட காலம் சேவையாற்றிய பிறகு, பதவி உயர்வு அளிக்கப்பட்டு பல்வேறு உயர்பதவிகளில் நியமிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட வேண்டுமெனில், அவர்கள் நிச்சயம் தகுந்த உடல்தகுதியுடன் இருக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. அதாவது, தொப்பையுடன் இருக்கும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பரிந்துரைகளை மத்திய உள்துறை அமைச்சகம் அளித்துள்ளது.

இந்தப் பரிந்துரைகளையும் சேர்த்து, ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்க பின்பற்ற வேண்டிய வரைவு விதிகளை மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை இறுதி செய்துள்ளது. அந்த வரைவு விதிகளை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பி, அதன்மீது கருத்துகளை தெரிவிக்கும்படி மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை கேட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு நிபுணத்துவம் பயிற்சித் திட்டம் அவசியம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கருதுகிறது. இதனால், ஐபிஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வு பெற்று, டிஐஜி, ஐஜி, ஏடிஜி ஆகிய பணியிடங்களில் நியமனம் செய்யப்படுவதற்கு முன்பு, அவர்கள் 3 கட்ட நிபுணத்துவ பயிற்சித் திட்டத்தை நிறைவு செய்திருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. இதற்காக 20 கள பணிகளை மத்திய உள்துறை அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஐபிஎஸ் அதிகாரிகள் எந்நேரமும் போதிய தகுதியுடன் (உடல்தகுதி உள்ளிட்ட தகுதி) இருப்பதை உறுதி செய்யும் வகையிலேயே இந்த விதிகள் உருவாக்கப்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆன்லைன் ரயில் டிக்கெட்: செப்டம்பர் வரை சேவை வரி ரத்து!!!


 ரயில் பயணிகளிடம் மின்னனு பண பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில்
ஆன்லைனில் முன்பதிவு செய்யப்படும் ரயி்ல் டிக்கெட்களுக்கான சேவை வரியை ஜுன் 30ம் தேதி வரை ஐ.ஆர்.சி.டி.சி., ரத்து செய்திருந்தது.

இந்நிலையில் சேவை வரி ரத்து உத்தரவை வரும் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளது. சேவை வரி தளர்வால் ஆண்டிற்கு ரூ 500 கோடி வரை வருமானம் பாதிக்கப்படும் என ஐ.ஆர்.சி.டி.சி., அறிவித்துள்ளது

Committed to cause: Principal gifts van to flagging school

By Samuel Merigala  |  Express News Service  |   Published: 05th July 2017 08:18 AM  |  
 
Karunamurthy and students with the van he gifted his school | express
CHENNAI: As a teacher, how much would you give your students? Your time, your love, chocolates? All of the above? The principal of George Venugopal Middle School in Mudaiyur, a village twenty kilometers from Chengalpet, gave his students a van he purchased with his own money.

The Maruti Omni van picks up students from the nearby villages — Narapakkam, Kattur, Thathalur every morning and drops them home in the evening. Each village gets an exclusive trip and 41 students benefit from the newly introduced service.

Teachers in the school have followed the principal’s lead and pitch in for petrol costs. They have even taken driving classes to fill in for the driver in case he takes leave. However, Karunamurthy, the principal has taken the additional burden of paying the van driver himself.

When Karunamurthy became principal of the government-aided school in 2007, it had 780 students. Ten years later, there are barely 50 students. Students have left the 65-year-old Tamil medium school for other government/private English medium schools in their neighborhood.

“Students who study here now are from the poorest families in the village. Their parents can’t afford transport for their children,” said Karunamurthy. “If you bring a horse to water, it may not drink but if you bring a student to school, he will study.”

The van, the newest addition to the school, has become a matter of pride for students. Shyam, a student of Class VIII is the self-proclaimed cleaner who helps other students with their bags stowed on the roof.

“I don’t have to walk 6 kilometers every day,” declares the lean 12-year-old with curious eyes. Teachers of the school agree that the free transport service is just a temporary solution to keep the prestigious school afloat.

“We have to upgrade according to the times. English medium education has become the norm over the years. We want to begin teaching in English soon,” said Illango, a senior teacher.

This government-aided school, like many others in the State, has been stopped from upgrading to English medium. However, a petition filed by Pasupathy School in Pandanallur, Thanjavur district, which has been facing the same problem, was taken up by the Madras High Court on June 27. He has asked the government to respond to this and 19 other queries pertaining to the state of education in Tamil Nadu.

In the meantime, the teachers of this little school, tucked away in Mudaiyur, are breathing life into it by giving their students free rides.

Anna Nagar: One-way or two-way?

By Nirupa Sampath  |  Express News Service  |   Published: 05th July 2017 08:20 AM  |  
 
Traffic congestion at Roundtana
Roads in and around Anna Nagar have gone back to the two-way traffic system, but many residents are unhappy.They say that the two-way roads increase traffic congestion and are a nightmare for pedestrians.

CHENNAI: With the Metrorail construction in Anna Nagar winding up after several years, the roads have finally gone back to a two-way traffic system. But, many residents feel the one-way system, which was in place temporarily, was much better. Ever since the police made the roads in and around the Anna Nagar roundabout two-way, commuters say traffic snarls and chaos have become a daily affair.

“The wider streets (when it was one-way) made driving easy. Even during peak hours of the day, the roads were pretty free. But after it was made two-way again, everyone is ganging up to one side of the road, causing unrest, sometimes also leading to arguments and fights. And pedestrians are finding it quite difficult to cross the roads,” says D Sagana, a resident of Anna Nagar.
Many commuters also say they are unclear about the traffic pattern as there are no proper stop signs or traffic signals to guide them. Even a few months after the streets on second and fourth avenues were made two-way, the commuters say there is an absence of traffic regulations. This makes people jump signals and drive fast.

“After the two-way system was introduced, the traffic flow has become worse and it takes too much time to cross this section. As the Metrorail has come up now, people from Thirumangalam also take the second avenue (the arterial road) to reach the Metro station. This too is causing traffic jams. So if it’s one-way again, it will save a lot of time for people like me who cross this section every day for work,” says R Nanditha.

“The two- way arrangement is not sudden. We had given a proper intimation to the public through the media. However, if the public demands, we can change the rules. The government has made proper arrangements in place to put up stop signs and draw stop sign on roads; it will be done within a week. Installing traffic signals will also be done within a month’s time,” says S Anandaraju, a sub-inspector manning the traffic in the area.

While the commuters generally dislike the two-way system, many shopkeepers, auto drivers and vendors are happy with it since it makes customers reach the shop easy. Apparently, many jewellery shops in the locality have started seeing business only after the new regulation.
“Two-way roads are much better than one-way. Earlier, it was extremely difficult for us to get passengers and we lost a lot of fuel going around, but now it is easy. If proper rules are in places, people will surely follow it,” says A Pandi, an auto driver.

27 லட்சம் மாணவ–மாணவிகளுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள்

2017–2018 ஆம் கல்வி ஆண்டில் 739 கோடி ரூபாய் செலவில் 27 லட்சத்து 5 ஆயிரத்து 160 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ–மாணவியர்களுக்கு கட்டணமில்லா கையடக்க பேருந்து பயண அட்டைகளைவழங்கிடும் அடையாளமாக, தலைமைச் செயலகத்தில் 7 மாணவ–மாணவிகளுக்கு கையடக்க பேருந்து பயண அட்டைகளை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.மேற்கண்ட தகவல்கள் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 

மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தேதி நீட்டிப்பு மருத்துவ கவுன்சிலின் வேண்டுகோளைஏற்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு.

மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக நாடு முழுவதும் நடத்தப்பட்ட ‘நீட்’ தேர்வுமுடிவை வெளியிட சென்னை ஐகோர்ட்டின் மதுரை அமர்வு இடைக்கால தடை விதித்தது. 

பின்னர் இந்த தடையை கடந்த மாதம் 12–ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு நீக்கியது. இதையடுத்து நீட் தேர்வு முடிவுகள் கடந்த 23–ந்தேதி வெளியிடப்பட்டது.நீட் தேர்வு வெளியிட தடை விதிக்கப்பட்டதன் காரணமாக அதில் வெற்றி பெற்றவர்கள் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு தாமதம் ஆனது. இதையடுத்து, இந்திய மருத்துவ கவுன்சில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்தது. அதில், ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு கூறிய கால அவகாசத்துக்குள் கலந்தாய்வை நடத்தி முடிக்க இயலவில்லை.

 எனவே, மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வை ஆகஸ்டு மாதம் 28–ந்தேதிக்கு உள்ளாகவும், பல் மருத்துவத்துக்கான கலந்தாய்வை செப்டம்பர் மாதம் 10–ந்தேதிக்கு உள்ளாகவும் நடத்தி முடிக்கும் வகையில் அனுமதிக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டு இருந்தது.இதை சுப்ரீம்கோர்ட்டு ஏற்றுக்கொண்டு இந்திய மருத்துவகவுன்சில் தெரிவித்த கால அவகாசத்துக்குள் கலந்தாய்வைநீட்டித்து நடத்தி கொள்வதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.
 

NEWS TODAY 20.08.2026