Thursday, July 6, 2017

' பென்ஸ் கார்' வேணாம்பா; சாதாரண கார் போதும்'.சிக்கனத்தை கடைபிடிக்கும் முதல்வர் ஆதித்யநாத்.


‘ பென்ஸ் கார்’ வேணாம்பா; சாதாரண கார் போதும்’…சிக்கனத்தை கடைபிடிக்கும் முதல்வர் ஆதித்யநாத்…

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சிக்கன நடவடிக்கையை கடைபிடிக்கும் விதமான, ரூ. 3.5 கோடியில் வாங்கப்பட இருந்த ‘பென்ஸ்சொகுசு கார்’ தேவையில்லை சாதரண கார் போதும் என்று முதல்வர் ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் பா.ஜனதா தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதல்வராக யோகி ஆதித்யநாத் இருந்து வருகிறார். மாநிலத்தில் அரசு அதிகாரிகள் சிக்கன நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஆதித்யநாத்அறிவறுத்தி வருகிறார். இந்நிலையில், அரசு சார்பில் ரூ. 3.5 கோடி செலவில் முதல்வர் பயன்பாட்டுக்காக இரு பென்ஸ் ரக சொகுசு கார்கள் வாங்கப்பட இருந்தன. இந்நிலையில், அந்த கார்கள் தமக்கு தேவையில்லை தற்போது இருக்கும் கார்களே போதுமானது என முதல்வர் ஆதித்யநாத் தெரிவித்துள்ளார் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து முதன்மைச் செயலாளர் அவிநீஷ் அவஸ்தி கூறுகையில், “ முதல்வர் பயன்பாட்டுக்காக ரூ. 3.5 கோடி செலவில் இரு மெர்சடீஸ் பென்ஸ் ரக கார்கள் வாங்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், மாநிலத்தில் சிக்கின நடவடிக்கையை காரணம் காட்டி, அதை வாங்கவேண்டாம் என முதல்வர் ஆதித்யநாத்தெரிவித்துள்ளார். இப்போது புதிய வாகனங்கள் தேவையில்லை, சமாஜ்வாதி அரசில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களையே தானும் பயன்படுத்திக்கொள்கிறேன்’’ எனத் தெரிவித்துவிட்டார்.

சமாஜ்வாதி அரசில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் ரூ.1.5 கோடி செலவில், 2 பென்ஸ் கார்கள் வாங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Dailyhunt
"செல்லாத 500,1000 ரூபாய் நோட்டுகளை இனி மாற்ற முடியாது" - NEWSFAST EXCLUSIVE

E

செல்லாத ரூபாய் 500, 1,000 நோட்டுகளை மாற்ற 2-வது வாய்ப்பு வழங்கப்பட்டால், ரூபாய் நோட்டு தடை எதர்காக கொண்டு வரப்பட்டதோ அதற்கான முழுமையான அர்த்தத்தை இழந்துவிடும், ஆதலால் ரூபாய் நோட்டுகளை மாற்ற 2-வது வாய்ப்பு வழங்கப்படாது என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க மத்திய அரசு முடிவு செய்து இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நாட்டில் கருப்புபணம், ஊழல்,கள்ளநோட்டுகளை ஒழிக்க கடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார்.அதைத் தொடர்ந்து மக்கள் டிசம்பர் 30-ந்தேதி வரை தபால் நிலையங்கள், வங்கிகளில் செல்லாத நோட்டுகளை கொடுத்து, புதிய ரூ.2000, ரூ.500 நோட்டுகளை மாற்றிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.

மேலும், ரூபாய் நோட்டு தடை காலத்தில் வெளிநாட்டில் தங்கி இருந்தோர், என்.ஆர்.ஐ. ஆகியோர் மார்ச் 31-ந்தேதி வரை ரிசர்வ் வங்கி கிளைகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம், மற்றவர்கள் ரிசர்வ் வங்கியில் உரிய காரணங்களைக் கூறி மாற்றலாம் என அறிவித்தது. ஆனால், இந்த உத்தரவை திடீரென திருமப் பெற்று மக்களை டெபாசிட்செய்ய அனுமதிக்கவி்ல்லை.

இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுக்களை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், கடந்த 3 நாட்களுக்கு முன் பிற்பித்த உத்தரவில், “ நியாயமான காரணங்களால், பணத்தை டெபாசிட்செய்ய முடியாதவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்க வேண்டும். அது குறித்து மத்திய அரசு பரிசீலிப்பது அவசியம்.இது குறித்து 2 வார காலத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என மத்திய அரசிடம் தெரிவித்தது.

இந்நிலையில், மத்திய நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை கனிவுடன் அரசு அலோசிக்கும் என்ற போதிலும், செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற வழங்கப்படும் 2-வது வாய்ப்பு நிச்சயம் பல்வேறு விதமான தவறுகள் நடக்க வழியை ஏற்படுத்திவிடும்.

இதை அனுமதித்தால், இப்போது நாட்டுக்கு வெளியே இருக்கும், அதாவது, நேபாளம், வங்காளதேசம், பூடான் ஆகிய நாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டு இருக்கும் நோட்டுகள் மீண்டும் உள்ளே வரக்கூடும், இதனால், மேலும் சட்டவிரோதமாக பணம் புழங்க வாய்ப்பு உருவாகிவிடும். இது ரூபாய் நோட்டு தடை எதற்காக கொண்டுவரப்பட்டதோ அதற்கான ஒட்டுமொத்த அர்த்தத்தையும் இது வீணடித்துவிடும் என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க இருக்கிறோம்.

நக்சலைட்டுகளை ஒடுக்கியதிலும், தீவிரவாதிகளின் செயல்களை கட்டுப்படுத்தியதிலும், ரூபாய் நோட்டு தடை முடிவு மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. அவர்களுக்கு நிதி செல்வது முற்றிலும் தடுக்கப்பட்டது.

அதலால், உச்சநீதிமன்றத்தில், தெரிவிப்பது என்னவாக இருக்கும் என்றால், ரூபாய் நோட்டு தடை காலத்தில் செல்லாத நோட்டுகளை மாற்ற அரசு முடிந்த அளவு வசதிகளை மக்களுக்கு செய்துவி்ட்டது, மற்றொருவாய்ப்பு கொடுத்தால், அது இந்த திட்டம் எதற்காக கொண்டுவரப்பட்டதோ அதை நீர்த்துப்போகச் செய்துவிடும் எனத் தெரிவிப்போம்” எனத் தெரிவித்தார்.
Dailyhunt

"என் மரணத்துக்கு HOD தான் காரணம்" - கடிதம் எழுதிவிட்டு மாணவன் தற்கொலை!


தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் தேனு விநாயகர் நகரை சேர்ந்தவர் பாலு. டெய்லர். இவரது மனைவி ஷீலா. இவர்களது மகன் ஹேமச்சந்திரன் (21). தாம்பரம் அருகே வேங்கைவாசலில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 4ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலை ஷீலா, கடைக்கு செல்வதாக கூறி சென்றார். ஹேமச்சந்திரன் வீட்டில் தனியாக இருந்தார். இரவு 7 மணிக்கு அவர் வீடு திரும்பியபோது, முன்கதவு தழ்ப்பாள் போடாமல் மூடப்பட்டு இருந்தது. உள்ளே சென்றபோது, ஹேமச்சந்திரன் அறையில் இருந்தார்.

கதவை நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்கவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த அவர், அலறி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்தனர். அக்கம்பக்கத்தினர் உதவியுடன், கதவை உடைத்து உள்ளே சென்றபோது ஹேமச்சந்திரன், தூக்கில் தொங்கியபடி துடித்து கொண்டிருந்தார்.

உடனடியாக அவரை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

புகாரின்படி சேலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதற்கிடையில், ஹேமச்சந்திரன் எழுதி வைத்த பரபரப்பு கடிதம், பெற்றோரிடம் சிக்கியது. இதனை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அதில், என்னுடைய மரணத்துக்கு எனது கல்லூரியின் துறை தலைவர்தான் காரணம். எனக்கு படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. ஆனால், முடியவில்லை. எனது வருகை பதிவை குறைத்து, என்னை பட்டம் பெறாமல் செய்வேன் என கல்லூரி துறை தலைவர் என்னை மிரட்டினார்.

அதேபோல் எனது வகுப்பில் உள்ள மற்ற மாணவர்களையும் அவர் மிரட்டினார். ஆனால், என்னை மட்டும் பழி வாங்கிவிட்டார். என்னை தேர்வு எழுத விடமாட்டேன் என கூறினார். அதேபோல் பழி வாங்கிவிட்டார்.

எனக்கு கல்லூரியில் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தும், இந்த கல்லூரியில் என்னால் படிக்க முடியவில்லை. துறை தலைவர் ஏற்கனவே கூறியதுபோன்றே, தன்னை படிக்கவிடாமல் தொடர்ந்து டார்ச்சர் செய்து, தேர்வு எழுத விடாமல் தடுத்து விட்டார்.

மேலும் கல்லூரிக்கு சரியாக வராத மாணவர்கள் என்னுடைய வகுப்பிலும் நிறைய பேர் இருக்கும் போது என்னை மட்டும் வருகை நாட்கள் குறைவு என கணக்கு காட்டி துறை தலைவர் பழிவாங்கி விட்டார். துறை தலைவரின் தொடர் தொல்லையால் தான் இந்த சோக முடிவை தேடிக் கொண்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து போலீசார் கல்லூரி நிர்வாகம், சம்பந்தப்பட்ட துறை தலைவர் மற்றும் கல்லூரி மாணவர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மாணவன் ஹேமச்சந்திரன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால், நேற்றும் இன்றும் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
Dailyhunt
மக்கள் கியாஸ் மானியத்தை விட்டுகொடுப்பதைப்போல் ரயில் டிக்கெட் சலுகையையும் கைவிட வேண்டுமாம்..!




பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதின் பெயரில் நாட்டில் வசதியுள்ளவர்கள் லட்சக்கணக்கானோர், சமையல் கியாஸ் சிலிண்டருக்கான மானியத்தை தாமாக முன் வந்து விட்டுக் கொடுத்தனர். அதேபோல, ரெயில்வேயிலும் டிக்கெட் முன்பதிவில் அளிக்கப்படும் மானியத்தை விட்டுக்கொடுக்க பயணிகளிடம் கேட்டுக் கொள்ளப்பட உள்ளதாம்.

இந்த திட்டத்தை அடுத்தமாதம் ரெயில்வேதுறை முறைப்படி அறிவிக்க இருக்கிறது. அதாவது, இப்போது நாம் டிக்கெட் முன்பதிவின் போது செலுத்தும் தொகை என்பது ரெயில்வே துறையைப் பொருத்தவரை 57 சதவீதம் தான். ஏறக்குறைய 43 சதவீதம் கட்டணத்தை ரெயில்வே பயணிகளுக்கு மானியமாக அளித்து வருகிறது.

இந்த 43 சதவீத மானியத்தில்தான் டிக்கெட் முன்பதிவு செய்து பயணிப்போர் பயணித்து வருகின்றனர். இதுபோல, முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், ராணுவத்தினர் உள்ளிட்ட பலர் 43 சதவீதத்துக்கு அதிகமாக மானியத்தை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில், இந்த 43 சதவீத மானியத்தை கைவிட்டு உண்மையான டிக்கெட் விலையில், பயணிகள் பயணிக்க வேண்டும் என ரெயில்வே துறை வேண்டுகோள் விடுக்க உள்ளது. இதற்காக அடுத்த மாதம் தொடங்க உள்ள இந்ததிட்டத்தில், 50சதவீத மானியத்தை விட்டுக்கொடுத்தல், 100சதவீத மானியத்தை விட்டுக்கொடுத்தல் என்ற பிரிவில் இரு திட்டங்களை ரெயில்வே துறை செயல்படுத்த உள்ளது.

ஆன்-லைன் முன்பதிவின்போதும், இந்த இரு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு இருக்கும்,அதில் ஏதாவது ஒரு வாய்ப்பை நமது விருப்பத்தின் பெயரில் தேர்வு செய்யலாம், அதாவது நமது விருப்பத்தின் அடிப்படையில், மானியத்தை விட்டுக்கொடுக்கலாம். அவ்வாறு விட்டுக்கொடுக்கும் போது, கூடுதலாக டிக்கெட் கட்டணத்தை நாம் செலுத்த வேண்டியது இருக்கும்.

50 சதவீத மானியத்தை விட்டுக்கொடுத்தால், 22 சதவீத கட்டணம் கூடுதலாவும், 100சதவீத மானியத்தை விட்டுகொடுத்தால் 43 சதவீதம் கூடுதலாகவும் செலுத்த வேண்டியது இருக்கும்.

சமையல் கியாஸ் சிலிண்டரில் மானியத்தை விட்டுக்கொடுத்தவர்கள் சந்தை விலையில் சிலிண்டர்களை விலை கொடுத்து வாங்குவதைப்போல், ரெயில் டிக்கெட்டையும் உண்மையான விலையில் வாங்க வேண்டியது இருக்கும்.

தற்போது பயணிகளுக்கு 43 சவீதம் டிக்கெட்டில் மானியம் அளிப்பதால், ரெயில்வே துறைக்கு ஆண்டுக்கு ரூ.33 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது. அதை ஈடுகட்ட இந்தமுறையை பின்பற்ற உள்ளது.

மேலும், பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், “ ரெயில் டிக்கெட்டின் பின்புறம், நீங்கள் பயணிக்கும் தொலைவுக்கு 57 சதவீதம் மட்டுமே கட்டணமாக செலுத்துகிறீர்கள், 43 சதவீதத்தை ரெயில்வே மானியமாக அளிக்கிறது” என்று அச்சடித்து வழங்க உள்ளது. இதைப் பார்க்கும் போதாவது, மக்கள் மானியத்தை விட்டுக்கொடுக்க முன்வருவார்கள் என்று ரெயில்வே நம்புகிறது.

Dailyhunt
HRD to consult Health Min on medical college fees

The Central government is trying to bring the exorbitant fee charged by private medical colleges under check. This comes after a Madras High court ruling prompted University Grants Commission (UGC) and Human Resource Development Ministry (HRD) to form a committee for fee regulation.
However, there are many technicalities involved in getting all colleges under the same fee regulation. The UGC has written to the HRD Ministry asking them to consult the Ministry of Health and Medical Council of India in this regard since these institutions are responsible for medical education in the country.
There are over 34 deemed private institutions in the country that offer medical courses. Earlier they would conduct their own entrance examinations. But after NEET all institutions take admission through a single test. However, some students were unable to get admission in Puducherry-based private institutions after the institution allegedly charged exorbitant fee from them. The students went ahead and filed a petition in the Madras High Court. The court in its order on June 16 has asked UGC to form a committee to look into the matter of fee regulation.
A meeting in this regard was held in the HRD ministry, last week. According to sources in the ministry no consensus could be formed on in the issue as a section of officials feel that it is difficult to bind all private institutions by a single rule. “By fixing a fee cap, we will allow an institution not doing so well and charging lesser to charge a higher amount in the name of the rule. Hence we will have to work out the technicalities in detail before we can come up with a fee regulation rule,” said a source.
Even though the Medical Council of India keeps issuing letters to private institutions at regular intervals, to adhere to fee guidelines set up by the government, many institutions charge more in the name of capitation fee and other things.
UGC asks varsities to install sanitary napkin incinerators
The University Grants Commission (UGC) has asked varsities and higher educational institutions to install sanitary napkin incinerators in women's hostels to ensure proper disposal of menstrual waste.
Asserting that improper disposal of sanitary napkins causes problems for the environment and public health, the commission has asked the varsities to issue necessary instructions in this regard.
"In an effort to promote proposal disposal of menstrual waste and promote the Swachh Bharat Mission, it is imperative that we take the initiative to promote menstrual sanitation and proper disposal of menstrual waste by creating awareness, encouraging every woman to use eco-friendly incinerators and promoting research for a biodegradable alternative," a communication sent to varsities read.
"You are requested to consider the installation of these machines within the premises of women's hostels," it added.
The UGC communication further said that HLL Lifecare Limited, a PSU under health ministry has introduced sanitary napkin-vending machines and incinerators.
"The expenditure incurred can be directly booked under the solid waste management component of the Swachh Bharat Mission. The estimated cost for one set of machinery is Rs 49,646," UGC said.
(This article has not been edited by DNA's editorial team and is auto-generated from an agency feed.)

NEET success: Once a child bride, 21-yr-old Rupa Yadav to soon be a doctor

NEET success: Once a child bride, 21-yr-old Rupa Yadav to soon be a doctor

NEET success: Once a child bride, 21-yr-old Rupa Yadav to soon be a doctor: NEET result: Rupa's in-laws also supported her all along to meet the education expenses

She was married off at the tender age of eight, but that never deterred from pursuing her dream of becoming a doctor.

Now 21, Rupa has secured an all-India rank of 2,612 -- scoring 603 marks in this year's National Eligibility and Entrance Test (NEET).

Her husband and brother-in-law, both farmers, also supported her all along, even driving an auto to meet the education expenses, disregarding villagers' disparaging remarks.

Born into a poverty-ridden farmer's home in Kareri village of Jaipur district, Rupa, then a student of class III, and her elder sister Rukma, were wedded to Shankarlal, who was then 12, and his elder brother Babulal, respectively.

After her class X exams, in which she scored 84 per cent marks, her husband and brother-in-law helped her continue her studies.

Rupa continued to excel, again scoring 84 per cent in class XII exam, even as she managed household chores at the same time.

The same year, she enrolled herself for a B.Sc course and also appeared for the AIPMT examination, securing an all India rank of 23,000.

"Though I did not qualify for a good government medical college, the AIPMT marks encouraged my husband and brother- in-law to send me to Kota for preparing for MBBS entrance test," Rupa said.

Last year she appeared for NEET but fell short of achieving her goal. The following year, with a scholarship from her coaching institute, she finally cleared the hurdle.

NEWS TODAY 20.08.2026