Saturday, July 15, 2017

ஜூலைக்குள் அனைத்து அஞ்சலகங்களிலும் ஆதார் அட்டையை திருத்தும் வசதி

By DIN  |   Published on : 15th July 2017 02:30 AM  | 
aathar
Ads by Kiosked
ஜூலை மாத இறுதிக்குள் அனைத்து அஞ்சலகங்களிலும் ஆதார் திருத்தம் மேற்கொள்ளும் வசதி செய்யப்பட உள்ளது. அதுபோல், புதிய ஆதார் அட்டை பெறுவதற்கும் அங்கு விண்ணப்பிக்கலாம் என அஞ்சல்துறை தெரிவித்துள்ளது.

அரசின் பல்வேறு திட்டங்களுக்கு பொது மக்களின் சரியான தகவலை பெறுவதற்காக ஆதார் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது, நாடு முழுவதும் பல்வேறு சிறப்பு முகாம்கள் மூலம் ஆதார் பதிவு செய்யப்பட்டது.
ஆதாரில் பிழை: அவ்வாறு பதிவு செய்யப்படும் போது, பலருக்கும் விழித்திரை, கை ரேகை பதிவு ஆகியவற்றை தவிர இதர சுய விவரங்கள் குறித்த பிழையான தகவல்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

இந்த நிலையில், வங்கி கணக்கு தொடங்குதல், பான் அட்டை , செல்லிடப்பேசி இணைப்பு உள்ளிட்ட அனைத்து விஷயங்களுக்கும் ஆதார்அட்டை இணைப்பு அவசியமாக்கப்பட்டு வருகிறது. ஆனால், பலருக்குஆதார் அட்டையில் புகைப்படம், முகவரி உள்பட இதர தகவல்கள் சரியாக இல்லை.
இதற்காக, ஆன்லைனில் திருத்தம் மேற்கொள்ள வசதிகள் இருந்தாலும், அனைவராலும் சென்று திருத்தம் செய்யமுடிவதில்லை. எனவே, அஞ்சலகங்களில் திருத்தம் மேற்கொள்ள கூடுதல் சேவை மையங்களை கொண்டு வர முடிவு செய்யப்பட்டு, தற்போது சென்னை அஞ்சலக வட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஜூலை 3 முதல் அண்ணா சாலை, தியாகராய நகர், மயிலாப்பூர், பரங்கிமலை, பூங்கா நகர் ஆகிய தலைமை அஞ்சலகங்கள், தேனாம்பேட்டை, அண்ணாநகர், அசோக் நகர், திருவல்லிக்கேணி ஆகிய துணை அஞ்சலகங்களிலும் ஆதார் திருத்தம் மேற்கொள்ளும் வசதியினை அஞ்சல்துறை அறிமுகப்படுத்தியது.

இதன்மூலம், பொதுமக்கள் தங்கள் ஆதார் அட்டை தகவல்களில் திருத்தம் செய்து சரியான விவரங்களை பதிவு செய்யலாம் .
இந்த சேவை தொடக்கப்பட்ட நாள் முதலே பொதுமக்கள் ஆதார் திருத்தம் செய்து வருகின்றனர். விரைவில் இந்த வசதி தமிழகம்முழுவதும்அமல்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து அஞ்சல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆதார் அட்டை திருத்தம் மேற்கொள்ளும் பணி சென்னை வட்டத்தில் 10 அஞ்சலகங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் படிப்படியாக விரிவுபடுத்தப்பட உள்ளது.
2505 அஞ்சலகங்களிலும்..:
 
அதன்படி, தமிழகத்திலுள்ள 2505 அஞ்சலகங்களில் ஆதார் அட்டை திருத்தம் செய்யும் வசதி கொண்டு வரப்படும். இதற்காக, பயோமெட்ரிக் (உடற்கூறு) முறையில் திருத்தம் மேற்கொள்வதற்கு இயந்திரங்கள் தற்போது இல்லை.
அதுபோல், ஆதார் திருத்தம் மேற்கொள்வதற்கு அஞ்சலக ஊழியர்களுக்கு இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையம் (யுடிஏஐ) மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இன்னும் 2 வாரங்களில் அனைத்து அஞ்சலகங்களிலும் புதிய இயந்திரங்கள் கொண்டு வரப்படவுள்ளன.
அதன்படி, அஞ்சல ஊழியர்கள் மூலம் அனைத்து அஞ்சலகங்களிலும் ஜூலை இறுதிக்குள் ஆதார் அட்டை திருத்தம் மேற்கொள்ளும் வசதி அமல்படுத்தப்படும்.

அதுபோல், அண்ணா சாலை, திருச்சி, மதுரை, கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, வேலூர், ஈரோடு, சேலம், திருப்பூர், திண்டுக்கல், புதுச்சேரி, காஞ்சிபுரம், திருவள்ளூர்ஆகிய தலைமை அஞ்சலகங்களில் புதியதாக ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த வசதியானது இன்னும் ஓரிரு மாதங்களில் நடைமுறைக்கு வரும் என்றார்.

Have to pay your college or university fee? Cash won't be accepted anymore

HRD Ministry has asked the UGC to issue necessary advisory to all higher educational institutions
Govt not to allow cash fees payments in varsities, colleges
The government has directed all universities and higher educational institutions across the country to ensure that no fees payments are made by students in cash mode from the upcoming academic session.

The Ministry of Human Resource Development has asked the University Grants Commission (UGC) to issue the necessary advisory to all higher educational institutions that all monetary transactions should be done using digital modes of payment.

"All receipts and payments related to the functioning of the institutions including student fees, exam fees, vendor payments and salary/wage payments shall be made 'only' through online or digital modes," the directive sent to university heads said.

"For all students' service in the hostels, the digital mode should be used for all transactions. All canteens and business establishments on the campus may be encouraged to resort to only digital modes for their receipts and payments using the BHIM app by linking their bank accounts with Aadhaar," it added.

The varsities have been asked to identify all transactions being carried out in cash currently and find ways for replacing them with digital modes.

The government has also asked the varsities to appoint a nodal officer for the purpose and send a monthly report to the UGC.

New MCI norms for MBBS, BDS disability quota 

DH News Service, Bengaluru, Jul 12 2017, 0:58 IST

× Only if a candidate has more than 40% disability of the lower limb will he or she be eligible for seats under the ‘Person with Disabilities’ quota in the counselling for medical and dental seats.

Candidates with vision, hearing and speech disabilities and those with disabilities of the upper limbs are not eligible for the quota.

This year, the Medical Council of India (MCI) has changed the eligibility criteria for the PwD quota. The information brochure on the centralised counselling for MBBS and BDS seats, released by the Karnataka Examinations Authority (KEA), reflects these revised rules. The brochure says that candidates with 50% to 70% of disability in only the lower limb will be considered for seat allotment first, followed by candidates who have 40% to 50% lower limb disability.

“The MCI rules are followed by all states and we too have to do the same,” said K S Manjunath, executive director of KEA.

However, the disability criteria remains unchanged for engineering and other professional courses, according to the state’s rules. Before the implementation of NEET, the same rules applied to medical and dental seats as well.

MBBS COUNSELLING

IT dept seeks explanation

தேய்ந்து போகும் அம்மா உணவகங்கள்
 அலோசியஸ் சேவியர் லோபஸ்

 

கடுமையான நிதி நெருக்கடி காரணமாக உள்ள அம்மா உணவகங்களின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டு பல்வேறு தரப்பிலிருந்தும் வரவேற்ப்பைப் பெற்ற திட்டம் அம்மா உணவகம் திட்டம். ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்கள்கூட அம்மா உணவக திட்டத்தை பாராட்டியிருக்கின்றன.

இந்நிலைய்யில், கடுமையான நிதி நெருக்கடி காரணமாக உள்ள அம்மா உணவகங்களின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

ஒப்பந்ததாரர்களுக்கு பாக்கி..

அம்மா உணவகங்கள் அமைக்க ரூ.700 கோடி செலவில் நகரின் பல இடங்களில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான செலவுத் தொகை சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு அளிக்கப்படாமல் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. இதனால் அம்மா உணவகங்களின் எண்ணிக்கையை 200-ஆக குறைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. தற்போது நகரில் 407 அம்மா உணவகங்கள் உள்ளன.

இருப்பினும் உள்ளாட்சித் தேர்தல் இன்னும் நடைபெறாத நிலையில் இப்போதே அம்மா உணவகங்களின் எண்ணிக்கையை குறைத்துவிட்டால் அது தேர்தலில் ஒலிக்கும் என்பதாலேயே உணவகங்களை மூடும் முடிவு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மாநகராட்சியின் சுகாதாரத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இரண்டாம் கட்டமாக திறக்கப்பட்ட அம்மா உணவகங்களில் விற்பனை பெறும் சரிவைக் கண்டுள்ளது தெரியவந்திருக்கிறது.

நஷ்டத்தில் உணவகங்கள்

நாள் ஒன்றுக்கு ரூ.10,000 முதல் ரூ.12,000 வரை அம்மா உணவகங்களில் விற்பனை நடைபெறுகிறது. உணவுக்காக பயன்படுத்தப்படும் அரிசி மானிய விலையில் பெற்றுக்கொள்ளப்பட்டாலும் மற்ற செலவினங்களை மாநகராட்சி பொது நிதியில் இருந்துதான் பெறவேண்டியுள்ளது. சராசரியாக நாளொன்றுக்கு ஒரு அம்மா கேன்டீனுக்கு ரூ.20,000 செலவாகிறது. கூட்டம் அதிகமில்லாத அம்மா உணவகங்களில் லாபம் வெறும் ரூ.2000 ஆக மட்டுமே உள்ளது. ஊழியர்களுக்கான தினக்கூலி ரூ.300. ஒவ்வொரு உணவகத்திலும் 10 முதல் 40 ஊழியர்கள் வரை வேலை பார்க்கின்றனர். ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகத்தில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர்.

இந்நிலையில் நிதி நெருக்கடியால் அம்மா உணவகங்களின் எண்ணிக்கையை குறைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

NEWS TODAY 22.08.2026