Monday, July 24, 2017

82% make it to engg counselling on day 1, many 
may skip med
Chennai


The first day of the TNEA (Tamil Nadu Engineering Admission) general counselling round saw a turnout of 81.75% with 2,329 out of the 2,898 students called for counselling taking part. A number of top rank holders who received their enrollments on Sunday at Anna University said they would be giving the highly-anticipated medical counselling a miss, hinting that fewer students than anticipated may migrate from their allotments here to medical colleges.Of the 162 top rankers, 116 turned up for the counselling, said registrar S.Ganesan.
Sessions that started in the morning saw students thronging to computer science (434 enrollments), electronics and communication (625) and mechanical engineering (403) in particular. With a TNEA rank of 26, G Hema from Madurai said she had opted for the ECE programme, along with nearly half the students ranked in the top 20. She was also one of the handful of toppers who had written NEET. “I scored 330, but if I don't get a government college seat, I will continue with engineering,“ she said, echoing the thoughts of several other students. Private colleges are expensive, so a government medical college is my only option besides this,“ said Arshath, who secured TNEA rank 7.
Aslew of measures were also announced by higher education secretary Sunil Paliwal including the limiting of the arrear-clearing window to three years for all Anna University students. Another measure being contemplated for all 500 affiliated colleges is to ensure that exam dates prescribed by the university are not circumvented by colleges. The university affiliation scores of institutions would be lowered in case of tampering with the dates and not sticking to the aca demic exam schedule, he said.
The day spanned six ses sions in all, with parents and students from across the state thronging the campus. Be sides a step-up in general facil ities including seating arrangements and guidance boards, 10 bank counters were also set up for students by the university for education loan purposes.

No need for birth cert to get passport


Continuing the process of simplifying passports for citizens, the Centre informed Parliament this week that Aadhaar or PAN card among a host of documents could be used to establish proof of birth, instead of the mandatory provision of submitting birth certificate for all applicants born on or after January 26, 1989. Online applicants need only provide the name of one parent or guardian, not both, helping single-parent families. The aim is to make passports easily available to millions more, minister of state for external affairs V K Singh said while answering a question in Parliament.
500 MBBS seats may go to `native' students of 
other states in TN
Chennai


The number of students from other states securing MBBS seats from the government quota on the basis of nativity will go up from about 47 in 2016 to nearly 500 this year, if the state admits students on the basis of NEET. This would be a 11-fold increase in the 85% government quota seats in 22 state-run medical colleges and state quota seats in 10 self-financing medical colleges compared to 2016.Data from the directorate of medical education shows that this year 58 candidates from Karnataka, 44 from Kerala and 17 from Andhra Pradesh applied on the basis of nativity and qualified for MBBS admissions, besides 381 more students from other states. Last year, there were less than 50 students from outside TN.
This year, the number of government quota seats went down to 3,377 from 3,609 in 2016, but the percentage of government seats for other state students might go up from 1.30% to 14%.
Baffled by these numbers, state health minister C Vijaya Baskar, higher education minister K P Anbalagan and four other ministers, who left for New Delhi on Sunday , will camp there to convince Union ministers and MPs that Tamil Nadu should be exempted from NEET, at least for 2017. Meritorious students within our state will be diTuesday rectly affected by this,“ said Vijaya Baskar. On , chief minister Edappadi K Palaniswami is likely to meet prime minister Narendra Modi to discuss the NEET issue after the swearing-in ceremony of Ram Nath Kovind as President.
The provisional rank lists worked out by the selection committee show that this year students from districts such as Tiruvarur, Ramanathapuram and Nagapattimam were getting fewer seats, Vijaya Baskar told TOIon Sunday . In Dharmapuri, the share dipped from nearly to 6% to 1.5%. “Nearly 30% of the students were from Chennai, Kancheepuram and Tiruvallur,“ he said. Counselling for medical admissions, which was scheduled to begin on July 17, was put on hold after the Madras high court quashed the government order that reserved 85% of government quota seats to students from the state board. The state ap pealed to a division bench stating that less than 6% of state board students who cleared NEET in Tamil Nadu can get admission compared to three in 10 students from CBSE if 85% of seats are not reserved for state board students.
A senior official from the directorate said more than 1,400 state board students and around 1,000 from the CBSE and other boards would secure government college seats. This year, 48% of seats are likely to go to students of CBSE and other boards. “But among the 1000 students from CBSE, a majority are from Chennai. This is because a majority of CBSE schools are in the city. The state has just 268 CBSE schools,“ he said.
Meanwhile, CBSE students signed a petition on change.org, addressed to the Madras high court, Union human resource and development minister Prakash Javadekhar, Medical Council of India, Supreme Court of India, CBSE chairman R K Chaturvedi and Modi. The petition filed by Harini P had received over 600 signatures by Sunday evening.
Harini, who took a year's break to study for NEET, hoped Tamil Nadu would be asked to hold the state's medical admissions based solely on NEET. “ A deserving student should get the medical seat no matter how the system, syllabus and the qualifying exam changes,“ she said. Medical Council of India (MCI) vicepresident Dr Bhirmanandham said the state should improve the syllabus and teaching methodologies to help state board students secure better NEET scores.



Thursday, July 20, 2017

சுற்றுலாத் துறை சார்பில் 108 அம்மன் கோயில் சுற்றுலா
By DIN | Published on : 19th July 2017 12:23 PM




மாநில அளவில் பிரசித்தி பெற்ற 108 அம்மன் திருக்கோயில்களுக்கு வழிபாடு செய்வதற்காக சுற்றுலா வளர்ச்சித்துறை சார்பில் 5 நாள் ஆடி மாதச் சுற்றுலாத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சுற்றுலாத் துறை, ஆன்மிக சுற்றுலாப் பயணிகள் பயனடையும் வகையில் பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு ஆன்மிகச் சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
108 திருக்கோயில்களில் வழிபாடு: சென்னை } காளிகாம்பாள், மேல்மருத்தூர்}ஆதிபராசக்தி, சிதம்பரம்}அகிலாண்டேஸ்வரி, வைத்தீஸ்வரன் கோயில்}தையல் நாயகி, மாயவரம்}படைவேட்டையம்மன், திருக்கடையூர்}ஸ்ரீஅபிராமி, காரைக்கால்}அம்மையார், நாகப்பட்டினம்} நீலாயுதட்சிணியம்மன், மதுரை}மீனாட்சி அம்மன், திரெüபதி அம்மன், உறையூர்}வெக்காளியம்மன், திருவானைக்காவல்}அகிலாண்டேஸ்வரி, சமயபுரம்}ஆதிமாரியம்மன், சிறுவாச்சூர்}மதுரகாளியம்மன், திருவக்கரை}வக்ரகாளியம்மன் உள்பட 108 அம்மன் திருக்கோயில்களில் வழிபாடு செய்வதற்கு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
பாதுகாப்பான தங்கும் வசதி: ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை, வியாழக்கிழமைகளில் சென்னையில் இருந்து புறப்பட்டு ஐந்தாம் நாள் இரவு சென்னை வந்தடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நாள்களில் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒவ்வொரு வழிபாட்டுத் தலங்களிலும் சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ஒவ்வொரு நாளும் சுற்றுலா வளர்ச்சித்துறை நடத்தும் தங்கும் விடுதிகளில் அனைத்து வசதியுடனும் பாதுகாப்பாக தங்க வைக்கப்படுவர்.
முதல் நாளில் வைத்தீஸ்வரன் கோயில், 2}ஆம் நாள் தஞ்சாவூர் தமிழ்நாடு ஹோட்டலிலும், 3}வது நாள் மதுரை தமிழ்நாடு ஹோட்டலிலும், 4}ஆம் நாள் திருச்சி தமிழ்நாடு ஹோட்டலிலும் என ஒவ்வொரு நாளும் சுற்றுலா பயணிகள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கட்டணம்: இச்சுற்றுலாவுக்கு குளிரூட்டப்பட்ட பேருந்து, தங்கும் வசதியுடன் 2 பேருக்கு ரூ.5,500, 4 வயது முதல் 10 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு}ரூ.4,900, தனி நபருக்கு தனி அறை வசதியுடன் ரூ.6,500 கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த விவரங்களுக்கு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தை 044} 25333444, 25333333, 25333857, 25333385 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு வேலை நாள்களில் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

நம்பிக்கை மோசம்!

By ஆசிரியர்  |   Published on : 20th July 2017 01:13 AM  |   
வாடிக்கையாளர்களால் வங்கிகளில் உள்ள பாதுகாப்புப் பெட்டகங்களில் வைக்கப்படும் நகைகளும், ஆவணங்களும் திருடப்பட்டாலோ, வேறு ஏதாவது காரணத்தால் பாதிப்புக்குள்ளானாலோ அதற்கு வங்கிகள் பொறுப்பேற்காது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் 19 அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அந்த வங்கிகள் இதை தெளிவுபடுத்தியிருக்கின்றன. வாடிக்கையாளர்கள் தங்களது விலைமதிப்புள்ள பொருள்களை வங்கிகளின் பாதுகாப்புப் பெட்டகங்களில் வைப்பது அவற்றின் பாதுகாப்பை முழுமையாக உறுதிப்படுத்தாது என்பது இதன் மூலம் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.
வாடிக்கையாளர்கள் பாதுகாப்புப் பெட்டகங்களில் என்னவெல்லாம் வைத்திருக்கிறார்கள் என்பது தெரியாத நிலையில் அவற்றில் ஏற்பட்டிருக்கும் இழப்புக்குத் தாங்கள் பொறுப்பேற்க முடியாது என்பது வங்கிகள் தரப்பு வாதம். பாதுகாப்புப் பெட்டகத்தை வாடிக்கையாளர்கள் ஒப்பந்தம் செய்து கொள்ளும்போதே அந்த ஒப்பந்தத்தில் பாதுகாப்பு பெட்டகத்தில் உள்ள பொருள்களின் இழப்புக்கோ, சேதத்துக்கோ தாங்கள் பொறுப்பேற்க முடியாது என்பதைத் தெளிவாகவே வங்கிகள் பதிவு செய்து விடுகின்றன.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஹரியாணா மாநிலம் சேனிப்பட்டில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் பாதுகாப்புப் பெட்டக அறைக்குள் நுழைந்து நடத்தப்பட்ட வங்கிக் கொள்ளை இந்தப் பிரச்னை குறித்த விவாதத்துக்கு வழிகோலியது. கேள்வி கேட்பாரற்று புறக்கணிக்கப்பட்ட ஒரு வீட்டிலிருந்து நான்கு கொள்ளையர்கள் பஞ்சாப் நேஷனல் வங்கியின் பாதுகாப்புப் பெட்டக அறை வரை மண்ணுக்கு அடியில் 125 அடி நீளத்திற்கு சுரங்கப் பாதை அமைத்து அதற்குள் நுழைந்தனர்.
தினமும் இரவில் வேலையைத் தொடங்கி விடியும் வரை சுரங்கப்பாதையை தோண்டிய கொள்ளையர்கள் மிகவும் கவனமாகத் திட்டமிட்டு மண்ணுக்கு அடியில் செல்லும் தொலைபேசி தொடர்புகளோ, தொலைபேசி கம்பிகளோ, குடிநீர் குழாய்களோ கழிவுநீர்க் குழாய்களோ பாதிக்கப்படாமல் சுரங்கம் தோண்டியிருக்கிறார்கள். 7 அடி உயரம் 2.5 அடி அகலமும் உள்ள சுரங்கப்பாதை வழியாக வங்கியின் பாதுகாப்புப் பெட்டக அறைக்குள் நுழைந்திருக்கிறார்கள்.
வங்கியின் பாதுகாப்புப் பெட்டக அறைக்குள் காணப்பட்ட 350 பெட்டகங்களில், 86 பெட்டகங்களை மிகவும் சாதுரியமாக அவர்கள் திறந்திருக்கிறார்கள். அவற்றிலுள்ள 72 பெட்டகங்களில் இருந்து பலகோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளுடன் தப்பியிருக்கிறார்கள். இந்தக் கூட்டத்தின் தலைவனான மகிபால் தற்கொலை செய்துகொண்டுவிட்டான். ஏனைய பிடிபட்ட 3 பேரிடமிருந்து 43 கிலோ தங்கம், வெள்ளிப் பொருள்கள், ரொக்கப்பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
தங்களது பொருள்களை இழந்த வாடிக்கையாளர்களுக்கு இன்னும்கூட எந்தவித நிவாரணமும் கிடைத்தபாடில்லை. உடைக்கப்பட்ட பெட்டகங்களின் வாடிக்கையாளர்களின் கூற்றுப்படி ஏறத்தாழ 100 கோடி ரூபாய் பெறுமானமான அவர்களது பொருள்கள் கொள்ளை போயிருக்கின்றன. அந்தப் பாதுகாப்பு அறைகளின் பெட்டகங்கள் 60 - 70 ஆண்டுகள் வரை பழைமையானவை என்றும், அந்த அறையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவில்லை என்பதும் வாடிக்கையாளர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு. இந்தக் காரணத்தால் தங்களுக்கு இழப்பீடு தர வேண்டும் என்பது அவர்கள் வாதம்.
சட்டமும் வாடிக்கையாளர்களுக்கு எதிராகத்தான் இருக்கிறது. ஒப்பந்தச் சட்டம் 182 பிரிவின்படி பாதுகாப்புக்காக ஒருவரிடம் தரப்பட்டிருக்கும் பொருள்கள், அவர் முறையாகப் பாதுகாத்திருந்தும் தொலைந்துபோனாலோ, சேதமடைந்தாலோ அதற்கு அவர் பொறுப்பல்ல என்று கூறுகிறது. தங்களுக்கும் பாதுகாப்பு பெட்டகத்தை வாடகைக்கு எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையேயான உறவு என்பது வீட்டின் உரிமையாளருக்கும் வாடகைக்கு இருப்பவருக்கும் இடையே உள்ள உறவு போன்றதுதானே அல்லாமல் வங்கிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே உள்ள உறவு போன்றது அல்ல என்பது வங்கிகளின் வாதம்.
இந்த வாதத்தை சில நுகர்வோர் நீதிமன்றங்கள் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனாலும்கூட வாடிக்கையாளர்களுக்கு அதனால் பயன் இருக்கிறதா என்றால் கிடையாது. தன்னுடைய விலையுயர்ந்த பொருள்களை வங்கிகள் பாதுகாக்கத் தவறும்போது வங்கிகளுக்கு எதிராக வாடிக்கையாளர் வழக்கு தொடர்ந்து இழப்பீடு பெற வேண்டுமேயானால் தனது பெட்டகம் கொள்ளையடிக்கப்பட்டது என்பதை மட்டுமல்ல, அதற்குள் வைக்கப்பட்டிருந்த பொருள்கள், அதன் மதிப்பு ஆகியவை குறித்த தரவுகளையும் தெளிவுகளையும் அவர்கள் கொடுத்தாக வேண்டும். இது சாத்தியமானது அல்ல.
வங்கிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே ஏற்படும் நம்பிக்கை இழப்புதான் இந்த விவாதத்தின் அடிப்படை. பாதுகாப்புப் பெட்டக ஒப்பந்தத்தை வெறும் வாடகைதாரருடனான உறவாக வங்கிகள் கருதுமேயானால், அது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை இழக்க நேரிடும். வங்கியின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மீது நம்பிக்கை வைத்த குற்றத்திற்காக வாடிக்கையாளர்கள் தண்டிக்கப்படுவது நியாயமல்ல.
இதற்கு ஒரேயொரு தீர்வு வங்கிப் பாதுகாப்புப் பெட்டகங்களை முறையாகக் காப்பீடு செய்வதுதான். இதற்கு வாடிக்கையாளர்கள் அவரவர் பாதுகாக்கும் பொருள்களின் மதிப்பைப் பொருத்து இழப்பீட்டிற்கான தொகையின் ஒரு பகுதியை நிச்சயமாக கொடுக்க முன்வருவார்கள். வங்கிகள் - காப்பீட்டு நிறுவனங்கள் - வாடிக்கையாளர்கள் என்கிற மும்முனை ஒப்பந்தம்தான் வங்கிகள் மீதான் நம்பிக்கையையும் வாடிக்கையாளர்களின் நலனையும் உறுதிப்படுத்தும்.

தேர்வும் தீர்வும்

By கா. செல்லப்பன்  |   Published on : 18th July 2017 01:20 AM  |     
நீட் எனப்படும் தேசியக் கல்வித் தகுதி தேர்வு, தேசம் முழுமைக்கும் பொதுவான, உயர்கல்விக்கு, குறிப்பாக மருத்துவக் கல்விக்கு, தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்வு முறை.
'ஒரு தேசம், ஒரு தேர்வு' என்ற கொள்கை, பலவகையான பாடத்திட்டங்களையும் பள்ளி அமைப்புகளையும், சமூக, பண்பாட்டு வேறுபாடுகளையும் கொண்ட இந்த பாரத தேசத்துக்குப் பொருந்துமா என்ற அடிப்படைக் கேள்வியை அலட்சியப்படுத்திவிட முடியாது.
அப்படி வேறுபாடுகள் இருப்பதனால்தான், இப்படி ஒரு பொதுவான அளவுகோல் தேவைப்படுகிறது என்றும் வாதிடலாம்.
ஆனால், இதன் அடிப்படை நோக்கம் தகுதியுள்ள எந்த மாணவனுக்கும் மருத்துவக் கல்வி வாய்ப்பு மறுக்கப்படக் கூடாது என்பதும், தகுதியில்லாதவர்கள் பணத்தைக் கொடுத்து இடத்தை வாங்குவதைக் கட்டுப்படுத்துவதுமே.
உண்மையான கல்வி ஒருமைப்பாடு, எந்தப் பகுதி மாணவரும் எந்தப் பகுதியிலும் சேர்ந்து கற்கலாம் என்ற நிலை உருவானால்தான் சாத்தியமாகும். அதற்கு இந்தத் தேர்வு வழிவகுப்பதாகத் தெரியவில்லை. ஒரு பாடத்திட்டத்தின் அடிப்படையில், ஒரு அதிகாரமையத்தின் வழியாகத் தேர்வு நடத்துவதைத்தான் இது உறுதிப்படுத்துகிறது.
மேலும் ஒருமைப்பாடு வேறு; ஒற்றைத் தன்மை வேறு. முன்னது இயல்பாக மலர்வது; பின்னது செயற்கையாக உருவாக்கப்படுவது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) பாடத்திட்டப்படி நடத்தப்படும் இத்தேர்வு, மாநில பாடத்திட்டப்படி பயிலும் மாணவர்களுக்கு, அதிலும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதகமாக அமையும்.
இந்த ஆண்டு, தமிழகத்திலிருந்து தேர்வு எழுதியவர்களில் வெற்றி பெற்றவர்கள் மிகப்பெரும் பகுதி, சி.பி.எஸ்.இ. திட்டப்படி படித்தவர்களாகவும், மிகக் குறைவான மாணவர்கள்தான் மாநில பாடத்திட்டப்படி பயின்றவர்களாகவும் உள்ளனர். மேலும் தரவரிசைப் பட்டியலில் பிற்பட்ட வகுப்பினர்களுக்கான ஒதுக்கீடு சரியாகப் பின்பற்றப்படவில்லை.
மாநில பாடத்திட்டம், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு இணையாக மாற்றப்பட தமிழக அரசு முயற்சிகளை எடுத்து வருவது மகிழ்ச்சிக்குரியதே. ஆனால், சி.பி.எஸ்.இ. திட்டம்தான் எல்லோருக்கும் ஏற்றதென்றோ, எல்லா வகைகளிலும் சிறந்ததென்றோ கருத முடியாது.
அதேபோல், தமிழகத்து கிராமப்புற மாணவர்கள், நீட் தேர்வுக்குத் தகுதிப்படுத்திக் கொள்ளவில்லை என்பதையும் ஏற்க இயலாது. தமிழக கிராமப் பள்ளிகளில், தமிழ் வழி பயின்றவர்கள் மிகச்சிறந்த விஞ்ஞானிகளாகவும் அறிஞர்களாகவும் விளங்கியதையும் மறந்துவிடக் கூடாது.
நீட் தேர்வினால், தமிழக கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்பு பாதிக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் அதிலிருந்து விலக்குக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி, தமிழக அரசு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. அதை ஏனோ, மத்திய அரசு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு இதுவரை அனுப்பி வைக்கவில்லை.
இந்த நிலையில் தேர்வும் நடந்து முடிவுகளும் வந்துவிட்டன. மாநிலக் கல்வி வாரிய மாணவர்களின் நலனைப் பாதுகாக்கும் நோக்கத்தில், நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 85 விழுக்காடு இடங்களும், சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு 15 விழுக்காடும் உள்ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.
இதை எதிர்த்து சி.பி.எஸ்.இ. மாணவர்கள் சிலர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். நீதிமன்றம் உள்ஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்தது. ஏனென்றால், பாடத்திட்ட அடிப்படையில் இடஒதுக்கீடு செய்ய அரசியல் சட்டம் அனுமதிக்கவில்லை.
மேலும் சி.பி.எஸ்.இ.யில் படித்த காரணத்துக்காகவே, அந்த மாணவர்களைத் தண்டிப்பதுபோல் இது உள்ளது. அவர்கள் பெருவாரியாக வெற்றி பெற்றிருக்கும்போது அவர்களுக்கு 15 விழுக்காடு மட்டும் ஒதுக்குவதும் நியாயமில்லை.
மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கும் சமூக நீதி அடிப்படைலாவது நியாயம் வழங்கப்பட வேண்டும். இந்த இரண்டு தரப்பு மாணவர்களுக்கும் நியாயம் கிடைக்க வேண்டுமென்றால் நாம் நீதிமன்றத்தை மறுபடியும் அணுக வேண்டும்.
நீட் தேர்வில் வெவ்வேறு வகை வினாத்தாள்கள் தரப்பட்டதும் பொதுத் தேர்வின் பண்பையே குலைப்பதாகும். அந்த அடிப்படையிலும் விலக்கு கேட்கலாம்.
ஆனால் இவை எல்லாமே இடைக்காலத் தீர்வுகள்தான். நீட் தேர்வின் தன்மையையே மத்திய அரசு ஓரளவு மாற்ற வேண்டிய அவசியம் இருக்கிறது. வினாக்கள், எந்த ஒரு கல்வித் திட்டத்தையும் மட்டும் அடிப்படையாகக் கொள்ளாமல், நாட்டின் எல்லாப் பகுதிப் பாடத்திட்டங்களின் பொது அம்சங்களை மையமாகக் கொள்ள வேண்டும்.
அவை, மாணவர்களின் அடிப்படை அறிவு, திறன், விருப்பத்தை அளவிடுபவையாக அமைய வேண்டும். நீட் தேர்வை தேசியத் தரம் வாய்ந்த கல்லூரிகளில் சேருபவர்களுக்குப் பயன்படுத்தலாம்.
எல்லா மாநிலங்களிலும் நீட் மதிப்பெண்கள், மாநிலப் பொதுத்தேர்வு மதிப்பெண்கள் இரண்டையும் சேர்த்தே மாணவர் தரம் நிர்ணயிக்கப்பட வேண்டும்.
இன்றைய தொழில்நுட்பம் நேற்றைய மரபு நெறிகள் இணைந்து, மாணவர்களை நாளைய புதிய உலகுக்கு இட்டுச் செல்லும் வழியாக கல்வி அமைய வேண்டும்.
பள்ளிக் கல்வியின் நோக்கம், தொழிற்கல்வித் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்வது அல்ல. முழுமையான வாழ்வுக்கு உத்தரவாதம் தருவது.

விதைப்பந்து வீசுவோம்

By எம். அருண்குமார் | Published on : 20th July 2017 01:11 AM |

காடு நமக்கு இயற்கை கொடுத்த கொடை. காடுதான் நமக்கு மழை கிடைப்பதற்குக் காரணமாகிறது. அது மட்டுமல்ல, நிலச்சரிவு ஏற்படாமல் தடுப்பது காடுதான். மண் அரிப்பைக் கட்டுப்படுத்துவதும் காடுதான். காடுகள் அழிக்கப்படுவதால் கடல் மட்டம் உயர்ந்து புவி வெப்பமயமாகின்றது.
2015-ம் ஆண்டின் இந்திய வன அறிக்கையின்படி இந்தியாவில் 79.42 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவு காடுகள் உள்ளன. இது மொத்தப் பரப்பளவில் 24.16 சதவீதமாகும். குறைந்துவிட்ட காடுகளின் பரப்பளவை அதிகரிக்க வேண்டுமானால் மரங்களை நடவேண்டியது அவசியமாகும்.
வனத்துறை மட்டுமே மரங்களை நட்டு காடுகளை உருவாக்க முடியாது. பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால்தான் இது சாத்தியமாகும்.
மரம் நட்டு காடு வளர்ப்பது என்பதை ஒரு மக்கள் இயக்கமாகச் செயல்படுத்த வேண்டும். நம் நாட்டில் எந்தெந்தப் பகுதிகளில் என்னென்ன மரங்கள் வளரும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். அதற்கு முன்னதாக மண்ணின் வகை, அமிலத் தன்மை, மண்வளம் ஆகியவற்றைப் பற்றி அறிய வேண்டும்.
எந்தவகை மரங்களை நட்டால் வேகமாக வளரும் என்பது குறித்தும் அறிந்துகொண்டு அதற்கேற்றவாறு மரங்களைத் தேர்ந்தெடுத்து நட வேண்டும். அண்மைக்காலமாக அதக அளவில் புவி வெப்பமடைந்து வருவதால் அடிக்கடி பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது.

அதைத் தடுக்க வேண்டுமானால் உலகம் முழுவதுமே மரம் வளர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவைப் பொருத்தவரை கனிம வளங்களைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதால் பெருமளவு வனப் பகுதிகள் சர்ச்சைக்குரிய பகுதிகளாக மாறிவருகின்றன. இயற்கைக்குப் புறம்பான நடவடிக்கைகளில் மனிதர்கள் ஈடுபடுவதால் இயற்கை பேரிடர்கள் ஏற்படுகின்றன.

நாட்டின் ஒரு பகுதியில் அதிகமான வெள்ளம் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். மற்றொரு பகுதியில் தண்ணீர்த் தட்டுப்பாட்டால் கடுமையான வறட்சி ஏற்பட்டு மக்கள் துன்பப்படுகிறார்கள். இதற்கு காரணம் சரியான அளவில் பருவமழை இல்லாமல் போனதே.

அதற்கு அடிப்படைக் காரணம் மரங்கள் இல்லாமல் போனதுதான். இனியாவது பருவ காலத்தில் சரியான அளவில் மழைப்பொழிவு வேண்டுமானால் அதற்கு மரம் வளர்ப்பு ஒன்றே வழி.

மரக்கன்றுகள் நடுவதன் முக்கியத்துவம் குறித்து அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என்பது உண்மைதான். ஆனால் நடப்படும் மரக்கன்றுகளை நாம் முறையாகப் பராமரிக்காமல் விட்டுவிடுவதால் மரம் நடுதல் என்பது பயனில்லாமல் போகின்றது.

இத்தகைய சூழ்நிலையில்தான் பழைமையான, பாரம்பரியமான விதைப்பந்துகள் வீசும் முறையை நாடு பின்பற்ற வேண்டிய நிலை உருவாகியுள்ளது. மரக்கன்றுகளை நட்டுப் பராமரிப்பதை விட மிகவும் எளிதானது விதைப்பந்து வீசுவது.

விதைப்பந்துகளைப் பாதுகாப்பதை இயற்கையே பார்த்துக் கொள்ளும். மிகவும் எளிமையான விதைப்பந்து வீசும் முறையை அனைத்துப் பொதுமக்களும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

நாம் இழந்துவிட்ட இயற்கை சுழற்சி முறையை மீட்டெடுக்க வேண்டுமானால், அதற்கு பாரம்பரிய முறையான விதைப் பந்து வீசும் முறைதான் தீர்வாகும்.

இந்த விதைப்பந்தைத் தயாரிப்பது மிகவும் எளிது. வளமான மண், மாட்டு சாணம் இரண்டையும் சிறிதளவு எடுத்து நீர் சேர்த்து பிசைந்து அதற்குள் விதையை வைத்து உருண்டையாக பந்து போல உருட்ட வேண்டும்.
பிறகு அந்த மண்ணும் சாணமும் கலந்த உருண்டைகளை நிழலில் காய வைக்க வேண்டும். நன்கு காய்ந்த பிறகு அவற்றை எடுத்து தரிசு நிலங்கள், மலையடிவாரம், சாலையோரங்கள், ஆற்றங்கரையோர பகுதிகள் ஆகிய இடங்களில் வீச வேண்டும். பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக இந்த விதைப்பந்துகளை வீசலாம்.

அந்த விதைப்பந்துகளில் இருக்கும் ஈரப்பதம் கடுமையான வறட்சியையும் தாங்கும். சில நேரங்களில் அதிக மழைப்பொழிவு ஏற்பட்டு அதனால் வெள்ளப்பெருக்கு வந்தாலும் அதையும் தாங்கிக்கொண்டு விதைப்பந்திலுள்ள விதை முளைக்கும்.

விதைப்பந்தில் உள்ள சாணம் மிகச்சிறந்த இயற்கை உரமாகும். இது விதைக்கு நோய் தாக்கம் ஏற்படாமல் பாதுகாக்கும். மண் அல்லது களிமண் விதையிலுள்ள உயிர் வளர ஆதாரமாக இருப்பதால் எளிதில் விதை முளைக்க அது உதவியாக இருக்கும்.

மரக்கன்றுகளை நட்டு, பராமரித்து அவற்றை குறிப்பிட்ட ஆண்டுகள்வரை வளர்ப்பதற்கு ஆகும் செலவோடு ஒப்பிடும்போது விதைப்பந்தை வீசுவதற்கு ஆகும் செலவு மிகவும் குறைவானதேயாகும்
.
மேலும், மரக்கன்றுகளுக்கு தினமும் தவறாமல் தண்ணீர் ஊற்ற வேண்டும். ஆனால் விதைப்பந்துகளுக்கு அது தேவையல்ல. மழை பெய்யும்போது கிடைக்கும் தண்ணீரே அதற்குப் போதுமானது.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பழங்களில் உள்ள விதைகளை சேகரித்து வைத்துக்கொண்டு அவற்றிலிருந்தே விதைப்பந்துகளைத் தயாரிக்கலாம். குறிப்பாக, புளி, வேம்பு, புங்கன் போன்ற பழங்களின் விதைகள் விதைப்பந்துக்கு மிகவும் ஏற்றவை.

நமது நண்பர்கள் மற்றும் உறவினர்களின் பிறந்த நாள், திருமண நாள் போன்ற மகிழ்ச்சிகரமான நாட்களில் அவர்களுக்கு விதைப்பந்தை நாம் பரிசாக வழங்கலாம். இயற்கையின் அருமையை உணராமல் நாம் அவற்றை அழித்து விட்டோம்.
இனியாவது இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், அவற்றை அடுத்த தலைமுறைக்கு முழுமையாகவும் விட்டுச்செல்லவும் வேண்டுமானால் விதைப்பந்து வீசி காடுகளை உருவாக்க வேண்டியது அவசியமாகும். விதைப்பந்து வீசுவோம். மரம் வளர்போம். மழை பெறுவோம். புவி வெப்பமயமாதலைத் தடுப்போம். நாம் இயற்கையைக் காத்தால்தான் இயற்கை நம்மைக் காக்கும்.

NEWS TODAY 22.08.2026