Saturday, August 5, 2017

2 colleges offer medical courses without MCI nodTNN | Updated: Aug 4, 2017, 10:29 AM IST



COIMBATORE: Amid the prevailing uncertainty over the National Eligibility-cum-Entrance Test (NEET), two colleges in Coimbatore are offering undergraduate and post-graduate courses in medicine without Medical Council of India approval. TIPS Global Institute in Kovilpalayam and KSG College of Arts and Science charge between 60 lakh and 1 crore for the courses.

While MCI vice-president Dr CV Bhirmanandham said, "The state authorities should initiate action against the two colleges for violating MCI norms and running illegal courses," the colleges maintain they have not violated any norm. "All students need eligibility certificate to leave India and study MBBS. Since these institutions are not recognised, the students wont get the certificate. They cant sit for the screening test here after the course and so they won't be able to practice medicine," Dr Bhirmanandham said.

TIPS Global Institute on Karuvalur Road in Kovilpalayam had published advertisements inviting applications for the MBBS course.

When a TOI reporter approached the institute posing as a 'guardian', the institute said the course would have three stages - three years at TIPS Global Institute in Coimbatore, two years at an institution on Aruba, a Dutch-Caribbean Island, and the final two years at Xavier University in the United States.

The admission officer said that the first three years will be BSc in human biology, the degree for which will be issued by Bharathiar University, Coimbatore.

"This part of education is called pre-med study. If the student is academically sound, he can finish the B.Sc human biology course in one and half years and fly to Aruba for six more semisters. This includes the USMLE (United States Medical Licensing Examination). If the student is weak in English, we will provide the coaching for it too. Our fees is about 1 crore. This will cover books, accommodation, health insurance, malpractice insurance and flight fares," the officer said.

MCI secretary Reena Nayar said the courses such as MBBS could not be run in India by any institution without the councils approval. "Also, this year admission in India without NEET qualification is illegal," she said.

But TIPS Globals admission co-ordinator Indu Priya said there was no need for the institute to obtain permission from the MCI.

"Xavier University is the institution that will offer the undergraduate degree in medicine," she said.

doctors facing charges

 | Aug 4, 2017, 11:45 PM IST

Indore: After the Medical Council of India (MCI) released orders to suspend eight senior doctors of MY Hospital over allegations of unethical drug trials, their fate now lies with MCI's state unit.



The doctors in question have decided to approach the high court seeking a stay against the suspension and are only waiting for the lawyers' strike to come to an end.



Simultaneously, MGM Medical College is looking into other options in case the state body of MCI suspends the doctors.



While Dr VS Pal holds the post of superintendent of MY Hospital, Dr Hemant Jain is superintendent of Chacha Nehru Children Hospital. Dr Anil Bharani and Dr Asheesh Patel are professor and assistant professor respectively in the Medicine Department.



Dr Anil Bharani said, "I only came to know about this information through newspapers and no copy from MCI has reached to me. If I do receive it, I will think about going to court."



Apart from Dr Pal serving as superintendent of Government Mental Hospital, Dr Ujjav Sardesai, Dr Ajay Paliwal and Dr Pali Rastogi are from the psychiatry department. Dr Ram Ghulam Razdan was recently removed from the post of superintendent of Government Mental Hospital after his name surfaced for allegedly giving 'wrong' information to the media about the deaths at MYH due to an alleged shortage of oxygen reported a month ago.



Dr VS Pal said, "I did not receive any official information regarding any action of suspension from MCI. When I receive it, I will decide my further course of action."

The suspension of these doctors, who also take care of administrative work and teach students, will be a matter of great concern for the college administration.


"MCI has instructed the state body of the medical council and now only the action is left. The decision has not been communicated to us," Dean Dr Sharad Thora told TOI.



He added that in case an order is arrived at, the work of the psychiatry department will be affected the most as almost all the doctors will face a three-month suspension.



"In this case, we will seek directions from the state medical council for alternative arrangements so that patients, students and the administrative works will not be affected," Dr Thora said.

இஎஸ்ஐ ஊழியர்களின் வாரிசுகளுக்கான எம்பிபிஎஸ் கலந்தாய்வு நாளை தொடக்கம்

By DIN  |   Published on : 04th August 2017 02:48 AM  |  
இஎஸ்ஐ செலுத்தும் ஊழியர்களின் வாரிசுகளுக்கான எம்பிபிஎஸ் இரண்டாம்கட்ட கலந்தாய்வு சனிக்கிழமை (ஆக.5) தொடங்க உள்ளது.
தொழிலாளர் ஈட்டுறுதிக் கழகத்தின்(இஎஸ்ஐசி) சார்பில் நாடு முழுவதும் 6 மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. ஹரியானா மாநிலம் 'ஃ'பாரிதாபாத், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத், கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் குல்பர்கா , தமிழகத்தில் சென்னை கே.கே.நகர் என 6 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
மேலும் ஹிமாச்சல பிரதேசம் மண்டி, கேரள மாநிலம் கொல்லம், தமிழகத்தில் கோவை ஆகிய இடங்களில் உள்ள இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகள் அந்தந்த மாநில அரசால் நடத்தப்பட்டாலும், இஎஸ்ஐ செலுத்தும் ஊழியர்களின் வாரிசுகளுக்கு இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
அந்த வகையில், இந்தக் கல்லூரிகளில் மொத்தம் 332 எம்.பி.பி.எஸ். இடங்களும், 22 பிடிஎஸ் இடங்களும் இஎஸ்ஐ ஊழியர்களின் வாரிசுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களுக்கான கலந்தாய்வையும் மத்திய அரசே (டிஜிஹெஎஸ்) நடத்துகிறது.
இதற்கான முதற்கட்ட கலந்தாய்வில் 326 இடங்கள் நிரப்பப்பட்டன. மீதமுள்ள இடங்களுக்கும், முதற்கட்ட கலந்தாய்வில் இடங்களைப் பெற்று, குறிப்பிட்டக் கல்லூரிகளில் சேராமல், நிரப்பப்படாமல் உள்ள இடங்களுக்குமான இரண்டாம்கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 5 முதல் 7 -ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கலந்தாய்வுக்கான முடிவு ஆகஸ்ட் 8 -ஆம் தேதி வெளியிடப்படும்.
கட்டணம்: கலந்தாய்வில் பங்கேற்று இடங்களைப் பெறுவோருக்கு ஆண்டுக் கட்டணமாக ரூ.24 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் படித்து முடித்து 3 ஆண்டுகள் இஎஸ்ஐ மருத்துவமனையில் கட்டாயம் பணியாற்றுவதற்கான ஒப்பந்தத்தையும் அவர்கள் அளிக்க வேண்டும்.
ஒருவேளை படிப்பில் இருந்து பாதியில் சென்றாலோ, கட்டாயம் பணியாற்றுவதைத் தவிர்த்தாலோ ரூ.10 லட்சத்தை இஎஸ்ஐ நிறுவனத்துக்கு செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்டாக் பிடிஎஸ் பாடப் பிரிவுக்கு ஆகஸ்ட் 6-இல் முதல்கட்ட கலந்தாய்வு

By புதுச்சேரி,  |   Published on : 04th August 2017 08:24 AM  |   
புதுச்சேரி சென்டாக் பல் மருத்துவ (பிடிஎஸ் ) பாடப் பிரிவுக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.
பல் மருத்துவப் பாடப் பிரிவில் உள்ள 129 இடங்களை நிரப்புவதற்கான முதல் கட்ட கலந்தாய்வு புதுவை பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள சென்டாக் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
அதன்படி, காலை 9 மணிக்கு தியாகிகளின் பிள்ளைகளுக்கும், 9.15 மணிக்கு மாற்றுத் திறனாளிகளுக்கும், 9.30 மணிக்கு முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கும், 9.45 மணிக்கு விளையாட்டு வீரர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
இதைத் தொடர்ந்து, காலை 10 மணிக்கு நீட் தேர்வில் 567 முதல் 240 வரையும், 11 மணிக்கு 239 முதல் 201 வரையும், மதியம் 12 மணிக்கு 200 முதல் 175 வரையும், 2 மணிக்கு 174 முதல் 158 வரையும் மதிப்பெண் எடுத்த புதுச்சேரி அனைத்துப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க 704 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது.
அதன்படி, மாலை 3 மணிக்கு நீட் தேர்வில் 656 முதல் 489 வரையும், 4 மணிக்கு 488 முதல் 454 வரையும் மதிப்பெண்கள் பெற்ற 300 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதத்தை இணையதள முகவரி www.centaconline.in-ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாமல் தரவரிசைப் பட்டியல் மதிப்பெண்கள் வரம்புக்குள் வரும் தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்கள் அசல், நகல் சான்றிதழ்களை எடுத்துக் கொண்டு குறிப்பிட்ட நாள் நேரத்தில் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.
மேலும், கலந்தாய்வில் பங்கேற்கும் எஸ்சி மற்றும் பிற்படுத்தப்பட்ட, பழங்குடியினர் ரூ. 350-க்கும், இதர பிரிவினர் ரூ. 750-க்கும் வரைவோலையை பட்ங் இர்ய்ஸ்ங்ய்ர்ழ், இஉசபஅஇ என்ற பெயரில் புதுச்சேரியில் செலுத்தத் தக்க வகையில் கொண்டு வரவேண்டும்.
மேலும், கலந்தாய்வுக் கட்டணத்தை மாணவர்கள் ரொக்கமாகவும் செலுத்தலாம். விளையாட்டு வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியல் சென்டாக் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கல்லூரிகளில் இடங்கள்: மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவக் கல்லூரி: பொது - 15, ஓபிசி - 3, எம்பிசி - 5, எஸ்சி - 5, பிசிஎம் - 1.
மாகே பல் மருத்துவக் கல்லூரி: பொது - 25, ஓபிசி - 6, எம்பிசி - 9, எஸ்சி - 8, பிசிஎம் - 1, ஈபிசி - 1.
வெங்கடேஸ்வரா பல் மருத்துவக் கல்லூரி: பொது - 25, ஓபிசி - 5, எம்பிசி - 9, எஸ்சி - 8, பிசிஎம் - 1, இபிசி - 1, பிடி -1.

பி.இ.: பிற மாநில மாணவர்கள் 36 பேர் சேர்க்கை

By DIN  |   Published on : 05th August 2017 02:27 AM  |  
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பிற மாநிலங்களைச் சேர்ந்த 36 மாணவ, மாணவிகள் சேர்க்கை பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 570 பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. ஜூலை 17 இல் தொடங்கிய இந்த சேர்க்கை ஆகஸ்ட் 11-இல் முடிவடைய உள்ளது.
இந்த நிலையில், பிற மாநில மாணவர்களை தமிழக கல்லூரிகளில் சேர்ப்பதற்கான கலந்தாய்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இவர்களுக்கென 100 பி.இ. இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
இதற்கு விண்ணப்பித்தவர்களில் 52 பேர் சேர்க்கைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 36 பேர் இடங்களைத் தேர்வு செய்து, கல்லூரி சேர்க்கைக் கடிதங்களைப் பெற்றுச் சென்றனர்.

60 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் பி.இ. மாணவர் சேர்க்கை: 6 நாள்களில் முடிகிறது கலந்தாய்வு

By எம். மார்க் நெல்சன்  |   Published on : 05th August 2017 03:28 AM  |   
counseling

பொறியியல் கலந்தாய்வு முடிய இன்னும் ஆறு நாள்கள் மட்டுமே உள்ள நிலையில், 60 -க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் சேர்க்கை நடைபெற்றிருப்பது தெரிய வந்திருக்கிறது. அதுபோல், பி.இ. இயந்திரவியல், கட்டுமானப் பொறியியல் (சிவில்) படிப்புகள் மீது மாணவர்களின் ஆர்வம் வெகுவாகக் குறைந்துள்ளது. கணினி அறிவியல், மின்னணுவியல் -தொடர்பியல் பொறியியல் படிப்புகளில் அதிகமானோர் சேர்ந்துள்ளனர் என்றபோதும், கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடும்போது அதுவும் குறைவுதான் என்கின்றனர் பொறியியல் சேர்க்கை அதிகாரிகள்.
அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும் பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்காக இந்த முறை 570 -க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகளில் 1.75 லட்சம் பி.இ. இடங்கள் அளிக்கப்பட்டிருந்தன. ஜூலை 17 கலந்தாய்வு தொடங்கியது. இந்த ஆண்டு சேர்க்கை தொடங்கியது முதல் கணினி அறிவியல், மின்னணுவியல் தொடர்பியல் பொறியியல் படிப்புகளில் அதிக மாணவர்கள் சேர்க்கை பெற்று வந்தனர்.
கடந்த ஆண்டுகளில், இதுபோன்று கலந்தாய்வு தொடக்கத்தில் கணினி அறிவியல், மின்னணுவியல் - தொடர்பியல் பொறியியல் பிரிவுகளில் மாணவர் சேர்க்கை அதிகமாக இருக்கும். பின்னர், படிப்படியாக அதிக மாணவர்கள் சேர்ந்த பிரிவாக இயந்திரவியல் பிரிவு மாறிவிடும். கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் இந்த நிலைதான் நீடித்து வந்தது.
இயந்திரவியல், சிவில் பிரிவுகளில் குறைந்தது ஆர்வம்: இந்த நிலையில், 2017 -18 பி.இ. கலந்தாய்வு முடிய இன்னும் 6 நாள்களே உள்ள நிலையில், தொடக்க நாள் முதல் அதிக மாணவர்கள் தேர்வு செய்யும் பிரிவுகளாக கணினி அறிவியல், மின்னணுவியல் தொடர்பியல் பொறியியல் பிரிவுகளே இருந்து வருகின்றன.
பி.இ. கணினி அறிவியல் பிரிவில் மொத்தமுள்ள 27,695 இடங்களில் இதுவரை 9,500 மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளனர். மின்னணுவியல் தொடர்பியல் பொறியியல் பிரிவில் மொத்தமுள்ள 33,881 இடங்களில் இதுவரை 12,000 பேர் சேர்ந்துள்ளனர்.
ஆனால், பி.இ. இயந்திரவியல் பிரிவில் மிக அதிகமாக 38,333 இடங்கள் உள்ளன. இதில் 11,000 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். அதுபோல பி.இ. சிவில் பிரிவில் 25,237 இடங்களில் 5,000 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன.
60-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில்...: ஒற்றைச் சாளர கலந்தாய்வு முடிவடைய இன்னும் 6 நாள்களே உள்ள நிலையில், 60 -க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது என்கின்றனர் பொறியியல் சேர்க்கை அதிகாரிகள். மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பி.இ. இயந்திரவியல், பி.இ. சிவில் பிரிவுகளில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே சேர்க்கை நடைபெற்றிருப்பதும் தெரிய வந்திருக்கிறது. சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் பிரிவில் 115 இடங்களும், மின்னணுவியல் -தொடர்பியல் பிரிவில் 116 இடங்களும், கணினி அறிவியல் பிரிவில் 120 இடங்களும் நிரம்பாமல் உள்ளன.
திருவள்ளூரில் உள்ள ஒரு கல்லூரியில் இயந்திரவியல் பிரிவில் 122 இடங்களும், மின்னணுவியல் -தொடர்பியல் பிரிவில் 140 இடங்களும், கணினி அறிவியல் பிரிவில் 65 இடங்களும் நிரம்பாமல் உள்ளன.
கன்னியாகுமரியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் பிரிவில் 111 இடங்களும், சிவில் பிரிவில் 72 இடங்களும், மின்னணுவியல் -தொடர்பியல் பிரிவில் 72 இடங்களும், கணினி அறிவியல் பிரிவில் 38 இடங்களும் நிரம்பாமல் உள்ளன.
காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் இயந்திரவியல் பிரிவில் 72 இடங்களும், மின்னணுவியல் -தொடர்பியல் பிரிவில் 73 இடங்களும், கணினி அறிவியல் பிரிவில் 74 இடங்களும் நிரம்பாமல் உள்ளன.
இதேபோல, விழுப்புரம், திருச்சி, நாமக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 60 -க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் சேர்க்கையும், நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இயந்திரவியல், சிவில் பிரிவுகளில் ஒற்றை இலக்கத்தில் சேர்க்கையும் நடைபெற்றிருப்பது அண்ணா பல்கலைக்கழக புள்ளி விவரத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

    ஊதிய உயர்வு சரியா?: எம்எல்ஏ.க்கள் மனசாட்சிப்படி முடிவு எடுக்கட்டும்

    By DIN  |   Published on : 05th August 2017 01:33 AM  |  
    ஊதிய உயர்வு சரியானதா என்பதை சட்டப் பேரவை உறுப்பினர்களே முடிவு செய்யட்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை கருத்து தெரிவித்துள்ளது.
    சட்டப் பேரவை உறுப்பினர்களின் ஊதிய உயர்வுக்கு எதிரான மனுவை விசாரித்த நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது.
    தமிழக சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு ஜூலை 19 ஆம் தேதி ஊதிய உயர்வு அறிவிப்பு வெளியானது. இதில் மாத ஊதியம் மற்றும் இதரப் படிகள் ரூ.55 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சத்து 5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு வழங்கும் ஆணையை நிறுத்தி வைக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார்.
    அதில், தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக வறட்சியால் விவசாயிகள் பலர் தற்கொலை செய்துள்ளனர். பல அரசுத்துறைகள் நஷ்டத்தில் இயங்குகின்றன. இந்நிலையில், சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு ஊதிய உயர்வு என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல என்று குறிப்பிட்டிருந்தார்.
    இந்த மனு, நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
    தமிழகம் கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் நிலையில் சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கான ஊதிய உயர்வு தேவையற்றது என்று மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
    விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலையில் இது தேவையா என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சட்டப் பேரவையில் கேள்வி எழுப்பியுள்ளனர். சட்டப் பேரவை உறுப்பினர்களின் ஊதிய உயர்வு அரசின் கொள்கை முடிவு, இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. ஆனால், அந்தக் கொள்கை முடிவு தவறாக இருக்கும் பட்சத்தில் நீதிமன்றம் தலையிடுவதில் தவறில்லை. இந்த விவகாரத்தில் அரசு தான் நீதிமன்றமாகச் செயல்பட வேண்டும். அரசு எடுக்கும் கொள்கை முடிவின் மீது ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. சட்டப் பேரவை உறுப்பினர்கள் தங்களது பொறுப்பு, பணி உள்ளிட்டவற்றை உணர்ந்து செயல்பட வேண்டும். மக்களுக்கு பதிலளிக்க வேண்டிய கடமை அவர்களுக்கு உள்ளது. முதல்வர் பிறப்பித்த உத்தரவை சட்டப் பேரவை ஏற்றுக் கொண்டுள்ளது. இந்நிலையில் இந்த ஊதிய உயர்வு சரியா, தவறா என்று சட்டப் பேரவை உறுப்பினர்கள் தங்களுக்குள்ளே கேள்வி எழுப்பிக் கொள்வது அவசியம். அவர்களது மனசாட்சிக்கே இந்தப் பிரச்னையை விட்டுவிடுகிறோம். அவர்களே முடிவு செய்யட்டும். இந்திய அரசியலமைப்பின்படி நிர்வாகம், நீதி, சட்டப் பேரவை எல்லாம் தனித்தனி துறைகள். நிர்வாகத்தின் முடிவுக்கு சட்டப் பேரவை ஒப்புதல் அளிக்கலாம். அது சட்டப் பூர்வமாகச் சரியா என்பதை மட்டுமே நீதித்துறையால் பார்க்க முடியும்.
    இந்த வழக்கில் மனுதாரர் தனது கோரிக்கையை சட்டப்பூர்வமாக முன்வைக்காமல் தார்மீக அடிப்படையில் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் நீதித்துறை இதில் தலையிடலாமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    NEWS TODAY 25.01.2026