Friday, August 11, 2017

எம்பிபிஎஸ்: 85% உள் ஒதுக்கீடு அரசாணை ரத்து செய்யப்பட்டதற்கு தடை விதிக்க முடியாது- உச்ச நீதிமன்றம்

By DIN  |   Published on : 11th August 2017 12:47 PM  |
SC

புது தில்லி: மருத்துவ மாணவர் சேர்க்கையில் 85% உள் ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசாணையை ரத்து செய்த உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மாநிலப் பாடத்திட்டங்களில் படித்த மாணவர்களுக்கு 85% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி தமிழக அரசு செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
நீட் தேர்வு என்பது நாடு முழுவதும் பொதுவான ஒன்று. அப்படி இருக்கையில் மருத்துவ சேர்க்கையில் இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் அரசாணை கொண்டு வந்தது ஏன்? என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், பிற மாநிலங்கள் கொண்டு வராதபோது தமிழகம் மட்டும் ஏன் கொண்டு வந்தது? மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 85% உள் ஒதுக்கீடு என்பது செல்லாது. தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு செல்லும் என்றும் உத்தரவிட்டனர்.
தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களின் நலன் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே அரசாணை பிறப்பிக்கப்பட்டது என்று தமிழக அரசின் வழக்குரைஞர் விளக்கம் அளித்தார்.
எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கையில் மாநிலப் பாடத் திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீத ஒதுக்கீடு அளிக்கும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து தஞ்சாவூரைச் சேர்ந்த சி.பி.எஸ்.இ மாணவர் தர்ணீஷ் குமார் சார்பில் அவரது தாயார் சி.கயல்விழி உள்பட 10-க்கும் மேற்பட்ட சிபிஎஸ்இ மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திர பாபு, ஜூன் 22-ஆம் தேதி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ததோடு, நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் புதிய தகுதிப் பட்டியல் வெளியிட்டு, அதன்படி கலந்தாய்வை நடத்த வேண்டும் என ஜூலை 14-ஆம் தேதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள்ஆகியோர் மேல்முறையீடு செய்தனர்.
தமிழக அரசின் மனுவில், தமிழகத்தில் உள்ள 6,877 பள்ளிகளில் மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் 95 சதவீத மாணவர்களின் நலனைப் பாதுகாக்கும் கடமை, பொறுப்பு அரசுக்கு உள்ளது என்பதை தனி நீதிபதி கருத்தில் கொண்டிருக்க வேண்டும்.
அதே போன்று, நீட் தேர்வு வினாக்களை மத்திய இடை நிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தயாரித்துள்ளது. தேர்வில் 50 சதவீத கேள்விகள் மட்டுமே மாநிலப் பாடத்தில் இருந்து கேட்கப்பட்டன.
இது, மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களை விட சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது.
எனவே, வேறுபட்ட கல்வி வாரியங்களில் பயின்ற மாணவர்களிடையேயான வித்தியாசத்தை சீர் செய்ய, ஒதுக்கீடு வழங்குவதை தவிர அரசுக்கு வேறு வழியில்லை. மேற்குறிப்பிட்ட காரணங்களால் மாநில பாடத்திட்டம், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களை சமமாகக் கருத முடியாது. எனவே தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிடப்பட்டது.
மேல் முறையீட்டு மனு தள்ளுபடி: இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நீதிபதிகள் நூட்டி ராம் மோகனராவ், எம்.தண்டபாணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வந்தது. இரு தரப்பு வாதங்களுக்கு பின்னர், இந்த வழக்கின் மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இந்த நிலையில் வழக்கில் நீதிபதிகள் அளித்த தீர்ப்பு: நிகழாண்டு (2017 - 18) எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கையை ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் நிரப்புவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு விரைவாக எடுக்க வேண்டும். இதற்கு மேல் மாணவர்கள் சேர்க்கையை தாமதப்படுத்தக்கூடாது. தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை ஏற்றுக் கொள்வதற்கான போதிய முகாந்திரங்கள் இல்லை. ஆகையால், அரசின் மேல் முறையீட்டு மனு உள்ளிட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்கிறோம்.
மேலும் , இந்த வழக்கைப் பார்க்கும்போது தமிழகம் முழுவதிலும் சமமற்ற நிலை மற்றும் பல இடங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதி இல்லை என்று தெரிகிறது. அதேபோன்று, தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்பு வரையிலான பள்ளிகள் போதியளவில் இல்லை.
அந்த வசதி இருக்கும் பள்ளிகளில், அதற்கான தரம் மற்றும் வசதிகள் மேம்படுத்தப்படாமலோ அல்லது கண்காணிக்கப்படாமலோ இருக்கிறது. மாணவர்களை வேறுபடுத்திப் பார்க்கும் அரசின் கொள்கையானது இயற்கைக்கு முரணானது.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகள்தான் உயர்கல்விக்கான நுழைவுவாயிலாக உள்ளது. ஆகையால், மாணவர்களின் அறிவு மற்றும் திறமையை மேம்படுத்தும் நோக்கில், பாடத் திட்டத்தை குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை மாற்றி அமைக்க வேண்டும்.
மேலும் தேசிய அளவிலான தரத்தில் குறையாத வகையில், போட்டித் தேர்வில் பங்கேற்கும் வகையில் மாணவர்களைத் தயார்படுத்தும் நோக்கில் 3 முதல் 5 ஆண்டு இடைவேளையில் அன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப பாடத்திட்டத்தை மேம்படுத்தி மாற்றியமைக்க வேண்டும் என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. எனினும், தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்த உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றமும் மறுத்துவிட்டது.

ஆகஸ்ட் 12 மின்தடை

By DIN  |   Published on : 11th August 2017 04:38 AM  |  
பராமரிப்புப் பணிகள் காரணமாக அண்ணாசாலை பகுதியில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்:
அண்ணாசாலை: கிளப் அவுஸ், எத்திராஜ் கல்லூரி, சத்யமூர்த்தி பவன், ரஹீஜா டவர்ஸ், அண்ணாசாலை கதவு எண். 748 முதல் 727 வரை, ஹோட்டல் கன்னிமாரா, அரசு கலைக் கல்லூரி, பாந்தியன் சாலை, க்ரீம்ஸ் சாலை.

Anna University


7,620 Indians in foreign prisons; highest in Saudi

TNN | Aug 11, 2017, 12:35 AM IST

Chennai: As many as 7,620 Indian nationals are lodged in foreign jails, with the highest number incarcerated in Saudi Arabia.



In response to a question raised in the Lok Sabha on Wednesday, minister of state for external affrairs M J Akbar said due to strong privacy laws prevailing in many countries, local authorities do not share information on prisoners unless the person concerned consents to the disclosure of such information.



Of the 7,620 prisoners lodged in 86 jails, at least 50 are women, shows data available with the government. Most of these women are in prisons in south-east Asia, neighbouring Sri Lanka, China and Nepal, the Gulf countries, the US and UK.



The Gulf states account for 56% of all Indian prisoners in foreign jails. The prisons in Saudi Arabia have the highest number of Indian nationals, with 2,084 of them confined on charges of financial fraud, burglary and bribery. A number of them have also been arrested for drinking and selling alcohol in the country. It is illegal to produce, import or consume alcohol in Saudi Arabia.



In countries in south-east Asia - Thailand, Malaysia, Singapore and Indonesia - most of the 500 immured Indian nationals were charged with offences related to drug and human trafficking and immigration and visa violation.

In Pakistan, according to a list handed over by the government to the India envoy in Islamabad, at least 546 Indian nationals, including nearly 500 fishermen, are in Pakistani jails.



Fishermen in the southern parts of India have also entered troubled waters landing them behind bars in alien soil. In Sri Lanka, of the 43 Indian nationals in jails, 31 are from Tamil Nadu, six from Puducherry and four from Kerala and Maharashtra. Their names were linked to offences of visa fraud and drug trafficking. Tamil Nadu prisoners were also tracked in Bangladesh, Bhutan, Brunei, Ethiopia.



In Australia and Canada, countries that see high migration from India, 115 prisoners are Indian nationals. Most of their offences relate to murder, sexual assault, money laundering and road accidents.



Most European countries like Germany, Italy, Greece and France did not furnish details of Indian nationals in their prisons.



The minister said since the enactment of the repatriation of Prisoners Act, 2003, 170 applications for repatriation have been received and 61 Indian prisoners have been repatriated from foreign prisons.



So far, India has signed treaties with 30 countries, under which Indian prisoners have been brought back. Besides this, India has also ratified the Inter American Convention by virtue of which India can receive and send requests to member countries for release of prisoners.

Private hospital nurses ask for better pay, work conditions

 | Updated: Aug 11, 2017, 12:37 AM IST

Chennai: From certificates being snatched away to living in cramped quarters on a paltry income, the life of a nurse in a private hospital here is a far cry from his or her peers abroad. Over the years, many have emigrated, a few are on their way out. Others continue helping heal in the shadow of their tribulations.

Some of these nurses were present in a meeting held in the city on Thursday to share their ordeal. "Some of us here work for as less as Rs 3,000 a month," said V Baby Shalini, Secretary of Nurses Joint Action Committee, which represents 1,000 nurses in the state.



The average salary for a government staff nurse in Tamil Nadu is Rs 33,045, said Shalini. There are around 2.05 lakh nurses in Tamil Nadu, of which 60% work in the private sector.



In January 2016, the Supreme Court asked the Union health ministry to set up a committee to study the pay and working conditions of nurses in private hospitals. The committee recommended that the salary given to nurses in private hospitals should not be less than Rs 20,000 a month.



The Centre later wrote to the health secretaries of all states to formulate a legislation or guidelines to implement the recommendations of the committee. "But a year on, nothing has been done," said K Boominathan, president of Nurses Joint Action Committee. "All we are asking is to be paid on par with nurses in the government sector," he said, adding that the workforce also needed a monitoring body to enforce this.



Nurses present at the meeting also said many had of their peers also face difficulties in finding a job as private hospitals are increasingly recruiting poorly qualified staff so they could be paid lesser. "Or they start their own nursing schools and recruit only from there," said Boominathan. Nurses also complained of facing harassment by private hospitals and being forced to work overtime. "We need a conducive place to work, a safe place to stay and a stable future. The government needs to set up a mechanism for this," said Shalini.

Kumbakonam school fire: Convicts to walk free

TNN | Updated: Aug 11, 2017, 07:43 AM IST



Madras High Court

CHENNAI: It is freedom for all the convicts in the July 16, 2004 Kumbakonam school fire accident, in which 94 childrenwere charred to death.

On Thursday, the Madras high court acquitted seven people who had been sentenced to serve varying degrees of jail terms, and then ordered the release of the prime accused founder of Sri Krishna Matriculation School Pulavar Palaniswamy saying the sentence he had already served during the investigation, trial and post-conviction would be sufficient. A sum of Rs 51.65 lakh fine imposed on him was reduced to Rs 1.16 lakh by the HC.

In the case of school cook Vasanthi, who had appealed against her five-year jail term, the sentence was modified as one of period already undergone. On July 30, 2014, the Thanjavur district and sessions court acquitted 11 of the 21 accused, and convicted 10, including Palaniswamy and his wife Saraswathi. Charges against Saraswathi abated, as she died during the pendency of the case.

The verdict, running to more than 250 pages, was delivered by a division bench of Justice M Sathyanarayanan and Justice VM Velumani on Thursday.

கும்பகோணம் தீ விபத்து: இருவருக்கு மட்டுமே தண்டனை


பதிவு செய்த நாள்10ஆக
2017
23:54


சென்னை: கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில், பள்ளி நிறுவனர் மற்றும் சமையலர் குற்றவாளி என, தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையில் மட்டும் மாற்றம் செய்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், கிருஷ்ணா பள்ளியில், 2004 ஜூலை, 16ல் ஏற்பட்ட தீ விபத்தில், 94 குழந்தைகள், தீயில் கருகி உயிரிழந்தனர். சம்பவம் தொடர்பாக, கும்பகோணம் போலீசார், 24 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். வழக்கை, தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம்விசாரித்தது. வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட, அப்போதைய, முதன்மை கல்வி அலுவலர் பழனிசாமி, தாசில்தார் பரமசிவம், தொடக்கப் பள்ளி இயக்குனர் கண்ணன் ஆகியோர் மீதான வழக்கு திரும்பப் பெறப்பட்டதால், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். கும்பகோணம் நகராட்சி கமிஷனர் சத்தியமூர்த்தி உட்பட, 11 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால், அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.பள்ளி நிறுவனர் பழனி சாமிக்கு, ஆயுள் தண்டனை, 51.65 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப் பட்டது.

நிறுவனரின் மனைவியும், தாளாளருமான சரஸ்வதி, கிருஷ்ணா பள்ளி தலைமை ஆசிரியை சாந்தலட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, சமையலர் வசந்தி, மாவட்ட கல்வி அலுவலர்பாலாஜி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலக உதவியாளர் சிவபிரகாசம், கண்காணிப்பாளர் தாண்டவன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின், நேர்முக உதவியாளர் துரைராஜ் ஆகியோருக்கு, தலா, ஐந்து ஆண்டு சிறை தண்டனையும், கட்டட பொறியாளர் ஜெயசந்திரனுக்கு, இரண்டு ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது.

தண்டனையை எதிர்த்து, 10 பேரும், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடுசெய்தனர். விடுதலையை எதிர்த்து, தமிழக அரசும் மேல்முறையீடு செய்தது. 'அப்பீல்' மனுக்களை விசாரித்த, நீதிபதிகள் சத்தியநாராயணன், வேலுமணி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: பள்ளி நிறுவனர் பழனிசாமி, சமையலர் வசந்தி ஆகியோர், குற்றவாளி என்பதை, இந்த நீதிமன்றம் உறுதி செய்கிறது. அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையில் மாற்றம் செய்யப்படுகிறது. ஏற்கனவே, சிறையில் அனுபவித்த நாட்கள் போதுமானது; பழனிசாமிக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை, 1.16 லட்சம் ரூபாயாக மாற்றம் செய்யப்படுகிறது. பள்ளி தாளாளர் சரஸ்வதி இறந்து விட்டதால், அவரது மேல்முறையீட்டு மனு விலக்கப்படுகிறது.

மற்ற ஏழு பேருக்கும் விதிக்கப்பட்ட தண்டனை ரத்து செய்யப்படுகிறது. 11 பேர் விடுதலையை எதிர்த்து, தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.

'அப்பீல்' செய்வோம்: சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அறிந்து, குழந்தைகளை இழந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். குழந்தைகளை இழந்த, பெற்றோர் நலச்சங்க செயலர், இன்பராஜ் - கிறிஸ்டி தம்பதி கூறியதாவது: எங்களின், இரு மகன்கள் தீயில் கருகி இறந்தனர். சம்பவம் நடந்து, 10 ஆண்டு களுக்கு பின், குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு குறைவான தண்டனையே வழங்கப்பட்டது. தற்போது, இவர்களை விடுதலை செய்தது, பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. சாதாரண வழக்கு போல, நீதிமன்றம் இதை கருதி உள்ளது. எனவே, தமிழக அரசு உடனடியாக, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். இல்லையெனில், நாங்களே மேல்முறையீடு செய்வோம்.

மகேஷ் - சாந்தி தம்பதி: எங்களது மகள், தீயிலிருந்து தப்பினாலும், மகன் இறந்துவிட்டான். தற்போது, நீதிமன்றம் வழங்கியதீர்ப்பால், நிலைகுலைந்து போய் உள்ளோம். அவர்கள் வெளியே வந்துவிட்டால், இது போன்ற தவறுகளை செய்பவர்களுக்கு துணிச்சல் வந்துவிடும். எனவே,தமிழக அரசு, மேல் முறையீடு செய்ய வேண்டும்.

NEWS TODAY 27.01.2026