Sunday, August 20, 2017


Power shutdown areas in Chennai on 22-08-17

Posted on : 19/Aug/2017 20:58:43






 http://www.livechennai.com/detailnews.asp?

newsid=36162
 
Power supply will be suspended in the following areas on 22-08-17 between 9.00 A.M. to 2.00 P.M. for maintenance work. Supply will be resumed before 2.00 P.M. if the works are completed. 

MADURAVOYAL NORTH AREA: MMDA 1 to 7th blocks,  Varalakshmi nagar, North Mada st, PH road, Mettukuppam road, Karthikeyan nagar, Vel nagar, Kannan nagar, Alapakkam main road, Pallavan nagar,  Seemathamman nagar, Lakshmi nagar, Gangai amman nagar, Karpagam Chambers, Sundar nagar, Ganapathi nagar, Krishna nagar, Astalakshmi nagar, Bakya Lakshmi nagar, Noombal, Vanagaram, Sivapootabam, Rajiv nagar, Ganesh nagar, Krishna Industrials Estate , Anna Industrial Estate, Sri Lakshmi nagar, Vanagaram Mettukuppam, Shekmaniam,  Metro nagar, Krishnamachari nagar, Egambaram Industrial estate Perumal koil st, iyavoo nagar, Vanagaram PH road.

CIT NAGAR - II AREA: Model Hutment road, 1 to 6th cross st, 2nd to 5th, Main road of East CIT Nagar, South west boag road, Sadullah st, Abdul Aziz st, Moosa st, South Dhandapani st, part of V.N. road, Moopparapan st, Canal Bank road, Srinivasan st, Gopal st, Siviaji st, Damodaran st, Part of Mannar st, Part of South Usman road, Motilal st, Sarojini st,  part of Usman road, Ramanathan st, Rameswaram road, Ranganathan st, Mangair st, Moosa st, Barkit road, Dandapani st, Cresant park st, Jagathesan st, Mylai Ranganathan st, Part of Thanikachalam road, Lotus colony, Nandanam Extension 1 to 15 st, Old Tower Black, part Chamiers road Temple tower Kiviraj building, EVR Periyar building, Anna salai.
 
ST.THOMAS MOUNT AREA:  Magazine road, Butt road, Military quarters & Hospital, Nandambakkam main road, Ramar koil st, St. Thomas mount, Wood creek county Meenambakkam, Alandur, Nasarathpuram, Mount Poonamallee road, Burma colony & Sripuram colony, Police Office road, Achuthan nagar. 

PORUR AREA: Porur area Sakthi nagar, Lakshmi nagar, Mangala nagar, Ambal nagar, Ganesh avenue, Ramakrishna nagar, R.E. nagar, New colony, Wireless road, Gurusamy nagar,   Gerugambakkam, Mugalivakkam, Veeranam Pump House, Porur – Kundrathur road, Madhanandhapuram.

RK NAGAR AREA: Seniamman koil st, Part of TH road, Elaya mudali st, Selva Vinayagar koil st, SA nagar, Thilagar nagar, Perumal koil st, TK garden 3, 4, 5th st, RK nagar 1 to 5th st, Vaithyanathan st, Tondiarpet, VOC nagar, Ammaniamman Thottam, Thiruvalluvar nagar, Tsunami Quarters, Jeevarathinam salai, Jeeva nagar, Thandiyar nagar, Kasipuram B-block, CG colony, Kannan st, Dharmaraj koil st, Parasuraman st, Muthiah mestry st, RK nagar, Arani rangan st, Mannappa mudali st, Basuvian st, Arumugam st, RK nagar MLA Office, Keerai thouttam, Kamarajar st, Kannupillai thottam, A.E. Koil st and Press Quarters.
இறுதி சடங்கு ஏற்பாடுகள் நடந்த நேரத்தில் பரிசோதனைக்கு உடலை பெற்ற போலீசார்

பதிவு செய்த நாள்19ஆக
2017
19:30





சென்னை, இறந்தவரின் உடலை மருத்துவமனை ஒப்படைத்து, இறுதிச்சடங்கு ஏற்பாடுகள் நடந்த நிலையில், பிரேத பரிசோதனைக்காக, போலீசார் உடலை பெற்ற சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.சென்னை, தி.நகரைச் சேர்ந்தவர் தீனதயாளன், 37; தனியார் நிறுவன ஊழியர். அவருக்கு, அனிதா என்ற மனைவியும், மூன்று வயது மகளும் உள்ளனர்.தீனதயாளன், 12ம் தேதி, வேளச்சேரியில் உள்ள, தன் பெற்றோர் வீட்டிற்கு சென்று திரும்பிய போது, விபத்தில் சிக்கினார். கால் மற்றும் தலையில், அவருக்கு காயம் ஏற்பட்டது. 

லேசான காயம் என, நினைத்து, அவர் யாரிடமும் கூறவில்லை.இந்நிலையில், அன்று இரவு தலைவலி, மயக்கம் ஏற்பட்டு, ராயப்பேட்டை, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பின், உறவினர்கள் அவரை, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, ஆபத்தான நிலைக்கு சென்றதால், 15ம் தேதி, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் இறந்தார்.

இதையடுத்து, குடும்பத்தினரின் ஒப்புதலுடன், தீனதயாளனின் கண்கள் தானமாக அளிக்கப்பட்டன. பின், நேற்று காலை, அவரது உடல், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உறவினர்கள், தி.நகரில், இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளை செய்தனர். ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், தீனதயாளன் அனுமதிக்கப்பட்ட போது, விபத்து தொடர்பாக, கிண்டி போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.அவர், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், இறந்து உடல் ஒப்படைக்கப்பட்டது குறித்து அறிந்த, போலீசார் பதறினர்.பின், தி.நகரில் உள்ள, தீனதயாளனின் வீட்டிற்கு சென்று, அவரது சடலத்தை பெற்று, மீண்டும், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். 

அங்கு, பிரேத பரிசோதனை செய்த பின், தீனதயாளனின் உடல், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.இது குறித்து, போலீசார் கூறுகையில், 'விபத்து என, வழக்கு பதிவு செய்துள்ளோம். எங்களிடம் தகவல் தெரிவிக்காமலும், பிரேத பரிசோதனை செய்யாமலும், உடலை ஒப்படைத்து விட்டனர்.'இதனால், உடலை பெற்று, பிரேத பரிசோதனை செய்தோம். இதற்கு மருத்துவமனை ஊழியர்களின் கவனக்குறைவே காரணம்' என்றார்.மருத்துவமனை டீன் நாராயணபாபு கூறுகையில், ''இது குறித்து விசாரித்து, கவனக்குறைவாக செயல்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
வங்கி ஊழியர்கள் வரும் 22ல், 'ஸ்டிரைக்'

பதிவு செய்த நாள்20ஆக
2017
01:27

சென்னை, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும், வரும், 22ல், வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர்.
இது குறித்து, வங்கி அதிகாரிகள் சங்க பொதுச்செயலர், தாமஸ் பிராங்கோ மற்றும் இந்திய வங்கி ஊழியர் சம்மேளன பொதுச்செயலர், சி.பி.கிருஷ்ணன்
ஆகியோர் கூறியதாவது:வங்கிகளை தனியார் மயமாக்க, லோக்சபாவில், 10ம் தேதி, நிதி தீர்ப்பாய சட்ட மசோதா அறிமுகம் ஆகியுள்ளது. அது நிறைவேறினால், பொதுத்துறை வங்கிகள் காணாமல் போகும்; வாடிக்கையாளர் சேமிப்புக்கு பாதுகாப்பு இருக்காது.

மேலும், நிதி தீர்ப்பாய ஆணையமும் அமைக்கப்படும்; அந்த ஆணையம் நினைத்தால், ஒரு வங்கியை, மற்றொன்றுடன் இணைக்க முடியும் அல்லது இழுத்து மூட முடியும். ஊழியர்களை வெளியே அனுப்பவும் முடியும். எனவே, அந்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். வங்கி அதிகாரிகளுக்கு, ஊழல் தடுப்பு சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கும் பரிந்துரையை திரும்பப் பெற வேண்டும்.

'மூன்று ஆண்டுகளுக்கு புதிய கிளைகள் திறக்கக்கூடாது; நஷ்டத்தில் உள்ள வங்கி கிளைகளை மூடக்கூடாது' என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்ற, வங்கிகள் சீரமைப்பு திட்டத்தில் கையெழுத்திட, வங்கி அலுவலர்கள் மற்றும் ஊழியர் சங்கங்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.
இது போன்ற நடவடிக்கைகளை கண்டித்து, 22ம் தேதி, நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்திய வங்கி அலுவலர் சங்க பொதுச்செயலர், ஆர்.சேகரன் கூறியதாவது:
ஒன்பது சங்கங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வங்கி சங்கங்கள்
கூட்டமைப்பு சார்பில், போராட்டம் நடக்க உள்ளது. இதில், 10 லட்சம் வங்கி அதிகாரிகள், 

ஊழியர்கள் பங்கேற்கின்றனர். அதனால், வங்கி சேவைகள் பாதிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
உச்ச நீதிமன்ற உத்தரவை மீறிய பாரதியார் பல்கலை! காமராஜர் பல்கலை தொடர்பான யு.ஜி.சி., பதிலால் அம்பலம்


பதிவு செய்த நாள்19ஆக
2017
19:40

எல்லையைத் தாண்டி, தொலைத்துார கல்வி மையம் நடத்த, எந்த பல்கலைக்கும் அனுமதியில்லை என்று, சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள உத்தரவை, கோவை பாரதியார் பல்கலை. அப்பட்டமாக மீறியுள்ளது. மதுரை காமராஜர் பல்கலை தொடர்பாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், யு.ஜி.சி., அளித்துள்ள பதிலால் இந்த விபரம் தெரியவந்துள்ளது.

தமிழக அரசின் உயர் கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் பல்வேறு பல்கலைக்கழகங்கள் சார்பிலும், தொலை துார கல்வி மையங்கள் நடத்தப்படுகின்றன. துபாயில் அனுமதிபல்கலை மானியக்குழுவின் கீழ் செயல்படும் தொலைத்துார கல்வி அமைப்பின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி, அந்தந்த பல்கலையின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டுமே, இவை நடத்தப்பட வேண்டும். ஆனால், கடந்த பத்தாண்டுகளாக, இந்த மையங்கள், எல்லை தாண்டியும், விதிகளை மீறியும் செயல்படுகின்றன.கோவை பாரதியார் பல்கலை தான், இந்த விதிமீறலில் உச்சத்தில் இருக்கிறது. இந்த பல்கலையின் எல்லை, கோவை, திருப்பூர், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கியது. ஆனால், வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் தொலைத் துார கல்வி மையங்களை நடத்த, தனியாருக்கு அனுமதியை வாரி வழங்கி வருகிறது. 

அந்த மையங்களில் சேர்வோருக்கு, தேர்வு நடத்தி, சான்றிதழ்களையும் வழங்குகிறது.இத்தகைய மையங்களின் வழியாக பெறப்படும் சான்றுகளுக்கு எந்த மதிப்பும் இல்லை என, பல்கலை மானியக்குழு ஏற்கனவே அறிவித்து விட்டது. தொலைத்துார கல்வி மையங்களை நடத்த, பாரதியார் பல்கலைக்கு அனுமதி இல்லை என்றும்தெளிவு படுத்திய பல்கலை மானியக்குழு, இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக உயர் கல்வித்துறை செயலருக்கும்அறிவுறுத்தியுள்ளது. ஆனால், எந்த நடவடிக்கையையும் உயர் கல்வித்துறையும் எடுக்கவில்லை.இதனால், 'தொலைத்துார கல்வி மையங்கள் நடத்த, நடப்பு கல்வியாண்டில் அனுமதி வழங்கப்போவதில்லை' என, உயர் நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்த பல்கலை நிர்வாகம், அதற்குப் பின்னும், பல்வேறு பகுதிகளில் மையங்கள் துவக்க அனுமதி அளித்துள்ளது. சமீபத்தில், துபாயில் தொலைத்துார கல்வி மையத்தைத் துவக்குவதற்கு, பாரதியார் பல்கலை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு

இந்நிலையில், பாரதியார் பல்கலையைப் பின்பற்றி, மதுரை காமராஜர் பல்கலை, சமீபத்தில் தன் எல்லையைத் தாண்டி, தொலைத்துார கல்வி மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று விளம்பரம் வெளியிட்டது. இதை உடனே நிறுத்த வேண்டுமென்று, காமராஜர் பல்கலை நிர்வாகத்துக்கு தமிழ்நாடு சுயநிதி கல்லுாரிகள் சங்கம் கடிதம் எழுதியது. அதற்கு பல்கலை நிர்வாகம் எந்த பதிலும் அனுப்பவில்லை.இதனால், காமராஜர் பல்கலைக்கு, தொலைத்துார கல்வி மையம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதா, பல்கலை எல்லையைத் தாண்டி, இந்த மையங்களை நடத்தலாமாஎன்பது உள்ளிட்ட பல்வேறு விபரங்களையும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வழங்குமாறு, பல்கலை மானியக்குழுவுக்கு இச்சங்கத்தின் தலைவர் கலீல், மனு அனுப்பிஇருந்தார்.

அதற்கு, பல்கலை மானியக்குழுவிலிருந்து வந்துள்ள பதிலில், 'காமராஜர் பல்கலை, மாநில பல்கலை; அதன் மாநில எல்லைக்குள் மட்டுமே, அது செயல்பட வேண்டும். கடந்த, 2005ல், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படி, எந்த பல்கலையும் அதன் எல்லையைத் தாண்டி, தொலைத்துார கல்வி மையம் நடத்துவதற்கு அங்கீகாரம் கிடையாது. இது தொடர்பாக, 2013 ஜூலை 27ம் தேதி, பொது அறிவிக்கையும் பல்கலை மானியக்குழு இணையத்தில் வெளியிடப்பட்டுஉள்ளது. இத்தகைய மையம் எதற்கும், பல்கலை மானியக்குழு எந்த நிதியும்வழங்காது; காமராஜர் பல்கலைக்கு, இந்த ஆண்டில் தொலைத்துார கல்வி மையம் நடத்த எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், உச்ச நீதிமன்றம் உத்தரவை, பாரதியார் பல்கலை அப்பட்டமாக மீறியுள்ளது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே, உயர் நீதிமன்றத்தில் கொடுத்த உறுதியை மீறி, தொலைத்துார மையங்களை அமைக்க அனுமதி அளித்துள்ளது. இவ்வாறு, உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என எதையும் மதிக்காமல், இந்த மையங்களை நடத்த அனுமதிப்பதில், பல்கலை நிர்வாகிகளுக்கு, 'பலன்' இருப்பது தெளிவாகத் தெரிகிறது. உயர் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க மறுப்பதன் காரணம் தான், புரியாத புதிராகவுள்ளது.





சர்வீஸ் ரிஜிஸ்டருக்கு டாட்டா; கணினிமயமாகுது டேட்டா!செப்டம்பரில் வருகிறது புது திட்டம்
பதிவு செய்த நாள்20ஆக
2017
00:19

கோவை:'பகல்லயே தண்ணிய போட்டுட்டு, ஆபீஸ்ல அந்தாளு பண்ற அலப்பற தாங்க முடியல. இன்னிக்கு ஒரு முடிவு கட்டிரலாம். கொண்டு வாய்யா அந்தாளு சர்வீஸ் புக்கை!'- இப்படி அதிகாரிகள் உத்தரவு போட்டாலும் இனி நினைத்தவுடன் சர்வீஸ் புக்கையெல்லாம் கொண்டு வர முடியாது. யாராலும் அதில், 'ரிமார்க்ஸ்' எழுத முடியாது. 

ஏனென்றால், செப்டம்பர் முதல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியரின் சர்வீஸ் புக்கும், கணினிமயமாகப் போகிறது. இதற்கான பணிகள், மாவட்டம் முழுவதும் விறுவிறுவென நடக்கிறது. அரசு அலுவலகங்களில் பேப்பர் பயன்பாட்டை குறைக்கும் நோக்கத்துடன், நாடு முழுவதும் இ-கவர்னன்ஸ் திட்டத்தை, மத்திய அரசு படிப்படியாக அமல்படுத்தி வருகிறது. 

இதில், அரசு ஊழியர்களின் விபரங்கள் அடங்கிய பணி பதிவேடுகளை, கையாளும் கருவூலத்துறையை முழுமையாக, மின் ஆளுமை திட்டத்தின் கீழ் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. பிற மாநிலங்களுக்கு முன் னோடியாக, தமிழகத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்த, 288.91 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. திட்டத்தை ஒருங்கிணைக்கும் பொறுப்பு, விப்ரோ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், தமிழகம் முழுவதும் உள்ள பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் சுமார், 23 ஆயிரம் பேர், இணையத்தின் உதவியுடன் சம்பள பட்டியலை, நேரடியாக கருவூலத்தில் சமர்ப்பிக்க முடியும். திட்டத்தின் வாயிலாக, தமிழகம் முழுவதும் உள்ள, ஒன்பது லட்சம் அரசு ஊழியர்களின் பணி பதிவேடு பராமரிப்பு, கணினிமயமாக்கப்பட்டு, சம்பளப்பட்டியல், பதவி உயர்வு, மாறுதல்கள், விடுப்பு உள்ளிட்ட விபரங்கள், உடனுக்குடன் பதியப்படும்.

தற்போதுள்ள சர்வீஸ் புக்கில், அதிகாரி ஏதாவது 'ரிமார்க்' எழுதி விட்டால், அந்த குறிப்பிட்ட பக்கத்தை கிழிக்கலாம்; கையெழுத்தை மாற்றிப் போட்டு 'கோல்மால்' செய்து விட முடியும். டிஜிட்டல் பணி பதிவேட்டில், துறை அலுவலர் மட்டுமே மாற்றம் செய்ய முடியும். வேறு யாரேனும் அதில் தவறுகள் செய்தாலும், நேரம், நாள் வாரியாக விபரத்தை தெரிந்து கொள்ள முடியும். கருவூல அலுவலர்களுக்கான தற்போதுள்ள, பொறுப்புகள் குறையும். பணி பதிவேட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.டிஜிட்டல் கையெழுத்து மற்றும் பயோமெட்ரிக் பதிவு ஆகிய அம்சங்கள், முக்கிய பாதுகாப்பு அம்சங்கள். திட்டத்தை செயல்படுத்துவதன் வாயிலாக, மாநிலத்தின் நிதிநிலை விபரத்தை, அரசு உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும்.
நிதி நிர்வாகம் மற்றும் மனிதவள மேலாண்மை, துரிதகதியில் நடைபெற திட்டம் உதவும். திட்டத்தை செயல்படுத்த உதவும், கம்ப்யூட்டர் சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர்கள், இணையதள வசதிகள், அனைத்து அலுவலகங்களிலும் நிறுவப்பட்டு வருகின்றன.சென்னை சம்பள கணக்கு அலுவலகம் (கிழக்கு), திருவண்ணாமலை, கரூர், ஈரோடு மாவட்டங்களை, 'மாதிரி மாவட்டங்களாக' கொண்டு, அங்கு இத்திட்டம் முதலில் துவங்கப்படவுள்ளது. 

இம்மாவட்டங்களில் ஏறக் குறைய பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. 32 ஆயிரம் அரசுப் பணியாளர்களைக் கொண்ட கோவை மாவட்டத்தில், இதற்கான பணிகள், துரிதகதியில் நடைபெற்று வருகின்றன.
காலதாமதத்தை தவிர்க்கலாம்!

மாவட்ட கருவூல அலுவலர் நடராஜன் கூறியதாவது:கோவை மாவட்டத்தில் அரசு அலுவலர்களின் பணி பதிவேடுகளை கணினிமயமாக்கும் பணி, 60 சதவீதம் முடிவடைந்துள்ளது. அக்டோபருக்குள் இப்பணிகள் முடியும். கோவை நகரில் மட்டும், 284 அலுவலகங்களில், 13 ஆயிரத்து 341 ஊழியர்கள் மற்றும், 950 பணம் வழங்கும் அலுவலர்கள், இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். திட்டம் முழுமையடைந்து விட்டால், எஸ்.ஆர்., எனப்படும் பணி பதிவேடே இருக்காது. அனைத்தும் எலக்டிரானிக் சர்வீஸ் ரிஜிஸ்டர் எனப்படும், 'இ - எஸ்.ஆர்.,' ஆக மாறி விடும். 

இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், மாவட்டத்தில் உள்ள சுமார், 768 பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள், இணையத்தின் உதவியுடன் சம்பள பட்டியலை, நேரடியாக கருவூலத்தில் சமர்ப்பிக்க முடியும். தேவையற்ற காலதாமதத்தை தவிர்க்கலாம்.இவ்வாறு, நடராஜன் கூறினார்.
கூடுதலாக 2,653 எம்.பி.பி.எஸ்., இடங்கள்
மருத்துவ கவுன்சிலிடம் தமிழகம் கோரிக்கை


சென்னை, 'அரசு மருத்துவ கல்லுாரிகளில், 2,653 கூடுதல் இடங்களில், மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி வேண்டும்' என, இந்திய மருத் துவ கவுன்சிலான, எம்.சி.ஐ.,யிடம், தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.





தமிழகத்தில், 'நீட்' தேர்வு குழப்பத்தால், எம்.பி. பி.எஸ்., - பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கையை நடத்த முடியவில்லை. 'நீட்' தேர்வில் இருந்து, இந்தாண்டுக்கு மட்டும் விலக்கு அளிக்கும், தமிழக அரசின் சட்ட மசோதாவுக்கு, மத்திய அமைச்சகங்கள் அனுமதி கொடுத்துள்ளன. இதற்கிடையில், 'நீட்' தேர்வை ஆதரிக்கும் மாணவர்கள் தொடர்ந்த வழக்கில், 22ம் தேதி வரை, மாணவர் சேர்க்கை நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மேலும், மாநில பாடத் திட்டத்தில்படித்த மாணவர் களுக்கும், 'நீட்' தேர்வு எழுதிய மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், மாணவர் சேர்க்கை நடத்த, உச்சநீதிமன்றம் அறி வுறுத்தி உள்ளது. இதனால், அவசர சட்டம் நடை முறைக்கு வருமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

தற்போது, அரசு மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி. பி.எஸ்., படிப்பில், 3,050 இடங்கள் உள்ளன. அதில், 456 இடங்கள் அகில இந்திய கவுன்சிலிங்கிற்கு சென்று விட்டன. அதில், நிரம்பாத, 57இடங்கள், மாநில ஒதுக்கீட்டுக்கு திரும்பியுள்ளன.

இந்நிலையில், 'இந்தாண்டு மட்டும், அரசு மருத்துவ கல்லுாரிகளில் 2,653 கூடுதல் இடங்களை ஏற் படுத்தி, மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்க வேண்டும்' என, எம்.சி.ஐ.,யிடம், தமிழக அரசு கோரி யுள்ளது. இதற்கான விண்ணப்பத்தை எம்.சி.ஐ.,தலைவரிடம், தமிழக சுகாதாரத்துறை செய லர், ராதாகிருஷ்ணன், நேற்று வழங்கினார்.

இதுகுறித்து, எம்.சி.ஐ., தன் முடிவை, நாளை அறிவிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. 'கூடு தல் இடங்களுக்கு அனுமதியளிக்கும் பட்சத் தில், கட்டமைப்பு மற்றும் பேராசிரியர்கள் வசதி மேம்படுத்தப்படும்' என, தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

Saturday, August 19, 2017


நள்ளிரவில் அதிரடி காட்டிய புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி!




புதுச்சேரியில் இரவு நேரங்களில் பெண்களின் பாதுகாப்பு எப்படி இருக்கிறது என்பதை அறிய நகரின் பல பகுதிகளில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ரகசிய நகர்வலைத்தை மேற்கொண்டு ஆய்வு செய்திருக்கிறார்.

புதுச்சேரி மாநிலத்துக்கு துணைநிலை ஆளுநராக கிரண்பேடி பொறுப்பேற்றதிலிருந்து பல அதிரடிகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக வார இறுதி நாள்களில் புதுச்சேரியின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று ஆய்வு செய்து மக்களிடம் குறை கேட்பது, அரசு அலுவலகங்கள், பள்ளிகள், ஏரி, குளங்கள் போன்றவற்றை அதிகாரிகளுடன் சென்று அதிரடி ஆய்வுகளை மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.



அதன்படி இன்று ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இரவு நேரங்களில் பெண்களின் பாதுகாப்பு நடவடிக்கை எப்படி இருக்கிறது என்பதை அறிய நம் மாநிலத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நேற்று (18.08.2017) நள்ளிரவு ஆளுநர் மாளிகை ஊழியர் ஆஷா குப்தாவுடன் இருசக்கர வாகனத்தில் ரகசிய நகர்வலத்தை மேற்கொண்டார். பேருந்து நிலையம் உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் தன்னை யார் என்று காட்டிக் கொள்ளாமல் ரகசியமாக ஆய்வுகளை மேற்கொண்டார். ஆய்வின் முடிவில் இரவு நேரத்தில் பெண்களின் பாதுகாப்பு போதுமான அளவில் இருக்கிறது என்றும் சில இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்" என்றும் கூறப்பட்டிருக்கிறது.

Dailyhunt

NEWS TODAY 29.01.2026