Monday, August 28, 2017

வகுப்பறையில் ஆசிரியர்கள் செய்யக் கூடாத அந்த 5 விஷயங்கள் இவை தான்!

குழந்தைப்பருவத்தின் பெரும்பகுதி பள்ளிகளிலேயே கழிகிறது. விளையாட்டுப் பருவத்தில் அதாவது, இரண்டரை வயதிலேயே குழந்தைகள் பிரீ ஸ்கூலுக்கு அனுப்பப்படுகின்றனர். 3 வயதில் கிண்டர் கார்டன் வாழ்க்கைத் தொடங்கி விடுகிறது. மூன்று வயது குழந்தைக்கு ஹோம் வொர்க், கிளாஸ் வொர்க், அசைன்மெண்ட் என எக்கச்சக்க டென்ஷன்.

அறிவு, நடத்தை, மொழி உட்பட பல விஷயங்களையும் குழந்தைகள் பள்ளி வாழ்வில் இருந்தே கற்றுக்கொள்கின்றனர். ஆசிரியருக்கும் மாணவருக்குமான உறவு மதிப்பு சார்ந்ததாக இருந்த காலத்தில், ஆசிரியர்கள் நல்லொழுக்கத்தை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பவர்களாக இருந்தனர். ஆனால், இன்றைய ஆசிரியர்களின் பணிச்சுமை மற்றும் ஆசிரியர், மாணவருக்கு இடையிலான உறவு எல்லாமே நெருக்கடி மிகுந்ததாக மாறிவிட்டது. ஆசிரியர்கள் சொன்னதை வேதவாக்காக மாணவர்கள் எடுத்துக்கொண்ட காலகட்டம் இதுவல்ல. இன்று மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதிலைச் சொல்ல தினமும் தன்னை மேம்படுத்திக்கொண்டு படிக்க வேண்டிய நிலைக்கு மாறியிருக்கிறார்கள் ஆசிரியர்கள்.

ஆனாலும் ஆசிரியர்கள் மாணவர்களை உளவியல் ரீதியாக அணுக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பேசினார் உளவியல் ஆலோசகர் பாபுரங்கராஜன்  ‘‘பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் இடையில் முரண்பாட்டைக் களைய ஆசிரியர்கள் சில விஷயங்களின் கவனமாக செயல்பட வேண்டியுள்ளது. வகுப்பறையில் அவர்கள் கண்டிப்பாக 5 விஷயங்களைத் தவிர்த்தாக வேண்டும்.

இன்று நடத்தும் பாடத்தை நாளை படித்து வர வேண்டும் என்பது பொதுவான விதி. அதையே ஆசிரியர்கள் கடுமையான கட்டளையாக சொல்லக்கூடாது. படிக்காமல் வந்தால் 10 முறை இம்போசிஷன் எழுத வைப்பேன் எனப் பயமுறுத்துவது போன்ற பாணியில் படிக்க வைக்க முயல்வது தவறு. இது, அந்தப் பாடத்தின் மீதும், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீதும் ஒருவித வெறுப்பினை உண்டாக்கும். அதேபோல் குறிப்பிட்ட ஒரு மாணவன் மீது காரணம் இல்லாமல் வெறுப்பினைக் காட்டுவது, முதல் நாள் ஒரு விஷயத்தை ஃபாலோ செய்யச் சொல்லிவிட்டு மறுநாள் வேறு ஒன்றை வலியுறுத்துவது, முன்னுக்குப் பின் முரணான கட்டளைகள் இடுவது, போன்றவை மாணவர்களைக் குழப்புவதோடு மன உளைச்சலுக்கும் ஆளாக்கும். இது ஆசிரியர்- மாணவர் இருவருக்குமான இணக்கத்தை கெடுத்துவிடும். இதுபோன்ற செயல்களை ஆசிரியர்கள் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

ஒரு நாளில் என்ன வேலைகளையெல்லாம் மாணவனால் செய்ய முடியும் என்பதைக் கணக்கிட்டு அதற்கேற்ப அவர்களுக்கு வேலைகளை பிரித்துக்கொடுக்க வேண்டும். மாணவர்களிடம் மனப்பாடம் செய், எழுது என்று செய்ய இயலாத அளவுக்கு வேலைகளை வாங்கும்போது, மாணவர்களின் கவனம் படிப்பிலிருந்து விலகிச் செல்ல நேரிடும். எந்த மாணவரிடமிருந்து எப்படிப்பட்ட திறனை எதிர்பார்க்க முடியும் என்பதைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப வேலை வாங்கினால் ரிசல்ட் திருப்திகரமாக இருக்கும்.

இன்றைய குழந்தைகள் சுயமரியாதையை அதிகம் எதிர்பார்ப்பவர்களாக இருக்கிறார்கள். ஐந்து வயது குழந்தையாக இருந்தால்கூட மற்றவர் முன்னிலையில்தான் திட்டுவாங்குவதை அவர்கள் விரும்புவதில்லை. அதையும் மீறி திட்டினால் அதைப் பெருத்த அவமானமாக நினைத்து விபரீத முடிவுகளை எடுக்கிறார்கள். இது மாணவர்களின் படிப்பில் பாதிப்பை ஏற்படுத்தலாம். பாராட்டுவதை எல்லோர் முன்னிலையிலும், திட்டுவதை தனியாகவும் செய்ய வேண்டும். ஆசிரியர்கள் எஜமானர்கள் போலவும், மாணவர்கள் தொழிலாளிகள் போலவும் நடத்துவதை நிறுத்த வேண்டும்.

ஆசிரியர்கள், தாங்கள் உதிர்க்கும் வார்த்தைகளில் கவனம் கொள்ள வேண்டும். தகாத வார்த்தைகளை உபயோகப்படுத்தி திட்டுவது, அடிப்பது போன்ற செயல்கள் வேண்டாம். தவறு மனித இயல்பு. தவறு செய்வதை புரியும்படி திருத்தினாலே அவை மீண்டும் நிகழாது. இன்றைய குழந்தைகள் அதிகநேரம் இருப்பது வகுப்பறையில்தான். எனவே மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாத வகையில் ஆசிரியர்கள் நடந்துகொண்டாலே போதுமானது. நன்கு படிப்பவர்களே அறிவாளிகள் என்கிற சிந்தனையை ஆசிரியர்கள் தங்கள் மனங்களில் இருந்து நீக்கினாலே போதும். மாணவர்கள் மிளிர்வார்கள்.

kalviseithi
Perarivalan home abuzz with visitors

Shanmughasundaram J| TNN | Updated: Aug 27, 2017, 12:12 IST


Rajiv Gandhi assassination convict A G Perarivalan near his home in Jolarpet, Vellore district

VELLORE: A narrow lane leading to K K Thangavel Street in Jolarpet is buzzing with activities. Hundreds of friends, relatives and neighbours headed to Perarivalan Illam on Friday.

The faces of men and women giving their names, addresses and phone numbers to the police personnel posted in front of the house were filled with happiness and excitement to see A G Perarivalan, a life convict in the Rajiv Gandhi assassination case, after 26 years. He was arrested at the age of 19.

The police allowed the visitors by batches as the three-room house was jam-packed through the day. "Visitors are pouring in," said a woman police Nirmala, who was busying registering the visitors' details since 8am. Visitors were allowed till 8pm.

Perarivalan's lawyer K Sivakumar said, "In the past 26 years, there was a minor change his three-room house. Two doors were changed." One of the rooms was turned into an archive of newspapers, magazines and documents related the case since he was arrested.

Perarivalan was happy to see hundreds of his friends and well-wishers visit him since he returned home on Thursday night. "Everyone shared their memories of good old days with him and wished him to be a free man soon. It gave him confidence to him to go further," said Sivakumar. Perarivalan's father, Gnanasekaran, 75, a physical education teacher, who lay on a cot and looked at his son talking to visitors, said "I still cannot believe this to be true. Though I spoke with him for long hours after he came home, I thought it was a dream when I woke up. But he was sitting in front of me when I opened my eyes."

Gnanasekaran wanted his son to get married, but was also worried who would come forward to marry him. "I want him to get married and have children. He went to jail at a young age and got parole for the first time now (at 46 years). I hope he will get a life partner, who can understand him well. His mother (Aruputhammal) also wants the same."

Perarivalan has been asked to sign in the register at Jolarept police station during his parole period. However, police, considering various factors, decided to get his signature at his house itself, said Sivakumar. Perarivalan has been instructed not to attend any public meeting or programme during his parole.
Bus services dip, Pallavaram and Chromepet hit

TNN | Updated: Aug 28, 2017, 00:05 IST

Chennai: Residents of Chrompet, Pallavaram, Zamin Pallavaram and the city suburbs are worried as the frequency of bus services including the small bus services have taken a hit. Frequency on two routes S81 and S82 covering several interior stretches from Chrompet to Pozhichalur have fallen drastically.

"The buses were of great help as it connected us to several areas but now we are unable to commute as the service is not as frequent as earlier. The MTC should step in and ensure that residents and commuters are not put to hardship," said Ravikumar, a commuter.

Social activist and longtime Chromepet resident V Santhanam said, "Most of those employed in the IT industry have moved to the southern suburbs in the city and the bus services and frequency have fallen short of expectation."

Residents of Sembakkam and Chitlapakkam have also been affected due to low frequency of buses.

"If one has to reach Central from here we have to take a bus to Pallavaram or Tambaram and then another bus from there as the frequency of buses is very low. Even if there is one service and it is jam-packed, one has to wrestle their way to get a seat in the bus," said V Rajendran, a resident of Chitlapakkam.

Commuters also urged the MTC authorities to ensure that the buses plying on the Tambaram-Velachery main road stop at Rajakilpakkam bus stand. P Muthu, a regular commuter, said, "Authorities should ensure regular frequency of bus 51G plying from Tambaram East to Vengaivasal for the benefit of commuters. The small bus S3 from Chromepet to Madambakkam should also increase its frequency as the frequency now is too low. In addition, S10 bus plying from Chrompet to Jothi Nagar should also increase its frequency."
தலையங்கம்
அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு தார்மீக பொறுப்பு



பொதுவாக அரசு பணிகளில் தொய்வு ஏற்பட்டாலோ, தோல்வி ஏற்பட்டாலோ அந்த துறைக்கான அமைச்சர்களும், அதிகாரிகளும், ஊழியர்களும் பொறுப்பு ஏற்க வேண்டும்.

ஆகஸ்ட் 28 2017, 03:00 AM

பொதுவாக அரசு பணிகளில் தொய்வு ஏற்பட்டாலோ, தோல்வி ஏற்பட்டாலோ அந்த துறைக்கான அமைச்சர்களும், அதிகாரிகளும், ஊழியர்களும் பொறுப்பு ஏற்க வேண்டும். ஒவ்வொரு துறை ரீதியான செயல்பாடுகளில் வெற்றி ஏற்பட்டாலும்சரி, தோல்வி ஏற்பட்டாலும்சரி நிச்சயமாக அவர்கள் அனைவருக்கும் ‘பொறுப்பு கடமை’ இருக்கிறது என்பது காலம் காலமாக சொல்லிவரும் கருத்தாகும். ஆனால் வெற்றி ஏற்படும்போது அதற்கு நாங்கள்தான் காரணம் என்று சொல்லும் அவர்கள், தோல்வி ஏற்படும்போது மட்டும் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள முன்வருவதில்லை. ஆனால் ரெயில்வே துறையில் மட்டும் எப்போதும் விபத்துகள் ஏற்படும்போதும் அதற்கான பொறுப்பை ரெயில்வே துறை மந்திரிகள் ஏற்றுக்கொள்கிறார்கள். 1956–ல் தமிழ்நாட்டில் உள்ள அரியலூரில் நடந்த ரெயில் விபத்தின்போது உடனடியாக அப்போது ரெயில்வே மந்திரியாக இருந்த லால் பகதூர் சாஸ்திரி முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். இந்த விபத்தில் 150–க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்து ஏற்பட்ட உடன் ரெயில்வே மந்திரியாக இருந்த லால் பகதூர் சாஸ்திரி ராஜினாமா செய்தார்.

1999–ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் அசாம் மாநிலத்தில் நடந்த ஒரு பெரிய ரெயில் விபத்து 290 உயிர்களை பலி வாங்கியவுடன் அப்போது ரெயில்வே மந்திரி நிதிஷ்குமார் ராஜினாமா செய்தார். இதுபோல 2000–ம் ஆண்டில் மம்தா பானர்ஜி ரெயில்வே மந்திரியாக இருந்தபோது நடந்த 2 ரெயில் விபத்துகள் அவரை பெரிதும் பாதித்தன. இதற்கான பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்றுகூறி அவர் ராஜினாமா செய்தார். ஆனால் அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் அந்த ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளவில்லை. தற்போது கடந்த 19–ந் தேதி உத்தரபிரதேசம் மாநிலம் முசாபர்நகர் அருகே நடந்த ஒரு ரெயில் விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர். மேலும் 90 பேர் காயமடைந்தனர். மீண்டும் 23–ந் தேதி உத்தரபிரதேசம் அவுரையா மாவட்டத்தில் நடந்த மற்றொரு ரெயில் விபத்தில் 70 பேர்களுக்கு மேல் காயமடைந்தனர். இந்த ரெயில் விபத்துகளுக்கு பொறுப்பேற்று ரெயில்வே மந்திரி சுரேஷ்பிரபு ராஜினாமா கடிதம் கொடுத்தார். இந்த ராஜினாமாவை பிரதமர் ஏற்றுக்கொள்ளவும் இல்லை, ஏற்றுக் கொள்ளாமல் இருக்கவும் இல்லை. காத்திருக்கும்படி கூறியிருக்கிறார். ஆனால் உடனடியாக ரெயில்வே வாரியத் தலைவர் ஏ.கே.மிட்டல் ராஜினாமா செய்துவிட்டார். வடக்கு ரெயில்வே பொது மேலாளர், டிவி‌ஷனல் மேனேஜர் போன்ற உயர் அதிகாரிகள் விடுமுறையில் செல்ல பணிக்கப்பட்டனர். சீனியர் டிவி‌ஷனல் என்ஜினீயர் உள்பட 4 உயர் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த ஒழுங்கு நடவடிக்கை மேலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பொதுவாக விபத்துகள் நடக்கும்போது கீழ்மட்ட ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்படுவது வழக்கம்.

ஆனால் இந்தமுறை உயர் அதிகாரிகள் மீதே கடும் நடவடிக்கை பாய்ந்துள்ளது. உயர் அதிகாரிகள் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்வதும், அவர்களை விடுமுறையில் போகச் சொல்வதும், இடைநீக்கம் செய்வதும் வரவேற்கத்தக்கதுதான். சாலைகளிலும் இதுபோன்ற பெரிய விபத்துகள் நடந்தால் அதில் வடிவமைப்பு கோளாறு இருந்தாலோ, கண்காணிப்பு இல்லையென்றாலோ தார்மீக பொறுப்பேற்க சொல்ல வேண்டும். ரெயில்வே துறையில் மட்டும் இவ்வாறு தார்மீக பொறுப்பேற்று அமைச்சர்களும், அதிகாரிகளும், ஊழியர்களும் நடவடிக்கைகளுக்கு உட்படுவதுபோல மத்திய, மாநில அரசுகளில் உள்ள அனைத்து துறைகளிலும், அனைத்து பணிகளிலும் அமைச்சர்களையும், அதிகாரிகளையும், ஊழியர்களையும் தார்மீக பொறுப்பேற்க சொன்னால் நிச்சயமாக அரசு நிர்வாகங்களில் தவறுக்கு இடம் இல்லாமல் தூய்மையும் இருக்கும், வேகமும் இருக்கும், மக்களுக்கு பெரிதும் பயனும் விளைவிக்கும்.
ரூ.200 நோட்டுகள் இன்று முதல் வினியோகம் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வங்கிகளில் ஏற்பாடு



தமிழக வங்கிகளில் இன்று முதல் புதிய ரூ.200 நோட்டுகள் வினியோகம் செய்யப்பட இருக்கிறது.

ஆகஸ்ட் 28, 2017, 04:30 AM
சென்னை,

தமிழக வங்கிகளில் இன்று முதல் புதிய ரூ.200 நோட்டுகள் வினியோகம் செய்யப்பட இருக்கிறது. வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

ரிசர்வ் வங்கி இயக்குனர்கள் குழு பரிந்துரையின் படி புதிய ரூ.200 நோட்டுகள் வெளியிடப்படும் என்று மத்திய நிதி அமைச்சகம் கூறியிருந்தது. அந்தவகையில் ரூ.2,000 நோட்டை சிரமம் இன்றி பொதுமக்கள் மாற்றுவதற்காக புதிய ரூ.200 நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி அச்சிட்டு உள்ளது. இந்த நோட்டுகள் டெல்லி, மும்பை போன்ற முக்கிய நகரங்களில் புழக்கத்துக்கு வந்துவிட்டது.

சென்னை ரிசர்வ் வங்கிக்கு இந்த புதிய ரூ.200 நோட்டுகள் கண்டெய்னர்கள் மூலம் ஏற்கனவே கொண்டுவரப்பட்டு விட்டன. ஆனாலும் தொடர் விடுமுறை மற்றும் வங்கிகள் வேலை நிறுத்தம் காரணமாக இந்த புதிய ரூ.200 நோட்டுகள் வங்கிகளுக்கு பிரித்து கொடுக்கப்படவில்லை. இதனால் சென்னை ரிசர்வ் வங்கியில் இந்த புதிய ரூபாய் நோட்டுகள் வைக்கப்பட்டிருந்தன.

இந்தநிலையில் இந்த புதிய ரூ.200 நோட்டுகள் சென்னை ரிசர்வ் வங்கியில் இருந்து தமிழகம் முழுவதும் உள்ள குறிப்பிட்ட வங்கிகளில் மட்டும் முதற்கட்டமாக பிரித்து கொடுக்கப்பட்டு உள்ளன. அந்தவகையில் தமிழக வங்கிகளில் இன்று முதல் ரூ.200 புதிய நோட்டுகள் வினியோகம் செய்யப்பட உள்ளன.

தாங்கள் சார்ந்துள்ள வங்கி கிளைகளில் பணம் எடுக்க செல்லும்போது மட்டுமே இந்த புதிய ரூ.200 நோட்டுகள் வழங்கப்பட உள்ளது. அதுவும் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்குகளில் இருந்து மட்டுமே பெற முடியும். தனியாக யாரும் சென்று வாங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இதே விதிகள் தான் அடுத்து வினியோகிக்கப்பட உள்ள புதிய ரூ.50 நோட்டுக்கும் பொருந்தும்.

“புதிய ரூ.200 நோட்டுகள் குறிப்பிட்ட சில வங்கி கிளைகளுக்கு மட்டுமே முதற்கட்டமாக வழங்கப்பட்டு இருக்கிறது. எனவே ரிசர்வ் வங்கியில் இருந்து நாளை (இன்று) உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும், ரூ.200 நோட்டு வாடிக்கையாளர்களுக்கு வினியோகம் செய்யப்படும். அனேகமாக நாளை (இன்று) காலை 11 மணி முதல் புதிய நோட்டுகளை வாடிக்கையாளர்கள் பெறலாம்”, என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாநில செய்திகள்

வட தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்


வட தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 28, 2017, 05:15 AM
சென்னை,

காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும், வெப்பசலனம் காரணமாகவும் தமிழகத்தில் பரவலாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து இதமான சூழ்நிலை நிலவி வருகிறது.

தற்போது காற்றழுத்த தாழ்வு நிலையானது ஆந்திர கடல் பகுதியில் இருந்து குமரி கடல் பகுதி வரை நிலை கொண்டுள்ளது. இதனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

தெற்கு ஆந்திர கடல் பகுதியில் இருந்து குமரி கடல் பகுதி வரை தமிழ்நாட்டின் உள் மாவட்டங்கள் வழியாக நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும், வெப்பசலனம் காரணமாகவும் அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பள்ளிப்பட்டில் 7 செ.மீ., பரங்கிப்பேட்டை, சேத்தியாதோப்பில் தலா 5 செ.மீ., கேளம்பாக்கம், வால்பாறையில் தலா 4 செ.மீ, பூந்தமல்லி, காட்டுக்குப்பத்தில் தலா 3 செ.மீ, சிதம்பரம், பொன்னேரி, மகாபலிபுரம், எண்ணூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருப்பத்தூரில் தலா 2 செ.மீ, வேலூர், ஸ்ரீபெரும்புதூர், திருத்தணி, தாமரைப்பாக்கம், வானூர், சேலம், சோழவரம், திருவள்ளூரில் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
'பைத்தியங்கள்!' : வீரமணி கிண்டல்

பதிவு செய்த நாள்28ஆக
2017
00:08


வேலுார்: ''எம்.எல்.ஏ.,க்கள் பலருக்கு பைத்தியம் முற்றி விட்டதால், தினகரன் அணிக்கு செல்கின்றனர். இவர்களுக்கு எலுமிச்சம் பழத்தை தேய்த்தால் தான் குணமடைவர்,'' என, வணிகவரி துறை அமைச்சர் வீரமணி கூறினார்.

வேலுாரில் நேற்று அவர் அளித்த பேட்டி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தினகரன், இப்போது, பலரை கட்சியை விட்டு நீக்குவதாக, தினமும் அறிக்கை வெளியிட்டு வருகிறார். இதன் மூலம், அவர் சர்க்கஸ் கோமாளியாகி விட்டார்.
தினகரனின் கோமாளித்தனமான பேச்சை கேட்டு, பல, எம்.எல்.ஏ.,க்களுக்கு பைத்தியம் முற்றி, தினகரன் அணிக்கு செல்கின்றனர். இவர்களுக்கு, எலுமிச்சம் பழங்களை தேய்த்தால் தான் குணமடைவர். இல்லாவிட்டால், அவர்களை குற்றாலத்திற்கு தான் அழைத்துச் செல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

NEWS TODAY 11.07.2026