Wednesday, August 30, 2017

‘Schools force students to attend MGR function, blame govt’

TNN | Updated: Aug 30, 2017, 00:09 IST


Chennai: Hundreds of students will be missing out on classes today, to instead languish at the VGP grounds at Kanchipuram through the day. Several schoolsthat come under Kanchipuram district, have been allegedly forced to bring their students to the venue to partake in the state-sponsored MGR centenary functions. In a move viewed as a show of strength by the state, the government order has mandated that schools make attending the function compulsory for all students of classes X, XI & XII on Wednesday. Schools will be taking students to the venue, where they will attend the function where AIADMK party cadres and followers of the late MGR will also be present.



Parents of students received a text message in this regard on Tuesday, from the respective schools asking to send their ward for the programme. "Tomorrow (30.08.17, Wednesday) MGR centenary function will be held in VGP Ground. As per a government order, students from X, XI & XII must participate in the function. Students' reporting time is 7.30 am at school. No need to bring bag & lunch. After the function is over we will send the students home," read the message received by a parent whose son studies at a private school in Urapakkam. "Many party cadres who attend the meeting may come in a drunken state to the function, so safety is a big concern for us. We have not even been intimated of what time to go pick up our wards as the meeting could go on till late hours. Though we raised the issue with schools, female students haven't been exempted from attending the it," said a parent.



However, some schools in the district said they had received no such instruction to partake in the function. "Until 5 pm on Tuesday we did not receive any instruction to attend any programme. We have tests going on currently, so we can't afford to cancel lessons and take students to the venue even if we are asked to do it," said a teacher of a franchise school. While parents and schools have little choice in the matter but to send students to celebrate a functio, department officials could not be reached for a response in this regard.
Cops to punish motorists who don’t carry original licence

TNN | Aug 30, 2017, 00:14 IST

Chennai: After the Tamil Nadu government made it mandatory for drivers to carry their original licences from September 1, the city police stated that those motorists who do not carry original driving licenses will be prosecuted.

In a press release, police said the Supreme Court Committee on Road Safety has also instructed all states to cancel the driving licences of motorists involved in certain violations. Referring to various sections of the Motor Vehicle act, the police said Section 181 of the MVAct 1988, describes the punishment for driving a vehicle without valid driving licence. People driving a vehicle without valid driving licences are liable to be punished with imprisonment for a term which may extend to three months, or with fine which may go up to Rs 500, or with both.

The release said as per Section 3 of the MV Act 1988, it is mandatory that no person shall drive the motor vehicle in any public place unless he holds an effective driving licence issued to him authorizing him to drive the vehicle.

Section 130 of MV Act 1988, states that the driver of a motor vehicle in any public place shall, on the demand of any police officer in uniform, produce his licence for examination by any police official.

Earlier transport minister M R Vijayabaskar has said as many as 9,500 driving licences have been suspended for alleged violations, such as over-speeding, signal jumping and drunk driving. The minister said road accidents during January- July this year had reduced. It has fallen by 3,244, compared to the same period last year. The number of deaths has reduced by 309, he added.
வீட்டிலேயே பரிசோதனைகள் செய்துகொள்ளலாமா?

2017-08-24@ 12:39:40




நன்றி குங்குமம் டாக்டர்

டாக்டர் எனக்கொரு டவுட்டு

வீட்டில் இருந்தபடியே முதியவர்கள் சுவாசக் கோளாறை சரி செய்யும் கருவி, சுகர் மானிட்டர், பி.பி. பரிசோதனை, இன்சுலின் ஊசி போடுதல் போன்றவற்றைமுதியவர்கள் வீட்டிலேயே செய்யலாமா? அதனால் ஆபத்து ஏதேனும் உண்டா?சந்தேகத்துக்கு விளக்கம் அளிக்கிறார் பொதுநல மருத்துவர் சிவராம் கண்ணன்.

‘‘இன்றைய வாழ்க்கை முறையில், முதியவர்கள் பெரும்பாலான நேரங்களில் வீட்டில் தனியாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அவர்களைக் கவனித்து கொள்ளக்கூட யாரும் இருப்பது இல்லை. முக்கியமாக, வயதானவர்களின் உடல்நலத்தைப் பாதிக்கும் வகையில் என்ன மாதிரியான பிரச்னைகள் ஏற்படும் என்பதை நன்றாக தெரிந்தவர்கள் அவர்களுடன் இருப்பது மிகவும் குறைவு.

இந்த நிலையில், வீட்டில் தனியாக இருக்கும் முதியவர்கள் அடிப்படை மருத்துவ பரிசோதனைகளான ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு ஆகிய பரிசோதனைகளை செய்து கொள்வது நல்லதுதான். ஆஸ்துமா நோயால் அவதிப்படுபவர்கள் செயற்கை சுவாச கருவியை உபயோகிக்கலாம். அதேபோன்று நீரிழிவு நோயாளிகள் சுகர் மானிட்டர் மூலம் குளுக்கோஸ் அளவை பரிசோதித்துக் கொள்வதும், தாங்களாகவே இன்சுலின் ஊசி போட்டு கொள்வதும் பாதுகாப்பானதுதான். ஆபத்து ஒன்றும் இல்லை.

சிகிச்சைக்காக வரும் முதியவர்களுக்கு யாருடைய உதவியும் இல்லாமல், தாங்களாகவே இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ளவும், சுகர் மற்றும் பி,பி. பரிசோதனை செய்வதையும், செயற்கை சுவாச கருவி உபயோகப்படுத்துதலையும் பாதுகாப்பானது என்றே அறிவுறுத்துகிறோம். அது மட்டுமல்லாமல் இன்சுலின் போன்ற மருத்துவ உபகரணங்களை பாதுகாப்பாக உபயோகிக்கும் முறையையும் சொல்லிக் கொடுத்து அனுப்புகிறோம்.

எனவே, முதியவர்கள் வீட்டிலேயே சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் ஆகியவற்றைப் பரிசோதித்துக் கொள்வது நல்லது. குழப்பம் எதுவும் வேண்டியது இல்லை. அதே நேரத்தில் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவ ஆலோசனை பெறுவதும், மருத்துவருடன் தொடர்பில் இருப்பதும் இதில் முக்கியமானது என்பதை முதியவர்கள் மறக்க வேண்டாம்.’’

- விஜயகுமார்
கிழக்கு தாம்பரத்தில் அடுத்தடுத்து வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
2017-08-30@ 01:25:12




தாம்பரம் : கிழக்கு தாம்பரத்தில் அடுத்தடுத்த வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர். சென்னை அடுத்த கிழக்கு தாம்பரம், கணபதி நகர், சுத்தானந்த பாரதி தெருவை சேர்ந்தவர் ரவி சம்பத். இவரது மகன் ஸ்ரீராம் (30). இவர், திருவான்மியூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது வீட்டின் பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் அருண் (32). இவர், சிறுசேரியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் ஸ்ரீராம் தனது வீட்டை பூட்டிவிட்டு சூளைமேட்டில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.

அருண், நேற்று முன்தினம் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 3 சவரன் நகை மற்றும் ரூ.10 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது. மேலும், மர்மநபர்கள் ராம் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து வீட்டின் உள்ளே புகுந்து படுக்கை அறையில் இருந்த பீரோவை உடைத்து 15 சவரன் நகைகளை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். தகவல் அறிந்த சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரதமர், தமிழிசையை குறித்து அவதூறு பேச்சு நாஞ்சில் சம்பத் மீது குவியும் வழக்குகள்
DINAKARAN

2017-08-30@ 00:17:04




* கைதுக்கு அஞ்சி தப்பி ஓட்டம்
* வாயை அடக்க வேண்டும் என பாஜ எச்சரிக்கை

சென்னை : பிரதமர், தமிழிசையை குறித்து அவதூறு பேசியதாக நாஞ்சில் சம்பத் மீது வழக்குகள் குவிகின்றன. இதனால், எந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. டி.டி.வி.தினகரன் அணியை சேர்ந்த நாஞ்சில் சம்பத் அண்மையில் ஒரு பேட்டியளித்திருந்தார். அதில் பிரதமர் நரேந்திரமோடி, தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜா, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் குறித்து தனது கருத்தை தெரிவித்திருந்தார். அதில், அவர் தமிழிசை சவுந்தரராஜன் பற்றி கடுமையாக விமர்சித்திருந்தார். அதாவது,” புதைப்பதற்கு இடம் தேடி அலையும் பிணங்கள் கூட அவரை ஏற்றுக்கொள்ளாது. வாயாலேயே வடை சுடுகின்ற பெருமாட்டியால் ஒரு நாயுக்கும் பிரயோஜனம் இல்லை” என்றும் நாஞ்சில் சம்பத் கருத்து தெரிவித்திருந்தார். இவ்வாறு தமிழக பாஜ தலைவர் தமிழிசை குறித்து நாஞ்சில் சம்பத் பேசிய பேச்சுக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனம் எழுந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டை நேற்று முன்தினம் இரவு பாஜவினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த நேரத்தில் நாஞ்சில் சம்பத் வீட்டில் இல்லை.

இந்நிலையில் அவர் டி.டி.வி. தினகரனை சந்தித்து விட்டு பட்டினப்பாக்கம் அருகே உள்ள ஓட்டலில் நண்பர்களுடன் உணவு அருந்திக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற பாஜவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதை சற்றும் எதிர்பார்க்காத நாஞ்சில் சம்பத் உடனே காரில் ஏறி தப்ப முயன்றார். இருந்தபோதும் அவர் பாஜவினரிடம் சிக்கி கொண்டார். அப்போது பாஜவினர் அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நாஞ்சில் சம்பவத்தை மீட்டனர். இதைத் தொடர்ந்து பாஜவினர் பட்டினப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக நாஞ்சில் சம்பத் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் மீது பல்லாவரம், பம்மல், அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டம், அவதூறாக பேசியது, பொது தளங்களில் ஆபாசமாக பேசியது, பெண்களை இழிவுப்படுத்தி பேசியது ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் நாஞ்சில் சம்பத்தை போலீசார் எந்த நேரத்திலும் கைது செய்ய வாய்ப்புள்ளது. இதையடுத்து நாஞ்சில் சம்பத் தற்போது வீட்டில் தங்காமல் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. வெளிமாநிலங்களுக்கு தப்பிச்செல்லாமல் இருக்க கண்காணிப்பை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். ஓரிரு நாளில் அவர் கைது செய்யப்படுவார் என்று போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அஇஅதிமுக (அம்மா) அணியின் கொள்கை பரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத்துக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு அவரது சார்பில் வழக்கறிஞர்கள் மனு அளித்தனர்.
மத்திய அரசு அறிவிப்பு மருத்துவமனை அறை வாடகைக்கு வரிவிலக்கு

2017-08-30@ 01:26:08





புதுடெல்லி : மருத்துவமனை அறை வாடகைக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு அளிக்கப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஜிஎஸ்டியின் கீழ், 1000 ரூபாய்க்கு குறைவான அறை வாடகைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படாது. 1000 ரூபாயிலிருந்து 2500 ரூபாய் வரையில் 12 சதவிகித ஜிஎஸ்டி விதிக்கப்படும். இதேபோல 2500 ரூபாயிலிருந்து 7500 ரூபாய் வரையில் 18 சதவிகிதமும் 7500 ரூபாய்க்கு மேல் 28 சதவிகிதமும் அறை வாடகையில் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும். கூடுதல் படுக்கைகள் உள்ளிட்டவற்றையும் சேர்த்து வசூலிக்கப்படும் மொத்த கட்டணத்திற்கு இந்த ஜிஎஸ்டி விதிக்கப்படும். அறையின் தரம் உயர்த்தப்பட்டு, வாடகை வேறாக இருந்தாலும், உண்மையான கட்டணத்தின் அடிப்படையிலேயே இந்த வரிவிதிப்பு இருக்கும்.

உண்மையான கட்டணம் ₹7,000ஆக இருந்து தரம் உயர்த்தப்பட்டதற்கு ₹10,000 வசூலிக்கப்பட்டாலும், பத்தாயிரத்திற்கே 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். எந்த இடத்தில் அதிகமான கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறதோ அந்த கட்டணத்திற்கு ஜிஎஸ்டி விதிக்கப்படும். பல்வேறு காலநிலைகளுக்கு பல்வேறு கட்டணங்கள் விதிக்கப்பட்டாலும், எந்த நேரத்தில் அந்த அறையை வாடகைக்கு எடுக்கிறோமோ, அந்த நேரத்தின் கட்டணத்திற்கு ஜிஎஸ்டி பொருந்தும். மருத்துவமனைகளில் அறை வாடகைக்கு ஜிஎஸ்டி வரி கிடையாது. இவ்வாறு மத்திய அரசு கூறியுள்ளது.

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் செப். 23ல் வாக்குப்பதிவு: மலாய் இனத்தவர் மட்டுமே போட்டி
DINAKARAN


2017-08-29@ 01:52:26




சிங்கப்பூர் : சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டால், அடுத்த மாதம் 23ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது. சிங்கப்பூர் அதிபராக உள்ள டோனி டான் கெங்யாம் பதவிக்காலம் இந்த மாத இறுதியில் முடிகிறது. புதிய அதிபருக்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் கடந்தாண்டு சுழற்சி முறையில் எல்லா பிரிவினருக்கும் அதிபர் பதவி வழங்கப்பட வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி, இந்நாட்டின் அடுத்த அதிபர் மலாய் இனத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். அதிபர் தேர்தலில் முன்னாள் சபாநாயகர் ஹலிமா யாக்கோப், தொழிலதிபர் முகமது சல்லா மாரிகான் மற்றும் பரித்கான் கைம்கான் ஆகியோர் போட்டியிடுவார்கள் என தெரிகிறது.

இவர்கள் அனைவருமே மலாய் இனத்தை சேர்ந்தவர்கள். இத்தேர்தலில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் போட்டியிட்டால் அடுத்த மாதம் 23ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஒரே வேட்பாளர் மட்டும் போட்டியிட்டால், வேட்புமனு தாக்கல் செய்யப்படும் செப்டம்பர் 13ம் தேதியே அவர் அதிபராக அறிவிக்கப்படுவார். இத்தேர்தலில் ஹலிமா வெற்றி பெற்றால் சிங்கப்பூரின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை பெறுவார். அதேபோல், தேர்தலில் வெற்றி பெறுபவர் சிங்கப்பூரின் 2வது மலாய் இன அதிபர் என்ற பெருமையையும் பெறுவார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! 7.5% மருத்துவ இடஒதுக்கீட்டுக்கு இனி பள்ளிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை

அரசு பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! 7.5% மருத்துவ இடஒதுக்கீட்டுக்கு இனி பள்ளிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை Published On: 10 Jul 202...