Tuesday, September 5, 2017

வளர்த்த பாட்டி மீது கொள்ளை பாசம்


Published : 03 Sep 2017 09:18 IST

அரியலூர்

பாட்டி பெரியம்மா

அனிதா 3 வயதாக இருக்கும்போதே அவரது தாயார் இறந்து விட்டார். அதன்பின், தாத்தா தங்கவேலு (95), பாட்டி பெரியம்மா (90) ஆகியோரது வீட்டில்தான் வளர்ந்து வந்தார். சில ஆண்டுகள் பள்ளி விடுதியில் தங்கிப் படித்து வந்த அனிதா, வீட்டுக்கு வரும்போது தனது பாட்டிக்கு ஏதேனும் வாங்கி வருவாராம். அதை வாஞ்சையோடு நினைவு கூர்ந்த பாட்டி பெரியம்மா, “நான் வளர்த்த பெண் எனது சேலையாலேயே தூக்குப்போட்டு இறந்து விட்டாரே” என்று விம்மினார்.


தாத்தா தங்கவேலுபோலீஸார் மிரட்டி கையொப்பம்

வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் இரவு கொண்டு வரப்பட்டது.

அங்கு பிரேதப் பரிசோதனை செய்யவும், உடலை பெற்றுக் கொள்ளவும் சம்மதிக்கிறேன் என அனிதாவின் தந்தை சண்முகத்திடம் போலீஸார் கையொப்பம் வாங்கியுள்ளனர். தன்னை போலீஸார் மிரட்டி கையொப்பம் பெற்றதாக சண்முகம் தெரிவித்தார்.

இறந்த மாணவி அனிதாவுக்கு அஞ்சலி செலுத்த வந்தவர்கள் நீட் தேர்வைக் கொண்டு வந்த மத்திய அரசைக் கண்டித்து பிரதமர் மோடியின் உருவபொம்மையை எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
ப்ளூவேல்’ விளையாட்டு விபரீதம்: ம.பி.யில் பிளஸ் 1 மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

Published : 05 Sep 2017 09:09 IST

போபால்

(




மத்திய பிரதேச மாநிலம் தமோ மாவட்டத்தில் தமோ அருகில் உள்ளது நவ்ஜாகிரதி பள்ளி. இங்கு பிளஸ் 1 படித்து வந்த மாணவன் சாத்விக் பாண்டே, கடந்த சனிக்கிழமை இரவு திடீரென காணாமல் போனான். இந்நிலையில் அதிகாலை 2 மணிக்கு ரயில் தண்டவாளத்தில் சாத்விக் இறந்து கிடந்ததை போலீஸார் உறுதி செய்தனர்.

சாத்விக்கின் தந்தை அரசு அலுவலகத்தில் கிளார்க்காக பணிபுரிகிறார். வீட்டுக்கு ஒரே மகன்.


சாத்விக் கடந்த சில நாட்களாக ப்ளூவேல் விளையாட்டு விளையாடி வந்ததாக அவனது பள்ளி நண்பர்கள் அடிப் கான், ரோகித் உள்ளிட்டோர் தெரிவித்தனர். ஆனால், சாத்விக்கின் செல்போன் மற்றும் கம்ப்யூட்டரை ஆய்வு செய்யாமல் எதுவும் சொல்ல இயலாது என்று போலீஸார் கூறினர்.

ஆனால், தண்டவாளம் அருகில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் சாத்விக் தற்கொலை செய்து கொள்ளும் திடுக்கிடும் காட்சிகள் பதிவாகி உள்ளன. அதில் சனிக்கிழமை இரவு 11 மணிக்கு தண்டவாளத்தில் ரயில் வரும் வரை காத்திருக்கிறான். வேகமாக ரயில் வருவதைப் பார்த்ததும் சாத்விக் முட்டிப் போட்டு அமர்கிறான். அவன் மீது ரயில் மோதி செல்கிறது. இந்த காட்சிகளையும் போலீஸார் சேகரித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மத்திய பிரதேசத்தில் ப்ளூவேல் விளையாட்டால் ஏற்பட்ட முதல் மரணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
சரஸ்வதி பூஜை விடுமுறைக்கு குவியும் படங்கள்: திணறும் விநியோகஸ்தர்கள்

Published : 04 Sep 2017 19:48 IST

ஸ்கிரீனன்




கோப்புப் படம்

சரஸ்வதி பூஜை விடுமுறைக்கு 8 படங்கள் வெளியீட்டை உறுதிப்படுத்தியிருப்பதால், விநியோகஸ்தர்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை விடுமுறையை கணக்கில் கொண்டு பல்வேறு படங்கள் தங்களுடைய வெளியீட்டை உறுதி செய்திருக்கிறார்கள். இதனால் பெரும் குழப்பம் உருவாகியுள்ளது.


இந்த தேதியில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் 'வேலைக்காரன்' வெளியாகவிருந்தது. ஆனால், இறுதிகட்டப் பணிகள் முடிவடையாத காரணத்தால் டிசம்பரில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், படக்குழு இன்னும் உறுதியாக தெரிவிக்கவில்லை.

மேலும், மகேஷ்பாபு தமிழில் அறிமுகமாகும் 'ஸ்பைடர்', நயன்தாரா நடித்திருக்கும் 'அறம்', விஜய் சேதுபதி நடித்திருக்கும் 'கருப்பன்', சந்தானம் நடித்திருக்கும் 'சர்வர் சுந்தரம்', சுசி கணேசனின் 'திருட்டுப்பயலே - 2', ஜி.வி.பிரகாஷ் நடித்திருக்கும் 'செம', ஜெய் நடித்திருக்கும் 'பலூன்' மற்றும் கவுதம் கார்த்திக் நடித்திருக்கும் 'ஹர ஹர மஹாதேவகி' ஆகியவை செப்டம்பர் 29-ம் தேதி வெளியீடு என அறிவித்திருக்கிறார்கள்.

இவ்வளவு படங்களுக்கு எங்கே திரையரங்குகள் உள்ளது என்று விநியோகஸ்தர்களும் குழப்பத்தில் இருக்கிறார்கள். இவற்றில் குறைந்தது 4 படங்களாவது பின்வாங்கிவிடும் என தெரிகிறது.
வன்சொற்களைத் தவிருங்கள்: 'விவேகம்' விமர்சன சர்ச்சை குறித்து வைரமுத்து

Published : 04 Sep 2017 16:06 IST

ஸ்கிரீனன்




‘விவேகம்’ படத்தில் அஜித் மற்றும் வைரமுத்து | கோப்புப் படம்

விமர்சகர்கள் உணர்ந்ததை எழுதுங்கள்; ஆனால் வன்சொற்களைத் தவிருங்கள் என்று 'விவேகம்' படத்தைப் பார்த்துவிட்டு வைரமுத்து தெரிவித்துள்ளார்.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் 'விவேகம்' பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியானது. இப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. மேலும், திரையுலகினர் பலரின் மத்தியில் மாறன் என்பவரது விமர்சனம் கடும் அதிருப்தியை உண்டாக்கியது.


இந்நிலையில், இப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தில் பணிபுரிந்திருக்கிறார் வைரமுத்துவின் இளைய மகன் கபிலன் வைரமுத்து. இதனால் வைரமுத்துவின் குடும்பத்தினருக்கு தனியாக பிரத்யேக காட்சி திரையிடப்பட்டது.

'விவேகம்' பார்த்துவிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் வைரமுத்து கூயிறுப்பதாவது:

அஜித் ரசிகர்களின் பாலாபிஷேகத்திற்கும், சில விமர்சனங்களின் குருதியாடலுக்கும் மத்தியில் இருக்கிறது 'விவேகம்'. ஓர் எதிர்காலத் தொழில்நுட்பத்தைக் கதையாடலுக்கு முன்னெடுத்துச் சென்ற முதல் முயற்சிக்காக இயக்குநர் சிவாவைப் பாராட்டலாம். காட்சி ஊடகத்தின் சகல சாத்தியங்களும் இதில் முயலப்பட்டுள்ளன.

அஜித்தின் உழைப்பு எனக்கு உடம்பு வலியை ஏற்படுத்துகிறது. ஒளிப்பதிவு இயக்குநர் வெற்றி – கலை இயக்குநர் மிலன் இருவரின் திறமைகளும் என் கண்களை இமைக்கவிடவில்லை. அனிருத்தின் பின்னணி இசை படத்தை இடைவெளியில்லாமல் நிரப்புகிறது. கதை இல்லை என்கிறார்கள். இதில் பாகப்பிரிவினையையும், பாசமலரையுமா சொல்ல முடியும்? இதற்கு இது போதும். ஏதோ ஓர் அந்நியத் தன்மை பட்டாம்பூச்சியின் இறகளவுக்குச் சுவர்கட்டி நிற்பதைச் சொல்லத்தான் வேண்டும்.

கபிலன் வைரமுத்துவின் சில வசன வரிகளை என் மகன் என்பதற்காக நான் மறைக்க விரும்பவில்லை. 'நீ சமவெளியில் ஓடுகிறாய்; ஓடத்தான் முடியும்; ஒளிய முடியாது', 'ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வதைவிட, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் வாழ்வதே வாழ்க்கை' போன்ற நல்ல வரிகளைக் காதுகள் மனப்பாடம் செய்துகொள்கின்றன.

பயம் கலந்த வீரம் தொனிக்கும் காஜல் அகர்வாலின் கண்கள், உறங்கிய பின்னும் முகத்துக்கு மேலே சில மில்லி மீட்டர் உயரத்தில் மிதக்கின்றன. படம் சரியில்லை என்று சொல்கிறார்களே என்ற சலிப்போடுதான் போனேன். குறைகளைவிட நிறைகள் அதிகம் என்று கண்டு திரும்பினேன்.

விமர்சகர்கள் உணர்ந்ததை எழுதுங்கள்; ஆனால் வன்சொற்களைத் தவிருங்கள். ஒரு தோல்விப் படம்கூட 20 மாதப் பிரசவம் என்பதை மறந்துவிடாதீர்கள்

இவ்வாறு வைரமுத்து தெரிவித்துள்ளார்.
பி.டி.எஸ்., காலியிடங்களுக்கு இன்று நடக்குது, 'கவுன்சிலிங்'

Sep 5, 2017

சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில், பி.டி.எஸ்., எனப்படும், பல் மருத்துவ படிப்பில், 1,122 இடங்கள் காலியாக உள்ளன. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, இன்று கவுன்சிலிங் நடக்கிறது.தமிழகத்தில், 'நீட்' தேர்வு அடிப்படையில், மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

அரசு, சுயநிதி கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., இடங்கள் அனைத்தும் நிரம்பி, வகுப்புகள் நேற்று துவங்கி விட்டன. அரசு ஒதுக்கீட்டில் உள்ள, பி.டி.எஸ்., இடங்களுக்கு, நேற்று நடந்த கவுன்சிலிங்கில், 15 இடங்கள் நிரம்பின. இதனால், மொத்தமுள்ள, 1,045 பி.டி.எஸ்., இடங்களில், 604 இடங்கள் நிரம்பி உள்ளன; 441 இடங்கள் காலியாக உள்ளன.

சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள, 715 பி.டி.எஸ்., இடங்களில், 34 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன; 681 இடங்கள் காலியாக உள்ளன. இதையும் சேர்த்தால், அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில், 1,122 பி.டி.எஸ்., இடங்கள் காலியாக உள்ளன. இன்று, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும், நாளை, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் கவுன்சிலிங் நடைபெறுகிறது.

ஆசிரியர் தின வரலாறு




ஒரு நல்ல ஆசிரியராக தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, மாபெரும் தத்துவமேதையாக விளங்கிய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் திருநாளாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. 

ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாழ்க்கை, பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பித்து, ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். அப்படிபட்ட ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், செப்டம்பர் 05 நாளை ‘ஆசிரியர் தினமாக’ கொண்டாடுகிறோம். வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்றுத்தந்து, மாணவர்களுக்கு உண்மையான வழிகாட்டியாக விளங்கி, ஒவ்வொரு மாணவர்களையும், சிறந்த மனிதர்களாக்குவது ஆசிரியர்கள் தான். அத்தகைய எழுச்சிமிக்க மாணவர்களை ஒரு சிறந்த ஆசிரியரால் தான் உருவாக்க முடியும். சிறந்த படைப்பாளிகள் மற்றும் உன்னத மனிதர்களாகத் திகழும் ஆசிரியர்களைப் போற்றும் ஆசிரியர் திருநாளைப் பற்றி விரிவாகக் காண்போம்.

ஆசிரியர் தின வரலாறு

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில், வெவ்வேறு தேதிகளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. கல்வித் தொடர்பாக மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சிறந்த கல்வியாளர்களையோ, கல்வி சம்பந்தப்பட்ட சிறப்பான நிகழ்வுகளையோ நினைவுக்கூரும் வகையில் ஆசிரியர் தினம் வருகிறது.

ஆசிரியர் பணி என்றால் என்ன?

ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பது இல்லை; ஒழுக்கம் பண்பு, ஆன்மீகம், பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி, அவர்களை சிறந்த மனிதர்களாக்கும் உன்னதப் பணியாகும். அப்படிப்பட்ட தெய்வீகமானப் பணியை மாணவர்களுக்கு அளிக்க, தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்டவராக இருந்தால் மட்டும் போதாது; கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராகவும் இருக்க வேண்டும். அவர்கள் தான் உண்மையான ஆசிரியர்கள்.

ஆசிரியர் தினம்

தன்னுடைய வாழ்வில் ஆசிரியர் பணியை புனிதமாகக் கருதி, பிற ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாக, ஒரு நல்ல ஆசிரியரால் எவ்வளவு தூரம் பயன்பட முடியும் என்பதை தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, ஒரு மாபெரும் தத்துவமேதையாக உலகிற்குத் தன்னை வெளிப்படுத்திய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை, இந்தியாவில் 1962 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருநாளில் பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் என இந்தியா முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டு ஆசிரியர்களுக்கு மரியாதை தரும் வகையில் சிறப்புகள் செய்யப்பட்டு வருகிறது.

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பற்றிய சிறப்பு

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள், 1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 05 ஆம் நாள் திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற இடத்தில் ஒரு ஏழை பிராமண குடும்பத்தில் பிறந்தார். தத்துவத்தை முதற்பாடமாகக் கொண்டு இளங்கலைத் துறையில் பி. ஏ. பட்டமும், பின்னர் முதுகலைத் துறையில் எம். ஏ. பட்டமும் பெற்றவர். சென்னையில் உள்ள பிரிசிடென்சி கல்லூரியில் உதவி விரிவுரையாளராகத் தன்னுடைய ஆசிரியர் பணியைத் தொடர்ந்த அவர், இந்து மத இலக்கியத் தத்துவங்களான உபநிடதங்கள், பகவத்கீதை, பிரம்மசூத்திரா, மற்றும் சங்கரா, ராமானுஜர், மாதவர், போன்றோரின் வர்ணனைகளையும் கற்றுத் தேர்ந்தார். அதுமட்டுமல்லாமல், புத்தமத மற்றும் ஜெயின் தத்துவங்களையும், மேற்கத்திய சிந்தனையாளர்களான பிளாட்டோ, ப்லோடினஸ், காந்த், பிராட்லி, மற்றும் பெர்க்சன் போன்றோரின் தத்துவங்களையும் கற்று, அதன் சிறப்பைப் பற்றி நமது நாட்டில் எடுத்துரைத்தார். மேலை நாடுகளுக்குச் செல்லாமல், நம் நாட்டிலேயே அனைத்து சித்தாந்தங்களையும் படித்து, ஒரு தத்துவமேதையாகத் உலகிற்குத் தன்னை வெளிப்படுத்தினார்.

1918 ஆம் ஆண்டு மைசூர் பல்கலைக்கழகத்தின் தத்துவப் பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்ட இவர், 1921ல், கல்கத்தா பல்கலைக்கழகத்தில், தத்துவப் பேராசிரியராகப் பரிந்துரைக்கப்பட்டார். அதன் பிறகு 1923ல், டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் அற்புதப் படைப்பான “இந்திய தத்துவம்” வெளியிடப்பட்டது. இப்புத்தகம், பாரம்பரியத் தத்துவம் இலக்கியத்தின் ஒரு தலைச்சிறந்த படைப்பாகப் போற்றப்பட்டது.

இந்துமதத் தத்துவங்கள் பற்றி விரிவுரைகள் வழங்க, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம், டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு அழைப்பு விடுத்தது. பல மேடைகளில், அவரது சொற்பொழிவுகளை இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஒரு ஆயுதமாக பயன்படுத்தினார். மேற்கத்திய சிந்தனையாளர்களின் அனைத்து கூற்றுகளும் பரந்த கலாச்சாரத்தில் இருந்து இறையியல் தாக்கங்கள் சார்புடையதாகவே உள்ளது என்று வாதிட்டார். இந்தியத் தத்துவங்களைத் தரமான கல்வி வாசகங்கள் உதவியுடன் மொழிப்பெயர்த்தால், மேற்கத்திய தரங்களையும் மிஞ்சி விடும் என்றுரைத்தார். இவ்வாறு இந்தியத் தத்துவத்தை, ‘உலக வரைபடத்தில் வைத்த ஒரு மாபெரும் தத்துவஞானி’ என டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களைக் கூறலாம்.

1931 ஆம் ஆண்டு, டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள், ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939 ஆம் ஆண்டு, பெனாரஸ் இந்துமதம் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரானார். 1946ல், அவர் யுனெஸ்கோவின் தூதுவராக நியமிக்கப்பட்டார். சுதந்திரத்திற்குப் பின், 1948ல் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களை, பல்கலைக்கழகக் கல்வி ஆணையத் தலைவராகுமாறு கேட்டுக்கொண்டது. இந்தியக் கல்வி முறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், சிறப்பான கல்வித் திட்டத்தை வடிவமைக்கவும், ராதாகிருஷ்ணன் அவர்களுடைய குழுவின் பரிந்துரைகள் பெரிதும் உதவியது.

ஆசிரியர் தினக் கொண்டாட்டம்

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் 5 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வரும் ‘ஆசிரியர் தின’ நன்னாளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பல பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி எனப் பல்வேறு போட்டிகளை நடத்தி, மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்குவார்கள். மேலும், சிறந்த ஆசிரியர்களை கௌரவிக்கும் வண்ணமாக அவர்களுக்கு விருதுகள் வழங்கி அரசு அவர்களைப் பெருமைப்படுத்தும். மாணவர்களும், அந்நாளில் தங்களுக்குப் பிடித்த ஆசிரியர்களுக்கு அன்பளிப்புகளை வழங்கி, வாழ்த்துக்கள் தெரிவிப்பர்.

ஒரு மனிதனை அவனுக்கே அடையாளம் காட்டுபவராக இருப்பவர் தான் ஆசிரியர். மேலும், மாணவ சமூகத்திற்கு தேவையான ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி என அனைத்தையும் அவர்களுக்கு கற்றுத்தந்து, அவனை நல்லவனாக, பண்புள்ளவனாக, சிறந்தவனாக, அறிஞராக, மேதையாக உயர்த்தும் உன்னத பணி ஆசிரியர் பணி என்பதை யாராலும் மறுக்க இயலாது.

NEWS TODAY 27.07.2026