Wednesday, September 6, 2017

100 BDS govt quota seats in pvt colleges lie vacant

TNN | Sep 6, 2017, 04:10 IST




CHENNAI: A day after admitting students to MBBS courses, the selection committee in-charge of medical and dental admissions in the state was on Tuesday staring at nearly 700 vacant BDS seats, including 100 government quota seatsin self-financing dental colleges.

Just 4,000 students are left on the merit list, and the committee, which displayed 106 government quota seats and 681 management quota seats in self-financing colleges, has called eligible students to come for counselling. "We aren't sure if all seats will be taken. To prevent seats from going vacant we have decided to call candidates who have not applied, appeared, or have not been allotted a seat to apply," said secretary Dr G Selvarajan.

There are 100 seats each in the Government Dental College and state-run Raja Muthiah Medical College and 1,710 seats in 18 self-financing dental colleges. The fee in the government dental college is Rs 11,600, the tuition fee for all government quota seats in self-financing college was fixed at Rs 2.5 lakh and management seats at Rs 6 lakh. Fee for an NRI seat is Rs 9 lakh.

For the first time, all seats in self-financing colleges were filled by the state appointed committee and though the Dental Council of India extended the deadline for admissions to September 10, many seats may remain vacant.

On Tuesday, a notice asked candidates from all communities absent in previous counselling phases and those who hadn't taken seats before to "attend the counselling for allotment to government quota self-financing BDS seats in self-financing dental colleges scheduled on September 6 at 9.45 am."

Similarly, "as BDS seats are available in management quota in self-financing colleges, those who applied in management quota and not taken seats in previous counselling and NEET-eligible candidates who have not applied earlier, can come directly to Government Multi super speciality hospital, Omadurar Estate on September 6 at 2pm and apply in person," it said.
மரண பயம் போக்கும் எமனேஸ்வரர்


மனிதர்கள் பல வகைகளில் பயம் கொள்வதுண்டு. நெருப்பு, வெள்ளம், இருட்டு, பேய், பிசாசு, எதிரிகள்... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

செப்டம்பர் 05, 2017, 01:10 PM

மனிதர்கள் பல வகைகளில் பயம் கொள்வதுண்டு. நெருப்பு, வெள்ளம், இருட்டு, பேய், பிசாசு, எதிரிகள்... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் உயிரினங்கள், குறிப்பாக மனிதர்கள் அனைவருக்கும் வயது வேறுபாடின்றி ஏற்படுவது மரண பயம். நோயினாலோ, விபத்தினாலோ, எதிரிகளாலோ, முதுமையினாலோ, இயற்கை சீற்றங்களாலோ மரணம் வரும்.

ஒரு மனிதனின் தீர்க்க ஆயுள் என்பது 120 ஆண்டுகள். அவ்வளவு காலம் இல்லாவிடினும் 80, 90 வயது வரை வாழ வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்பு.

எப்படித்தான் உடலைப் பேணி பாதுகாத்தாலும், உயிர் ஒரு நாள் உடலை விட்டுப் போய்விடும் என்பது உலக நியதி. அதனைக் கவர்ந்து செல்வது எமன் என்பதும், தன்னை நாடியவர்களை எமனிடமிருந்து ஆலமுண்ட அண்ணல் காப்பார் என்பதும் இறையடியாளர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

மிருத்யுஞ் ஜெயம்

அந்த நம்பிக்கைக்காகத்தான், தன்னிடம் சரணடைந்த பதினாறு வயது பாலகனைக் காப்பதற்காக, சிவபெருமான் திருக்கடவூரில் எமனைக் காலால் உதைத்தார்.

சுசரிதன் என்ற அந்தணச் சிறுவனின் ஆயுளைக் காப்பாற்றுவதற்காக, ஆட்கொண்டேசுவரராகத் தோன்றி திருவையாறில் எமனை விரட்டினார். திருவாஞ்சியத்தில் எமனுக்குத் தனி சன்னிதி இருக்க, அங்கே இறைவன் வாஞ்சிநாதராக வீற்றிருந்து எமபயம் போக்குகிறார்.

பரமக்குடி அருகே எமனேஸ்வரம் என்ற ஊரில் முக்கண்ணன் ‘எமனேஸ்வரமுடையார்’ என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.

இவைகள் அனைத்தையும் மிருத்யுஞ் ஜெய தலம் என்கிறார்கள். ‘மிருத்யுஞ்’ என்றால் ஆயுட்குறைப்பு, பாவ வினைகள், தோஷங்கள் ஆகியவற்றைக் குறிக்கும். அவைகளை ஜெயிப்பதுதான் மிருத்யுஞ் ஜெயம் என்பதாகும்.

அந்த அற்புத சக்தி கொண்ட இறைவனை, மிருத்யுஞ்ஜெய மந்திரங்களும், யாகங்களும் செய்து எமபயத்தையும், தீவினைகளையும் போக்கிக் கொள்கிறார்கள். மரணபயம் போக்கும் வழிபாட்டை அதற் குரிய தலங்களில் நிறைவேற்றுவது கூடுதல் பலனைத் தரும்.

நரிக்குடி எமனேஸ்வரர்

ஆலங்குடி என்னும் குரு பரகாரத் தலத்துக்கு தெற்கே 3 கி.மீ தொலைவில் உள்ளது நரிக்குடி என்ற ஊர். இந்த தலத்தில் எமன் தர்ம நெறிப்படி ஆண்டு, சிவபிரானை வழிபட்டதால் ‘நெறிக்குடி’ என்று பெயர் பெற்றதாகவும், அதுவே மருவி நரிக்குடி என்றானதாகவும் கூறுகிறார்கள். பண்டைக் காலத்தில், யமபுரி, யமபட்டினம், யமனேஸ்வரம், யமதர்மபுரம், யதர்மபுரயி, தர்மதேசம் என்ற பெயர்களுடன் விளங்கியது.

மனிதர்கள் ஒவ்வொருவரும் வாழ்வில் செய்யும் பாவ புண்ணியங்களானது சூரிய சந்திரர்கள் சாட்சியாக எமதர்மராஜா முன்னிலையில் சித்ரகுப்தரால் ‘அகர சந்தானி’ என்ற ஏட்டில் பதியப்பட்டு வருவதாக ஐதீகம். இத்தகைய சித்ரகுப்தப் பதிவேடு அர்ப்பணிப்புத் தலங்களில் ஒன்றாக நரிக்குடியும் சொல்லப்படுகிறது.

இத்தலத்தில், கல்லால மரத்தடியில் சிவபெருமான் எழுந்தருளியிருந்த பண்டையக் கோவில் சிதிலமடைந்து விட்டதால், புதிதாக சுவாமி எமனேஸ்வரருக்கும், அம்பாள் எமனேஸ்வரிக்கும் தனித்தனி கருவறைகளுடன் விமானங்கள் கட்டி வழிபாடு நடைபெற்றது.

தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சண்டிகேஸ்வரர், காலபைரவர் மூர்த்தங்களும் உள்ளன. முன்பு எமனுக்கு தனிச் சன்னிதி இருந்ததாகவும் தற்போது புதிதாக உருவாக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.

இங்கே உள்ள எம தீர்த்தம் சிறப்பு வாய்ந்தது. நேபாள நாட்டில் ஓடும் புனித கண்டகி நதியின் சூட்சுமமான நீரோட்டப் பிணைப்பைக் கொண்டதால், எமனேஸ்வர ஆலய திருக்குளத் தீர்த்தத்துக்கு ‘கண்டகி தீர்த்தம்’ என்ற வேறு பெயரும் உண்டு.

சாளக்கிராம வடிவங்களை வைத்து பூஜை செய்வோர், இத்தல கண்டகி தீர்த்தத்தை எடுத்து எமனேஸ்வரரை அபிஷேகம் செய்து வழிபட்டால் நன்மை உண்டு என்று சொல்கிறார்கள்.

‘த்ர்யம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டிவர்த்தனம்
வர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முஷீய மாம்ருதாத்’

என்ற மிருத்யுஞ்ஜெய மந்திரத்தை உச்சரித்தபடி அமாவாசை, பவுர்ணமி தினங் களில் எமதீர்த்தக் குளத்தை வலம் வந்து, எமனேஸ்வர சுவாமி, எமனேஸ்வரி அம்பிகைக்கு அர்ச்சனை செய்கிறார்கள். மரணபயத்தைக் களையவும், விபத்தினைத் தடுக்கவும், தற்கொலை எண்ணத்தைப் மாற்றவும் இந்த வழிபாடு பெருந்துணை புரிவதாக சொல்லப்படுகிறது.

தெற்கு திசை தேவதையான எமதர்மராஜனுக்கு, அவருக்குரிய நீலநிற பருத்தித் துணியில், காய்ந்த கண்டங்கத்திரி வேர், அதிமதுரம், வசம்பு, சுக்கு துண்டுகளை வைத்து முடிச்சு போட்டு, எள்தீபத் திரிபோல உருவாக்கி நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் கலப்பில் தீபம் ஏற்றி வணங்குவது நல்லது. இவ்வாறு செய்தால், கண் திருஷ்டி, மன உளைச்சல், எமபயம் ஆகியவை அண்டாது என்பது ஆன்மிக அன்பர்களின் கருத்து.

அமைவிடம்

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்திற்கு வடக்கில் 3 கி.மீ தொலைவிலும், குடந்தையிலிருந்து ஆலங்குடி என்னும் குருஸ்தலம் தாண்டி 4 கி.மீ தூரத்திலும் உள்ளது நரிக்குடி திருத்தலம்.

-டாக்டர் ச.தமிழரசன், தஞ்சாவூர்.
ஐகோர்ட்டு உத்தரவின்படி பல்லாவரத்தில் புராதன பகுதி குறித்து அதிகாரிகள் ஆய்வு


ஐகோர்ட்டு உத்தரவின்படி பல்லாவரத்தில் உள்ள புராதன பகுதி குறித்து தொல்லியல் துறை, வருவாய் துறை அதிகாரிகள் இன்று முதல் 3 நாட்கள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

செப்டம்பர் 06, 2017, 03:00 AM

சென்னை,

சென்னை ஜமீன் பல்லாவரம், சுபம் நகரை சேர்ந்த ஆர்.எம்.பாவேந்தன் ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் ஜமீன் பல்லாவரம், பல்லாவரத்தில் சில பகுதிகள் உள்ளன. இதன் அருகே 100 மீட்டர் தூரத்துக்கு புதிய கட்டிடங்களை கட்டுவதற்கும், பழைய கட்டிடங்களை பழுது பார்க்கவும் நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. 101-வது மீட்டரில் இருந்து 200-வது மீட்டர் வரையிலான பகுதிகளில், தொல்லியல் துறையின் தடையில்லா சான்றிதழ் பெற்ற பின்னரே கட்டுமானத்திற்கு திட்ட அனுமதி வழங்கப்படுகிறது.

என்னுடைய வீட்டுமனை தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வரவில்லை. எனினும் வீடு கட்ட நகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்க மறுக்கிறது. எனவே, வீடு கட்டுவதற்கு அனுமதி வழங்கும்படி பல்லாவரம் நகராட்சி நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இதேபோல மேலும் பலர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்குகளை நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்து பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறியிருப்பதாவது:-

பல்லாவரம், ஜமீன் பல்லாவரத்தில் எந்த பகுதி தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் வரவேண்டும் என்பது தொடர்பாக தொல்லியல் துறை, வருவாய்துறை அதிகாரிகள் இணைந்து கூட்டு ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. ஆனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி இந்த ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட 57 ஏக்கரில், வெறும் 94 மீட்டர் அளவுக்கு மட்டுமே ஆய்வு செய்துள்ளதாகவும், மீதமுள்ள பகுதிகளை ஆய்வு செய்ய முடியவில்லை என்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த ஆய்வு என்பது அங்கு வசிக்கும் மக்களை அச்சுறுத்த வேண்டும் என்பதற்காக நடத்தப்படவில்லை. அவர்களது வீடுகள் இடிக்கப்படாது. அவர்களை அப்பகுதியில் இருந்து வெளியேற்ற போவதில்லை.

பாதுகாப்பு

எனவே, இனி அமைதி பேச்சுவார்த்தை நடத்தி பயனில்லை. எனவே பல்லாவரம், ஜமீன் பல்லாவரம் பகுதிகளில் இன்று (புதன்கிழமை) முதல் 8-ந் தேதி வரை தொல்லியல் துறை, வருவாய் துறை அதிகாரிகள் புராதன பகுதி குறித்து கூட்டாக ஆய்வு மேற்கொண்டு, உண்மை நிலவரத்தை கண்டறிய வேண்டும். இதற்கு வடக்கு மண்டல சரக ஐ.ஜி., காஞ்சீபுரம் போலீஸ் சூப்பிரண்டு, பரங்கிமலை துணை போலீஸ் கமிஷனர் ஆகியோர் தகுந்த பாதுகாப்பை வழங்கவேண்டும். ஆய்வு அறிக்கையை 14-ந் தேதி ஐகோர்ட்டில் தாக்கல் செய்யவேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவை தொடர்ந்து, பல்லாவரம், ஜமீன் பல்லாவரம் பகுதிகளில் போலீசாரின் உதவியுடன், வருவாய் துறை அதிகாரிகள் துண்டுபிரசுரங்களை நேற்று வினியோகம் செய்தனர். அதில், யாரையும் அச்சுறுத்துவதற்காக ஆய்வு நடைபெறவில்லை. யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இன்று முதல் 3 நாட்களுக்கு ஆய்வு நடத்துவதற்காக அப்பகுதியில் சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இன்று முதல் கட்டாயம் ஆகிறது 6 வகை விதிமீறல்களுக்கு போலீசார் அசல் ஓட்டுனர் உரிமம் கேட்பார்கள்



6 வகையான போக்குவரத்து விதிமீறல்களுக்கு போக்குவரத்து போலீசார் கண்டிப்பாக அசல் ஓட்டுனர் உரிமங்களை கேட்பார்கள் என்று போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் பெரியய்யா தெரிவித்தார்.

செப்டம்பர் 06, 2017, 04:30 AM
சென்னை,

தமிழகத்தில் இன்று (புதன் கிழமை) முதல் வாகன ஓட்டிகள், அசல் ஓட்டுனர் உரிமங்களை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு இன்று முதல் தீவிரமாக அமல்படுத்தப்படுகிறது. இதுதொடர்பாக சென்னை நகர போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் பெரியய்யா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுனர் உரிமங்களை கையில் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவால் பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை. இதற்காக போக்குவரத்து போலீசார் வாகன சோதனை நடத்தி, அசல் ஓட்டுனர் உரிமங்களை கேட்கமாட்டார்கள். வழக்கம்போல போக்குவரத்து விதி முறைகளை மீறினால் எடுக்கப்படும் நடவடிக்கையை மட்டுமே போலீசார் எடுப்பார்கள்.

ஹெல்மட் அணியாமல் செல்பவர்களிடமும், சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டிச்செல் பவர்களிடமும் அசல் ஓட்டுனர் உரிமங்களை கேட்கமாட்டார்கள். இதுபோன்ற குற்றங் களை செய்பவர்களிடம், விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படும். பின்னர் அந்த இடத்திலேயே அபராதம் விதிக்கப்படும்.

6 வகையான போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காத வாகன ஓட்டிகளிடம் மட்டும் அசல் ஓட்டுனர் உரிமங்களை போலீசார் கேட்பார்கள். அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், போதையில் வாகனம் ஓட்டுதல், செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுதல், சிக்னலை மதிக்காமல் செல்லுதல், அதிக பாரம் ஏற்றிச்செல்லுதல், சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றிச்செல்லுதல் போன்ற 6 விதி மீறல்கள் மட்டும் கடுமையான குற்றமாக கருதப்படும்.

இந்த குற்றங்களை செய்பவர்களிடம் போக்குவரத்து போலீசார் அசல் ஓட்டுனர் உரிமங்களை கேட்பார்கள். இந்த 6 விதிமீறல்களில் ஈடுபடுவோரின் அசல் ஓட்டுனர் உரிமங்கள் முதல்கட்டமாக 3 மாதம் தற்காலிகமாக ரத்துசெய்யப்படும். 2-வது முறை தவறு செய்தால் 6 மாதங்கள் ஓட்டுனர் உரிமங்கள் ரத்தாகும். தொடர்ந்து தவறு செய்பவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு தண்டனை பெற்றுத்தரப்படும்.

பொதுவாக அசல் ஓட்டுனர் உரிமங்களை வாகன ஓட்டிகள் வைத்திருப்பது நல்லது. விபத்துகளை தடுக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல் குழுவின் அறிவுரையின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் ‘ராக்கிங்’ கொடுமைகளை தடுக்க கல்லூரிகளில் புகார் பெட்டி கலெக்டர் உத்தரவு



காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் ‘ராக்கிங்’ கொடுமைகளை தடுக்க, பாதிக்கப்பட்ட மாணவர்கள் புகார் அளிக்கும் வகையில் புகார் மனு பெட்டி வைக்கும்படி கலெக்டர் உத்தரவிட்டார்.

செப்டம்பர் 06, 2017, 04:49 AM
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் இதர கல்வி நிறுவனங்களில் மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகள் பெரும்பாலானோர் ‘ராக்கிங்’ கொடுமைகளுக்கு ஆளாகின்றனர்.
இதை தடுக்க அந்தந்த கல்லூரி நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பொன்னையா பேசியதாவது:-

மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் ‘ராக்கிங்’ கொடுமைகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ‘ராக்கிங்’கால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், புகார் அளிக்க தயங்குவதால் அந்த மாணவர்கள் புகார் அளிக்க ஏதுவாக கல்லூரிகளில் புகார் மனு பெட்டிகள் வைக்க வேண்டும்.

மாணவர்கள் தங்கள் புகார்களை ‘ஆன்-லைன்’ மூலமும் தெரிவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உடனடியாக புகார் தெரிவிக்க தொலைப்பேசி எண்களையும் அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும். மாணவர்கள் இடையே ‘ராக்கிங்’ கொடுமையால் ஏற்படும் பாதிப்புகள், விபரீத நிகழ்வுகள் குறித்து எடுத்துரைக்க வேண்டும்.

அனைத்து மாணவர்களிடமும் கருத்து வேறுபாடு இன்றி ஒற்றுமையுடன், சகோதர மனப்பான்மையுடன், அன்புடன் பழக வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ‘ராக்கிங்’ நடைபெறாமல் தடுப்பதற்கு உரிய கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

கல்வி நிறுவனங்களில் கண்காணிப்பு குழுக்கள் அமைத்து தவறு செய்யும் மாணவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். போலீசாருக்கு தகவல் அளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பெற்றோரிகளிடம், ஆசிரியர்கள் கூட்டம் நடத்தும் போது போலீஸ் அதிகாரிகளையும் அழைக்க வேண்டும். விடுதிகளிலும், கல்வி நிறுவன பஸ்களிலும் கண்காணிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நூர்முகமது, மதுராந்தகம் சப்-கலெக்டர் கில்லி சந்திரசேகர், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வீரமணி, தாம்பரம் கோட்டாட்சியர் சந்திரசேகர், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் முகிலன்(காஞ்சீபுரம்), அண்ணாதுரை(வண்டலூர்) மற்றும் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், மருத்துவ கல்லூரிகள், செங்கல்பட்டு அரசு சட்ட கல்லூரி ஆகியவற்றின் முதல்வர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.
சென்னையில் பயிற்சி டாக்டர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அனிதாவுக்கு அஞ்சலி


எம்.பி.பி.எஸ். ‘சீட்’ கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவி அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி

செப்டம்பர் 06, 2017, 04:45 AM
சென்னை,

சென்னை மருத்துவ கல்லூரி வளாகத்தில் நேற்று மாலை நடந்தது. இதில் பட்ட மேற்படிப்பு மற்றும் பயிற்சி மருத்துவர்கள் கூட்டமைப்பை சேர்ந்த சுமார் 250-க்கும் மேற்பட்ட பயிற்சி டாக்டர்கள் பங்கேற்றனர்.

மருத்துவ கல்லூரி வளாகத்தில் இருந்து அனிதாவின் உருவப்படத்துடன் ஊர்வலமாக வந்த பயிற்சி டாக்டர்கள், மருத்துவ கல்லூரி நுழைவுவாயில் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி உயிரிழந்த மாணவி அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அருகே வைக்கப்பட்டிருந்த அனிதாவின் உருவப்படத்தின் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி, அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பயிற்சி டாக்டர்கள் அருள், நன்மாறன், கார்த்திகேயன் ஆகியோர் கூறுகையில், “மாணவி அனிதாவின் உயிரிழப்பு மருத்துவத்துறையை சேர்ந்த அனைவருக்கும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இனியாவது இந்த அரசு திருந்தவேண்டும். ‘நீட்’ தேர்வில் முழுமையான விலக்கு பெறுவதே, அனிதாவின் மரணத்துக்கு கிடைக்கும் உரிய நீதியாகும்”, என்று குறிப்பிட்டனர்.
தமிழிசைக்கு கொலை மிரட்டல்

பதிவு செய்த நாள்06செப்
2017
02:27




சென்னை : தமிழக, பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு, மொபைல் போனில் கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ள லோகையா காலனியில், தமிழக, பா.ஜ., தலைவர்தமிழிசை சவுந்தராஜன் வசிக்கிறார். சில நாட்களாக, அவரை மொபைல் போனில் தொடர்பு கொள்ளும் மர்ம நபர்கள் சிலர், அநாகரிகமாகபேசுவதோடு, கொலை மிரட்டலும் விடுத்து உள்ளனர்.

இது குறித்து, தமிழிசையின் வழக்கறிஞர் தங்க மணி, நேற்று விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். வழக்குபதிவு செய்த போலீசார்,புகாரில் கொடுக்கப்பட்டுள்ள மொபைல் போன் எண்கள் அடிப்படையில், மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

NEWS TODAY 27.07.2026