Wednesday, September 6, 2017

தாம்பரத்தில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏலச்சீட்டு நடத்தி ரூ.9 கோடி மோசடி: தம்பதியை கண்டுபிடித்தால் சன்மானம்

2017-09-05@ 02:00:31




தாம்பரம்: ஏலச்சீட்டு நடத்தி ரூ.9 கோடிக்கு மேல் மோசடி செய்து தலைமறைவாக உள்ள தம்பதியரை கண்டுபிடித்து கொடுத்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என தாம்பரம் பகுதி முழுவதும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ‘கடந்த ஓராண்டாக காணவில்லை. பலரது பல கோடி சீட்டு பணங்களை மோசடி செய்த தம்பதியர் சேகா (எ) ராஜசேகர் அவரது மனைவி மலர் இவர்களை பற்றி தகவல் கொடுத்தாலோ அல்லது கண்டுபிடித்து கொடுத்தாலோ தக்க சன்மானம் வழங்கப்படும். இப்படிக்கு பாதிக்கப்பட்ட மக்கள்’’ என தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் தாம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது: மேற்கு தாம்பரம், இரும்புலியூர், ஏரிக்கரை தெருவை சேர்ந்த சேகா (எ) ராஜசேகர் மற்றும் இவரது மனைவி மலர். இருவரும் ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி பண்டு சீட்டு நடத்தி சுமார் ரூ.9 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்களைப் பிடித்து அவர்களது பணத்தை மீட்டு தரவேண்டும். இவர்களை பற்றி பொதுமக்கள் யாருக்காவது தகவல் தெரிந்தால் உடனே தெரிவிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொச்சி விமான நிலையத்தில் ஓடு பாதையில் இருந்து விலகியது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்
2017-09-06@ 00:43:40




திருவனந்தபுரம்: கொச்சி விமான நிலையத்தில் நேற்று அதிகாலை தரையிறங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், ஓடு பாதையில் இருந்து விலகி, மழைநீர் வடிகால் கால்வாயில் இறங்கியது. இதில் விமான பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் போயிங் விமானம் அபுதாபியில் இருந்து கொச்சிக்கு நேற்றுஅதிகாலை 2.45 மணியளவில் வந்தது.

கன மழை காரணமாக ஓடுபாதையில் தண்ணீர் தேங்கியிருந்தது. விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம், நிறுத்தும் இடத்துக்கு திரும்பும்போது சறுக்கியது. அருகில் உள்ள மழைநீர் வடிகால்வாயில் விமானத்தின் முன்சக்கரம் இறங்கி சேதமடைந்தது. அந்த விமானத்தில் வந்த 102 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த விமான போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.
மூத்த குடிமக்களின் கட்டண சலுகையை பறிக்க ரயில்வே திட்டம்: முன்பதிவு படிவத்தில் தனிக்கேள்வி


2017-09-06@ 01:35:17




நாகர்கோவில்: மத்திய அரசு பல்வேறு துறைகளில் மானியத்தை ரத்து செய்து வருகிறது. ரயில்வேயில் செலவுகளை குறைத்து வருவாயை பெருக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மானியங்கள், சலுகைகளை குறைத்து வருவாயை பெருக்கும் நோக்கில் மூத்த குடிமக்களிடம் ரயில் பயண கட்டணத்தில் உள்ள சலுகையை பறிக்க திட்டமிட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கும் தற்போது மூத்த குடிமக்கள் என்ற முன்னுரிமையை வழங்கி அதற்கான சலுகையை ரயில்வே வழங்குகிறது. ஆண்களுக்கு 40 சதவீதமும், பெண்களுக்கு 50 சதவீதமும் மூத்த குடிமக்களுக்கு பயண கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது. 

இந்தநிலையில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்கின்ற மூத்த குடிமக்களிடம் நீங்கள் உங்களுக்கான கட்டண சலுகையை முழுவதுமாக அல்லது 50 சதவீதம் விட்டுக்ெகாடுக்கிறீர்களா? என்று கேள்வியுடன் முன்பதிவு படிவம் இடம்பெற உள்ளது.

இதன் மாதிரி படிவம் அனைத்து ரயில்வே கோட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சாப்ட்வேரில் இந்த மாற்றத்தை கொண்டுவர சென்டர் பார் ரயில்வே இன்பர்மேஷன் சிஸ்டம், ஐஆர்சிடிசி ஆகியவற்றுக்கு ரயில்வே அமைச்சகம் அறிவுரை வழங்கியுள்ளது. கடந்த ஜூலை 15ம் தேதி முதல் இதனை அமல்படுத்த திட்டமிடப்பட்டிருந்த போதிலும் அதனை செயல்படுத்த இயலவில்லை. படிவங்கள் அச்சடிப்பதில் உள்ள தாமதம் காரணமாக செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் தற்போது இதனை செயல்படுத்தும் முயற்சியில் ரயில்வே இறங்கியுள்ளது.

Use Of Aadhaar To Get Mobile SIM Connections: Legal Issues Involved | Live Law

Use Of Aadhaar To Get Mobile SIM Connections: Legal Issues Involved | Live Law: These days, telecom operators are relying on Aadhaar data for customer verification before activating SIM cards.  Reliance Jio, which is creating waves in the telecom field, is making use of this facility to its fullest potential. Operators like Airtel and Vodafone have also started to make use of Aadhaar date. Ever wondered how such private …

Can A Governor ‘Summon’ A Chief Minister? | Live Law

Can A Governor ‘Summon’ A Chief Minister? | Live Law: The Kerala Governor, P.Sathasivam tweeted on July 30 that he summoned the Chief Minister of Kerala, and the State Police Chief to know about action taken by State government on law and order issues in Thiruvananthapuram.   Another tweet from the Governor said that the Chief Minister, who met him at the Raj Bhavan, assured …

Upload Impugned Lower Court Orders Corresponding To Judgments On The Madras HC Website: CIC Recommends [Read Order] | Live Law

Upload Impugned Lower Court Orders Corresponding To Judgments On The Madras HC Website: CIC Recommends [Read Order] | Live Law: The Central Information Commission has recommended Madras High Court to upload impugned orders of lower courts and tribunals corresponding to the judgments available on its website. Information Commissioner Mr. R.K. Mathur observed that uploading the impugned orders would “help the general public, litigants and all other stake holders in linking the Hon’ble High Court’s orders/judgments …

Madras HC Directs State Election Commission To Conduct Local Body Elections By 17 November [Read Judgment] | Live Law

Madras HC Directs State Election Commission To Conduct Local Body Elections By 17 November [Read Judgment] | Live Law: The Madras High Court, on Monday, directed the Tamil Nadu State Election Commission (TNSEC) to conduct the local body elections by 17 November. The Bench comprising Chief Justice Indira Banerjee and Justice M. Sundar took note of the urgency of the situation, as a period of almost one year had elapsed from the date of …

NEWS TODAY 13.07.2026