Thursday, September 7, 2017

'மருத்துவ துறையில் சிறந்து விளங்குது தமிழகம்'
பதிவு செய்த நாள்  07செப்
2017
00:03




சென்னை: ''மருத்துவத் துறையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது; ஆனால், மருத்துவ ஆராய்ச்சியில் பின்தங்கி உள்ளது,'' என, தமிழ்நாடு, டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின், 29வது பட்டமளிப்பு விழாவில், மத்திய சுகாதாரத் துறை செயலர், சவுமியா சுவாமிநாதன் பேசினார்.

நிதியுதவி : தமிழ்நாடு, டாக்டர்எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில், 29வது பட்டமளிப்பு விழா, சென்னை பல்கலை நுாற்றாண்டு விழா அரங்கில் நேற்று நடந்தது. தமிழக கவர்னர் வித்யா சாகர் ராவ் தலைமை வகித்து, மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார்.

இதில், மத்திய சுகாதாரத் துறை செயலர்,சவுமியா சுவாமிநாதன் பேசியதாவது: தமிழகம் மருத்துவத் துறையில் சிறந்து விளங்குகிறது. தமிழகத்தின் வளர்ச்சியை, மற்ற மாநிலங்களும் உற்று நோக்குகின்றன. இருப்பினும், மருத்துவ ஆராய்ச்சியில், தமிழகம்மிகவும் பின்தங்கி உள்ளது; நாடு முழுவதும் இதே நிலையே உள்ளது. தேவையான உட்கட்டமைப்பு வசதிகள், மனிதவளம், தரவுகள் அனைத்தும் இருந்தும், ஆய்வில் கவனம் செலுத்த தயங்குகிறோம்.

நம்மை விட சிறிய நாடான இலங்கை, மருத்துவ ஆராய்ச்சி மற்றும் தரத்திலும் முன்னோடியாக திகழ்கிறது. சர்வதேச அளவில், தீர்வுகளை கண்டறியும் வகையில், நாம், ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்.இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், மூன்று முதல், ஆறு மாதங்கள் வரையிலான குறுகிய ஆய்வுகளுக்கு, நிதியுதவி அளிக்கிறது. இதை, தமிழக மாணவர்கள், சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

எதிர்பார்ப்பு : முதுநிலை மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை படிப்போர், ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வசதியாக, நாடு முழுவதும் இருந்து, 20 மருத்துவ கல்லுாரிகள், சர்வதேச அளவில் தரம் உயர்த்தப்பட உள்ளன. இதில், தமிழகத்தில்இருந்து, இரண்டுகல்லுாரிகளாவது இடம்பெறும் என, எதிர்பார்க்கப் படுகிறது.ஆராய்ச்சிகளை ஊக்கப்படுத்தும் வகையில், மருத்துவ கல்லுாரிகள் மற்றும் செவிலியர் கல்லுாரிகளில், ஆராய்ச்சிக்காக தனி துணை முதல்வர்களைநியமிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
ஒரிஜினல் லைசென்ஸ் தொலைந்தால் போலீசாரின் என்.ஓ.சி., தேவையில்லை : உடனே 'டூப்ளிகேட்' பெற ஏற்பாடு

பதிவு செய்த நாள்  06செப்
2017
23:50

திண்டுக்கல்: வாகன ஓட்டிகளின் ஒரிஜினல் 'ஓட்டுனர் உரிமம்' தொலைந்து போனால், மீண்டும் பெற போலீசின் தடையில்லா சான்று தேவையில்லை. ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மனுக் கொடுத்தால், 'டூப்ளிகேட்' வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வாகன ஓட்டிகள் ஒரிஜினல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் ஒரிஜினல் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் செல்வோர் மீது, போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பர்.தமிழக போக்குவரத்துத் துறை ஆணையர் தயானந்த கட்டாரியா வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: வாகன ஓட்டிகள் ஒரிஜினல் லைசென்ஸ் தொலைந்து போனால், போலீசாரின் தடையில்லா சான்று(என்.ஓ.சி.,) பெற வேண்டும். இதனால் தங்களின் பணிகள் பாதிப்பதாகவும், ஊதிய இழப்பு ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இனிமேல் ஒரிஜினல் உரிமம் தொலைந்தால் போலீசாரின் என்.ஓ.சி., தேவையில்லை. அதுபற்றி, போலீஸ்'ஆன்லைனில்' பதிவு செய்து ரசீது பெற்றால் போதும். இதை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் விண்ணப்பித்துடன் இணைத்து மூன்று நாளில் 'டூப்ளிகேட்' உரிமம் பெறலாம் என, தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்தன் கூறியதாவது: போக்குவரத்து ஆணையரின் உத்தரவு, வாகன ஓட்டிகளின் சிரமத்தை குறைக்கும். ஒரிஜினல் உரிமத்தின் ஜெராக்ஸ் காப்பியுடன், போலீசில் ஆன்லைனில் விண்ணப்பித்த ரசீதையும் இணைத்து விண்ணப்பிப்பது அவசியம். அதற்கு கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும், என்றார்.
உயர் மருத்துவம் நாளை கவுன்சிலிங்
பதிவு செய்த நாள்  06செப்
2017
23:28

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரிகளில், சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப்படும், முதுநிலை உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளான, டி.எம்., - எம்.சி.எச்., என்ற படிப்புகளுக்கு, 192 இடங்கள் உள்ளன. நாடு முழுவதும், 1,215 இடங்கள் உள்ளன. இதற்கான முதற்கட்ட கவுன்சிலிங்கில், 1,140 பேர் இடங்கள் பெற்றனர்.மீதமுள்ள இடங்கள் மற்றும் கல்லுாரியில் சேராதோர் இடங்களுக்கான கவுன்சிலிங், www.mcc.nic.in என்ற இணையதளத்தில், 'ஆன் லைன்' வழியே, நாளை நடைபெற உள்ளது.



நெல்லையில் பலத்த மழை

பதிவு செய்த நாள்06செப்
2017
22:25

திருநெல்வேலி: நெல்லையில் நேற்று பலத்த மழை பெய்தது. துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் பெய்த மழையில், குளம் உடைப்பெடுத்தது. நெல்லை, துாத்துக்குடியில், இரண்டு தினங்களாக, பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு, துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, கழுகுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில், பலத்த மழை பெய்தது. கழுகுமலை- - குமாரபுரம் இடையே, சாலையில் பாலம் அமைக்கும் பணி நடக்கிறது.
இதற்காக, தற்காலிகமாக போடப்பட்ட பாலத்தை உடைத்து, தண்ணீர் வெள்ளமாக சென்றது. கோவில்பட்டியை அடுத்துள்ள பாப்பான்குளத்தில் பெய்த பலத்த மழையால், அங்குள்ள குளம் உடைந்து, தண்ணீர் முழுவதும் வெளியேறியது. நெல்லையில், நேற்று மாலை பலத்த மழை பெய்தது. பேட்டை, என்.ஜி.ஓ., காலனி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில், மாலை, 4:30 முதல், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக, மழை பெய்தது.
சென்னையில் பரவலாக மழை
பதிவு செய்த நாள்

07செப்
2017
01:36



சென்னை: சென்னை - ராயப்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கிண்டி, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், வடபழனி, மீனம்பாக்கம் ஆகிய பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
நான் நலமுடன் இருக்கிறேன்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
பதிவு செய்த நாள்

06செப்
2017
22:32




சென்னை: நான் மிகவும் நலமுடன் இருக்கிறேன் என சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கூறி உள்ளார். தனக்கு உடல்நலமில்லை என வதந்திகள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வதந்திகள் பரவுவது வருத்தமளிக்கிறது. நான் நலமுடன் தான் இருக்கிறேன்.நான் வெறுமனே சளி என மருத்துவமனை செல்வதை சிலர் பார்த்தாலும் தீவிர பாதிப்படைந்திருப்பதாகவும், பாடல் வாய்ப்புகளை ரத்து செய்துவிட்டதாகவும் தவறான தகவல்களை வெளியிடுகிறார்கள். இதற்கான காரணம் என்ன என்பது எனக்கு தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
ராஜபாளையத்தில் மலையில் இருந்து பாறாங்கல் உருண்டு விழுந்தது


ராஜபாளையம் சஞ்சீவி மலையில் உள்ள பாறாங்கல் பெயர்ந்து கீழே உருண்டு விழுந்தது.

செப்டம்பர் 05, 2017, 04:00 AM

ராஜபாளையம்,

ராஜபாளையம் சஞ்சீவி மலையில் உள்ள பாறாங்கல் பெயர்ந்து கீழே உருண்டு விழுந்தது. அடிவாரத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையின் சுற்றுச்சுவரை உடைத்து உருண்டு நின்றது. இது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்ட்னர். சஞ்சீவி மலை உச்சியில் பெரிய அளவிலான பாறாங்கற்கள் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையை தொடர்ந்து உச்சியில் இருந்த கற்களில் ஒன்று உருண்டு அடிவாரத்தில் விழுந்துள்ளது. ஆள்நடமாட்டம் ஏதும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

NEWS TODAY 13.07.2026