Friday, September 8, 2017

Students, parents say wait for medical admission was more stressful than NEET

Sampath Kumar| TNN | Sep 5, 2017, 00:35 IST

Trichy: Waiting to get admission in a medical college was more stressful than preparing for NEET and awaiting results - this was what the new MBBS students in Trichy said on their first day in college.

All the 150 students who secured MBBS seats at KAP Viswanathan government medical college in Trichy were felicitated along with their parents as part of the fresher's day observed on Monday. This year was significant for the uncertainly that prevailed in medical admission over NEET. A deep sigh of relief was evident on many of the faces - both parents and students - seated in the seminar hall.

E Sarasu, a school teacher from Melmaruvathur was elated for being able to get her daughter admitted at the college. This will be her third child pursuing MBBS, one of her sons is a practising doctor in the USA while another son is a faculty at KAPV government college.

Though her daughter V Arivazhagi had all the resources to make it to the elite group of students securing medical seat, she said that the stress she had undergone was unmatched because of NEET. Arivazhagi had secured 296 out of 720 in NEET after scoring 1,172 in Plus-Two.

Many of those who got the seat were keen on getting it and left no stone unturned. R Shanmugam who came along with her daughter said that apart from admitting her daughter to the state board, he also got her daughter prepared for NEET.

"It had kept her under pressure over additional burden of learning the subjects, but that has paid off now. The struggle all through the admission has made the achievement even more special for her," he said.

D Venkatesh, a proud father of another medical student, said that he had options of having his son in Villupuram but KAPV medical college has more senior faculty members.

Though the students have won the race by getting into the medical college, the real race has just begun, said faculty members. "During my college days, we had 18 months to learn subjects like anatomy, physiology and biochemistry in the first year, but the students who have joined now have just nine months left because of delay in admissions," said deputy director of medical education Dr R Geetha.

KAPV Medical college Dean G Anitha asked the students to give back to the society after completing the course as they were going to study in the subsidised seats from the money of the tax payer.
Railway gives part refund to 50 who missed connecting train

tnn | Sep 7, 2017, 01:14 IST

Trichy: Fifty passengers bound for Manamadurai on the Trichy-Manamadurai DEMU, who were arriving at the station by the Mannargudi-Trichy passenger train, had a harrowing experience on Wednesday as the delay by railway caused them to miss the train to Manamadurai. Furthermore, they were only issued a partial refund.

The irked passengers were issued the partial refund after the passengers created an issue with the station manager for a while.

According to the railway authorities, 50 passengers arriving on Train No 76805 Mannargudi-Trichy train had reserved tickets on Train No 76807 Trichy-Manamadurai train which departs from Trichy at 9.55am. However, the Mannargudi train reached Trichy only at 10.30am, against it scheduled time 9.10am.

When the passengers reached Trichy railway junction, they were annoyed at knowing that Train No 76807 Trichy-Manamadurai train had already left.

Irked by the delay and missing their train, the passengers took up the issue with the station manager. The railway authorities pacified the irked passengers by refunding a partial fare of the ticket. Following this they dispersed from the station manager's room. The incident created commotion at the station for some time, sources said.

MBBS admissions draw to a close, finally

TNN | Updated: Sep 7, 2017, 23:54 IST

Chennai: After eight months of battle against NEET-based admission for MBBS courses, all medical colleges in Tamil Nadu formally closed admissions on Thursday with last minute rush to pay fees in deemed universities across the state.

While admission to government and self-financing medical colleges ended on September 4, admissions to Deemed universities ended on Thursday with almost all seats taken.

Last month nearly 80% of the seats in eight deemed universities of the state, that charge up to Rs 23 lakh per year, were vacant after two rounds of online counselling and a mop-up round by the Directorate General of Health Services. The Supreme Court then permitted the universities to fill in the seats using NEET-based rank list drawn up by the central agency.

Parents of students from state including Andhra Pradesh, Telangana, Bihar, Uttar Pradesh and Gujarat rushed to apply to private universities in the state. Some students from within the state who were not allotted seats through the single window counselling conducted by the state government were also given seats. "We have completed admissions and we are opening college on Friday with a white coat ceremony. Students will be welcomed by the faculty members with a white coat," said Saveetha Medical College dean Dr T Gunasagaran.

While the SRM Medical College will open on Monday, the new batch of students who joined Sri Ramachandra University will start college, which opened on August 21, from Friday.

ராணுவம் நவீனமயம்; ஊழியர் நலனுக்கு முக்கியத்துவம்: பாதுகாப்புத் துறை அமைச்சர் உறுதி


By DIN  |   Published on : 08th September 2017 04:56 AM  |   
rajnath-sing
ராணுவ தளவாட உற்பத்தித் துறை சார்பில் தில்லியில் நடைபெற்ற கண்காட்சியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

சவால்களை எதிர்கொள்ளும் வகையில் ராணுவம் நவீனமயமாக்கப்படும் என்றும் முப்படையினரின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் பாதுகாப்புத் துறை அமைச்சராக வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட நிர்மலா சீதாராமன் (55) உறுதிபடத் தெரிவித்தார்.
பாதுகாப்புத் துறையில் உள்ள பிரச்னைகளுக்குத் தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அவர் கூறினார்.
நாட்டின் புதிய பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பதவியேற்ற நிர்மலா சீதாராமன், தில்லியில் உள்ள அவரது அலுவலகத்துக்கு வியாழக்கிழமை வந்தார். அங்கு அவரை சக அமைச்சர்களும், உயரதிகாரிகளும் வரவேற்றனர். அப்போது சிறப்புப் பூஜைகளையும் புரோகிதர்கள் நடத்தினர். அதன் பின்னர் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு பாதுகாப்புத் துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் செயலாற்றத் தொடங்கினார்.
இதன் மூலம் இந்திரா காந்திக்குப் பிறகு அப்பொறுப்பை வகிக்கும் இரண்டாவது பெண்மணி என்ற பெருமையை அவர் பெறுகிறார்.
முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) பதவி வகித்து வந்த நிர்மலா சீதாராமனுக்கு கேபினட் அந்தஸ்து வழங்கப்பட்டது. அதுவும், முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்புத் துறை இலாகா அவருக்கு அளிக்கப்பட்டது.
சவால் மிகுந்த பாதுகாப்புத் துறை அமைச்சகமானது சுதந்திர இந்தியாவில் பெரும்பாலும் ஆண்களின் வசமே இருந்து வந்தது. நாட்டின் இரும்புப் பெண் என அழைக்கப்பட்ட மறைந்த பிரதமர் இந்திரா காந்தி மட்டுமே அந்த வரலாற்றை மாற்றி தன்னிடம் அந்தத் துறையை வைத்துக் கொண்டார்.
அவரது மறைவுக்குப் பிறகு 33 ஆண்டுகளாக அப்பதவியை ஆண் அமைச்சர்களே வகித்து வந்தனர். இந்நிலையில்தான் நிர்மலா சீதாராமனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் பதவியை மத்திய பாஜக அரசு வழங்கியது. இந்திராவைப் பொருத்தவரை வேறு சில துறைகளுடன் சேர்த்து கூடுதல் பொறுப்பாகவே பாதுகாப்புத் துறையை கவனித்து வந்தார். ஆனால், நிர்மலா சீதாராமனுக்கு வேறு எந்தத் துறைகளும் வழங்கப்படாமல் பாதுகாப்புத் துறைப் பொறுப்பு மட்டும் பிரத்யேகமாக அளிக்கப்பட்டுள்ளது.
நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்கும்போது மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடனிருந்தார். அப்போது தாம் கூடுதலாக வகித்து வந்த பாதுகாப்புத் துறை பொறுப்புகளை நிர்மலா சீதாராமனிடம் அவர் ஒப்படைத்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
பாதுகாப்புப் படைகளை எப்போதும் தயார் நிலையில் வைத்திருப்பதற்கு முன்னுரிமை அளிக்கப் போகிறேன். அவர்களுக்குத் தேவையான ஆயுதங்கள், தளவாடங்கள் மற்றும் வசதிகளை அளிப்பதற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும். பாதுகாப்புத் துறையினரின் நீண்ட கால பிரச்னைகள் அனைத்துக்கும் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக பிரதமர் மற்றும் மத்திய அமைச்சரவையுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கவும் திட்டமிட்டுள்ளேன். ராணுவத் தளவாடங்கள் அனைத்தையும் 'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
ரூ.13 கோடி ஒதுக்கீடு: பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமன், முதல் பணியாக ஓய்வுபெற்ற ராணுவத்தினர் மற்றும் அவரது குடும்பத்தினரின் நலனுக்காக ரூ.13 கோடி நிதி ஒதுக்குவதற்கான கோப்பில் கையெழுத்திட்டார். இதன் மூலம் 8,685 ராணுவத்தினர் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் பயனடைவர் எனத் தெரிகிறது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த நிர்மலா சீதாராமன், 'கடுமையான போராட்டச் சூழலிலும், சவால் நிறைந்த எல்லைப் பகுதிகளிலும் நாட்டைக் காப்பதற்காக அயராது பாடுபடும் ராணுவத்தினரின் நலன்களைக் காப்பதை உறுதி செய்ய வேண்டும்' என்றார்.

அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்: தலைமைச் செயலர் வேண்டுகோள்


By DIN  |   Published on : 08th September 2017 04:52 AM  |   
kirija
Ads by Kiosked
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவையேற்று, அரசு ஊழியர்கள் -ஆசிரியர்கள், வேலை நிறுத்தத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும் என்று தமிழக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நடத்தி வரும் வேலைநிறுத்தம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வேலைநிறுத்தத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவையேற்று, அரசு ஊழியர்கள் -ஆசிரியர்கள் வெள்ளிக்கிழமை (செப்.8) முதல் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'நீட்' தேர்வுக்கு எதிர்ப்பு: அரசு பள்ளி ஆசிரியை ராஜினாமா
பதிவு செய்த நாள்08செப்
2017
00:43




விழுப்புரம்: 'நீட்' தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்ட அரசுப் பள்ளி ஆசிரியை, தன் வேலையை ராஜினாமா செய்தார். இது, வெறும் வாய் சவுடால் விடும் ஆளுங்கட்சியினர், அரசியல்வாதிகளுக்கு சவால்விடுவதாக உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

போலீசார் கெஞ்சல் : விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் அருகே வைரபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின், இடைநிலை ஆசிரியை, சபரிமாலா, 34. இவர், நேற்று முன்தினம் காலை, 9:30 மணிக்கு, தான் பணியாற்றும் பள்ளி எதிரில், அதே பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயிலும், தன் மகனோடு, தர்ணா போராட்டம் நடத்தினார். 'நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்; இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கல்வி முறையை அமல்படுத்த வேண்டும்' என வலியுறுத்தி தர்ணா செய்தார். தகவலறிந்து வந்த போலீசார் கெஞ்சியதால், சபரிமாலா தன் போராட்டத்தை கைவிட்டார். இந்நிலையில், நேற்று காலை, 11:00 மணிக்கு, விழுப்புரத்தில் உள்ள, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில், தொடக்கக் கல்வி அலுவலர் மதிவாணனைசந்தித்து, தன் வேலையை ராஜினாமா செய்வதாக, ஆசிரியை சபரி மாலா கடிதம் கொடுத்தார்.

கடிதத்தில், 'நான், 2002 முதல் ஆசிரியையாக, தமிழக கல்வித் துறையில் பணிபுரிந்து வருகிறேன். ஏற்றத்தாழ்வற்ற சமூகம் அமைய வேண்டும் என்பதற்காக, என் மகனை அரசு பள்ளியில் பயில வைக்கிறேன். 'நாடு முழுவதும் ஒரே கல்வித் திட்டம் இல்லாமல், ஒரே தேர்வு முறை என்பது எப்படி நியாயமாகும் என்ற நோக்கத்தில், போராட்டத்தை துவங்கினேன்.
'கல்வி பிரச்னைக்காக ஆசிரியர் குரல் எழுப்பி போராடக் கூடாது என கூறியதால், மன வேதனையில், என் பணியை ராஜினாமா செய்கிறேன்' என, தெரிவித்துள்ளார்.

ராஜினாமா கடிதத்தை பெற்றுக்கொண்ட தொடக்க கல்வி அலுவலர், பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குனருக்கு கடிதத்தை அனுப்பி வைப்பதாகவும், அவர் உத்தரவையடுத்து, ராஜினாமா கடிதம் குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மன வேதனை : ராஜினாமா குறித்து ஆசிரியை சபரிமாலா நிருபர்களிடம் கூறியதாவது:

சிறந்த மாணவர்களை உருவாக்கும் நோக்கில்தான், ஆசிரியை பணியில் சேர்ந்தேன். என் பெற்றோரும் என்னை கஷ்டப்பட்டுதான் படிக்க வைத்தனர். அதிக மதிப்பெண் பெற்ற ஒரு மாணவி, மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்காமல் இறந்துள்ளார். இதற்கு காரணமான, நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி, நான் துவக்கிய போராட்டத்திற்கு, அரசு பணி தடையாக இருப்பதால் மன வேதனையோடு ராஜினாமா செய்துள்ளேன்.இதற்கடுத்து, மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு சென்று, 'கலாம் போல் ஆகலாம்' மாணவர்கள் இயக்கம் அமைத்து, சமூகப் பணி செய்ய உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். 'நீட்' தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, அரசு பள்ளி ஆசிரியை ராஜினாமா செய்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாடம் : மக்கள் பிரதிநிதிகளாக உள்ளவர்கள் தங்கள் பதவியை தக்க வைப்பதற்காக, பல ஆண்டுகளாக, 'நீட்' விஷயத்தில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வந்தனர். தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என்பதற்காக தங்கள் பதவியை இழக்க முன்வரவில்லை. இந்நிலையில், ஆசிரியைஒருவர், ஆட்சியாளர்களுக்கும், அரசியல்வாதி களுக்கும் பாடம் கபித்துள்ளதாக, சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்துள்ளனர்.



செல்ல நாய்க்காக எம்.பி.பி.எஸ்., படிப்பை துறந்தவருக்கு 21 பதக்கம்

பதிவு செய்த நாள்
செப் 08,2017 01:02




தான் வளர்த்த நாய்க்குட்டியின் மீதான அன்பால், மருத்துவ படிப்பை துறந்து, கால்நடை படிப்பில் சேர்ந்த மாணவர், 21 பதக்கங்களை பெற்று, அசத்தி உள்ளார்.

தமிழ்நாடு, கால்நடை மருத்துவ பல்கலையில், பட்டமளிப்பு விழா, சென்னையில் நேற்று நடந்தது. அதில், 175 மாணவியர் உட்பட, 257 பேருக்கு, கவர்னர் வித்யாசாகர் ராவ், பட்டங்களை வழங்கினார். இளநிலை கால்நடை படிப்பில் அதிகபட்சமாக, 214 பேர் பட்டம் பெற்றனர்.

பல்கலை துணைவேந்தர், திலகர் பேசுகையில், ''இந்த ஆண்டு, 320 இளநிலை கால்நடை மருத்துவ படிப்புக்கு, 15 ஆயிரத்து, 869 விண்ணப்பங்கள் வந்தன. இதில் இருந்து, இப்படிப்புக்கு மவுசு அதிகரித்துள்ளதை அறியலாம்,'' என்றார்.

இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக துணைத் தலைமை இயக்குனர், நரேந்திர சிங் ரத்தோர் பேசுகையில், ''பால், கோழி, இறைச்சி தொழில்களை துவங்குவது பிரபலமாகி வருகிறது. 

''நாட்டில் பால் உற்பத்தி அதிகரித்தாலும், கறவை மாடுகளின் தனித்திறன் குறைந்து வருகிறது. எனவே, பட்டம் பெற்றுச் செல்லும் உங்களின் சேவை, அதிகம் தேவை,'' என்றார்.

பல்கலையில் சிறந்து விளங்கியோருக்கு, 86 பதக்கங்கள் வழங்கப்பட்டன. இதில், ஈரோடு மாவட்டம், சென்னிமலையை சேர்ந்த, நெசவு ஆலை உரிமையாளரின் மகன், ராஜமாணிக்கம், 21 பதக்கங்களை வென்றார். முதுகலை பயிலும் அவர் கூறியதாவது:

எனக்கு, எம்.பி.பி.எஸ்., படிப்பில், இடம் கிடைத்தது. நான், சிறுவயதில், 'ஜிம்மி' என்ற நாய் வளர்த்தேன். அதன் மீது ஏற்பட்ட பிரியத்தால், கால்நடைகளுக்கு உதவ முடிவு செய்தேன்.

அதனால், மருத்துவ படிப்பில் சேராமல், கால்நடை மருத்துவத்தில் சேர்ந்தேன். எதிர்காலத்தில், கால்நடைகளுக்கு, ரத்தசோகை நோயை குணப்படுத்த ஆய்வு செய்வேன்.இவ்வாறு அவர் கூறினார்.

கால்நடை அமைச்சர் ராதாகிருஷ்ணன், துறை செயலர், டாக்டர் கோபால், கால்நடை இயக்குனர், செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

- நமது நிருபர் -

NEWS TODAY 15.07.2026