Thursday, September 14, 2017

Medico uses app to mask number, abuses teachers

Shimona Kanwar| TNN | Sep 12, 2017, 00:49 IST

Chandigarh: A third-year MBBS student at Government Medical College and Hospital (GMCH), Sector 32, was recently caught using a mobile application that can flash a different phone number while making a call and change the voice of the caller. The student had misused this application and abused his teachers. He also tried to blackmail his junior. But she recognised him and reported the matter to director-principal Dr A K Janmeja. The student is the son of a well-known city-based doctor.

The case has been forwarded by the complainant to cyber cell. The police are also checking if the phones were hacked, said Harinder Singh Sekhon, in-charge, cyber cell, Chandigarh Police. "We are examining the case. Earlier, there was an app which used proxy settings of someone else. It is no more available."

However, students in the medical college have informed that teachers that the accused used a caller mask app available in the US for 300$.

This is the first incident of its kind to have taken place in the medical college. "We are supposed to have ethics as an important aspect in our profession. If this is what students have started doing now, what kind of doctors will they become?" said a senior doctor.

Sources in the police said the student had used the app to abuse a demonstrator (tutor). The number which flashed on his mobile screen was of a senior faculty member. "The student continued to make such calls and used one faculty against the other by calling names. Humiliated by this act, when one of the doctors spoke to the caller (whose number flashed on his cell), it was revealed that someone was playing a prank," said a doctor at GMCH.

The identity of the student was revealed when the junior student recognised the voice despite its modification. "The student has not even been reprimanded or asked for an explanation. The student confessed and wrote a letter of apology to the director-principal. But nothing has been done so far. Surprisingly, one of the doctors who was abused is a member of the faculty welfare committee," said a doctor.

When Dr Janmeja was contacted, he said, "We will look into the matter and go by the set procedures. An inquiry has already been marked."

MEDICAL

Read more at Medical Dialogues: High Court to Medanta- How many poor patients have you treated?? 

செயலி புதிது: மாணவர்களுக்கான செயலி

Published : 08 Sep 2017 10:07 IST

சைபர்சிம்மன்





மாணவர்கள் ஸ்மார்ட்போன்களைப் பொழுதுபோக்கு நோக்கில் மட்டும் பயன்படுத்துவதில்லை. கல்வி தொடர்பான பணிகளுக்கும் பயன்படுத்தலாம். இதற்கு உதவ எண்ணற்ற செயலிகள் இருக்கின்றன. இதில் டைம்டேபிள் செயலியையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.


இந்தச் செயலி வகுப்பு பாட அட்டவனையைக் குறித்து வைத்துக்கொண்டு, வகுப்புகளை மறக்காமல் இருக்க உதவுகிறது. இதில் வகுப்புகள் நடைபெறும் நேரத்தை குறிப்பிடுவதோடு, மாணவர்கள் தங்களுக்கு தரப்படும் வீட்டுப்பாடங்கள், விடுமுறை நாட்கள் போன்றவற்றையும் குறித்துக்கொள்ளலாம். வகுப்பில் எடுக்கும் குறிப்புகளையும் இதில் சேமிக்கலாம். முக்கியமாக வகுப்பு நடந்துகொண்டிருக்கும்போது போனில் அழைப்பு வந்தால், அதை மவுனமாக்கும் வசதியும் இருக்கிறது.

பள்ளி அல்லது கல்லூரி பாடத்திட்டங்களை நிர்வகிப்பதில் இந்தச் செயலி மிகவும் உதவியாக இருக்கும். எந்தச் சாதனத்திலிருந்து வேண்டுமானாலும் இதில் உள்ள தகவல்களை அணுகலாம்.

மேலும் தகவல்களுக்கு: https://play.google.com/store/apps/details?id=com.gabrielittner.timetable&hl=en_GB
அடேங்கப்பா ‘அவேர்னஸ் அப்பா’- சிலிர்க்க வைக்கும் சிவசுப்பிரமணியம்!

Published : 14 Sep 2017 09:56 IST

கா.சு.வேலாயுதன்



சிவசுப்பிரமணியம்


சிவசுப்பிரமணியத்தின் பிரச்சார வாகனம்

திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம் உள்ளிட்ட நகரங்களில், மக்கள் கூடும் இடங்களில் அடிக்கடி அவர் தென்படுவார். இங்கு மட்டுமல்ல, தமிழ்நாடு, புதுச் சேரியின் பிற முக்கிய நகரங்களிலும் அநேகம் பேர் இந்த ‘அவேர்னஸ் அப்பா’வை பார்த்திருக்கலாம். அண்மையில் ஒருநாள் நாமும் அப்படித்தான் கோவை ரயில்வே ஸ்டேஷன் அருகில் அவரைப் பார்த்தோம்.

அவரது மொபெட் முழுக்க, ’கண் தானம் செய்யுங்கள்.. ரத்த தானம் செய்வோம்.. புற்றுநோய்க்கு உதவ முடி தானம் செய்வீர்..’ என ஏகத்துக்கும் விழிப்புணர்வு வாசகங்கள். அவரது சட்டை, பேன்ட், தொப்பி அனைத்திலும் இதே போன்ற வாசகங்கள் இருக்கவும் நாம் அவரைச் சற்றே வித்தியாசமாகப் பார்த்தோம்.

எதுவும் எனதில்லை

அவ்வளவுதான்.. சம்மனே இல்லாமல் அவரே ஆஜரானார். ”என்ன சார் ஒரு மாதிரியா பாக்கறீங்க, அது ஒண்ணுமில்லீங்க.. ‘கண் தானம், உடல் தானம், கூந்தல் தானம், உடல் உறுப்பு தானம், ரத்த தானம் செய் யுங்க’ன்னு ஆளாளுக்கு எப்படியெப்படியோ பிரச்சாரம் செய்வாங்க. அதையேதான் நான் இப்படி என்னோட நடை, உடை, வாகனம் என அனைத்திலும் வித்தியாசமான முறையில பிரச்சாரம் செஞ்சுட்டுத் திரியறேன்!” என்று கடகடத்தவர், தொடர்ந்தும் தானே பேசினார்.

”இப்படி வாசகங்கள் பிரின்ட் செஞ்ச சட்டை பேன்ட் மட்டும் எங்கிட்ட 10 செட் இருக்கு. அதோட, நான் சாப்பிடுற தட்டு, தண்ணி டம்ளர், போர்வை, விழிப்புணர்வு பிரச்சார நோட்டீஸ்கள், உடல் உறுப்பு தானம் செய்யுறதுக்கான விண்ணப்பங்கள் எல்லாமே இந்தப் பெட்டிக்குள்ளதான் இருக்கு. இப்போதைக்கு எனக்கிருக்கிற ஒரே சொத்து இந்தப் பெட்டி மட்டும்தான். இந்தப் பெட்டி, இதுக்குள்ள இருக்கும் பொருட்கள், இந்த மொபெட், அட, இந்த செல்போன்கூட நான் வாங்கினது இல்லீங்க; எல்லாமே என்னோட பிரச்சாரத்தை பார்த்துட்டு மத்தவங்களா வாங்கித் தந்தது.

அவேர்னஸ் அப்பா

இதா.. இந்த நேரச் சாப்பாட்டையே எடுத்துக்குங்க. இப்ப நீங்க சாப்பாடு வாங்கிக் குடுத்தா எனக்கு உணவு வழங்கியவங்க லிஸ்ட்ல நீங்க 1,261-வது நபரா வருவீங்க. அத அப்படியே ‘வாட்ஸ் அப்’லயும் போட்டுருவேன். பெட்ரோல் பங்க்ல இலவசமா பெட்ரோல் அடிச்சா, அவங்க பேரையும் ‘வாட்ஸ் அப்’ல போட்டுருவேன்.” என்று சொல்லிவிட்டுச் சிரிக்கிறார் சிவசுப்பிரமணியம் என்ற இந்த அவேர்னஸ் அப்பா !

‘அவேர்னஸ் அப்பா’ என்று கொங்கு இளைஞர்களால் கொண்டாடப்படும் இவரது சொந்த ஊர் நாமக்கல். எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர், சிறுவயதிலேயே பிழைப்புக்காக திருப்பூர் வந்தவர். தொடக்கத்தில், திருப்பூரில் சைக்கிள் கடை வைத்திருந்தவர், பிறகு 20 ஆண்டுகள் பனியன் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்தார். கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர் என்பதால் இயலாதவர்களுக்கு உதவும் சுபாவம் இவருக்குள் இயல்பாகவே இருந்தது.

2007-ல் புறப்பட்டோம்

கடந்த 20 ஆண்டுகளில் 27 முறை ரத்த தானம் செய்திருக்கும் 58 வயது சிவசுப்பிரமணியம் தன்னைப் பற்றிப் பேசுகையில், “என்னோட மூன்று பெண் பிள்ளைகளையும் கட்டிக்குடுத்து 4 பேத்திகளும் வந்தாச்சு. இப்படியே இருந்து என்ன செய்ய.. நானும் என் மனைவியும் ராணுவ வீரர்களுக்காக உடல் உறுப்பு தானம் செய்தவங்க. அதையே பிரச்சாரம் பண்ணி மக்களிடம் உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்னுதான் 2007-ல் நானும் அவளும் புறப்பட்டோம்.

அந்த சமயத்துல, ஒருத்தர் எங்களுக்கு நோட்டீஸ் அச்சடித்துக் கொடுத்தார். டெய்லர் ஒருத்தர் இந்த மாதிரி டிரெஸ் தைச்சுக் கொடுத்தார். பனியன் பிரிண்டிங் வெச்சிருக்கிறவர், இந்த வாசகங்களை டிரெஸ்ஸில் பிரிண்ட் பண் ணிக் கொடுத்தார். நாங்க பிரச்சாரத்தை ஆரம்பிச்சோம். இடையில், நுரையீரல் புற்று நோயால பாதிக்கப்பட்ட எம் மனைவி ஜானகி 3 வருஷம் முன்னே என்ன விட்டுப் போயிட்டா. அவளோட கண்களை மட்டும்தான் தானமா கொடுக்க முடிஞ்சுது” என்று வேதனையை வெளிப்படுத்தியவர், தற்போதைய தனது பிரச்சார பயணம் குறித்தும் பேசினார்.


வண்டி போன போக்குல..

“வண்டி போன போக்குல ஊர், ஊரா போறேன். போலியோ பாதிப்பு, மது அருந்துவதால், புகைபிடிப்பதால் ஏற்படும் தீமைகள் பத்தியெல்லாம் விழிப்புணர்வு நோட்டீஸ் களைக் கொடுக்கிறேன். கண் தான, உடல் தான, உடல் உறுப்பு தான விண்ணப்பங்களையும் கேக்குறவங்களுக்குக் கொடுப்பேன். அனைவரும் ஏன் உடல் தானம், உறுப்பு தானம், கண் தானம் செய்யவேண்டும் என்பது குறித்தும் பிரச்சாரம் செய்வேன்.

முன்பு, நடந்தே செல்வேன். அப்புறம் சைக்கிள் கிடைச்சுது. ஒரு வருஷமாத்தான் இதோ இந்த மொபெட்ல போறேன். தமிழகம், புதுச்சேரியில் என்னோட வண்டி போகாத மாவட்டமே இருக்காது. போற இடங்கள்ல, ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளையும் பார்ப்பேன். பல இடங்கள்ல அவங்களே என்னோட பிரச்சாரப் பயணத்தை வாழ்த்தி வழியனுப்பியும் வெச்சிருக்காங்க.

பயணத்துல பெருசா திட்டமிடலெல்லாம் இருக்காது. கிடைக்கிற இடத்துல தங்கிக்குவேன். பக்கத்துல போலீஸ் ஸ்டேஷன் இருந்தா அங்கேயும் அனுமதி கேட்டுப் படுத்துக்குவேன். எதுவும் கிடைக்கலியா.. இருக்கவே இருக்கு பிளாட்பாரம்!” என்று சொல்லிவிட்டு வண்டியைக் கிளப்பினார் சிவசுப்பிரமணியம். அவரிடம் ஒரு வேளை சாப்பாட்டுக்கான ஒரு சிறு தொகையைக் கொடுத்துவிட்டு நாமும் நகர்ந்தோம்.

அடுத்த சில நிமிடங்களில், ‘இன்று மதிய உணவு அளித்தவர்’ என நமது பெயரைக் குறிப்பிட்டு ‘வாட்ஸ் அப்’பில் குறுஞ் செய்தியை தட்டி விட்டிருந்தார் வித்தியாசமான இந்த அவேர்னஸ் அப்பா!
தேனீர் கவிதைகள்: தொலைந்து போன நாட்கள்

Published : 14 Sep 2017 09:54 IST

மு.செல்லா




ஓவியம்: வெங்கி


எப்படி இழந்தோம்

என்பது தெரியாமலேயே


தொலைந்து போய்விட்டன

அந்த இனிய நாட்கள்.

கணக்கன் தோட்டத்து

உப்புநீரில் குளித்தால்

மேனி கருக்குமென்ற

அம்மாவின் அதட்டலுக்கு அஞ்சி

வியாபாரி தோட்டத்து

நன்னீர் கிணறு அதிர

குதித்தாடிய ஈர நாட்கள்...

ஓடைநீர் ஊற்றில் சிக்கிய

உறுமீனுக்காய்த் துள்ளி

விலாங்கு மீன் வேட்டைக்காரனாய்ப்

பீற்றிக்கொண்ட நாட்கள்...

கவட்டைக் கொம்பொடிய

நுங்கு மட்டை வண்டியுருட்டி

சக நண்பர்களுடன்

தோற்றும் ஜெயித்தும்

விளையாடிய நாட்கள்...

மொட்டுவிட்ட

தட்டாஞ்செடிகளில்

பிஞ்சுவிட்டுக் காய்க்கும்வரை

காத்துக் கிடந்து

நாவூறப் பறித்து

ருசித்த நாட்கள்...

நினைத்தாலே நினைவுகளில்

ஈரம் சுரக்கும்

பிள்ளைப் பிராய நாட்களை

தொலைத்துவிட்டு

*கைகளை விரித்தபடி

ஓடிவரும் குழந்தைகளை

வெறுமை பூசிய நாட்களால்

வாரியணைத்துக் கொண்டிருக்கிறோம்

இப்போது!

மருத்துவர்கள் ஆவதற்காக மட்டுமா மாணவர்கள் போராடுகிறார்கள்?

Published : 14 Sep 2017 09:05 IST

தங்க. ஜெயராமன்





நீட் தேர்வை விலக்கிக்கொண்டால் தாங்களும் மருத்துவர்களாகிவிடலாம் என்ற தன்னலச் சிந்தனையில் மாணவர்கள் போராடுகிறார்கள் என்றே ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள். அது தவறு. மருத்துவர்களுக்குப் பொதுவாகவே இருக்கும் சமூக அந்தஸ்து என்ற மாயை மாணவ சமுதாயத்தைக் கவர்ந்திருக்கிறது என்றும் நினைத்து சமூகவியலின் கற்பனை நுட்பங்களில் இறங்கக் கூடாது. மாணவர்களின் நியாய உணர்வு புண்பட்டிருக்கிறது. இதைப் புரிந்துகொள்ளாதவர்கள் நீட் தேர்வின் புள்ளிவிவரங்களை வைத்து அது செய்யவிருக்கும் நன்மைகளைப் பேசிக்கொண்டிருப்பார்கள். பொதுத்தேர்வில் நூற்றுக்குத் தொண்ணூற்றெட்டு மதிப்பெண்கள் பெற்ற மாணவி மற்றொரு போட்டித் தேர்வு எழுதித் தன் தகுதியை மூதலிக்க வேண்டுமென்றால் மாணவர்களின் நியாய உணர்வு புண்பட்டுத்தான் போகும். நீட் தேர்வு அந்த மாணவிக்கு வைத்த தேர்வு அல்ல. அவர் அதற்கு முன்பே எழுதிய பொதுத்தேர்வின் முடிவை நிராகரிப்பதற்காக வைத்த தேர்வு.

மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்தப்போகிறோம், நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்களை உருவாக்குவோம் என்பதெல்லாம் புண்பட்ட நியாய உணர்வின் குமுறலுக்கிடையில் எடுபடாது. நீட் தேர்வு இருந்தால் எத்தனை பேருக்கு, அது இல்லாவிட்டால் எத்தனை பேருக்கு இடம் கிடைக்கும் என்று அந்த உணர்வு எண்ணிக்கொண்டிருக்காது. யாருக்குக் கிடைக்கும், யாருக்குக் கிடைக்காது என்று வகைப்படுத்திப் பார்க்காது. ஏறிக் கடந்துவிடலாம் என்று நம்பியிருந்த ஏணியை யாரோ தட்டிவிட்டது போன்ற ஏமாற்றம். மாணவர்கள் கேட்பது மனதுக்கு மட்டுமே தெரிந்த நியாயம். ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்புப் பள்ளிச் சிறுமிகள் சாலையில் அமர்ந்து நியாயம் கேட்கிறார்கள். அவர்களின் நியாய உணர்வு எப்படியோ புண்பட்டுள்ளது என்று சொல்லாமல் இதை வேறு எப்படிச் சொல்ல முடியும்? இளைஞர்களுக்கு லட்சிய வேகம் குறைந்துவருகிறது என்று கவலைப்பட்டவர்கள் விழிதிறந்து பார்க்க வேண்டிய தருணம்.


நூற்றுக்கணக்கில் பள்ளிச் சிறுமிகளே போராட்டம் நடத்துவதைப் பார்க்கும்போது நான் பள்ளிக்குச் சென்ற காலம் நினைவுக்கு வருகிறது. எங்கள் பள்ளியின் மாணவர்கள் ஆயிரத்துக்கும்மேல். ஆனால், மாணவிகளின் எண்ணிக்கை முப்பது என்ற அளவில் இருந்தது. இதுவே அப்போது பெரிய எண்ணிக்கை. பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இன்று எந்த வகுப்பை எடுத்துக்கொண்டாலும் மாணவர்களைவிட மாணவிகளின் எண்ணிக்கை அதிகம். ஆக, இளைய சமுதாயத்தினர், குறிப்பாகப் பெண்கள், கல்வியை எப்படிக் கணிக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. கல்வி அறிவைத் தேடும் வழியாக மட்டுமல்ல, தங்களைக் கட்டிவைத்திருக்கும் சமுதாயத்தின் பழந்தளைகளை உடைத்து மேலெழும்ப உதவும் ஒரே சாதனமாகக் கல்வியை அவர்கள் கண்டிருக்கிறார்கள். இந்த விடுதலை முயற்சிக்கு நீட் தேர்வு ஒரு தடை என்ற அச்சம் அவர்களைப் பற்றிக்கொண்டிருக்கிறது.

இது மாணவர்களின் சூட்டிப்பு

மைய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான அதிகாரப் பகிர்வுப் பிரச்சினையில் கல்வி சிக்கிக்கொண்டது. அந்தப் பின்னணியில்தான் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது என்றும் ஆட்சியாளர்கள் காரணம் கற்பிக்கலாம். அரசியல் தொடர்பில்லாமலேயே கல்விப் பிரச்சினைகளில் தமிழக மாணவர்கள் தன்னெழுச்சியாக அணிதிரண்டுள்ளார்கள் என்பதை நான் அறிவேன். 1970 என்று நினைவு. கல்லூரிகளில் தமிழ் மட்டுமே பயிற்றுமொழியாக இருக்குமாறு அப்போதைய தமிழக அரசு ஒரு திட்டத்தை அறிவித்தது. நான் பல்கலைக் கழகத்தில் மாணவனாக இருந்தேன். அன்றைய மாணவர்கள், கல்வியாளர்கள் இத்திட்டத்தை ஏற்கவில்லை. தமிழில் போதுமான தரமான பாடநூல்கள் அப்போது இல்லை என்பதால் ஆங்கிலமும் பயிற்றுமொழியாக இருக்க வேண்டும் என்பது அவர்களின் கருத்து. சிதம்பரம் கோட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குப் பெரிய ஊர்வலம் ஒன்றை நாங்களே நடத்திச்சென்று அந்தத் திட்டத்தை எதிர்த்தோம். ஊர்வலத்துக்காக நாங்கள் எந்த முயற்சியும் செய்து கூட்டம் சேர்க்கவில்லை. தமிழக மாணவர்களின் சூட்டிப்பை நாம் என்றைக்குமே குறைத்து மதிப்பிடக் கூடாது.

நீட் தேர்வு மருத்துவப் படிப்புக்குத் திட்டமிடுபவர்கள் மட்டுமே இந்த விவகாரத்தில் அக்கறை காட்ட வேண்டியதல்ல என்பதைக் கல்வியாளர்கள் ஏற்பார்கள். சில ஆயிரம் மாணவர்களின் மருத்துவப் படிப்புக்கான வாய்ப்பு பற்றியது என்று நாம் இதனை எளிமைப்படுத்தி ஒதுக்கிவிட முடியாது. நீட் தேர்வு இப்போதே கச்சிதமாகத் தனது நோக்கத்தைச் சாதித்துக்கொண்டுள்ளது. சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு இணையாக, அல்லது அந்த ஆதர்ச பாடத்திட்டத்தை நோக்கிச் செல்வதாக எல்லா மாநிலப் பாடத்திட்டங்களும் புனரமைக்கப் படும்.

நாடு முழுமைக்கும் ஒரே பாடத்திட்டம் என்ற சூழல் விரைவிலேயே உருவாகும். நமது சந்ததியினரின் சிந்தனை வளத்தைத் தான் நிர்ணயிக்கும் இலக்கு நோக்கித் திருப்பவும், கட்டுப்படுத்தவும் தேசிய அளவிலான அதிகார மையத்துக்கு இதை விடச் சிறந்த சாதனம் வேறென்ன வேண்டும்? கல்வித்திட்டமும் (curriculum), அதன் நோக்கத்தை அடைய உதவும் பாடத்திட்டமும் (syllabus) கற்பிக்கும் முறையும் கற்கும் முறையும் தேர்வு முறையும் மதிப்பீட்டு முறையும், கேள்வித்தாளின் வடிவமைப்பும்-- எல்லாமே எட்டாம் வகுப்பிலிருந்தே நீட் தேர்வை முன்மாதிரியாகக் கொண்டு அமைந்துவிடும். இப்படி, ஒரு தேர்வை நோக்கியே பயணிக்கும் கல்விமுறையை கல்வியாளர்கள் ஏற்பார்களா? எந்த மட்டத்திலும் ஒரு மாற்று முறையை, மாற்றுக் கல்வித்திட்டத்தை மாணவர்களிடையே சோதித்துப்பார்க்க சுதந்திரம் தராத கல்வி முறையை என்னவென்று சொல்லலாம்? எதிர்ப்பையும் ஆதரவையும் தன்னை நோக்கியே ஈர்த்துக்கொண்டு நீட் தேர்வு தானே கல்வி பற்றிய சிந்தனையின் மையமாகிவிட்டதல்லவா? அதற்கு உருவாகும் எதிர்ப்பும் கல்விச்சிந்தனையை நீட் தேர்வின் மீது மையங்கொள்ளச் செய்யும் விந்தையாக மாறியது.

கலைப் பாடங்களின் இடம் என்ன?

மற்ற பாடங்களை விரும்பிப் படிப்பவர்களை நாங்களா தடுக்கிறோம் என்பார்கள் நீட் ஆதரவாளர்கள். மாணவர்களின் மனத்தளவிலேயே “இதைத் தவிர வேறு எதைப் படிப்பது?” என்று நீட் பாடங்கள் பரிசீலனைக்கு அப்பாற்பட்ட நம்பிக்கையாகி ஒரு போலியான உயர்ச்சியைப் பிடித்துவிடும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அவ்வப்போது தேவைப்படும் திறன்களும், பொருள் சார்ந்ததல்லாத இதர தேவைகளும் உண்டு. அதற்கான மனிதவளமும் வேண்டும் என்பது மறந்துபோனது போலாயிற்று. ஏற்கெனவே, இங்கு மொழி, அரசியல், வரலாறு, பொருளாதாரம் போன்ற பாடங்களும் மற்றவையும் கல்வித்திட்டத்தில் அவற்றுக்கு உரிய இடத்தைச் சுருக்கிக்கொண்டன. நீட் தேர்வுக்கான பாடத்திட்டம் இவற்றை மேலும் ஒதுக்கிவிடும். பிறகு நாட்டின் மனிதவள மேம்பாடு எப்படியிருக்கும் என்று நீங்கள் கற்பனை செய்துகொள்ளலாம். நீட் தேர்வை மருத்துவப் படிப்பு என்ற எல்லைக்குள் மட்டுமே விவாதிப்பது பொருந்தாது. பள்ளிக் கல்வியின் தளத்தை முழுதுமாக ஆக்கிரமித்துக்கொள்ளும் நீட் தேர்வு நமது மனிதவள முயற்சிகளை எப்படித் திசை மாற்றும் என்பதையும் கவனிக்க வேண்டும். மாணவர்கள் மருத்துவர்கள் ஆவதற்கு மட்டுமே போராடவில்லை.

-தங்க. ஜெயராமன்,

ஆங்கிலப் பேராசிரியர், ‘காவிரிக் கரையில் அப்போது...’ நூலின் ஆசிரியர், தொடர்புக்கு: profjayaraman@gmail.com
இப்போதுதான் ஜன்னலோர இருக்கை கிடைத்தது

Published : 14 Sep 2017 09:14 IST




குழந்தைகளுக்கும் ஜன்னலோர இருக்கைகளுக்கும் என்றுமே ஒரு எழுதப்படாத ஒப்பந்தம் இருக்கிறது. ஒரு குடும்பம் ரயிலிலோ பேருந்திலோ ஏறினால், உட்கார்வதற்கு இருக்கைகள் இருந்தால் அங்கே குழந்தைகள்தான் முதலில் ஓடிப்போய் ஜன்னலோர இருக்கையில் உட்கார்ந்துகொள்ளும். எனினும், குழந்தைகளுக்கு ஜன்னலோர இருக்கைகளை விட்டுக்கொடுக்கும் அளவுக்குப் பெரியவர்கள் ஒன்றும் ஜன்னலோரத்தின் மீது ஈடுபாடு இல்லாதவர்கள் அல்ல என்பதை தினந்தோறும் ரயிலிலும் பேருந்துகளிலும் பார்க்கலாம்.

குழந்தைப் பருவத்தில் நம்மிடம் பல ஆர்வங்கள், ஈடுபாடுகள் இருக்கும். அவற்றில் பலவற்றுக்கும் நாம் விடைகொடுக்கும் நிலையை ‘முதிர்ச்சி அடைதல்’ என்கிறோம். அதுவரை குழந்தைத்தனம் என்பது ரசிக்கக்கூடிய விஷயமாகவும் அதற்குப் பிறகு தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகவும் மாறுகிறது. அப்போது அதை வேறு ஒரு சொல்லால், அதாவது ‘சிறுபிள்ளைத்தனம்’ என்ற சொல்லால் குறிப்பிடுகிறோம். ஆனால், நமக்குள் உள்ள குழந்தை, நமக்கு எத்தனை வயதானாலும் விடாப்பிடியாக நமக்குள் ஒட்டிக்கொண்டிருப்பதன் அடையாளங்களுள் ஒன்று ஜன்னலோர இருக்கை மீதான காதல். ஆகவே, ‘உலகளாவிய பண்பாக’ இருப்பதால் ஜன்னலோர இருக்கைக்கான போராட்டத்துக்கு ‘பெரிய மனுசத்தன’ அடையாளம் ஏற்பட்டுவிட்டது.


ஜன்னலோர இருக்கை மீதான நமது காதலை, ஏக்கத்தை நம்முள் இருக்கும் குழந்தையின் அடையாளமாக மட்டுமே சொல்லிவிட முடியுமா என்று தெரியவில்லை. ஜன்னலோர இருக்கையின் நாட்டத்தை வீட்டின் ஜன்னலிலிருந்தே தொடர்புபடுத்திப் பார்க்க முடியும். வீட்டின் ஜன்னலோ பேருந்து, ரயில்களின் ஜன்னலோ காற்றோட்டத்துக்காக அமைக்கப்பட்டிருக்கலாம். ஆனால், மனிதர்களின் தேவை எப்போதும் தோற்றத்தில் தென்படுவதை, எளிய நடைமுறைப் பயன்பாட்டைத் தாண்டியதாகவும் இருக்கிறது.

ஜன்னல் தரும் விடுதலை

நாடோடியாகத் திரிந்த மனிதர்கள் ஒரு இடத்தைத் தம்முடையதாக ஆக்கிக்கொண்டு அந்த இடத்தின் மீதான தம் உடைமையுணர்வின் அடையாளமாகவும் தமது பாதுகாப்பின் அடையாளமாகவும் வீடு கட்டிக்கொண்டாலும்கூட தம் பாதுகாப்பு வட்டத்துக்குள் இருந்துகொண்டு சூழ உள்ள உலகைத் தரிசித்துக்கொள்ள, அடைத்துவைக்கப்பட்ட உணர்வைத் தவிர்த்துக்கொள்ள, அடைப்புக்குள்ளும் ஒரு விடுதலையுணர்வை அனுபவிக்க அவர்கள் உருவாக்கிக்கொண்டவைதான் ஜன்னல்கள்!

ஒரே இடத்துக்குள் இருந்தாலும் சரி ‘நகரும் இடமான’ வாகனங்களுக்குள் இருந்தாலும் சரி ஜன்னல்கள் இல்லையென்றால் அவற்றுக்குப் பெயர் ‘சிறை’. சிறைக்குள் இருப்பவருக்கு ஜன்னல் கொடுக்கும் ஆசுவாசத்தை ஆல்பெர் காம்யு தன் ‘அந்நியன்’ நாவலில் அழகாக விவரித்திருப்பார். ஆகவேதான், மூச்சு முட்டும் நம் சிறு உலகத்திலிருந்து அது வீடோ, பயணமோ ஜன்னல்கள் மீட்டெடுக்கின்றன. ஆனால், இன்று அதிவிரைவான நகரமயமாதலின் விளைவாலும் மக்கள்தொகைப் பெருக்கத்தாலும் இடைவெளியற்ற வீடுகள், அதனால் ஜன்னல்கள் இல்லாத நிலை, அப்படியே இருந்தாலும் அடுத்த வீட்டுச் சுவர் நம் ஜன்னலுக்குள் எட்டிப்பார்க்கும் நிலை. ஜன்னல்களை நம் நகரங்கள் இழந்துகொண்டிருக்கின்றன. காற்றோட்டமான ஜன்னல் என்பது பெரும்பாலும் வசதிபடைத்தோரின் விஷயமாகிவிட்டது.

ஜன்னல்களை அடைத்த கைபேசிகள்

இன்னும் பேருந்து, ரயில்களின் ஜன்னல்கள் அடைபடவில்லை. ஆயினும், ஜன்னல் இருக்கை கிடைப்பது அவ்வளவு எளிதான விஷயமாகவும் இல்லை. அப்படியே கிடைத்தாலும் கைபேசி வருடல்களில் நாம் நம்மை இழக்க, பயணநேர ஜன்னல்கள் என்பவை இன்று காற்றோட்டத்துக்கு மட்டுமே என்றாகிவிடுகின்றன. மெய்யுலகில் மெய்நிகர் உலகால் ஜன்னல்களை இழந்துகொண்டிருக்கிறோம். ரயில் பயணத்தில் புத்தகம் படிப்பதையே மகா குற்றம் என்பார் கி.ரா. புத்தகம் படித்தால்கூட பரவாயில்லை என்று தோன்றும்படி இன்று கைபேசிக்குள் மூழ்கிக்கொண்டிருக்கிறோம், ஜன்னலோரத்தில் அமர்ந்துகொண்டும்.

பேருந்தில் ஒரு குழந்தைக்கு ஜன்னலோர இருக்கை கிடைப்பது பற்றி முகுந்த் நாகராஜன் அழகான கவிதையொன்று எழுதியிருப்பார்:

குழந்தைகளின் ஜன்னல்கள்

இப்போதுதான் கிடைத்தது ஜன்னல் சீட்

உடனே இறங்கச் சொல்கிறாள் அம்மா

வீடு இங்கேதான் இருக்கிறதாம்…

இதெல்லாம் ஒரு காரணமா?

குழந்தை இப்படியெல்லாம் தன் ஜன்னல் சீட் மகிழ்ச்சியைக் கவிதையாக வெளிப்படுத்துமா என்ற கேள்வி எழலாம். குழந்தையால் வெளிப்படுத்த முடிகிறதோ இல்லையோ வீடு நெருங்கிவிட்டது என்பதைவிட ஜன்னல் சீட் கிடைத்துவிட்டதில்தான் குழந்தை அதிக மகிழ்ச்சி கொள்ளும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். அந்த மகிழ்ச்சியைத்தான் கவிஞர் தன் புகைப்படக் கருவியால் படம் பிடித்திருக்கிறார். கருவி கவிஞருடையது என்றாலும் மகிழ்ச்சி குழந்தையுடையதுதான். அதாவது, பேருந்தில் இடம் கிடைத்த குழந்தையுடையதும், கவிஞருக்குள் இருக்கும் குழந்தையுடையதுமான மகிழ்ச்சி.

-ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in

NEWS TO DAY 16.07.2026