Saturday, September 16, 2017

சமூக வலைதளங்களில் நீதிமன்றத்தை விமர்சிப்பவர்கள் பற்றி ஆதாரம் கொடுங்கள்: வழக்கறிஞர்களுக்கு நீதிபதி கிருபாகரன் உத்தரவு

Published : 15 Sep 2017 15:51 IST

சென்னை




ஆசிரியர் போராட்டங்கள் குறித்த நீதிமன்ற கேள்விகளுக்கும் உத்தரவுகளுக்கும் எதிராக சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்பவர்கள் குறித்து ஆதாரத்துடன் ஆவணங்களாக தாக்கல் செய்ய வழக்கறிஞர்களுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்றத்தை, நீதிபதியின் கருத்துகளை சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர்கள் என்.செந்தில்குமார், ஜி.சங்கரன், ஏ.பி.சூர்யபிரகாசம் ஆகியோர் முறையீடு செய்தனர்.

அதில் அவர்கள் தெரிவித்திருப்பதாவது: நீதிமன்ற உத்தரவுகளுக்கும், நீதிபதிகளுக்கும் எதிராக கருத்துகளை தெரிவிக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு தனிப்பட்ட நபர் மீது குற்றம் சுமத்தினால் அவர் காவல் நிலையத்திலோ, மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்திலோ புகார் அளிப்பார்கள்.

ஆனால் அந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி யாரிடமும் புகார் அளிப்பதில்லை என்பதால் கட்டுப்பாடில்லாமல் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து பதிவேற்றம் செய்கிறார்கள். இதைத் தடுக்க வேண்டிய சென்னை காவல் ஆணையர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் அவரை நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என தெரிவித்தனர்.

இது குறித்து பதிலளித்த அரசு சிறப்பு வழக்கறிஞர் ராஜகோபாலன், முறையீடு செய்பவர்கள் ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டுகின்றனர். உரிய ஆதாரங்களை தாக்கல் செய்தால் நடவடிக்கை எடுக்கிறோம் என்று தெரிவித்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி கிருபாகரன் கூறியதாவது: எந்த உத்தரவு போட்டாலும் விமர்சிக்கவே சிலர் இருக்கின்றனர். குழு விவாதங்களில் பங்கேற்பவர்கள் கூட நீதிமன்ற உத்தரவு என்ன? என்று அதனைப் புரிந்து கொள்ளாமல் பேசுவதால் சமூகத்தில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என தெரியாமல் பேசுகிறார்கள். ஒரு பெண் தொடர்ந்த வழக்கில் நீதிபதி ஒருவர் பிறப்பித்த உத்தரவை விமர்சிக்கும் ஒருவர், அந்தப் பெண்ணும் நீதிபதியும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர் என விமர்சிக்கிறார்.

ஹெல்மெட் கட்டாயம் என்று நான் உத்தரவு போட்ட போது, அதை விமர்சித்தும் கடிதங்கள் வந்தது. அவற்றில் 80% எதிர்மறை 20% ஆதரவு. முக்கியமாக விமர்சன கடிதங்களில், நான் இதுவரை தாய், தந்தை, ஆசிரியரிடம் திட்டு வாங்காத சொற்களில் வசை பாடப்பட்டேன்.

உனக்கு வண்டி ஓட்ட தெரியுமா? குண்டுங்குழியுமான சாலையில் மனைவியிடன் இரு சக்கர வாகனத்தில் சென்றிருக்கிறாயா? என கடிதம் வந்தது. தற்போதைய விமர்சனங்கள் குறித்து ஆதாரங்களை தாக்கல் செய்யுங்கள்.செப்டம்பர் 18 அன்று விசாரிக்கிறேன். அதற்குள் இன்னும் நிறைய கருத்துகள் கிடைக்குமே என்று தெரிவித்து நீதிபதி கிருபாகரன் வழக்கை செப்.18-க்கு ஒத்திவைத்தார்.
ஒரு நல்ல நாளில் அரசியல் பிரகடனத்தை அறிவிப்பேன்: கமல் பதில்

Published : 15 Sep 2017 22:13 IST

சென்னை




ஒரு நல்ல நாளில் அரசியல் பிரகடனத்தை அறிவிப்பேன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

'தி இந்து' தமிழ் நாளிதழ் நடத்தும் 'யாதும் தமிழே' விழா சென்னையில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் கமல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் ஒரு நிகழ்வாக கலந்துரையாடலில் வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கு கமல் பதிலளித்துப் பேசினார்.

கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஆக்டிவா செயல்பட்டபோது ஏன் அமைதியாக இருந்தீர்கள்?

இதுக்கு கிட்டத்தட்ட பதில் சொல்லி விட்டேன். அவர் கேட்ட கேள்விக்கு நான் சொல்வதை விட நீங்கள் சொன்னால் நன்றாக இருக்கும். அது தீர்ப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். நான் நல்ல நடிகன் தான். இது நடிப்பாக இருக்கக் கூடும் என்று பல நடிகர்கள் நடித்ததால் இந்த எண்ணம் வந்திருக்கும். இதைப்பார்த்து தான் நானும் ஒதுங்கி இருந்தேன். நிஜமாகவே நடிப்பவர்கள் அதிகமாகி விட்டதால்தான் நானும் நடிக்கிறேன் என்று நினைக்கிறார்கள்

இந்த உலகத்தில் கடவுள் இருப்பதை நிரூபிக்க ஒரு விஷயம் கூட இல்லையா கமலுக்கு?

கடவுள் என்பதற்கான சொல் விளக்கம் நீ உனக்குள் கடந்து செல் என்பது தான். அனைத்து ஸ்லோகங்களும் என்னைக் குறிப்பிடுகிறது. இதை இல்லை என்று சொல்லும் பல பண்டிதர்கள் இருக்கின்றனர். மதம் ஒரு கார்ப்பரேட் ஸ்ட்ரக்சர் அது ஒரு பிசினஸ். ஆனால் கடவுளை நம்பும் மனிதர்களை நான் கும்பிடுகிறேன். உங்கள் பக்தியின் மேல் எனக்கு கோபம் இல்லை. இந்த பக்தியை பயன்படுத்தி விளையாடுகிறார்களே அவர்கள் மீதுதான் கோபம். எந்த மதத்தையும் நீங்கள் பகுத்தறிந்து உணரலாமே. மொழி போன்றது உங்கள் பக்தி. எனக்கு பேச வராது. ஆனால் வேறு மொழி இருக்கிறது அது அன்பெனும் மொழி. அன்பை சொல்லாதே, உடனே இணைவேன். வேறு வித்தை காட்டாதே.

எனக்கு இஸ்லாத்தில் வைணவத்தில் சைவத்தில் சமணத்தில் தென்படுகிறது, மேற்கத்திய நாடுகளில் உள்ள ஒரு பிரிவு அசகாய சக்தி என்று பிரிக்கிறார்கள், இதையெல்லாம் பார்க்கிறேன். ஒவ்வொரு மதத்திலும் நல்லதும் இருக்கிறது கெட்டதும் உள்ளது.

பேஸ்புக்கால் உதவியா உபத்திரவமா?

நமது சொசைட்டிக்கு எல்லாம் உதவும் ஃபேஸ்புக்கும் உதவும் ட்விட்டரும் உதவும். அதை நாம் பயன்படுத்த வேண்டும்

பொது மேடைக்கு ஏன் வர மாட்டேங்கிறீங்க?

தங்கைக்கான பதிலிதோ இந்த மேடை இன்னும் பல உண்டு

அஹிம்சை முறையில் போராடி நம்மால் எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு காண முடியுமா? ஒரு பிரச்சினைக்காக ஏன் எல்லோரும் ஒன்று கூட மாட்டேங்கிறாங்க?

இது என்னை கேட்கிற கேள்வி இல்லை உங்களை கேட்கும் கேள்வி. அஹிம்சை வீரத்தின் உச்சகட்டம். அதனால் தான் என்னவோ மாபெரும் முனிவர்களை மஹாவீரர் என்று அழைக்கிறார்கள். அஹிம்சையின் உச்சகட்டம் மஹாவீரம். மஹாவீரம் வராவிட்டாலும் ஆரம்ப வீரமாவது வரவேண்டாமா? துப்பாக்கி தோட்டாவில் இருந்து வந்தது போல் துடித்து வந்ததாக நினைக்கிறேன்

அடுத்த குல்லா என்னவாக இருக்கும்?

முடிதான் என் குல்லா. இதுவும் உதிர்ந்துவிடும். குல்லாவுக்கு வேலை எல்லாம் இல்லைங்க, குளிருக்கு வேண்டுமானால் போட்டுக்கலாம்.சென்னையில் எதுக்குங்க

கேரளாவிற்கு சென்றீர்களே. முதல்வரைப் போய் சந்தித்தீர்களே ஏன்?

இங்கேயும் சந்திக்க ஆசைதான் போறதுக்குள்ள மாறிடுமோன்னு பயம் தான். அங்கு குழந்தைகளின் ஆரோக்கியம் நன்றாக உள்ளது. தெரு சுத்தமாக இருக்கு. ஸ்வச் பாரத் அங்குதான் நன்றாக உள்ளது. எல்லோரும் மெடிக்கல் டூரிசம் சென்றார்கள், நான் அங்கு பொலிட்டிக்கல் டூரிசம் போனேன். யார் சொன்னாலும் கேட்டுக்குவேன் ஆனால் முடிவை நான் தான் எடுப்பேன். இதோ 'தி இந்து'வுக்கு தெரியுமே அந்த சிஸ்டம் எப்படி வெற்றி அடைகிறது என்று நீங்கள் சொன்னது தான் என்கிறார்களே. அதைத்தான் நானும் சொல்கிறேன் நீங்கள் சொல்லுங்கள்.

கோபத்தை வேறு பக்கம் காட்டுங்கள். ஒரு சின்ன பொட்டி,லேசா அழுத்தினால் போதும். ஊழலை எப்படி ஒழித்துக்கட்டுவது ஊழல் மட்டும்தான் இவரது தாரக மந்திரமா என்று நினைக்காதீர்கள். அது அவர்களின் தாரக மந்திரம். ஊழலை ஒழிக்க வேண்டுமானால் நீங்கள் ஊழல் இல்லாமல் இருங்கள். ஐந்தாயிரம் வாங்கி ஓட்டு போடாதீர்கள். நீங்கள் நல்ல அரசுக்கு வாக்களித்தால் அதை மூன்றே மாதத்தில் சம்பாதிக்கலாம். உங்களுக்கு அளிக்கும் ஐந்தாயிரம் உங்களுக்கு வர உள்ள மூன்று லட்சத்திற்கு சமம்.

நீங்கள் தனிக்கட்சி ஆரம்பித்தால் ரஜினி இணைந்தால் என்ன பதவி கொடுப்பீர்கள்?

ஆண்டி கூடி மடம் கட்டிய கதை. கற்பனையின் எல்லைக்கு போய்விட்டார். எனக்கு மக்களிடம் இருந்து சமிக்ஞை கிடைக்கட்டும். அவர் வரட்டும் பேசலாம். உங்களோடு இணைபவன் அவருடன் இணைய மாட்டேனா? அவருடன் பேசவில்லை என்று நினைக்கிறீர்களா, அல்லது அவரிடம் பேசுவதை உங்களிடம் தான் சொல்வேன் என்று நினைக்கிறீர்களா?

சொந்த வாழ்க்கையை விமர்சிப்பதை எப்படி சந்திக்கப் போகிறீர்கள்?

இதற்கு பதில் என் வாழ்க்கை. என் சொந்த வாழ்க்கை என் முடிவு என்பேன். அதே தைரியம் இதற்கும் உண்டு. என் சொந்த வாழ்க்கை அதற்கு பதில்.

பணத்திற்கு ஏன் அப்படி பலம் வந்தது?

பெரிய கோடீஸ்வரர்கள் உருவானது ஏழைகளால்தான். கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

அரசியலுக்கு வந்தால் உங்கள் கொள்கை எவ்வழி?

பெரியார் எங்கிருந்து கற்றார் அரசியலை, அவர் கற்றது காந்திய வழி அங்கிருந்து அரசியலை கற்று பின்னர் தனக்கான பாதையை மார்க்சியம் வழியில் கற்றார். மார்க்சியம் என்பது லெனின் இவர்கள் வகுத்த பாதை, இவர்கள் தோளில் ஏறிப் பார்க்கும்போது எனக்கு தூரத்தில் ஒளி தெரிகிறது அதில் பாடுபடுகிறேன் 

லோக்கல் கவர்னன்ஸ் குறித்து உங்கள் கருத்து?

பர்சனல் கவர்னன்ஸ் நீங்கள் உங்கள் நிலை பற்றி யோசியுங்கள் சரி இல்லை சரி இல்லை என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம். 

பன்முகத்தன்மைக்கு எதிராக , மூட நம்பிக்கைக்கு எதிராக போராடிய பத்திரிக்கையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். வன்முறை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 

வன்முறை பற்றி சொல்லும்போது ஒரு விஷயம் முக்கியம்.வன்முறை அதற்கு தனியாக அறிவு கிடையாது. அது எப்போது வேண்டுமானால் மதம் மாறும். இப்போது நான் உங்களுக்கு திருப்தியான பதில் சொல்லவில்லை என்று நினைக்காதீர்கள். வன்முறைக்கு எதிராக என்ன சொல்ல இன்று போய் நாளை வா தோல்வி நிச்சயம். நாளை நானில்லாவிட்டால் யாராவது இருப்பார்கள். மாறி மாறி நடந்ததால் தான் நாடு இரண்டாக ஆனது.

நீங்க அரசியலுக்கு வருவீர்களா வரமாட்டீர்களா என்று கேட்காதீர்கள். இவ்வளவு நேரம் என்ன செய்து கொண்டிருந்தோம். பேசிக்கிட்டே இருக்கிறீர்களே என்று சொல்லாதீர்கள். நாம் யாரை விட்டு வைத்தோம். 

அரசியல் பிரகடனம் முறையாக எப்போது அறிவிப்பீர்கள்?

அவசரமில்லாமல் பல மேடைகள் உள்ளது , நீங்களும் ஒத்துழைக்கணும். பல விஷயங்கள் உள்ளது. பிறந்த நாளில் அரசியல் அறிவிப்பு எல்லாம் எதற்கு. அது நான் வந்த நாள். நல்ல நாள் ஒன்று புரட்சி நடந்த நாளில் அதுவும் ரஷ்யப் புரட்சி தான் அவசியம்னு இல்ல ஏதாவது ஒரு நாளில் அறிவிப்பேன்.

செப்டம்பர் 17 அன்று அறிவியுங்கள் ?

கண்டிப்பாக எந்த வருடம் என்பது நான் முடிவு செய்வேன்.

இவ்வாறு கமல் பதிலளித்தார்.
ரிசார்ட்டில் தங்கியிருப்பது ஏன்
தினகரன் அணி எம்.எல்.ஏ., விளக்கம்

குடகு: ''ஆசிரியர் பணியையும், எம்.எல்.ஏ.,க்கள் பணியையும் ஒப்பிடமுடியாது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்;நாங்கள், மக்கள் ஊழியர்கள். நாங்கள் போராடவில்லை. ஒரு பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காககூடியுள்ளோம்,'' என, தினகரன் அணி,எம்.எல்.ஏ., தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.




கர்நாடகாவின் குடகு மாவட்டம், சோம்வார்பேட்டை, 'பேடிங்டன்' ரிசார்ட்டில் உள்ள தினகரன் அணி, எம்.எல்.ஏ.,

தங்க தமிழ்ச்செல்வன் நேற்று அளித்த பேட்டி: நாங்கள், 19 எம்.எல்.ஏ.,க்களும், ஒற்றுமையாக இருக்கிறோம். அரசு நினைத்தால்,என்ன செய்யும். அதிகாரம் வைத்துள்ளஅரசு, எங்கள் ஒற்றுமையை குலைக்கநினைக்கும்; ஆனால், அது முடியாது.

பன்னீர்செல்வம் உட்பட, 12 எம்.எல்.ஏ.,க்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அவசர கோலத்தில், எங்கள் மீது நடவடிக்கை எடுக்கின்றனர்.எங்கள் உறவினர்கள், ஜாதி அமைப்பினர் மூலம், சமாதானப்படுத்த முயற்சிக்கின்றனர்.ஒரு சிலருக்கு மிரட்டல்கடிதமும் வந்துள்ளது. 20ம் தேதிக்குள், கட்சி பொதுக்குழு நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

'வேலை செய்யாமல் சம்பளம் இல்லை என்பது, அரசு ஊழியர்களுக்கு மட்டும் தானா?ரிசார்ட்டில் முடங்கிக் கிடக்கும் குதிரை பேர அரசியல்வாதிகளுக்கு கிடையாதா?' என,நடிகர் கமல் கூறியிருப்பது குறித்து, நிருபர்கள் கேள்வி

எழுப்பினர்.அதற்கு, ''ஆசிரியர் பணி, எம்.எல்.ஏ.,க்கள் பணிகளுடன் ஒப்பிட முடியாது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள். நாங்கள், மக்கள் ஊழியர்கள். நாங்கள் போராட வில்லை. 

ஒரு பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு கூடியுள்ளோம்,'' என்றார்.தினகரன் இன்று, 'பேடிங்டன்' ரிசார்ட்வருவதாக கூறப்படுகிறது.
'ஸ்மார்ட்' ரேஷன் கார்டில் நடிகை படம் : குறும்பு செய்வோருக்கு அரசு எச்சரிக்கை

பதிவு செய்த நாள்15செப்
2017
23:57

'ஸ்மார்ட் ரேஷன் கார்டில், குடும்ப தலைவர் படம் சரியாக இருக்கிறதா என்பதை, ஆய்வு செய்யாமல் வழங்கும் ஊழியர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, உணவுத்துறை எச்சரித்துள்ளது. சேலம் மாவட்டம், ஓமலுார் அருகில், பெண் ஒருவருக்கு வழங்கிய, 'ஸ்மார்ட்' கார்டில், நடிகை காஜல் அகர்வாலின் படம் இடம்பெற்றது. இதையடுத்து, ஆய்வு செய்யாமல் கார்டுகளை வழங்கும் ஊழியர்கள் மீது, உணவு துறை நடவடிக்கை எடுக்க உள்ளது.

இதுகுறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஸ்மார்ட் கார்டுக்காக வாங்கிய, 30 லட்சத்திற்கும் அதிகமான, 'ஆதார்' கார்டுகளில், குடும்ப தலைவர் புகைப்படம் தெளிவாக இல்லை. சரியான புகைப்படத்தை, இணையதளம், 'மொபைல் ஆப்' வழியாக தரும்படி அறிவுறுத்தப்பட்டது. இதை பயன்படுத்தி, விபரம் தெரியாதவர்களுக்கு உதவுவதாக கூறி, சில குறும்புக்காரர்கள், வேண்டுமென்றே சினிமா பிரபலங்கள், கடவுளின் படங்களை குடும்ப தலைவராக, 'அப்லோடு' செய்கின்றனர். அவை, இணையதளம் வாயிலாக, அச்சுக்கு அனுப்பப்படுகிறது. ஒரே சமயத்தில், லட்சக்கணக்கில் கார்டுகள் அச்சிடுவதால், யாருடைய படம் என்பது கவனிப்பது சிரமம். இதனால், கடைக்கு அனுப்பும் கார்டில் குடும்ப தலைவர் படம், உறுப்பினர்கள் விபரம் சரியாக இருக்கிறதா என்பதை, ஆய்வு செய்த பின், பழைய கார்டில் கார்டில் முத்திரை இட்டு வழங்கும்படி, ஊழியர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அவர்கள் கார்டுகளை, ஊர் தலைவர், அரசியல்வாதிகளிடம் வழங்கி, அவர்கள் வாயிலாக, மக்களுக்கு தருவதாகவும் புகார்கள் வருகின்றன. அவ்வாறு செய்வோர் மீதும், ஸ்மார்ட் கார்டை ஆய்வு செய்யாமல் வழங்கும் ஊழியர்கள் மீதும், கடும் நடவடிக்கை எடுக்குமாறு, மாவட்ட வழங்கல் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

தவறான படம் எங்கிருந்து, 'அப்லோடு' செய்யப்படுகிறது என்பதை கண்டறிவது சுலபம். எனவே, அவ்வாறு செய்வோர் மீது, போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
'எம்.எல்.ஏ.,க்களை நீதிமன்றம் எச்சரிக்காதா?' : கமல்

பதிவு செய்த நாள்16செப்
2017
00:50




'வேலை செய்யாமல், சொகுசு விடுதியில் ஓய்வு எடுக்கும், எம்.எல்.ஏ.,க்களை, நீதிமன்றம் எச்சரிக்காதா' என, நடிகர் கமல் கேள்வி எழுப்பி உள்ளார்.

'டுவிட்டரில்' கமல் கூறியுள்ளதாவது: வேலை செய்யாத அரசு ஊழியர்களுக்கு, சம்பளம் கிடையாது என்பது, எம்.எல்.ஏ.,க்களுக்கு பொருந்தாதா? வேலை நிறுத்தம் செய்யும் ஆசிரியர்களை எச்சரிக்கும் நீதிமன்றம், குதிரை பேரத்தில் ஈடுபட்டு, எம்.எல்.ஏ.,வுக்கான பணியை செய்யாமல், சொகுசு விடுதியில் ஓய்வு எடுக்கும் அரசியல்வாதிகளையும் கண்டிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

- நமது நிருபர்- -
வரவிருக்கும் விசேஷங்கள்

செப்டம்பர் 19 (செ) மகாளய அமாவாசை

செப்டம்பர் 21 (வி) நவராத்திரி ஆரம்பம்

செப்டம்பர் 29 (வெ) சரஸ்வதி பூஜை

செப்டம்பர் 30 (ச) விஜயதசமி

அக்டோபர் 01 (ஞா) மொகரம்

அக்டோபர் 02 (தி) காந்தி ஜெயந்தி
Power shutdown areas in Chennai on 16-09-17
Posted on : 15/Sep/2017 15:50:52


 
Power supply will be suspended in the following areas on 16-09-17 between 9.00 A.M. to 2.00 P.M. for maintenance work. Supply will be resumed before 2.00 P.M. if the works are completed. 

GUINDY AREA: Tiny sector & Mini Tiny sector (Developed plots and Adjacent areas), Guindy Industrial Estate,  Tiny Sector,  Labour colony, Guindy, Arulayampet, Reddy st, Parthasarathy koil st, Ambal nagar, North phase, Poonamallee road, Electronic complex, Inner ring road, Ekkattuthangal.

SEMBIUM AREA: M.H.road entire area, Chinna Kulanthai streets entire, Raja st, Kabilar st, S.S.V. koil streets (part), Doctor court, Maduma nagar, Kollan thottam, Chokkalingam st.

SAIDAPET WEST AREA: Kattabomman block, Muthurangan block, Anjuham nagar, Parry nagar, School st, RR colony all st, VSM garden, Bharathi block, Errikarai st, Entire Saidapet west areas, 7 & 11th avenue, LIC colony, Nagathamman koil st, Annamalai Chetty nagar, Ethiraj nagar, KV colony I to V st, Postal Colony I to IV st, Kamashipuram IInd & 10th avenue, Ashok nagar 58 to 64th st, Naikamman st, Muveender colony, Part of Ashok nagar,  Pillayar koil st, Sekar nagar, West Jones road, Ashok nagar 12th avenue, Ramapuram Ramaswamy st, Rajagopal st, Anjaneyar koil st, Ramanujam st, Barathiyar st, Mosque Pallam, Dhanasekaran st, VGP salai. 

SIDCO NAGAR AREA: Sidco nagar  part of 6th, 9th, 10th  Blocks, Sidco nagar Industrial area, Balaramapuram, Nehru nagar, South Jaganatha nagar.

AMBATTUR SIDCO AREA: Koramandal Town, Mangalapuram, Pattaravakkam, Kannan koil st, Sidco North phase, Bajanai koil st, Bramin st, Yadava st, Kulakkarai st, Katchanag kuppam, Tass estate one part, VSNL Telephone Exchange.

KODUNGAIYUR AREA: Part of Meenambal salai, Abirami avenue 1 to 16 streets, KKD nagar 1st Block, 2nd Block and 3rd Block and part of TH road. 

KOLATHUR SAI NAGAR AREA: Sai nagar, Kumaran nagar, Avai nagar, GKM colony 33rd to 37rd st, Kolathur main road, East Elavel cross road. 

KOLATHUR AREA: Kumaran nagar main road, Kumaran nagar 1st, 2nd, 3rd st, Vasu nagar 6 & 7th st, Ramani bai colony, Dr. Ambedkar nagar 1,2,3rd st, Nermai nagar 1, 2nd st, Thirupathi nagar one side, Thirupathi nagar 4th main road, Sundaram nagar 1,2 st, Bala kumaran nagar A part, Sathya sai nagar, Dhanammal nagar, Jayaram st, Valaramathi nagar main road, Bharathi st, Poongavanam st, Sri nagar colony.

FLOWER BAZAAR AREA: Ayyapillai st, one part of Devaraj Mudali st, Venkatachala Mudali lane, one part of Venkatachala mudali st, one part of Nainniappa naicken st and one part of Raghu naickulu st.

RADHA NAGAR AREA: Bharathipuram, Subash nagar, Chithambaram st, Valluvar High road, Purushothaman nagar, NGO colony, Bajanai koil st, GST road, Nanvamanai st, New colony 1st main road, RBI colony, Nemilichery high road, Bharatha matha st, Nellaiyappar st, Ashokan st, Balaji nagar, Jain nagar, Maruthi nagar, Chambers colony, Cholavaram, Sasthri colony.

THORAIPAKKAM AREA: Kannaki Nagar, PTC Qts., Karapakkam part, VGP avenue. Okkiyum pettai, Nehru nagar, Mettu kuppam, MK Chavadi, Part of OMR, Chandrasekaran Avenue, Sowdeswari nagar, Sakthi garden.

NEWS TO DAY 16.07.2026