Monday, September 18, 2017

தேசிய செய்திகள்

பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு மத்திய அரசு ஊழியர்கள் வங்கியில் செய்த ‘டெபாசிட்’ பற்றி விசாரணை



பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு மத்திய அரசு ஊழியர்கள் வங்கியில் செய்த டெபாசிட் பற்றி விசாரணை நடத்தப்படும் என்று ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையர் தெரிவித்தார்.

செப்டம்பர் 18, 2017, 03:30 AM

புதுடெல்லி,

பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு மத்திய அரசு ஊழியர்கள் வங்கியில் செய்த டெபாசிட் பற்றி விசாரணை நடத்தப்படும் என்று ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையர் தெரிவித்தார்.பண மதிப்பு நீக்கம்

கடந்த ஆண்டு நவம்பர் 8–ந்தேதி பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து இந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய குறிப்பிட்ட கால அவகாசமும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த மாதம் 30–ந்தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஆண்டறிக்கையில் பண மதிப்பு நீக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளில் 99 சதவீதம் வங்கிகளுக்கு திரும்ப வந்துவிட்டதாக கூறப்பட்டு இருந்தது. அதாவது பணமதிப்பு நீக்கப்பட்ட காலத்தில் புழக்கத்தில் இருந்த 15 லட்சத்து 44 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள செல்லாத ரூபாய் நோட்டுகளில் 15 லட்சத்து 28 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக்கு திரும்பி விட்டது.

பண மதிப்பு நீக்க நடவடிக்கையின்போது மத்திய அரசு ஊழியர்கள் தங்களுடைய வங்கி கணக்குகளில் தனி நபர்களின் பணத்தை டெபாசிட் செய்து இருக்கலாம் என்று மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் சந்தேகிக்கிறது.

இது தொடர்பாக ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையர் கே.வி.சவுத்ரி நிருபர்களிடம் கூறியதாவது:–விசாரணை

பண மதிப்பு நீக்க நடவடிக்கையின்போது மத்திய அரசு ஊழியர்கள் தங்களது வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்த அதிக அளவிலான பணத்தின் மதிப்பு குறித்த புள்ளி விவரங்களை மத்திய நேரடி வரிகள் வாரியத்திடம் கேட்டு இருக்கிறோம். இதுபற்றிய விசாரணையை மேற்கொள்வதற்காக கூடுதலான சீரமைக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் கோரப்பட்டு உள்ளது.

இவர்களது வங்கி கணக்குகளில் செலுத்திய பணம் உண்மையிலேயே அவர்களுடைய வருமானம்தானா? இல்லையா? என்பது பற்றி தீவிரமாக விசாரிக்கப்படும். அனைவர் மீதும் அவர்கள் ஊழியர்களாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி இது தொடர்பான நடவடிக்கைகளை ஏற்கனவே வருமான வரி இலாகாவின் தலைமை அமைப்பான மத்திய நேரடி வரிகள் வாரியம் எடுத்து இருக்கும்.நடவடிக்கை

என்றபோதிலும், மத்திய நேரடி வரிகள் வாரியத்திடம் இருந்து ஆய்வு செய்வதற்காக இதுபற்றிய தகவல்களை கேட்டு இருக்கிறோம். இதுகுறித்து அவர்களுடன் தொடர்ந்து விவாதித்து உள்ளோம். அவர்களும் நன்கு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். இந்த புள்ளிவிவரங்கள் நீங்கள் நடவடிக்கை எடுக்க கூடிய அளவிற்கு இருக்கும் என்றும் கூறி இருக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட செய்திகள்

மின்னணு அறிவிப்பு பலகைகள் பழுது: விருதுநகர் ரெயில் நிலையத்தில் நெடுந்தூர ரெயில் பயணிகள் தவிப்பு
விருதுநகர் ரெயில் நிலையத்தில் நெடுந்தூர ரெயில்களின் இணைப்பு பெட்டிகள் எந்த இடத்தில் நிற்கும் என்பதற்கான மின்னணு அறிவிப்பு பலகைகள் பழுதாகி உள்ளதால் பயணிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

செப்டம்பர் 18, 2017, 04:00 AM
விருதுநகர்,

விருதுநகர் சந்திப்பு ரெயில் நிலையம் மாதிரி ரெயில் நிலையமாக தரம் உயர்த்தப்படும் என்று நீண்ட நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் அதற்கான வகையில் உள் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவில்லை. எனினும் ஒரு சில வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. ஆனாலும் இந்த வசதிகளை ரெயில் பயணிகள் முழுமையாக பயன்படுத்த முடியாத நிலையில் அதற்கான சாதனங்கள் பழுதான நிலையில் உள்ளன.

தென் மாவட்டங்களில் இருந்து சென்னை, மும்பை, பெங்களூரூ உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு செல்லும் நெடுந்தூர விரைவு ரெயில்கள் விருதுநகர் சந்திப்பு ரெயில் நிலையம் வழியாகத்தான் வந்து செல்கின்றன. மாவட்டத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் உள்ள மக்கள் நெடுந்தூர ரெயில்களில் செல்ல விருதுநகருக்கு வந்துதான் செல்ல வேண்டியது உள்ளது. விருதுநகர் வழியாக செல்லும் நெடுந்தூர விரைவு ரெயில்கள் விருதுநகர் ரெயில் நிலையத்தில் அதிகபட்சமாக 3 நிமிடங்கள் மட்டுமே நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல ரெயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. ரெயில் நிலைய 2–வது பிளாட்பாரத்தில் தான் அனைத்து நெடுந்தூர ரெயில்களும் வந்து செல்வதால் ரெயில் பயணிகளுக்கு அவர்கள் முன்பதிவு செய்துள்ள ரெயில் பெட்டி எந்த இடத்தில் நிற்கும் என்பதை தெரிந்து கொள்ள மின்னணு அறிவிப்பு பலகை வசதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் நீண்ட நாட்களாக இந்த மின்னணு அறிவிப்பு பலகைகள் பழுதாகி உள்ளதால் தாங்கள் செல்ல வேண்டிய ரெயிலுக்காக பிளாட்பாரத்தில் காத்து நிற்கும் பயணிகள் ரெயில் வந்தவுடன் தாங்கள் ஏற வேண்டிய ரெயில் பெட்டி எந்த இடத்தில் உள்ளது என தெரியாமல் பெரும் தவிப்பிற்கு உள்ளாகின்றனர். குறிப்பாக முதியவர்களும், பெண்களும் தாங்கள் முன்பதிவு செய்துள்ள ரெயில் பெட்டிகளில் ஏறுவதற்கு ஓடிச் சென்று ஏற வேண்டியதுள்ளதால் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். பல சந்தர்ப்பங்களில் ரெயில் புறப்படும் நேரத்தில் அவசர, அவசரமாக ரெயில் பெட்டியில் ஏற வேண்டிய நிலை உள்ளதால் விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது.

எனவே ரெயில்வே நிர்வாகம் பயணிகள் வசதிக்காக செய்து தந்துள்ள மின் அறிவிப்பு பலகையினை பழுது நீக்கி முறையாக செயல்படவும் தொடர்ந்து முறையாக பராமரிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இல்லையேல் ரெயில் நிலையத்திற்குள்ளேயே பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டு விடும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மாவட்ட செய்திகள்

ஐந்து வயதில் அடிமனதில் பதிந்த கனவு


களைப்பற்ற உழைப்பு, கருணைமிக்க செயல்பாடு மூலம் சேலம் மாவட்ட மக்களை கவர்ந்து, தமிழ்நாடு முழுவதும் பேசப்படுபவர்.
செப்டம்பர் 17, 2017, 07:15 PM

- ரோகிணி ஆர்.பாஜிபாகரே ஐ.ஏ.எஸ்.

களைப்பற்ற உழைப்பு, கருணைமிக்க செயல்பாடு மூலம் சேலம் மாவட்ட மக்களை கவர்ந்து, தமிழ்நாடு முழுவதும் பேசப்படுபவர். காலை 9.30 மணிக்கு கலெக்டர் அலுவலகம் வரும் அவர் அலுவலகப் பணி, ஆய்வுப் பணி என்று இரவு 10 மணி வரை மின்னலாக செயல்படுகிறார். பொதுமக்களின் கோரிக்கை மனுக் களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, அவர்களது தேவைகளை நிவர்த்தி செய்ய அதிக அக்கறை காட்டுகிறார்.

தமிழகத்தில் பல மாவட்டங்களை டெங்கு காய்ச்சல் பாதித்த வேளையில், டெங்கு அறிகுறியுடன் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில், சேலம் மாவட்ட புதிய கலெக்டராக ரோகிணி ஆர்.பாஜிபாகரே நியமிக்கப்பட்டார். அவர் கிராமம் கிராமமாக சென்று மக்களிடம் டெங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அங்குள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளை ஆய்வு செய்தார். அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவர், சிறுமிகளை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் வழங்கியதோடு, சிறப்பான சிகிச்சைகளுக்கும் ஏற்பாடு செய்தார். ஆய்வின்போது, மகுடஞ்சாவடி என்ற இடத்தில் போலி டாக்டர் ஒருவரை கையும் களவுமாக பிடித்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் நடத்திய வேலைநிறுத்த போராட்டத்தால், ஆசிரியர்கள் வகுப்புக்கு வராத சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது கருத்தராஜபாளையம் என்ற குக்கிராமத்திற்கு ஆய்வுப் பணிகளுக்காக சென்ற கலெக்டர் ரோகிணி, அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முன்பு மாணவ-மாணவிகள் நின்று கொண்டிருந்ததை கண்டார். உடனடியாக அவர்களை வகுப்பறையில் உட்காரவைத்து ஆங்கில பாடம் நடத்தினார். தங்களுக்கு பாடம் நடத்துவது கலெக்டர் என்பது தெரியாத சில மாணவர்கள், ‘தங்களுக்கு பாடம் நடத்த புதிய டீச்சர் வந்திருப்பதாக..’ பேசிக்கொண்டார்கள்.

இப்படி சேலத்தில் எல்லா தரப்பு மக்களையும் கவர்ந்துகொண்டிருக்கும் ரோகிணி, ஐந்து வயதிலே கலெக்டர் ஆகவேண்டும் என்று கனவு கண்டிருக்கிறார். படிப்படியாக முன்னேறி அந்த லட்சியத்தை அடைந்திருக்கிறார். அது பற்றி அவரிடம் பேசுவோம்!

உங்கள் குடும்பத்தை பற்றி சொல்லுங்கள்?

மராட்டிய மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள உப்பலாயி என்ற குக்கிராமத்தில் நான் பிறந்தேன். விவசாயம்தான் எங்கள் பூர்வீக தொழில். அப்பா ராம்தாஸ் பாஜிபாகரே, அம்மா சுவர்ணலதா. எனக்கு 2 அக்காள், ஒரு அண்ணன், ஒரு தம்பி ஆகியோர் இருக்கிறார்கள். நான் மூன்றாவது பெண் குழந்தையாக பிறந்தது எனது பாட்டி-தாத்தாவுக்கு அவ்வளவாக மகிழ்ச்சி தரவில்லை. ஆனால் பெற்றோர் எனக்கு பாசத்துடன் தைரியத்தையும் ஊட்டி வளர்த்தனர்.

கலெக்டர் ஆக வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு ஏற்பட என்ன காரணம்?

விவசாயியான என் அப்பா, விவசாய நிலத்திற்கு தேவையான பட்டா பெறுவதற்கும், மானியம் பெறுவதற்கும் அரசு அலுவலகங்களுக்கு பலமுறை சென்று வந்துகொண்டிருந்ததை, நான் 5 வயது சிறுமியாக இருந்தபோது கண்கூடாக பார்த்தேன். அவரிடம், ‘எதிர்காலத்தில் நான் எப்படிப்பட்ட அதிகாரியானால் மக்களுக்கு நிறைய உதவமுடியும்?’ என்று கேட்டேன். அதற்கு அப்பா, ‘அனைத்து மக்களுக்கும் உதவவேண்டும் என்றால் நீ எதிர்காலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வேண்டும்’ என்றார். அப்பா சொன்ன அந்த கருத்து ஐந்து வயதிலே என் அடிமனதில் பதிந்துவிட்டது. யாருடைய உதவியும் இன்றி, சொந்த முயற்சியிலே படிப்படியாக முன்னேறி நான் அந்த லட்சியத்தை அடைந்தேன்.

சுயமுயற்சியில் லட்சியத்தை அடைந்தது பற்றி விளக்கமாகச் சொல்லுங்கள்?

எங்கள் கிராம பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படித்தேன். பொதுத் தேர்வுகளில் ‘மாநில ரேங்க்’ எடுத்தேன். அங்கு 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் எடுத்தாலே மாநில ரேங்க்தான். அதிக மதிப்பெண் வாங்கியதால் பிரபலமான அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் இடம் கிடைத்தது. கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை தேர்ந்தெடுத்தேன். அந்த கல்லூரி எங்கள் கிராமத்தில் இருந்து 400 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ளது. 17 வயதில் யாருடைய துணையும் இன்றி நானே தைரியமாக கல்லூரிக்கு சென்று இண்டர்வியூவில் கலந்துகொண்டேன். ‘செலக்ட்’ ஆனதும் கல்வி கட்டணத்தையும் செலுத்திவிட்டுதான் திரும்பினேன். என் தந்தைதான் அந்த அளவுக்கு எனக்கு தைரியத்தை தந்து வழிகாட்டினார்.

கல்லூரி படிப்பு முடிந்ததும் பெரிய நிறுவனங்களில் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் வேலைவாய்ப்பு கிடைத்தது. ஆனால் எனது லட்சியம் ஐ.ஏ.எஸ். ஆவது என்பதால், அதற்காக தயாரானேன். பயிற்சிக்காக நான் எந்த மையத்திலும் சேரவில்லை. நானே சுயமாக பாடங்களை தேர்ந்தெடுத்து படித்தேன். யாருடைய உதவியும் இன்றி முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று ஐ.ஏ.எஸ். ஆனேன்.

தமிழில் தெள்ளத்தெளிவாகப் பேச எப்படி கற்றுக்கொண்டீர்கள்?

எனது தாய்மொழி மராத்தி. கூடுதலாக இந்தி, ஆங்கில மொழிகளையும் கற்றுக்கொண்டேன். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கான பயிற்சி மையத்தில் எனக்கு தமிழ் அறிமுகமானது. தமிழ்நாடு கேடரில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததால் எனக்கு பயிற்சி மையத்தில் தமிழ் கற்றுக்கொடுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது என் அதிர்ஷ்டம். அரைகுறை தமிழுடன் வந்த எனக்கு மதுரையில் பயிற்சி கலெக்டராக பணி வழங்கப்பட்டது. அங்கே நன்றாக தமிழ்பேசவும், எழுதவும் கற்றுக் கொண்டேன். பின்பு திண்டிவனம், சேரன்மகாதேவி ஆகிய ஊர்களில் சப்-கலெக்டராக பணியாற்றினேன். அடுத்து மதுரை மாவட்ட கூடுதல் கலெக்டர் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பொறுப்புகளை வகித்தேன்.

சுகாதார மேம்பாட்டுக்காக நீங்கள் மத்திய அரசின் பாராட்டை பெற்றது எப்படி?

மதுரை மாவட்ட கிராமங்களில் ஊரக வளர்ச்சி முகமை மூலம் மத்திய அரசின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை பற்றி கிராம மக்களிடம் எடுத்துச்சொன்னேன். அந்த திட்டத்தின் கீழ் கழிப்பறை கட்ட ரூ.12 ஆயிரம் மானியம் உண்டு. 100 நாள் வேலை உறுதி திட்டத்தையும் என்னால் முடிந்த அளவுக்கு கிராம மக்களிடம் கொண்டு போய் சேர்த்தேன். அவைகளை நான் ஒரு சேவையாக சிறப்பாக செய்தேன். அதற்காக மத்திய குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம் என்னை பாராட்டி கவுரவித்தது. அதை தொடர்ந்து சுகாதார மேம்பாடு, 100 நாள் வேலைதிட்டம் போன்றவைகளை பற்றி மத்திய பிரதேசம், கர்நாடகா, மராட்டியம், சத்தீஸ்கர் ஆகிய மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பயிற்சியளித்தேன். மிசவுரி பயிற்சி மையத்தில் உள்ள ஐ.ஏ.எஸ்.களுக்கு பயிற்சியளிக்கும் வாய்ப்பும் எனக்கு வழங்கப்பட்டது. அதையும் திறம்படசெய்தேன்.

உங்கள் கணவர் விஜேந்திரபிதாரி ஐ.பி.எஸ். அதிகாரி. நீங்கள் செய்து கொண்டது காதல் திருமணமா?

நாங்கள் காதல் திருமணம் செய்து கொள்ளவில்லை. பெற்றோர் பார்த்து பேசி எங்கள் திருமணத்தை நடத்தி வைத்தார்கள். என் கணவர் மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரியாக பெங்களூருவில் பணியாற்றுகிறார். எங்கள் இருவருக்கும் உள்ள ஒற்றுமையே சேவை மனப்பான்மைதான். அதனால் எங்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது. எங்களால் முடிந்த அளவு மக்களுக்கு சேவையாற்றுவோம். எங்களுக்கு 6 வயதில் அபிஜெய் என்ற மகன் இருக்கிறான்.



புடவையைத்தான் விரும்பி உடுத்துகிறீர்கள். அதற்கு என்ன காரணம்?

என்னதான் மாடர்ன் உடைகள் அணிந்தாலும், சேலை அணிவதில் உள்ள அழகே தனிதான். மராட்டிய மாநிலத்தின் பாரம்பரிய உடையும் புடவைதான். அதுதான் எனக்கு ரொம்ப பிடிக்கும். புடவையில் சென்றால் கிராம மக்களும் என்னை அவர்களில் ஒருவராக நினைத்து எளிதாக அணுகுவார்கள். புடவை, மக்களுக்கு சேவை செய்ய விரும்பும் பெண்களுக்கு பொருத்தமான உடை.

கிராம மக்கள் பற்றி உங்கள் கருத்து என்ன?

கிராமங்களில் பிறந்தவர்கள் அனைவரும் பெருமை அடைய வேண்டும். பொதுவாக நகரப்பகுதியில் வசிப்பவர் களைவிட கிராமங்களில் வசிப்பவர்களுக்கு அனுபவ அறிவு அதிகம். இந்தியா 70 சதவீத கிராமங்களை உள்ளடக்கிய நாடு. இன்றைய காலகட்டத்தில் கிராம மக்களுக்குத்தான் இந்தியாவை பற்றி முழுமையாகத் தெரியும் என்பது எனது கருத்து. கிராம மக்கள் பாசம் கொண்டவர்கள். அவர்களுடைய நலம் விசாரிப்பு, அனுசரணையான உபசரிப்பு போன்றவை நகரங்களில் கிடைப்பது அரிது. நானும் கிராமத்தில் பிறந்து வளர்ந்த பெண் என்பதில் பெருமை அடைகிறேன்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டம், சேலம். இந்த மாவட்ட வளர்ச்சிக்காக முக்கிய திட்டம் ஏதேனும் வைத்திருக்கிறீர்களா?

நான் சேலம் மாவட்ட கலெக்டரான தகவலை கிராமத்தில் வசிக்கும் தந்தைக்கு தொலைபேசி வாயிலாக தெரிவித்தேன். அதற்கு அவர், ‘பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடும்மா’ என்றார். அப்பா சொன்ன வார்த்தையில் பல அர்த்தங்கள் உள்ளன. மக்களின் பிரச்சினைகள் என்னால் தீர்த்துவைக்கப்படும்போது, அவர்கள் அடையும் மகிழ்ச்சியை எனது பதவிக்கு கிடைத்த வெகுமதியாக நினைக்கிறேன். இது முதல்-அமைச்சரின் சொந்த மாவட்டம் என்பதால் எனக்கு கூடுதல் பொறுப்பும், கடமையும் உள்ளது. மக்கள் பிரதிநிதிகளும், அரசு அதிகாரிகளும் மக்களின் சேவைக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்று நம்புகிறேன். மீண்டும் சொல்கிறேன். பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டுதான் திட்டங்கள் நிறைவேற்றப்படும். அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைய வேண்டும். குழந்தைகள், பெண்கள், விவசாயிகள் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க அதிக முயற்சி எடுப்பேன். தற்போது டெங்கு தடுப்பு பணியில் தீவிர கவனம் செலுத்துகிறோம். இது கூட்டு முயற்சி. அதிகாரிகள் தங்கள் பணிகளை திறம்பட செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் வருகைக்காக பொதுமக்கள் காத்திருக்க கூடாது என கலந்தாய்வு கூட்டம் நடத்தி அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. சரியான நேரத்திற்கு அவர்கள் பணிக்கு வரவேண்டும். அதிகாரிகள் கண்காணிக்கப்பட்டுதான் வருகிறார்கள். புகார்கள் வந்தால் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.

இளம்பெண்கள் திடீரென தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள். அவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

பெண்களை விட தைரியமானவர்கள் யாரும் கிடையாது. மனதைரியத்திற்கு எடுத்துக்காட்டே பெண்கள்தான். அப்படிப்பட்ட பெண்கள் நொடிப்பொழுதில் எடுக்கும் தவறான முடிவை தடுக்க முடியாமல்போய் விடுகிறது. பெண்கள் வாழ்ந்து காட்டவேண்டும். ஒருபோதும் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடக் கூடாது. அவர்கள் தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ள வேண்டும். விடா முயற்சியுடன் செயல்பட்டு பெண்கள் வெற்றிகளை குவிக்கவேண்டும்.

சேவையில் சிறக்கும் இவருக்கு நமது பூங்கொத்து!
தலையங்கம்

தமிழ்நாட்டுக்கும் வேண்டும் ‘புல்லட் ரெயில்’


ஜப்பான் நாட்டு பிரதமர் ஷின்ஜோ அபேயும், அவரது மனைவி அகிஅபேயும் இந்திய சுற்றுப்பயணமாக ஆமதாபாத் வந்தனர். ஷின்ஜோ அபேக்கு இந்தியா புதிதல்ல.

செப்டம்பர் 18 2017, 03:00 AM

ஜப்பான் நாட்டு பிரதமர் ஷின்ஜோ அபேயும், அவரது மனைவி அகிஅபேயும் இந்திய சுற்றுப்பயணமாக ஆமதாபாத் வந்தனர். ஷின்ஜோ அபேக்கு இந்தியா புதிதல்ல. ஏற்கனவே 2007, 2011–ம் ஆண்டுகளிலும் இந்தியா வந்திருக்கிறார். இதுமட்டுமல்லாமல் அவரது தாத்தா கிஷி ஜப்பான் நாட்டு பிரதமராக இருந்தபோது, 1957–ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்த நேரத்தில், தன்னை இந்திய நாட்டு மக்களுக்கு அப்போதைய பிரதமர் நேரு அறிமுகப்படுத்தி சொல்லிய வாசகங்களை தன் பேரக்குழந்தை ஷின்ஜோ சிறுவனாக இருந்தபோது மடியில் உட்கார வைத்துக்கொண்டு சொல்லி மகிழ்ந்திருக்கிறார். ஆக, தாத்தா உறவு பேரன் வரை நிலைத்து நீடித்து வந்திருக்கிறது. ஆமதாபாத்தில் ஜப்பான் நாட்டு உதவியோடு அந்த நாட்டு தொழில்நுட்பத்துடன் கூடிய ஆமதாபாத்–மும்பை இடையே ‘புல்லட் ரெயில்’ திட்டத்துக்கு பிரதமர் நரேந்திரமோடியும் ஷின்ஜோ அபேயும் சேர்ந்து அடிக்கல் நாட்டியிருக்கிறார்கள்.

1 லட்சத்து 8 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தொடங்கும் இந்த திட்டம் 2022–ம் ஆண்டு ஆகஸ்டு 15–ந் தேதி சுதந்திர தினத்தன்று செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான செலவில் ஜப்பான் நாடு 88 ஆயிரம் கோடி ரூபாயை கடனாக அளிக்கிறது. இந்த கடனுக்கு வட்டி 0.1 சதவீதம் தான். அதுவும் 50 ஆண்டுகளில் தவணைகளில் திரும்ப கட்டலாம். இதுமட்டுமல்லாமல், மேலும் 15 ஆண்டுகள் கட்டுவதற்கும் சலுகை காலம் அளிக்கப்பட்டுள்ளது. ஆக, 65 ஆண்டுகளில் இந்த கடனை கட்டினால் போதும். ஆமதாபாத்–மும்பைக்கு இடையே 508 கிலோமீட்டர் தூரமாகும். மொத்தம் 12 ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயிலின் வேகம் மணிக்கு 350 கிலோமீட்டர் வரை செல்ல முடியும். ஆனால் சராசரி வேகம் மணிக்கு 320 கிலோமீட்டர். எல்லா ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும்போது இந்த ரெயில் 2 மணி 58 நிமிடங்களிலும், குறிப்பிட்ட ரெயில் நிலையங்களில் மட்டும் நின்று சென்றால் 2 மணி 7 நிமிடத்திலும் செல்ல முடியும். இந்த புல்லட் ரெயிலை அமைப்பதால் நிறைய வேலைவாய்ப்பு உருவாகும். 12 ஊர்களிலும் பொருளாதார வளர்ச்சி, வர்த்தக வளர்ச்சி, உள்கட்டமைப்பு வளர்ச்சி, தொழில் வளர்ச்சி பெருகும். நிச்சயமாக இந்த திட்டம் வரவேற்க தகுந்த திட்டம். இதுபோன்ற புல்லட் ரெயிலை தமிழ்நாட்டிலும் விடுவதற்கு நல்ல வாய்ப்புகள், சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. தொழில்நுட்பத்தையும், எளிதான கடன் வசதியையும், ஜப்பான் நாடு நிச்சயமாக தரும்.

சென்னையில் இருந்து 739.4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கன்னியாகுமரிக்கு 336.6 கிலோமீட்டர் தூரம் உள்ள திருச்சி, 493.2 கிலோமீட்டர் தூரம் உள்ள மதுரை, 649.7 கிலோமீட்டர் தூரம் உள்ள நெல்லை, 723.8 கிலோமீட்டர் தூரம் உள்ள நாகர்கோவில் வழியாக புல்லட் ரெயில் விடலாம். இதுபோல, சென்னையில் இருந்து 494.3 கிலோமீட்டர் தூரம் உள்ள கோயம்புத்தூருக்கு சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாகவும், சென்னையில் இருந்து 358.6 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பெங்களூருவுக்கும் புல்லட் ரெயில் விடலாம். மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் இந்த ரெயிலை இந்த வழிகளில் விட்டால் பயணிகள் ஒருசில மணிநேரத்தில் நினைத்த இடத்திற்கு சென்றுவிடலாம். இதே வழியில், இதே வேகத்தில் சரக்கு ரெயிலை விட்டால் ஒட்டுமொத்த தமிழகத்திலும் வர்த்தகம் செழிக்கும். இதுமட்டுமல்லாமல், வெளிநாட்டில் இருந்து வரும் எல்லா தலைவர்களையும் டெல்லி மற்றும் ஆமதாபாத் போன்ற சில இடங்களுக்கு மட்டும் அழைத்துச் செல்லாமல் தென் மாநிலங்களுக்கும் அழைத்துவந்தால், அவர்களோடு வரும் வர்த்தக குழு தென் மாநிலங்களிலும் தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக இருக்கும். இதுபோல ஜப்பான் நாட்டில் உள்ள தொழில்நுட்ப வளர்ச்சி குறிப்பாக மின்னணு தொழில் வளர்ச்சி தொடர்பான தொழில்நுட்பங்களோடு கூடிய தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் நிறைய தொடங்கப்பட வேண்டும்.

Power shutdown areas in Chennai on 18-09-17


Posted on : 16/Sep/2017 15:58:54




 
 
Power supply will be suspended in the following areas on 18-09-17 between 9.00 A.M. to 2.00 P.M. for maintenance work. Supply will be resumed before 2.00 P.M. if the works are completed. 

KOLATHUR AREA: Ramamoorthy colony, Ramamoorthy colony 3rd main road (part), Vetri nagar (part), Moorthy st, Thiruvenkadam st, Sivalingam st, Kuppusamy st, Thangavelu st, Paul Varghees st, S.R.P. koil st (North) one part.

PERIYAR NAGAR AREA: Jaganathan salai, Kandasamy salai, Periyar nagar (4th to 7th and 12th to 15th) st, Balasubramaniam salai, Chandrasekaran salai, Karthikeyan salai, 70 feet road, 1st Main road Jawahar nagar.

MANALI AREA: MGR nagar, Periyar nagar, Chinnasekkadu, Baljipalayam, Avurikkollaimedu,  KK Thazhai, Parthasarathy st, Salaima nagar, Ambedkar st, Bharthiyar st, Vimalapuram, Iswariya nagar, Padmagiri nagar, Moolachatram Parvathy nagar, Pachaiyappa Garden, Ganapathy, Sathyamoorthy nagar, JJ nagar, VP nagar, TKP nagar, ME road, Gangai amman nagar, Ramasamy nagar, Kamarajar nagar, Vetrivinayagar nagar, Rajaji nagar, Kargil nagar, Aandarkuppam, Kamarajapuram, Kaniyammanpettai Ariyalur.

VILLIVAKKAM AREA: Vasantha garden 1-4 st, Appadurai main 1-2 st, part of Munusamy st, Madurai st, Mylappa st, Bagaru st, Bharathamatha st, part of Palayakara st, Pillinkton road, New st.

LAKSHMIPURAM  AREA: Vettri nagar, Ganapanthi nagar (Cannal road), Annai Rajammal nagar, Jayalakshmi nagar, Ragavan nagar, Annai Indira nagar, Cosmos nagar, Kamaraj nagar, Thangavelnagar, Dhanalakshmi nagar, Subash nagr, Janakiram nagar, Singaravelan nagar, Subaramani nagar, Sakthi nagar, Sree Venkatesai nagar (part), Sri ram nagar,Ranganathan nagar, Ayyan Thiruvalluvar salai (Tower line road).

Facility to pay Income Tax in any city from 1st October.


Posted on : 17/Sep/2017 13:21:59




 
 
The facility to pay Income Tax anywhere throughout the country will be implemented from 1st October. In the 1st Phase of this plan, 100 cities in the country will be linked.

In the present system, the taxpayer can pay Income Tax only in their resident states. This restriction posed some hardships for various taxpayers.

As a solution to prevent the above hardships, the Department of Income Tax has planned to introduce a new system to pay Income Tax in the cities of Delhi and Mumbai in October. Further, there is a plan to link 100 cities in the country in the 1st Phase of this plan.

Presently, the details of the taxpayer can be accessed only in their cities of residence. However, with the recently developed software, all  IT offices will get linked. This will facilitate the taxpayer to pay his IT from anywhere throughout the country. Further, the details of the Taxpayer can also be accessed from anywhere.

This facility will also eliminate any malpractices or mal-operations to avoid paying IT.

The software for the above facility is ready. With this, there will be a facility to monitor all the IT cases in the country from any city, for example, Delhi.

Each taxpayer will be given a unique individual number. The IT office assessor will be able to monitor the IT status of the concerned taxpayer.

The notable point here is that as the assessor is monitoring the It payment details of the taxpayer through a number, he/she may not even know who the assessor is. Even in the case, more details are to be sought, the assessor cannot directly approach the taxpayer. The information will be passed on to the taxpayer only through the computer.

With the implementation of the above system, it is confidently expected that direct contacts will be totally avoided while there will be more transparency in the process.
How can 15 minutes of daily walk help you?

Posted on : 12/Sep/2017 15:57:23



 
Most of us do a mistake by getting a gym membership and skip the practice of hitting the gym within even 3 months. There are however easier alternatives to keep your body fit. For this, you need not really spend in leaps and bounds. Do you know? According to a recent Harvard study, one can extend their lifetime by several years just with 15 minutes of daily walking.
 
The scientific data behind the study conducted across the world, boasting benefits of walking are listed below for you
 
Stronger bones - when you are in your 30s or nearing it, you should keep in mind that your bones may start deteriorating at this period. You may be prone to bone-related disorders because of low bone mass. With walking, you can increase bone density.
 
Burn calories - a study was conducted by researchers at the University of Tennessee. It states that comparing women who work out and those who walk, the latter enjoy lesser body fat than the former. This is especially true in case of women of the age 40 to 66 years.
 
Boosts mood - American Psychological Association experimented about the association of walking with one’s mood. This involved studying college students. The experiment results state that there is positive effect of walking on one’s mood. This was even possible with just 12-minute walking every day.
 
Improves creativity - Stanford University study states that walking substantially enhances creativity as compared to ideally sitting. When you think of giving out a creative idea to your clients for any project, you could perhaps think of a new way!

Shaper brain - Frontiers of Aging Neuroscience conducted a study in this regard. It states that the different parts of your brain enjoy better coordination and connectivity as you walk. In fact, you may prevent your brain from possible age related mental disorders with walking.
 
Forest bathing is practiced in Japan. It involves people strolling in forest to get in touch with nature and get their mind relaxed. This largely helps them in getting out of fight depression and get relaxed. You however need not worry about not being able to hit a forest. A relaxing park would do equal magic.
 
Steady fast pace - make sure to walk at a steady faster pace and not to slow. You should however not give up for not being able to cope with the same speed. Keep walking more.

NEWS TODAY 17.07.2026