Wednesday, September 20, 2017

மாநில செய்திகள்

புதுச்சேரி மருத்துவ மாணவர்கள் 778 பேர் நீக்கத்துக்கு இடைக்கால தடை சென்னை ஐகோர்ட்டு உத்தரவு


புதுச்சேரி மருத்துவ மாணவர்கள் 778 பேர் நீக்கத்துக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

செப்டம்பர் 20, 2017, 03:15 AM
சென்னை,

புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியிலும், நிகர்நிலை பல்கலைக்கழகத்திலும் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் கடந்த 2016-2017-ம் கல்வி ஆண்டில் 778 மருத்துவ மாணவர்கள் இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளுக்கு புறம்பாக சேர்க்கப்பட்டதாக கூறி அந்த மாணவர்களை கல்லூரியில் இருந்து நீக்கி புதுச்சேரி அரசு கடந்த 14-ந் தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து மருத்துவ மாணவர்களான திவ்யா, விவேக், விக்னேஷ் உள்பட 108 பேர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரையை ஏற்று புதுச்சேரி அரசு எங்களை கல்லூரியில் இருந்து நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. எங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்க எந்த வாய்ப்பும் அளிக்கப்படவில்லை. ஒரு ஆண்டுக்கு பின்பு திடீரென்று எங்களை கல்லூரியில் இருந்து நீக்கி உத்தரவிட்டிருப்பதால் எங்களது எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, புதுச்சேரி அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து விட்டு எங்களை மருத்துவ படிப்பை தொடர அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, புதுச்சேரி தனியார் மருத்துவ கல்லூரி மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் படித்து வந்த 778 மருத்துவ மாணவர்களையும் நீக்கி புதுச்சேரி அரசு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

மேலும், இந்த வழக்கு சம்பந்தமாக மத்திய அரசு, இந்திய மருத்துவ கவுன்சில், புதுச்சேரி அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை அடுத்த மாதம்(அக்டோபர்) 23-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.
மாவட்ட செய்திகள்

போலி டாக்டருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை ஓமலூர் கோர்ட்டு தீர்ப்பு



போலி டாக்டருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து ஓமலூர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

செப்டம்பர் 20, 2017, 04:30 AM
ஓமலூர்,

சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த டேனிஸ்பேட்டை ஊராட்சி பாலமேடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி, கூலித்தொழிலாளி. இவர் கடந்த 15.4.2010 அன்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு, டேனிஸ்பேட்டையில் உள்ள ஒரு கிளினிக்கில் சிகிச்சை பெற்றார்.

அப்போது சிகிச்சை அளித்தவர் போலி டாக்டர் என சந்தேகம் அடைந்த பழனிசாமி, தீவட்டிப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட கிளினிக்கில் சோதனை நடத்தி விசாரித்தனர்.

விசாரணையில், அங்கு மருத்துவம் பார்த்து வந்த காடையாம்பட்டி கோட்டேரி கரை பகுதியைச் சேர்ந்த முருகேசன்(வயது 47) என்பவர் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார் என தெரியவந்தது. இதையடுத்து போலி டாக்டர் முருகேசனை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை ஓமலூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட முருகேசனுக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து மாஜிஸ்திரேட்டு ரமேஷ் தீர்ப்பு கூறினார்.
தலையங்கம்  அவிழ்க்க சிரமப்படும் சட்டசிக்கல்


தமிழ்நாட்டில் 1969–ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா மறைந்தவுடன், தி.மு.க.வில் யார் முதல்–அமைச்சராக வருவது குறித்து தொடக்கத்தில் சில கருத்து வேறுபாடுகள் மட்டும் இருந்ததே தவிர பிளவு எதுவும் இல்லை.

செப்டம்பர் 20 2017, 03:00 AM

தமிழ்நாட்டில் 1969–ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா மறைந்தவுடன், தி.மு.க.வில் யார் முதல்–அமைச்சராக வருவது குறித்து தொடக்கத்தில் சில கருத்து வேறுபாடுகள் மட்டும் இருந்ததே தவிர பிளவு எதுவும் இல்லை. ஒன்றாகவே செயல்பட்டனர். 1972–ல்தான் எம்.ஜி.ஆர். தி.மு.க.வை விட்டு விலகி, அ.தி.மு.க. என்ற தனிக்கட்சியை உருவாக்கினார். 1987–ல் எம்.ஜி.ஆர் மறைந்தவுடன், ஜா–அணி, ஜெ–அணி என்று பிளவு ஏற்பட்டாலும், சிறிது காலத்தில் இரு அணிகளும் ஒன்றாக இணைந்து ஜெயலலிதா தலைமையில் கட்சி வலுவுடன் செயல்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் 5–ந்தேதி ஜெயலலிதா மரணம் அடைந்தவுடன், முதலில் சசிகலா அணி, ஓ.பி.எஸ். அணி என்று உருவெடுத்து, ஓ.பன்னீர்செல்வம் அணியில் 11 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். அந்த நேரத்தில் எடப்பாடி பழனிசாமி அரசு நம்பிக்கைகோரும் வாக்கெடுப்பு நடத்தியபோது, ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த 11 பேர் எதிர்த்து வாக்களித்தனர். அப்போது, அவர்கள் மீது கட்சித்தாவல் நடவடிக்கை எடுக்கவில்லை. பிறகு எடப்பாடி பழனிசாமி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி, டி.டி.வி.தினகரன் அணி என மூன்று அணிகளாக பிளவுப்பட்டிருந்தது. அதன்பிறகு ஓ.பி.எஸ். அணியும், எடப்பாடி பழனிசாமி அணியும் ஒன்றாக இணைந்தது. டி.டி.வி.தினகரன் அணி தனியாகவே இருந்தது.

தினகரன் ஆதரவாளர்களான 19 எம்.எல்.ஏ.க்கள், தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து, தாங்கள் எடப்பாடி பழனிசாமியை முதல்–அமைச்சராக செயல்பட ஆதரவு அளிக்கவில்லை என்று கடிதம் கொடுத்தனர். இந்த 19 பேரில், ஒருவரான ஜக்கையன் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்கு வந்து, தான் கவர்னருக்கு எழுதிய கடிதத்தை திரும்ப பெற்றுக்கொள்வதாக சபாநாயகருக்கும், கவர்னருக்கும் தெரிவித்துவிட்டார். ‘கவர்னரிடம் போய் இவ்வாறு கடிதம் கொடுத்தது கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தாங்களாகவே முன்வந்து வெளிவந்ததாக கருதப்படுகிறது’ என்ற அடிப்படையில், இந்திய அரசியல் சட்டம் 10–வது அட்டவணையின்படி ஏற்படுத்தப்பட்டுள்ள 1986–ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபை உறுப்பினர்களின் (கட்சி மாறுதல் காரணம் கொண்டு தகுதியின்மை ஆக்குதல்) விதியின்கீழ் மீதமுள்ள 18 பேரின் எம்.எல்.ஏ. பதவியை தகுதியிழக்க செய்வதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். இப்போது சட்டசபையில், எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தால் நிச்சயமாக வெற்றி பெற்றுவிடமுடியும் என்றநிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், இது சட்டப்படி செல்லுமா? என்பதில்தான் கடுமையான சட்டசிக்கல் ஏற்பட்டுவிட்டது.

எதிர்கட்சிகள் எல்லாம், இது ஜனநாயக படுகொலை என்று கூறுகிறார்கள். அரசியல் சட்டத்தில் 102, (2) (ஏ) பிரிவின்கீழ் ஒருவர் அவர் சார்ந்திருக்கும் அரசியல் கட்சியின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகினால் மட்டுமே தகுதி இழக்கும் நிலையை அடைகிறார் என்றும், 102(2) (பி)–ன் கீழ் தன்கட்சி பிறப்பித்த கட்டளையை மீறி சட்டமன்றத்தில் ஓட்டுப்போட்டாலோ, ஓட்டுப்போடாமல் இருக்கும் வகையில் அவைக்கு வராமல் இருந்தாலோ தன்பதவியை இழக்கும்நிலை ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், உத்தரகாண்டில் இதேபோல் 9 எம்.எல்.ஏ.க்கள் கடந்த ஆண்டு முதல்–மந்திரிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி கவர்னரை சந்தித்ததையொட்டி அவர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றமும் நடவடிக்கை எடுத்தது சரியே என்று உறுதிசெய்தது. ஆனால், உத்தரகாண்டில் இந்த 9 எம்.எல்.ஏ.க்களும், 27 எதிர்கட்சி உறுப்பினர்களோடு சேர்ந்து கவர்னரை சந்தித்தனர். இதனால் அதுவும், இதுவும் ஒன்றாக வராது என்றும் கூறுகிறார்கள். மொத்தத்தில், தகுதிநீக்கம் செல்லுமா?, செல்லாதா? என்பது இனி நீதிமன்றங்களின் தீர்ப்புகளில்தான் இருக்கிறது. சென்னை ஐகோர்ட்டில் இதுதொடர்பாக இன்றுவரும் வழக்கில் நிச்சயமாக ஒரு பதில் கிடைக்கும் என்றாலும், இந்தப்பிரச்சினை உச்சநீதிமன்றம் வரை இழுத்துக்கொண்டேதான் போகும். இந்த சிக்கலுக்கான முடிவை நீதிமன்றங்கள்தான் தரும்.
எம்.எல்.ஏ.,க்கள்,தகுதி நீக்கத்திற்கு,எதிரான,வழக்கு,விசாரணை, இன்று

சென்னை:கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ், சசி ஆதரவு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், ௧௮ பேரை, தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் உத்தரவிட்டதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இம்மனுக்கள், இன்று நீதிபதி எம்.துரைசாமி முன், விசாரணைக்கு வருகின்றன.



இந்த விவகாரத்தில், உயர் நீதிமன்றம், என்ன தீர்ப்பு கூறுமோ என்ற, எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.முதல்வர் பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக, கவர்னரை சந்தித்து, சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள்,19 பேர், கடிதங்கள் அளித்தனர். இதையடுத்து, அரசு கொறடா அளித்த புகாரில், 19 எம்.எல்.ஏ.,க்களிடமும் விளக்கம் கேட்டு, சபாநாயகர் தனபால், 'நோட்டீஸ்' அனுப்பினார்; நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படியும் உத்தரவிட்டார்.

இந்நிலையில், தினகரன் அணியில் இருந்த, எம்.எல்.ஏ., ஜக்கையன், சபாநாயகரை சந்தித்து விளக்கம் அளித்தார்; பின், முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தார். அதே நேரத்தில், சபாநாயகர் முன், தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல், வழக்கறிஞர், என்.ராஜா செந்துார் பாண்டியன் ஆஜராகி, சில ஆவணங்களை கோரினர்.

மனு தாக்கல்

இந்நிலையில், பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க, கவர்னர் உத்தர விடகோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், எதிர்க்கட்சி தலைவர், ஸ்டாலின் மனு தாக்கல் செய்தார்.இம் மனுவை,நீதிபதி எம்.துரைசாமி விசாரித்தார். விசாரணையின் போது, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ., வெற்றிவேல் தரப்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர், பி.எஸ்.ராமன், 'நம்பிக்கை ஓட்டெடுப்பில் கலந்து கொள்ள விடாமல் தடுக்கும் விதத்தில், தகுதி நீக்கம் செய்யக் கூடும்; எனவே, அதுகுறித்து நாங்கள் தாக்கல் செய்யும் மனுவை விசாரிக்க வேண்டும்' என்றார்.

இவ்வழக்கு விசாரணையை, ௨௦ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி துரைசாமி, 'அதுவரை, நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தக் கூடாது' என, உத்தரவிட்டார். ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவும், வெற்றிவேல் மனுவும், நீதிபதி துரைசாமி முன், இன்று விசாரணைக்கு வர உள்ளன.

இதற்கிடையில், 18 எம்.எல்.ஏ.,க்களையும்
தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் தனபால் உத்தர விட்டுள்ளார். அந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், 18

எம்.எல்.ஏ.,க்களும் மனு தாக்கல் செய்கின்றனர். நேற்று மாலை வரை, வெற்றிவேல் உள்ளிட்ட எட்டு, எம்.எல்.ஏ.,க்கள், மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

உத்தரவு செல்லாது

மனுக்களில், 'எங்களுக்கு பதில் அளிக்க, உரிய சந்தர்ப்பம் தரப்படவில்லை; கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட வில்லை. சபாநாயகரின் உத்தரவு செல்லாது. 'விசாரணை முடியும் வரை, சபாநாயகரின் முடிவுக்கு தடை விதிக்க வேண்டும். நம்பிக்கை ஓட்டெடுப்பில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்' என, கோரப்பட்டுள்ளது.

முன்னதாக, நீதிபதி எம்.துரைசாமி முன், வழக்கறிஞர் பி.ஆர்.ராமன் ஆஜராகி, ''எம்.எல்.ஏ.,க்கள் தகுதியிழப்பை எதிர்த்து, தாக்கல் செய்யப்படும் மனுக்களை, அவசரமாக விசாரணைக்கு எடுக்க வேண்டும்,'' என்றார். அதற்கு, நீதிபதி துரைசாமி, ''வழக்கு தாக்கல் செய்யும் பட்சத்தில், நாளை விசாரணைக்கு எடுக்கிறேன்,'' என்றார்.

சசி ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள் சார்பில், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் சல்மான் குர்ஷித், துஷ்யந்த் தவே ஆகியோர் ஆஜர் ஆகின்றனர். எம்.எல்.ஏ.,க்கள் தகுதியிழப்புக்கு முழுமையான தடை விதிக்கப்படுமா; நிபந்தனைகளுடன் கூடிய தடை இருக்குமா அல்லது எதிர் தரப்பில் பதில் அளிக்க, நோட்டீஸ் அனுப்பப்படுமா என்பது, இன்று தெரிய வரும்.


2க்கு மேல் பெற்றால் வேலையில்லை :சட்டத்துக்கு அசாம் அரசு ஒப்புதல்
கவுஹாத்தி: 'இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், அவர்களுக்கு, அரசு வேலை, சலுகை கிடையாது' என்ற புதிய சட்டத்திற்கு, அசாம் மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.





அசாம் மாநிலத்தில், முதல்வர் சர்பானந்தா சோனவால் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. 2001ல், மாநிலத்தில், 2.66 கோடியாக

இருந்த மக்கள் தொகை, 2011ல், 3.12 கோடியாக உயர்ந்தது. பெருகி வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த, மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன்படி, இரண்டுக்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ளவர்களுக்கு அரசு பணி, சலுகைகளை பெறுவதில் தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக, மாநில அரசு சமீபத்தில் அறிவித்தது.

இதற்கான புதிய சட்டம், மாநில சட்டசபையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இரண்டு நாட்களுக்கு முன் நடந்த, சட்டசபைகூட்டத்தில், நீண்ட விவாதத்திற்கு பின், புதிய சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன்படி, இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளோர், அரசு பணி, சலுகைகளை பெற முடியாது.

பஞ்சாயத்து, நகராட்சி தேர்தல்களில் போட்டியிட முடியாது. இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்ற, எம்.எல்.ஏ.,க்களின் பதவியை ரத்து செய்யவும், எதிர்காலத்தில், இவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கவும் அனுமதி கோரும் மசோதா, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Tuesday, September 19, 2017

மாணவர்கள் உடல் பருமன் கூடுகிறது; சீருடை அளவு பெரிதாகிறது

சிங்கப்பூர் மாணவர்களிடையே உடல் பருமன் கூடிவருவதன் காரணமாக பள்ளிக்கூடச் சீருடை அளவு பெரிதாகி வருகிறது. இந்தத் தொழில்துறையில் 50 ஆண்டு காலமாக இருந்து வரும் ஷங்காய் ஸ்கூல் யுனிஃபார்ம்ஸ் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த திருவாட்டி டோரிஸ் இயோ, “நம்முடைய மாணவர்கள் அளவில் பெருத்து வருகிறார்கள். இப்போது அவர்களுக்குத் தோதாக உடைகளைப் பெரிதாக தைக்க வேண்டியிருக்கிறது,” என்று கூறினார். குறிப்பாக கால்சட்டைகளைப் பெரிதாகத் தைக்க வேண்டியிருக்கிறது என்றார் அவர். சிங்கப்பூரில் பள்ளி மாணவர்களிடையே உடல்பருமன் விகிதம் அதிகமாகி வருகிறது. 2000ஆம் ஆண்டில் 10% ஆக இருந்த அந்த விகிதம், 2014ல் 12% ஆகியது.

‘Retirement benefits under CPS to be disbursed shortly’


By Express News Service  |   Published: 19th September 2017 02:03 AM  |    

CHENNAI: The State government has submitted that orders were issued as early as in February 2016 to the effect that the Contributory Pension Scheme (CPS) accumulation i.e. the employee’s contribution along with government contribution and interest thereon up to the date of final authorisation in respect of retired, resigned, died employees and whose services are terminated due to various reasons be settled immediately, subject to obtaining an undertaking from them and the legal heirs of the deceased that they would not make any further claims under the CPS.
The secretary (Expenditure) said this in his counter-affidavit filed before Justice N Kirubakaran in response to writ petitions from Sri Venkateswara Aided Middle School in Namakkal district and others, on Monday.On September 15, the judge had directed the State government to furnish certain information with regard to the contributory pension scheme (CPS) introduced by it recently.As per the report of the Commissioner of Treasuries and Accounts, 7,409 applications requesting CPS final settlement have been received up to August 31 last. Of this, final authorisation was issued in respect of 3,288 retired/resigned employees/deceased employees for `125,24,24,317 and remaining applications would be authorised on receipt of processed requisite documents, the counter said.
Denying the charge, the counter said the government has been contributing its share regularly after the deduction of the employees’ contribution. There is no failure in making the government contribution.

The total amount of employee and government contribution with interest is being deposited in the public account every year. A sum of `18,016 crore has been accumulated, including interest up to March 31 last. Account slips for 2016-17 had already been issued to the individuals concerned and the same had been uploaded in the website, the counter added.
The matter has been adjourned till September 22.

NEWS TODAY 17.07.2026