Tuesday, October 3, 2017

காய்ச்சல் பாதித்த 100 பேரில் 6 பேருக்கு டெங்கு:மதுரையில் குவியும் நோயாளிகள்
பதிவு செய்த நாள்03அக்
2017
00:53




மதுரை;மதுரை அரசு மருத்துவமனையில் செயல்படும் 24 மணி நேர காய்ச்சல் சிறப்பு வார்டிற்கு தினமும் சராசரியாக வரும் 100 பேரில் 6 பேர்களுக்கு டெங்கு அறிகுறி தென்பட்டு வருகிறது.கடும் காய்ச்சல் பாதித்து தினமும் 1,500 பேர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். ரத்த பரிசோதனையில் பலருக்கு டெங்கு அறிகுறி தென்பட்டு சிறப்பு வார்டில் மேல்சிகிச்சை பெறுகின்றனர். 

டெங்கு காய்ச்சலுக்கு ஒத்தக்கடை திருச்செல்வி,11, செல்லுார் சஞ்சனா,4, விளாங்குடியை சேர்ந்த 8 மாத கர்ப்பிணி பரமேஸ்வரி, திருமங்கலம் ஜவஹர்நகர்தெரு நாகப்ரஜீத்,13, உட்பட 2 மாதத்தில் மட்டுமே 7க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.இன்னும் ஏராளமானவர்கள் டெங்கு பாதிப்பில் பலியானாலும், கல்லீரல் பாதிப்பு உட்பட பிற நோய்களால் மட்டுமே இறக்கின்றனர் என அரசு மருத்துவமனையில் மழுப்பலான தகவல் தருகின்றனர்.

மாவட்டத்தில் செல்லுார், ஒத்தக்கடை, வாடிப்பட்டி, திருமங்கலம், விளாங்குடி உட்பட அனைத்து பகுதிகளிலும் சுகாதார பணிகள் மந்த நிலையில் நடப்பதால் ரோடுகள், வீடுகளை சுற்றியுள்ள பயனற்ற டயர், உரல், சிரட்டைகளில் மழை நீர் தேங்கி கொசுக்கள் மூலம் தீவிரமாக காய்ச்சல் பரவி வருகிறது.டெங்கு அதிகரிப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை தடுக்க, மதுரை அரசு மருத்துவமனை விபத்து அவசர சிகிச்சை பிரிவிற்குள் 24 மணிநேர காய்ச்சல் சிறப்பு பிரிவு செயல்படுகிறது. 

இங்கு 5 டாக்டர்கள் சுழற்சி முறையில் சிகிச்சை அளிக்கின்றனர். தினமும் காய்ச்சல் பாதித்து வரும் 100 பேர்களில் 6 பேர்களுக்கு டெங்கு அறிகுறி தென்படுவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.மதுரை மட்டுமின்றி திண்டுக்கல், கன்னியாகுமரி, தேனி, சிவகங்கை மாவட்டத்தில் இருந்து தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மதுரையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இதனால், மதுரை நகரே டெங்கு பீதியில் தவித்துவருகிறது. டெங்கு பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க, சுகாதாரப்பணிகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற வேண்டுகோள் அதிகரித்து வருகிறது.
அமைச்சரின் மவுனம்: கிளம்புது சந்தேகம்
சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில், சிகிச்சையில் இருந்த போது, ஜெயலலிதாவை, அமைச்சர்கள் சந்தித்தனரா என்ற கேள்விக்கு, சுகாதாரத் துறை அமைச்சர் பதில் அளிக்க மறுத்து விட்டார்.



அவரது மவுனம், இந்த விவகாரத்தில், மேலும்சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், சிகிச்சை பலனின்றி, முன்னாள் முதல்வர், ஜெ., உயிரிழந்தார். ஜெ., மருத்துவமனையில் இருந்த வரை, சசிகலாவை தவிர, வேறு யாரும்  பார்க்கவில்லை என, கூறப்படுகிறது.

ஜெ.,யை பார்த்தோம்

ஆனால், மருத்துவமனைக்கு வந்து சென்ற அமைச்சர்கள், தினமும்,
'ஜெ., நல்ல நிலையில் இருக்கிறார்; இட்லியும், சட்னியும் சாப்பிட்டார்' என, நேரில் பார்த்தது போல், அப்பல்லோ வாசலில் பேட்டி அளித்தனர்.இந்நிலையில், 'ஜெ.,யை நாங்கள் பார்க்கவில்லை.நாங்கள் சொன்னது எல்லாம் பொய்' என, சில நாட்களுக்கு முன், அமைச்சர் சீனிவாசன் கூறி, திடீர் சர்ச்சையை கிளப்பினார்.

அதற்கு எதிராக, 'அனைத்து அமைச்சர்களும், ஜெ.,யை பார்த்தோம்' என, அமைச்சர்கள், ராஜு, நிலோபர் கபில் ஆகியோர் கூறினர். அமைச்சர்களின் மாறுபட்ட கருத்தால், ஜெயலலிதாவை பார்த்தனரா, இல்லையா என்ற கேள்வி எழுந்து உள்ளது.அதனால், சம்பந்தப்பட்ட சுகாதாரத் துறை அமைச்சரான, விஜயபாஸ்கர், இதற்கு விளக்கம் அளிப்பார் என, பத்திரிகையாளர்கள் எதிர்பார்த்தனர்.

ஏற்கனவே, இவர், ஜெ.,மறைந்த சில நாட்களில், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விபரங்களை, அப்பல்லோ மருத்துவர்களுடன் இணைந்து, செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார்.அதனால், தற்போது ஏற்பட்டுள்ள குழப்பத்தையும், அவரே தீர்த்து வைப்பார் என, எதிர்பார்க்கப்பட்டது.
அமைச்சர் மவுனம்

சென்னையில், அரசு நிகழ்ச்சிக்கு பின், விஜயபாஸ்கரை சந்தித்த செய்தியாளர்கள், 'மருத்துவமனையில், ஜெ.,யை, அமைச்சர்கள் சந்தித்தனரா, இல்லையா' என, கேட்டனர்.அதற்கு பதில் கூறாமல், பெரிய கும்பிடு போட்டு போய் விட்டார், அமைச்சர். சசிகலாவின் ஆதரவாளராக கருதப்பட்ட, விஜயபாஸ்கர், இதற்கு பதில் கூறாமல் மவுனம் காப்பது, இந்த விவகாரத்தில், மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

- நமது நிருபர் -
தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தின் முக்கிய சுற்றுலாத் தளங்களின் பட்டியலில் இருந்து தாஜ்மகால் நீக்கம்



உத்தரபிரதேசத்தின் முக்கிய சுற்றுலாத் தளங்களின் பட்டியலில் இருந்து தாஜ்மகால் நீக்கம் செய்யப்பட்டு உள்ளது.

அக்டோபர் 02, 2017, 04:46 PM
லக்னோ

உலகின் ஏழு அதிசயங்களில் இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் அமைந்து உள்ள தாஜ்மகாலும் ஒன்றாகும்.ஆனால் அந்த் மாநிலத்தின் சுற்றுலா கையேட்டில் தாஜ்மகால் பெயர் இடம் பெற வில்லை.உத்திரப்பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிப்பதற்காக அச்சிடப்பட்டுள்ளஇந்த சுற்றுலா கையேட்டில் புகழ் பெற்ற கங்கா ஆரத்தி யை அட்டைபடமாக கொண்டு உள்ளது.ஆனால் மாநிலத்தின் மிகவும் பிரபலமான மற்றும் புகழ்பெற்ற சுற்றுலாத் தளம் தாக்மகாலின் பெயர் காணப்படவில்லை.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் உள்ள தாஜ்மகாலை காண 60 லட்சம் வெளிநாட்டினர் சுற்றுலாவாக வருகின்றனர். இந்த மாநிலத்திற்கு இதன் மூலமே அதிகபடியான வருவாய் வருகிறது.

கடந்த ஜூன் மாதம் உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதியானந்த் கூறும் போது நமது இந்தியா கலாச்சாரத்திற்குடபட்டது ராயாமணமும் கீதையும் தான் தாஜ்மகால் அல்ல என குறிப்டுபிட்டு இருந்தார்.

எனினும், யுனெஸ்கோவின் "உலக பழம்பெரும் தளமாக" தாஜ் மஹால் பெயரிடப்பட்டது, இது பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மையான இந்தியா கீழ் பட்டியலிடப்பட்ட 10 சின்னமான இடங்களில் ஒன்றாக உள்ளது குறிப்பிட தக்கது.
தேசிய செய்திகள்

சசிகலாவுக்கு இன்று ‘பரோல்’ கிடைக்க வாய்ப்பு


சசிகலாவுக்கு இன்று ‘பரோல்’ கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அக்டோபர் 03, 2017, 12:29 AM
பெங்களூரு,

சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது கணவர் நடராஜனை பார்க்க 15 நாட்கள் பரோல் வழங்குமாறு கோரி சசிகலா பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறை நிர்வாகத்திடம் மனு கொடுத்துள்ளார்.

ஆயுதபூஜை உள்பட 4 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு இந்த வாரத்தின் முதல் வேலை நாள் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

சசிகலாவின் மனு மீது சிறைத்துறை அதிகாரிகள் இன்று முடிவு எடுப்பார்கள் என்றும், அவருக்கு இன்றே பரோல் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மாவட்ட செய்திகள்

தாம்பரத்தில் மத்திய அரசை கண்டித்து டாக்டர்கள் உண்ணாவிரதம்


தாம்பரத்தில் மத்திய அரசை கண்டித்து டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அக்டோபர் 03, 2017, 04:15 AM

தாம்பரம்,

சென்னையை அடுத்த மேற்கு தாம்பரத்தில் உள்ள இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு கிளை அலுவலகத்தில் தேசிய அளவில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு ஒரே பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று காலை முதல் மாலை வரை நடந்த இந்த போராட்டத்திற்கு இந்திய மருத்துவ சங்க மாநில தலைவர் ரவிசங்கர் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் முத்துராஜன், தேசிய துணை தலைவர் பிரகாசம் உள்பட ஏராளமான பெண் டாக்டர்கள் மற்றும் மருத்துவ கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

இதுகுறித்து நிருபர்களிடம் இந்திய மருத்துவ சங்க மாநில தலைவர் ரவிசங்கர் கூறியதாவது:–

மருத்துவர் பாதுகாப்பு சட்டம் தமிழகத்தில் இருந்தாலும் தேசிய அளவிலே மருத்துவர்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் ஒரே பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும்.

இதற்காக நாங்கள் ஒருவருடத்திற்கும் மேலாக போராடிக் கொண்டிருக்கிறோம். கடந்த ஜூலை மாதம் டெல்லியில் நடைபெற்ற போராட்டத்திலும் நாங்கள் தமிழகம் சார்பாக 15 பேர் சென்று கலந்துகொண்டோம்.

ஆனால் இதுகுறித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால் காந்தி ஜெயந்தியான இன்று சத்தியாகிரக வழியில் தமிழகம் முழுவதும் அனைத்து மருத்துவர்களும் உண்ணாவிரதம் இருக்கிறோம்.

கருவில் உள்ளது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்பதை அறிய முடியாதபடி ஒரு தடைச்சட்டம் உள்ளது. அந்த தடைச்சட்டம் மிகவும் கடுமையாக இருக்கிறது. எனவே இதனை மாற்றி அமைக்க வேண்டும்.

அதேபோல இன்று மருத்துவ மாணவர்கள் ஒரு கல்லூரியில் தேர்ச்சிபெற்ற பிறகும் அதையும் தாண்டி நெஸ்ட் தேர்வு, எக்ஸிட் தேர்வு என்பதை கொண்டுவந்துள்ளனர். எத்தனைமுறைதான் மாணவர்கள் தேர்வு எழுதிக்கொண்டே இருப்பார்கள்.

உலக அளவிலே இந்திய மருத்துவர்கள் தான் தலைசிறந்த மருத்துவர்கள் என்று சொல்லும்போது இதுபோன்ற ஒரு சட்டத்தை கொண்டுவந்து ஏன் மாணவர்களை நசுக்க வேண்டும். எனவே இந்த சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
தலையங்கம்
சிகிச்சையை விட தடுப்பதே மேல்!

அக்டோபர் 03 2017, 05:00 AM



தமிழ்நாட்டில் அரசியல் பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லை. அதுவும் ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு தமிழக அரசியலில் அறிக்கைகள்,
மறுஅறிக்கைகள், வாதங்கள், எதிர்வாதங்கள் என்று தினமும் அனல்பறக்கும் நிகழ்வுகள் நடக்கின்றன. ஆனால் மக்களுக்கு இப்போது இதற்கெல்லாம் மேல் ஒரு அச்சமான உணர்வு ஏற்பட்டுள்ளது. அது வேகமாக தமிழ்நாடு முழுவதும் பரவிவரும் டெங்கு காய்ச்சலால்தான். ஆஸ்பத்திரிகள் எல்லாம் டெங்கு நோயாளிகளால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றன. பல ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் இல்லாமல், கீழே பாய்விரித்து படுக்கவைக்கும் நிலைமை நோயாளிகளுக்கு ஏற்பட்டுள்ளது. தினமும் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்புகள் நடந்துகொண்டு இருப்பது மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது. 

உடல்வலி, தலைவலி, கடுமையான காய்ச்சல் ஆகியவைகள் இந்த நோய்க்கான அறிகுறி என்றாலும், உடலில் சிவப்பு புள்ளிகள் தோன்றும்போது நிச்சயமாக அது டெங்கு காய்ச்சலின் அறிகுறிதான். நோய் தாக்கம் அதிகமாகி இருக்கிறது என்றால், தலைசுற்று, மயக்கம் ஏற்படும். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தத்தில் பிளேட் லெட் அதாவது தட்டணுக்களின் எண்ணிக்கை வேகமாக குறையும்.

வழக்கமாக ரத்தத்தில் 2½ லட்சம் எண்ணிக்கை என்றளவில் இருக்கவேண்டிய பிளேட் லெட்டின் எண்ணிக்கை 20 ஆயிரத்திற்கும் கீழே போனால் சீரியஸ் என்றுதான் டாக்டர்கள் கருதுகிறார்கள். ஆனால், ரத்தஅழுத்தம் வேகமாக குறைவதும், ஈறுகளில் இருந்து ரத்தம் வடிவதும், மூக்கில் ரத்தம் கசிவதும் வந்தால் கவலைக்கிடமான நிலைக்கு நோயாளிகள் போய்விடுவார்கள். டெங்கு பாதிப்புக்கு முக்கியமான காரணம் ஏடிஸ் இஜிப்டியை என்ற பெண் கொசுதான். மற்ற கொசுக்களைப்போல இவை இரவில் கடிப்பதில்லை.

பகலில்தான் கடிக்கிறது. இந்த கொசுக்கள் சுத்தமான தண்ணீரில்தான் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும். தேங்கி கிடக்கும் மழைநீர், மரப்பொந்துகளில் உள்ள மழைநீர், வீடுகளில் டயர்கள், பாத்திரங்களில் தேங்கி கிடக்கும் தண்ணீரால்தான் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. பூச்சியியல் வல்லுனர்கள் மற்றொரு காரணத்தை கூறுகிறார்கள். இந்தியன் டைப் கழிப்பிடங்களில் இந்த ஏடிஸ் கொசுக்கள் முட்டையிட்டு அவைகள் செப்டிக் டேங்க்குகளில் போய் ஏராளமாக உற்பத்தியாகி கழிப்பறைகளின் பக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள குழாய்களின் முனைகளில் உள்ள துவாரங்கள் வழியாக வெளியே போய்விடுகின்றன.

எனவே இவற்றை கொசுக்கள் வெளியே போகாதபடி, நுண்ணிய துவாரங்கள் கொண்ட வலையால் மூட வேண்டும் என்று கூறுகிறார்கள். ‘குணமாக்குவதைவிட, தடுப்பதே மேல்’ என்றவகையில், வீடுகளில் உள்ளவர்கள் கவனமாக இருந்தாலும், உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் பொறுப்பை சரியாக செய்யாததால்தான் டெங்கு இந்தளவுக்கு வேகமாக பரவிவருகிறது.

இந்த மழைக்கே ஆங்காங்கு தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இவைதான் ஏடிஸ் கொசுக்களின் உற்பத்தி தளமாக இருக்கிறது. உள்ளாட்சி தேர்தல் நடக்காததால் வார்டு கவுன்சிலர்கள், பஞ்சாயத்து போர்டு உறுப்பினர்கள் இல்லாததால் அதிகாரிகளின் நிர்வாகத்தில்தான் உள்ளாட்சி அமைப்புகள் இருக்கின்றன. சுகாதாரத்துறையால் நோய் வந்தபிறகு குணமாக்கும் பணியில்தான் ஈடுபடமுடியும்.

அதை வராமல் தடுக்கவேண்டும் என்றால் உள்ளாட்சி துறைகளின் வேகமான பணிகளில்தான் இருக்கின்றது. இந்த மழைக்கே இவ்வளவு டெங்கு காய்ச்சல் பரவி இருக்கிறது என்றால், இன்னும் வடகிழக்கு பருவமழை வரும்நேரத்தில் என்னவாகுமோ? என்ற அச்சம்தான் பொதுமக்களிடம் இருக்கிறது. பீதியடைய வேண்டாம் என்று வார்த்தைகளில் சொன்னால் பலனில்லை.

செயலில் காட்டவேண்டும். உடனடியாக தமிழ்நாடு முழுவதிலும் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் வீடுகளில் உள்ள மேல்தொட்டிகள், கீழ்தொட்டிகளில் ஏடிஸ் கொசு முட்டைகளில் இருந்து புழுக்கள் வராமல் தடுக்கும் டெமிபாஸ் மருந்து தெளிக்கும் பணிகள், ஆறுகள், குளங்களில் வெக்டோ பாக் மருந்து தெளிக்கும் பணிகள், எம்எல்ஓ மருந்து தெளிக்கும் பணிகள், புரோபெக்சர் ஸ்பிரே அடிக்கும் பணிகள், டீசலுடன் கலந்து பைரிதிரம் புகை மருந்து அடிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு டெங்கு காய்ச்சலை அடியோடு தடுக்க வேண்டும்.

Monday, October 2, 2017

Call for parity between CA certificate and M.Com.

Call for parity between CA certificate and MCom
The Telegraph

Basant Kumar Mohanty

New Delhi, Sept. 24: The Institute of Chartered Accountants of India has demanded that the Chartered Accountancy certificate be treated as equivalent to an MCom degree to improve the best chartered accountants' chances of teaching or going into research.

The Union human resource development ministry has decided to set up a committee of academics to examine the demand, which for now appears to have divided educationists.

The Institute of Chartered Accountants of India (ICAI) does not meet the definition of a university, as contained in the University Grants Commission Act. It's a statutory body set up by Parliament to regulate the profession of chartered accountancy in India.

According to the act, degrees can be awarded only by universities, which are set up by Parliament or state legislatures, and deemed universities.

An ICAI official said that 106 universities did recognise the CA course as equivalent to an MCom programme and allowed CA certificate holders to pursue PhD courses.

The Association of Indian Universities, set up by the universities to decide on equivalence, such as between Indian degrees and foreign certificates, too considers the CA certificate as the equivalent of an MCom, the official said.

But the University Grants Commission, the higher education regulator, refuses to accept this, prompting the majority of universities too to take the same stand.

A commission official explained: "If a certificate granted by an institution other than a university is treated as equivalent to a degree, the sanctity of the university system will be at stake."

Some 15,000 students are awarded the CA certificate every year which allows them to practise as chartered accountants. But those who prefer teaching or research find their options restricted.

Ministry officials said that many certificate courses are indeed accepted as equivalent to master's programmes.

Under the ministry's instructions, the Association of Indian Universities has granted such equivalence to the diploma courses offered by the Indian Institutes of Management and some other institutions, such as the Film and Television Institute of India, Pune.

R.K. Chauhan, vice-chancellor of the Haryana-based Lingaya's University and former University Grants Commission secretary, opposed the ICIA proposal on the ground that "many little-known institutions may demand such equivalence in future".

But he agreed that the CA course was as rigorous as a degree programme and suggested the government "come up with a mechanism to enable the ICAI and other such deserving institutions to award degrees".

Educationist and legal luminary N.R. Madhava Menon supported the ICIA proposal. "Equivalence is not the same as recognition as a degree; it only means that a particular certificate is treated as equal to a degree for a specific purpose. There's nothing wrong in awarding equivalence in deserving cases," he said.

An ICAI official said the CA course had three stages: foundation level, intermediate level and final level. Students who have cleared Class XII can take up the four-paper foundation level, after completing which they are promoted to the seven-paper intermediate level.

Commerce graduates with 55 per cent marks and other graduates with 60 per cent marks can secure direct admission to the intermediate level. The final level has eight papers.

The ICAI has also demanded that Class XII graduates who secure admission to the foundation level should, after clearing the intermediate level, be treated as equivalent to BCom degree holders.

NEWS TODAY 04.06.2026