Saturday, November 11, 2017

மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜியுடன் கமல்ஹாசன் சந்திப்பு



நடிகர் கமல்ஹாசன் கொல்கத்தாவில் மேற்குவங்க முதல்- மந்திரி மம்தா பானர்ஜியை சந்தித்து அரசியல் பிரவேசம் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.

நவம்பர் 11, 2017, 04:00 AM
கொல்கத்தா,

நடிகர் கமல்ஹாசன் ஊழலுக்கு எதிராகவும், விவசாயிகள், மீனவர்கள் பிரச்சினைகளிலும் தீவிரமாக குரல் கொடுத்து வருகிறார். அவர் ‘டுவிட்டர்’ அரசியல் செய்வதாக ஆளும் கட்சியினர் விமர்சித்ததை தொடர்ந்து நேரடியாக களத்தில் குதித்தார். கொசஸ்தலை ஆற்றில் அனல் மின்நிலைய சாம்பல் கழிவு கொட்டப்படுவதை ஆய்வு செய்தார்.


பிறந்த நாள் விழாவை ரத்துசெய்து ஏழைகளுக்கு மருத்துவ முகாம் நடத்தினார். ரசிகர்களையும் சந்தித்து ஆலோசனைகள் வழங்கினார். இன்னொருபுறம் பா.ஜனதா, காங்கிரஸ் அல்லாத தலைவர்களையும் சந்தித்து பேசி வருகிறார்.

மம்தாவுடன் சந்திப்பு

கேரளா சென்று முதல்-மந்திரி பினராயி விஜயனை சந்தித்து பேசினார். இதனால் அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் சேரப்போவதாக கூறப்பட்டது. இதனை கமல்ஹாசன் மறுத்தார். பின்னர் ஊழலுக்கு எதிராக கட்சி தொடங்கி ஆட்சியை பிடித்த டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலையும் தனது வீட்டில் சந்தித்து பேசினார்.

இந்த நிலையில் கமல்ஹாசன் நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கொல்கத்தா புறப்பட்டு சென்றார். அங்கு மேற்குவங்க முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார்.

திரைப்பட விழா

மம்தா பானர்ஜி தேசிய அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டு வருபவர். அவரை கமல்ஹாசன் சந்தித்து பேசியது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தனிக்கட்சி தொடங்குவது சம்பந்தமாகவும், எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்தும் மம்தாவுடன் அவர் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

பின்னர் கொல்கத்தாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். முன்னதாக கொல்கத்தா விமான நிலையம் வந்து இறங்கிய அவர் நிருபர்களிடம் கூறும்போது, “கொல்கத்தாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள வந்து இருக்கிறேன். மேற்குவங்க திரைப்படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவற்றை விரும்பி பார்ப்பேன். மம்தா பானர்ஜியையும் பிடிக்கும். அவரை சந்திப்பதில் அரசியல் உள்நோக்கம் இல்லை” என்றார்.
தலையங்கம்
அரசியலில் சலசலப்பு



அரசியலை பொறுத்தமட்டில், ‘நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர பகைவர்களும் இல்லை’ என் பார்கள். எந்தநேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்பார்கள்.

நவம்பர் 11 2017, 03:00 AM

அரசியலை பொறுத்தமட்டில், ‘நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர பகைவர்களும் இல்லை’ என் பார்கள். எந்தநேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்பார்கள். அதுபோன்று நடந்த நிகழ்வு தமிழக அரசியலில் பெரிய சலசலப்பை ஏற்படுத்திவிட்டது. ‘தினத்தந்தி’யின் 75–வது ஆண்டு பவளவிழா கடந்த 6–ந்தேதி சென்னையில் சீரும் சிறப்புமாக நடந்தது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டார். மிகவும் சிறப்பான ஏற்பாடுகளோடு நடந்த இந்தவிழாவில், பிரதமர் மிகவும் மகிழ்வோடு காணப்பட்டார். விழா முடிந்தவுடன் அப்படியே மேடையில் இருந்து அவர் திரும்பி சென்றுவிடவில்லை. மேடையைவிட்டு கீழே இறங்கி தன்னை எதிர்த்து குரல் கொடுத்து கொண்டி ருக்கும் வைகோ 2–வது வரிசையில் அமர்ந்து கொண்டி ருந்தாலும் அவரைப்பார்த்து, ‘வைகோ ஹவ் ஆர் யூ’ என்றுகேட்டு அவருடன் கைகுலுக்கினார். அதேபோன்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அவரது மகனான டாக்டர் அன்புமணி ராமதாசுடனும் பேசிவிட்டு சென்றார். பிரதமரின் சுற்றுப்பயணத்தில் ‘தினத்தந்தி’ நிகழ்ச்சியும், அவரிடம் இணைச்செயலாளராக பணி யாற்றிய தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.வி.சோமநாதன் மகள் திருமணத்திலும் கலந்து கொள்வதாக மட்டுமே இருந்தது.

ஆனால், யாரும் எதிர்பாராதவிதமாக கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி வீட்டிற்குச்சென்று அவரிடம் உடல்நலம் விசாரித்தார். அதுமட்டுமல்லாமல், ‘‘இங்கிருந்தால் உங்களை சரியாக ஓய்வெடுக்கவிடமாட்டார்கள். எல்லோரும் வந்து பார்த்துக் கொண்டே இருப்பார்கள். டெல்லிக்கு என் வீட்டில் ஓய்வெடுக்க வாருங்கள்’’ என்று அழைத்தார். கருணாநிதி மனைவி தயாளு அம்மாளையும் சென்று பார்த்தார். அவரிடமும் உடல்நலம் விசாரித்தார். அரசியலில் எதிரும் புதிருமாக இருக்கும் தி.மு.க. தலைவர் வீட்டிற்கு மோடி சென்றது அரசியலில் பெரிய பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. மோடி அரசியலுக்காக வரவில்லை என்று மு.க.ஸ்டாலின் மிக உறுதியாக சொல்லி விட்டார். அடுத்த 2 நாட்களிலேயே ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்து ஒரு ஆண்டான நாளில் அதை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டமாக தி.மு.க. பல இடங்களில் நடத்தியது. மதுரையில் நடந்த கூட்டத்தில் பிரதமரை அரசியலுக்காக பயன்படுத்த எந்தநேரத்திலும், எந்த நிமிடத்திலும் நாங்கள் தயாராக இல்லை. இன்றைக்கு அரசியலில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என சிலர் திட்டமிடுகிறார்கள். அவர்களது கனவு நிச்சயம் பலிக்காது என்று மு.க.ஸ்டாலின் உறுதியாக கூறினார்.

பிரதமரின் வருகையை தொடர்ந்து நடந்த இந்த சம்பவங்களால் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக சொன் னாலும், தமிழக அரசியலில் ஒரு பரபரப்பான நிலையே காணப்படுகிறது. 1977–78–ல் பா.ஜ.க. தொடங்குவதற்கு முன் ‘ஜனசங்கம்’ என்றபெயரில் கட்சி இருந்தது. அப்போது அந்தகட்சியும் அங்கம் வகித்திருந்த ஜனதா அரசாங்கத் திலும், 1988–90–ல் பா.ஜ.க வெளியே இருந்து ஆதரவு வழங்கிய வி.பி.சிங் அரசாங்கத்திலும், தி.மு.க. அங்கம் வகித்திருந்தது. 1999–ல் வாஜ்பாய் அரசாங்கத்திற்கு ஜெயலலிதா திடீரென ஆதரவை வாபஸ் பெற்றநேரத்தில், வாஜ்பாயின் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின்போது தி.மு.க. ஆதரவு அளித்தது. இதனைத்தொடர்ந்து பாராளு மன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்த தி.மு.க., வாஜ்பாய் அரசாங்கத்தில் 2004 வரை அமைச்சரவையிலும் அங்கம் வகித்தது. 2001–ம் ஆண்டு தி.மு.க.வும், பா.ஜ.கவும் சட்டசபை தேர்தலில் கூட்டணி வைத்தன. 2004–ல் பா.ஜ.க.வுடன் கூட்டணியை முறித்துக்கொண்ட தி.மு.க., காங்கிரசோடு கூட்டணி வைத்தது. 2012–13–ல் காங்கிரசுடன் கூட்டணியை முறித்து மீண்டும் 2016–ல் காங்கிரசோடு கூட்டணி வைத்தது. ஆக, அரசியலில் உறவுகள் மாறி மாறி வரும். ‘‘நடக்கும் என்பார் நடக்காது, நடக்காது என்பார் நடந்துவிடும்’’ என்பார்கள். ஆக, தேர்தலில் யாரோடு கூட்டணி, யாரோடு உறவு என்பதெல்லாம் இப்போது யார் என்னதான் சொன்னாலும், தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் என்ன முடிவு எடுக்கிறதோ, அதன் அடிப்படையில் தான் உறவுகள் அமையும். இது ஒரு ‘அரசியல் சதுரங்கம்’ தான் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
சசிகலா குடும்பத்தினரின் வீடுகள், அலுவலகங்களில் 2-வது நாளாக அதிரடி சோதனை முக்கிய ஆவணங்கள் சிக்கின



சசிகலா குடும்பத்தினரின் வீடுகள், அலுவலகங்கள் என 147 இடங்களில் நேற்று 2-வது நாளாக வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

நவம்பர் 11, 2017, 03:45 AM
சென்னை,

சசிகலா குடும்பத்தினரின் வீடுகள், அலுவலகங்கள் என 147 இடங்களில் நேற்று 2-வது நாளாக வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கின.

மத்திய அரசு சமீபத்தில் நடத்திய விசாரணையில் நாடு முழுவதும் பலர் போலி நிறுவனங்களை தொடங்கி அதில் கருப்பு பணத்தை முதலீடு செய்து பெருமளவில் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக தகவல்களை வெளியிட்டது. அதனைத்தொடர்ந்து பல்வேறு இடங்களில் ‘ஆபரேஷன் கிளன் பிளாக் மணி’ என்ற பெயரில் வருமான வரித்துறை அதிகாரிகள் பல கட்டங்களாக அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் பல நிறுவனங்கள் போலி பெயர்களில் கருப்பு பணத்தை முதலீடு செய்து வரி ஏய்ப்பு செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் சென்னை, தஞ்சை, மன்னார்குடி, திருச்சி, கோவை, நாமக்கல், கோடநாடு உள்ளிட்ட இடங்களிலும், கர்நாடக மாநிலம் பெங்களூருவிலும், தெலுங்கானாவில் ஐதராபாத்திலும் வருமான வரித்துறையினர் இதுவரை இல்லாத அளவுக்கு திடீர் சோதனையில் நேற்று முன்தினம் ஈடுபட தொடங்கினார்கள்.

இதில் சசிகலா, டி.டி.வி.தினகரன், சசிகலாவின் கணவர் நடராஜன், சகோதரர் திவாகரன், அண்ணன் மனைவி இளவரசியின் மகன் மற்றும் மகள் ஆகியோருக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்கள், நிறுவனங்கள் என மொத்தம் 187 இடங்களில் நேற்று முன்தினம் அதிரடியாக நுழைந்த வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை செய்தனர்.

நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை நள்ளிரவு வரை நீடித்தது. இதில் 40 இடங்களில் சோதனை முடிந்த நிலையில் மீதமுள்ள 147 இடங்களில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை மேற்கொண்டனர். சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் ஜெயா டி.வி., நமது எம்.ஜி.ஆர். அலுவலகத்தில் நேற்று முன்தினம் தொடங்கிய சோதனை 2-வது நாளாக நீடித்தது.

ஜெயா டி.வி.யின் முதல் தளத்தில் நடைபெற்ற இந்த சோதனையில் அதிகாரிகள் நிறுவனத்தின் வங்கி கணக்கு, ஆவணங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து சரிபார்த்தனர். மேலும், ஒளிபரப்பு அறைக்கு சென்று அங்கிருந்த சி.டி.க்களை பறிமுதல் செய்து அதில் உள்ள வீடியோக்களை ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது.

ஜெயா டி.வி.யில் சிக்கிய பல முக்கிய ஆவணங்களை 2 கார்களில் 6 அதிகாரிகள் காலை 10 மணிக்கு எடுத்து சென்றனர். அவர்கள் சென்னை கோடம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் உள்ள ஜெயா டி.வி.யின் தலைமை செயல் அதிகாரி விவேக் வீட்டுக்கும், பொதுமேலாளர் நடராஜன் வீட்டுக்கும் கொண்டு சென்று, அவர்களிடம் விசாரணை நடத்தியதாக தெரிகிறது.

கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து அதிகாரிகள் அவர்களிடம் நடத்திய விசாரணையில், பெரும்பாலான கேள்விகளுக்கு தெரியாது என்ற பதிலையே அவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர், மாலை 4 மணியளவில் ஜெயா டி.வி. அலுவலகத்துக்கு வந்த அதிகாரிகள், பொது மேலாளரை அலுவலகத்தில் விட்டு விட்டு, புறப்பட்டு சென்றனர். நிறுவனத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அதிகாரிகள் கையோடு எடுத்துச் சென்றனர். தொடர்ந்து அது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

சென்னை மகாலிங்கபுரம் ராமநாதன் தெருவில் உள்ள சசிகலாவின் அண்ணன் மகனும், ஜெயா டி.வி.யின் தலைமை செயல் அதிகாரியுமான விவேக் வீட்டில் நேற்று முன்தினம் காலை தொடங்கிய வருமான வரித்துறை சோதனை நேற்றும் நீடித்தது. விவேக் வீட்டில் நேற்று முன்தினம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் ஒரு தனிஅறையில் வைத்து பூட்டப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீசார் இரவு முழுவதும் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.

மேலும் வருமான வரித்துறை அதிகாரிகள் 2 பேர் நேற்று முன்தினம் இரவு விவேக் வீட்டிலேயே தங்கினர்.

நேற்று காலையில் விவேக் வீட்டில் உள்ள தங்கம், வைரம் மற்றும் வெள்ளி பொருட்கள் வருமான வரித்துறையை சேர்ந்த நகை மதிப்பீட்டாளரை கொண்டு மதிப்பீடு செய்யப்பட்டது. அதற்கு முறையாக வரி செலுத்தப்பட்டிருக்கிறதா? என்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

விவேக் மற்றும் அவருடைய மனைவி கீர்த்தனா, கீர்த்தனாவின் சகோதரர் பிரபு ஆகியோர் வருமான வரி சோதனையின்போது வீட்டில் இருந்தனர். அவர்கள் மற்றவர்களுடன் தொடர்புகொள்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. நேற்று காலை 11 மணியளவில் சீரான இடைவெளியில் வருமான வரித்துறை அதிகாரிகள் விவேக் வீட்டுக்கு வந்தவண்ணம் இருந்தனர்.

வழக்கம்போல விவேக் ஆதரவாளர்கள் அவருடைய வீட்டின் முன்பு அமர்ந்திருந்தனர். சோதனையில் ஈடுபடும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு கொண்டு செல்லப்படும் சாப்பாட்டுடன் ஏதாவது ஆவணங்களை வெளியிலிருந்து உள்ளே கொண்டு செல்லாதபடி விவேக் ஆதரவாளர்கள் சோதனை செய்தனர். ஆயுதப்படை போலீஸ்காரர்கள் ஒரு ‘ஷிப்ட்’ முடிந்தவுடன் வேறு போலீஸ்காரர்கள் நுழைந்தனர். அவர்கள் கொண்டு வந்த பைகளை விவேக் ஆதரவாளர்கள் சோதனை செய்தனர். அதன்பிறகே வீட்டினுள் அனுமதித்தனர்.

விவேக் மற்றும் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு ஒத்துழைப்பு கொடுத்தனர். நேற்று வரி ஏய்ப்பு செய்ததற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும், ரொக்கப்பணம் சிக்கியதாகவும் வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

விவேக் வீட்டில் சிக்கிய ஆவணங்கள், நகைகள் மற்றும் பணத்தின் மதிப்பை ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் கைப்பற்றப்பட்ட பணத்தின் மதிப்பு மற்றும் ஆவணங்களின் விவரம் வெளியிடப்படும் என்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே மாலை 3.55 மணியளவில் நுங்கம்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் தொல்காப்பியன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் விவேக் வீட்டின் முன்பு வருமான வரித்துறை அதிகாரிகள் வீட்டினுள் உள்ளே சென்றுவர இடையூறு ஏற்படாதவண்ணம் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும் என்று கூறினர்.

இதற்கு விவேக் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஒருவழியாக விவேக் ஆதரவாளர்கள் சமாதானம் அடைந்தனர். சோதனையில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு சிரமம் ஏற்படாதவாறு இரும்பு தடுப்புகளை போலீசார் அமைத்தனர்.

சென்னை தியாகராயநகர் அபிபுல்லா சாலையில் சசிகலாவின் அண்ணன் மகள் கிருஷ்ணபிரியா வீட்டில் நேற்று முன்தினம் வருமான வரித்துறை கூடுதல் கமிஷனர் சுபஸ்ரீ தலைமையில் சோதனையை தொடங்கிய 10 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் விடிய விடிய அதை தொடர்ந்தனர். இரவு வருமான வரித்துறை கூடுதல் கமிஷனர் ஜெயராகவன், கிருஷ்ணபிரியா வீட்டுக்கு வந்து அங்கு நடத்தப்பட்ட சோதனைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்து புறப்பட்டு சென்றார்.

அவரைத்தொடர்ந்து 6 அதிகாரிகள் அங்கிருந்து திரும்பி சென்றனர். மீதம் இருந்த 4 அதிகாரிகள் விடிய விடிய வீட்டில் இருந்த ஆவணங்கள், வங்கி கணக்குகள், செல்போன் அழைப்புகள் ஆகியவற்றை எடுத்து சோதனை செய்தார்கள். கிருஷ்ணபிரியாவுக்கு சொந்தமான கிருஷ்ணபிரியா அறக்கட்டளையும், 2 நிறுவனங்களும் சென்னையில் உள்ளது.

அந்த அறக்கட்டளை, நிறுவனங்களின் கணக்கு வழக்குகளையும், அறக்கட்டளைக்கு எங்கிருந்து பணம் வருகிறது? அதன் வரவு செலவு கணக்குகளை எப்படி காட்டி இருக்கிறார்கள்? என்பது குறித்தும் அதிகாரிகள் தீவிர சோதனை செய்தனர்.

நேற்று காலை 9.20 மணியளவில் இரவு திரும்பி சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் வந்து சோதனையை தொடங்கினார்கள். காலை 10.30 மணியளவில் கிருஷ்ணபிரியா வீட்டில் இருந்து சில ஆவணங்களை எடுத்துக்கொண்டு புறப்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள், சென்னை கோடம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் உள்ள கிருஷ்ணபிரியாவின் சகோதரர் விவேக் வீட்டுக்கு சென்றனர்.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘கிருஷ்ணபிரியா வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட சில ஆவணங்களையும், விவேக் இல்லத்தில் எடுக்கப்பட்ட ஆவணங்களையும் ஒப்பிட்டு சரிபார்ப்பதற்காக சென்றோம்’ என்றனர். கிருஷ்ணபிரியாவின் வங்கி கணக்குகளை எடுத்த அதிகாரிகள், சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று அவர்கள் செய்த பணபரிவர்த்தனைகள் குறித்த விவரங்களை பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

சென்னை கொட்டிவாக்கம், கருணாநிதி நகர், லட்சுமிவதனா தெருவில் உள்ள டி.டி.வி.தினகரனின் மைத்துனர் டாக்டர் வெங்கடேஷ் வீட்டில் நேற்று முன்தினம் காலை முதல் இரவு விடிய, விடிய வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெற்றது. 2-வது நாளாக நேற்றும் அதிகாலை முதலே வருமானவரி சோதனை நடைபெற்றது.

வருமான வரித்துறை உதவி கமிஷனர் கண்ணன் நேற்று காலை 8.30 மணியளவில் டாக்டர் வெங்கடேஷின் வீட்டிற்கு வந்தார். அங்கு ஏற்கனவே சோதனை மேற்கொண்டு இருந்த 5 வருமான வரித்துறை அதிகாரிகளுடன் அவரும் இணைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டார். சோதனையின் போது பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது.

மேலும் வருமானவரி சோதனை நடைபெற்றபோது டாக்டர் வெங்கடேஷின் வீட்டுக்குள் வெளியாட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்தநிலையில், நேற்று பிற்பகலில் வெங்கடேஷ் வீட்டிற்கு கியாஸ் சிலிண்டர் வழங்குவதற்காக வந்த கியாஸ் கம்பெனி ஊழியரிடம் இருந்து கியாஸ் சிலிண்டர் பெறாமலேயே திருப்பி அனுப்பப்பட்டார். பிற்பகல் 2.55 மணியளவில், பள்ளிக்கு சென்ற டாக்டர் வெங்கடேஷின் மகன்கள் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். டாக்டர் வெங்கடேஷ் வீட்டில் நேற்று இரவு 7.30 மணிக்கு பிறகும் சோதனைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இதேபோன்று, நீலாங்கரை, கஜுரா கார்டன், 1-வது பிரதான சாலையில் உள்ள டி.டி.வி.தினகரனின் சகலை டாக்டர் சிவகுமாரின் வீட்டிலும் நேற்று 2-வது நாளாக வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெற்றது. 7 வருமான வரித்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை நேற்று இரவு 7.15 மணிக்கு நிறைவடைந்து வருமான வரித்துறை அதிகாரிகள் வீட்டை விட்டு கிளம்பினர். அப்போது சோதனையில் சிக்கிய முக்கிய ஆவணங்களை கைகளில் எடுத்துச் சென்றனர்.

நேற்று நடத்தப்பட்ட சோதனை குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘வருமான வரித்துறை சோதனை முடியும் வரையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பொருட்கள் குறித்து நாங்கள் எந்த தகவலையும் தெரிவிக்க முடியாது. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், வங்கி கணக்குகளை ஆராய வேண்டியுள்ளதால் தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது’ என்று குறிப்பிட்டனர்.

Friday, November 10, 2017


AICTE shuts 1,400 'bad standard' tech courses

KRITIKA SHARMA | Updated: Nov 6, 2017, 06:35 AM IST, DNA

The number of courses closed is the highest in the last five years

In a bid to improve the standard of technical education in the country, All India Council for Technical Education (AICTE) has closed nearly 1,400 courses that did not meet required standards in various technical institutions in the academic year 2017-18.

The number of courses is the highest in last five years.

The maximum number of institutes where courses have been closed are in Maharashtra with over 400 situated in the state. Madhya Pradesh, Telangana and Karnataka also have a high number of such institutes.

Maximum courses that have been closed are on engineering and information technology, while a minuscule percentage are courses on pharmacy and management. Authorities have advised students to check details about courses as well as the institute before applying.

After various surveys on engineering education in India pointed that majority of the graduates in the country have become unemployable, the Ministry of Human Resource Development started taking initiatives to improve the quality of technical education, specially engineering. As a part of this, the government regulator has also decided to close 800 engineering institutions that are not getting any admissions. These institutions will be shut over the next two years.

The courses that have been shut by AICTE did not meed required educational standards. According to data obtained from AICTE, 468 courses were closed in 2012-13, 912 in 2013-14, 604 in 2014-15, 1,093 in 2015-16, 670 in 2016-17 and 1,389 in 2017-18.

"A high number of course closures shows that we are going after improving the quality of technical education in the country. Courses that either do not have any students of are not meeting the required standards of curriculum have been closed. There are many institutions where popular departments like civil and mechanical engineering have also been closed because they were not performing well," said a senior official in AICTE.

"We want to advise students to check credentials about the course, apart from the institute before seeking admission in an institute," the official added.

India has, over the last three years, seen a dip in number of students opting for engineering. After failing to secure a seat in the top technical institutes like IITs, NITs, students have steered clear of private engineering colleges.

FALLING STANDARDS
Maharashtra has the highest number of institutes (400) where courses have been closed
A total of 1,398 courses did not meet required standards

UGC pulls up varsities for conducting animal dissection sans registration


The University Grants Commission (UGC) has pulled up some varsities for conducting animal dissection without registration with a committee as mandated by the government.

PTI| Last Updated: Nov 05, 2017, 12:22 PM IST

NEW DELHI: The University Grants Commission (UGC) has pulled up some varsities for conducting animal dissection without registration with a committee as mandated by the government.
The commission had in 2014 announced discontinuation of animal dissection.

However, following opposition from academicians and field experts that it was reducing practical exposure of students and turning zoology into a dead discipline, the Control and Supervision of Experiments on Animals (CPCSEA) was formed.

The committee working under the supervision of the Ministry of Environment and Forests (MoEF) is a regulatory body facilitating registration of establishments conducting animal experimentation or breeding of animals for this purpose.

Universities running courses in Life Sciences and Zoology and having facilities for animal dissection are mandated to register themselves with the committee to ensure that the rules are not violated.
"There are still some unregistered establishments and varsities conducting animal research and not compliant with the guidelines of CPCSEA. They are required to do so on a priority bases," UGC Secretary P K Thakur said in a letter to vice chancellors of all varsities.

The VCs have also been asked to issue instructions to affiliated colleges in this regard.
The CPCSEA's other functions include approval of animal house facilities on the basis of inspection, permission for conducting experiments involving use of animals, recommendation for import of animals for use in experiments and action against establishments in case of established violation of any legal norm or stipulation.

In 2011, the UGC had imposed a partial ban on animal dissection and directed all universities and colleges to stop experimentation on animals for training purposes for Zoology and life sciences at the undergraduate level.

However, in 2014 the commission had instructed all universities to ban dissection of animals for academic purposes at both the undergraduate and post-graduate levels.

The UGC had said that non-animal methods - including computer simulations, interactive CD-ROMs, films and lifelike models - can be used to teach anatomy and complex biological processes, which are better than cruel, archaic animal laboratories processes.

Educational institutions found violating the order can be booked under the Wildlife Protection Act and also the Prevention of Cruelty Against Animals Act, the UGC had warned.

VIT begins sale of forms for entrance test

Exam between April 4 and 15 next year

Sale of applications for VIT Engineering Entrance Examinations – VITEEE 2018 – for the university’s campuses at Vellore, Chennai, Andhra Pradesh and Bhopal – began on Thursday.
According to a press release, the university’s chancellor G. Viswanathan launched the sale of application forms at the Head Post Office, Vellore.
The online entrance examinations will be held between April 4 and 15, 2018 at 124 locations in India and also in Dubai, Kuwait, Qatar and Muscat.
The forms would be available at 30 Head Post Offices across the country. Students can pay Rs. 1,200 as cost for the application form or submit a demand draft drawn in favour of VIT for the amount. Those who wish to apply online can visit www.vit.ac.in. The last date for applying is February 28, 2018.
On VIT’s Vellore campus, the courses offered include B.Tech in Civil, Mechanical, Electrical and Electronics, Electronics and Communication engineering, Biotechnology, Bioinformatics, Chemical Engineering, Information Technology, Computer Science Engineering, Electronics Communication with Bio Medical Engineering, Mechanical engineering with specialisation in Automotive Engineering and Production and Industrial Engineering.
The university’s campus at Chennai offered courses including Civil, Mechanical, Computer Science Engineering (CSE), Electrical and Electronics, Electronics and Computer Engineering while the Amaravathi campus in Andhra Pradesh offered B.Tech in CSE, Electronics and Communication, Mechanical, Computer Science with Networking and Security, Computer Science with specialisation in Date Analytics, Electronics and Communication with embedded systems, Electronics and Communication with VLSI.
On the Bhopal campus, the courses offered included B.Tech in Bio Engineering, CSE, Mechanical engineering and Computer Science with Gaming Technology, the release said.
VIT’s vice-presidents Sankar Viswanathan, G.V. Selvam, vice-chancellor Anand A. Samuel, director of undergraduate admissions K. Manivannan, and superintendent of post offices Vellore K. Vijaya were present.

Dubai Shopping Festival package

UAE Exchange India offers a package tour for Dubai Shopping Festival (DSF) to be held between December 26 and January 27, 2018.
The packages range from Rs. 39,250 to Rs. 43,300 for three nights and four days, without visa charges. For additional days, the rate will increase on a pro rata basis. The package includes desert safari, dhow dinner cruise, visit to Jumeirah mosque, miracle gardens and Burj Khalifa, the tallest skyscraper in the world. An entire day will be dedicated to shopping at the DSF as most items will be tax/ duty free.
Its regional head L. Balakrishnan said guides would accompany tourists throughout the trip. Accommodation and travel insurance were included in the package.

Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு ஜாக்பாட்! இனி பட்டா தேடி வரும்! தமிழக அரசு குட்நியூஸ்!

Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு ஜாக்பாட்! இனி பட்டா தேடி வரும்! தமிழக அரசு குட்நியூஸ்! Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு தமிழக...