Saturday, November 11, 2017

‛சால்வையை தவிருங்கள்': தமிழக கவர்னர் வேண்டுகோள்


சென்னை: தன்னை சந்திக்க வருபவர்கள் சால்வை, பூங்கொத்து கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும் என தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வேண்டுகோள் விடுத்துள்ளார். இத்தகவல் கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மருத்துவமனைக்கு ஜப்பான் அரசு நிதியுதவி
 நவ 11, 2017 01:11


மதுரை: ஜப்பான் நிதி உதவியுடன், மதுரை அரசு மருத்துவமனை, 300 கோடியில், 'சூப்பர் ஸ்பெஷாலிட்டி' தரத்திற்கு ஜொலிக்கபோகிறது. தென் மாவட்ட அளவில, முக்கிய சிகிச்சை அளிக்கும் தரமான மருத்துவமனையாக, மதுரை அரசு மருத்துவமனை, 70 ஆண்டுக்கும் மேலாக திகழ்ந்து வருகிறது. மாநிலத்திலேயே முதல் முறையாக, உடல் உறுப்பு தானம் மூலம், இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை திட்ட நிதி, 150 கோடியில், மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டுமான பணி நடக்கிறது.
மத்திய சுகாதாரத் துறை, ஜப்பான் நிதி உதவியுடன் மருத்துவமனைகளை தரம் உயர்த்த ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் மதுரைக்கு மட்டும்,300 கோடியில் திட்டம் வர உள்ளது.
இது குறித்து, மருத்துவமனை பொறியாளர் ஒருவர் கூறுகையில், 'படிப்படியாக, ஐந்து கட்டமாக கட்டுமான பணிகள் நடத்தி, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தரத்திற்கு ஜொலிக்கப்போகிறது. இதற்கான கட்டுமான பணி, 2018ல் துவக்கப்படலாம்' என்றார்.
சென்னை கல்லூரிக்கு சிங்கப்பூரில் கவுரவம்

 நவ 11, 2017 00:39

சென்னை: சென்னையைச் சேர்ந்த, ஆரோ கல்வி சேவை என்ற நிர்வாகவியல் கல்லுாரி உட்பட, மிகச் சிறந்த சர்வதேச பயிற்சியுடன் கூடிய நிர்வாகவியல் கல்வியை அளிக்கும் கல்வி நிறுவனங் களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

ஆசிய நாடான, சிங்கப்பூரைச் சேர்ந்த, சிங்கப்பூர் வர்த்தக திறன் மற்றும் ஆராய்ச்சி அமைப்பு, சர்வதேச தரத்துடன் கல்வி அளிக்கும் நிறுவனங்களுக்கு விருது வழங்கி வருகிறது.

இந்த ஆண்டுக்கான விருது, சென்னையைச் சேர்ந்த, ஆரோ கல்வி சேவை, பெங்களூரின், ஐ.எஸ்.பி.ஆர்., பிசினஸ் ஸ்கூல், கோல்கட்டாவின், மை பிரைவேட் டியூடர் ஆகிய கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. பல்வேறு நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து, அங்கு சென்று படிக்கும் வகையில், கல்வி திட்டங்களை செயல்படுத்தி வருவதற்காக, இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, மிகச் சிறந்த கல்வி கற்பதற்கான நிறுவனங்களுக்கான விருது, புனேயைச் சேர்ந்த, ஏ.எஸ்.எம்., கல்விக் குழுமம், கவுகாத்தியின், பிரான்சன் உறைவிடப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது.
இனி, 'ஆன்லைன் இன்ஜினியரிங் கவுன்சிலிங்!'  கணினி முன் அமர்ந்து கல்லூரி தேர்வு செய்யலாம்


அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் கவுன் சிலிங், அடுத்த ஆண்டு முதல், 'ஆன் லைனில்' நடத்தப்படும் என, உயர் கல்வித் துறை அறிவித்துள்ளது. இதனால், வெளியூர் மாணவர்கள், சென்னைக்கு வர வேண்டிய அலைச்சல் இல்லை.





உத்தரவு

அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, 550க்கும் மேற்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., - எம்.இ., - எம்.டெக்., உள்ளிட்ட படிப்புகளுக்கு, கவுன்சிலிங் வாயிலாக, மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். கவுன்சிலிங்கை, தமிழக அரசின் சார்பில், அண்ணா பல்கலை நடத்துகிறது.இந்நிலையில், 2016ல் நடந்த கவுன்சிலிங்கில், மாணவர்

சேர்க்கை செயலராக இருந்த,பேராசிரியை இந்துமதி, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை அறிமுகம் செய்தார்.

இரண்டு ஆண்டுகளாக, ஆன்லைன் விண்ணப்ப முறை பின்பற்றப்படுகிறது. அதை தொடர்ந்து, வரும் கல்வி ஆண்டில், ஆன்லைனிலேயே கவுன்சிலிங் நடத்த, தமிழக அரசு உத்தரவிட்டு
உள்ளது.இதற்காக, இன்ஜி., மாணவர் சேர்க்கை செயலராக, அண்ணா பல்கலை பேராசிரியர், ரைமண்ட் உத்தரியராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அறிமுகம்

ஏற்கனவே, 2015 வரை, இவர், இப்பொறுப்பில் இருந்துள்ளார். அவரது மேற்பார்வையில், வரும் கல்வி ஆண்டில், 'ஆன்லைன் கவுன்சிலிங்' நடத்துவதற்கான ஆயத்த பணிகள் துவங்கியுள்ளன.
இதற்காக, பல்வேறு மாவட்டங்களில் உள்ள, அண்ணா பல்கலையின் மண்டல அலுவலகங் களில், ஆன்லைன் கவுன்சிலிங் உதவிமையங்கள் அமைக்கப்பட உள்ளன.

மாணவர்கள், தாங்கள் இருந்த இடத்தில் இருந்தே, ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.விண்ணப் பங்கள் ஏற்புக்கு பின், தங்கள் மதிப்பெண்ணுக்கு ஏற்ப, விருப்ப இடங்களை பதிவு செய்யும் முறை


அறிமுகம்செய்யப்படும். பின், அவர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசைக்கு ஏற்ப, இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

வழிகாட்டல்:

எனவே, வரும் கல்வி ஆண்டில் மாணவர் களும், பெற்றோரும், சென்னையில் உள்ள அண்ணா பல்கலை வளாகத்திற்கு வர வேண்டிய கட்டாயம் இல்லை. எங்கேயும் அலையாமல், கணினி முன் இருந்து, கல்லுாரியை தேர்வு செய்யலாம். 'இதற்கான வழிகாட்டல் மற்றும் அறிவிப்புகள், பிப்ரவரி யில் அறிவிக்கப்படும்' என, உயர் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

- நமது நிருபர் -
'மிடாஸ்' மதுபான கொள்முதல்  கை கழுவுகிறது 'டாஸ்மாக்'

வருமான வரி சோதனையை தொடர்ந்து, சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான, 'மிடாஸ்' நிறுவனத்திடம் இருந்து, மதுபானம் கொள்முதல் செய்வதை முழுவதுமாக நிறுத்த, 'டாஸ்மாக்' முடிவு செய்துள்ளது.




தமிழக அரசின், டாஸ்மாக் நிறுவனம், பீர் மற்றும் மது வகைகள் சில்லரை விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.

12 லட்சம் பெட்டிகள்

இந்நிறுவனம், 11 நிறுவனங்களிடம் இருந்து, மாதத்திற்கு சராசரியாக, 48 லட்சம் பெட்டி மது வகைகளை வாங்குகிறது. அதில், சசிகலா

குடும்பத்தினருக்கு சொந்தமான, மிடாசிடம் இருந்து மட்டும், 12 லட்சம் பெட்டிகள் வாங்கப்படுகின்றன. தி.மு.க., ஆதரவு நிறுவனங் களான, 'எஸ்.என்.ஜே., கல்ஸ்' ஆகியவற்றிடம், ஆறு லட்சம் பெட்டி; மற்ற நிறுவனங்களிடம் இருந்து, மூன்று - நான்கு லட்சம் பெட்டிகளும் வாங்கப் படுகின்றன.

முதல்வர் பழனிசாமி,தினகரன் மோதலை தொடர்ந்து, மிடாசிடம் வாங்கும் மதுபானங்களை, எட்டு லட்சம் பெட்டி, ஏழு லட்சம் பெட்டி என, டாஸ்மாக் படிப்படியாக குறைத்தது.அதன்படி, இம் மாதத்திற்கு, ஐந்து லட்சம் பெட்டிகள் சப்ளைக்கான, 'ஆர்டர்' மட்டுமே தரப்பட்டுள்ளது.

வலுக்கட்டாயம்

இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது: முதல்வராக ஜெயலலிதா இருந்த போது, டாஸ்மாக்கில், மிடாஸ் ஆதிக்கம் அதிகம் இருந்தது. மிடாஸ் மது வகைகளை, 'குடி'மகன்கள் விரும்பாத நிலையிலும், அதிகளவில் வாங்கப் பட்டு, வலுக் கட்டாயமாக விற்கப்படும். முதல்வர் பழனிசாமி, தினகரன் மோதல், டாஸ்மாக்கில் மிடாசின் ஆதிக்கத்தை குறைத்தது.

சில மூத்த அமைச்சர்கள், மிடாசுக்கு ஆதரவாக இருந்ததால், மது கொள்முதலை நிறுத்த முடியவில்லை.

இந்நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள், மிடாஸ் ஆலை உட்பட, சசிகலா, தினகரன் ஆகியோரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடு,அலுவலகங்களில், சோதனை நடத்தினர். அதனால், அடுத்த மாதத் தில் இருந்து, மிடாசில் இருந்து, மது வகைகள் வாங்குவதை முழுவதுமாக நிறுத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

சுப்ரீம் கோர்ட்டை இழுத்து மூடுங்க: தலைமை நீதிபதி முன் பூசன் ஆவேசம்

Updated : நவ 10, 2017 23:15 |




புதுடில்லி: எம்.சி.ஐ. எனப்படும் இந்திய மருத்துவ கவுன்சிலில் பெருமளவு ஊழல் நடந்தது அம்பலமானது .இதில் ஒடிசாவில் உள்ள மருத்துவக்கல்லூரி மீதான வழக்கில் நீதிபதிகள் பெயரில் லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது. இதனை சி.பி.ஐ. விசாரிக்கிறது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.

தொடர்ந்து இந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இன்று விசாரித்தது. அப்போது, வழக்கு தொடர்ந்துள்ள அரசு சாரா அமைப்பு சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர், பிரஷாந்த் பூஷண், தலைமை நீதிபதி குறித்து சில கருத்துக்களை தெரிவித்தார்.அதனால் கோபமடைந்த, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா கண்டனம் தெரிவித்தார். ' தொடர்ந்து நடந்த காரசார விவாதத்தின் போது திடீரென ஆவேசமடைந்த பூசன், எனக்கு பேச அனுமதிக்கவில்லை' என்றால் இந்த சுப்ரீம் கோர்ட் எதற்கு இழுத்து மூடுங்க என்று கூறிவிட்டு கோர்ட்அறையில் இருந்து வேகமாக வெளியேறினார்.
 தோண்ட,தோண்ட,வெளிப்படும்,,'மெகா' மோசடி.. பூதம்!

சசிகலா குடும்பத்தினர் மற்றும் அவர்களது நண்பர்களின் வீடுகள், அலுவலகங்களில் நடந்து வரும், வருமான வரித்துறை சோதனையில், தோண்ட தோண்ட வெளிப்படும் பூதமாக, 'மெகா' மோசடிகள் அம்பலமாகி வருகின்றன. இரண்டாவது நாளாக, 100 இடங்களில் நீடித்த சோதனையில், இதுவரை, 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான,பினாமி சொத்து பத்திரங்கள் மற்றும் முறைகேடான முதலீட்டு ஆவணங்கள் சிக்கியுள்ளன. ஒட்டுமொத்த தமிழகத்தையும், சசி குடும்பம் கபளீகரம் செய்த பின்னணி விவகாரங்கள், விசாரணையில் வெளிவர துவங்கி உள்ளன.





இதற்கிடையில், மூன்றாவது நாளாக, இன்றும் சளைக்காமல் சல்லடை போட, வருமான வரித்துறை முடிவு செய்துள்ளதால், பொறியில் மாட்டிய எலி போல, மன்னார்குடி கும்பல் கதி கலங்கி நிற்கிறது.

ஜெயலலிதாவின் தோழியாவதற்கு முன், 'வீடியோ கேசட்' விற்பனை செய்த சசிகலா; போக வேண்டிய இடங்களுக்கு, பொடி நடையாக சென்று வந்த தினகரன், ஒரு சில ஆண்டுகளில், மதுபான ஆலை, தேயிலை எஸ்டேட், சினிமா கம்பெனி, 'டிவி' நிறுவனம் என, பெரும் பண முதலைகளாக உருவெடுத்துள்ளனர். அதன் பலனாக, தமிழகத்தின் பல பகுதிகளில், நுாற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும், சசிகலா குடும்பத்தினர், சொந்தக்காரர்களாகி உள்ளனர்.

ஆட்டம்

ஜெ., முதல்வராக இருந்ததால், அவரது நிழலில், இதுவரை தப்பித்து வந்தனர். ஜெ., மறைந்ததாலும், சசிகலா சிறைக்கு சென்றதாலும், அவரது குடும்பத்தினரின் ஆட்டம் சரியத் துவங்கியது. இந்த நேரம் பார்த்து, ஆட்சியும், கட்சியும், தங்களை கை கழுவியதால், சொத்துக்களையும், தங்களையும் பாதுகாத்துக் கொள்ள, ஆதரவாளர் கூட்டத்தை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கினர்.

இதற்கிடையில், வருமான வரித்துறை வளையத்தில், தங்கள் குடும்பம் சிக்கி இருப்பதை உணர்ந்த சசி குடும்பம், இரட்டை இலையை, லஞ்சம் கொடுத்தாவது பெற்று, இழந்த அரசியல் செல்வாக்கை பெற, காய் நகர்த்தியது. அதிலும் வழக்கு வரவே, தினகரன் சிக்கலில் மாட்டினார்.இந்த சூழலில், அவர்கள்



பயந்தபடியே, வருமான வரித்துறையினர், நேற்று முன்தினம், சசி சொந்தங்களை சல்லடை போடத் துவங்கினர்.

அதிரடி

சென்னையில் தினகரன், நடராஜன், விவேக், கிருஷ்ணபிரியா வீடுகள், ஜெயா, 'டிவி' மற்றும் 'நமது எம்.ஜி.ஆர்.,' அலுவலகங்கள் மற்றும் வேளச்சேரி, 'பீனிக்ஸ் மாலில்' உள்ள, 'ஜாஸ் சினிமாஸ்' மற்றும், 'மிடாஸ்' மதுபான ஆலை உள்ளிட்ட, 111 இடங்களில், அதிகாரிகள் படை, அதிரடியாக புகுந்தது.மேலும், மன்னார்குடியில் திவாகரன், தஞ்சையில் நடராஜன் வீடு, நீலகிரியில் கோடநாடு எஸ்டேட், குன்னுார் கர்சன் எஸ்டேட், புதுச்சேரியில் லட்சுமி நகைக்கடை, தினகரன் பண்ணைத் தோட்டம் மற்றும் பெங்களூரு, ஐதராபாத், டில்லி என, மொத்தம், 187 இடங்களில் சோதனை நடந்தது.

அதில், 900 அதிகாரிகள் ஈடுபட்டனர். இரண்டாவது நாளான, நேற்று காலை, 140 இடங்களில் சோதனை நீடித்தது; மாலையில், 100 இடங்களாக குறைந்தது. அதில், முறை கேடான பரிவர்த்தனைகள் நடந்ததற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன.

இது குறித்து, தமிழக வருமான வரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:

சசிகலா, இளவரசி உள்ளிட்டோரின் போலி நிறுவனங்களை, மத்திய கம்பெனி விவகார அமைச்சகம் முடக்கியுள்ளது. மேலும், சில போலி நிறுவனங்களையும், அவர்கள் நடத்தி வந்துள்ளனர். அந்த, 10 போலி நிறுவனங்கள் தொடர்பான சோதனையில், முறைகேடான பணப் பரிவர்த்தனை ஆவணங்கள் சிக்கி உள்ளன.இதேபோல், பல கோடி ரூபாய்க்கு, தமிழகத்தின் பல பகுதிகளில், வாங்கி குவிக்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களும் சிக்கின. தற்போது, ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட ஆவணங்களின் மதிப்பு, 1,000 கோடி ரூபாய் மதிப்புடையவை.

இது தவிர, நாளை, 70க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை தொடர்கிறது. அந்த சோதனைகள் முடிந்த பின் தான், அனைத்து ஆவணங்களையும் சரிபார்க்க வேண்டும். அதன் பிறகே, வரி ஏய்ப்பு மற்றும் முறைகேடான வங்கி பரிவர்த்தனை, போலி நிறுவனங்கள் மூலம் நடந்த முறைகேடுகளின் முழு அளவு தெரிய வரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினகரன், 'கப்சிப்!'

தன் உற்றார், உறவினர் வீடுகளில் சோதனை நடப்பது தெரிந்ததும், தினகரன், நேற்று முன்தினம் கொதித்து எழுந்தார். 'இதற்கு காரணமானவர்களை, சும்மா விட மாட்டேன்' என, கொக்கரித்தார்.வரித்துறை சோதனையில், கிருஷ்ணபிரியா, பாஸ்கரன், திவாகரன்

போன்றவர்களுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து, கத்தை கத்தையாக முறைகேடான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட தகவல், நேற்று அவருக்கு தெரிய வந்தது. அதனால், நேற்று தினகரன் வாய் திறக்காமல் அமைதியானார்.அதேபோல், தேனி மாவட்டம், கம்பத்தில் உள்ள, தங்கதமிழ்ச்செல்வன் உதவியாளர் வீட்டிலும், நேற்று வரித்துறை சோதனை நடந்தது; அதனால், தினகரன் ஆதரவாளான அவரும், நேற்று வாயை மூடினார்.

எத்தனை பேர்?

வருமான வரித்துறை வரலாற்றில், ஒரு குடும்பத்தை மையமாக வைத்து நடந்த, மிகப்பெரிய சோதனையாக, சசி கும்பல் மீதான நடவடிக்கை கருதப்படுகிறது. 187 இடங்களில் சோதனை நடந்ததால், ஒரு இடத்திற்கு, 10 பேர் என, உத்தேசமாக கணக்கிட்டு, 1,800 அதிகாரிகள், சோதனைக்கு சென்றதாக தகவல் வெளியானது. 'அது, தவறான தகவல்; முதல் நாள் சோதனையில், 1,000க்கும் குறைவான அலுவலர்கள் தான் ஈடுபடுத்தப்பட்டனர்' என, வரித்துறையினர் தெரிவித்தனர்.

கசிந்தது ரகசியம்!

முன்னாள் தலைமை செயலர், ராமமோகன ராவ் வீட்டில் சோதனைக்கு போன போது, மத்திய படையுடன் சென்ற வரித்துறையினர், தமிழகம் முழுவதும், நேற்று சோதனை நடத்துவதற்கு, போலீஸ் பாதுகாப்பை தான் நாடினர்.மத்திய அரசுக்கு கடிதம் எழுதி, தமிழ்நாடு முழுவதும் நடக்கும் சோதனைக்கு, தேவையான மத்திய வீரர்களை பெறுவதற்கு, கால அவகாசம் கிடைக்காததால், தமிழக போலீசாரின் உதவியை நாடினர்.

இது தொடர்பாக, தமிழக டி.ஜி.பி.,யுடன் பேசி, பாதுகாப்பு கேட்டுள்ளனர். அப்போது, 'ரகசியம் பாதுகாக்கப்பட வேண்டும்' என்று, வரித்துறை கூறியுள்ளது. ஆனாலும், எப்படியோ, தினகரன் தரப்புக்கு ரகசியம் கசிந்துள்ளது. சில இடங் களில், போலீசார் முறையாக ஒத்துழைக்க வில்லை என்கின்றனர், வரித்துறையினர்.

மன்னார்குடி ஜாதகம்!

சசிகலாவின் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள், வேலையாட்கள் என, ஒருவர் விடாமல், மன்னார்குடி கும்பலின் முழு ஜாதகத்தையும், வருமான வரித்துறையினர் கையில் வைத்தபடி, சோதனை நடத்தி வருகின்றனர். தமிழக போலீசாருக்கு கூட, இவ்வளவு தகவல்கள் தெரியுமா என, வியக்கும் அளவுக்கு, சசி சொந்தபந்தங்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களை, வரித் துறையினர் சல்லடை போட்டு தேடி வரு கின்றனர். இதற்கு, அ.தி.மு.க.,வில், சில முக்கிய புள்ளிகள் உதவியதாக தெரிகிறது.

- நமது சிறப்பு நிருபர் -

Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு ஜாக்பாட்! இனி பட்டா தேடி வரும்! தமிழக அரசு குட்நியூஸ்!

Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு ஜாக்பாட்! இனி பட்டா தேடி வரும்! தமிழக அரசு குட்நியூஸ்! Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு தமிழக...