Saturday, November 11, 2017

அரியலூருக்கு ரூ. 50 லட்சம் கல்வி உதவித் தொகை


By  திண்டுக்கல்  |   Published on : 11th November 2017 12:59 AM  
vijaysethupathiii

அணில் சேமியா நிறுவனத்தின் விளம்பர தூதராக இருப்பதன் மூலம் கிடைத்துள்ள பணத்தின் ஒரு பகுதியான ரூ.49.70 லட்சத்தை, கல்வியில் பின்தங்கிய அரியலூர் மாவட்டத்துக்கு உதவித் தொகையாக வழங்குவதாக நடிகர் விஜய் சேதுபதி அறிவித்தார்.
 அணில் நிறுவனத்தின் புதிய உணவுப் பொருள்களுக்கான அறிமுக விழா திண்டுக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது:
 அணில் சேமியா விளம்பர படத்தில் நடித்ததற்காக எனக்கு கிடைத்துள்ள தொகையின் ஒரு பகுதியை கல்வி உதவித்தொகையாக வழங்க முடிவு செய்துள்ளேன். கல்வியில் பின்தங்கிய மாவட்டமான அரியலூரில் மொத்தமுள்ள 774 அங்கன்வாடி மையங்களுக்கு தலா ரூ.5ஆயிரம் வீதமும், தமிழகத்தில் உள்ள 21 அரசு பார்வையற்றோர் மற்றும் செவித்திறன் குறைந்தோர் பள்ளிகளுக்கு தலா ரூ.50ஆயிரம் உள்பட மொத்தம் ரூ.49.70 லட்சத்தை தமிழக அரசிடம் வழங்க முடிவு செய்துள்ளேன்.
 மாணவி அனிதாவின் நினைவாக... கல்வியில் பின்தங்கிய மாவட்டத்திலிருந்து அதிக மதிப்பெண் பெற்றும் மருத்துவராக முடியாமல் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் நினைவாக இந்த உதவித்தொகையை வழங்குகிறேன் என்றார் அவர்.
 அதனைத் தொடர்ந்து அணில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கமலஹாசன், செயல் இயக்குநர் சுகுமார் ஆகியோர் பேசுகையில், "30 ஆண்டுகளுக்கு மேலாக உணவுப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வரும் அணில் நிறுவனத்தின் சார்பில், நவதானிய உணவுப் பொருள்கள் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் விவசாயிகளிடம் இருந்து நவதானியங்களை நேரிடையாகக் கொள்முதல் செய்வோம்' என்றனர்.
 

தூக்குத் தண்டனை முறைக்கு மாற்று என்ன? மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் அவகாசம்


By  புது தில்லி,  |   Published on : 11th November 2017 01:46 AM 
supreme-court

மரண தண்டனைக் கைதிகளைத் தூக்கிலிட்டுக் கொல்லும் வலி நிறைந்த முறைக்கு எதிராக தொடுக்கப்பட்ட மனுவுக்குப் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் மேலும் 6 வாரங்கள் அவகாசம் அளித்துள்ளது.
 ரிஷி மல்ஹோத்ரா என்ற வழக்குரைஞர் தாக்கல் செய்திருந்த பொதுநல மனு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவுக்கு மத்திய அரசு பதிலளிக்க மேலும் 6 வாரங்கள் அவகாசம் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21-ஆவது பிரிவில் அனைவருக்கும் வாழ்வதற்கான உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோன்று மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியின் உயிரைக் கூட துன்புறுத்தாமல் பறிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 அதாவது வலியும், வேதனையும் நிறைந்த தண்டனைகளை வழங்கக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.
 ஆனால், தற்போது உள்ள நடைமுறையில் கழுத்தில் தூக்கு மாட்டி தண்டனை நிறைவேற்றப்படுகிறது. இது அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களுக்கு எதிரானது.
 மேலும், இந்த முறைக்கு எதிராக மத்திய சட்ட ஆணையமே, தனது அறிக்கையில் கருத்து தெரிவித்துள்ளது.
 பெரும்பாலான நாடுகள் தூக்குத் தண்டனை முறையை ஒழித்துவிட்டு, மின் அதிர்வு கொடுப்பது, மயக்க ஊசி போடுவது போன்ற முறைகளில் மரண தண்டனையை நிறைவேற்றி வருவதையும், மத்திய சட்ட ஆணையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
 இதைத் தவிர பல்வேறு வழக்குகளின் மீதான தீர்ப்புகளின்போதும் உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனையை விமர்சித்துள்ளன. அதைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு, தற்போதைய மரண தண்டனை வழங்கும் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
 இதற்கு முன்பு, இந்த மனுவை, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, கடந்த அக்டோபர் மாதம் 6-ஆம் தேதி விசாரித்தது. அப்போது, 3 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வரவிருக்கும் விசேஷங்கள் :

டிசம்பர் மாதம் விசேஷங்கள்

டிசம்பர் 01 (வெ) மிலாடி நபி
டிசம்பர் 02 (ச) திருக்கார்த்திகை
டிசம்பர் 17 (ஞா) அனுமன் ஜெயந்தி
டிசம்பர் 25 (தி) கிறிஸ்துமஸ்
டிசம்பர் 29 (வெ) வைகுண்ட ஏகாதசி

குழந்தைகள் நல குழு தலைவர் ஆஜராகாவிட்டால், 'வாரன்ட்'



சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், குழந்தைகள் நல குழு தலைவர், ௧௩ம் தேதி ஆஜராகவில்லை என்றால், 'வாரன்ட்' பிறப்பிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சென்னை, பரங்கிமலையில், 'அசிசி இல்லம்' உள்ளது. இந்த இல்லத்தின் பராமரிப்பில் இருந்த, ஐந்து குழந்தைகளை, போலீஸ் உதவியுடன் வலுக்கட்டாயமாக, குழந்தைகள் நலக்குழு எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

ஐந்து குழந்தைகளையும் ஒப்படைக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில், அசிசி இல்லம் சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த, நீதிபதி, துரைசாமி, ஐந்து குழந்தைகளையும், இல்லத்தில் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார்.

நீதிமன்றம் உத்தரவிட்டும், குழந்தைகளை ஒப்படைக்காததால், சமூகநலத் துறை இயக்குனர், குழந்தைகள் நலக்குழு தலைவர், மணிகண்டன் உள்ளிட்டோருக்கு எதிராக, அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அதை விசாரித்த, நீதிபதி, எம்.துரைசாமி பிறப்பித்த உத்தரவு:

நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை; எனவே, குழந்தைகள் நல குழு தலைவரை ஆஜர்படுத்த, ஜாமினில் வரக்கூடிய வாரன்ட் பிறப்பிக்க, பதிவுத் துறை நடவடிக்கை எடுக்கும்படி, இந்த நீதிமன்றம் உத்தரவிட்டது. 
அப்போது, அவர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், எஸ்.வி.ஜெயராமன், '௧௩ம் தேதி ஆஜராவார்' என, தெரிவித்தார்.

மூத்த வழக்கறிஞர் கூறியதால், ௧௪க்கு பின், வாரன்ட்டை அமல்படுத்துவதை பார்த்து கொள்ளலாம். விசாரணை, ௧௩க்கு தள்ளி வைக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

மகா தீபத்தில் மலையேற தடை : கலெக்டருக்கு வலுக்கும் எதிர்ப்பு



திருவண்ணாமலை,நவ. 11-

'திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா தீபத்தன்று, மலை ஏற விதிக்கப்பட்ட தடை விலக்கி கொள்ளப்படாது' என, கலெக்டர் கந்தசாமி திட்ட வட்டமாக அறிவித்துள்ளார். இதற்கு, பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழாவை காண, 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவர். டிச., 2 அதிகாலை, கோவில் கருவறை எதிரில் பரணி தீபம், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.
பக்தர்கள் மாலை அணிந்து, நெய் குடம் தலையில் சுமந்து, மலை உச்சிக்கு சென்று, மகா தீப கொப்பரையில், நெய் காணிக்கை செலுத்தி வருவர்.

மலை உச்சியில், மூன்று லட்சம் விதைப் பந்துகள் துாவப்பட்டுள்ளன. மலையேறும் பக்தர்கள், தீபம் ஏற்றி முடிந்தவுடன், மரங்களுக்கு தீ வைக்கின்றனர்.

வயதானவர்கள், நெஞ்சு வலி உடையோருக்கு உரிய நேரத்தில், மருத்துவ உதவி அளிக்க முடியாத நிலை ஏற்பட்டு, ஆண்டுதோறும், 10க்கும் மேற்பட்டோர் இறக்கின்றனர்.
மேலும், விலங்குகள் அருந்தும் சுனை நீரில், மண்ணெண்ணெய், பெட்ரோல் போன்றவற்றை கலப்பதால், விலங்குகள் குடிக்கும் போது உயிரிழிப்பு ஏற்படுகிறது. 

'எனவே, சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி, மலை ஏறுவது தடை செய்யப்படுகிறது. இதில், எந்தவித மாற்றமும் இல்லை' என, கலெக்டர் கந்தசாமி திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இதற்கு ஹிந்து முன்னணி, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

மகளால் கைவிடப்பட்ட மூதாட்டி கருணை இல்லத்தில் ஒப்படைப்பு


கோபி : கல் நெஞ்ச மகளால் புறக்கணிக்கப்பட்ட தாய், 18 நாட்கள் சிகிச்சைக்கு பின், கருணை இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர், ஜெயலட்சுமி, 75; கணவர் இறந்து விட்டதால், மகள், பத்மாவுடன் வசித்து வந்தார். உடல் நலம் பாதிக்கப்பட்ட தாய்க்கு, சிகிச்சை அளிப்பதாக கூறி, ஈரோடு மாவட்டம், கோபி அருகே பச்சமலை சாலையில், மகள் விட்டு சென்றார். நஞ்சகவுண்டன்பாளையம் கருணை இல்ல நிர்வாகிகள், ஜெயலட்சுமியை மீட்டு, கோபி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது. 18 நாட்களாக, கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தாயை, மகளோ அல்லது ரத்த சொந்தங்களோ வந்து பார்க்கவில்லை.

உடன் சிகிச்சை பெற்ற பெண் நோயாளிகள், கருணை இல்ல நிர்வாகிகள், ஆதரவுக்கரம் நீட்டினர்.
சிகிச்சை முடிந்த நிலையில், திண்டுக்கல் கருணை இல்லத்துக்கு, தனியார் ஆம்புலன்சில், மூதாட்டி நேற்று அனுப்பி வைக்கப்பட்டார். கருணை இல்லம் சார்பில், 25 கிலோ அரிசி, சோப்பு, தேங்காய் எண்ணெய், மூன்று புடவை, இரு நைட்டிகள் வழங்கப்பட்டன.

ஆம்புலன்ஸ் டிரைவர் ரகமதுல்லா, ''வாடகை வேண்டாம், பெட்ரோல் மட்டும் ஏற்பாடு செய்தால் போதும்,'' எனக்கூறி விட்டார். கருணை இல்ல நிர்வாகிகள், மக்கள் ஒன்று சேர்ந்து, பெட்ரோல் செலவுக்கு ஏற்பாடு செய்தனர். வயதான தாயை தவிக்க விட்ட மகள் மீது, சட்ட நடவடிக்கை மேற்கொள்ள, கருணை இல்ல நிர்வாகி சந்தோஷ் காந்தி, கோபி போலீசில் புகார் செய்துள்ளார்.

மருத்துவமனையில் 'சிங்கம்' தப்பி ஓட்டம்

 நவ 11, 2017 


மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 'ரிமாண்ட்' கைதி சிங்கம் என்ற ராஜா,48, தப்பினார். இதுகுறித்து சிறை காவலரிடம் விசாரணை நடந்து வருகிறது.
தேனி மாவட்டம் கம்பம் புதுப்பட்டியைச் சேர்ந்த இவர், கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். நவ.,8 ல் மதுரை சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவருக்கு பால்வினை நோய் இருந்தது தெரியவந்தது. இதைதொடர்ந்து நவ.,9 காலை 10:30 மணிக்கு மதுரை அரசு மருத்துவமனையில் அதற்கான வார்டில் அனுமதிக்கப்பட்டார். பொதுவாக சிறை கைதிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்தால், அவர்களுக்கென உள்ள வார்டு எண் 111ல் அனுமதிக்கப்படுவர். ஆனால் சிங்கம் என்ற ராஜா, பால்வினை நோயால் அங்கு அனுமதிக்கப்படவில்லை.

அவர் சிகிச்சை பெற்றது பொது வார்டு என்பதால், சிறை காவலர்கள் பாதுகாப்பில் இருந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை காவலர்கள் 'அசந்த' நேரத்தில் சிங்கம் தப்பிச்சென்றார். 

சிறைக்காவலர்கள் சஸ்பெண்ட்: மதுரை அரசு மருத்துவமனையிலிருந்து கைதி தப்பியதையடுத்து பணியில் கவனக்குறைவாக இருந்ததற்காக சிறைக்காவலர்கள் தியாகராஜன், தமீம்அன்சாரியை சஸ்பெண்ட் செய்து கண்காணிப்பாளர் ஊர்மிளா உத்தரவிட்டார்.

Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு ஜாக்பாட்! இனி பட்டா தேடி வரும்! தமிழக அரசு குட்நியூஸ்!

Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு ஜாக்பாட்! இனி பட்டா தேடி வரும்! தமிழக அரசு குட்நியூஸ்! Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு தமிழக...