Sunday, November 12, 2017

Tamil Nadu: Sex abuse kills medical dreams of impoverished girls


By Karal Marx L  |  Express News Service  |   Published: 11th November 2017 02:57 AM  |  

Institute lures impoverished girls into Diploma in Medical Assistance course promising free education, places them as home nurses in Chennai houses, where they are physically, mentally abused during 4 months’ interniship; proprietor, also accused of abuse and groping, would take lion’s share of the salary
VILLUPURAM: A complaint made at the collectorate on Friday shocked the conscience of many after it came to light that a private medical institute has been exploiting impoverished girls who dreamt of higher education, for the past eight years.
The institution, which lures girls into the diploma in medical assistance (DMA) course by promise of free education, reportedly forces them into becoming home nurses in Chennai homes, were they are physically and mentally abused for a period of four months.
According to sources, the Sathya Institute Of Paramedical Sciences has been functioning at Sankarapuram under correspondent Kalaimani (34) for the past 8 years. The private medical studies institute currently has over 150 students, all of whom are girls.
According to a complaint registered by eight of the institute’s current students, the course named Diploma in Medical Assistance (DMA) usually has a majority of takers from impoverished backgrounds and tribal communities. The course is two-years-long and would fetch the students a certificate that would enable them to work as medical assistants in hospitals, ambulances and private homes.

PSG Anusiya Devi with the complainants at the collectorate on Friday| Express Photo
The institute puts out flyers advertising free education every year. Girls in the higher secondary classes, who believe the philanthropic ideal and dream of propagating the same after getting qualified themselves, feeds the conveyor belt that introduces them to abuses in the form of a correspondent before sending them off to the State’s capital to be exploited at various homes.
The complaint, a copy of which is with The New Indian Express, puts the strength of the students there at 150.
Speaking to this reporter, a 22-year-old student says that the teaching faculty treats the students with dignity and does function well, when it comes to classes.
However, the girls continue, Kalaimani would often interrupt classes in an inebriated condition. He would walk in, saying he ‘wanted to ease his burden’ with conversation, would simply pick a girl, who would then be groped in full view of the class. He would regularly abuse them and generally use foul language while addressing them.
This level of exploitation, it turns out, is only an introduction to abuse. Towards the end of the course, the students are required to practice at a medical care facility for four months. For this, Kalaimani would take them to Chennai.
There, they are taken to private hospitals and the girls assume that they would be working there. However, from there, Kalaimani registers them as private home nurses and forces them to go with patients as allotted by the hospital.
He would then claim the salary offered by the hospital and tell the girls that he was entitled to the salary as he had provided them free education.
The girls are then taken to houses against their will and forced into pitiable living conditions. They are, more often than not, forced to do all the chores of the house and live in questionable conditions. There are a number of cases were abuse, overwork and assault happen.
The worst is the fact that most of the girls are forced to stay at houses where male relatives of the patients manhandle or even rape them continually. The emotional damage to the girls are quite evident from the expressions with which they try to explain the abuse without giving away the shame they had to endure.The students had reportedly tried to plead with the correspondent for change of job.
When they told him they would file a police complaint if he forced them to endure abuse, Kalaimani threatened to not only throw them out of the school, but also told them he would withhold qualification certificates submitted during the admission.
In the absence of the collector, his personal secretary general (PSG) Anusiya Devi accepted the complaint and directed for an RDO inquiry. Kallakurichi RDO Malliga and Kallakurichi DD Health Gemini were asked to submit a report after inquiries.
Speaking to this reporter, correspondent Kalaimani refuted the charges. He was running a non-profit organisation to help impoverished students. He claimed that he was forced to accept whatever internship offers that came his way as the institute was facing financial difficulties for the past two years.


சோதனையில் சிக்கியது என்ன?: மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பியது வருமான வருமான வரித்துறை

Published : 11 Nov 2017 19:31 IST

சென்னை

மூன்று நாள் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1000 கோடி மதிப்பு சொத்து ஆவணங்கள் சிக்கியது உட்பட பல்வேறு தகவல்களை மத்திய நேரடி வரிவிதிப்பு ஆணையத்துக்கு இரண்டு அறிக்கைகளாக வருமான வரித்துறை அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சசிகலா, தினகரன், திவாகரன் அவர்களது உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகள், ஜெயா, நமது எம்ஜிஆர், ஜாஸ் சினிமாஸ் அலுவலகங்களில் மூன்றாவது நாளாக சோதனை நடக்கிறது. தமிழகம், புதுச்சேரி உள்பட 40 இடங்களில் 3-ஆவது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.

இதில் பல்வேறு முக்கிய சொத்து ஆவணங்கள் சிக்கி உள்ளது. மேலும் கடந்த ஆண்டு எதிர்க்கட்சிகளால் குற்றம்சாட்டப்பட்ட ஜாஸ் சினிமாஸை வாங்கியது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜாஸ் சினிமாஸ் டீல் குறித்து சத்யம் சினிமாஸ் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டது வருமானவரித்துறை. ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தை சசிகலா குடும்பத்தினர் வாங்கியது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

சத்யம் சினிமாஸிடம் இருந்து 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11 தியேட்டர்களை சசிகலா குடும்பம் வாங்கியதும் தெரியவந்துள்ளது.

இதற்காக 2013 ஆண்டில் கட்டப்பட்ட திரையரங்கங்களுக்கு அனுமதியளிக்கப்படாமல் ஒரு வருடம் அலைக்கழிக்க வைக்கப்பட்டதாக அப்போது புகார் எழுந்தது.

இதே போல் மத்திய நேரடி வரிவிதிப்பு ஆணையத்துக்கு அளிக்கப்பட்ட அறிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1000 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் சிக்கியதாகவும், 60 போலி நிறுவனங்கள் தொடர்பான ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும், இதுவரை கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் நிறுவனங்கள் குறித்து மதிப்பீடு செய்தல் மற்றும் முறைகேடுகள் குறித்த கணக்கில் வராத 15 கிலோ தங்கம், ரூ.5.5 கோடி கணக்கில் காட்டப்படாத ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

போலி நிறுவனங்களில் வருவாய் வந்ததாக காட்டப்பட்டு ரூ.150 கோடிக்கு அசையும் மற்றும் அசையா சொத்துகள் வாங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 150 வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் போது 50 நாட்களுக்குள் கோடிக்கணக்கான ரூபாய்களை மாற்றியதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட பெரும்பாலான ஆவணங்கள், தகவல்கள் அனைத்தும் விவேக் ஜெயராமன், அவரது சகோதரி கிருஷ்ணப்ரியா மற்றும் ஆடிட்டர்களிடம் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மூன்றாம் நாளான இன்று திடீரென திவாகரனின் மகள் ராஜமாதங்கி ஈக்காட்டுத்தாங்கல் கலைமகள் நகரில் வசிக்கிறார் இவரது வீட்டிலும் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கர்நாடக மாநில அதிமுக அம்மா அணி செயலாளர் புகழேந்தி வீட்டில் சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் வரும் திங்கள்கிழமை சென்னை வருமான வரி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அவருக்கு உத்தரவிட்டுள்ளனர்.


மூன்று நாள் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1000 கோடி மதிப்பு சொத்து ஆவணங்கள் சிக்கியது உட்பட பல்வேறு தகவல்களை மத்திய நேரடி வரிவிதிப்பு ஆணையத்துக்கு இரண்டு அறிக்கைகளாக வருமான வரித்துறை அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சசிகலா, தினகரன், திவாகரன் அவர்களது உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகள், ஜெயா, நமது எம்ஜிஆர், ஜாஸ் சினிமாஸ் அலுவலகங்களில் மூன்றாவது நாளாக சோதனை நடக்கிறது. தமிழகம், புதுச்சேரி உள்பட 40 இடங்களில் 3-ஆவது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.

இதில் பல்வேறு முக்கிய சொத்து ஆவணங்கள் சிக்கி உள்ளது. மேலும் கடந்த ஆண்டு எதிர்க்கட்சிகளால் குற்றம்சாட்டப்பட்ட ஜாஸ் சினிமாஸை வாங்கியது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜாஸ் சினிமாஸ் டீல் குறித்து சத்யம் சினிமாஸ் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டது வருமானவரித்துறை. ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தை சசிகலா குடும்பத்தினர் வாங்கியது குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

சத்யம் சினிமாஸிடம் இருந்து 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11 தியேட்டர்களை சசிகலா குடும்பம் வாங்கியதும் தெரியவந்துள்ளது.

இதற்காக 2013 ஆண்டில் கட்டப்பட்ட திரையரங்கங்களுக்கு அனுமதியளிக்கப்படாமல் ஒரு வருடம் அலைக்கழிக்க வைக்கப்பட்டதாக அப்போது புகார் எழுந்தது.

இதே போல் மத்திய நேரடி வரிவிதிப்பு ஆணையத்துக்கு அளிக்கப்பட்ட அறிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1000 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் சிக்கியதாகவும், 60 போலி நிறுவனங்கள் தொடர்பான ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும், இதுவரை கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் நிறுவனங்கள் குறித்து மதிப்பீடு செய்தல் மற்றும் முறைகேடுகள் குறித்த கணக்கில் வராத 15 கிலோ தங்கம், ரூ.5.5 கோடி கணக்கில் காட்டப்படாத ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

போலி நிறுவனங்களில் வருவாய் வந்ததாக காட்டப்பட்டு ரூ.150 கோடிக்கு அசையும் மற்றும் அசையா சொத்துகள் வாங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 150 வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் போது 50 நாட்களுக்குள் கோடிக்கணக்கான ரூபாய்களை மாற்றியதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட பெரும்பாலான ஆவணங்கள், தகவல்கள் அனைத்தும் விவேக் ஜெயராமன், அவரது சகோதரி கிருஷ்ணப்ரியா மற்றும் ஆடிட்டர்களிடம் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மூன்றாம் நாளான இன்று திடீரென திவாகரனின் மகள் ராஜமாதங்கி ஈக்காட்டுத்தாங்கல் கலைமகள் நகரில் வசிக்கிறார் இவரது வீட்டிலும் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கர்நாடக மாநில அதிமுக அம்மா அணி செயலாளர் புகழேந்தி வீட்டில் சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் வரும் திங்கள்கிழமை சென்னை வருமான வரி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அவருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

Help Sastika Undergo Treatment And Fight Neuroblastoma

https://milaap.org/stories/help-baby-sastika?utm_source=adgebra&utm_medium=cpc




Our friend Rathna Kumar’s daughter, Baby Sastika Sree (5 years old) has been diagnosed with Metastatic Neuroblastoma, and is undergoing treatment at Apollo Cancer Institute Chennai. She is currently undergoing chemotherapy which will be followed by surgery - Autologous stem cell transfusion, High dosage chemo therapy & radio therapy.

We sincerely appeal to everyone to make generous monetary contribution to the child. The overall expense is expected to be around 22 lakh Rupees; hence please contribute generously.

Note : Rathna Kumar is the sole bread winner

You can also do a bank transfer to the below mentioned account:

Account number: 80808080101023471
Account name: Sastika
IFSC code: YESB0CMSNOC
Expense Breakup

Treating doctor's reference letter



You can also do a bank transfer to the below mentioned account:

Account number: 80808080101023471
Account name: Sastika
IFSC code: YESB0CMSNOC

புற்று நோயுடன் போராடும் 5 வயது சிறுமி சாஸ்திகா , தன்னை காப்பாற்றுமாறு வேண்டுகிறாள்

5 வயது சிறுமி சாஸ்திகா, சரண்யா- ரத்தினகுமார் அவர்களின் ஒரே மகள். நல்ல ஆரோக்கியமும் அறிவும் பெற்ற மகளை எண்ணி மகிழ்ச்சியாக இருந்தனர். ஆனால் அவர்களின் மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. கடந்த ஆகஸ்ட் மாதம், கேன்சர்(புற்றுநோய்) எனும் உயிரைப்பறிக்கும் கொடிய நோயால் சாஸ்திகா பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது.


இந்த புற்று நோய் உடல் முழுவதும் பரவும் தன்மை உடையது
ஆகஸ்ட் மாதம் சாஸ்திகாவிற்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. மருந்து மாத்திரைகள் ஏதும் சரி செய்ய முடியவில்லை. காய்ச்சல் இருபது நாட்கள் தொடர்ந்து இருந்ததால் இரத்த பரிசோதனை, ஸ்கேன் செய்து பார்த்தனர். அதில் நியூரோபிளாஸ்டோமா என்ற கேன்சர் இருப்பதாக தெரியவந்தது. இது பொதுவாக சிறுநீரகத்தில் ஏற்படும், பிறகு வயிறு, கழுத்து, எலும்பு என்று உடல் முழுவதும் பரவும் தன்மை உடையது. உடனடியாக கீமோதெரபி, அறுவை சிகிச்சை, ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை, ரேடியோதெரபி செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரித்தனர்.

உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் உயிருக்கு பாதிப்பு ஏற்பட கூடும் என்பதால் இப்போது 10 நாட்களுக்கு ஒரு முறை கீமோதெரபி மேற்கொள்கிறாள்.


நோயின் கொடூரம் அதிகரித்து கொன்டே இருக்கிறது, அவள் வலியால் அழுவதை தாங்கிக்கொள்ள முடியவில்லை
ரத்தினகுமார், சரண்யா இருவரும் அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் தவிக்கின்றனர். தங்களின் ஒரே மகள் இந்த சிறிய வயதில், தினம் தினம் வலியால் துடிப்பதை அவர்களால் சகித்து கொள்ள முடியவில்லை. எப்போதும் துறுதுறுவென்று வீட்டில் சுற்றிக்கொண்டிருந்தவள் இன்று படுக்கையில் இருக்கிறாள். சாஸ்திகா நான்கு வயதிலே மூன்று மொழிகளில் ரைம்ஸ் பாடுவாள் என்று சரண்யா பெருமையாக பகிர்ந்து கொள்கிறார். பள்ளி படிப்பை தொடர ஆர்வமாக இருந்தவள் இன்று உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறாள்.

"அவளுக்கு மேக் அப் செய்து கொள்வதில் ஆர்வம் அதிகம். அவள் கண் இமைகள் அடர்த்தியாக இருக்கும். ஆனால் இப்போது முடியெல்லாம் கொட்டி சோர்வாக இருக்கிறாள். அவளுக்காக நானும் மொட்டை அடித்து கொள்ள இருக்கிறேன். இதுவரைக்கும் அவள் எதற்காகவும் அடம்பிடித்தது இல்லை. இப்போ அவளை காப்பற்ற சொல்லி வலியில் தினமும் அழுகிறாள். ஆனால் ஏதும் செய்ய முடியாமல் நான் நிற்கிறேன்" - என்று சரண்யா கூறுகிறார்


மகளின் சிகிச்சைக்காக எல்லாவற்றையும் விற்றதோடு கடனும் வாங்கியுள்ளார், இருப்பினும் அது போதவில்லை
ரத்தினகுமார் ஒரு bpo வில் வேலை செய்கிறார். அவரின் வருமானத்தை வைத்து தான் மருத்துவ செலவுகளை பார்த்துக்கொள்கிறார். தன்னிடம் இருந்த எல்லா நகைகளையும் விற்றதோடு வேலை செய்யும் இடத்தில் இருந்து கடன் வாங்கியுள்ளார். இந்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டவர்கள் குணமடையும் வாய்ப்பு 0% தான் என்று பல மருத்துவர்கள் கூறியுள்ளனர். சாஸ்திகாவிற்கு சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவர் 40 % வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் எப்படியாவது தன் குழந்தையை காப்பற்ற போராடி கொண்டிருக்கிறார்.

"எங்கள் வசதிக்கேற்ப தேவைகளை அமைத்து கொண்டு நாங்கள் வாழ்ந்து வந்தோம். நான் பத்து ருபாய் கூட யாரிடமும் கடன் வாங்கியது இல்லை. என் மகளின் புகைப்படத்தை எங்கும் பகிர்ந்துகொண்டதில்லை. இன்றைக்கு அவளின் புகைப்படத்தை காட்டி, அவளின் துயரத்தை சொல்லி பணம் வாங்குகிறேன் இந்த அவல நிலை எந்த பெற்றோருக்கும் வர கூடாது. நான் அவளை காப்பற்றுவேன் என்று அவள் நம்புகிறாள், அது பொய்யாவதை பார்ப்பதற்கான சக்தி என்னிடம் இல்லை" என்று ரத்தினகுமார் சொல்கிறார்.

நீங்கள் உதவு முடியும்!ரத்தினகுமார் இதுவரை 2 லட்சம் செலவு செய்துள்ளார், இன்சூரன்ஸ் பணமும் தீர்ந்து விட்ட நிலையில் சாஸ்திகாவின் சிகிச்சைக்கு இன்னும் 20 லட்சம் தேவைப்படுகிறது, இது அவர்களின் சக்திக்கு மீறிய தொகை. சிறுமியின் நம்பிக்கையையும் உயிரையும் காப்பாற்றுவதற்கு , உங்களின் நன்கொடை பெரும் உதவியாக இருக்கும்.

ஆதரவான ஆவணங்கள்
இந்த பிரச்சாரத்தின் விவரங்கள் சம்பந்தப்பட்ட மருத்துவமனையுடன் சரிபார்க்கப்பட்டுள்ளன. மேலும் விவரங்களுக்கு, தயவுசெய்து பிரச்சார அமைப்பாளர் அல்லது மருத்துவமனையை தொடர்பு கொள்ளவும்.


சிறுமி சாஸ்திகாவிற்கு உதவ இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

ஜெயலலிதாவின் உயில் எங்கே?- அப்பல்லோ சிகிச்சை சி.டி.யை சல்லடை போட்டு தேடிய அதிகாரிகள்: வருமான வரித்துறை சோதனையின் அதிர்ச்சி பின்னணி

Published : 11 Nov 2017 08:57 IST

இரா.வினோத்பெங்களூரு/ சென்னை





ஜெயலலிதாவின் தோழியும், அதிமுக (அம்மா) பொதுச்செயலாளருமான சசிகலா, துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், திவாகரன், இளவரசியின் மகன் விவேக், மகள் கிருஷ்ணப்ரியா, உறவினர்கள் டாக்டர் வெங்கடேஷ், சிவக்குமார், வழக்கறிஞர் செந்தில் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் வீடுகளிலும், அவர்களுக்கு நெருக்கமானோரின் வீடுகளிலும் கடந்த இரு தினங்களாக வருமான வரி சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த சோதனையில் சசிகலா, நடராஜன், தினகரன், விவேக், திவாகரன் உள்ளிட்டோர் தொடர்பான ஏராளமான சொத்துகளின் ஆவணங்களும், முதலீடுகளின் முக்கிய ஆவணங்களும், ரொக்கப்பணமும் அதிகளவில் சிக்கியது. அவர்களுக்கு நெருக்கமானோரின் வீடு,அலுவலகங்களில் சசிகலா குடும்பத்தாருக்கு சொந்தமான பினாமி நிறுவனங்களின் ஆவணங்கள் நிறைய சிக்கியுள்ளது. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்புடைய ஆவணங்கள், நிறுவனங்கள், சொத்துகள் பற்றிய தகவல் கிடைத்ததாக வருமான வரித்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.


இந்நிலையில் சசிகலா குடும்பத்தாருக்கு நெருக்கமானோரிடம் பேசியபோது, '' வருமான வரித்துறை அதிகாரிகள் இளவரசியின் மகனும், ஜெயா டிவி இயக்குநருமான விவேக்கின் வீடு, அலுவலங்களில் சோதனை நடத்தப்பட்டது மன்னார்குடி வட்டாரத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. விவேக்கின் சகோதரி கிருஷ்ணப்ரியா, மாமனார் பாஸ்கர், உறவினர்கள், நெருக்கமானோரின் வீடுகளில் அதிகாரிகள் பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

அந்த ஆவணங்களை அதிகமாக கண்டுக்கொள்ளாத அதிகாரிகள், வேறு எதையோ சல்லடை போட்டு தேடினர். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் சிவகுமார், டாக்டர் வெங்கடேஷ், திவாகரனுக்கு சொந்தமான இடங்களிலும் சிடி, பென் டிரைவ், சிப், மெமரி கார்டு, எலக்ட்ரிக் ஃபைல் உள்ளிட்டவற்றை தேடினர். வேறு ஏதேனும் லாக்கர், ரகசிய அறை உள்ளதா எனவும் கேட்டனர்.

விவேக், கிருஷ்ணப்ரியா, சிவக்குமார், வெங்கடேஷ், திவாகரனிடம் சொத்துகள் பற்றியும், முதலீடுகள் பற்றியும் விசாரித்தனர். அதைவிட அப்பல்லோவில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற நாட்கள் பற்றியும், சிகிச்சையின்போது எடுக்கப்பட்ட வீடியோ, புகைப்பட ஆதாரங்களையும் துருவி துருவி கேட்டனர். ஜெயலலிதா உயில் எழுதினாரா? அந்த உயில் எங்கே? யாரிடம் இருக்கிறது எனவும் கேள்வி எழுப்பினர். இதற்கு சிவக்குமார், வெங்கடேஷ் உள்ளிட்டோர் உரிய பதில் அளிக்காததால், அதிகாரிகள் அதிருப்தி அடைந்தனர்.

இதேபோல ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் நெருக்கமான நாமக்கல் வழக்கறிஞர் செந்தில், அவரது உதவியாளர்களிடமும் கேள்வி எழுப்பியுள்ளனர். ஜெயலலிதாவுக்கு எங்கெங்கு சொத்துகள் உள்ளன? யார் பெயரில் அவை உள்ளன? கடைசியாக எழுதிய உயில் எங்கே? அதனை எந்த வழக்கறிஞர் தயாரித்து கொடுத்தார்? என கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு செந்திலும், மற்றவர்களும், ''எங்களுக்கு தெரியாது'' என பதிலளித்துள்ளனர்.

பெங்களூருவில் சசிகலாவின் ஆதரவாளர் புகழேந்தி வீட்டில் சோதனை நடத்தப்பட்டபோது, இதே மாதிரியான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. ஜெயலலிதாவின் அப்பல்லோ மருத்துவமனை சிகிச்சை சிடியை வெளியிடுவதாக அறிவித்தீர்களே? அது எங்கே இருக்கிறது? என கேட்டுள்ளனர். அதற்கு புகழேந்தி மறுப்பு தெரிவிக்க, அவரது குடும்பத்தாரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சசிகலா குடும்பத்தாரின் சொத்துக்குவிப்பையும், பினாமி உள்ளிட்டவற்றையும் கண்டறிய வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் அதற்கு போதிய கவனம் செலுத்தவில்லை. மாறாக ஜெயலலிதாவின் சொத்துகள் பற்றியும், அவரது கடைசி உயில் பற்றியும், அப்பல்லோ மருத்துவமனை சிகிச்சை சிடி பற்றியும் அதிக அக்கறை கொண்டு விசாரித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சசிகலா குடும்பத்தாரை வருமான வழக்கில் மட்டுமல்லாமல், குற்றவியல் வழக்கிலும் சிக்க வைக்கவே சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம் சசிகலாவையும், தினகரனையும் அரசியலில் இருந்தே ஒழித்து கட்டுவதற்காக இந்த சோதனை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த மெகா சோதனையில் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் ரகசிய கூட்டு இருக்கிறது'' என்றனர்.

வருமான வரித்துறை அதிகாரிகளின் இந்த போக்கும், விசாரணை முறையும் மெகா சோதனைக்கு உண்மையான பின்னணி என்ன? என சசிகலா குடும்பத்தாரை யோசிக்க வைத்திருக்கிறது.

இப்படியும் உங்கள் ஏடிஎம்மில் பணம் திருடப்படலாம்: மாம்பலத்தில் புதிய சம்பவம்

இப்படியும் உங்கள் ஏடிஎம்மில் பணம் திருடப்படலாம்: மாம்பலத்தில் புதிய சம்பவம்
மாம்பலம் கனரா வங்கி ஏடிஎம்-ல் ஸ்கிம்மர் கருவி பொருத்தி வாடிக்கையாளர் பணத்தை அபகரிக்க முயன்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை மேற்கு மாம்பலம் கோவிந்தன் சாலையில் உள்ள கனரா வங்கி ஏடிஎம்-ல் நேற்று மாலை மர்ம நபர் ஒருவர் ஸ்கிம்மர் கருவியை பொருத்தி விட்டு சென்றுள்ளார்.

எதிர்பாராத விதமாக வங்கி ஏடிஎம்-ல் பணம் போட வந்த ஊழியர்கள் ஸ்கிம்மர் கருவி பொருத்தி உள்ளதை கண்டு பிடித்தனர். உடனடியாக இது பற்றி தி.நகர் வங்கி மேலளாளர் மகேஷிடம் தகவல் அளிக்க அவர் குறிப்பட்ட ஏடிஎம் மையத்துக்கு வந்து ஆய்வு செய்தார்.

மர்ம நபர் ஏடிஎம்-ல் பொருத்திய ஸ்கிம்மர் கருவியை எடுத்து குமரன் நகர் காவல் நிலையத்தில் அதை ஒப்படைத்து புகார் அளித்தார். குமரன் நகர் போலீஸார் சம்பந்தப்பட்ட ஏடிஎம்-க்கு சென்று விசாரணை நடத்தினர். கண்காணிப்பு கேமராவில் சம்பந்தப்பட்ட நபரின் உருவம் பதிவாகியுள்ளதா என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

சென்னையில் உள்ள ஏடிஎம்களில் இது போன்று ஸ்கிம்மர் கருவி மூலம் திருடும் கும்பல் மீண்டும் கைவரிசையை காட்டத் துவங்கியுள்ளது. துரித நடவடிக்கை எடுக்காவிட்டால் வாடிக்கயாளர்கள் பணம் பறிபோக வாய்ப்புள்ளது.

எப்படி வேலை செய்கிறது ஸ்கிம்மர் கருவி:

ஸ்கிம்மர் கருவி என்பது நமது ஏடிஎம் கார்டில் உள்ள மேக்னட் சிப்பில் உள்ள நமது டேட்டாக்களை திருடும் கருவி ஆகும். நாம் ஏடிஎம் கார்டை நுழைக்கும் இடத்தில் அதற்கு மேல் பொருத்தப்படும் வகையில் தயாரிக்கிறார்கள்.

கார்டை நுழைக்கும் இடத்தில் அதை பொருத்தி விட்டு மர்ம நபர்கள் சிறிது தூரத்தில் அமர்ந்து கண்காணித்துக்கொண்டிருப்பார்கள். நீங்கள் பணம் எடுக்க உங்கள் ஏடிஎம் கார்டை நுழைக்கும்போது நொடியில் உங்கள் டேட்டாவை அந்த ஸ்கிம்மர் மெஷின் திருடி விடும். உங்கள் அக்கவுண்டில் பணம் இருப்பதையும் உங்களுக்கான ஏடிஎம் ரகசிய குறியீடுகளை அது எடுத்துவிடும்.

நீங்கள் சென்றவுடன் பணம் எடுக்க வருவது போல் அந்த நபர் ஸ்கிம்மர் மெஷினை எடுத்து ஒரு மணி நேரத்தில் உங்கள் டேட்டாவுடன் கூடிய கார்டை தயாரித்து உங்கள் பணத்தை எடுத்து விடுவார்கள். இதற்கு உங்கள் ’பின்’ நம்பரை கவனிக்க வைஃபை வசதியுடன் கூடிய கேமராவையும் பொருத்தியிருப்பார்கள்.

இதற்கு எச்சரிக்கையாக இருக்க நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஏடிஎம் கார்டு நுழைக்கும் இடத்தில் வித்யாசமாக உணர்ந்தீர்கள் என்றால் ஜாக்கிரதையாக சோதித்த பின்னரே பணம் எடுக்க கார்டை நுழைக்க வேண்டும்.

புதிதாக தற்போது வேறொரு மோசடியிலும் மர்ம நபர்கள் ஈடுபடுகின்றனர். பணம் வெளியே வரும் இடத்தில் ஒரு சிறிய பெட்டி போன்ற கருவியை பொருத்துகிறார்கள். அதன் மூலம் வாடிக்கையாளர் எடுக்கும் பணம் வெளியே வராமல் அந்த பெட்டிக்குள்ளேயே சுருண்டுவிடும்.
வாடிக்கையாளர் பணம் வரவில்லை என்று வங்கியில் புகார் அளிப்பார். ஆனால் பெட்டியை உருவி வாடிக்கையாளர் பணத்தையும் எடுத்துச்சென்று விடுவார்கள். இது நவீன திருட்டு ஆகும். ஆகவே வாடிக்கையாளர்களே உஷார்.

நிற்காமல் செல்லும் தனியார் பேருந்துகள்... கொதிகொதிக்கும் மக்கள்!

நிற்காமல் செல்லும் தனியார் பேருந்துகள்... கொதிகொதிக்கும் மக்கள்!
நாமக்கல் மாவட்டம், பவானி குமாரபாளையத்தில், பஸ் ஸ்டாண்ட்டுக்கு வராமல் செல்லும்  தனியார் பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை எழுந்துள்ளது. ஈரோடு மாவட்டம், பவானியிலிருந்து, சேலம் செல்லும் அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்களும், குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் வந்து செல்கின்றன. ஆனால், சேலத்திலிருந்து, பவானி வரும்போது, குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டிற்கு பெரும்பாலான தனியார் பஸ்கள் வருவதில்லை.
இதனால் வயதானவர்கள், அதிக பாரம் கொண்டு வருபவர்கள், குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள் என, பல தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். நேற்று மதியம், 1:50 மணியளவில், தனியார் பேருந்து ஒன்று  பள்ளிபாளையம் பிரிவு சாலையிலேயே பயணிகளை இறக்கி விட்டதால், பயணிகள் மற்றும் நடத்துநரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. எனவே, அனைத்து பேருந்துகளும் பஸ் ஸ்டாண்ட் வந்து செல்வதற்கு தேவையான நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்று குமாரபாளையம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  
இதுதொடர்பாக நம்மிடம் பேசிய சிலர், "தனியார் பேருந்துகள் மட்டுமில்லாமல், அரசு பேருந்துகளும் சில சமயங்களில் பள்ளிபாளையம் பிரிவிலேயே திரும்பிவிடுகின்றது. சில மாதங்களுக்கு முன் இவ்வாறு பேருந்துகள் திரும்பி செல்வது குறித்து நாளிதழில் செய்தியாகவும் வந்தது. ஆனால், எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. காலையில் தினமும் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ-மாணவியருக்கும், வேலைக்குச் செல்லும் பணியாளர்களுக்கும் ரொம்ப சிரமமாக உள்ளது.
 
இதைப் பற்றி சேலம் போக்குவரத்து அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளோம். ஆனால், இதுவரையிலும் அதிகாரிகள் சரியான நடவடிக்கை எடுக்காததால் மீண்டும் இந்த நிலைமை. இதனால், மாற்றுத் திறனாளிகள், நிறை மாத கர்ப்பிணிப் பெண்கள், வயதானவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே அரசு அதிகாரிகள் இதனைக் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் சாலை மறியல் அல்லது போராட்டம்  நடத்துவோம்" என்று எச்சரிக்கை விடுத்தனர். 

Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு ஜாக்பாட்! இனி பட்டா தேடி வரும்! தமிழக அரசு குட்நியூஸ்!

Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு ஜாக்பாட்! இனி பட்டா தேடி வரும்! தமிழக அரசு குட்நியூஸ்! Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு தமிழக...