Tuesday, November 14, 2017

நாளை முதல் மழை படிப்படியாக குறையும்


By  சென்னை,  |   Published on : 14th November 2017 02:55 AM  |
todayrain

தமிழகத்தில் புதன்கிழமை ( நவ. 15) முதல் மழை படிப்படியாக குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ். பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியது:
 கடந்த 10-ஆம் தேதி முதல் 4 நாள்களாக தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி சற்று வலுப்பெற்று, திங்கள்கிழமை தொடர்ந்து அதே பகுதியில் நீடிக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்களில் பல இடங்களில் மழைப் பெய்துள்ளது. இந்தக் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அடுத்து வரும் இரு தினங்களில் வடதிசையில் நகர்ந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் செவ்வாய்க்கிழமை மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
 சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டமாக காணப்படும். ஒருசில முறை லேசான மழையும், சில நேரங்களில் சற்று பலத்த மழையும் இருக்கும். புதன்கிழமை முதல் மழை படிப்படியாக குறையும் என்றார் பாலச்சந்திரன்.
 எண்ணூரில் 110 மி.மீ. மழை: திங்கள்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம், எண்ணூரில் 110 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.
 பிற இடங்களில் மழை அளவு (மி.மீ.ல்): திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, சென்னை மாதவரம் தலா 70, சென்னை டி.ஜி.பி. அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம் கொளப்பாக்கம், அண்ணா பல்கலைக் கழகம், அரண்மனைப்புதூர், தாமரைப்பாக்கம் தலா 40, திருவள்ளூர் மாவட்டம் சோழவரம், செங்குன்றம், தரமணி தலா 30, திருவள்ளூர் 20.

குழந்தைகள் இயந்திரங்களா?


By  மன்னை. பாஸ்கர்  |   Published on : 14th November 2017 02:48 AM 
"உன் கூடத்தான படிக்கிறா அந்தப் பிரியா, அவ மட்டும் எப்புடி எல்லாப் பாடத்துலயும் முழு மார்க் வாங்குறா?' நீயும் இருக்கியே, ஏதாவது ஒரு தப்புப் பண்ணிட்டு 4 மார்க் குறைச்சு வாங்குறதே உனக்கு பொழப்பா போச்சு.
 "எப்பப் பாரு விளையாட்டுதான். ஒரு நாளாவது நீயா உட்கார்ந்து படிச்சிருக்கியா?' தெனமும் படி, படின்னு பாட்டு பாடனும். இல்ல.. அடிச்சாதான் படிக்கிறது. எப்பதான் திருந்தப் போறியோ..!
 இதுபோன்ற குரல்கள்தான் படிக்கும் பிள்ளைகள் உள்ள வீடுகளில் பெரும்பாலும் எதிரொலிக்கிறது. சென்னை போன்ற பெரு நகரங்களில் நடுத்தர மக்கள் வீடுகளில் இந்த வசவுகள் கொஞ்சம் அதிகமாகவே கேட்கும். தாய்-தந்தை இருவரும் வேலைக்குச் செல்லும் வீடுகளில் கேட்கவே வேண்டாம்.
 ஐந்தாம் வகுப்பு படிக்கும் பிள்ளைக்கு பெற்றோர் இடும் கட்டளைகளைக் கேட்டால் சிரிப்புதான் வரும். உனக்கு கிரிக்கெட் பேட் வேணுமா? வீடியோ கேம் வேணுமா? சைக்கிள் வேணுமா? இல்லை என்ன வேணுமோ கேள். உடனே வாங்கித் தருகிறோம்.
 ஆனால், எல்லா தேர்வுகளிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்கி விட வேண்டும் என்பதுதான் பிள்ளைகளிடம் பெற்றோர் பேசும் பேரம்.
 கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்த பெற்றோர், அதை வைத்து விளையாட அனுமதிக்க மாட்டேன் என்கிறார்களே என்று பிள்ளைகளுக்குக் கோபம்.
 சில குழந்தைகள் நாம் சொல்வதையெல்லாம் எதிர்ப்பேச்சு பேசாமல் கேட்டுக் கொள்வார்கள். ஒரு சிலர் ஏதாவது ஒரு வழியில் கோபத்தை வெளிப்படுத்தி விடுவார்கள். ஒரு சிலர் முணு முணுத்துக் கொண்டே செய்வார்கள்.
 இதேபோல தொடர்ந்து முணு முணுக்கும் குழந்தைகள் காலப்போக்கில் மனரீதியாக பாதிக்கப்படுவார்கள் என்பது மனவியல் ஆய்வாளர்களின் கருத்து. அதிக கண்டிப்பும் ஆபத்து, அளவுக்கு மீறிய செல்லமும் ஆபத்துதான்.
 விளையாடக்கூட நேரம் இல்லையே என மனதுக்குள் புழுங்கும் குழந்தைகள் ஒரு புறம்; அவர்களை மதிப்பெண்கள் வாங்கும் இயந்திரங்களாக மாற்றத் துடிக்கும் பெற்றோர் மறுபுறம். பிள்ளைகளுடன் செலவழிக்கக் கிடைக்கும் நேரத்தை எல்லாம் அவர்கள் மனத்தில் மதிப்பெண் வெறியை ஊட்டவே பயன்படுத்தும் பெற்றோர்.
 இவர்களில் மாற வேண்டியது யார்? விளையாட்டிலேயே குறியாக இருக்கும் குழந்தைகளா? இல்லை, மதிப்பெண்கள் வாங்கா விட்டால் எதிர்காலமே இல்லை என்ற எண்ணத்தை அழுத்தமாக மனத்தில் பதித்திருக்கும் பெற்றோர்களா?
 பொருளாதார ரீதியில் வாழ்க்கையின் உச்சியில் பிள்ளைகளை உட்கார வைக்க வேண்டும் என்று துடிக்கும் பெற்றோர், குழந்தைகளின் எண்ணங்களுக்கு மதிப்பளிப்பதில்லை. அவர்களுக்கென்று ஆசைகளும் ,விருப்பு வெறுப்புகளும் இருக்கும் என்று நினைத்துக்கூட பார்ப்பதில்லை.
 குழந்தைகளின் உடல் மற்றும் மன ரீதியான அமைப்பு பற்றி யோசித்துக் கூட பார்ப்பதில்லை.
 எத்தனை பெற்றோர், இரவில் உறங்கச் செல்லும் முன் குழந்தைகளுக்குக் கதை சொல்லி தூங்க வைக்கிறார்கள்? பள்ளிக் கூடங்களில் இப்போதெல்லாம் நீதி போதனை வகுப்புகள் இல்லாததால் ஆசிரியர்களும் கூட கதை சொல்வதில்லை. கதைகள் வழி கிடைக்கும் நியாயமும் நல்லெண்ணமும் குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை.
 இந்த உலகம் முதல் மதிப்பெண் எடுப்பவர்களுக்கு மட்டுமானது என்று நாமும் தவறாகப் புரிந்து கொண்டு, வளரும் தலைமுறையையும் தவறாக சிந்திக்க வைப்பது நியாயமா?
 இந்த உலகம் கடைசி மதிப்பெண் எடுப்பவனுக்கும் உரிமையானதுதான் என்ற உண்மையைப் புரிந்து கொள்ளாதது மட்டுமல்ல, அவனும் நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்ள ஏராளமான வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன என்ற எதார்த்தத்தையும் மறைக்கிறோம்.
 இந்த சமூகம் மெத்தப் படித்த மேதாவிகளையும் பார்த்திருக்கிறது, படிக்காத மேதைகளையும் பார்த்திருக்கிறது என்பதுதானே உண்மை.
 பொது வெளியில் இந்த உலகைப் புரிந்து கொள்ளும் வாய்ப்பு மறுக்கப்பட்டு வளர்க்கப்படும் குழந்தைகள், இளைஞர்களாகவும், இளம் பெண்களாகவும் இன்றைய நவீன உலகில் நுழையும் போது எதிர்கொள்ளும் எதார்த்தங்கள் அவர்களுக்கு மன அதிர்ச்சியையே ஏற்படுத்தும்.
 தனிமனிதனாக எதையும் எதிர்கொள்ளும் துணிச்சலை அகற்றி அடுத்தவர்களைச் சார்ந்திருக்கும் நிலையை ஏற்படுத்தும். அன்பு, பாசம் ,உறவு, நட்பு போன்றவற்றைப் புரிந்து கொள்ள முடியாமல் பணம் மட்டுமே அடி மனத்தின் சிந்தனையாக இருக்கும்.
 அளவுக்கு மீறிய அன்பு காரணமாக நம்முடைய விருப்பங்களையும் எதிர்பார்ப்புகளையும், எண்ணங்களையும் அவர்கள் மீது திணிக்கக் கூடாது. நாம் வேண்டுமானால் குழந்தைகளைப் போல் இருக்கலாம், ஆனால், குழந்தைகள் நம்மைப் போல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது மிகவும் தவறு.
 பச்சிளம் தளிர்களை அதன் இயல்பான போக்கில் வளரவிட வேண்டும். இயன்றவரை குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு ஏற்ற சூழலை உருவாக்கித் தந்து, ஊக்குவிப்பதுதான் பெற்றோர்களின் தலையாய கடமை.
 இது போட்டிகள் நிறைந்த உலகம்தான் என்றாலும், போட்டி மனப்பான்மை கொண்ட பிம்பங்களாக மட் டுமே குழந்தைகளை வளர்த்தால் எதார்த்த வெளிச்சம் படும்போது கூச்சம் ஏற்பட்டு, கண்களை மூடிக் கொள்வார்கள்.
 நம் பிள்ளைகள் எப்படி வளர வேண்டும் என்று முடிவு செய்வது நம் கையில்தான் இருக்கிறது.
 

ஏழை மாணவர்களுக்கு வழங்கும் கல்வி கடன் திட்டத்தில் குறைந்தபட்ச மதிப்பெண் தகுதி எதுவும் இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
சென்னை ஐகோர்ட்டில், திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை மேலாளர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு  மனுவில் கூறியிருந்ததாவது:&

பெருமாநல்லூரை சேர்ந்த ஏ.ரவி என்பவர் தன் மகனுக்கு கல்விக்கடன் கேட்டு விண்ணப்பம் செய்தார். இவரது மகன், பிளஸ்&2&வில் 59 சதவீத மதிப்பெண்தான் எடுத்துள்ளார். ஆனால், கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள், குறைந்தது 60 சதவீத மதிப்பெண் பெற்று இருக்கவேண்டும். இதனால் அவரது மகனின் விண்ணப்பத்தை நிராகரித்தோம். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ரவி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் ரவியின் மகனுக்கு கல்வி கடன் வழங்க வேண்டும் என்று 2013&ம் ஆண்டு ஜூன் 20&ந் தேதி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்யவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், எம்.சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்தார்கள். பின்னர் அவர்கள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:&
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவும் விதமாக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் கல்விக்கடனை மத்திய அரசு வழங்குகிறது.
இந்த கல்விக்கடன் என்பது இலவசமாக வழங்கப்படுவதில்லை. குறைந்த வட்டியில் திருப்பிச் செலுத்தும் விதமாக கடன் வழங்கப்படுகிறது. இது, சமுதாயத்தில் பின்தங்கியவர்களை முன்னேற்றும் விதமாக செயல்படும் சமூக பொறுப்புள்ள திட்டமாகும்.

இந்த திட்டத்தின் நோக்கத்தை மனதில் கொண்டு, பொருளாதார நெருக்கடியில் உள்ள மாணவர்களுக்கு உதவும் விதமாக, நியாயமான கல்விக்கட்டணத் தொகையை கடனாக வங்கிகள் வழங்க வேண்டும்.

நிர்வாக ஒதுக்கீட்டின்கீழ் கல்லூரி படிப்பில் சேரும் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கலாம் என்று மத்திய அரசு ஏற்கனவே விளக்கம் அளித்துவிட்டது.
கல்விக்கடன் எந்தெந்த மாணவர்களுக்கு வழங்கலாம் என்பது குறித்து 2012&ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27&ந் தேதி மத்திய நிதி மந்திரி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு தகுதிகளை நிர்ணயம் செய்து, அந்த தகுதிகளை கொண்ட மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளில், கல்விக்கடன் வாங்கும் மாணவர்கள் குறைந்தபட்சம் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்று எந்த ஒரு இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.

எனவே, இவற்றின் அடிப்படையில், இந்த வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் எந்த ஒரு குறையும் இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை. இந்த மேல் முறையீடு மனுவை தள்ளுபடி செய்கிறோம்.

எதிர்மனுதாரர் ஏ.ரவியின் மகனுக்கு 2 வாரத்துக்குள் கல்விக்கடன் வழங்கும்படி வங்கியின் மேலாளருக்கு உத்தரவிடுகிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

courtesy: document source thanks to kalviseithigal

Doctors shocked to find 1 kg mass of plastic and wood in Punjab boy's stomach

DECCAN CHRONICLE
PublishedNov 13, 2017, 5:33 pm IST


The boy was addicted to eating bits of plastic and lumps of wood due to a disorder called pica.


The boy complained of pain over a year back (Photo: YouTube)

Several people across the world are known to be plagued by addictions which can land them in a terrible situation. While children do have certain weird habits, some can prove to be severely damaging and even fatal.

Arjun Sah from Bhatinda in Punjab had an obsession with chewing on bits of plastic and lumps of wood. Doctors were unaware of Arjun’s condition until they inserted a camera in his stomach to find the cause of his pain and were shocked to discover a 1 kg mass of wood and plastic in the 16-year-old’s body.

The problem started with Arjun chewing on rubber and while his parents stopped him, he would start chewing on objects when they weren’t watching. His addiction is described as an eating disorder called pica which causes people to eat sand, talc, stones, paint and dirt.

The doctors were able to remove 300 grams of the material through surgery and Arjun will have to undergo three more operations to extract the rest. While his mother thanked doctors for saving her son’s life, Arjun will require counselling to cure his condition.

Arjun complained of pain over a year back and his suffering became worse as he would face breathlessness and stopped eating. He was eventually rushed to a hospital when he lost 15 kg in just seven days.

Feb 6 last date to link mobile with Aadhaar

DH News Service, New Delhi, Nov 13 2017, 23:34 IST


The DoT order dated November 13 came after the Supreme Court recently asked the government to mention the last date for linking bank accounts or mobile phone numbers with Aadhaar.

The Department of Telecom (DoT) has asked all telecom firms to mention February 6, 2018, as the last date for linking mobile number with Aadhaar while sending SMS or interactive voice call to subscribers.

"Any communications/voice messages/SMS, which is to be sent by licences to their mobile subscribers regarding re-verification of mobile connections through the Aadhaar-based E-KYC process, shall contain the last date for re-verification, ie, 06.02.2018," the Ministry of Communications said in a notification on Monday.

The DoT order dated November 13 came after the Supreme Court recently asked the government to mention the last date for linking bank accounts or mobile phone numbers with Aadhaar.

To simplify the linking of Aadhaar with the mobile number, the DoT recently allowed re-verification through iris-based biometric devices and at the doorsteps of those consumers unable to use one-time passwords or incapacitated and cannot go to retail stores.

Separately, the DoT is also working to finalise steps to make it easier for consumers to re-verify their mobile numbers through Aadhaar without visiting telecom firm's office, by using one-time password through SMS, interactive voice response system and through mobile apps.

Recently, Telecom Minister Manoj Sinha had said that the government would simplify linking of mobile number with Aadhaar. He had also assured that numbers won't be disconnected for failure to link with Aadhaar.

Lioness gives birth to stillborn cub in Chennai’s Vandalur zoo

P Oppili| TNN | Nov 13, 2017, 20:09 IST

(

CHENNAI: Mala, a six-year-old lioness in Arignar Anna Zoological Park (Vandalur zoo) in Chennai, gave birth to a stillborn male cub on Monday.

This is the first incident of a lioness giving birth to a stillborn cub in the Vandalur zoo, an official said.

The cub was buried after a postmortem.

According to zoo authorities, the lioness mated with a nine-year-old lion, Siva, 104 days ago. The gestation period of a lioness ranges between 105 and 110 days.

The zoo houses a total of 15 lions, including an eight-month-old male cub. Tamil Nadu chief minister Edappadi K Palaniswami named the cub Vishnu a month ago.

Generally, big cats that give births to cubs for the first time will not be able to provide proper parental care to the newborns. In an attempt to protect the cubs, they keep shifting them from one place to another. In this process, the mother sometimes kills the young ones.

A week ago, a tigress in the zoo killed four of her newborn cubs. Postmortem revealed that the tigress, which was a first-time mother, was unable to carry the cubs without inflicting injuries on them. The cubs suffered deep injuries and died.

Wildlife researchers say such incidents do happen in the wild too.

ஒரு நிமிடக் கட்டுரை: மைதா எனும் விபரீத ருசி!

Published : 13 Nov 2017 09:28 IST

ஜூரி





மைதா மாவில் செய்யப்படும் பரோட்டாவுக்கு நம்மூரில் ரசிகர்கள் அதிகம். உணவகங்களிலும், சாலையோரக் கடைகளிலும் இரவு நேரங்களில் அதிகம் விற்பனையாவது மைதா பரோட்டாதான். ‘மைதா மாவு உடல் நலனுக்கு ஏற்றதல்ல; ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், சீனா போன்ற நாடுகளில் மைதா மாவை உணவுப் பொருளாகப் பயன்படுத் தத் தடை’ என்றெல்லாம் செய்திகளைப் பார்க்கிறோம். ஆனால், மத்திய உணவுப் பொருள் தர நிர்ணயக் கழகமோ, இந்திய மருத்துவர்கள் சங்கமோ அப்படி எந்த எச்சரிக்கையையும் அதிகாரபூர்வமாக விடுக்கவில்லை.

கோதுமையைப் பல நிலைகளில் கழுவி வெந்நீரில் ஊறவைத்து, பிறகு குளிர்வித்து சலித்து பிறகு 16 அரவைகளில் இட்டு மைதா வைப் பிரிப்பார்கள். கோதுமையை மாவாக அரைத்தால் மஞ்சள் நிறத்துடன் இருக்கும். அந்த மஞ்சள் நிறம் மாறி தூய வெண்மையாக அத்துடன் பென்சாயில் பெராக்சைடு என்ற ரசாயனத்தைக் கலக்கிறார்கள். இந்த ரசாயனம் தலைக்குப் பூசும் சாயத்திலும் கலந்திருக்கிறது என்பது கவனிக்க வேண்டிய விஷயம். அளவுக்கு அதிகமாக உடலில் சேர்ந்தால் நீரிழிவு ஏற்படும். மாவு மிருதுவாக இருக்க அலாக்சன் என்ற ரசாயனத்தைக் கலக்கிறார்கள்.

மைதாவில் குளோரின் டை-ஆக்சைடு, பொட்டாசியம் புரோமைடு, அம்மோனியம் கார்பனேட், சுண்ணாம்பு, சார்பிடன் மோனோ சாச்சுரைட் ஆகியவை கலக்கப்படுகின்றன. இயற்கையாகக் கிடைக்கும் உணவுப் பொருட்களிலும் இந்த ரசாயனங்கள் சிறிதளவில் இருக்கக்கூடும். ஆனால், நிறம், சுவை, நெகிழ்வுத்தன்மை, மிருது போன்ற பயன்பாட்டுக்காகவும் வாசனையூட்டவும் நீண்ட நாட்களுக்குக் கெடாமலிருக்கவும்தான் ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. மைதாவில் கார்போஹைட்ரேட் 78% என்பதும் வைட்டமின் அறவே கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கோதுமையை அரைக்கும்போது உடைசலாகக் கிடைப்பது ரவை. ரவையை சூஜி என்பார்கள். இந்தியில் ‘ஆட்டா’ என்றால் மாவு என்று அர்த்தம். கோதுமையின் தோல் மட்டும் தனியாகப் பிரித்தெடுக்கப்படும் அதை இலைத் தவிடு என்பார்கள். அதுவும் தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது. மைதா என்பது முளை நீக்கப்பட்ட, நார்ச்சத்தும் இல்லாத மிருதுவான பொருள் என்பதால் சத்துக்குறைவாகிறது. மைதாவைப் பசை காய்ச்சவும் பயன்படுத்துகிறார்கள். இன்னொரு முக்கியமான விஷயம். மளிகைக் கடைகளுக்குள் இரவில் பிற பொருட்களை ருசி பார்க்கும் பெருச்சாளிகள் மைதா மாவைத் தொடவே தொடாதாம். ஆனால், நாம்?

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court

State can’t undo 33-year-old appointment: Gujarat High Court July 5, 2026, 01.02 AM IST Ahmedabad: 05.07.2026 The Gujarat HighCourt has quas...