Tuesday, December 5, 2017

5-year jail term for former V-C upheld in graft case

CHENNAI, DECEMBER 05, 2017 00:00 IST

DVAC registered a case in 2009

The Madras High Court on Monday upheld a trial court’s order convicting R Radhakrishnan, suspended Vice-Chancellor of the erstwhile Anna University of Technology (AUT-Coimbatore), to undergo five years imprisonment in a corruption case.

Radhakrishnan was the first Vice-Chancellor of a State university in Tamil Nadu to be suspended over seven years ago.

The Directorate of Vigilance and Anti-Corruption (DVAC) had in 2009 registered a case against Radhakrishnan and others on charges of demanding and accepting a bribe of Rs. 40,000 from A. Senthilkumar, who was running Surya Industries in Erode, for supply of dual desk to the university. The agency said he had settled the bill due to supplier only after he paid the bribe amount.

The Chief Judicial Magistrate Court in Coimbatore (the special court for DVAC case), which examined witnesses, had in November last year, held Radhakrishnan guilty and sentenced him to undergo five years’ rigorous imprisonment under provisions of the Prevention of Corruption Act.

It also imposed a year’s imprisonment on another count but held that the sentences would run concurrently. Besides the trial judge had imposed a cumulatively penalty of Rs. 1.10 lakh on the accused.

Radhakrishnan moved the Madras High Court challenging his conviction .

Justice G Jayachandran dismissed Radhakrishnan’s plea and upheld the trial judge’s order awarding the five-year rigorous prison term and the penalty of Rs. 1.10 lakh.
Rape of minors to attract death in M.P.

BHOPAL, DECEMBER 05, 2017 00:00 IST


All parties support Bill in Assembly

The Madhya Pradesh Assembly on Monday unanimously passed a Bill awarding death to those found guilty of raping girls aged 12 and below. With this, Madhya Pradesh becomes the first State where those convicted of such rapes will face the gallows.

Introduced in the House by Law and Legislative Affairs Minister Rampal Singh, the Bill was discussed in detail and then passed by all parties, including the ruling BJP and the Opposition Congress. The Bill will now be sent to the President for his assent, after which it will become a law, Home Minister Bhupendra Singh told reporters outside the Assembly.

‘Historic day’

“It was a historic day for Madhya Pradesh as the Assembly, as per the wish of Chief Minister Shivraj Singh Chouhan, passed a Bill making a provision to award the capital punishment to those indulging in such crimes [raping girls aged 12 or younger],” Mr. Bhupendra Singh said.

Capital punishment would be awarded to convicts under Section 376 (A), which is related to rape, and Section 376 (D, A), pertaining to gang-rape.

Welcoming the Bill, Mr. Chouhan said: “There are people in society who can be set right only by severe punishments. It [the legislation] will deal with them. We will also raise awareness in society against such crimes.”
ஓரங்கட்டப்பட்ட தமிழ்... புதுக்கோட்டை ரயில் நிலையம் தமிழ்நாட்டில்தான் இருக்கிறதா?

பாலஜோதி.ரா
ம.அரவிந்த்
சே.அபினேஷ்

"புதுக்கோட்டை ரயில் நிலையம் தமிழ்நாட்டில்தான் இருக்கிறதா..? இல்லை, குஜராத், டெல்லியில் இருக்கிறதா?' என்று புலம்பியபடிதான் ரயிலை பிடிக்கவே விரைகிறார்கள் புதுக்கோட்டை நகர மக்கள். ஆம் இத்தனை ஆண்டுகளாக தமிழில் இருந்த புதுக்கோட்டை ரயில் நிலையத்தின் முகப்புப் பலகை இப்போது இந்திக்கு மாறியுள்ளது. தமிழ் பக்கவாட்டு பலகைக்கு மாற்றப்பட்டுள்ளது.



நீண்ட கட்டடத்தின் முகப்பில், ஆங்கிலம், தமிழ், இந்தி என்ற வரிசையில் இருந்த ரயில்வே நிலைய பெயரில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. அதாவது, பிரதான நுழைவாயிலில் இருந்த தமிழ்ப் பெயர், இப்போது இந்திக்கு மாறியுள்ளது. இந்தி இருந்த இடத்துக்குத் தமிழைத் தள்ளிவிட்டார்கள். ‎

அந்தப் பகுதியில் ஆட்டோ ஓட்டும் செந்தில்குமார் நம்மிடம் "இந்தப் பெயரை ஆறு மாசத்துக்கு முன்னாடியே மாத்திட்டாங்க. ரயில் நிலையம் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருப்பதால், அதிகமாக மக்களுக்குத் தெரியாமல் இருந்தது. ஆனாலும் கட்சிக்காரர்கள் கொஞ்சம் பேர் தகவல் தெரிந்து ரயில்வே அதிகாரிகளிடம் பேசிப் பார்த்தாங்க. 'இதோ பழையபடியே மாத்திடுறோம்'னு சொன்னாங்க ஆனா, இன்னிக்கு வரை மாற்றவே இல்லை"என்றார்.

இதற்காகப் போராட்டம் நடத்திய 'நாம்தமிழர்' கட்சியின் புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் இரா.கணேசனிடம் பேசினோம். பெயரை அவர்கள் இந்தியில் மாற்றிய மூன்றாவது நாளே நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். மறுநாளே அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக்கூட்டி அதிகாரிகளுடன் பேசினோம். 'டெல்லியிலிருந்து வந்த உத்தரவு அதை மாற்ற முடியாது' என்று கூறினார்கள். 'புதுக்கோட்டை ரயில் நிலையத்துக்கு மட்டும் பெயரை மாற்றுங்கள்?' என்று உத்தரவு வந்ததா என்று நாங்கள் கேட்டதற்கு அவர்கள் சரியான முறையில் பதிலளிக்கவில்லை.


அதன் பிறகு நாங்கள் விசாரித்தபோது, இங்கே பணிசெய்யும் வட இந்திய அதிகாரி ஒருவர் செய்த வேலைதான் இது என்பதைத் தெரிந்துகொண்டோம். வட இந்திய ஊழியர்களைத் தமிழக ரயில் நிலையங்களில் பணியமர்த்தி, தனது இந்தி மொழிதிணிப்பு வெறியைத் தீர்த்துக்கொள்கிறது மத்திய அரசு. இன்றைக்குப் புதுக்கோட்டை ரயில் நிலையத்துக்கு நடந்தது நாளைக்குத் தமிழகத்தில் உள்ள எல்லா ரயில் நிலையங்களுக்கும் நடக்கலாம்" என்றார். ‎இதுகுறித்து விளக்கம்பெற நிலைய அதிகாரியைத் தொடர்பு கொண்டோம். போனை எடுத்தவரிடம் பெயர் பலகை ஏன் தமிழிலிருந்து இந்திக்கு மாறியது என்று கேட்டதற்கு "க்யா..க்யா போல்" என்று எதிர்முனையில் பேசுகிறார். பெயர்பலகை மட்டுமல்ல அதிகாரிகளிடமும் தமிழ் ஓரங்கட்டப்பட்டிருக்கிறது.
சிங்கப்பூர் செல்லும் உறவுகளே… உஷார்.! – கிளம்பியுள்ளது புதிய மோசடிக் கும்பல்.!

எம்.கணேஷ் வீ.சக்தி அருணகிரி

'திரைகடல் ஓடியும் திரவியம் தேடு` என்பார்கள். அந்தவகையில், வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு கணிசமாக உயர்ந்துவருகிறது. குறிப்பாக தென் தமிழகத்தைச் சேர்ந்த பலர் சிங்கப்பூர், மலேசியா, வளைகுடா நாடுகளில் வேலை பார்த்துவருகிறார்கள். அவர்களின் உரிமைகள் சார்ந்த பல பிரச்னைகளை இந்திய அரசும், சம்பந்தப்பட்ட நாட்டின் அரசும் தீர்த்து வருவது வரவேற்கத்தக்க விஷயமாக இருந்தாலும், ஏமாற்றும் பேர்வழிகள் சிலர் புதிது புதிதாக பொறிவைத்து மக்களை ஏமாற்றுகிறார்கள். அதில், சிக்குண்டு பலர் தங்கள் பணத்தையும் உடைமைகளையும் இழக்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது சிங்கப்பூரில் உள்ள கும்பல் ஒன்று, இந்திய மக்களைக் குறிவைத்து போலி போன்கால்கள் மூலம் பணம் பறித்துக்கொண்டிருக்கிறது. அந்த மோசடிக் கும்பலின் வலையில் சிக்க இருந்து தப்பித்தவரும், தமிழகத்தைச் சேர்ந்த பிரபல பேரிடர் மேலாண்மை பயிற்றுநருமான ஹரிபாலாஜி சிங்கப்பூரிலிருந்து நம்மை தொடர்புகொண்டு பேசினார்.

"பணி நிமித்தமாக சில மாத விசாவில் சிங்கப்பூர் வந்திருக்கிறேன். இது எனக்குப் புதிது இல்லை என்ற போதிலும், கடந்த வாரம் எனக்கு சிங்கப்பூரின் மனித ஆற்றல் அமைச்சகத்திலிருந்து (Ministry of Man Power) பேசுவதாக ஒரு போன்கால் வந்தது. தன் பெயர் ஜான் மேத்யூ என்று அறிமுகம் செய்துகொண்டு, தன்னுடைய ஐ.டி. நம்பரை (MOM2120) சொல்லி மிகக் கண்ணியமாகப் பேசினார். இம்மிகிரேஷன் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யும்போது, என்னுடைய பிறந்த தேதியை மாற்றி எழுதிவிட்டதாகச் சொன்னார். அதாவது தேதி, மாதம், வருடம் என்ற வரிசையில் எழுதியதால் விண்ணப்பம் பிழையாகிவிட்டதாகவும், மாதம், தேதி, வருடம் என்ற வரிசையில்தான் எழுத வேண்டும் என்றும், இந்தத் தவறால் நீங்கள் சிங்கப்பூரில் இருப்பது சட்ட விரோதம் என்றும் சொன்னான். எனக்கு பயம் வந்துவிட்டது. விண்ணப்பத்தை மீண்டும் பூர்த்திசெய்ய இரண்டு வழிகள் இருப்பதாகச் சொன்னார். டெல்லில் இருக்கும் சிங்கப்பூர் தூதரக அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும். அல்லது சிங்கப்பூரில் உள்ள அவரின் அலுவலகத்திற்கு வரவேண்டும். அதற்குக் கணிசமான தொகையை அந்த நிறுவனத்தின் வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும் என்றார். எனக்குச் சந்தேகம் வரவே, "நான் எப்படி உங்களை நம்புவது?" என்று கேட்டேன். உடனே அமைச்சகத்தின் இணையதளத்தில் பார்க்கச் சொன்னார். பேசிக்கொண்டே இணையதளத்திற்குள் சென்றேன். அதில் இருக்கும் தொடர்பு எண்ணைப் பார்க்கச் சொன்னார். பார்த்தேன். அந்த எண்ணும், என்னுடன் பேசிக்கொண்டிருக்கும் எண்ணும் சரியாக இருந்தது. சிங்கப்பூரின் அதிகாரபூர்வ அமைச்சகத்தின் தொலைபேசி எண்ணும் இவன் பேசிய எண்ணும் சரியாக இருந்ததால் உடனே வங்கிக்கணக்கில் பணம் செலுத்தி என்னுடைய பிழையைச் சரிசெய்யலாம் என்று முடிவெடுத்தேன். அதனை அவரிடம் சொன்னேன்.



உடனே, நான் இருக்கும் இடத்தின் அருகில் இருக்கும் ஒரு இடத்தைக்குறிப்பிட்டு, உடனடியாகப் பணத்தை டெபாசிட் செய்யச் சொன்னார். மீண்டும் எனக்குச் சந்தேகம் வரவே, நான் பணியாற்றும் நிறுவனத்தின் உரிமையாளரிடம் நடந்ததைத் தெரிவித்தேன். அவர் கேட்டதோ 970 டாலர். அப்போதுதான் தெரிந்தது அது ஒரு போலி போன்கால் என்று.

வேலை விஷயமாக சிங்கப்பூர் வரும் அனைவரையும் இந்த மோசடிக் கும்பல் இப்படித்தான் ஏமாற்றி வருகிறது. ஏமாறுபவர்களை மொத்தமாக மொட்டையடித்து பணத்தைச் சுருட்டிக்கொள்வார்கள். பின்னர் அந்த நம்பரை பிளாக் செய்துவிட்டேன். தொடர்ந்து பல முறை கால் வந்தது. வேறு நம்பரிலிருந்து பேசினார்கள். 'போலீஸ் உங்களை கைது செய்யும். உடனே பணம் செலுத்தித் தப்பித்துக் கொள்ளுங்கள்' என்று சொன்னார்கள். போலீஸ் வந்தால் நான் பேசிக்கொள்கிறேன். உங்களைத் தேடி போலீஸ் வராமல் நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொன்ன பிறகுதான் போன் செய்வதை நிறுத்தினார்கள். பல ஆயிரக்கணக்கான மக்கள் வேலைக்காக சிங்கப்பூர் வருகிறார்கள். அவர்களில் பலர் இந்த மோசடிக்காரர்களின் வலையில் சிக்கி பணத்தை இழக்கிறார்கள். இதனை சிங்கப்பூர் அரசும், இந்திய அரசும் கவனத்தில் எடுத்துக்கொண்டு குற்றவாளிகளைப் பிடித்து தக்க தண்டனை கொடுக்க வேண்டும்`` என்றார்.

தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் :

சிங்கப்பூரில் இருக்கும் உறவுகள் இதுபோன்ற போலி போன்கால்கள் வந்தால் உடனே இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்த வேண்டியது அவசியம். அத்துடன் சில நுணுக்கமான விஷயங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும். உலக நாடுகளின் எந்த விண்ணப்பமாக இருந்தாலும் தேதி-மாதம்- வருடம் என்ற வரிசையில்தான் எழுதுவார்கள். அமெரிக்காவில் மட்டும்தான் மாதம்-தேதி-வருடம் என்ற வரிசையில் எழுதுவார்கள்.

மேலும், சிங்கப்பூர் அரசாங்கத்தைப் பொறுத்தவரை, ஒருபோதும் போன் செய்யமாட்டார்கள். எந்தத் தவறாக இருந்தாலும் கடிதம் மூலமாக மட்டுமே தொடர்புகொள்வார்கள். அவர்களின் அலுவலகத்திற்கு வரவழைத்து விளக்கம் கேட்டு, தேவையான உதவிகளைச் செய்வார்கள். அதனால், சிங்கப்பூர் அரசாங்கத்தின் பெயரைச் சொல்லி போனில் பேசுபவர்களை நீங்கள் ஒரு மிரட்டு மிரட்டி விடலாம்.
ஆம்பூரில் `நாய் பிரியாணி'... பிரியாணிப் பிரியர்கள் வயிற்றில் கிலி!

பாலஜோதி.ரா

வேலூர் மாவட்டம் ஆம்பூர், பிரியாணிக்கு ஃபேமஸ். 'ஆம்பூர் பிரியாணி' என்ற பெயரிலேயே தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் தள்ளுவண்டி பிரியாணிக் கடைகள் சக்கைப்போடுபோடுகின்றன. இந்நிலையில, பிரியாணி என்ற பெயரில் `நாய் பிரியாணி' விலைகுறைவாகக் கிடைத்து வந்திருப்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதிரவைக்கும் இந்த நாய் பிரியாணி குறித்து விசாரித்தோம்.

"ஆம்பூரில் அசைவம் சார்ந்த சிறிய, பெரிய ஓட்டல்கள் பெருமளவில் இருக்கின்றன. அதனாலேயே, தெருநாய்களும் இங்கு அதிகமாக இருக்கின்றன. மாலை நேரங்களில் தள்ளுவண்டிகளில் குறைவான விலையில் மட்டன் பிரியாணி சுடச்சுட விற்பனையாகும். அதை சாப்பிடுபவர்களைச் சுற்றி, எப்போதும் பத்து நாய்கள் வாய் பார்த்துக்கொண்டிருக்கும். இந்தக் காட்சிகளெல்லாம் இங்கே சர்வசாதாரணமாக நடக்கும். மட்டன் பிரியாணி 60, 70 ரூபாய்க்கே இங்கே கிடைக்கும். இவ்வளவு மலிவாக மட்டன் பிரியாணி தரமுடியாது என்பது எல்லோருக்குமே தெரியும். மட்டன் பிரியாணியில், மாட்டுக்கறியும் கலந்திருக்கும் என்று நினைத்துதான் உள்ளூர்க்காரர்களே அப்படியான கடைகளில் சாப்பிடுவார்கள். இப்போதுதான் தெரிகிறது, கசாப்புக்கடைக்காரர்களோடு சேர்ந்துகொண்டு மட்டனில் நாய்க் கறியைக் கலந்துகொடுத்திருக்கிறார்கள்" என்று பதறுகிறார்கள் ஆம்பூர்வாசிகள்.
இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்

"நாய்க்கறி, ஆட்டுக்கறி வித்தியாசம் தெரியாமல் இருக்க, 'அஜினோமோட்டோ'வையும் புதினா எஸ்ஸென்சையும் அதிக அளவில் கலந்து விடுகிறார்கள். அத்துடன் சுடச்சுட அதைத் தருவதால், கறி குறித்த சிந்தனையே மறைந்துவிடும். மேலும், இப்படியான இடங்களில் சாப்பிடுவதற்குப் போதை ஆசாமிகளே வருவதால், கடைக்காரர்களுக்கு ரொம்பவும் வசதியாகப்போய்விட்டது" என்கிறார்கள் உள்ளூர் விவரம் அறிந்தவர்கள்.

'ஆறு' ஆதாருடன் இணைக்க வேண்டிய 'ஆறு'



மோடி தலைமையிலான மத்திய அரசு, பல்வேறு நல திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இவறறின் பலனைப் பெறுவதற்கு ஆதார் எண்களை இணைப்பதை கட்டாயமாக்கி உள்ளது.
முறைகேடுகளை தடுப்பதற்காக இப்படி செய்யப்படுவதாக அரசு சார்பில் கூறப்படுகிறது.வங்கிக்கணக்கு, பான் கார்டு, இன்சூரன்ஸ் பாலிசி, மியூச்சுவல் பண்ட், தபால் துறை திட்டங்கள், அலைபேசி எண் ஆகிய ஆறு சேவைகளை ஆதார்எண்ணுடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்கான கடைசி தேதியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.எப்படி இணைப்பது?

பான் கார்டு: ஆதாருடன் பான் கார்டை இணைக்க https://incometaxindiaefiling.gov.in/e-Filing/Services/LinkAadhaarPrelogin.html என்ற இணையதளத்தில் பான்கார்டு, ஆதார் விவரங்களை உள்ளீடு செய்து இணைக்கலாம். கடைசி தேதி : 2017 டிச., 31நடவடிக்கை : வருமான வரி தாக்கல் செய்ய இயலாது

வங்கிக்கணக்கு

கணக்கு வைத்திருக்கும் வங்கியில் ஆதார் எண்ணை வழங்கிஇணைக்கலாம் அல்லது இன்டர்நெட் பேங்கிங்,மொபைல் பேங்கி்ங் மூலம் ஆதார் அப்டேட் லிங்கை கிளிக் செய்துஇணைக்கலாம். கடைசி தேதி : 2017 டிச., 31 நடவடிக்கை : கணக்கு முடக்கப்படும்
மியூச்சுவல் பண்ட்சி.ஏ.எம்.எஸ் மற்றும் கார்வி கம்ப்யூட்டர்ஷேர் இணையதளங்கள், உங்கள் மியூச்சுவல் பண்ட் கணக்குகளுடன் ஆதாரை இணைக்க உதவுகிறது.கடைசி தேதி : 2017 டிச., 31
நடவடிக்கை : கணக்குகள் நிறுத்தப்படும்

இன்சூரன்ஸ் பாலிசி

இன்சூரன்ஸ் பாலிசிகளை இணைப்பதற்குஅந்தந்த நிறுவன கிளைகளுக்கு நேரடியாக சென்று, பாலிசி எண், பிறந்த தேதி, ஆதார் எண் வழங்கி இணைக்கலாம்.எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ., லைப் இன்சூரன்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., இன்சூரன்ஸ், மேக்ஸ் இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்கள் 'ஆன்லைன்' மூலம் இணைப்பதற்கு வசதிகளை ஏற்படுத்தியுள்ளது.கடைசி தேதி : 2017 டிச., 31
நடவடிக்கை : காப்பீட்டு திட்டங்களை தொடர முடியாது

தபால் திட்டங்கள்

தபால் நிலையங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள், ஆதாரை இணைப்பதற்கு, இந்தியா போஸ்ட் இணையதளத்தில் அதற்குரிய விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, கணக்கு வைத்திருக்கும் கிளையில் வழங்குவதன் மூலம் இணைக்கலாம். கடைசி தேதி : 2017 டிச., 31 நடவடிக்கை : கணக்கு முடக்கப்படும்

அலைபேசி எண்

தொலைத்தொடர்பு நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையங்களுக்கு சென்று, அலைபேசி எண்ணுடன் ஆதாரை இணைக்கலாம். கடைசி தேதி : 2018 பிப்., 6நடவடிக்கை : அலைபேசி எண் செயலிழக்கப்படும்

Chennai-bound Air India flight diverted to Mumbai due to medical emergency


By PTI  |   Published: 04th December 2017 03:12 PM  |  

For representational purposes (File | Reuters)
MUMBI: A Chennai-bound Air India flight from Dubai was diverted to the Chhatrapati Shivaji International Airport here today as a passenger took ill.
The male passenger (name not revealed by the airline) complained of chest pain, following which the pilot decided to divert the Airbus A321 aircraft to Mumbai, an Air India spokesperson said.
Air India flight AI 906, carrying 164 passengers, had departed from the Dubai International Airport at 1128 hours yesterday night.
On landing, the passenger was deplaned for medical examination, the AI spokesperson said, adding the flight with remaining passengers left for Chennai at 0455 hours this morning.
Doctors from Mumbai International Airport Limited conducted medical tests and declared the passenger fit for travelling. He will be flying to Chennai on another Air India flight, the official added.

NEWS TODAY 06.12.2025