Wednesday, January 3, 2018

 சேலம் மாவட்டத்தில் 5 ஆயிரம் டாக்டர்கள் வேலை நிறுத்தம்
 
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள புதிய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் மாவட்டத்தில் 5 ஆயிரம் டாக்டர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். 
 
சேலம், 

மத்திய அரசு புதிதாக தேசிய மருத்துவ ஆணையத்தை கொண்டுவர உள்ளதாக அறிவித்தது. இதற்கு நாடுமுழுவதும் உள்ள டாக்டர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கு இந்திய மருத்துவ சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் நேற்று டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் தமிழகத்திலும் நடந்தது. சேலம் மாவட்டத்தில் 142 தனியார் ஆஸ்பத்திரிகள் உள்ளன. இந்த ஆஸ்பத்திரிகளில் பணியாற்றி வரும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாக்டர்கள் நேற்று காலை முதல் மாலை வரை பணிக்கு செல்லாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தால் தனியார் ஆஸ்பத்திரிகளில் உள்ள வெளிநோயாளிகள் பிரிவு பெரும்பாலும் மூடப்பட்டிருந்தன. ஆஸ்பத்திரிகளில் வழக்கமான பணிகள் நடக்கவில்லை என்பதால், சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் பலர் ஏமாற்றத்துடன் திரும்ப நேர்ந்தது.

அதே வேளையில் அவசர சிகிச்சை பிரிவு, பிரசவ வார்டு மற்றும் உள்நோயாளிகள் பிரிவு வழக்கம்போல இயங்கின. ஆனாலும், உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் அவதிப்பட்டனர்.

இது குறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில துணைத்தலைவர் டாக்டர் பிரகாசம் கூறியதாவது:–

இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்து விட்டு, தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மருத்துவ கவுன்சிலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களாக 139 பேர் இருப்பார்கள். ஆனால், தேசிய மருத்துவ ஆணையத்தில் 25 பேர் மட்டுமே இருப்பார்கள். இதில் தலைவர் உள்பட 14 பேர் அரசால் நியமிக்கப்படுவார்கள். 5 பேர் டாக்டர்களாக இருக்க மாட்டார்கள். இப்படிப்பட்ட ஆணையக்குழுவில் எந்த கோரிக்கையும் வைக்க முடியாது.
மேலும் 25 பேரில் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கும் பிரதிநிதித்துவம் கிடையாது. எம்.பி.பி.எஸ். தேர்ச்சி மற்றும் பயிற்சி பெற்ற டாக்டர்கள் மீண்டும் தேர்வு எழுதி வெற்றிபெற்ற பின்னரே தேசிய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்ய முடியும் என்பது இயலாத காரியம். இதனால், மருத்துவ மாணவர்கள் கடும் பாதிப்புக்குள்ளாவார்கள். எனவே, புதிய சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும். நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் டாக்டர்களின் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

மத்திய அரசின் புதிய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்கள் சங்கம் சார்பில் பயிற்சி டாக்டர்கள் காலை 10 மணி முதல் 11 மணிவரை, பணியை புறக்கணித்து ஆஸ்பத்திரி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது, பழைய மருத்துவ கவுன்சிலே நீடிக்க வேண்டும். மத்திய அரசு கொண்டுவர உள்ள புதிய மருத்துவ ஆணையத்தால் டாக்டர்கள் அனைவரும் பாதிக்கப்படுவார்கள். எனவே, புதிய ஆணையத்திற்காக தாக்கல் செய்யப்பட்ட மசோதாவை திரும்பபெற வேண்டும் என டாக்டர்கள் தரப்பில் தெரிவித்தனர்.

அதன் பின்னர் டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டனர். மேட்டூர், ஆத்தூர், ஓமலூர், வாழப்பாடி, சங்ககிரி உள்ளிட்ட அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றி வரும் 500–க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
வேலை நியமனங்களில் முறைகேடா?

 
தமிழ்நாட்டில் வேலையில்லாத இளைஞர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருக்கிறது. தொழில்வளர்ச்சி அதிகம் இல்லாதநிலையில், தனியார்துறையில் வேலைவாய்ப்பு அதிகளவில் உருவாகவில்லை. 
 
மிழ்நாட்டில் வேலையில்லாத இளைஞர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருக்கிறது. தொழில்வளர்ச்சி அதிகம் இல்லாதநிலையில், தனியார்துறையில் வேலைவாய்ப்பு அதிகளவில் உருவாகவில்லை. அதனால்தான் அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை 80 லட்சத்தை தாண்டிவிட்டது. இந்தவகையில், தமிழ்நாட்டில் உள்ள 46 அரசு பாலிடெக்னிக்குகளில் விரிவுரையாளர் பணிகளுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டன. 1,058 காலிப்பணியிடங்களுக்காக கோரப்பட்டதில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 500 பேர் விண்ணப்பம் செய்து எழுத்துதேர்வும் எழுதியிருந்தனர். இந்தத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு 2 ஆயிரம் விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்காக அழைக்கப்பட்டனர். இந்தநேரத்தில் ஆசிரியர் தேர்வுவாரியத்துக்கு சில விண்ணப்பதாரர்கள் எடுத்த மதிப்பெண்கள் பற்றி புகார்கள் வந்தது. அதை சரிபார்த்தபோது, அவர்கள் உண்மையாக எடுத்த மதிப்பெண்களைவிட அதிகமாக போடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக ஆசிரியர் தேர்வுவாரியம் 2 ஆயிரம் பேர்களின் மதிப்பெண்களையும் சரிபார்த்தது. அதில் 226 பேரின் விடைத்தாள்களில் அவர்கள் பெற்ற மதிப்பெண்களில் 50 முதல் 100 மதிப்பெண்கள் வரை கூடுதலாக போட்டு சான்றிதழ் சரிபார்க்கும் பட்டியலுக்கு தகுதிபடைத்தவர்களாக்கும் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக இந்தத்தேர்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்டு, விடைத்தாள்களுடன் கூடிய புதியமதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது. முறைகேட்டுக்காக ஒவ்வொரு மாணவரிடமும் ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம்வரை வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் யார்–யார்? ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்தால் போலீசில் புகாரும் கொடுக்கப்பட்டு, இப்போது 156 பேர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மதிப்பெண்களை கூடுதலாக போட ஏஜெண்டாக செயல்பட்டதாக ஒரு கால்டாக்சி டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தேர்வு மதிப்பெண்களை பதிவிடும் பணிகளை செய்த நொய்டாவில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் கம்பெனி ஊழியர்கள் இந்த முறைகேட்டை செய்ததாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விரைவில் போலீசாரும், ஆசிரியர் தேர்வுவாரியமும் இந்த முறைகேட்டை முழுமையாக கண்டுபிடிப்பதோடு, ஊழல், தவறுகளுக்கு இடமளிக்கும் அத்தனை வழிகளையும் அடைத்து, இனிமேல் நடக்கும் அனைத்து தேர்வுகளும் எந்தவித முறைகேடுக்கும் இடம்இல்லாத வகையில் மிக கண்காணிப்போடு நடத்தப்பட வழிவகைகளை காணவேண்டும்.

அரசு பணிகளுக்கான தேர்வு என்பது தகுதியின் அடிப்படையில், திறமையின் அடிப்படையில் இருந்தால்தான் அரசு பணிகள் மீது இளைஞர்களுக்கு ஒரு நம்பிக்கை வரும். நாம், நமது தகுதியை வளர்த்துக்கொண்டோம் என்றால், திறமையை பெருக்கிக்கொண்டோம் என்றால், இத்தகைய தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்றோமென்றால் நிச்சயம் அரசுப்பணி தானாகக்கிடைக்கும் என்ற உணர்வு இளைஞர்கள் மனதில் விதைக்கப்படவேண்டும். தகுதி மட்டுமே அளவுகோலாக இருக்கவேண்டும். அதைவிடுத்து பணம் கொடுத்தால்போதும் தகுதியும், திறமையும் தேவையில்லை என்றநிலைமை ஏற்பட்டால், நிச்சயமாக அது நாட்டுக்கு நல்லதல்ல. அரசுப்பணி நியமனங்களில் ஊழலை ஒழித்தால்தான் திறமையானவர்கள், நேர்மையானவர்கள் அரசுப்பணிக்கு வரமுடியும். பணம் கொடுத்து வேலைக்கு வருபவர்கள், வேலைக்கு வந்தவுடனேயே லஞ்சம் வாங்குவதில்தான் குறியாக இருப்பார்கள். பணியிலும் அக்கறை காட்டமாட்டார்கள்.
மத்திய அரசு ஊழியர்கள் ரத்த தானம் அளித்தால் சம்பளத்துடன் கூடிய விடுமுறை

மத்திய அரசு ஊழியர்கள் ரத்த தானம் அளித்தால் சம்பளத்துடன் கூடிய விடுமுறை
 
மத்திய அரசு ஊழியர்கள் ரத்த தானம் அளித்தால் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும் என பணியாளர்கள் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. #blooddonation
புதுடெல்லி, 

மத்திய அரசு ஊழியர்கள் ரத்த தானம் அளிப்பது தொடர்பாக மத்திய பணியாளர் நல அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:– ரத்த தானம் அல்லது ரத்த கூறுகள் (சிவப்பு அணுக்கள், பிளாஸ்மா, தட்டணுக்கள்) தானம் அளிப்பதற்கு சிறப்பு தற்செயல் விடுப்பை அளிக்க மத்திய பணியாளர் நல அமைச்சகம் முடிவு செய்து இருக்கிறது. 

அதன்படி அங்கீகரிக்கப்பட்ட ரத்த வங்கிகளில் ரத்த தானம் அல்லது ரத்தக் கூறுகளை தானம் அளிக்கும் நாளன்று (ஒருநாள் மட்டும்) ஊழியர்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறையாக எடுத்துக்கொள்ளலாம். ஆண்டுக்கு அதிகபட்சமாக இதுபோல் 4 நாட்கள் விடுமுறை எடுத்துக்கொள்ள இயலும். இதற்கு தானம் அளித்ததற்கான தகுந்த ஆதாரங்களை இணைப்பது அவசியம்’’.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 


சிங்கப்பூர் விபத்தில் பலி: தவிக்கும் தமிழர் குடும்பம்

Added : ஜன 03, 2018 05:05

சிங்கப்பூர்: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர், செல்வம் வீரய்யா, 33; சிங்கப்பூரில் பணியாற்றி வந்தார். 2017 டிச., 22ல் நடந்த சாலை விபத்தில், அவர் உயிரிழந்தார். சிங்கப்பூரைச் சேர்ந்த, இந்தியர்கள் நலனுக்காக போராடும் தன்னார்வ அமைப்பு, 1.25 லட்சம் ரூபாய் ஏற்பாடு செய்து, அவருடைய குடும்பத்தாருக்கு அனுப்பி வைத்தது. ஏழு ஆண்டுகளாக, சிங்கப்பூரில் பணியாற்றி வந்த செல்வத்தின் வருமானத்தையே, அவருடைய தந்தை, தாய், மனைவி, இரு சகோதரிகள் கொண்ட குடும்பம் நம்பி இருந்தது. இந்நிலையில், சாலை விபத்தில் இறந்த செல்வத்துக்கு, விபத்து இழப்பீடு அளிப்பது குறித்து, சிங்கப்பூரின் மனிதவள மேம்பாட்டுத் துறை ஆய்வு செய்கிறது. அதன்படி, அவருடைய குடும்பத்துக்கு, 33 லட்சம் - 98 லட்சம் ரூபாய் வரை கிடைக்க வாய்ப்புள்ளது.

பணி விலகிய ராணுவ வீரருக்கு இயலாமை ஓய்வூதியம் தர உத்தரவு

Added : ஜன 03, 2018 01:01


சென்னை: ராணுவ விதிப்படி, 10ஆண்டு பணியை பூர்த்தி செய்யாத ராணுவ வீரருக்கு, இயலாமை ஓய்வூதியம் வழங்க, ராணுவ தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர், நரசய்யா கோமுலா, 35. இவர், 2001ல், ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார். 2007 செப்டம்பரில், 20 நாட்கள் விடுமுறையில் சென்ற போது, விபத்தில் சிக்கினார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, அடுத்தவர்களின் உதவியுடன் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டார். பின், பணியில் இருந்து விலகிய கோமுலா, இயலாமைக்கான ஓய்வூதியம் அளிக்க கோரி விண்ணப்பித்தார். 10 ஆண்டுகள் பணியை பூர்த்தி செய்யாததால், அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. 


இதையடுத்து, சென்னையில் உள்ள ராணுவ தீர்ப்பாயத்தில், இயலாமைக்கான ஓய்வூதியம் அளிக்க உத்தரவிடக்கோரி, கோமுலா மனு தாக்கல் செய்தார்.
வழக்கு விசாரணையின் போது, ராணுவ அமைச்சகம் தாக்கல் செய்த பதில் மனுவில், 'கோமுலா, விடுப்பில் இருந்த போது, விபத்தில் சிக்கி உள்ளார்; இதற்கும், ராணுவ பணிக்கும் தொடர்பில்லை' என, தெரிவித்தது.


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பாபு மேத்யூ பி ஜோசப், உறுப்பினர், சுரேந்திரநாத் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர், 10ஆண்டு பணியை முடிக்காவிட்டாலும், ராணுவத்தில் பணியாற்றி உள்ளார். தற்போது, இயலாமையில் இருப்பதால், அவரது குடும்பத்தை வழி நடத்த, அவருக்கு பண உதவி வேண்டும். எனவே, மனுதாரருக்கு, ராணுவ அமைச்சகம் குறைந்தபட்ச ஓய்வூதியம் அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Monday, January 1, 2018

தமிழக அரசியலில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்: ரஜினி அரசியல் பிரவேசத்துக்கு பாரிவேந்தர் வரவேற்பு

Published : 31 Dec 2017 12:00 IST



நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்று கூறியதற்கு பாரிவேந்தர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நீண்ட நாட்களாக தமிழக மக்களிடம் இருந்த கேள்விக்கும், எதிர்பார்பிற்கும் இன்று விடை சொல்லியிருக்கிறார் திரு.ரஜினிகாந்த் அவர்கள். தான் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாகவும், வரும் சட்டமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

அவர் புகழ் பெற்ற வெறும் நடிகராக மட்டுமல்லாது, அவ்வப்பொழுது ஏற்படும் அரசியல் – சமூக நிகழ்வுகளுக்கு ஏற்ப குரல் கொடுப்பவராகவும் இருந்துள்ளார். இதனால் அவரின் அரசியல் நுழைவு பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியதில் வியப்பில்லை.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் நான் போட்டியிட்ட போது, தொலைபேசியில் என்னை அழைத்து, நான் வெற்றிபெற வாழ்த்துக்களை தெரிவித்தார். தேசப்பற்றும், நேர்மறையான சிந்தனையும், நல்ல உள்ளமும் கொண்ட அரசியல் தலைவர்களுக்கான பஞ்சம் தமிழகத்தில் நிலவுகிறது. இந்நேரத்தில் திரு ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் நுழைவு ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. அவ்வகையில், திரு. ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் பிரவேசத்தை வரவேற்பதோடு, அவரின் நல்ல நோக்கங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகின்றேன்.

ஆங்கிலம் அறிவோமே 193: அதையும் தாண்டி அதிகமானது!

Published : 26 Dec 2017 11:59 IST
Updated : 26 Dec 2017 11:59 IST

ஜி.எஸ்.எஸ்.

 


கேட்டாரே ஒரு கேள்வி

“என் காதலியை வர்ணித்துச் சில பல பாடல்களை எழுதப்போகிறேன். ஒப்பிட முடியாத என்று பொருளைத் தரும் Non-comparable என்ற வார்த்தைக்குச் சமமான வேறு ஆங்கில வார்த்தைகளைக் கொட்ட முடியுமா?

நிச்சயமாக. ஆனால், ஓர் எச்சரிக்கை. Non-comparable என்பது எப்போதுமே உயர்வு நவிற்சியாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அதற்குச் சம வார்த்தைகளாக inadequate, incompetent, insufficient, mediocre போன்றவற்றைகூடக் குறிப்பிட முடியும்.

எனவே, ஒப்பிட முடியாத என்பதை incomparable (non-comparable அல்ல) என்று வைத்துக்கொள்வோம். இதன் சமமான வார்த்தைகளாக matchless, peerless, unmatched, unequalled, unrivalled, unique, rare, outstanding, unsurpassable ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

இந்த இடத்தில் இன்னொன்றையும் பகிர்ந்துகொள்கிறேன். Unique, infinite, entire, impossible போன்ற வார்த்தைகள் ஒப்பிடக் கூடாதவை. அதாவது it is an impossible task என்று கூறலாம். It is the most impossible task என்று கூடாது.

**********************

Mum’s the word என்பதன் பொருள் என்ன?

அம்மாவைக் குறிக்க Mum என்ற வார்த்தை பேச்சுவழக்கில் பயன்படுத்தப்படுவதுண்டு (மம்மி என்பதன் சுருக்கம்தான் Mum). ஆனால், Mum is the word என்பதன் முதல் சொல் அம்மாவைக் குறிப்பிடுவதில்லை.

யாராவது ஒரு கேள்வியைக் கேட்க நீங்கள் அதற்குப் பதில் கூறாமல் ‘mmmmmm’ என்ற ஒலியை எழுப்பினால் நீங்கள் பதில்கூற விரும்பவில்லை என்று பொருள். இதைத்தான் mum’s the word என்கிறார்கள்.

எகிப்திய மம்மி பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதை ஏன் மம்மி என்கிறோம்?

பிடுமேன் (Bituman) என்பது கருநிறம் கொண்ட பிசுக்குத் தன்மையுள்ள பொருள். இந்தப் பிசினைப் பாரசீக மொழியில் ‘மம்’ என்பார்கள். சடலங்களை இப்படிப் பாடம் செய்ய Mum பயன்படுத்தப்பட்டதால் அதை Mummy என்கிறோம்.

**********************

‘He is a vet’ என்கிறார்களே. அப்படியென்றால் என்ன?

Veterinary Surgeon என்பதை Vet என்று சுருக்கிக் கூறுகிறார்கள். அதாவது, கால்நடை மருத்துவர்.

A sick cow is being treated by the Vet.

ராணுவத்தில் பணிபுரிந்தவரை அமெரிக்காவில் veteran என்றும், பேச்சுவழக்கில் vet என்றும் அழைக்கிறார்கள்.

கவனமாக ஒன்றை உறுதி செய்துகொள்வது என்ற அர்த்தத்தில் vet என்பது verb ஆகப் பயன்படுகிறது. During the emergency, the Government vetted all news reports.

சிலரை ‘Hyper’ என்கிறார்களே, ஏன்?

அது Hyperactive என்பதன் சுருக்கம். கிரேக்க மொழியில் hyper என்றால் அதிகப்படியாக, அதையும் தாண்டி என்று பொருள்.

Hyper ஆக இருப்பவர் மிகவும் ஆற்றல்வாய்ந்தவராக இருப்பார். பள்ளிக்கூடத்தில் உட்கார மாட்டார். உட்காராமல் அங்குமிங்கும் ஓடிக்கொண்டும் தொடர்ந்து உற்சாகமாகப் பல விஷயங்களைச் (விஷமங்களை) செய்துகொண்டிருக்கும் குழந்தைகள் இந்த hyper பிரிவில் அடங்க வாய்ப்பு உண்டு.

Hyperbole என்று ஒரு வார்த்தை உண்டு. உவமை, உவமானம் மாதிரி இதுவும் ஓர் அணிவகை. “எனக்கு இருக்கிற பசிக்கு நான் உன்னையே விழுங்கிவிடுவேன்” என்றோ “பசியில் என் பெருங்குடல் சிறுகுடலைத் தின்கிறது” என்றோ சொன்னால் அது hyperbole. அதிகப்படியாக ஒன்றை விவரிப்பது.

Hyperbole ஆகப் பேசலாம். ஆனால், hyperventilate செய்யக் கூடாது. Hyper ventilate என்றால் மிக அதிகமாகச் சுவாசத்தை வெளியேற்றுவது. இதன் மூலம் உங்களுக்கு ஒருவித மயக்க உணர்வு உண்டாகலாம்.

Hyperbaric என்றால் ஒரு வாயுவை அதன் வழக்கமான அழுத்தத்தைவிட அதிக அழுத்தத்தில் செயல்படவைப்பது.

When, while ஆகிய இரு வார்த்தைகளைப் பயன்படுத்தும்போது தனக்கு மிகுந்த குழப்பம் ஏற்படுவதாக வருத்தப்பட்டிருக்கிறார் ஒரு வாசகர்.

When என்றால் எப்போது என்ற ஒரு பொருள் உண்டு. அதை விட்டுவிடுவோம். When, while ஆகிய ‘குழப்பப் பயன்பாடுக’ளைப் பார்ப்போம்.

While என்பது ஒரு தொடர்ந்த நிலையைக் குறிக்கிறது. I listened to the radio while I was making dinner. We conversed while walking.

When என்பது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தையோ அதற்குச் சற்றுப் பிந்தைய காலகட்டத்தையோ குறிக்கிறது.

Cover your mouth when you sneeze. Do not smoke when you are pregnant.

வேறொரு சிறிய வித்தியாசத்தையும் கவனிக்கலாம். She opened the door when I knocked என்று கூறும்போது அது கதவைத் தட்டியவுடன் (அதாவது, கதவைத் தட்டிய பிறகு) அவள் கதவைத் திறந்தாள் என்ற பொருளைக்கொடுக்கிறது.

Shen opened the door while I knocked எனும்போது கதவைத் தட்டுவதும், கதவைத் திறப்பதும் ஒரே நேரத்தில் நடப்பதைப் போல இருக்கிறது. எனவே, இங்கு when என்ற பயன்பாடுதான் பொருத்தமாக உள்ளது.

ஒரே நேரத்தில் தொடரும் இரு விஷயங்களைக் குறிக்கிறது while. ஒரே நேரத்தில் நடக்கும் அல்லது அடுத்தடுத்து நடக்கும் இரு வேலைகளைக் குறிக்க when.

தொடக்கம் இப்படித்தான்

‘Brownie points’ என்பதன் பொருளைக் கேட்டிருக்கிறார் ஒரு வாசகர்.

நீங்கள் செய்ததற்காக உங்களுக்கு அளிக்கப்படும் பாராட்டுதான் ‘Getting brownie points’. இது உண்மையான விருதோ மதிப்பெண்ணோ அல்ல. கொஞ்சம் நகைச்சுவையாகவும் பயன்படுத்தப்படுகிறது. Let me score some brownie points with my mother-in-law by offering to cook dinner.

Browny என்பது ஒரு கற்பனை உயிரினம். நாடோ​டிக் கதைகளில் நிலவுவது. முக்கியமாகப் பெண் Browny-க்கள் கருணை உள்ளம் கொண்டவை. குடும்பமே தூங்கும்போது சத்தம் போடாமல் வீட்டு வேலைகளையெல்லாம் செய்துவிடும்.

பெண் சாரணர் இயக்கத்தில் Girl guide Brownies என்பவர்கள் உண்டு. அவர்கள் செய்த நல்ல செயல்களுக்காக அவர்களுக்கான பேட்ஜ்களை அளிப்பார்கள். இவற்றை Brownie points என்பதுண்டு.


சிப்ஸ்

# He has fallen over என்று சிலரும் he fell over என்று சிலரும் சொல்கிறார்களே!

முன்னவர் பிரிட்டிஷ்காரராகவும், பின்னவர் அ​மெரிக்கராகவும் இருக்க வாய்ப்பு உண்டு.

# “She is surrounded by toadies” என்ற வாக்கியத்தின் பொருள் என்ன?

சுயலாபத்துக்காக ஒருவரைப் புகழ்ந்து பேசுபவரை toady என்பார்கள்.

# Boutique என்றால்?

சிறிய கடை. நாகரிகமான உடைகள், நகைகள் போன்றவற்றை விற்கும் கடையாக இருக்க வாய்ப்பு அதிகம்.


தொடர்புக்கு: aruncharanya@gmail.com

NEWS TODAY 31.01.2026